மோகமுள் - 35:
அந்த மார்கழி மாதத்தில் வெண்மை நிறப் பணியோ பச்சை நிற புற்களுடன் காதல் கொள்ள அதை நெருக்கமூட்டும் வகையில் குளிர் நிரம்பவே இருக்க இங்கு உள்ளுக்குள் இரு உடல்கள் குளிரைப் போக்க இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு துயில் கொண்டிருந்தனர்.
அந்நேரம் பார்த்து ஆதியின் கைப்பேசி அழைத்தது,
கண்களைப் பிரிக்க முடியாமல் திறந்தவன் கைப்பேசியை எடுத்து பார்க்க புது நம்பராக இருந்தது யார் இது என்றவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
ஹலோ என்று தூக்கத்தில் ராகம் இழுக்க என்ன மச்சி நைட்டு சிவராத்திரியா என்றான் வீர் அந்த பக்கம் இருந்து கொண்டு.
ஹிம்ம் .. ம்ம்.. என்றான் தூக்க கலக்கத்தில் சரி சரி சும்மாதான் போட்டேன் எழுந்ததும் ஹாஸ்பிடல் வந்துட்டு போங்கடா அதை சொல்லத்தான் கால் பண்ணினேன் நான் வைக்கிறேன் என்று அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.
ஒரு பத்து மணி போல் மித்ராவிற்கு தூக்கம் கலைய கண் விழித்தவள் பார்த்தது என்னவோ தன் ஆதியைத்தான் அவனும் அவளை கட்டிக்கொண்டு நல்ல நித்திரையில் இருந்தான் அவன் இதழில் மெதுவாக மிக மென்மையாக முத்தமிட திரும்பி படுத்தான்.
உடனே எழுந்து கொண்டவள் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அந்த இனிய இரவின் எச்சங்கள் அவள் உடலில் இருக்க ஜில்லென்ற தண்ணீர் பட்டு உடல் காந்தியது குளித்து முடித்ததும் அங்கிருந்த டவளை எடுத்து நெஞ்சில் முடிந்து கொண்டு வெளியே வர அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஆதியைக் காணவில்லை எங்கே போய்ட்டாங்க இந்த அத்தான் என்று யோசித்தவள் அத்தான் என்று அழைத்துக் கொண்டு அடுத்து எட்டு வைக்க அவள் கால்கள் தரையில் பதியவில்லை.
கள்ளன் அவள் வருவதற்காகவே காத்திருந்தான் போல அவள் வெளியில் வந்ததும் அள்ளிக்கொண்டான். அத்தான் என்ன பண்றீங்க விடுங்க என்று இறங்க முற்பட விடமாட்டேன் வா குளிக்கலாம் என்று குளியல் அறைக்குள் நுழைய ஐயோ அத்தான் நான் இப்பதான் குளிச்சேன் என்றாள்.
நீ குளிச்சிட்டா போதுமா நான் இன்னும் குளிக்கலையே இனிமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் குளிக்கணும் மித்துமா அதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் டைம் சேவிங் தெரியுமா இதுல எவ்வளவு பெனிபிட்ஸ் இருக்கு தெரியுமா டைம் சேவ் ஆகும் வாட்டர் சேவ் ஆகும் அப்புறம் நான் குளிக்க நீ ஹெல்ப் பண்ணுவ நீ குளிக்க நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன் என்றவாறு அவள் கட்டி இருந்த துண்டையும் அவிழ்த்து போட்டு விட்டான்.
ஐயோ அது ஒன்னு தான் இருந்துச்சு வேற டிரஸ் எதுவும் போட இல்ல என்று அலறினாள்.
டிரஸ் தானே வாங்கிக்கலாம் டி இப்போ உன் கவனத்தை என் பக்கம் திருப்பு என்றவன் அவள் என்ன முயன்றும் அவளை அவன் விடவே இல்லை.
ஒருவாராக இருவரும் குளித்து வர எனக்கு இப்போ டிரஸ் வேணுமே அத்தான் இப்போ என்ன பண்றது என்று கேள்வியாக அவளை பார்க்க அங்கிருந்த கபோர்டை நோக்கி கண்ணை காட்டினான்.
அதனைக் கண்டவள் உங்க டிரஸ் போட்டுட்டு எப்படி நான் வெளியே வருவது என்று அந்த கபோர்டு திறக்க அங்கு அவள் போட்டுக்கொள்ள ஆடைகள் இருந்தது அதனை கண்டவள் அவனை திரும்பிப் பார்க்க உன்னை பார்த்துக்க நான் இருக்கேன் உனக்கு என்ன தேவையோ அதை செய்ய நான் இருக்கேன் ஆனா நீ தான் என்னை கண்டுக்கவே மாட்டேங்குற என்கவும் நைட் பயங்கரமா கவனிக்கலாம் அத்தான் இப்ப வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூற இல்லடா வீர் மருத்துவமனைக்கு வர சொன்னான் காலையில கால் பண்ணி இருந்தான்.
அவனை போய் பார்த்துட்டு இந்த மருந்தையும் அவன் கிட்ட குடுத்துட்டு வந்துரலாம். இனிமே இது நமக்கு தேவைப்படாது வேற யாருக்காவது யூஸ் ஆகட்டும் என்று கூறியவனை பார்த்துள் குசும்பாக அப்போ இதை குடிச்சு நீங்க ட்ரை பண்ணலையா என்று குறும்பாக கேட்டாள்.
நீதான் நைட்டே முடியலன்னு சொன்ன எனக்கு இருக்கிற ஆசைக்கு இதெல்லாம் பத்தாது மித்தும்மா சரி நீ தூங்கட்டும்னு தான் உன்னை விட்டேன் என்று கூற வாயில் கை வைத்து அதிர்ச்சியாக அவனைப் பார்த்தவள் எவ்வளவு ரவுண்டு போச்சுன்னு கணக்கே இல்லாம போச்சு நீங்க என்னடான்னா பத்தலன்னு சொல்றீங்க.
அவன் அவளை இன்னும் நெருங்கிக் கொண்டு மித்து இங்கேயே இன்னும் ஒரு வாரம் ஸ்டே பண்ணலாமாடி என்றான் அவளுடன் இழைந்து கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அங்கேயே செல்லக்கடி கடித்து சிறுசிறு முத்தங்கள் இட்டு அவளை சுயம் இழக்க செய்தவன் கைப்பேசி அழைத்தது.
அவன் கைப்பேசி எடுக்க சென்ற நேரத்தில் உடைகளை எடுத்துக்கொண்டு வேறு அறைக்கு ஓடிவிட்டாள்.
அவன் கையில் சிக்கினால் இனி விடமாட்டான் என்று தெரிந்து கொண்டவள் ஒரே ஓட்டம் தான் உடை மாற்றிக் கொண்டு வந்தவள் அங்கிருந்த சமையலறைக்கு சென்றாள் அங்கு எதுவும் புழங்காமல் இருக்க காலை டிபன் ஆர்டர் செய்தவள் ஆதி இருந்த அறைக்கு வந்தாள்.
ஆமா அன்று சிசிடிவி ஃபூட்டேஜ் ஒன்னு கிடைச்சது அதையும் உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன் முன்னாடியே விசாரித்து இருக்கலாம் தான் ஆனா வீட்டுல கேள்விப்பட்டால் பயப்படுவாங்க அதான் பிரேக் பிடிக்காம ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு சொன்னேன் எனக்கு இன்னும் ஒரு வாரத்துல யாருன்னு தெரிஞ்சு ஆகணும் சீக்கிரம் கண்டுபிடிங்க என்று உத்தரவிட்டவன் திரும்பவும் அங்கு மித்ராவை எதிர்பார்க்காதவன் தன்னை சமன் படுத்திக் கொண்டவன் என்ன மித்து கிளம்பலாமா என்றான் சாதாரணமாக.
அத்தான் யார் கிட்ட பேசிட்டு இருந்தீங்க நீங்க என்கிட்ட பிரேக் பிடிக்காமதானே ஆக்சிடென்ட் ஆனதுன்னு சொன்னீங்க இப்போ இப்படி சொல்றீங்க எது அத்தான் உண்மை சொல்லுங்க என்றாள் உடலில் ஏற்பட்ட நடுக்கத்துடன்.
அவளை நெருங்கியவன் டேய் மித்ரா ஒன்னும் இல்ல பிசினஸில் கண்ணுக்கு தெரியாம ஆயிரம் எதிரி இருக்கத்தான் செய்வாங்க அதுக்கெல்லாம் நாம பயப்படலாமா என்கவும் அத்தான் நான் கேட்டதுக்கு பதில் இது இல்லையே உண்மையை சொல்லுங்க என்று அவனை பிடித்து உலுக்கினாள்.
ஆமாம் அது யாரோ என்ன பிளான் பண்ணி கொல்லனும்னு தான் ஆக்சிடென்ட் பண்ணி இருக்காங்க இது வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம் என்று தான் கார்ல பிரேக் பிடிக்கலைன்னு சொன்னேன் அவள் அவனை அதிர்ந்து பார்க்கவும் ஹேய் ஒன்னும் இல்லடி எனக்கு எதுவும் ஆகாது நீ அதை பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது இங்க பாரு அது யாருன்னு தெரிஞ்சுக்க தான் இப்போ டிடெக்டிவ் கிட்ட டீடைல்ஸ் எல்லாம் கொடுத்து இருக்கேன் இன்னும் ஒன் வீக்ல யாருன்னு தெரிஞ்சுரும் அப்புறம் இருக்கு அவனுக்கு.
நான் இவ்வளவு நாள் எல்லார் முன்னாடியும் அவமானப்பட காரணம் அந்த தெரியாத நபர் தான் ஆனால் அதுவும் ஒரு விதத்துல நல்லது தான் எனக்கு பண்ணி இருக்கான் அவன் அப்படி பண்ணலன்னா எனக்கு நீ கிடைச்சிருக்க மாட்டல்ல என்று அணைத்துக்கொண்டான்.
அத்தான் எனக்கு பயமா இருக்கு உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் என்ன பண்ணுவேன் அத்தான் என்று அவனை அணைத்துக் கொண்டு கதறினாள்.
ஹேய் மித்து அப்போதுல இருந்தே நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான்டி இருக்கேன் யாருக்கும் தெரியாமல் ஷேடோ போட்டு இருக்கேன் நம்ம வீட்டு ஆளுங்களுக்கும் ஷேடோ போட்டு இருக்கேன் சோ பயப்படாத சரியா நான் உன் கூட ரொம்ப நாள் சந்தோஷமா வாழனும் இன்னும் நாம லைஃப்ல நிறைய பார்க்க வேண்டியது இருக்கு சோ நான் கவனமாக தான் இருப்பேன் என்ன புரிஞ்சுதா இதுக்கு போய் அழலாமா மித்து எதுக்கும் கண் கலங்கக்கூடாது சரியா நான் உனக்காக எப்பவும் உன் கூட இருப்பேன் என் தங்கம் அழாதடி பட்டு என்று அவள் முகம் முழுக்க முத்தமிட்டு அவள் இதழை பற்றி கொண்டான்.
அவளுக்கும் அவனை விட்டு விடும் எண்ணமில்லை போலும் உணர்ச்சி வசப்பட்டதில் எங்கு ஏதாவது தன்னவனுக்கு ஆகிவிடுமோ என்கிற பயத்தில் அவனை அதிகமாக நாடினாள் மீண்டும் அங்கு ஓர் பனிப்போர் நடந்தது இம்முறை மித்ரா பட்டத்தரசியாக வெற்றிவாகை சூடிக்கொண்டாள்.
ஆர்டர் செய்திருந்த உணவு வரவே இருவரும் சாப்பிட்டு முடித்து வீரின் ஹாஸ்பிடலுக்கு சென்றனர் அங்கு வெயிட்டிங் அறையில் இருவரும் அமர்ந்திருக்க ரிசப்ஷனிஸ்ட் அவர்களை உள்ளே செல்லுமாறு கூறினாள்.
அங்கு வீர் அறையில் வீர் மகேன் இருவருமே இருந்தனர். அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் அமர செய்தவன் ஆதியை நோக்கி என்ன மச்சி எல்லாம் ஓகேவா என்றான் விஷமமாக. மித்ரா சட்டென கீழே குனிந்து கொண்டாள் வெட்கத்தில்.
மகேன் தன் தம்பியை அடக்கி வாசி என்பது போல் முறைத்தான் ஆதி இருவரையும் பார்த்து நான் அந்த மருந்தை எடுக்கவே இல்ல ஆனா எல்லாம் ஓகே தான் டா என்றான் ஒருவித கூச்சத்துடன்.
மச்சான் இது எதிர்பார்த்ததுதான்டா என்று உண்மையை கூறினான்.
மச்சான் அந்த மருந்துக்கு நாங்க இன்னும் அப்ரூவல் வாங்கவே இல்ல என்றதும் அப்போ இது என்று ஆதி கேட்க மச்சி அது காஃப் சிரப் டா என்று அடக்க மாட்டாமல் சிரித்தான் வீர். அடப்பாவிங்களா என்று வாயில் கை வைத்தான் ஆதி.
மித்ராவும் ஷாக்காகி விட்டாள்.
மச்சான் இதை மட்டும் நீ குடிச்சிருந்தா தூங்கியிருப்ப அப்புறம் ஒண்ணுமே நடந்திருக்காது என்றவனுக்கு சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான். தன் தம்பியின் தோளில் ஒரு அடி வைத்த மகேன், ஆதியிடம் திரும்பி ஜோக்ஸ் அப்பார்ட் ஆதி ஆக்சுவலா நான் அந்த மருந்து கண்டுபிடித்தது என்னவோ உண்மைதான் ஆனால் சில நபர்களால் இன்னும் எங்களுக்கு அப்ரூவல் கிடைக்கல.
நேற்று உன்னோட பிளட் ரிப்போர்ட்ஸ் பார்க்கும் பொழுது ஹார்மோன் எல்லாமே சீராகத்தான் இருந்தது எந்தவித குறைப்பாடும் இல்ல மே பி ஆக்சிடென்ட் ஆன சமயத்துல உனக்கு அந்த மாதிரி இருந்திருக்கலாம். ஆனா இப்போ நீ பெர்ஃபெக்ட்தான் பட் உன்னை அறியாமலையே அதை பற்றியே யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க.
நாங்க இதை சரி பண்ணனும்னு தான் உன்கிட்ட இந்த மருந்து கொடுத்து உன்னை நம்ப வச்சோம் ஒரு வேலை இந்த மருந்து நீ குடிச்சிருந்தா கொஞ்ச நேரத்திலேயே தூங்கி இருப்ப. உன்னை ஏன் எங்க பக்கத்துலையே தங்க சொன்னேன் என்றால் ஒரு வேலை நீ ட்ரை பண்ணும் போது திரும்ப முடியாமல் போனா இன்னும் ஆக்ரோஷமாகி இருப்ப அதனால பக்கத்துல இருந்தா சேஃப் அதான் இங்கேயே தங்க சொன்னேன்.
வீர் தொடர்ந்து அதனாலதான் மச்சி உன் மனசை நம்ப வைக்கிறதுக்காக தான் நேற்று அப்படி எல்லாம் உன்னை ஏத்தி விட்டது நாங்க நினைத்தது போலவே எல்லாம் சுமூகமா முடிஞ்சு போச்சு. இனிமேல் ஜல்சாதான் என்று மீண்டும் ஆதியை பார்த்து சிரித்தான்.
மச்சி தேங்க்ஸ் டா இதுவரைக்கும் எல்லா டாக்டரும் சரியாக வாய்ப்பு இருக்குன்னு தான் சொன்னாங்களே தவிர யாருமே உறுதியாக சொல்லல ஆனா நீங்க தான் கண்டிப்பா சரியாயிடும்னு சொன்னீங்க அதுபோலவே எனக்கு சரியாயிடுச்சு தேங்க்ஸ் மச்சி என்று எழுந்து வந்து இருவரையும் அணைத்துக் கொண்டான் அவர்களும் அவனை அணைத்துக் கொண்டனர்.
வீரோ மச்சி நான் சைக்காலஜிஸ்ட் டா இது கூட பண்ணலன்னா எப்படி என்றான் குசும்பாக.
ஆதி, மச்சி நீ அந்த மருந்த யூஸ் பண்ணினன்னு சொன்னியே அது உண்மையா டா என்று கேட்க மச்சி அதெல்லாம் உண்மைடா கூடிய சீக்கிரமாகவே நாங்க அப்ரூவல் வாங்கிடுவோம்.
அது உனக்கு இனி தேவைப்படாது மச்சி உன் கண்ணு சிவந்து இருக்கிறது பார்த்தாலே தெரியுது நைட் ஃபுல்லா நீ தங்கச்சிய தூங்க விடலன்னு என்று கிண்டல் செய்தான்.
பின் இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.
வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கோ செல்ல ஆதியை கேள்வியாக பார்க்க அவனும் தீவிரமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவளின் பெரியப்பா வசிக்கும் இடம் நோக்கி செல்வதை கண்டவள் என்ன அத்தான் எங்க வீட்டுக்கு போறோமா என்றவளுக்கு இல்லை என்று ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தான்.
கணேசன் வீட்டிற்கு முன்பு காரை நிறுத்தியவன் அவனை புரியாமல் பார்த்தவளை வா மித்ரா என்று அவன் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.
அன்று கணேசன் வீட்டில் தான் இருந்தார். ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க சிவகாமி சமையல் அறையில் இருந்தார் போலும்.
உள்ளே வந்தவன் கணேசனை தன் குரலை செறுமிக் கொண்டு அங்கிள் என்று தன் பக்கம் அவரை திசை திருப்பினான். அவர்களை அப்பொழுது அந்த நேரத்தில் எதிர்பாராதவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டு வாங்கப்பா வாங்க வா மித்ரா என்று அவர்களை இன்முகமாகவே வரவேற்றார்.
வந்து உட்காருங்கப்பா என்று நாற்காலியை இழுத்து போட்டவர் சிவகாமி இங்க வா யாரு வந்திருக்காங்கன்னு பாரு என்று தன் மனைவிக்கு குரல் கொடுத்தார். சிவகாமி சமையலறையில் இருந்து வெளியே வந்தவர் இருவரையும் பார்த்து அடடா வாங்க வாங்க வா மித்ரா என்று நலம் விசாரிக்க ஏய் தண்ணி கொண்டு வா என்று மனைவியை ஏவ இதோ எடுத்து வரேன் என்று உள்ளே சென்றார்.
ஆதியிடம் திரும்பிய கணேசன் தம்பி ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வரவா என்ன குடிப்பீங்க என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் ஒரு விஷயமாக உங்ககிட்ட பேசத்தான் வந்தோம் என்று கூறினான்.
சிவகாமி தண்ணீர் எடுத்து வந்தவர் அவர்களிடம் நீட்டினார்.
மறுக்காமல் தண்ணீரை வாங்கிப் பருகியவன் நான் வந்த விஷயத்தை சொல்லிடுறேன் எங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு உங்களுக்கே தெரியும் நான் சொல்ல தேவையில்லை மண்டபத்துல அத்தனை பேரு இருந்த சபையில உங்க பொண்ணு என்னை வேண்டாம்னு அவங்க சொல்லிட்டு போயிட்டாங்க.
இப்போ வந்து மித்ரா கிட்ட போன் பண்ணி நீ ஆதியை விட்டு போயிடு அவர் என்னைத்தான் லவ் பண்றாருன்னு எதுக்கு சொல்லணும் பின் அவன் தன் அலுவலகத்திற்கு வந்ததையும் தன் வீட்டிற்கு வந்து மித்ராவை பார்த்து பேசி சென்ற அனைத்தையும் கூறியவன் நான் மித்ராவை தான் லவ் பண்றேன் என் மனைவி மித்ரா மட்டும்தான் உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசி புரிய வையுங்க.
உங்களை சங்கடப்படுத்த இதை நான் சொல்லல என் மித்ராவிற்கு அவள் சொந்தம் அனைத்தும் வேணும் அவளுக்கு ஒரு கவலையும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன் இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன் நாங்க வரோம் என்று ஆதி எழுந்து கொள்ள அதுவரை அதிர்ச்சியில் உறைந்திருந்தவள் பின் தன்னை சமன் செய்து கொண்டு ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது நல்லது தான் என்று அவளும் எழுந்து கொண்டு ஒரு தலையசைப்போடு கிளம்பி விட்டார்கள் இருவரும்.
நந்தினி சங்கு தான்டி..
மோகமுள் தீண்டும்…
comments please
0 Comments