Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 34

 


மோகமுள் - 34:

வீர் கூறியதைக் கேட்ட ஆதிக்கோ மனம் துள்ளாட்டம் போட்டது.

டேய் வீர் நீ சொன்னது மட்டும் நடந்துருச்சுன்னா உங்களுக்கு கோவில் கட்டுவேன் டா என்று மானசீகமாக அவர்களிடம் பேசியவன் மித்ராவை திரும்பி பார்த்தான்.

அவளும் அவனைத்தான் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் பார்வையைக் கண்டவன் இதழ் விரித்து சிரிக்கவும் என்ன அத்தான் ஆச்சு ஏன் ஒரு மாதிரி சிரிக்கிறீங்க என்று ஐயத்துடன் வினவினாள்.

அவனும் அவளை வெளியிடம் என்றும் பாராமல் இடையோடு கைவிட்டு தன்னுடன் சேர்த்து அணைத்தவன் மித்ரா இன்னைக்கு உன்னை அப்படியே சாப்பிடுவேன்டி அதை நினைச்சாலே அப்படியே உள்ளுக்குள்ள இருந்து ஏதோ ஒன்னு கிளம்புது என்றான் தாபத்துடன்.

அவளோ அவன் செய்கையில் ஏற்பட்ட கூச்சத்தில் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு அதெல்லாம் எதுவும் கிளம்ப வேண்டாம் நாம கெஸ்ட் ஹவுஸ் போறோம் சாப்பிடுறோம் நீங்க அந்த மருந்து குடிச்சுட்டு ஒரு ரூம்ல போய் கதவை சாத்திட்டு தூங்கிடுங்க நான் இன்னொரு ரூம்ல போய் இருந்துக்கிறேன் என்று அலுங்காமல் குலுங்காமல் ஒரு அணுகுண்டை போட கேட்டுக் கொண்டிருந்த ஆதிக்கு நெஞ்சே வெடித்து விட்டது.

அவனுக்கு ஐயோ என்று இருந்தது. இவ்வளவு தான் ஏங்கியது கிடைக்கப் போகும் சந்தோஷத்தில் மேலே பறந்து கொண்டிருந்தவன் அவள் கூறியதைக் கேட்டு ரெக்கை அறுந்த பறவையாய் நிலத்தில் வீழ்ந்தான்.

ஏய் மித்ரா என்னடி வெண்ணை திரண்டு வர நேரத்துல தாழி உடைந்த கதையா இருக்கு உன் கதை விட்டால் அழுதுவிடுவான் போல்.

அத்தான் ஆமா நோ தான் இன்னைக்கு எதுவும் வேண்டாம் அத்தான் எனக்கு பயமா இருக்கு என்றாள் பதட்டத்துடன்.

ஹேய் என்கிட்ட என்னடி பயம் நான் உன் ஆதி தானே உன்னை நான் எப்படி காயப்படுத்துவேன் நீயே சொல்லு என்று அவளை கெஞ்சி கொஞ்சினான். 

அது நைட்டு தானே அப்ப பார்த்துக்கலாம் வாங்க இப்ப போகலாம் என்று வேகமாக சென்று காரில் ஏறிக்கொண்டாள், அவன் கோப பார்வை கூட தாங்கி விட முடியும் போல ஆனால் இந்த மோகத்தில் பார்க்கும் பார்வை அப்படியே ஏதோ வசியம் பண்ணுவது போல இருந்தது அவளுக்கு. 

ஆனால் அவனுக்கோ இன்று என்ன ஆனது தெரியவில்லை சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுத்ததினாலா இல்லை வீர் அவன் காதில் அதுவும் இதுவும் சொல்லி ஏத்திவிட்டதோ எதுவென்று தெரியாமல் மூச்சடைக்க மோகம் கொண்டான்.

இதுவரை இருப்பிடம் தெரியாமல் இருந்த மோகமுள் எப்பொழுது என்று காத்துக் கொண்டிருந்தது தன் இரைக்காக.

தானும் காரில் ஏறி அமர்ந்தவன் வண்டியைக் கிளப்பிக் கொண்டே நொடிக்கு ஒரு முறை அவளை திரும்பி திரும்பி பார்த்தான். 

அவன் பார்வை தந்த அவஸ்தையில் நெளிந்தவள் அத்தான் இப்படி திரும்பி திரும்பி பார்த்துட்டு இருக்கிறதுக்கு வண்டி ஓட்ட வேண்டாம் நிறுத்துங்க நல்லா பார்த்து முடிச்சிட்டு அப்புறம் போகலாம் என்றாள்.

பின் தன்னை சமன்படுத்திக் கொண்டவன் ரோட்டை பார்த்து வண்டியை ஓட்ட அப்பொழுதும் அடிக்கடி பார்ப்பதை என்ன முயன்றும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவனை முறைத்தவள் இது சரிப்பட்டு வராது என்று நினைத்த க் கொண்டு அத்தான் வண்டியை நிறுத்துங்க நான் தனியா வந்துக்குறேன் உங்க பார்வையே சரியில்ல போங்க என்று கோபித்துக் கொள்ள சரி சரி விடு இனிமே பார்க்கல போதுமா வேணும்னா இனிமே கடிவாளம் தான் போடணும் போல நல்லா இருந்த மனச ஏதேதோ சொல்லி இந்த வீர் என்னை ஏத்தி விட்டுட்டான் என்றான் குறும்பாக.

அத்தான் பண்றதெல்லாம் நீங்க பழியை மட்டும் வீர் அண்ணா மேல போடுறீங்க என்ற முறைத்தாள். 

ஏய் மித்ரா இப்ப என்ன உன் அண்ணன சொல்லிட்டேன்னு பாசமலர் படம் ஓட்டுற நான் உன் புருஷன் தானே நான் எவ்வளவு ஆசையில இருக்கேன் உனக்கு எங்கேயாச்சும் என் மேல பாசம் இருக்கா கொஞ்சம் கூட கண்டுக்க மாற்ற போ என்று திரும்பிக் கொண்டான் கோபத்தில் ஆதி.

அதில் உருகியவள் அடடா என் ஆதி கண்ணனுக்கு கோபம் வந்துடுச்சா என்று அவன் கன்னத்தைக் கிள்ள உடனே இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பது போல அப்போ இன்னைக்கு இருக்கா மித்ரா என்று ஆசையாக கேட்டான். 

அத்தான் அத்தம்மாகிட்ட சொல்லிடலாம் நாம கெஸ்ட் ஹவுஸ் போறது பற்றி அப்புறம் அவங்க தேட போறாங்க என்று பேச்சை மாற்றினாள்.

அதனைப் புரிந்து கொண்டவன் அதற்கு மேல் அவளை சங்கடப்படுத்தாமல் திரும்பிக் கொண்டான். 

சிறிது நேரம் கழித்து அவனை பார்த்தவளுக்கு ஐயோ என்று ஆகிப்போனது ஏன் பார்க்க மாட்டேங்கிறான் என்று அவள் மனம் தவித்தது அத்தான் என்ன ஆச்சு கோவமா என்றாள் அவன் தோல் சாய்ந்து.

அவனும் எதுவும் பேசாமல் பக்கத்தில் திரும்பி அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து அதெல்லாம் ஒன்னும் இல்ல மித்ரா நீ ரெஸ்ட் எடு காலையிலிருந்து ஒரே அலைச்சல் என்று அவள் முடியை ஒதுக்கிவிட்டு ரோட்டில் கவனம் வைத்தான். 

மிதமான ஏசி குளிரில் அவளும் மன்னவன் தோல் சாய்ந்ததும் சுகமாக துயில் கொண்டாள். சிறிது நேரம் கழித்து அவள் தூங்குவதை பார்த்தவன் மனதிற்குள்ளோ இப்ப நீ தூங்கினா தானே நைட்டு முழிச்சிருக்க முடியும் என்று தன் காரியத்தில் கண்ணாக இருந்தான்.

வெளிப்படையாக தன் உணர்வுகளை காட்டினால் தானே அவள் பயப்படுகிறாள் என்று உணர்ந்தவன் அவன் விலகுவது போல் செய்தால் தன்னால் அவன் பக்கம் அவளே வந்துவிடுவாள் என்று சரியாக கணக்கு போட்டவன் ஒன்றும் செய்யாமல் அமர்ந்து கொண்டான். 

அவன் நினைத்தது போலவே அவளும் என்ன பார்க்க மாட்டேங்கிறான் என்று அவளே அவனை நெருங்கவும் உள்ளுக்குள் துள்ளி குதித்தவன் வெளியில் கண்டுகொள்ளாதது போல் இருந்து கொண்டான். 

பின் பத்து நிமிடங்களில் தங்கள் கெஸ்ட் ஹவுஸிற்கு வரவே மித்ரா உறங்கவும் அவளை சீட்டில் சாய்த்து படுக்க வைத்தவன் உள்ளே சென்றான். பின்னர் ஒரு அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவன் அவள் பக்க கதவை திறந்து மித்தும்மா என்று அவளை அலுங்காமல் குலுங்காமல் கையில் அள்ளிக்கொள்ள அத்தான் என்று தூக்க கலக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழ ஹேய் ரிலாக்ஸ் பேபி ஒண்ணுமில்ல நான்தான் என்று அப்படியே அவளை அணைத்து கொண்டவன் அங்கு இருந்த ஒரு அறையில் படுக்க வைத்தான்.

அத்தான் அவ்வளவுதான் தூக்கம் கலஞ்சு போச்சு நீங்க ஆபீஸ் போகலையா இன்னைக்கு என்றாள்.

நாளைக்கு போகலாம் என்றவன் அவள் நெற்றியில் இருந்து கட்டை வருடி விட்டான்.

இப்ப மணி நாலு தான் ஆகுது அத்தான் போர் அடிக்குமே என்ன பண்றது என்றாள் முகத்தை சுருக்கி வைத்துக்கொண்டு..

உனக்கென்ன போரடிக்க கூடாது அப்படித்தானே வா என்று அவளை அழைத்து வீட்டின் பின் சென்றான். அங்கு கண்ட காட்சியில் அத்தான் என்ன இது சூப்பரா இருக்கு என்று தன்னை சுற்றி பலவித வண்ண மலர்களின் கூட்டம் கண்டு சிறு குழந்தை என ஆற்பரித்தாள்.

அவளின் மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்கும் பொருட்டு அவளை பூக்களுக்கு நடுவில் இருந்த ஒரு வழி பாதையில் அழைத்து செல்ல அங்கு ஒரு மரக்கதவு இருந்தது அதனை திறக்க ஏய் கடல் வாவ் அத்தான் என்று சந்தோஷத்தில் அவனை இழுத்து கட்டிக் கொண்டவள் அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிய சுகமாக நனைந்தான். 

அத்தான் வாங்க அங்க போய் விளையாடலாம் என்று அவனை இழுக்க ஒரு பத்து நிமிஷம் வந்துடுறேன் நீ போய் விளையாடு பத்தாவது நிமிஷம் உன்கிட்ட இருப்பேன் என்று கன்னம் தட்டி விட்டு சென்றான்.

அவளோ மிகுந்த மகிழ்ச்சியில் ஹேய் ஆதி கண்ணா சீக்கிரம் வந்துடு என்று இவள் தண்ணீரில் ஆட்டம் போட்டுக் கொண்டே கத்தினாள்.

அவன் சொன்னது போலவே 10 நிமிடத்தில் வந்தவன் கைகளில் ஒரு ஐஸ்கிரீம் கடையே வைத்திருந்தான் அலையில் விளையாடிக் கொண்டிருந்தவள் முழுதாக நனைந்து இருந்தாள்.. அவனைப் பார்த்து, அடுத்த நொடி அவன் அருகில் வந்திருந்தாள்.

அத்தான் இதெல்லாம் எனக்கா என்று நாவால் இதழை வருடியபடியே ஆர்வமாக கேட்க ஆமா சாப்பிடு ஆனா கொஞ்சமா சாப்பிடு தண்ணியில வேற தொப்பலா நனைஞ்சு போய் இருக்க இது கொஞ்சமா மட்டும் சாப்பிடு இல்லனா ஜலதோஷம் பிடிச்சுக்கும் என்றான் அக்கறையாக .

அதெல்லாம் ஒன்னும் ஆகாது மீ ஸ்ட்ராங் பாடி யூ நோ என்றவள் அத்தான் இங்க வேண்டாம் மண்ணு ஒட்டிக்கும் வாங்க வாங்க உள்ள போகலாம் என்றவள் அனைத்தையும் தன் கைகளில் அள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள் சாப்பிடும் ஆர்வத்தில்.

அவள் பின்னேயே சென்றவன் அங்கிருந்த கல்பெஞ்சில் அமர்ந்து அவள் சாப்பிட அதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு அழைப்பு வரவே எடுத்து பேசியவன் சிறிது நேரம் கழித்து திரும்பி பார்க்க அனைத்தையும் காலி செய்து விட்டு வைத்திருந்தாள்.

ஏய் என்ன மித்ரா எல்லாத்தையும் காலி பண்ணி வச்சிருக்க உன்னை கொஞ்சமாக தானே சாப்பிட சொன்னேன் என்ன பண்ணி வச்சிருக்க என்று அதிர்ச்சியில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான். அவளோ என்ன அத்தான் கொஞ்சமா வாங்கி கொடுத்துட்டு ரொம்ப திட்டுறீங்க போங்க அத்தான் நான் உங்ககிட்ட பேசல என்றவள் அவனுக்கு முதுகு காட்டி திரும்பி அமர்ந்து கொண்டாள்.

அடியேய் மித்ரா நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு நான் தான் உன் மேல கோபப்படணும் இங்க எல்லாம் ஆப்போசிட்டா நடக்குது டைம் ஆச்சு வா சாப்பாடு ஆர்டர் போட்டு இருக்கேன் மேல் எல்லாம் மணலா இருக்கு குளிச்சிட்டு சாப்பிடு வா என்று அழைக்க அவளோ போ நான் வரமாட்டேன் நீ திட்டுற என்று அழ தயாராக மித்ரா அதிகம் சாப்பிட்டால் உனக்கு தான் தலைவலிக்கும் அதான் சொன்னேன் உன்னை திட்டலாம் செய்யல என்று சமாதானப்படுத்தினான்.

அப்போ என்னை தூக்குங்க என்று அவன் புறம் கையை நீட்ட அவளை அப்படியே தன் கையில் தூக்கிக் கொண்டவன் வீட்டின் உள்ளே சென்றான்.

பின்னர் சற்று நேரத்திற்கெல்லாம் அவள் தலை வலிக்குது அத்தான் என்று அவனிடமே தஞ்சம் புகுந்தாள். அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது. சிறு பிள்ளையை கூட சமாளித்து விடலாம் போல இவளை அவனால் சமாளிக்க முடியவில்லை… சரி வா அப்படியே படு அந்த ரூமுக்கு வா என்கவும் நீங்க என்ன பண்ண போறீங்க என்று கேட்டாள்.

நீ தூங்கு மித்ரா நான் கொஞ்ச நேரம் அப்படியே டிவி பாத்துட்டு இருக்கேன் என்றவன் அவளை அறைக்கு அழைத்தான். நீங்களும் வாங்க இல்லன்னா நானும் இங்கே இருக்கேன் என்று அடம் பிடித்தாள். அதன் பிறகு அவளே இல்லை ரூமுக்கு வேண்டாம் இங்கேயே இருக்கலாம் என்று அவனை அமரச் செய்து அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.

அவனும் அவள் முடியை கோதிக்கொண்டும் தலையை வருடிக் கொண்டும் நெட்பிலிக்ஸ் ஓபன் செய்தான் மணி ஏழாகவே ஆர்டர் செய்த உணவு வரவே அவளை விட்டு எழுந்து வெளியே சென்று உணவை வாங்கிக் கொண்டு வந்தான். பின்னர் அவளை எழுப்பி அவளுக்கு ஊட்ட தூக்கத்தில் சாமி ஆடிக்கொண்டே வாயில் வாங்க அவனும் சாப்பிட்டான்.

அந்த இடத்தை சுத்தப்படுத்தியவன் அவளிடம் வர அத்தான் ஒரே கசகசன்னு இருக்கு நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று கூற சரிடா நீ அந்த ரூம்ல இருந்துக்கோ ஏதாவது வேணும்னா கூப்பிடு என்று விட்டு நான் இந்த ரூம்ல இருப்பேன் சரியா என்கவும் ஏன் என்பது போல் அவனை கேள்வியாக பார்க்க நீ தானே மித்ரா சொன்ன தனித்தனியாக இருந்துக்கலாம்னு அதான் நீ போய் குளிச்சிட்டு தூங்கு நானும் போய் தூங்குறேன்.

காலையில இருந்து அலைந்தது ரொம்ப டயர்டா இருக்கு இவ்வளவு நேரம் நல்லாதான் இருந்துச்சு இப்போதான் அடிச்சு போட்ட மாதிரி உடம்பெல்லாம் வலிக்குது என்றவன் உடம்பை நெளித்தவாறு அந்த அறைக்குள் உள்ளே புகுந்து கொண்டான். 

என்ன விட்டுட்டு போயிட்டாரு என்று யோசித்தவள் அத்தான் இருங்க வரேன் உங்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுக்கிறேன் என்று யோசித்துக்கொண்டே அவன் தனக்கு காட்டிய அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள் இங்கு ஆதியோ இன்னும் கொஞ்ச நேரம் தான் ஆதி அவ வந்துருவா என்று அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன் அந்த மருந்து குப்பியை மறந்தே போனான்.

மித்ரா குளித்து முடித்துவிட்டு வந்தவள் அப்பொழுது தான் மாற்றுடை எதுவும் இல்லாததை உணர்ந்தாள் அச்சோ இப்ப என்ன பண்றது சரி டவல் கட்டிப்போம் தூங்க தானே போறோம் என்று அங்கிருந்த டவலை எடுத்து கட்டிக் கொண்டாள். நான் எப்படி தனியா படுக்கிறது பயமா இருக்கும்ல இந்த அத்தானுக்கு கொஞ்சமாவது என் மேல அக்கறை இருக்கா தனியா விட்டுட்டு அவர் மட்டும் தூங்க போயிட்டாரு. 

இருங்க இன்னைக்கு உங்களை என்ன பண்றேன் பாருங்க என்றவளுக்கு தெரியவில்லை அவன் தான் அவளை வைத்து செய்யப் போகிறான் என்று.

அவன் அறையை நெருங்கியவள் பூனை நடை நடந்து வந்து அவன் இருந்த அறை கதவை திறக்க கும்மிருட்டாக இருந்தது. இது என்ன இப்படி இருட்டாக்கி வச்சிருக்காங்க அதுக்குள்ள தூங்கிட்டாங்களா இப்ப எப்படி நான் உள்ள போறது கட்டில் எங்க இருக்குன்னு கூட தெரியலையே என்று புலம்பியவள் சற்று நேரம் நிற்கவும் இருட்டு அவள் கண்களுக்கு பழகியதும் வரிவடிவமாக அவன் கட்டிலில் படித்திருப்பது தெரிந்தது பின் அவன் அருகே சென்று அவன் பின்னோடு கட்டிக் கொண்டவள் அத்தான் என்று அவன் காதில் கிசுகிசுப்பாக அழைக்க அவனிடம் அசைவு இல்லை. 

பின்னர் சற்று நேரம் பொறுத்து அவன் பின் கழுத்தில் சிறு சிறு முத்தங்கள் பதிக்க அவனுக்கு உடல் சூடாக அதற்கு மேல் பொறுக்க முடியாமல் மித்து என்று அவள் பக்கம் திரும்பி கட்டிக்கொண்டு தூங்குவது போல் பாவ்லா செய்தவன் தூங்கு மித்ரா என்பது போல் அவளை தட்டி வேறு கொடுத்தான். 

அவளோ என்ன இந்த அத்தான் எதுவுமே பண்ண மாட்றாங்க மருந்து குடிச்சாங்களா இல்லையா என்று நினைத்தவள் அதை அவனிடமே கேட்கவும் செய்தாள். அத்தான் அந்த மருந்து குடிச்சீங்களா என்று வினவ நான் குடிச்சேன் டா என்றவன் அவளை அணைத்துக் கொண்டு தூங்கினான். 

அத்தான் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது என்று அவனை உலுக்கினாள் அவனும் அதுக்காகத்தானே உன்னைத் தூங்க வச்சது என்று உள்ளுக்குள் கொக்கரித்து சிரித்தவன் அவளை மீண்டும் தட்டிக் கொடுக்க அத்தான் என்ன இப்படி தூங்கறீங்க நான் என்ன எல்லாம் கனவு கண்டு வைத்திருந்தேன் தெரியுமா என்று இவள் அவனை போட்டு குத்த அவள் பேசிக்கொண்டிருந்த இதழ்களை தடுப்பது போல் இனி பேச்சதுக்கு என்பது போல் அவள் இதழை வன்மையாக கவ்வியிருந்தான்.

அவளும் அதை தான் எதிர்பார்த்தால் போலும். தன் தயக்கத்தை பயத்தை உடைத்துக் கொண்டு அவளே தன்னிடம் வரட்டும் என்று நினைத்தவன் அதில் வெற்றியும் கண்டான் அவள் இதழை ரப்பராய் இழுத்தவன் அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தான். அவனிடமிருந்து பிரிந்தவள் அத்தான் என்று அவன் முகம் மீது முகம் வைத்து மூச்சு வாங்கினாள்.

அவனோ அவளுடலில் கட்டியிருந்த டவளையும் அவிழ்த்து தூர போட்டு இருந்தான். தன்னை மறைக்க அவனை ஆடையாக கொண்டாள் அவள். அதற்கு மேல் அவன் எதற்கும் தாமதிக்கவில்லை அவன் முத்தமிட்டு மூச்சு அடைக்க செய்து மொத்தமாக அவளை கொள்ளை இட்டான். இம்முறை எதைப்பற்றியும் அவன் கவலை கொள்ளவில்லை எந்த தடையும் இல்லாமல் அவளோடு முழுதாக தங்கு தடை இன்றி இணைந்தவன் அவள் வெட்கத்தில் மறுக்க முத்தமிட்ட முத்தமிட்டு அவளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.

நேரம் போகப் போக அவளும் தன் வெட்கம் துறந்தவள் அவனை தனக்குள் புதைத்துக் கொண்டாள். அத்தான் என்று சிலிர்த்தவள் அவனை இறுக்கமாக இழுத்து அணைத்து கொண்டாள். சற்று நேரத்தில் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்த படியே பக்கத்தில் சரிந்து படுத்தவனுக்கு மூச்சு வாங்கியது அவன் பக்கம் திரும்பி அவன் கன்னம் கிள்ள சேட்டை அத்தான் நீங்க என்ன இப்படி பண்றீங்க என்று அவனை மீண்டும் கிள்ளினாள். 

ஏய் நான் என்னடி பண்ணினேன் நான் ஒண்ணுமே பண்ணலையே என்று அவன் சிரிக்க நீங்க எதுவுமே பண்ணாம தான் எனக்கு உடம்பெல்லாம் அடிச்சு போட்டது போல வலிக்குதா போங்க எல்லா இடத்திலும் கடிச்சு வச்சிருக்கீங்க இங்க பாருங்க என்று அவள் ஒரு கனியை காட்ட மித்தும்மா அதெல்லாம் செல்லக்கடிடி அப்படித்தான் இருக்கும் என்று மோகனமாக சிரித்தான்.

சிரிக்காதீங்க சிரிக்கிற இந்த உதட்டை கடிச்சு வச்சுருவேன் பாத்துக்கோங்க என்றும் மிரட்டினாள் அவனும் சட்டென்று அவளை இழுத்தவன் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்து நீ எப்போ கடிப்பன்னு தான்டி மித்தும்மா வெயிட்டிங் சொல்லு எப்ப கடிக்கப் போற என்றவன் வாய்ப்பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க அவன் கைகளோ விஷம வேலை பார்த்துக் கொண்டிருந்தது.

அத்தான் திரும்பவுமா என்று சுகமாக சலித்துக் கொண்டாள் எல்லாம் இந்த மருந்து குடித்ததால் தானே இந்த ஆட்டம் போடுறீங்க என்கவும் இல்ல மித்ரா நான் அதை குடிக்கவே இல்லை என்று கூற ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். அத்தான் அப்போ நீங்க அதை குடிக்கவே இல்லையா அப்போ இப்போ என்று யோசித்தவள் அத்தான் அப்போ உங்களுக்கு சரியாயிடுச்சா ஐ அம் சோ ஹாப்பி ஃபார் யூ அத்தான் என்று சந்தோஷத்தில் கூச்சலிட்டாள்.

இனி யாரும் என்னை பார்த்து ஆண்மை இல்லாதவன் என்று யாரும் சொல்ல மாட்டாங்க தானே மித்ரா என்றான் மகிழ்ச்சியில் அதெல்லாம் இனி யாரும் எதுவும் சொல்ல முடியாது அத்தான் அச்சோ எனக்கு இருக்கிற சந்தோஷத்துல கையும் ஓடல காலும் ஓடல என்று ஆர்ப்பரித்தாள்.

எங்கேயும் ஓட வேண்டாம் இப்போ என்னை கவனி டி என்று இழுத்து தன் மேல் அவளை போட்டுக் கொண்டான். அத்தான் அந்த மருந்து குடிக்காதப்பவே இப்படி பண்றீங்க இதுவே அந்த மருந்து குடிச்சு இருந்தீங்க என்னோட நிலைமை என்ன ஆகிறது என்றாலள் அவனை குறும்புடன் பார்த்து கொண்டே .. உனக்கு ஏன் இப்போ இப்படி தோணுது வேணும்னா அந்த மருந்து எடுத்து குடிச்சிடவா உனக்கு டவுட் கிளியர் ஆயிடும் எனவும் ஐயையோ என்னால முடியாதுப்பா என்று அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

அவனும் மீண்டும் தன் ஆராய்ச்சியை தொடங்கி விட்டான் அவளும் அவனை தடுக்காமல் அவனுக்கு ஒத்தழைத்தாள் விடியற்காலையில் தான் அவளை ஒருவாறு விட்டான். அத்தான் தூக்கம் வருது என்றவளின் கண்கள் தூக்கத்திற்கு சொக்கியது தூங்குடா என்று மென்மையாக அணைத்துக் கொண்டு அவனும் கண்ணயர்ந்தான்.

மோகமுள் தீண்டும்...

ஹாய் மக்காஸ் கதையை பற்றிய உங்க கருத்துகளை எனக்கு கமெண்ட் பண்ணுங்க.. கதையோட ப்ளோ எப்படி இருக்குன்னு நீங்க சொன்னாதான் எனக்கு தெரியும் சோ கமெண்ட் பண்ணுங்க நன்றி.

அப்புறம் என்னோட youtube Channel Subscribe Pannadhavanga pannikonga..

Post a Comment

2 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments