Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 28

 


மோகமுள் -28:

அறை முழுக்க தேடியவன் பால்கனி கதவை திறந்து கொண்டு வர அங்கு தான் நின்று இருந்தாள் மித்ரா.

இங்க என்ன பண்ற மித்ரா வா உள்ள போகலாம் பனிக்காற்று அடிக்குது உடம்புக்கு ஒத்துக்காது வா என்று அவள் தோளோடு அணைத்து கொண்டு அங்கிருந்து நகர பார்க்க இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன் என்பது போல் அடமாக நின்றாள்.

கைகளை கட்டிக்கொண்டு தன் முன்பு பறந்து விரிந்திருந்த வானத்தைதான் வெறித்துக்கொண்டிருந்தாள்.

செப்பிதழ்களை இறுக்கி வைத்துக்கொண்டு அவனிடம் இனி பேச மாட்டேன் என்பது போல அங்கு அப்படி ஒருவன் இருந்தது போலவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.

ஏய் மித்ரா வாடி உள்ளே போகலாம் ஏன் இப்படி பிடிச்சு வச்ச சிலை போல நிக்கிற வா உள்ளே போகலாம் குளிருது பாரு என்றவன் அவள் அப்பொழுதும் நகராமல் இருக்கவே குண்டு கட்டாக தன் கைகளில் தூக்கிக் கொண்டவன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

விடுங்க என்னை.. நீங்க என்கிட்ட பேசாதீங்க விடுங்க என்று அவனிடமிருந்து இறங்க முற்பட அவன் பிடியோ விட்டேனா பார் என்பது போல இரும்பு பிடியாக இருந்தது.

விடுடா.. விடுடா என்னை என்று அவனை அடித்தாள் அப்பொழுதும் அவளை விட்டான் இல்லை கட்டிலை நெருங்கியவன் அவள் திமிர திமிர அமுக்கி பிடித்து படுக்க வைத்தவன் தானும் அவள் அருகில் படுத்து அணைத்துக் கொண்டான்.

விடு என்னை தொடாத போ எல்லாம் உன் இஷ்டத்துக்கு தானே பண்ற என்று அப்பொழுதும் திமிர இவனுக்கு இப்பொழுது எப்படி இவளை சமாதானம் படுத்துவது என்பதுதான் பெரிய பிரச்சினையாக தெரிந்தது.

மித்ரா இப்படி ஒரு அடங்காப்பிடாரி பேபியா இருப்பாள் என்று கனவா கண்டான்.

இப்ப எதுக்குடி இப்படி பண்ற உன்னை சமாளிக்கிறது தான் பெரிய விஷயமா இருக்கும் போல என்று வெளிப்படையாகவே முனக அவனைத் திரும்பித் தன் குண்டு கண்களால் முறைத்துப் பார்த்தாள்.

மனதிற்குள்ளோ அதுக்காக தானே அப்படி செய்தேன். மத்ததெல்லாம் மறக்கணும் உங்க நினைப்புல நான் மட்டும் தான் இருக்கணும் அத்தான் என்றபடி திரும்பி படுத்து கொண்டாள்.

என்ன டி முறைக்கிற அந்த கண்ணு ரெண்டையும் நோண்டி எடுத்து காக்காவுக்கு போட்டுடுவேன் என்று மிரட்ட ஐயோ ரொம்ப பயந்துட்டேன் என்று பயந்தது போல் நடித்து காட்ட அவள் செய்கையில் சிரித்தவன் ஒழுங்கா அசையாம படுடி தலையில் காயம் இருக்கு என்று அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் கொண்டுவந்து தன்னை நோக்கி படுக்க வைத்துக்கொண்டான்.

மித்ரா சாரிடி என்றான் வருத்தத்துடன் திரும்பவும் முதலிலிருந்தா என்பது போல் ஆயாசமாக அவனைப் பார்த்து வைத்தாள்.

அவன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறான் என்று தெரியும் அதற்காக அவனை அப்படியே விட்டு விட முடியுமா எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும். அவளும் அதற்காகத்தான் எப்படியாவது அவனை பழைய ஆதியாக மாற்ற வேண்டும் என்று அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.

