காதல்-23:
மாமா சாப்பிட வாங்க எல்லாம் ரெடியா இருக்கு.. என்று அழைக்க அவன் எதுவும் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மடிக்கணினியில் நோண்டி கொண்டிருக்க
ஐயோ கிளாஸ் போயிடிருக்கா என்று அதிர்ந்தவள் அவன் முகத்தை பார்க்க அவளை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டான்.
என்ன மாமா என் மேல எதுவும் கோபமா என்று அவனிடம் வந்து அமர்ந்தவள் அவன் கையை பிடிக்க வர கையை இழுத்து கொண்டான்.
என்ன மாமா என்று சிணுங்க உனக்கு என்ன வேணும் போ இங்கிருந்து உனக்கு தான் வேலை நிறையே இருக்கே போ போய் அவனுக்கே எல்லாத்தையும் வாயில் தினி எனக்கு எதுவும் வேண்டாம்.
ஐய பொறாமையாக்கும் என்று அவன் தாடையில் இடிக்க எனக்கு ஒன்னும் பொறாமை இல்லை முகம் கோண கூறினான்.
பார்த்து மாமா முகம் போற போக்கை பார்த்தா இழுத்துக்க போகுது.
இழுத்தா இழுத்துட்டு போகுது எனக்கென்ன..
என்ன மாமா ஜெபி நமக்கு பிள்ளை மாதிரி இப்போ முடியாம வேற இருக்காங்க நாம தானே பார்த்துக்கணும் என்கவும்
அவன் நமக்கு பிள்ளையா பிரெளனி..
ஆமா ஆமா என்று சொன்ன அடுத்த நிமிடம் மடிக்கணினி இருந்த இடத்தில் அவள் இருந்தாள்.
ஐயோ மாமா லேப்டாப் என்று கத்த அது போனா போகுது நீ சொல்லுடி
என்ன சொல்லணும்
இவ்ளோ பெரிய புள்ளை நமக்கு வேணுமா என்கவும்
ஆமா மாமா நான் உங்களுக்கு பொண்டாட்டின்னா அவனுக்கு அண்ணி.. அண்ணியும் ஒரு வகையில் அம்மா தானே
ஹிம்ம் ஆமா ஆமா
அதான் நீங்க அப்பா நான் அம்மா அப்போ நம்ம பிள்ளை தானே.. பிள்ளைக் கிட்ட யாராச்சும் பொறாமை படுவார்களா என்று வினவவும்
இல்ல பிரெளனி நீ எனக்கு மட்டும் தானே..
இப்போவும் எப்போவும் நான் உங்களுக்கு மட்டும் தான்.
உங்க ரெண்டு பேருக்கும் எல்லாமாவும் நான் இருப்பேன்..
நீங்க சொன்னீங்கள்ள நான் தான் இனி உனக்கு எல்லாமுன்னு அது போலத்தான் இதுவும்.
அவன் சட்டை காலரை பிடித்து நோண்டி கொண்டே உங்ககிட்ட மட்டும் நான் நிறைய சேட்டை பண்ணுவேன். அப்புறம் இன்னும் நிறைய என்றவள் அவன் கழுத்தில் முகத்தை புதைத்து கடித்து வைத்தாள்.
ஏய் விடுடி எல்லாரும் கீழே இருக்காங்க பார்த்தா மானம் போயிடும்.
போகட்டும் நானா உங்களை வெள்ளையா பிறக்க சொன்னேன்.
பதிலுக்கு பதில் பேசுற இந்த வாயை என்ன பண்ணலாம் என்று இதழில் இழையும் சிரிப்பை பார்த்துக் கொண்டே நெருங்க மாமா நீங்க சாப்பிட வாங்க போகலாம் என்று கீழே அழைத்து வந்தாள்.
ஆனால் அங்கு பார்த்த காட்சியில் ரெளத்திரமானான் என்றால் கயல் அதிர்ந்தாள்.
இங்கு வாட்ச் மேனிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சைலஜா யோவ் விடுயா நான் உள்ள போகணும் என்று கத்த அங்கு வந்த தர்மன் என்னம்மா உங்களுக்கு பிரச்சனை..
எதுக்கு பிள்ளைகளை வந்து தொந்தரவு பண்ணுறீங்க..
நான் என் பிள்ளைகளை பார்ப்பேன் அதை தடுக்க நீங்க யாரு என்று அவர்களை இடித்து தள்ளி விட்டு உள்ளே வந்தவர் அங்கு சோபாவில் தலை சாய்த்து படுத்திருந்த ஜெபியை கண்டு தன் நீலி கண்ணீரை திறந்து விட்டார்.
ஜெய்.. தங்கம் என்னப்பா ஆச்சு உனக்கு.. ஐயோ என்று அவனை தொட வர அவர் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் கையை தட்டி விட்டான்.
அந்த காட்சியை தான் தன் அறையில் இருந்து வெளியே வந்த இருவரும் கண்டனர்.
கயலுக்கு அப்போ இந்தம்மா தானா அது.. என்று அதிர்ந்தாள் என்றால் பிரசாத் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலைமையில் இருந்தான்.
ஜெய் கண்ணா என்ன ஆச்சு தங்கம் உனக்கு.. வா என்கூட நான் உன்னை பார்த்துக்குறேன் என்று அவனை அழைக்க ஏன் பணம் இல்லையா அதான் இங்க தேடி வந்துருக்கீங்க போல என்று பிரசாத் தன் குரலை உயர்த்த அதிர்ந்தது போல முகத்தை வைத்து கொண்டார்.
நீ இல்லாததை எல்லாம் சொல்லி ஜெய் கிட்ட சொல்லி அவன்கிட்ட இருந்து என்னை பிரிக்க பார்க்காத பிரசாத்.
நான் ஒன்னும் பணத்துக்காக வரல.. என் பிள்ளைக்காக தான் வந்தேன்..
ஒஹ்ஹ் யாரு உங்க பிள்ளை.. பணத்துக்காக தானே சின்ன பிள்ளைன்னு பார்க்காம அவ்வளவு கொடுமை படுத்துனீங்க..
ஜெய் அவன் என்னென்னமோ சொல்றான் அவனை நம்பாத..
அதுவரை வாயை மூடிக்கொண்டிருந்தவன் நம்ப மாட்டேன்.. என்கவும் கர்வமாக பிரசாத்தை பார்த்து சிரித்தவள் மீண்டும் அவன் கூறியதில் முகம் கடுகடுவென மாறியது.
நம்ப மாட்டேன் அதுவும் பணத்துக்காக இதை செய் அதை செய்ன்னு சாப்பாடு கூட குடுக்காம டார்ச்சர் பண்ணுனீங்களே அதையெல்லாம் தெரிஞ்சுமா உங்களை நான் நம்புவேன்ன்னு நினைக்குறீங்க..
எனக்கு அம்மா அப்பாவா என் அண்ணி அண்ணா இருக்காங்க.. இதுக்கு மேல யாரும் அம்மான்னு உறவு முறை கொண்டாட்டிட்டு இங்க யாரும் வர வேண்டாம்..
நீங்க போகலாம் என்கவும் யாருடா அம்மா அவளா.. நான் பத்து மாசம் சுமந்து பெத்தேன்..
பெத்ததுக்கு தான் நிறைய எங்களுக்கு செஞ்சுடீங்க.. போதும் உங்க அன்பு கிளம்பலாம்..
அண்ணி இவங்களை போக சொல்லுங்க.. என்று கத்த
எவடா உனக்கு அண்ணி.. எது இவளா.. கண்ணில்லாதவன் கூட இவளை கட்ட மாட்டான்.
ச்சீ போயும் போயும் இவளை கட்டிருக்கான் பாரு.. அண்ணியாம் அண்ணி.. நினைக்கவே கொமட்டுது.
ச்சீ என் மகன் கால் தூசி பெறமாட்டா.. என்று அவள் மனதை காயப்படுத்தினார்.
