Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 29

 


மோகமுள் - 29:

மித்ரா தன் தந்தைக்கு அழைத்தாள்.

அப்பா இங்க வீட்டுக்கு கொஞ்சம் வாங்கப்பா என்கவும் என்னடா என்ன ஆச்சு என்று அந்த பக்கம் பதறினார். 

ஒன்னும் இல்லப்பா சும்மாதான் கூப்பிட்டேன் வரும்போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாங்க என்று சொல்லவும் தான் பதட்டம் தணிந்தவர் சரிடா வரேன் என்று வைக்க போக அப்பா அம்மாவையும் கூட்டிட்டு வாங்கப்பா என்றுவிட்டு வைத்தாள்.

ஆதி அலுவலகத்திற்கு வந்தவன் இன்று பிரசன்டேஷனிற்கு தேவையான கோப்புகளை சரிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கதவு தட்டப்படவும் கம் இன் என்ற படி நிமிர்ந்து பார்க்க அவனால் அங்கு நின்றிருந்த ஆசியைக் கண்டு தன் தம்பியா என்று வியப்பாகப் பார்த்தான்.

அண்ணா என்று வந்து நின்றவனை ரசித்து பார்த்தவன் ஆசி நீதான் இன்னைக்கு இந்த ப்ராஜெக்ட் ப்ரெசென்ட் பண்ண போற என்று உரைக்க அண்ணா நான் எப்படி என்று தயங்க எனக்கு ஹெல்ப் பண்ண தானே வந்த அப்போ செய் என்று தன் தம்பியை முதன்மையாக நிறுத்தினான். 

ஆசியோ அவன் செயலில் நெகிழ்ந்து போனான்.

இதுவரை அலுவலகம் பக்கமே வராதவனிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்க ஒரு தைரியம் வேண்டுமல்லவா அவன் தயங்கியபடி இருக்கவும் டேய் ஆசி எதுக்கு இப்படி தயங்குற எனக்கு நம்பிக்கை இருக்கு நல்லா பண்ணிடுவேன்னு போ ஆல் த பெஸ்ட் நல்லா பண்ணு என்று மீட்டிங் நடக்கும் ஹாலிற்கு அனுப்பி வைத்தான். 

தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு அவனுக்கு புது உத்வேகம் எழுந்தது.

நீங்களும் வாங்க அண்ணா என்கவும் இது உன்னோட ஃபர்ஸ்ட் பிராஜெக்ட் என்னோரு தலையீடு இல்லாம வெற்றிகரமாக முடிச்சிட்டு வா முழுக்க முழுக்க அது உனக்கே சேரும் ஏதாவது முடியலைன்னா சொல்லு நான் வரேன் சரியா இப்ப நீ போ என்று மீட்டிங் நடக்கும் அறைக்கு அனுப்பி வைத்தான். 

அவனை அனுப்பி வைத்து விட்டு இங்கு தன் மடிக் கணினியில் லைவில் தன் தம்பியின் பிரசன்டேஷன் பார்த்துக் கொண்டிருந்தவனை வரவேற்பறையில் இருந்த வந்த அழைப்பு கலைத்தது.

இன்டர்காம் அழைப்பை எடுத்தவன் சார் உங்களை பார்க்க நந்தனின்னு ஒரு பொண்ணு வந்திருக்காங்க என்றதும் இப்ப பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க என்று உடனே கத்தரித்தான்.

அவன் முகம் அன்று ஏற்பட்ட அவமானத்தில் கருத்து விட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து திரும்பவும் இன்டர்காம் அழைக்கவும் எடுத்தவன் சார் அவங்க ஏதோ வேலை விஷயமா பேசணுமாம் கொஞ்சம் அர்ஜண்ட் ஏற்கனவே உங்களை தெரியும் என்பது போல் சொல்றாங்க என்று தயங்க அனுப்புங்க என்று உறுமினான். 

இங்கு நந்தினியிடம் பார்க்க முடியாது மேம் என்று அந்த ரிசப்ஷனிஸ்ட் கூற வேலை விஷயமா பார்க்க வந்தேன்னு சொல்லுங்க சிஸ்டர் கொஞ்சம் அர்ஜென்ட் எனக்கு உங்க எம் டி சாரை ஏற்கனவே தெரியும் என்று டார்ச்சர் செய்து திரும்பவும் அழைக்க வைத்திருந்தாள்.