உன்ன கஷ்டப்படுத்தியதற்கு சாரி டி இனிமே இப்படி நடக்காது என்கவும் நீங்க ஏன் அத்தான் அதை ஒரு குறையா பாக்குறீங்க இப்ப எனக்கும் தான் தலையில் காயம் பட்டிருக்கு காயம் ஆறிப்போனாலும் அந்த வடு இருக்கத்தானே செய்யும் இந்த வடு இருக்கிறதுனால இந்த முகம் அசிங்கமா இருக்கு நல்லா இல்ல வேண்டாம்னு தூக்கி போட முடியுமா இல்ல நீங்கதான் இந்த பொண்டாட்டி வேண்டாம்னு வேற பொண்டாட்டி வேணும்னு சொல்வீங்களா இந்த வடு காலப்போக்கில் மறைஞ்சிடும் இல்ல உடனே போகணும்னாலும் அதுக்கான களிம்பை வாங்கி தடவினா மறைந்து போயிடும்.

அது போல தான் ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறம் இப்படி ஆயிடுச்சு சரி டாக்டர் என்ன சொன்னாரு மெடிக்கேசன்ஸ் எடுத்துக்கோங்க சரியாகிவிடும் தானே சொன்னாங்க இது குணமே ஆகாதுன்னு சொல்லலையே அப்புறம் ஏன் இதுக்கு போய் மனச போட்டு குழப்பிக்கிறீங்க.

அத்தான் ஒருவேளை அது குணமாகவே இல்லனாலும் பிரச்சனை இல்ல எனக்கு நீங்க போதும் குழந்தை பிறக்கறதுக்கு நிறைய வழி இருக்கு ஐவிஎப், ஐ யூ ஐ, ஐ சி எஸ் ஐ என்று எவ்வளவோ வந்துருச்சு அதனால போட்டு குழப்பிக்காதீங்க சரியா.

சரி சரி நீ உன் பிரச்சாரத்தை முடிச்சிட்டியா எப்பா காது வலிக்குது என்று காதை குடைய உங்களை என்று அவனை அடி மொத்தினாள். 

சரி போதும் டி விடு இனி இதுபோல நடக்காம பார்த்துக்கிறேன் தூங்கு என்று அணைத்து கொண்டு தட்டிக் கொடுக்க நான் தூங்கினதும் நீங்க எங்கேயாச்சும் போயிட்டீங்கன்னா என்ன பண்றது என்று கேட்க நான் எங்கேயும் போகமாட்டேன் டி உன் கூடத்தான் இருப்பேன் போதுமா தூங்கு என்று உறுதியாக கூற நீங்களும் தூங்குங்க என்று அவன் தலைக்கேசத்தை கோதிவிட்டாள்.

சற்று நேரத்திற்குள் அவனிடமிருந்து சீரான சுவாசம் வரவே தானும் கண்களை மூடினாள்.

அடுத்த நாள் காலை பொழுது அழகாகவே விடிந்தது.

மித்ராவிற்கு மாத்திரையின் வீரியம் குறைந்திருக்க காயம் வலி கொடுக்கவும் அதற்கு மேல் அவளுக்கு தூக்கம் வரவில்லை.

ஆதியோ நல்ல உறக்கத்திலிருந்தான். அவள் வலியில் விழித்தவள் திரும்பி ஆதியை பார்க்க அவன் உறங்கியதைக் கண்டதும் அவன் தூக்கம் கலைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் எங்கு தான் அசைந்தால் எழுந்து கொள்வானோ என்ற பயத்தில் வலியை பொறுத்துக் கொண்டு அவனைப் பார்த்தபடியே படுத்திருந்தாள்.

மித்ரா தூங்குறவங்களை வச்சு கண்ணு எடுக்காமல் பார்க்க கூடாது என்று மனசாட்சி ஆஜராக அதெல்லாம் நான் பார்த்தா ஒன்றும் ஆகாது நீ போ என்று விரட்டினாள்.

சிறிது நேரத்தில் ஆதி விழித்துக் கொள்ள பார்த்தது என்னவோ அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை தான்.

அவளைப் பார்த்ததும் முன்முறுவல் பூத்தவன் கண்களை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டவன் என்னடா எப்போ எழுந்த என்னை எழுப்பி விட்டு இருக்கலாம்ல ஏதாவது வேணுமா என்கவும் தலை வலிக்குது தான் வேற ஒன்னும் இல்ல என்றாள் சாதாரணமாக.

என்னடா முன்னாடியே எழுப்பி இருக்க வேண்டியதுதானே என்று குறைபட்டுக் கொண்டான்.

இப்ப எதுக்கு முகம் சோர்ந்து போகுது நானும் இப்பதான் எழுந்தேன் அஞ்சு நிமிஷம் தான் இருக்கும் அப்படியே முகம் வாடுது .

சரி வாங்க ஃபிரஷ் ஆகிட்டு கீழே போகலாம் என்று எழுந்து கொள்ள அவளுக்கு முன்பு எழுந்தவன் அவள் பக்கமாக வந்து பார்த்து எழுந்துரு மித்ரா என்றவாரு கைப்பிடித்து தூக்க

அத்தான் எனக்கு தலையில தான் அடிபட்டு இருக்கு கால் நல்லா தான் இருக்கு நீங்க போய் ஜாகிங் போங்க உடற்பயிற்சி பண்ணுங்க போங்க.

இல்ல வா பிரஷ் ஆகிட்டு கீழே போகலாம் டைம் ஆச்சு என்று அவளை குளியல் அறைக்குள் தள்ளிக் கொண்டு போனான் அவள் பல்துலக்கி முடித்ததும் முகத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டவன் கொஞ்சம் இப்படி உட்காரு ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன் என்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

இருவரும் கீழே இறங்க சுமதி இவர்களுக்காகவே காத்திருந்தார் போலும் மித்ரா நல்லா தூங்குனியா டா இப்போ வலி எதுவும் இருக்கா என்றபடி காபியை அவள் கையில் திணித்தார்.

கொஞ்சம் வலி இருக்கு அத்தம்மா என்று செல்லம் கொஞ்சம் சரி சரி சாப்பிட்டு டேப்லட்ஸ் போடு இங்க உக்காரு நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று சமையல் கட்டிற்கு விரைந்தார். 

சாப்பிட்டு மாத்திரை போடும் வரை அவள் அருகில் இருந்தவன் மித்ரா நீ ரெஸ்ட் எடுத்துக்கோடா நான் ஆபீஸ் போயிட்டு வரேன் என்று எழ நானும் வாரேன் என்று எழுந்தவளை அம்மா என்று அழைத்தான் சுமதி தன் மகனின் குரலில் ஓடி வந்தவர் என்ன ஆச்சு என்றபடி மித்ராவை ஆராய்ந்தார் பதட்டத்துடன்.

அத்தம்மா எனக்கு ஒன்னும் இல்ல உங்க பையன் தான் கூப்பிட்டாங்க என்கவும் என்னப்பா என்னாச்சு என்று அவன் அருகே கேட்டுக் கொண்டே வர அவ என் கூட ஆபீஸ் வராலாம் சிறுபிள்ளை போல் தன் அன்னையிடம் புகார் வாசித்தான். 

இந்த நிலைமையில் வெளியே போக வேண்டாம் மித்ரா.. ஆதி போயிட்டு சீக்கிரம் வந்துருப்பா என்று மித்ராவிடம் ஆரம்பித்து ஆதியிடம் முடித்தார்.

சரி என்பது போல் தலையாட்டியவள் தங்கள் அறைக்கு வர பின்னே ஆதி வந்ததும் என்ன உங்க அம்மா கிட்ட என்னை போட்டு கொடுக்கிறீங்களா டிபிக்கல் மருமகள் போல அவனை அடி பின்னி எடுத்தவள் அத்தான் என்னை விட்டுட்டு ஏன் போறீங்க.

இல்ல மித்ரா ஒரு முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு வந்துருவேன் சரியா உனக்கே தெரியும் தானே அந்த புது ப்ராஜெக்ட் பற்றி போட் ஆப் மெம்பர்ஸ் கிட்ட பேசணும் அதை முடிச்சுட்டு சீக்கிரம் வரேன் சரியா என்று கன்னம் தட்டி கூறியவனை விடாமல் அணைத்துக் கொண்டாள்.

ஆதி அலுவலகத்திற்கு கிளம்பி வர சுமதி ஆதியிடம் ஆதி மித்ராவுக்கு அடிபட்டது இன்னும் அவங்க வீட்டுக்கு சொல்லல சொல்லாமலும் இருக்கக் கூடாது.

