மோகமுள் - 32:
காலையிலேயே, ஆதி மித்ராவை அவசரப்படுத்திக் கொண்டு இருந்தான்.
“மித்து! என்னடி கிளம்பாம, இங்கேயும் அங்கேயும் ஓடிட்டு இருக்க? சீக்கிரம் வா.. நம்ம டைமுக்கு அங்க போனாதான் டிரெஸ்ஸிங் முடிச்சுட்டு உன்னை வீட்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போக முடியும் என்று இன்னும் கிளம்பாமல் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தவளைக் கத்தினான்.
ஆஹா இதல்லவா இன்பம் இப்போதான் என் பழைய ஆதி வெளியே வராரு என்று குதூகளித்தாள்.
என்னால எதுவுமே முடியவில்லை என்று பரிதாபமாக விழிக்கும் ஆதியை விட இந்த முசுட்டு மன்னன் ஆதியைத்தான் அவளுக்கு பிடிக்கிறது.
(இவள் மட்டும் ஏன் மக்களே இப்படி ஒரு டைப்பா இருக்கா )
அவளும் பதிலுக்கு அவனிடம் திரும்பி அத்தான் அப்படி ஆஃபிஸ் தான் உங்களுக்கு முக்கியம்னா நீங்க ஆபீசுக்கு கிளம்புங்க நான் தனியா போகிறேன் எனக்கு பிரச்சனை இல்லை என்று இவளும் அவள் பங்குக்கு காட்டமாக கூற உடனே அந்தர் பல்டி அடித்தவன் அதுக்கில்லடி சீக்கிரம் போயிட்டு வந்துட்டா நல்லது தானே
நாமே லேட்டா போனா அங்க டாக்டரை சீக்கிரம் பார்க்க முடியாமா வெயிட் பண்ற மாதிரி ஆயிடுச்சுன்னா அதுக்கு தான் சொன்னேன் அதுமில்லாம சீக்கிரம் பார்த்துட்டு வந்துட்டா நீ வந்து வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல அதுக்கு தான் சொன்னேன் உனக்கு தான் அந்த மருந்து நெறி பிடிக்க மாட்டேங்குதே அதான் சொன்னேன்.
எனக்கு ஆபீஸ்லாம் முக்கியம் இல்ல நீ தான் முக்கியம் என்று அவளை அணைத்துக் கொண்டான்.
அவளோ மனதிற்குள் அவன் அணைத்ததும் இதுவும் நல்லா தான் இருக்கு மித்ரா சண்டை போட்டு மாறி மாறி திட்டிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் கைபேசி அழைத்தது.
அவனிடமிருந்து விலகிக் கொண்டவள் கைபேசியை எடுத்தாள்.
நந்தினி தான் அழைத்துக் கொண்டிருந்தாள். மித்ராவோ ஐயோ இவளா என்பது போல நெற்றியை வருடி கொள்ள யாரு என்று அவனும் எட்டி பார்க்க திரையில் நந்தினி என்று காட்டவும் அவள் எதுக்குடி உனக்கு போன் பண்றா என்று மீண்டும் வல்லுநாயாக கத்த
இப்ப எதுக்கு அத்தான் கத்துறீங்க எனக்கு என்ன தெரியும் அவ எதுக்கு போன் போடுறான்னு இருங்க கேட்கிறேன் என்று தன் பங்கிற்கு தானும் பிராண்டி வைத்தவள் போனை ஸ்பீக்கரில் போட்டு சொல்லு நந்து என்று கூற இவன் அவளை முறைத்தான்.
கண்களால் அவனிடம் கெஞ்சிக் கொண்டு அவள் என்ன பேசுகிறாள் என்று கவனித்தாள்.
மித்ரா என்ன முடிவு எடுத்திருக்க என்று ஆரம்பிக்க என்ன நந்து முடிவு எதை பற்றி கேக்குற என்று கேட்க என்னடி மறந்துட்டியா அதான் நேத்து உன் கிட்ட சொன்னேன்ல எப்போ ஆதிய விட்டுப் போகப் போற என்று கேட்டவள் அவளை பேச விடாமல் அவளே மீண்டும் தொடர்ந்தாள்.
நீ போனா தான்டி நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்போம் எங்களுக்கு இடைஞ்சலா நீ இருக்க வேண்டாம் மித்ரா ஆதி என்னத்தான் லவ் பண்றாரு சொன்னா புரிஞ்சுக்கோ என்று அவள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போக அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ஆதி கத்தப்போக ஆதியின் கையை பிடித்து தடுத்தவள் நான் பேசுறேன் என்று சைகை செய்தாள்.
நந்தினி ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ ஆதி என்னோட புருஷன் என் புருஷனை விட்டு எங்கும் நான் போக மாட்டேன் என்னோட ஆதி என்ன மட்டும் தான் லவ் பண்றாரு பகல் கனவு காணாமல் போய் படிச்சு டிகிரி வாங்குற வழியைப் பாரு சும்மா பினாத்திக்கிட்டு திரியாம என் புருஷன் எனக்கு மட்டும் தான்.
அப்புறம் இன்னொரு முறை எனக்கு கால் பண்ணாத இந்த எண்ணத்தோட என் தங்கையா எனக்கு கால் பண்ணினா பண்ணு கண்டிப்பா நான் எடுப்பேன் ஆனா இந்த எண்ணத்தோடு எனக்கு இன்னொரு முறை கால் பண்ணாத அப்புறம் என் புருஷனையும் ஆபீஸ் வரைக்கும் போய் டிஸ்டர்ப் பண்ணாத என்ன புரிஞ்சுதா என்றாள் மிரட்டல் .
நந்தினியோ விடாமல் எனக்கும் அவருக்கும் தானே முதலில் கல்யாணம் நடக்க இருந்தது நடுவுல வந்த இடை சொருகல்தான் நீ என்று அவளும் அந்த பக்கத்தில் இருந்து கத்த ஆரம்பிக்க என் பொண்டாட்டி கிட்டயே குரலை உசத்தி பேசுவியா இரு உன்னை எங்க பார்க்கணுமோ அங்க பார்த்துக்குறேன் என்று அவளை அரட்டியவன் நீ எதுக்கு இவ காலெல்லாம் அட்டென்ட் பண்ற எல்லாம் உன்ன சொல்லணும் என்று நந்தினியின் அழைப்பைத் துண்டித்து விட்டான்.
அத்தான் என்று அவன் அருகில் வரவும் போய் கிளம்பு ஹாஸ்பிடல் போகணும் என்று அவளை குளியலறைக்குள் தள்ளிவிட்டான்.
குளித்துவிட்டு வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு வெளியில் வந்தவளை பார்த்தவன் சட்டென்று அவளுக்கு எதிர்பக்கம் திரும்பிக் கொண்டான்.
ஹலோ என்ன பார்க்க மாட்டீங்களா என்று அவன் முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்ப அவன் கண்களோ ரத்தமென சிவந்திருந்தது அவன் கொண்ட மோகத்தால்.
அச்சோ என்ன அத்தான் என்று அவன் தாடையைப் பற்றி அதிர்வுடன் பார்க்க அவள் கையை விளக்கி விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டான் அவஸ்தையில் .
போய் டிரஸ் பண்ணு மித்ரா டைம் ஆச்சு என்றவனின் குரலோ அவன் கொண்ட பித்தத்தில் பிசுறு தட்டியது.
ஏன் அத்தான் உங்க கண்ணு சிவந்திருக்கு கண்ணுல எதுவும் தூசி விழுந்திருச்சா என்று அவன் முகத்தை திருப்பி அவன் கண்ணுக்குள் உற்றுப் பார்க்க அவள் நெருக்க அவனை முகடைக்க வைத்தது.
கண்களில் உற்றுப் பார்த்தவள் எதுவும் இல்லையே அத்தான் இருங்க ஊதினால் சரியா போயிடும் என்று அவள் சிவந்த இதழ் குவித்து ஊத அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவன் அவளை அப்படியே மெத்தையில் தூக்கிப்போட்டு அவள் மேல் படர்ந்தான்.
பாவம் அவனும் எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்துவான் திடீரென்று நடந்து முடிந்த சம்பவத்தில் அவளுக்கு என்ன என்று உணரும் முன்பே அவள் இதழை கடித்து இழுக்கவும் அவன் கேசத்தில் விரல்களை நுழைத்துக் கொண்டவள் அவனுடன் தானும் சேர்ந்து கொண்டாள் முத்த போராட்டத்தில்.
அவளிடம் முத்தம் மட்டுமா களவாடினான் மொத்தமும் களவாட பேராவல் கொண்டவன் அவள் கட்டியிருந்த டவளை பிடித்து இழுக்க இழுத்தவன் கையோடு வந்தது அந்த டவல்.
இதற்கு மேல் சென்றால் அடுத்த என்ன நடக்கும் என்று அறிந்தவள் அத்தான் என்று அவன் இதழை விட்டு பிரிந்து கொண்டு ஹாஸ்பிடல் போகலாம் டைம் ஆச்சு அத்தான் கிளம்புங்க என்று அவனை திசை திருப்ப பார்க்க அவனெங்கு இங்கு இருந்தான்.
அவள் எழில் கோலங்களில் முகம் புதைத்தவன் நிமிரவே இல்லை அதற்கு மேல் அவளாலும் என்ன செய்தும் அவனை தடுக்க முடியவில்லை.
அவளும் என்னதான் செய்வாள் அவளும் மனுஷிதானே அவளுக்கும் உணர்வுகள் இருக்குமே அதுவும் உணர்வுகள் பேயாட்டம் போடும் வயது இருவருக்குமே.
அவன் தலையைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவளுக்கு வயிற்றில் சுக மொட்டுக்கள் அனைத்தும் பூப்பூக்க அவனை இன்னும் நெருங்கினாள்.
அவள் உடல் முழுவதும் அவன் விரல்கள் அங்கும் எங்கும் அலைபாய்ந்து வருடி அவளை இன்ப சுழலுக்குள் இழுத்துக்கொண்டு சென்றான்.
தன் இதழ்களைக் கொண்டு அவள் எழில் கோலங்களை சிலர்க்கச் செய்தவன் மித்ரா என்று அவளை அழைக்கவும் அத்தான் என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் பஞ்சமாகிவிட்டது.
அவளுக்கு அவன் ஏற்படுத்தும் உணர்வுகளை தாங்க முடியாமல் இதயத்துடிப்பு தாறுமாறாக ஏற சுவாசமும் தடைப்பட மூச்சை ஆழ்ந்து சுவாசித்தவள் தன் நிலைக்கு வரப் படாத பாடுபட்டாள்.
அவள் கனிகளில் முகம் புதைத்தவன் விரல்களோ அவள் இடை வருட அங்கிருந்த மயிர் கால்கள் சிலிர்த்து அவளின்பம் பறை சாற்றிக் கொண்டிருந்தது.
அவன் உடைகளையும் களைந்து அவன் முடி அடர்ந்த மார்பில் பதுங்கிக் கொண்டு அங்கு முத்தமிட அவளை அணைத்துக் கொண்டவன் சற்று நேரத்தில் அவள் பக்கத்தில் சரிந்து படுத்துக் கொண்டவன் விட்டத்தை வெளித்துப் பார்த்தப்படி இருந்தான்.
சற்று நேரத்தில் தன்னை சமன் படுத்திக் கொண்டவள் அவனை நோக்கித் திரும்பி இருவருக்கும் சேர்ந்து போர்வையை போட்டுக் கொண்டு அவனை நெருங்கி நெஞ்சில் முகம் புதைக்க சாரி என்று இருவரும் ஒரு சேரக் கூற இல்ல இல்ல அத்தான் நான்தான் சாரி நான் தான் டவலோட வந்து உங்க முன்னாடி நின்னுருக்க கூடாது.
அதான் இப்படி ஆகக் காரணம் என்கவும் இல்ல மித்ரா என்னால தான் இப்போ எல்லாம் உன்ன பக்கத்துல வச்சுக்கிட்டு கண்ட்ரோல் பண்ண முடியலடா உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னோட கட்டுப்பாட்டை இழக்கிறேன் என்ன பண்றது மனசு வேணும்னு கேட்குது ஆனால் உடல் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்குதே
என்னால நீயும் கஷ்டப்படுற எனக்கு அது இன்னும் ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னைக்கு ஒரு முடிவா டாக்டர் கிட்ட பேசணும் இல்ல ஏதாவது சர்ஜரி பண்ணி சரி பண்ணலாமான்னு பார்க்கணும் இதனால் ரொம்ப அவஸ்தையா இருக்கு அதுவும் உன்ன பக்கத்துல வச்சுட்டு சும்மா இருக்கிறது எப்படி தெரியுமா இருக்கு பல நாள் பட்டினி கிடந்தவனுக்கு பலவித உணர்வுகளை பக்கத்துல வச்சு அவன் கையை கட்டி போட்டா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கு.
எனக்கு உன்ன பக்கத்துல வச்சுக்கிட்டு பார்க்க ரொம்ப அவஸ்தையா இருக்குடி முடியல என்று மீண்டும் அவள் நெஞ்சில் புதைந்து கொண்டான். சரியத்தான் எல்லாம் சரியாகும் வாங்க ஹாஸ்பிடல் போயிட்டு இன்னைக்கு ஒரு முடிவு கட்டிடலாம் என்று இருவரும் எழுந்து கிளம்பினர்.
முன்பு போல் கோபம் இல்லை ஆதியிடம் ஓரளவுக்கு மனதினை தேற்றிக்கொண்டான்.
பின் இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.
முதலில் முல்லைநாதனை சென்று பார்க்க மித்ராவின் காயத்தை ஆராய்ந்து விட்டு ட்ரெஸ்ஸிங் மாற்றினர்.
பின் முல்லைநாதனிடம் ஆதி மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். மித்ராவிற்கு எப்படி அடிபட்டது என்று சொல்ல வர அதெல்லாம் இல்ல என்பது அவன் கையைப் பிடித்து தடுத்தவள் டாக்டர் அவங்க சில நேரத்துல ஆக்ரோஷமா மாறிடுறாங்க அவங்கள கட்டுப்படுத்த முடியல ரொம்ப பீல் பண்றாங்க எங்களுக்கு பயமா இருக்கு ரொம்ப பீல் பண்ணி மெண்டலி டிஸ்டர்ப் ஆகிடுவாரோன்னு பயமா இருக்கு அதுக்கு என்ன பண்றது இதை குணப்படுத்தவே முடியாதா என்று மித்ரா கேட்க உங்க கேள்விக்கு என்னை விட ஒருத்தர் தெளிவா பதில் சொல்லுவார்.
இந்த டாக்டரைப் போய் பாருங்க உங்க பிரச்சனைக்கு கண்டிப்பா தீர்வு அங்கே கிடைக்கும் என்றவர் ஒரு முகவரி அடங்கிய விசிட்டிங் கார்டை கொடுத்தார்.
அதனை வாங்கிக் கொண்டவன் அந்த கார்டை பார்க்க விஜயன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்று கேள்வியாக பார்க்க ஆதி நீங்க கண்டிப்பா அங்க போய் பாருங்க டாக்டர் வீரேந்திர விஜயன் உளவியலாளர் அவரை மீட் பண்ணுங்க கண்டிப்பா உங்க பிரச்சனைக்கான சொலுயூஷன் அங்க தான் இருக்கு என்று கூற ஓகே தேங்க் யூ டாக்டர் நாங்க போய் பார்க்கிறோம் என்று எழுந்து கொண்டவர்கள் அவரிடம் விடை பெற்றுக் கொண்டனர்.
பின்பு வெளியே வந்ததும் ஆதி என்ன மித்ரா போய் பார்க்கணுமா என்று தயங்கினான்.
ஏன் அத்தான் அவர்தான் ஆணித்தரமா சொல்றாரே போய் பார்த்துடலாம் ஏதாவது ஒரு வழி கண்டிப்பா கிடைக்கும் எனக்கும் தோணுது என்று தன் மனதில் பட்டதை கூறினாள்.
ஆனால் அவன் முகம் இன்னும் தெளியாமல் இருக்கவும் சரியத்தான் உங்களுக்கு பிடிக்கலன்னா வேண்டாம் போக வேண்டாம் விடுங்க என்றவள் மருத்துவமனைக்குள் உள்ளே செல்ல திரும்ப ஏன் மித்து என்ன ஆச்சு ஏதாவது மறந்து வச்சிட்டு வந்துட்டியா என்று கேட்கவும் இல்ல உங்களுக்கு தான் சங்கடமா இருக்குல்ல நான் போயிட்டு எனக்கு செக் பண்ணிட்டு வரேன் அத்தான் குழந்தைக்கு என்ன பண்ணலாம்னு கேட்டுட்டு வரேன் என்று உள்ளே போக எத்தனித்தவளை மித்ரா அதெல்லாம் வேண்டாம் நீ வா என்னால எதுக்கு நீ செக்கப் பண்ணிக்கணும் வா நாம அந்த ஹாஸ்பிடலுக்கு போகலாம் போய் என்னன்னு தெரிஞ்சிட்டு வரலாம் என்று அவளை இழுத்து பிடித்து காருக்குள் தள்ளி கதவை சாற்றியவன் தானும் ஏறிக்கொண்டு வண்டியை விரட்டினான் விஜயன் ஹாஸ்பிடலுக்கு .
ஒரு மணி நேர பயணத்தில் இருவரும் அந்த மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
ஆறு மாடி அடுக்கு கட்டிடம் அது.
விஜயன் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்று தங்க எழுத்துக்களில் பெரியதாகப் பொறிக்கப் பட்டிருந்தது.
காலை இளவையில் அப்பொன் எழுத்துக்கள் பொன்னாக மின்னியது.
அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் சென்று டாக்டர் வீரேந்திர விஜயனை பார்க்கணும் என்கவும் ஒரு பைவ் மினிட்ஸ் அங்கே உட்காருங்க சார் ஒரு கன்சல்டேஷன் போயிட்டு இருக்கு அடுத்து நீங்க போகலாம் என்று அங்குள்ள இருக்கையில் அமரச் சொன்னாள் அந்த பெண்.
இருக்கையில் சென்று அமர்ந்ததும் மித்ராவின் கைகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
அவன் கரங்கள் நடுங்குவதிலிருந்து அவன் மிகவும் பதட்டமாக இருப்பது புரிந்தது அவளுக்கு. தட்டிக் கொடுத்தவள் அத்தான் நல்லதே நடக்கும் தைரியமாக இருங்க என்று அவனை தேற்றினாள்.
ஹேய் ஆதீரன் வாட் அ சர்ப்ரைஸ் ப்ரோ என்ற ஒரு பெண்ணின் குரல் துள்ளலுடன் வந்தது.
ஹாய் ஹாசினி என்று மித்ராவை அணைத்துக் கொண்டாள் அப்பெண்.
அவளைத் திரும்பிப் பார்த்தவன் ஹேய் ஹாய் ஐஸ்வர்யா இங்க என்ன பண்றீங்க என்று கேட்க அவளோ ஆதி ப்ரோ இது எங்க ஹாஸ்பிடல் தான் என்று கூறினாள்.
என்னாச்சு ஏதாவது ப்ராப்ளமா என்று வினவினாள். அவன் சற்று தயங்கவும் மேம் டாக்டர். வீரேந்திர விஜயன் பார்க்கத்தான் வந்திருக்கோம் என்று மித்ரா கூற ஒஹ் அவனைத்தான் பார்க்க வந்திருக்கீங்களா வாங்க நான் கூட்டிட்டு போறேன் என்று அவர்களை அழைத்தாள் உடனே அந்த சமயம் ரிசப்ஷனிஷ்டும் இவர்களை அழைக்க சரியாக இருந்தது.
மோகமுள் தீண்டும்… |
என் புதிய முயற்சியாக Youtube Channel ஆரம்பித்திருக்கிறேன் மக்களே அதற்கும் தங்களின் ஆதரவு வேண்டும் ..
0 Comments