மூன்றாவது மாடியில் எம்.டி யின் அறை இருக்கு அங்க போங்க மேம் லிப்ட் இந்த பக்கம் இருக்கு என்று வழியை காட்டிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் அந்தப் பெண்.

இங்கு இறுகி அமர்ந்திருந்தவன் கதவு தட்டப்படவும் கம் இன் என்று அழைத்தானே தவிர கணினியில் இருந்து கண்களை எடுக்கவே இல்லை அவள் நிற்கவும் உட்காருங்க என்பது போல் இருக்கையை காட்டினான். 

எதுக்கு வந்திருக்கீங்க என்ன வேலை விஷயமா வந்தீங்க என்று கேள்வியோடு நிறுத்த ஆதி என்று ஆரம்பிக்க பட்டென்று மேசை மீது ஒரு தட்டு தட்டி டேமிட் என்றான் பல்லிடுக்கில் சாரி சார் என்றாள் பயத்தில் திக்கித் திணறினாள்.

எதுக்கு வந்தீங்க என்ன விஷயமா என்னை பார்க்கணும் சொல்லுங்க என்று உறுமினான்.

என்னை மன்னிச்சிடுங்க சார் நான் அப்படியெல்லாம் எல்லாரும் முன்னாடியும் பேசி இருக்கக் கூடாது அது ஏதோ புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன் என்று எப்படியாவது அவனை அடைந்து விடும் நோக்கில் கண்ணீர் சிந்திய படி கூற தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்றவன் சாரி மிஸ் நந்தினி நீங்க யாருன்னு எனக்கு தெரியாது ஏதோ வேலை விஷயம் என்று சொல்லவும் தான் உள்ளே அனுப்ப சொன்னேன் ஆனா நீங்க வேற ஏதோ பேசுறீங்க எனக்கு புரியல சோ நீங்க போகலாம் என்று கதவை நோக்கி கை காட்ட ஐ லவ் யூ ஆதி என்றுவிடாமல் அவன் அருகே செல்ல பார்க்க கெட் லாஸ்ட் யூ இடியட் என்று அறை அதிர கத்தினான்.

அப்பொழுது அவள் விட்டாளில்லை எனக்கு தெரியும் ஆதி நீங்க என்னை தான் லவ் பண்றீங்க ஏதோ அன்னைக்கு இருந்த சூழ்நிலையில மித்ராவை கல்யாணம் பண்ற மாதிரி ஆயிடுச்சு இப்ப கூட அக்கா கிட்ட நான் பேசுறேன் அவ உங்க லைஃப் விட்டு போய்டுவா நாம சந்தோஷமா இருக்கலாம் என்று அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக மரியாதையா இங்கிருந்து வெளியே போயிடு இல்லன்னா நடக்கிறதே வேற என்ன சொன்ன நான் உன்னை லவ் பண்றேன்னா என்று காட்டமாகக் கேட்டான்.

அவள் ஆமென்பது போல் தலையாட்ட கேலியாக புருவத்தை வளைத்தவன் ஆரம்பத்துல இருந்து எனக்கு பிடிச்ச ஒரே பொண்ணு அது என் மித்ரா மட்டும் தான் நீ இல்ல புரியுதா மித்ராவை தான் எனக்கு பிடிக்கும் இப்பவும் எப்பவும் அவளை தான் நான் காதலிக்கிறேன் என்றவன் தொடர்ந்து, உனக்கு நான் விளக்கம் சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை இங்கிருந்து கிளம்பு என்றான் ஆத்திரமாக.

அவள் நகராமல் அவள் அப்படியே நிற்க அவள் நகர மாட்டாள் என்று தெரிந்ததும் என்ன தெரியணும் உனக்கு இப்போ எதுக்கு இங்கேயே நின்னுட்டு இருக்க இங்கிருந்து போ ஷிட் இரிட்டேட்டிங் என்று உறுமியவன் என்னோட லவ் மித்ரா தான் நான் தான் தப்பா புரிஞ்சுட்டு இருந்திருக்கிறேன்.

உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? கல்யாணம் ஆனவங்க கிட்ட பேசுற பேச்சா இது நீ எல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச என்று கத்திய ஆதியிடம் இப்போ நீங்க என் மேல கோபமா இருக்கீங்க அதான் இப்படி பேசுறீங்க ஏய் நிறுத்து நான் எப்பொழுதும் இப்படி தான் பேசுவேன் ஏதோ மித்ராவோட தங்கச்சின்னு தான் உன்னை இவ்வளவு நேரம் நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் இல்லன்னா நடக்கறதே வேற இப்ப நீயே இங்கிருந்து போறியா இல்ல செக்யூரிட்டியை கூப்பிடவா என்று இன்டர்காமில் கை வைக்க போக அவள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.

அவள் அந்த இடத்தை விட்டு அகலவும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் எப்படி இவள் போய் மித்ராவிற்கு தங்கையாக பிறந்து தொலைத்தாள்.

மித்ராவிற்கும் நந்தினிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

இங்கு வெளியில் வந்த நந்தினிக்கு மனது உளைக்கலனாக கொதித்துக் கொண்டிருந்தது.

என்னையே வெளியே போக சொல்றியா உன்னை நிம்மதியா விடமாட்டேன் எப்படி நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னு பாக்கத்தானே போறேன் என்று மனதில் சூளுரைத்துக் கொண்டவளுக்கு அதற்கான சந்தர்ப்பமும் வெகு சீக்கிரமே கிடைத்தது.

அவள் எதிரில் வந்த ஆட்டோ ஒன்றில் பிரேமாவும் தாமோதரனும் வர இவளை பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தி என்ன நந்து இந்த பக்கத்தில் இருந்து வர என்று விவை அதுவா சித்தப்பா நான் என் ஃப்ரெண்டோட பர்த்டே ஃபங்க்ஷனுக்கு போயிட்டு வரேன் என்று பொய்யை தெளிவாக உண்மை போல் உரைத்தாள்.

நீங்க எங்க சித்தப்பா இந்த பக்கம் 

மித்ராவை பார்க்க போறோம்மா வர சொன்னா என்னன்னு தெரியல போய் பார்க்கணும் என்றார் வெள்ளந்தியாக.

நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு நந்து மிஸ் பண்ணிடாத எப்படியாவது ஓகே பண்ணு என்று தன்னை தானே உற்சாகப்படுத்திக் கொண்டவள் சித்தப்பா நானும் வரேன் அக்காவை பார்க்க என்று கூறி ஆட்டோவில் எறி அமர்ந்து கொண்டாள் அவர்களால் மறுக்க முடியவில்லை.

அவர்களுடன் சென்றவள் மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான் ஒன்று நான் ஆதி கூட இருக்கணும் இல்லன்னா இவங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க கூடாது என்பது மட்டும்தான்.

மூவரும் உள்ளே வர வரவேற்பறையில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தி இவர்களை கண்டதும் அடடே வாங்க வாங்க சம்பந்தி என்றவரின் சத்தத்தில் வெளியே வந்த சுமதி வாங்க சம்மந்தி என்றவர் நந்தினி நிற்கவும் அமைதியாக நின்றார்.

அவள் அன்று சபையில் அத்தனை பேர் மத்தியில் மகனை பற்றி கூறியது இன்னும் அவருக்கு நினைவில் இருக்கிறது அதற்காக வீட்டிற்கு வந்தவளை உள்ளே வராத என்று சொல்லும் அளவிற்கு நாகரீகம் தெரியாதவர்கள் அல்ல வாம்மா என்று உள்ளே அழைத்தவர் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

உள்ளே வந்தவர்கள் கண்டதென்னவோ அங்கு சோபாவில் நிருவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை தான்.

இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை இருவரும்.

அவள் தலையில் இருந்த கட்டை பார்த்ததும் பதறி போய் அருகில் வந்த பிரேமா மித்துமா என்னடா ஆச்சு என்ன தலையில் கட்டு போட்டு இருக்க எப்படி அடிப்பட்டுச்சு என்று அடுக்கடுக்கான கேள்விகளில் திணறிப் போனவள் நீ எப்போ வந்தம்மா எனக்கு ஒன்னும் இல்ல இந்த காயமா டேபிள்ல இடிச்சுக்கிட்டேன்மா சின்ன காயம் சீக்கிரம் சரியாகிவிடும் என்று தேற்றினாள். 

அண்ணி சின்ன காயம் தான் டாக்டர் கிட்ட போனோம் ரெண்டு வாரத்துல சரியாகிடும்னு சொல்லி இருக்காரு. நீங்க கவலைப்படாதீங்க அண்ணி என்று ஆறுதல் கூறினார்.

மித்து கண்ணா என்று அவள் தலையை வருடி விட்டார் தாமோதரன் எதுவும் பேசவில்லை.

நீ வா மித்து நம்ம வீட்டுக்கு போகலாம் என்ற தாயை ஆயாசமாக பார்த்தவள் அம்மா என்னம்மா பேசுற சின்னப்பிள்ளையா நான் எனக்கு ஒன்னும் இல்லை என்றவள் அப்பொழுது தான் அங்கு நின்றிருந்த நந்தினியை பார்த்தாள்.

ஏய் நந்து எப்படி இருக்க காலேஜ் இன்னைக்கு இல்லையா லீவா என்றவளுக்கு பதில் கூற சரி வாவென்று தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள். 

என்ன மித்து எப்படி போகுது வாழ்க்கை எல்லாம் என்று கேட்டவள் அவள் பதில் சொல்ல வருவதற்குள் எப்படி நல்லா போகும் அவர் என்னை தானே லவ் பண்றாரு அப்புறம் எப்படி உன் கூட சந்தோஷமா வாழ்வாரு. இப்ப கூடப் பாரு நான் ஆபீஸ் போயிட்டு அவரை பார்த்துட்டு தான் வரேன் என்ன பண்றது விதி அன்னைக்கு எனக்கு புத்தி மழுங்கி போச்சு போல நான் ஏன் அப்படி பேசினேன் தெரியல இப்போ என் வாழ்க்கையே அந்தரத்துல தொங்குது என்று பொய்யான வருத்தத்தோடு கூறினாள்.

எனக்காக ஒன்னே ஒன்னு செய் மித்ரா என்கவும் என்ன என்பது போல் பார்த்தாள்.

ஆதியை விட்டு போயிடு மித்ரா அவரை நான் பார்த்துக்கிறேன் அவர் என்னை லவ் பண்ணும் போது எப்படி உன் கூட சந்தோஷமா இருப்பாரு நல்ல முடிவா சொல்லு அதுல தான் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு என்றவள் அவள் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் வந்த வேலை முடிந்தது என்பது போல் அனைவரிடமும் தனக்கு அவசரமாக ஒரு வேலை இருப்பதாக கூறி பறந்து விட்டாள்.

சிறிது நேரம் கழித்து மித்ராவின் பெற்றோரும் கிளம்புவதாக சொல்ல மதியம் இருந்து சாப்பிட்டு தான் போகணும் அண்ணி இன்னும் கொஞ்ச நேரத்துல ஆதியும் ஆசியும் வந்துருவாங்க என்று அன்பு கட்டளை விடுத்தார் சுமதி.

இங்கு தன் அறையிலிருந்த மித்ராவிற்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது.

அவள் சொல்றதெல்லாம் சரிதான் அவளை தானே பிடிச்சு போய் கல்யாணம் ஏற்பாடு அனைத்தும் நடந்தது அதனாலதான் இந்த அத்தான் என்னை போ போன்னு சொன்னாரா சொன்னீங்களா என்ற வாரு ஒரு மனம் யோசிக்க இல்லையே அப்புறம் ஏன் என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் கண்ணுல ஏதோ ஒரு ஸ்பார்க் தெரியும் அப்போ அதுக்கு பேரு என்ன என்று சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் பின்னர் சரி விடு என்று என்ன நடக்குதோ அதுதானே நடக்கும் என்று தேற்றிக்கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள் அப்படியே கண்களை மூடி படுத்திருக்க அவளையும் அறியாமல் உறங்கி இருந்தாள்.

இங்கு மதிய உணவிற்கு வந்த ஆதி தேடியது என்னவோ மித்ராவை தான் அனைவரும் அமர்ந்திருக்க அவளை மட்டும் காணவில்லை உடனே தன்னறைக்கு விரைந்தவன் அவன் எண்ணத்தை பொய்யாக்காமல் அவர்களின் அறையில் தான் உறங்கிக் கொண்டிருந்தாள்.

மோகமுள் தீண்டும்…

படித்து விட்டு தங்களின் கருத்துகளை கீழே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 

comments Please dears.


Post a Comment

5 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments