மோகமுள் - 33:
விஜயன் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீசை, தன் தந்தைக்கு பிறகு, திறன் பட நடத்தி வருவது, ஐஸ்வர்யா விஜயன் தான்.
அவளுக்கு முன்பு, இரண்டு ஆண் சிங்கங்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் மருத்துவத் துறையில் தங்களை அர்ப்பணித்து விட்டனர்.
ஐஸ்வர்யாவும் ஆதீரனும் தொழில்துறை நண்பர்கள் அவ்வப்பொழுது பிசினஸ் மீட்டிங்கில் சந்திப்பது வழக்கம் அப்படித்தான் மித்ராவிற்கும் பழக்கம்..
தங்கள் மருத்துவமனையில் அவர்களைக் கண்டதும்தான் என்னவென்று கேட்டாள்.
மித்ராவும் டாக்டர் வீரேந்திர விஜயனை பார்க்க வேண்டும் என்றதும் அவனைத் தான் நீங்க பார்க்கணுமா என்றவள் பின் நாக்கை கடித்துக் கொண்டு என் அண்ணன் தான் வாங்க நான் கூட்டிட்டு போறேன் என்று இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
ஒரு அறையின் முன்பு வந்தவள் தட்டாமல் கூட உள்ளே சென்று “டேய் வீரி” என்று பழக்க தோஷத்தில் அழைக்கவும் அங்கு எதிரில் அமர்ந்திருந்தவன் அவளை முறைக்கவும் பின் நாக்கை கடித்துக் கொண்டு “அண்ணா” என்று தன்னை திருத்திக் கொண்டவள் “இவங்க உங்களை பார்க்க தான் வந்திருக்காங்க.. நான் கூட சொல்லுவேன்ல ஆதின்னு அவங்கதான் இவங்க எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க அப்பா கூட சொல்வாங்களே அடிக்கடி என்று நியாபக படுத்த “வாங்க சார்” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் ஆதீரனிடம் கை குலுக்கி உங்களை பற்றி அப்பா நிறைய சொல்லுவாங்க இந்த சின்ன வயசிலேயே இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காரு என்று அவனும் சினேகம் பாராட்ட பின் ஆதீரனும் சகஜமாக பேச தொடங்கினான்.
சரி சரி வளவளன்னு பேசிட்டு இருக்காம எதுக்கு வந்திருக்காங்கன்னு கேளுடா இவன் ஒருத்தன் வாயை திறந்தால் மூடவே மாட்டான் என்று தன் தமையனை வாரவும் ஏய் உலக அழகி உனக்கு இங்க என்ன வேலை அதான் அறிமுகப்படுத்தி வச்சுட்டல்ல அப்புறம் என்ன நீ கிளம்பு நான் இனி பார்த்துக்கிறேன் என்று அவளை அனுப்ப பார்க்க போடா சிடுமூஞ்சி நான் மகேன் கிட்ட உன்ன சொல்லி கொடுக்காம விட மாட்டேன் என்று காலை தரையில் உதைத்து அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு சென்றாள்.
பின்னர் அவள் அறையை விட்டு சென்றதை பார்த்தவன் “வாங்க ஆதி” என்று அழைத்தவன் மித்ராவையும் “வாங்க மேடம்.. வந்து உட்காருங்க” என்று அவர்களை இருக்கையில் அமரச் செய்தவன் தானும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு “சொல்லுங்க ஆதி எதுக்காக என்னை பார்க்க வந்திருக்கீங்க என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
ஆதிக்கோ எப்படி சொல்வது எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறிப் போனான்.
தன் தொழில் துறையில் கொடிக்கட்டி பறந்தவன் தினமும் பல்வேறு மனிதர்களை சந்திப்பவனுக்கு தன் உடலில் உள்ள குறையை சொல்ல மிகவும் தயங்கினான்.
அவன் முகத்தை பார்த்து அவன் படபடப்பாக இருக்கிறான் தன் இயல்பில் இல்லை என்பதை உணர்ந்தவன் இங்க உங்களுக்கு எதுவும் ஓபனா சொல்ல கம்ஃபர்ட்டா இல்லன்னா வாங்க உங்களுக்கு பிடிச்ச இடத்துக்கு போகலாம் என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் சார் என்று மீண்டும் தயங்க ஓகே ஆதி இப்ப நான் டாக்டர் கிடையாது உங்க நெருங்கிய நண்பன் சரியா என்னை சார் என்று கூப்பிட வேண்டாம் உங்க நண்பனை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே கூப்பிடுங்க என்று அவனை சகஜமாக்கும் பொருட்டு கூறினான்.
ஆதி தன்னை சமன்படுத்திக் கொண்டவன் மித்ராவை திரும்பி பார்க்க அவளும் சொல்லுங்க என்பது போல் அவன் கையைப் பிடித்து ஆதரவாக தன் கைக்குள் வைத்துக் கொண்டாள். அதில் தைரியம் வரப்பெற்றவனாய் வீரிடம் திரும்பினான்.
அவர்களின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன மச்சான் உங்க ரெண்டு பேருக்கும் லவ் மேரேஜா என்று கேட்க முதலில் அவனை ஆச்சரியமாக பார்க்க பின் தானும் இல்ல அது எப்படி சொல்றது என்று யோசிக்க என்னடா உன் மேரேஜ் பற்றி தானே கேட்டேன் அதுக்கு இப்படி யோசிக்கிறே என்று முயன்ற அளவுக்கு அவனிடம் நெருக்கமாக நண்பன் போல் கேட்டான்.
பின் ஆதியும் அதற்கு மேல் தயங்காமல் ஆரம்பத்தில் இருந்து நடந்தது அனைத்தையும் சொன்னவன் பின் அன்று இரவில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதையும் பின் மித்ராவை தள்ளிவிட்டதையும் ஒன்று விடாமல் எதையும் மறைக்காமல் அனைத்தையும் கூறினான்.
வீரோ என்ன மச்சான் இதெல்லாம் சப்ப மேட்டரு இதுக்கு போய் என் தங்கச்சியை என்ன பண்ணி வச்சிருக்க என்று மித்ராவை தன் உண்மையான தங்கை போல் பாவித்து பேச அவனை மித்ரா ஆச்சரியமாக பார்த்தாள்.
மித்ராவிடம் திரும்பியவன் என்னமா மித்ரா அவன் உன்னை தள்ளிவிட்டதுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம் என்று அவளிடம் வினவ அவளும் ஆமா அண்ணா ஏதாவது பண்ணனும் என்றவள் பின்னர் அவருக்கு நல்லாயிட்டா போதும் அண்ணா அதை நினைச்சு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றவள் தொடர்ந்து எனக்கு அவர் நல்லா இருந்தா போதும் வேற எதுவும் வேண்டாம் என்றாள் கண்கள் .
இப்பொழுது ஆச்சரியமாக பார்ப்பது வீரின் முறையானது.
அவர்களின் திருமணம் எந்த நிலையில் நடந்தது என்று அறிந்தவனுக்கு அவள் மேல் நன்மதிப்பு உண்டாகியது.
ஆதி நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா.. உனக்கு என் தங்கச்சி கிடைக்க ஏதோ போன ஜென்மத்துல நீ புண்ணியம் பண்ணி இருக்க போல டா என்று வீரி ஆதியிடம் கூற ஆதியின் கண்களோ மித்ராவை காதலாய் பார்த்து வைத்தது.
அதனை கண்டவன் ஹூக்கும் போதும் போதும் இங்க ஒரு குட்டி பையன் இருக்கேன்னு கொஞ்சமாச்சு உங்களுக்கு நினைப்பு இருக்கா என்று வீர் கேட்டான்.
ஆதி அவனிடம் இன்னும் மேரேஜ் ஆகலையா வீர் என்று கேட்க அவனோ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரே ஒருமுறை மட்டும் கல்யாணம் ஆயிடுச்சு என் மொசக்கொட்டி கூட என்றான் வருத்தம் போல்.
நீங்க பாட்டுக்கு என் முன்னாடி ரொமான்ஸ் பண்ணினா எனக்கு என்னோட மொசக்குட்டிய பாக்கணும்னு தோணும்ல என்றான் விளையாட்டாக .
பின் நேரே விஷயத்திற்கு வந்தவன் ஆதி உனக்கு இருக்கிற பிரச்சனை விபத்து ஏற்பட்டதால் தான் ஆகியிருக்கு அதுக்கு முன்னாடி வரைக்கும் நார்மலா தான் இருந்துருக்க அண்ட் இத பத்தி ரொம்ப யோசிச்சா இதனால் ஏற்படும் மன உளைச்சலால் இந்த கண்டிஷன் இன்னும் சிவியராக வாய்ப்பு இருக்கு அதனால எதையும் போட்டு குழப்பிக்க வேண்டாம் என்றவன் ஏதோ யோசித்து பின் அவர்களிடம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன் என்று வெளியில் விரைந்தான்.
சிறிது நேரத்திலே கதவை திறந்து கொண்டு வந்தவர்களை ஆச்சரியமாக பார்த்தனர் இருவரும்.
வீர் மாதிரியே முக ஜாடையுடன் உள்ளே வந்தான் ஒருவன் அவன் டாக்டர் மகேந்திர விஜயன் ஆதி மீட் டாக்டர் மகேந்திர விஜயன் என்னோட பிரதர் அவர்கள் தங்களை பார்ப்பதைக் கண்டு என்ன அப்படி ஆச்சரியமா பாக்குறீங்க நாங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ் அதுவும் ஐடென்டிகல் ட்வின்ஸ் பார்க்க ஒரே மாதிரி இருக்கோம்ல என்று கேட்டான்.
உடனே மகேன் ஆதியிடம் சிநேகமாக புன்னகைத்து கைகுலுக்கியவன் நான் மகேந்திர விஜயன் செக்ஸாலஜிஸ்ட் வீர் எல்லாத்தையும் சொன்னான்.
டோன்ட் வரி இது தீர்க்க முடியாத பிரச்சனை எல்லாம் இல்ல நான் இதுல நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இருக்கேன் செக்ஸ் டிரைவ்க்காக நான் ஒரு மருந்து கண்டுபிடித்து இருக்கேன்.. அதை யூஸ் பண்றதுக்காக அப்ரூவல் வந்துடுச்சு பட் மார்க்கெட்ல ரிலீஸ் பண்ண விடல டாக்டர் கன்சல்ட் பண்றவங்களுக்கு மட்டும்தான் டைரக்டா கொடுப்போம் உங்களுக்கு சில பிளட் டெஸ்ட் எடுக்க வேண்டியது இருக்கு அதை இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ளட் கலெக்ட் பண்ணுவாங்க ரிப்போர்ட் வரட்டும் நீங்க பிட்டா இருந்தா அந்த மெடிக்கேஷன் உங்களுக்கு ப்ரிஸ்கிரைப் பண்றேன் என்று முழு விபரத்தையும் அவனிடம் கூற மித்ரா எதுவும் சைடு எஃபெக்ட் இருக்காதுல்ல டாக்டர் என்று பயத்தில் வினவ இல்லம்மா இது சைடு எபக்ட்ஸ் கிடையாது அது ஒரு டைம் டோஸ் தான் டெய்லி டோஸ் கிடையாது ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதும் அதன் பிறகு சரியாகும்.
இந்த மெடிக்கேஷன் இதுக்கு முன்னாடி யாராவது எடுத்து இருக்காங்களா அண்ணா அவங்களுக்கு எதுவும் ஆகலையே என்று கேட்க வீரோ முந்திக் கொண்டு நானே யூஸ் பண்ணி இருக்கேன் என்றவன் நாக்கை கடித்துக் கொண்டான்.
அதெல்லாம் பயப்பட வேண்டாம். இந்த அதிக பிரசங்கி பண்ணின வேலை இருக்கே என்று வீரை தன் முழங்கையால் அவன் விளாவில் இடித்தவன் எங்க வீட்ல அப்ரூவல் வாங்குவதற்கு முன்னாடியே ரெண்டு பேரும் யூஸ் பண்ணிட்டாங்கமா சோ பயப்பட வேண்டாம் இவனை பாரு நல்லா தான் இருக்கான் என்று தேற்றினான்.
ஒன்னு வீர் இன்னொருவர் யாரு என்பதை மோக மேகங்கள் மழை பொழியுதே கதையில் பார்க்கலாம்.
வீர் ஆதியிடம் திரும்பி உன் காட்ல இன்னைக்கு அட மழை தாண்டா என்று அவனை கட்டி அணைக்க ஆதியோ கலர் கலர் கனவெல்லாம் இப்பொழுதே காண ஆரம்பித்து விட்டான்.
இருவரும் காதில் கிசுகிசுப்பாக பேசிக்கொள்ள மித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை அவள் இருவரையும் பார்ப்பதை கண்ட மகேன் வீரை தன் பக்கம் இழுத்துக் கொண்டவன் சரி நீங்க போய் இந்த பிளட் டெஸ்ட் குடுங்க ஒரு ஒன் ஹவர்ல ரிப்போர்ட்ஸ் வந்ததும் பாக்கலாம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு லேபில் சொல்லிவிட்டு வீரைத் தன்னுடன் இழுத்து கொண்டு சென்றான்.
பின்னர் ஆதி இரத்த பரிசோதனை முடிக்க மணி ஒன்றானது. பின்னர் மித்ராவிடம் வந்தவன் மித்ரா இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் டா ரிப்போர்ட் வரத்துக்கு வா நாம போய் சாப்பிட்டு வரலாம் என்று அழைக்கவும் இருவரும் வெளியில் வர வீர் எங்கிருந்து வந்தானோ ஆதியை பிடித்துக் கொண்டான்.
ஆதி பிளட் கொடுத்துட்டியா என்கவும் ஆச்சு இப்போதான் கொடுத்தேன் என்று கூறினான்.
அப்போ இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் ஒன்னு பண்ணுங்க இப்போ ஏதாவது வொர்க் இருக்கா என்று கேட்க இல்ல ஹோட்டலுக்கு தான் சாப்பிட போறோம் என்று கூறினான்.
மித்ரா டேப்லெட் போடணும்ல என்றவனிடம் உடனே வீர் அப்போ ஒன்னு பண்ணுங்க நம்ம வீட்டுக்கு வாங்க போகலாம் அப்பா உன்னை பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவார்.
அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சிரமம் என்று தயங்கினான் ஒன் மினிட் வெயிட் பண்ணுடா என்று திரும்ப மகேனும் அந்நேரம் அங்கு வர ஆதி வாங்க நம்ம வீட்டுக்கு சாப்பிட்டு இங்க வரலாம் என்று அவனும் அழைக்க அதற்கு மேல் மறுக்காமல் ஒத்துக் கொண்டார்கள்.
நால்வரும் விஜயன் இல்லத்திற்கு சென்றனர்.
அங்கு இவர்களை கண்டதும் விஜயன் ஆதியை இனம் கண்டு கொண்டு ஹாய் ஆதிரன் வாட் அ சர்ப்ரைஸ் விசிட் என்று கைக்குலுக்கியவர் அவனை அணைத்து விடுவித்தார்.
தன் மகன்களிடம் திரும்பி ஆதியை எங்கப்பா பார்த்தீங்க என்று விவை வீர் முந்திக்கொண்டு அது மித்ராவிற்கு அடிபட்டுச்சு போல ப்பா அதான் நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தாங்க அப்போதான் ஐசு பாத்துட்டு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தோம் என்கவும் அதற்கு மேல் அவர் எதுவும் கேட்கவில்லை.
பின்னர் தன் மனைவிக்கு இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
வாங்க தம்பி வாம்மா என்று வீட்டாளாய் அழைத்தவர் இருவரையும் அமரச் செய்தார்.
மகேன் தன் அன்னையிடம் எங்கம்மா அந்த மூணு வானரப் படைகளும் என்று கேட்க அவங்க வருவதற்கு லேட் ஆகுமாம் மகேன் என்று தன் மகளையும் மருமகள்களையும் போட்டுக் கொடுத்தார்.
இன்னும் வரலையா இன்னைக்கு இருக்கு என்றவன் சரி சாப்பிடலாம் என்று அமர அந்நேரம் பார்த்து சாணக்கியனும் வந்துவிட்டான்.
இருவரையும் கண்டு யார் என்பது போல வீரைப் பார்க்க அவன் கூறவும் அவனும் பிரஷ் ஆகி வந்தவன் அவர்கள் கூட்டணியில் ஐக்கியமாகி விட்டான்.
இருவரிடம் இவன் சாணு எங்க அத்தை பையன் எங்க ஐஸ்வர்யாவை கட்டிய அப்பாவிப்புள்ள என்றவன் வீட்டில் மட்டும் தான் அப்பாவி வெளிய ரௌத்திரம் பழகுங்க ரேஞ்சுக்கு அடி உதை எல்லாம் இருக்கும் இந்த சிட்டியோட டிஎஸ்பி சார் இவர் தான் என்று கூறினான்..
அவர்களும் சிநேகமாக புன்னகைத்து கொண்டனர்.
வீர் ரிப்போர்ட்ஸ் வந்துருச்சு என்று மெதுவாக மகேன் காதில் கூற சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்ப எத்தனிக்க அடிக்கடி வந்துட்டு போங்கப்பா என்று பாசத்தோடு விஜயன் அழைக்க அவர் மனைவி ஜெயலட்சுமி அதனை ஆமோதித்தார்.
நீங்களும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும் சார் என்று தன் வீட்டிற்கு அழைப்பு விடுத்தவன் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
மருத்துவமனைக்கு வந்த நால்வரும் நேரே சென்றது லேபிற்கு தான்.
ரிப்போர்ட் அனைத்தையும் பார்த்தவன் நீங்க இந்த மருந்து இன்னைக்கு நைட்டு எடுத்துக்கோங்க பட்ட கொஞ்சம் இங்கேயே ஸ்டே பண்ண முடியுமா என்று கேட்டான் மகேன்.
ஆதி அவனிடம் என்னோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அங்க இருந்தா ஓகே தானே ஓகே அப்போ ஓகே தான் என்றவனை புரியாமல் பார்த்தான்.
அதனை கண்டு வீர் ஆதியின் காதில் மச்சி பயப்படாத அவன் ஏன் அப்படி சொல்றான் என்று பார்க்கிறாயா? அந்த மெடிக்கேஷன் எடுத்ததும் நீ தங்கச்சி கிட்ட உடனே பாஞ்சுட்டா அதான் இங்கேயே பக்கத்துல இருக்க சொல்றான் என்றான் பார்த்து தங்கச்சி பத்திரம் டா என்று எச்சரிக்கை செய்தான்.
மித்ராவோ பயத்தில் எதுவும் ஆகாது இல்லன்னா என்று மீண்டும் தெளிவு படுத்திக் கொண்டவள் அவர்கள் சிகப்பு நிற திரவம் அடங்கிய தங்க நிறக் குப்பியை நீட்ட வாங்கிக் கொண்டாள்.
வீரோ ஏதோ அந்த மருந்து தனக்கே கிடைத்தது போல் அக மகிழ்ந்து போனவன் ஹேய் ஆதி நல்லா சாப்பிட்டுட்டு அப்புறம் இந்த மருந்த குடிச்சு பாரு அப்புறம் தெரியும் அந்த மருந்து ஓட பவர் என்றவன் தன் தமையனிடம் திரும்பி டேய் அண்ணா எனக்கு ஒன்னு கிடைக்குமா என்று குறும்பு கண்ணனாக கேட்க அடி வாங்க போற வீர் நீ என்று தன் உடன் பிறந்தவனை பாசமாக பார்த்தான் மகேன்.
இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி பாசமா பாக்குற பிரதர் சரி சரி முறைக்காத என்று ஆதியிடம் திரும்பியவன் மச்சி பார்த்துக்கோ ஏதாவது ப்ராப்ளம்னா எப்போ வேணாலும் கால் பண்ணு என்று கைப்பேசி எண்ணை கொடுத்தவன் அவர்களை அனுப்பி வைத்தான் அவர்களும் ஒரு தலையசைப்போடு விடை பெற்றனர்.
மோகமுள் தீண்டும்...
0 Comments