நான் பேசிக்கிறேன் அத்தம்மா வீட்டுக்கு வர சொல்றேன் போன்ல சொன்னா பயந்துடுவாங்க என்கவும் அதுவும் சரிதான் என்று மித்ராவின் கூற்றை சுமதி ஏற்றுக் கொண்டார்.

மித்ராவிடம் ஒரு தலையசைப்போடு ஆதி கிளம்பி விட்டிருந்தான்.

ஆதி சென்றதும் மித்ராவை பிடித்துக் கொண்ட சுமதி மித்துமா ரொம்ப முரடா நடந்துக்கிட்டானா சாரிடா கண்ணம்மா எதுவும் மனசுல வச்சுக்காத என்ற கலங்கியபடி கூற அதை பொறுக்கமாட்டாதவள் ஐயோ அத்தம்மா என்ன இது அதெல்லாம் ஒன்னும் இல்ல நானா தான் டேபிள்ல இடிச்சிகிட்டேன் என்றவளை நம்பாத பார்வை பார்த்தார்.

நம்புங்க அத்தம்மா என்று தன் தலையில் கை வைக்க ஹிம்ம் புருஷனை அவங்க அம்மா கிட்டயே விட்டுக் கொடுக்க மாட்டேங்குற நல்ல பொண்ணு என்று கன்னம் வைத்து திருஷ்டி கழிக்க அத்தை நானெல்லாம் இந்த ஓசி மணியை விட்டுக் கொடுக்க மாட்டேன் விட்டுட்டு போயிருவேன் என்றவாறு வர அடிங்க போக்கிரி என் பிள்ளை சிங்கம் டீ எங்க போனாலும் வந்து தூக்கிட்டு வந்துருவான் என்று அவரும் தன் மகனுக்கு வக்காலத்து வாங்க மித்ராவை கட்டிப்பிடித்துக் கொண்டு உங்க பையனுக்கு நீங்க மட்டும் தான் கொடி தூக்கணும் இங்க வேற யாரும் வரமாட்டோம் என்று வம்பு வளர்த்துக் கொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்றவன் அவள் இடுப்பை கிள்ளி துள்ள விட்டான்.

ஏய் வாலு காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா உன் சேட்டையை என்று சிரிக்க அவனை திரும்பி பார்த்தவள் ஓ மை காட் வாங்க வாங்க எல்லாரும் இந்த அதிசயத்தை பாருங்க இவன் என்னடா ஆபீஸ் போற மாதிரி கோட் சூட் எல்லாம் போட்டு இருக்கான்.

ஏன் மாமா வெல்கம் டு தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ அப்படின்னு எதுவும் வித்தை காமிக்க போறியா.

அடிங்க அரட்டை ஆஃபீஸ் தான் போறேன் அண்ணனுக்கு கொஞ்சம் ஹெல்ப்ஃபா இருக்கும் என்கவும் உதடு குவித்து காற்றில் அவனுக்கு முத்தத்தை அனுப்பி வைத்தாள்.

ஏன்டி என் பையனை கிண்டல் பண்ணுற நீ ஆபீஸ் போடா கண்ணா நான் உனக்கு பிடிச்ச ஸ்வீட் பண்ணி வைக்கிறேன் என்று அனுப்பி வைத்தார். 

இங்கு நந்தினி தன் அன்னையிடம் சென்று அம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் ம்மா என்கவும் எங்கடி போற இந்த காலையிலேயே இன்னைக்கு தான் உனக்கு காலேஜ் இல்லன்னு சொன்னியே என்கவும் ஆமா ம்மா காலேஜ் இல்லதான் இப்போ போறது என் பிரண்ட் ஒருத்திக்கு பர்த்டே அதுக்கு தான் கிளம்புறேன் என்று கூற சரி பார்த்து போயிட்டு சீக்கிரம் வந்துரு என்று அனுப்பி வைத்தார்.

அவளோ ஆதியின் அலுவலகத்திற்கு ஒரு ஆட்டோ பிடித்து சென்று கொண்டிருந்தாள் எப்படியாவது ஆதியிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்று.

மோகமுள் தீண்டும்…

படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழமைகளே



Post a Comment

2 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments