காதல்-22:
ஹேய் நிலா ஆதவன் வரான்.. நீ கிளம்பு.. நீ இங்க இருக்கிறதை பார்த்தால் இன்னும் வம்பு வளர்ப்பான் என்கவும் ஆமா பூமி இப்போலாம் இந்த ஆதவன் ஓவரா பண்றான்..
சரி பூமி நான் கிளம்புறேன் என்று கிளம்பி விட ஆதவனும் வந்தான்.
என்ன என்கிட்ட இருந்து நிலாவை தப்பிக்க வச்சுட்டதா நினைப்பா பூமி..
அப்படியெல்லாம் இல்லை ஆதவா.. அங்கே பாரு நீ வரேன்னு தெரிஞ்சு ஒருத்தன் உனக்கு சூரிய நமஸ்காரம் பண்றான் போய் பாரு எனக்கு வேலை இருக்கு என்று பூமி எஸ்ஸாகி விட்டது.
யாருடா அது நமக்கு இவ்வளவு வரவேற்பு குடுக்குறதுன்னு தன் ஒளி கதிர்களால் அந்த கூரையினூடு பார்க்க அவனெங்கு சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான்.
விடியும் முன்பே எழுந்தவன் எப்போடா பிரௌனி எழுவாள் என்று பார்த்து கொண்டிருந்தான் போல..
அவளிடம் சிறு அசைவு வந்ததும் தான் போட்டிருந்த சட்டையை கழட்டியவன் வெறும் ஷாட்ஸ் மட்டும் அணிந்து அவள் அருகில் சென்று படுத்து கொண்டான்.
மல்லு பேபி போல் ஒரே ஒரு நெஞ்சில் முடிந்திருக்க நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
நெருங்கி படுத்தவன் அந்த முடிச்சை அவிழ்த்து நேத்து என்னா ரவுசு பண்ற.. இரு உன்னை அலற விடுறேன் என்று அவளுடன் மனதுக்குள் பேசியவன் அவள் நெஞ்சில் முகம் புதைத்தவாறு கண்களை மூடி கொண்டான்.
தூக்கத்தில் இருந்து சற்று அசைந்தவள் மாமா பக்கத்தில் இருந்தவனை அணைக்க கண்களை இறுக மூடி கொண்டான் தூங்குவது போல்..
அவனை அணைத்து கொண்டு எந்த அசைவும் இல்லாமல் இருக்கவும் ஐயோ எல்லாரும் தேடிக்கிட்டு வந்துருவாங்களே இவ இன்னும் எந்திரிக்காம அப்படியே படுத்துருக்கா..
மார்பில் இருந்து முகத்தை எடுத்தவன் தன்னை முறைத்து பார்த்த நெல்லி விதையை பற்களால் கடித்து இழுத்து நாவால் நிரடி வாயில் அதக்கி கொள்ள ஹிம்ம் மாமா என்று இறுக்க கண்ணை மூடி கொண்டான்.
ஒரு வழியாக கண்ணை திறந்தவள் தலை வலிக்க மாமா தலை வலிக்குது என்று அவன் பக்கம் திரும்ப முடியவில்லை.
அவன் தன் நெஞ்சில் முகம் புதைத்து வைத்திருக்க தூங்குகிறான் போல என்று நினைத்தவள் தான் எழுந்திருக்க முயன்று போர்வையை விலக்கினாள்.
தன் மேல் உள்ள வெள்ளை துணியை கண்டு அலறினாள் மாமா மாமா என்று.
ஒன்றுமே தெரியாதது போல் தூக்கத்தில் இருந்து விழித்தவன் அப்பொழுது தான் அவளை பார்ப்பவன் போல் பார்த்தவன் ஆஹ்ஹ் என்று அவனும் கத்தினான்.
கட்டிலில் இருந்து குதித்தவன் சுவற்றில் சாய்ந்து கொண்டு பயப்படுவது போல் நடித்து ஐயோ நான் மோசம் போய்ட்டேனே..
அவன் செயலை அதிர்ந்து பார்த்தவள் போர்வையை தன்னோடு இறுக்கி கொண்டு என்ன மாமா மோசம் போய்டீங்க என்கவும்
அதுவரை அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் மீண்டும் ஐயோ போச்சு என் மனம் போச்சு மரியாதை போச்சு என் கற்பும் போச்சே..
என்ன மாமா உளறுறீங்க
நானா உளறுறேன் நீ தான் டி நேத்து.. ஐயோ என்று வாயில் கை வைத்து அலறியவன் போச்சே என்று கதற
ஏற்கனவே தலை வலியில் இருந்தவள் இவன் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கத்த இப்போ என்ன மாமா ஆச்சு எதுக்கு இப்போ கத்துறீங்க.
என்ன நடந்துச்சா? எல்லாத்தையும் பண்ணிட்டு எப்படி பிரௌனி உன்னால இப்படி கேட்க முடியுது.. என்று கேட்க
ஐயோ உண்மையா ஏதோ சம்பவம் பண்ணிட்டோம் போலையே என்று நினைத்து எச்சில் விழுங்கியவள் என்ன மாமா பண்ணினேன் என்று அவன் அருகில் வர
நீ போ கிட்ட வராத எனக்கு பயமா இருக்கு.. நேத்து என்னத்தை குடிச்சியோ பாதகத்தி.. நான் அப்போவே சொன்னேன் வேணாம் டி வேணாம்னு கேட்டியா என்று கத்த
பதறியவள் என்ன மாமா ஆச்சு எனக்கு ஏதும் நியாபகம் இல்லையே ஐயோ உங்களை அடிச்சுட்டேனா என்று கேட்க
ஆஹா நியாபகம் வந்துருச்சோ என்று நினைத்தவன் அடிச்சா கூட பரவாயில்லை ஆனா நீ என்னை ஐயோ அதை எப்படி என் வாயால சொல்லுவேன் என்று மூக்கை சிந்த
மாமா முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு அழுங்க என்கவும்
நீ நேத்து ஏதோ குடிச்சிட்டு நான் வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல என் பேச்சை கேட்காம என்னை நீ ரேப் பண்ணிட்ட என்று வராத கண்ணீரை துடைக்க
ஐயோ உண்மையாவா மாமா என்றவள் அச்சோ இப்போ என்ன பண்றது..
திரும்ப திரும்ப அதை பண்ணினா ஒன்னும் ஆகாது பிரௌனி வா வந்து திரும்ப அது போலவே பண்ணு என்று அவளிடம் வர அவனிடமிருந்து நகர்ந்தவள் போங்க மாமா எனக்கு எதுவும் நியாபகம் இல்லை..
திரும்ப பண்ணுன்னா நான் என்ன பண்றது..
நேத்து பண்ணினதை பண்ணு..
அதான் எனக்கு நியாபகம் இல்லையே..
இங்க பாரு உனக்கு நம்பிக்கையில்லனா என்று தன் கழுத்து மார்பு வயிறு என்று அவள் கடித்த தடம் இருக்க.. கீழையும் இருக்கு என்று ஷாட்ஸை கழட்டுவது போல் பாவ்லா காட்ட அப்படியே வந்து அணைத்து கொண்டவள் ஐயோ வேண்டாம் மாமா..நம்புறேன்.
அப்போ உண்மையாவே நமக்குள்ள அது முடிஞ்சி போச்சா மாமா என்கவும்
ஆமா ஆமா என்று தலையை ஆட்டினான்..
அப்போ என்ன பண்றது நமக்கு பாப்பா வந்துருமா என்கவும்
வா திரும்ப பண்ணி உறுதி பண்ணிடலாம்.. வா பிரௌனி.. வா என்று நெருங்கி வர
அட போங்க மாமா எனக்கு பயமா இருக்கு..
நேத்து மட்டும் அப்படி பண்ணின என்று கிசுகிசுப்பாக கூற ச்சீ போங்க மாமா என்றவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.
அதுவும் அந்த .. என்று மீண்டும் வர்ணிக்க ஐயோ மாமா கொஞ்ச நேரம் சும்மா இருங்க.. திரும்ப திரும்ப அதையே சொல்லறீங்க இனி உங்க கிட்டையே வரல போதுமா என்கவும் அப்படி வா வழிக்கு என்று நினைத்தவன் கொஞ்சம் கொஞ்சம் டச் பண்ணிக்கலாம்.. மத்தது அப்பறம் என்று கட்டி கொண்டான்.
அப்பொழுது கதவு தட்டவும் பயந்தவள் அவன் பின்னே மறைய இரு பிரௌனி உனக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வர சொன்னேன்..
மருது தான் வந்துருப்பான் என்கவும் சரி என்று விலகி ஒரு ஓரமாக நிற்க மருதுவிடம் உடைகளை வாங்கி கொண்டு உள்ளே வந்தான்.
இந்த ட்ரெஸ்ஸை போட்டுக்கோ பிரௌனி என்கவும் குளிக்கணும் மாமா.. இங்க பக்கத்துல மோட்டார் இருக்கு என்கவும் இங்கையா இங்கெல்லாம் வேண்டாம் பிரௌனி சேப் இல்லை என்கவும்
இங்க யாரும் வர மாட்டாங்க மாமா..
அப்போ நானும் உன்கூட குளிப்பேன் என்கவும் இல்லை வேண்டாம் வீட்டுக்கு போகலாம் என்று பம்மினாள்.
(டேய் வாத்தி ஆனாலும் உனக்கு குசும்பு ஜாஸ்தி தான் டா.. நடக்காத ஒன்னை வச்சு அந்த புள்ளைய என்னமா பயமுறுத்துற)
நேற்று இரவு சிறிது அதகளம் செய்தவள் தலையை பிடித்து கொண்டு மாமா வலிக்குது என்று வாந்தி எடுத்தவள் அவன் மேலேயே படுத்து கொண்டாள்.
அவளை விலக்கி தன் சட்டையை கழட்டியவன் அங்கிருந்த தண்ணீரை எடுத்து கொண்டு அவளிடம் சென்று அவள் முகத்தை கழுவி விட்டு அவள் உடைகளை கலைந்து மேல் துடைத்து அங்கிருந்த வேட்டியை கட்டி விட்டவன் அவளை அணைத்து கொண்டு உறங்கி போனான்.
அதிகாலையில் எழுந்தவன் அவளிடம் சற்று விளையாடி பார்க்க எண்ணி வாயில் வந்த அனைத்தையும் அடித்து விட்டான்.
பின்பு இருவரும் தோப்பு வீட்டில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வர கயலு நேரம் ஆகுது சொந்தமெல்லாம் வராங்க சீக்கிரம் போய் குளி.. நான் வந்து புடவை கட்டி விடுறேன்.
சரி பிரௌனி நீ போய் குளிச்சிட்டு இரு.. இங்க வேலை இருக்கும் நான் போய் பாத்துட்டு வரேன் என்கவும் மாமா அதெல்லாம் உங்களுக்கு பழக்கம் இருக்காது வாங்க என்கவும் இரு டி போய் பார்த்துட்டு வரேன் நீ போ என்று அவளை அனுப்பி வைத்தான்.
அங்கு மருதுவிடம் செல்ல அண்ணா நீங்க இன்னும் கிளம்பளையா போய் குளிச்சுட்டு ரெடி ஆகுங்க.. இங்க எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு என்று அனுப்பி வைத்தான்.
இங்கு அறைக்கு வந்தவன் கயல் குளிக்கும் சத்தம் கேட்கவும் அவளுக்கு உடைகளை எடுத்து வைத்தவன் தனக்கு வாங்கிய வேட்டி சட்டையை பார்த்தவன் யோசனையானான்..
இந்த வேட்டி நம்ம இடுப்புல நிக்குமா என்று நினைத்து பார்க்க ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி தான் வாங்கிருந்தான்.
பாவாடையோடு வெளியே வந்த கயல் இவனை அங்கு எதிர்பார்க்கவில்லை போல ஐயோ மாமா என்று திரும்பி நின்று கொள்ள என்ன பிரௌனி நேத்து தான் எல்லாம் பார்த்தாச்சே என்கவும்
நேத்து நடந்ததை ஏன் மாமா திரும்ப திரும்ப சொல்லறீங்க..
ஒஹ்ஹ் அப்போ சொல்ல வேண்டாம்னு சொல்றன்னா செயல்ல காமிக்க சொல்றியா.. எனக்கு ஒன்னும் பிரச்னை இல்லை வா வா செஞ்சிருவோம் என்று அருகே வர மாமா போய் குளிங்க என்று குளியலறைக்குள் தள்ளி விட்டாள்.
ஹாஹாஹா என்று சிரித்தவன் உனக்கு புடவை கட்டில் மேல இருக்கு பாரு என்கவும் மாமா அதுக்கு பிளவுஸ்க்கு என்ன பண்றது..
அதெல்லாம் நான் வாங்கிட்டு வந்துட்டேன் போட்டு பாரு..
என் சைஸ் எப்படி உங்களுக்கு தெரியும்?
அதெல்லாம் தெரியும்.. போட்டு பாரு கரெக்ட்டா இருக்கும்.
சரி நீங்க கதவை சாத்திட்டு போய் குளிங்க இல்ல கண்ணை நோண்டிடுவேன்..
என் பிரௌனி நான் பார்ப்பேன்.. உனக்கென்னடி வந்துச்சு..
மாமா என்று சிணுங்க
ஏன்மா என்று அவனும் ராகம் இழுத்தான்.
போங்க மாமா என்கவும் சரி சரி போடு நான் போறேன் என்று கதவை சாற்றி கொள்ள
இவள் உடையை எடுத்து அணிய மாமா இந்த பிளவுஸ் டைட்டா இருக்கு என்கவும்
பின்ன டைட்டா இல்லாம லூசாவா இருக்கும் நேத்து பார்த்த வேலை அப்படி.. பெருசாக வேண்டியதெல்லாம் பெருசாயிருக்கும்.. அதான் டைட்டா இருக்கு என்று குரல் கொடுத்தான்.
மாமா காலையில் இருந்து கெட்ட பேச்சாவே பேசிட்டு இருக்கீங்க..
நானாடி பேசுறேன்.. நீ தான் டி.. ஒன்னும் தெரியாத பிள்ளையை கெடுத்துட்ட என்கவும் ஆஹ் மாமா வாய மூடுங்க எதுக்கு இப்போ கத்துறீங்க வெளிய கேட்க போகுது.
அப்படித்தான் கத்துவேன்.. ஏன்? பாட்டே பாடுவேன்.. என் சோக கதையை கேளு தாய் குலமே என்று இல்லாத சேட்டை அனைத்தையும் செய்தான்.
மாமா போதும்.. குளிச்சிட்டு வாங்க.. வந்து எனக்கு புடவை கட்டி விடுங்க.. ஒழுங்கா மடிப்பு வர மாட்டேங்குது.. என்று அவள் அழைக்க
கரும்பு திண்ண கூலியா என்பது போல் அரக்க பறக்க காக்க குளியல் குளித்தவன் வெளியில் வர ரவிக்கை பாவாடையுடன் நின்றவளை கண்டு மோகம் தலைக்கேறி போனது.
மாமா நீங்க பார்க்கிற பார்வையே சரியில்ல அம்மாவை கூப்பிடுங்க.. என்கவும்
நானே கட்டி விடுறேன் பிரௌனி.. என்று உரச
அப்போ ஒழுங்கா சேலையை மட்டும் கட்டுங்க என்றவள் அவன் கண்ணை மூட ஹே ரொம்ப பண்ணாதடி என்று அவள் கையை தட்டி விட்டவன் அழகாக மடிப்பு எடுத்து கட்டி விட்டான்.
மாமா எப்படி இருக்கேன் என்று அவன் சுற்றி காட்ட ஒரு சந்தன சிலை உயிர் பெற்று வந்துருச்சோ பிரௌனி என்று அவள் கழுத்தில் முகத்தை புரட்ட நாணத்தில் சிவந்து போனாள்.
அவளை கண்டு விசிலடிக்க மாமா இது என்ன சின்ன பிள்ளை போல..
ஏய் என் பொண்டாட்டியை பார்த்து விசிலடிக்கிறேன் எவன் என்னை என்ன கேட்க முடியும் என்கவும்
பின்னாடி யாரோ, யாருல அது புள்ளைங்க இருக்குற இடத்துல விசிலடிக்குறது என்று குரல் வர பரிதாபமாக பார்த்தான்.
இங்கு ராணி கதவை தட்ட பிரசாத் போய் கதவை திறக்க கயலுக்கு சேலை கட்டி விடணும் என்று பங்கஜமும் ராணியும் உள்ளே வர அவன் சைகை செய்வதை கண்டு கொள்ளாமல் அனைத்தையும் உளறி வைத்தாள்.
நீ ரொம்ப லேட் ம்மா மாமா எனக்கு அழகா சேலை கட்டி விட்டுருக்கார் பாரு என்கவும் ஐயோ மானத்தை வாங்குறாளே என்று வெளியே ஓடி விட்டான்.
அடியேய் கூருகெட்ட சிறுக்கி இதெல்லாமா வெளிய சொல்லுவ என்று வைத்தவர் அவள் கன்னம் வழித்து என் கண்ணே பட்டுடும் போல நல்லா இரு என்று வாழ்த்தியவர் பங்கஜம் கொண்டு வந்த சங்கிலியை கழுத்தில் போட்டு விட்டார்.
பின் சொந்தங்கள் அனைவரும் வரவே கயலை அழைத்து கொண்டு வந்து அமரவைத்தனர்.
அங்கு வந்த அனைவருமே வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்ற பிரசாத்தை தான் பார்த்திருந்தனர்.
பின் தர்மராஜூம் வரவே அவரிடம் பேசிக் கொண்டிருந்தவன் ராணி அழைக்க இருவரும் சென்றனர்.
அங்கு கயல் அமர்ந்திருக்க பெரியவங்க வந்து ஆரத்தி எடுத்து விபூதி வச்சுட்டு போங்கப்பா என்கவும் எங்க குமரேசன் அவனை காணும்.. வந்து விபூதி வச்சுட்டு போக சொல்லு என்று ஒரு கிழவி ஆரம்பிக்க அந்தாளு இங்க எப்படி வருவான் என்று ராணி உள்ளுக்குள் பொறிய கயல் அங்கு வந்தவரை கண்டு கண் கலங்கினாள்.
குமரேசன் தான் வந்தது.. வந்தவர் யாரையும் கண்டு கொள்ளவில்லை.. ஏய் அந்த ஆரத்தி தட்டை எடு என்று எப்பொழுதும் போல் தன் மனைவியை ஒரு அரட்டு போட்டவர் ராணி எடுத்து கொடுக்கவும் இருவரும் ஆரத்தி எடுத்து விபூதி வைத்தவர் இந்த அப்பாவை மன்னிக்கணும் என்று அவர் நெற்றியில் முத்தம் வைக்க தன் தந்தையா என்று ஆச்சர்யம் தான் கயலுக்கு.
பின் தான் கொண்டு வந்த காசுமாலையை அவள் கழுத்தில் போட்டு நல்லாருக்கனும் என்று வாழ்த்தி விட்டு ஆண்கள் பக்கம் போய் நின்று கொண்டார்.
என்ன கெடா மீசை நடிப்பெல்லாம் ஓவரா இருக்கு.. என்கவும்
தன் பக்கத்தில் நின்றவனை முறைத்து பார்த்தவர் என் பெண்ணுக்காக உன்னை சும்மா விடுறேன் இல்ல..
இல்லனா என்ன பண்ணுவீங்க.. என் கயல் கிட்ட உனக்கு கெடா மீசை பிடிக்குமா இல்லை இந்த முருக்கு மீசை பிடிக்குமான்னு கேட்டா என் பக்கம் தான் நிப்பா பாக்குறீங்களா..
என்ன எல்லாம் உன் பக்கம் இருக்காங்கன்னு நினைப்பா..
ஆமா அதுகென்ன இப்போ.. அப்பறம் என் கயல் எனக்கு மட்டும் தான்.. இந்த பாசம் காட்டி மோசம் பண்ற வேலை அவகிட்ட இருக்க கூடாது என்றவனை கலைத்தது ஒரு குரல்.
எப்பா தாய் மாமன் வந்து மாலையை போடு என்கவும் ஒரு கிழவி தாய்க்கு அப்பறம் தாய் மாமன்ன்னு சொன்னாலும் இப்போதான் அவளுக்கு அதுக்கும் மேல புருஷன் இருக்கானே..
எப்பா மாப்பிள்ளை வந்து மாலையை போடு என்கவும் பிரசாத் வந்தவன் மாலையை வாங்கி கழுத்தில் போட அவனையே குறுகுறுவென பார்த்தாள்.
அவள் பக்கம் குனிந்தவன் என்னடி அப்படி பாக்குற என்கவும் இவள் தலையை ஒன்னுமில்ல என்பது போல ஆட்ட நிமிர்ந்தவனிடம் ரகசியம் பேசுனது போதும் அந்த சந்தனத்தை எடுத்து தடவுங்க.. என்று சிரித்தனர்.
வெள்ளி கிண்ணத்தில் இருந்த சந்தனத்தை எடுத்து அவள் கன்னத்தில் அழுத்தி தடவியவன் குங்குமம் வைத்து கெடா மீசைக்கு போட்டியாக இவனும் முத்தம் கொடுக்க அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து போனாள்.
பின் ராணி நேற்று அவன் வாங்கி வந்த நகை பெட்டியை எடுத்து வர அதனை திறந்து அதில் இருந்த வைர அட்டிகையை அவள் கழுத்தில் போட்டு விட்டான்.
அங்கிருந்த கும்பலில் சிலர் இவளுக்கு வந்த வாழ்வை பார்த்தியா டி என்று தங்கள் வேலையை செவ்வென செய்ய.. பின் மருது வந்து அவளுக்கு மாலை அணிவித்து தன் சார்பாக செயின் போட்டவன் தாம்பூலத்தில் துணியை வைத்து கொடுத்தான்.
எங்க மாப்பிள்ளை நீங்க துணி எடுக்கலையா என்கவும் ராணிக்கு வந்ததே கோபம் ஏன் எடுக்கலை ஒன்னு எடுத்திருந்தா காட்டலாம்.. தான் கை நிறைய வாங்கிட்டு வந்து கொடுத்துருக்காரு வந்துட்டாளுங்க பேச என்று பிரசாத் கயலுக்கு எடுத்து வந்த உடைகளை பார்க்க அனைவரும் வாயை பிளக்காத குறைதான்.
கயல் இதனை கண்டு அவனை முறைக்க ஹிஹி என்று இளித்து வைத்தான்.
என்கிட்ட ஒன்னே ஒன்னுன்னு சொல்லிட்டு இவ்வளவு வாங்கி குமிச்சு வச்சிருக்காரு.. இருங்க அப்பறம் இருக்கு உங்களுக்கு என்று நினைத்தவளுக்கு அடுத்து ஒவ்வொருவராக வந்து மாலை அணிவித்து சென்றனர்.
பின் பிரசாத்தையும் அழைத்து அவள் அருகில் அமர வைத்து இந்த தாலி செயினை அவ கழுத்துல போடுங்க என்று கொடுக்க இதுவும் உங்க வேலை தானா மாமா என்கவும் ஆமா பிரௌனி ஏன் பிடிக்கலியா..
அவள் எதுவும் பேசவில்லை..
அவன் அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க என்ன டி என் மேல ஏதாவது கோவமா என்கவும் இல்லை உங்களை கொஞ்சனும் போல இருக்கு என்று பல்லை கடித்து கூறினாள்.
உங்க அப்பா உன்கிட்ட பேசிட்டாருன்னு என்ன கழட்டி விடுறே பிரௌனி என்று கூறி அதற்கும் ஒரு முறைப்பை பரிசாக பெற்று கொண்டான்.
அன்று இரவு சென்னை செல்வதை பற்றி கூற அனைவரும் சரி என்கவும் அங்கு இவர்களுக்கு காத்திருப்பது என்ன?
அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு விட்டு செல்ல கயல் தன் அறையில் ஆபரணங்கள் அனைத்தையும் கழட்டி வைத்து கொண்டிருந்தாள்.
எங்கு போனாலும் பொறாமை பட ஒரு கூட்டம் இருக்கும் குறை கூற ஒரு கூட்டம் நல்லா இருந்த குடும்பத்தில் நந்தி மூக்கு நுழைக்க ஒரு கூட்டம் இருப்பர்.
அதுபோலவே இங்கும் ஒரு கூட்டம் இருந்தது.
ஏன் டி பாத்தியா அவளுக்கு எம்புட்டு நகை நட்டு எவ்வளவு துணி அது தங்கமில்ல வைரம் பாக்க மாப்பிளை வேற ஹீரோ கணக்கா இருக்கான்..
இந்தியா முழுக்க சொல்லி குடுப்பாராம் டி.. புடிச்சாலும் புலியங் கொம்பா புடிச்சுட்டா.. பெரிய படிப்பெல்லாம் படிச்சுருக்காராம்..
இவ படிப்புக்கும் முகரைகட்டைக்கும் இப்படி ஒருத்தன் அமைஞ்சிருக்கான்..
ஆத்தா அப்பன் இல்லையாம் அதான் இப்படி ஒருத்தியை கட்டிருக்கான்.. என்று தாங்கள் வந்த வேலை முடிந்தது என்பது போல் நடையை கட்டி விட்டனர்.
ஆனால் அதை கேட்க கூடாதவள் கேட்டு மனதில் பாரம் ஏற்றி கொண்டாள்.
அப்போ அவங்க அம்மா அப்பா இருந்துருந்தா என்னை கல்யாணம் பண்ணிருக்க மாட்டாருள்ள.. பாவம் மாமா என்னை கட்டிக்கிட்டு கஷ்ட படுறாரு என்று இவளாக ஒரு முடிவு எடுத்தவள் அவன் வரவிற்காக காத்திருந்தாள்.
இங்கு வெளியே தர்மனிடம் பேசி கொண்டிருந்தவன் அவரை அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்தவன் கயலிடம் வந்து அணைத்து கொண்டு என் பிரௌனி இன்னைக்கு எவ்ளோ அழகா இருந்தாங்க என்று மொச்சு மொச்சுன்னு முத்தம் கணக்கில்லாமல் வைத்தான்.
ஏன் டி அதுக்குள்ள நகையை கழட்டின
இந்த புடவை கசகசன்னு இருந்துச்சு மாமா அதான் கழட்டினேன்.
என்ன பிரௌனி ஒரு மாதிரி இருக்க என்ன ஆச்சு
ஒன்னும் இல்ல மாமா
ஏய் அப்பறம் ஏன் முகம் வாடி போயிருக்கு என்று அதட்டவும்
ஒன்னுமில்ல என்றவளுக்கு அழுகை வர அதை மறைக்க அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.
என்ன டா பிரௌனி.. என்ன ஆச்சு.. இப்படி ஏதும் பேசாமல் இருக்காத பிரௌனி.. என்னன்னு சொல்லு.. நீ சொன்னால் தானே தெரியும்..
ஒன்னுமில்ல
டயர்டா இருக்கா என்கவும்
ஹிம்ம் தலை வலிக்குது மாமா என்கவும்
ஏன் டா என்ன பண்ணுது என்று அவள் தலையை பிடித்து விட்டவன் டைம் ஆச்சு சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும் என்கவும்
எனக்கு சாப்பாடு வேண்டாம் மாமா என்று அவன் மேல் அப்படியே படுத்து கொள்ள
சரி டா போய் இந்த புடவையை கழட்டி போட்டுட்டு வேற ட்ரெஸ் மாத்து.. நான் நமக்கு சாப்பாடு இங்க எடுத்துட்டு வரேன் என்கவும் ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு தலையாட்டியவள் எழுந்து சென்றாள்.
அவளையே சிறிது நேரம் குழப்பத்துடன் பார்த்தவன் வெளியில் சென்றான்.
அங்கு அனைவரும் அமர்ந்து உண்டு கொண்டிருக்க இவன் வருவதை கண்ட ராணி வாங்க தம்பி அவ எங்க காணும்..
அவளுக்கு தலை வலின்னு படுத்துருக்கா
சரி தம்பி நீங்க சாப்பிடுங்க
நாங்க ரெண்டு பேரும் அங்கேயே சாப்பிடுறோம் என்கவும் சரி இருங்க தம்பி எடுத்து வச்சு தரேன் என்கவும் அங்கு இருந்த நாற்காலியில் அமர குமரேசன் துரையிடம் பேசுவது போல் பேசினார்.
என் பொண்ணுக்கு சீர் நாளைக்கு சென்னை வந்துரும் துரை என்கவும்
என் பொண்டாட்டிக்கு யாரும் செய்ய வேண்டாம் அவளுக்கு எல்லாம் செய்ய நான் இருக்கேன் என்றவன் ராணியிடம் சாப்பாட்டை வாங்கி கொண்டு சென்று விட்டான்.
அறைக்கு வந்தவன் அங்கிருந்த மேஜையில் தட்டை வைத்து விட்டு திரும்ப கயலும் கதவை திறந்து கொண்டு வந்தாள்.
கவி ஏதாவது பிரச்சனையா.. எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடா மாமா இருக்கேன் என்கவும் ஒன்னும் இல்லை மாமா நான் நல்லாதான் இருக்கேன்..வாங்க சாப்பிடலாம் என்று அவனை அழைத்தாள்.
அந்த கெடா மீசை உன்னை ஏதாவது சொன்னாரா பிரெளனி என்று வினவ ஐயோ இல்லை மாமா அவர் எதும் சொல்லலை..
நான் நல்லாதான் இருக்கேன் மாமா தலைவலி அதான் கொஞ்சம் சோர்வா இருக்கு..
சரி பிரெளனி எதா இருந்தாலும் சொல்லு சரியா.. மனசுல எதும் வச்சுக்க கூடாது என்றவன் சட்டையை கழட்டினான்.
அவனையே பார்த்தவள் மாமா ஒருவேளை நான் உங்களை விட்டு பிரிஞ்சி போயிட்டா என்ன பண்ணுவீங்க..?
அவள் அருகே வந்தவன் அவள் விழிகளில் தன் விழிகளை கலக்க விட்டவன் நீ என்னை பிரிஞ்சி போனா செத்துருவேன்னு எல்லாம் சினிமா டயலாக் போல சொல்ல மாட்டேன்.
ஆனால் நீ என்னை விட்டு போயிட்டா நான் மனசளவுல செத்துடுவேன்.. அதன் பிறகு ஒரு நடைபிணம் போல தான்.
நீ வாழ்க்கைக்குள்ள வராததுக்கு முன்னாடி நீ யாரோ நான் யாரோ..
ஆனால் இப்போ அப்படி இல்லை..
நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை..
இந்த கண்ணுக்கு கடைசி வரைக்கும் உன்னையே பார்த்துட்டு இருக்க தான் ஆசை..
இந்த உதடுக்கு சதா பிரெளனி பிரெளனின்னு கூப்பிட தான் ஆசை.
இந்த இதயம் கடைசி வரை பிரெளனி பிரெளனின்னு தான் துடிக்கும்.
மாமா நீங்க தானே சொன்னீங்க இதயம் லப் டப் லப் டப்னு துடிக்கும்னு இப்போ இப்படி சொல்றீங்க என்று தன் சந்தேகத்தை கேட்க
இந்த மாதிரி கேள்வியா கேட்டு என்னை கொல்ல என்னைக்குமே எனக்கு நீ வேணும் பிரெளனி.
சரி மாமா பசிக்குது சாப்பிடலாம் என்று மோசமாக டேமேஜ் செய்தாள்.
இப்போ நான் பேசினது எதுவுமே உனக்கு காதுல விழலை தானே பிரெளனி
ஆமா ஆமா என்று தலையாட்ட நல்லா தலையை மட்டும் ஆட்டு…
தட்டை எடுத்து தானே அவளுக்கு ஊட்ட நீங்களும் சாப்பிடுங்க மாமா என்று அவனுக்கு ஊட்டியவள் எப்போ மாமா நாம ஊருக்கு கிளம்புறோம் என்கவும் பரத்துக்கு போன் போட்டு கேட்டுட்டு அவங்க வர டைமுக்கு முன்னவே அங்க இருக்கிற மாதிரி கிளம்பலாம் டா..
சரி மாமா என்றவளுக்கு புரை ஏற தலையில் தட்டி தண்ணி எடுத்து கொடுத்தவன் பேசாம சாப்பிடு பிரெளனி என்றவன் அவளுக்கு ஊட்டி முடித்து தானும் சாப்பிட்டு கை கழுவியவன் அதனை வெளியே எடுத்து செல்ல இங்க வைங்க மாமா நான் எடுத்துட்டு போய்கிறேன்.
பரத்துக்கு போன் போட்டவன் சென்னை ஏர்போர்ட் எப்போடா வருவீங்க
மார்னிங் எட்டு மணிக்கு மச்சி
சரி சரி நானே பிக்கப் பண்ண வந்துடுறேன் என்றவன் அழைப்பை துண்டித்தான்.
காலையில் எட்டு மணிக்கு வராங்கலாம் பிரெளனி
சரி சரி மாமா அப்போ நைட் கிளம்பினா கரெக்ட்டா இருக்கும்
ஹிம்ம் ஆமா பிரெளனி இப்போ கிளம்பினா நைட் வீட்டுக்கு போற மாதிரி இருக்கும்… நைட் கிளம்பினா விடிய காலையில் போற மாதிரி இருக்கும்.
சரி மாமா இங்க சொல்லிட்டு கிளம்பலாம் என்கவும் இருவரும் வெளியே வந்தனர்.
அங்கு அனைவரும் கூடியிருக்க கயல் ம்மா அவங்க தம்பி நாளைக்கு வராங்க… அதனால நாங்க காலையில் அழைக்க போகணும் அதான் உங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு வந்தோம் என்று கூற
அப்போ இப்போ கிளம்புனா ஒரு பத்து மணிக்கா அங்க இருக்கலாம் கயலு.. நைட் கிளம்ப வேண்டாம்.
இப்போ கிளம்பி அங்க நைட் போயிட்டு ஓய்வெடுத்துட்டு காலையில் அவர்களை அழைச்சிட்டு வந்துருங்க என்று கூற அனைவரும் ஆமோதித்தனர்.
சரி அப்போ நாங்க போய் கிளம்புறோம் என்கவும் நானும் உன் கூட ஒத்தாசைக்கு வரவா கயலு என்று ராணி கேட்க அதெல்லாம் வேண்டாம் ம்மா.. நீ இங்க இருந்து அப்பா தம்பி வர்ஷாவை பார்த்துக்க..
என்னை பார்த்துக்க மாமா இருக்காரு அப்படிதானே மாமா என்று பிரசாத்தை பார்த்து கேட்கவும் ஹிம்ம் என்று தலையாட்டினான்.
பின்பு இருவரும் கிளம்பவே குமரேசன் கயல் அருகில் வந்தவர் அவள் கையை பிடித்து சிறிது பணத்தை வைக்க தப்பா நினைச்சுக்காதீங்க.. எனக்கு இந்த பணம் தேவைப் படாது மாமா எல்லாமே எனக்கு வாங்கி தந்துட்டாங்க என்கவும் பிரசாத் கெத்தாக கெடா மீசையை பார்க்க அவனை முறைத்தார்.
என்னை மன்னிச்சிடு பாப்பா என்கவும் ஐயோ என்கிட்ட எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க.. உண்மையாவே எனக்கு இந்த பணம் தேவைப்படாது..
அம்மாவை திட்டாதீங்க.. பார்த்து பத்திரமா இருங்க.. மாமாக்கு லீவ் குடுத்தா நான் வரேன் என்றவள் வள்ளியிடம் வந்து சொல்லி விட்டு தன் அத்தை மாமாவிடம் போய்விட்டு வருகிறேன் என்றவள் மருதுவிடம் கூறிவிட்டு தன் அன்னையிடம் வந்தவள் அப்பாக்கு வேளாவேளைக்கு சோத்தை ஆக்கி போடும்மா நான் கிளம்புறேன் என்றவள் காரில் ஏறிக்கொள்ள பிரசாத் ஒரு தலையசைப்புடன் அனைவரிடமும் விடைப்பெற்றவன் காரை கிளப்பினான்.
இங்கு காரில் சென்று கொண்டிருந்தவர்கள் சார் பிரெளனி என்னால தானே இவ்ளோ சீக்கிரம் கிளம்ப வேண்டியதா போச்சு.. இல்லனா அந்த கெடா மீசையோடு இன்னும் கொஞ்சம் நாள் பாச பயிரை வளர்த்திருப்பள்ள என்று வருத்தத்துடன் கூற
அவன் கையில் சாய்ந்து கொண்டவள் மாமா இன்னும் என்னால நம்ப முடியலை.. எங்க அப்பாவா என்கிட்ட பேசினாருன்னு என்று ஆச்சரியமாக கூற கெடா மீசை முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது பிரெளனி..
அவர் தப்பை உணர்ந்துட்டாரு போல அதான் உன் கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டாரு என்கவும் ஹிம்ம் என்றவள் எப்பொழுதோ தூக்கத்திற்கு சென்றிருந்தாள்.
காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவளை வாகாக படுக்க வைத்தவன் அவள் இதழில் முத்தமிட்டு காரைக் கிளப்பினான்.
இரவு பத்து மணிப்போல் வீட்டிற்கு வர சாமி வந்து கதவை திறந்தார்.
தம்பி நீங்க சமைக்க வேண்டாம் பா நான் சமைச்சு வச்சிருக்கேன் என்று எடுத்து வந்து வைக்க ஏன் ப்பா உங்களுக்கு சிரமம் என்ற கயல் கொண்டு வந்த பைகளை தூக்க விடு பிரெளனி நான் எடுத்துட்டு வரேன் என்று பிடுங்க..
ரெண்டு பேரும் உள்ள போங
0 Comments