அவளுக்கே தெரிஞ்சிருக்க வேண்டாம் இது நமக்கான இடம் இல்லன்னு.. கூட்டிட்டு வந்ததும் பணம் புகழை எல்லாம் பார்த்ததும் பசை போட்டது போல ஒட்டிக்கிட்டு சுத்துறா என்று தனக்கு கிடைக்கவில்லை என்ற வன்மத்தில் அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருந்தார்.
பெத்தவங்க இல்லன்னா இப்படி தான் கட்டுவங்களா என்று கூற கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிரசாத்தும் வாயை விட்டான்.
ஆமா.. அம்மா சரியில்லைன்னா இப்படி தான் கட்ட முடியும்.. அவ ஒன்னும் உங்களை மாதிரி இல்லை.. ச்சீ உங்களுக்கு எதுக்கு நான் விளக்கம் சொல்லணும் முதல்ல இங்க இருந்து கிளம்புங்க..
உங்க முகத்துளையே முழிக்க கூடாதுன்னு இருக்கேன்.. இங்கிருந்து கிளம்புங்க.
அவர் அப்படியே நிற்கவும் பரத் ஜெபியை உள்ள கூட்டிட்டு போடா என்றவன் இப்போ போகலன்னா நான் போலீசை கூப்பிட வேண்டியது வரும்..
இனிமே எங்களை தொந்தரவு பண்ணாதீங்க கிளம்புங்க இங்கிருந்து என்றவன் தர்மனிடம் சார் வாங்க என் கூட ஒரு கம்ப்லைன்ட் கொடுக்கணும்..
பன்னிரண்டு வயசுக்கு கீழ உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் வேண்டுமென்றே தொலைச்சா உள்ள தூக்கி போட சட்டம் இருக்கு.. இவங்க கூட இருக்குற ஆளை தூக்கி உள்ள வச்சா அடிக்குற அடியில் எல்லா உண்மையும் வெளியே வரும் என்கவும் பயந்தவள் நடையை கட்டி விட்டாள்.
தர்மன் பிரசாத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றார்.
அவனுக்கும் இருந்த கோபத்தில் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் வண்டியை ஓட்டி கொண்டிருக்க ஒரு பார்க் வரவே தர்மன் அங்கு நிறுத்த சொன்னார்.
பிரசாத் கொஞ்சம் அமைதியாகு.. எதுக்கு இவ்வளவு கோவம்..
கோபம் என்னைக்குமே ஆகாது.. கோபத்துல நாம என்ன பேசுரேன்னு தெரியாம நமக்கு பிரியமானவர்களையே அது தாக்கிடும்.
அவரை புரியாமல் பார்த்தவனிடம் ஷைலஜாவிடம் கூறியதை சொல்ல ஷிட் என்று தலையில் அடித்து கொண்டான்.
நான் வேணும்னு சொல்லல சார் என்கவும் அது புரியுது.. ஆனால் அந்தம்மாவும் என்னென்னவோ பேசிடுச்சு.. கயல் சின்ன பொண்ணு அது மனசு என்ன பாடு பட்டுருக்கும்..
கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ பிரசாத்.. நான் இப்படியே கிளம்புறேன் நீ போய் கயலை பாரு என்றவர் கிளம்பி விட்டார்.
வரும் வழியெல்லாம் அவளிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டே வந்தான்.
சாரி பிரௌனி சாரி டா என்னை மன்னிச்சிடு.. எனக்கு கோவம் வந்தா என்ன பண்றேன் என்ன பேசுறேன்னு தெரியாம எல்லாம் பண்றேன் என்று புலம்பி கொண்டே தன் வீட்டிற்கு வந்தான்.
வீட்டிற்குள் வேகமாக வந்தவன் தன் தம்பி அறையில் இருந்து பரத் வரவே ஜெபி என்னடா பண்றான்..
அவன் இப்போதான் மாத்திரை போட்டுட்டு தூங்குறான்.. என்றவன் சரி டா பார்த்துக்கோ ஏதாவதுன்னா உடனே கால் பண்ணு என்றுவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினான்.
பரத் கிளம்பியதும் சமையலறை சென்று கயலை தேடியவன் அங்கு இல்லை என்றதும் தன் அறைக்கு வந்தான்..
அவன் இதயமோ டப்பு டப்பென்று துடித்தது..
அறைக்கு வந்தவன் கண்டது காற்றில் பறக்க முனைந்து படபடக்கும் கடிதத்தை தான்..
அவள் அவனுக்கு விட்டு சென்றது அந்த கடிதத்தை மட்டும் தான்..
அதனை கண்டவன் நெஞ்சமெல்லாம் ரணமாய் வலிக்க நோ பிரௌனி.. இன்னொரு பிரிவு என்னால் தாங்க முடியாதுன்னு சொல்லியும் என்னை விட்டு போயிட்டியா டி..
கோபத்துல தானே தெரியாம சொன்னேன்..
அதுக்கு என்னை நாலு அடி கூட அடிச்சுருக்களாமே பிரௌனி என்று கத்தியவன் அந்த கடிதத்தை பிரித்தான்.
அவன் கண்களில் தேங்கிய கண்ணீரில் அந்த கடிதத்தில் இருந்தது கூட சரியாக தெரியவில்லை.
கடைசியில் காதலுக்கு பரிசு கண்ணீர் மட்டும் தானோ!!
பிரசாத்திற்கு சுற்றி கொண்டிருந்த பூமி அப்படியே நின்று போன உணர்வு.
கண்களில் பெருகிய கண்ணீர் அவள் விட்டுப்போன கடிதத்தை படிக்க விடாமல் திரையிட கண்களை அழுந்த துடைத்தவன் அக்கடிதத்தை படிக்க ஆரம்பித்தான்.
மாமா..
என் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடந்தது தான் நம்ம கல்யாணம்..
சின்ன வயசுல இருந்தே எப்போ திட்டு வாங்கிட்ட அடி வாங்கிட்டு விருப்பப்பட்ட படிப்பையும் படிக்க முடியாம அல்லாடிட்டு இருந்தப்போ தெய்வமா தர்மன் அப்பா வந்தாரு.
நீ நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா மா பையன் கொஞ்சம் முரடன் தான் ஆனால் நல்லவன்.
உன்னை போலவே சிறு வயதில் பல அடி பட்டவன்.. உன்னை கண்டிப்பா நல்ல படியா பார்த்துப்பான்… உனக்கும் இங்க இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொன்னாரு.
எனக்கும் அங்க இருந்தா மூச்சு முட்டி செத்துப் போவோம்னு ஒரு பயம்.
அதனால தான் நான் கிடைச்ச வாய்ப்பை விடக் கூடாதுன்னு தர்மன் அப்பா கிட்ட சரின்னு சொல்லிட்டேன்.
முத முதல்ல உங்களை பார்க்கும் போது முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்தீங்க.. சிரிச்சா ரொம்ப அழகா இருப்பீங்கன்னு தோணுச்சு..
நான் கருப்பா இருக்குறதால தான் என்னை எங்க அப்பாவுக்கு பிடிக்கலன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ஒரு வேளை உங்களுக்கும் என்னை பிடிக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு அடிக்கடி தோணும்.
ஆனால் நான் நினைச்சது போல நீங்க இல்லை.
உங்களை எனக்கு ஒவ்வொரு விஷயத்திலும் அவ்வளவு பிடிக்கும் மாமா.. இந்த உலகத்திலேயே எனக்கு பிடிச்சவர், ரொம்ப படிச்சவர், நல்லவர் எல்லாமே நீங்க தான்.
உங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்னு தெரியும் என்று அவள் எழுதியிருந்ததை படித்தவன் அப்புறம் ஏன் டி என்னை விட்டுப் போன என்று கேட்டவன் மீண்டும் கடிதத்தை படிக்க ஆரம்பித்தான்.
நான் ஆசையா படிக்கிறேன்னு சொன்னதும் எனக்காக டீச்சர் அரேஞ் பண்ணது.. ஒவ்வொரு விஷயத்திலும் எனக்காக பார்த்து பார்த்து செய்வீங்க..
எனக்காக நீங்க செய்யும் ஒவ்வொரு செயலிலும் என் மீதான காதல் அப்பட்டமா தெரியும்.
நேத்து பங்க்ஷன் முடிஞ்சி நான் என் ரூம்ல நகையை கழட்டி வச்சுட்டு இருக்கும் போது ரெண்டு பேரு பேசுறது என் காதுல விழுந்துச்சு..
நான் உங்களுக்கு பொருத்தம் இல்லையாம்.. நீங்க அழகா இருக்கீங்க.. நான் கருப்பா இருக்கேன்.. நீங்க நிறைய படிச்சுருக்கீங்க.. நான் படிக்கலை இன்னும் என்னென்னவோ சொன்னாங்க..
இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தவங்களும் உங்ககிட்ட போயும் போயும் இவளை கட்டிருக்கன்னு உங்களை திட்டுனாங்க..
எனக்கு கஷ்டமா இருக்கு மாமா.. ஒரு மனசு நான் உங்களுக்கு இணை இல்லை உங்களை விட்டு பிரிஞ்சு போக சொல்லுது..
இன்னொரு மனசு அடுத்தவங்க எப்படி வேணாலும் பேசுவாங்க அதுக்காக உன்னை உயிருக்கு உயிரா நேசிக்குறவனை விட்டுட்டு போவியான்னு திட்டுது..
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல மாமா..
எனக்கு நீங்க வேணும்.. இப்போ நான் உங்களை விட்டுட்டு போனா நானும் நிம்மதியா இருக்க மாட்டேன் நீங்களும் நிம்மதியா இருக்க மாட்டிங்க..
அதனால நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்..
அழுது வடியாம உங்க போனை எடுத்து பாருங்க மாமா என்று அத்தோடு அந்த கடிதம் முடிந்திருந்தது.
உடனடியாக தன் போனை எடுத்தவன் அதில் வந்த வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டான்.
மாமா அழுது வடியாம எனக்கு பிடுச்ச இடத்துக்கு போய் பத்து தோப்பு கரணம் போடுங்க..
உடனே கீழே ஓடியவன் அங்கு தோட்டத்தில் இருந்த ஊஞ்சலிடம் சென்றவன் சுற்றும் முற்றும் பார்க்க அவள் இல்லை..
சோர்ந்து போனவன் கண்ணில் மீண்டும் ஒரு கடிதம் பல்லிளித்தது.
அதை பிரித்தவன் படித்தான்.
என்ன ரொம்ப வேகமா ஓடி வந்தீங்களா.. பத்து தோப்பு கரணம் போட்டுட்டு என்னை முதல் முதலா பிரிச்சு வச்சீங்களே அங்க போங்க என்று இருக்க
யோசித்தவன் உடனே அவளுக்கென ஒதுக்கிய அறையை கண்டு கொண்டவன் மீண்டும் ஓடி வந்தான் அந்த அறைக்கு.
அவனை ஏமாற்றாமல் மெத்தையில் சாய்ந்து கொண்டு புத்தகம் படித்து கொண்டிருந்தாள்.
அவளை பார்த்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
போன உயிர் திரும்பி வந்தது போல் நிம்மதியாக உணர்ந்தவன் அங்கு தன்னை கண்டு கொள்ளாமல் சாய்ந்திருந்தவளின் காலை இழுத்து படுக்க வைத்தவன் அவள் வயிற்றில் முகம் புதைத்து அவளை இறுக்கி அணைத்த படி படுத்து கொண்டான்.
சற்று நேரம் அங்கு இளைப்பாறியவன் என்னை கொஞ்ச நேரத்துல பயமுறுதிட்ட பிரௌனி என்று அவள் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டவன் அவளிடம் மன்னிப்பை யாசித்தான்.
சாரி பிரௌனி.. அது ஏதோ கோபத்துல தெரியாம பேசிட்டேன் டி சாரி என்கவும் நீங்க இன்னும் தோப்புகரணம் போடல மாமா என்று கரார் பேர்வழி போல கூறினாள்.
ஹிம்ம் எழுந்திருங்க தோப்பு கரணம் போடுங்க என்றவளின் இதழ்களை வன்மையாக கொய்தவன் அவளை தன்னோடு சேர்த்து தூக்கி கொண்டு தோப்பு கரணம் போடுவது போல் செய்ய அவனிடமிருந்து தன் இதழை பிரிந்தவள் மாமா இறக்கி விடுங்க வலிக்க போகுது என்று துள்ள மீண்டும் அவள் இதழை கவ்வியவன் விடவே இல்லை.
அவளை அணைத்து கொண்டவன் பிரௌனி எங்க நீ என்னை விட்டு போய்டுவியோன்னு பயந்துட்டேன் டி..
தன் மனதை கூறியவன் அவள் கழுத்தில் முகத்தை புதைத்து கொள்ள மாமா உங்களுக்கு எல்லமாவும் இருப்பேன்னு நான் வாக்கு குடுத்துருக்கேன்.. அதையும் மீறி போனா எனக்கும் உங்க அம்மாக்கும் வித்யாசம் இல்லாம போய்டும்.
நான் அப்படி இருக்க விரும்பல.. உங்களுக்கு இணை இல்லன்னு சொல்றாங்க.. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு..
நானும் படிப்பை முடிச்சுட்டா அப்பறம் யாரு என்ன சொல்ல முடியும்..
ஆனால் நீங்க கோபத்துல சொன்னீங்க இல்லையா என்று அவனை முறைக்க பிரௌனி மன்னிச்சிடு டி தெரியாம சொல்லிட்டேன் என்று காதை பற்றி மன்னிப்பு கேட்கவும் அதான் உங்களை டென்ஷன் படுத்தி அழ வச்சுட்டேனே..
அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு..
நானா நான் அழலையே என்று கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் பிகு பண்ண நம்பிட்டேன் என்று நக்கலாக சிரித்தாள்.
என்னடி சிரிக்குற.. என்னை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா
ஆமா மாமா என்றவள் அவன் மேல் பாய்ந்து எப்பொழுதும் போல் அவன் கழுத்தை கடித்து வைத்தாள்.
அவனும் எப்பொழுதும் போல அலறினான்.
பிரௌனி நாம எப்பொழுதும் இப்படியே இருக்கணும் சரியா பிரியவே கூடாது
கண்டிப்பா மாமா..
நாம ரெண்டு பேரும் காந்தம் போல எப்பொழுதும் ஒன்றை ஒன்று ஈர்த்து கொண்டே இருப்பது போல் ஒட்டிட்டே இருப்போம்.. என்று அவனை கட்டிக்கொண்டாள்.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் வள்ளிக்கும் பரத்துக்கும் திருமணம் அன்று.
அனைவரும் பரபரப்பாக திருமணத்திற்கு கிளம்பி கொண்டிருக்க இங்கு தன் பிரௌனியிடம் சேலை கட்டி விடுகிறேன் பேர்வழி என்று சில்மிஷம் செய்து கொண்டிருந்தான்.
மாமா ஒழுங்கா சேலை கட்டி விடுங்க.. அப்பறம் நைட் பிரௌனி தர மாட்டேன் என்று மிரட்டியவளை கண்கள் சிமிட்டி சிரித்தவன் எனக்கு எப்படி பிரௌனி சாப்பிடணும்னு தெரியும் போடி என்றவன் உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டான்.
மாமா என்ன பிளான் பண்ணிருக்கீங்க.. உங்க முழியே சரியில்லை.. சொல்லுங்க..
ஒன்னுமில்ல பிரௌனி டைம் ஆச்சு கிளம்பு டி என்று தானும் சென்று கிளம்பினான்.
இருவரும் கிளம்பி கிழே வர ஜெபியும் கிளம்பி நின்றான்.
பின் மூவரும் புறப்பட்டனர்.
என்ன ஜெபி கண்ணா இன்னைக்கு செமையா ட்ரெஸ் பண்ணிருக்கீங்க.. அப்படிலாம் ஒன்னும் இல்லை அண்ணி என்றவனின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
இங்கு ஒருவனுக்கு வயிறு அடுப்பில் வைத்தது போல் காந்தியது.
ஜெபி காரை ஓட்ட பின் சீட்டில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
அவள் கையை கிள்ளியவன் ஏய் நானும் புது ஷர்ட் புது பேண்ட் போட்டுருக்கேன் என்ன சொல்லவே இல்லை என்று குறை பட்டுக்கொள்ள கிழவனுக்கு குசும்பு ஜாஸ்தி தான் என்று நக்கல் செய்ய முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தவனிடம் நெருங்கி அமர்ந்தவள் மாமா வெள்ளையா உருச்ச கோழி ச்சீ ச்சீ உருச்ச சேவல் மாதிரி எவ்வளவு அழகா இருக்கீங்க ..
உங்களை இப்போ அப்படியே கடிக்கணும் போல இருக்கு நம்ம தம்பி இருக்கார்.
அதனால் தப்புச்சீங்க இல்லனா இந்நேரம் நான் உங்க மடியில்.. என்று நிறுத்த
என் மடியில அப்பறம் என்ன டி சொல்லு
உங்க மடியில் உட்கார்ந்து ரத்தம் குடிச்சுட்டு இருப்பேன் என்று சொல்லவும் கழுத்தை கைகளால் மறைத்து கொண்டான்.
என் மானத்தை வாங்குறதே நீ தான் டி.. என்கவும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு சிரித்தாள்.
பரத்திடம் வந்தவன் மச்சான் எவ்வளவு குத்து வாங்கினாலும் வெளியே சொல்ல கூடாது சரியா அதுதான் நான் உனக்கு கொடுக்குற அட்வைஸ் சரியா..
அங்கிருந்த ஒருத்தி கயலிடம் என்ன கயலு கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு இன்னும் ஏதும் நல்ல செய்தி சொல்லாம இருக்க என்று கூற என் வீட்டுக்காரர் தான் க்கா எனக்கு இன்னும் வயசு இருக்கு.. குழந்தை எப்போ வேணா பெத்துக்கலாம்.. முதலில் படின்னு என்னை படிக்க வைக்கிறார்.
நானும் சொன்னேன் ஏதாவது விஷேஷத்துக்கு போகும் போது கேப்பாங்க மாமா என்ன சொல்றதுன்னு கேட்ட்டா வேலை இல்லாதவங்க தான் அடுத்த வீட்டுல என்ன நடக்குதுன்னு உத்து பார்ப்பாங்கன்னு சொன்னாரு சரியா தான் இருக்கு என்று அவளுக்கு பதிலடி கொடுக்க ஓடிவிட்டாள்.
கடைசி வரையில் இந்த சமுதாயம் மாறவே மாறாதா என்ற எண்ணம் தான் உதித்தது.
அவள் கருப்பாக இருக்கிறாள்… அவள் படிக்கவில்லை என்று தூற்றும் அதே சமூகம்..
அவள் வயதுக்கு வரவில்லை ஏதோ உடம்பில் கோளாறு என்று தூற்றும் சமூகம்…
அவள் திருமண பந்தத்தில் ஈடுபட்ட ஆறு மாத காலத்திற்குள் குழந்தை உண்டாகவில்லையா என்று உச்சு கொட்டும் சமூகம்..
நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை ஏதோ ஒரு வழியில் நொண்டி கொண்டிருக்கும் இந்த சமூகத்தை திருத்த முடியாது.. ஆனால் கடந்து போக முடியும்..
தன் பிரௌனியின் பேச்சை கேட்டு கொண்டே வந்தவன் என் பிரௌனி பொண்ணு வளர்ந்துட்டாங்க போல என்று அவள் கன்னம் தட்டியவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.
பின்பு திருமணம் முடிந்து அனைவரும் வள்ளி வீட்டிற்கு செல்ல மருது பிரசாத்திடம் வந்தவன் அண்ணா உங்களை தோப்பு வீட்டுக்கு கயல் வர சொன்னுச்சு என்றவன் ஐயோ என்று அலற என்ன பாட்டில் மறந்துட்டியா என்று பிரசாத் கேட்க தலையை சொறிந்தவன் ஆமாண்ணா என்கவும் சரி நான் பார்த்துக்குறேன் என்று தோப்பு வீட்டை நோக்கி சென்றான்.
அங்கு அன்று அமர்ந்தது போலவே இன்றும் தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
ஆஹா எல்லாத்தையும் உள்ள ஊத்திட்ட போலையே..
இன்னைக்கு ஒரு ஆட்டம் ஆடாம விட மாட்டா போலையே என்று ஜர்க்கானவன் பிரௌனி பொண்ணு என்ன பண்ற என்று வாயை திறந்து தான் போதும்..
இந்தா ஆரம்பிச்சுட்டாள்ள..
நான் உனக்கு பொண்ணா டா டுபுக்கு..
இல்ல என்று பரிதாபமாக தலையாட்டவும் என்ன டா பூம் பூம் மாடா மாறிட்டியா.. இப்படி தலை ஆட்டுற..
எவ எவளோ வந்து இன்னும் உண்டாகளையா குண்டாகளையானு கேக்குற..
எல்லாம் உன்னால தான் டா.. படி பிரௌனி பாப்பா அப்பறம் பாத்துக்கலாம்னு சொல்லி சொல்லி என் வாயை அடைச்சிடுவ..
எருமை மாடு மாதிரி வலந்துருக்க.. அறிவு இருக்கா டா உனக்கு..
யாரு எனக்கா.. என்று கேட்க
ஆமா டா டால்டா தலையா உனக்கு தான் டா அறிவு இருக்கா
உன்கிட்ட இருந்தா கொஞ்சம் குடு பிரௌனி என்றான் பாவமாக..
அப்படியே நல்ல புள்ளை மாதிரி மூஞ்சை வச்சுக்காத டா.. உனக்கும் எனக்கும் சண்டை போடா என்கிட்ட பேசாத..
ஒரு பாப்பா பெத்துக்க ஓகே சொல்ல மாட்டுற
பிரௌனி நீ படிக்கணும்ல டி அதான்..
ஓடிடு.. நான் அடிச்சுடுவேன் என்று அங்கிருந்த பொருளை அவன் மேல் விட்டு எறிந்தாள்.
அதிலிருந்து தப்பியவன் இன்னும் கொஞ்ச நேரம் எப்படியாவது தாக்கு பிடி டா ராம் அப்பறம் மட்டை ஆயிடுவா என்று கணக்கு போட்டவனை அழைத்தாள்.
டேய் ராம்..
சொல்லு பிரௌனி
ராம்ம்மம்.. டேய் ராம் இங்க வாடா.. என்றவள் அவனை கிட்டே அழைத்து அவன் மேல் வாந்தி எடுத்து அச்சோ சாரி ராம் என்றுவிட்டு மயங்கி அவன் மேலே விழுந்தாள்.
அதன் பிறகு என்ன நடந்திருக்கும்..
காலையில் எழுந்ததும் பிரசாத் ஐயோ நான் மோசம் போய்ட்டேனே.. நான் அப்போவே சொன்னேன் வேண்டாம் வேண்டாம்னுட்டு..என்று அலறினான்.
என்ன மாமா?
நேத்து நீ என்னை கதற கதற என்று மீண்டும் மூக்கை சிந்தினான்.
இனி அவனாச்சு அவளாச்சு.. நாம கிளம்பலாம்..
காதலெனும் ஈர்ப்பு விசையில் என்றும் காந்தமாக ஒருவரை ஒருவர் ஈர்த்து கொண்டே இருப்பர்..
முற்றும்…
My youtube channel link click below
Like share and subscribe
Thank you
0 Comments