Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 30


 

மோகமுள் - 30:

ராகவன் லண்டனில் இருந்து தன் வீட்டிற்கு அப்பொழுது தான் வந்திருந்தார். என்ன பண்ணி வச்சிருக்க ரகு, இந்த டெண்டரும் நமக்கு கிடைக்கலையா அது எவ்வளவு பெரிய ப்ராஜக்ட் தெரியுமா அதோட வேல்யூ என்னன்னு உனக்கு தெரியுமா?

நீயெல்லாம் என்னத்த லண்டன் போய் படிச்சிட்டு வந்த இத கூட உன்னால பண்ண முடியாதா உன்கிட்ட ஒரு வேலை கொடுத்தா அதை கூட உருப்படியா உன்னால முடிக்க முடியல நீ எல்லாம் என்னதான் பண்ண போறியோ என்னோட மகனா நீ என்று வந்ததும் வராததுமாக அங்கு தன் தாயிடம் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தவனை பார்த்து காட்டமாக கத்தினார்.

அந்த ஆதி எவ்வளவு ஷார்ப் தெரியுமா இவ்ளோ சின்ன வயசுல எத்தனை ப்ராஜெக்ட்ஸ் பண்ணுறான் தெரியுமா? எவ்வளவு திறமையா எல்லாத்தையும் பார்த்துக்குறான் உன்னால ஒரு ப்ராஜெக்ட் கூட சைன் பண்ண முடியலை எப்படி உன்கிட்ட என்னோட மொத்த பிஸ்னஸ் பொறுப்பை எப்படி ஒப்படைக்க முடியும் நான் கட்டி வச்ச கோட்டையை பத்து மடங்கா உன்னை உயர்த்த சொல்லல ஆனால் அதை பாதுகாக்கவாது தெரியணும் இல்ல.

எனக்கு நம்பிக்கை இல்லை ஒத்த பிள்ளைன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு ஆபீஸ் வேலையை விட்டுட்டு மத்தது எல்லாம் பண்ற என்று அவன் பப், குடி, போதை மருந்து, பெண்கள் என்று சுற்றுவதை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

ஏங்க வந்ததும் பிள்ளையைத் திட்டுறீங்க நமக்கு இருக்குற சொத்து மதிப்புக்கு இன்னும் இருபது தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என் பிள்ளையை எதுவும் சொல்லாதீங்க அதெல்லாம் அவனுக்கு என்ன பண்ணனும்னு தெரியும் என்று தன் கணவனிடம் மகனுக்கு பரிந்து கொண்டு வர ஏய் நீ வேற எதுவும் தெரியாம பேசாத அவன் இப்படி இருக்க காரணமே நீ தான் என்று அவரையும் விட்டு வைக்கவில்லை.

தன்னை இழிவாகப் பேசிய தந்தையைக் கண்டு ரகுவீருக்கு ஆத்திரமாக வந்தது.

எல்லாம் அவனால் தான் இந்த ஆளு இப்படி என்னை கரிச்சுக் கொட்டிட்டு இருக்கான் ச்சே டேய் ஆதி உனக்கு என் கையால தான் சங்கு ஊதனும்ங்கிற விதி இருந்தா யாரால அதை தடுக்க முடியும். உன்னை அடியோடு சாய்க்கிறேன் டா எங்க அடிச்சா உனக்கு வலிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டான்.

அப்புறம் இருக்கு இந்த ஆளுக்கு வச்சுக்கிறேன் வயசாகிடுச்சு வீட்டுல உட்காரமா ஊர் ஊரா அத்திட்டு வந்து என்னை டார்ச்சர் பண்றான் என்று முனகியவாறு வெளியில் சென்று விட்டான்.

****

இங்கு தன் வீட்டிற்கு வந்த நந்தனியைப் பிடித்துக் கொண்டார் சிவகாமி எங்கே டி போயிட்டு வர என்று வழியை மறித்து கொண்டு கேட்க அதான் காலையிலேயே சொன்னேனே ம்மா என் பிரண்டுக்கு பர்த்டேன்னு என்றாள் சலிப்பாக.

பிரேமா வேற ஏதோ சொன்னாள் என்றார் சந்தேகத்துடன்.

அதற்குள் இந்த சித்தி உனிகிட் வத்தி வச்சிடுச்சா என்றாள் சாவதானமாக.

அவள் சொன்னதுல தப்பில்லை நீ எதுக்கு அங்க போன அதுதான் தப்பு நாம அந்த குடும்பமே வேண்டாம்னு ஒதுங்கி போயிட்டோம் அப்புறம் எதுக்கு அங்கெல்லாம் போற இதெல்லாம் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சுதுன்னா அவ்ளோதான் உன்னை கொன்னே போட்டுறுவாரு பார்த்து நடந்துக்கோ சொல்லிட்டேன் என்றவாரு நகர அம்மா சும்மாதான் மித்ராவை பார்க்க போனேன் வேற ஒன்றும் இல்லை என்று தன் அறைக்கு நழுவினாள்.

தன் அறைக்குள் வந்து கதவை தாழ்ப்பால் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்தவளின் எண்ணம் என்னவோ மித்ராவிடம் தான் பேசிவிட்டு வந்ததைப் பற்றி தான்.

மித்ராவோட ரியாக்ஷன் இதுக்கு என்னவா இருக்கும் சம்மதிப்பாளா ஆதியை விட்டுப் போயிடுவாளா என்று யோசித்துக் கொண்டிருந்தவள் அதெல்லாம் போயிடுவா போகணும் இல்லனா நான் போக வைப்பேன்.

சின்ன வயசில இருந்தே நான் எதுக் கேட்டாலும் குடுத்துடுவா அதுவும் எங்க ரெண்டு பேரோட .வாழ்க்கைன்னு வரும் போது கண்டிப்பா விட்டுக் கொடுத்துடுவா என்று மாயலோகத்தில் சஞ்சரித்திருந்தவள் ஆதி தன்னை அவமானப் படுத்தியது நியாபகம் வர என்னையா வெளியே போக சொல்ற நான் மித்ராகிட்ட கொளுத்திப் போட்டு வந்துருக்கேன் அது பட்டாசா வெடிக்கும் அவள் உன்னை விட்டு சீக்கிரமே போயிடுவா அப்புறம் எல்லாம் எனக்குத்தான் என்று உள்ளுக்குள் குதூகலித்துக் கொண்டாள்.

****

அலுவலகத்தில் இருந்து வந்த ஆதி நேரே தன் அறைக்கு தான் சென்றான். அங்கு மித்ராவோ அழுதழுது சிவந்த கண்களுடன் இருக்க அதனைக் கண்டு பதறியவன் மித்ரா என்னடா ஆச்சு எதுக்கு அழுதுட்டு இருக்க என்று கேட்க அவளும் எதுவுமே பேசாமல் தேம்பிக் கொண்டிருந்தாள்.

அவள் எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருக்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

ஏய் மித்ரா இப்போ எதுக்கு அழற சொல்லிட்டு அழு இருக்குற டென்ஷன்ல நீ வேற என்னை போட்டு படுத்தாத என்று எரிந்து விழுந்தான்.

அதில் பயந்தவளுக்கு இன்னும் கண்ணீர் கண்களில் அருவியென கொட்ட ஆரம்பிக்க ப்ச் என்னதான் டி உன் பிரச்சனை சொல்லிட்டு அழு என்றான் காட்டமாக.

நந்தினி வந்தாளா ஆபீஸ்க்கு என்றாள் அழுகையூனூடு .

அது எப்படி இவளுக்கு தெரியும் என்று யோசித்துக் கொண்டே ஆமாம் இப்போ அதுக்கென்ன வேலை விஷயமாக வந்தாள்.

ஒஹ் வேறு எதுவும் சொன்னாளா? 

வேற என்ன சொன்னா ஒன்னும் சொல்லல என்றான் அழுத்தமாக.

அத்தான் நந்தினியை உங்களுக்கு பிடிக்குமா என்று கேட்டவளுக்கே தெரியும் இந்த கேள்வியே தேவையில்லாததென்று.

இப்போ அதை தெரிஞ்சி என்ன பண்ண போற மித்ரா என்னை விட்டுப் போய் அவளை என் கூட சேர்த்து வைக்கப் போறியா என்றான் கேள்வியாக.

அதுதான் உங்களுக்கு விருப்பம் என்றால் எனக்கு ஓகே தான் அத்தான் என்றாள் தன் மனதை கல்லாக்கிக் கொண்டே.

உனக்கு ஓகேன்னா எனக்கு புரியலை என்ன சொல்ல வர என்று மீண்டும் தெளிவு படுத்திக் கொள்ள கேட்டான்.

உங்களுக்கு என்னை பிடிக்காம என் கூட வாழணும்னு அவசியம் இல்லை அத்தான் நீங்க நந்தினியை தான் லவ் பண்றீங்கன்னா என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க அத்தான் என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

ஒஹ் அவள் என்னை லவ் பண்றான்னு உங்கிட்ட வந்து சொன்னாளா என்று அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிப் போனாள்.

அப்போ அவள் இங்க வந்துருக்கா அப்படித்தானே என்று அறை அதிரக் கத்தினான்.

ஆமாம் வந்தாள் என்று உடல் நடுங்க கூறினாள்.

ஒஹ் என்ன சொன்னா என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளால் பிரித்தறிய முடியவில்லை.

உங்களை விட்டு நான் போயிட்டா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா இருப்பீங்களாம் என்று அவள் இடை நிறுத்தி அவனை பார்க்க மேலே சொல் என்பது போல தலையசைத்தான்.

அதனால நீ ஆதியை விட்டுப் போயிடு மித்ரா நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்போம் உன்னால எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் அந்தரத்தில் தொங்குதுன்னு சொன்னாள்.

வேற என்ன சொன்னாள் என்றான் கடுமையாக.

அவர் என்னை லவ் பண்ணும் போது உன் கூட எப்படி சந்தோஷமா இருப்பாரு என்று கேட்டாள்.

அதுக்கு நீ என்ன சொன்ன மித்ரா 

நான் எதுவும் சொல்லல அவள் இதை மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிட்டாள் என்று நிறுத்த

சோ என்ன முடிவு எடுத்துருக்க மித்ரா என்றான் மொட்டையாக.

உங்களுக்கு அவளைத்தான் பிடிக்குதுன்னா நான் போயிடுறேன் அத்தான் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்க விரும்பலை என்றாள் கண்ணீரைத் துடைத்தப்படி.

சோ அவள் என்னை லவ் பண்றா அப்போ நீ ? என்ற கேள்வியோடு அவளைப் பார்த்தான்.

நான் என்று திக்கித் திணறியவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு அவளைத்தான் பிடிக்கும் என்கிற பட்சத்தில் தன் காதலை சொன்னாலும் எடுப்படாதல்லவா

அவள் அப்படியே நிற்க உனக்கு போகனும்னு தோணுச்சின்னா கிளம்பு மித்ரா நான் உன்னை தடுக்க மாட்டேன் நீ போகலாம் என்று கதவை நோக்கி கையைத் காட்டினான்.

அவன் அப்படி கூறவும் அதிர்ச்சியில் உறைந்து போனவள் அவனையும் கதவையும் மாறி மாறி பார்த்தாள்.

என்ன போறதுன்னு முடிவு பண்ணிட்ட அப்புறம் எதுக்கு பார்த்துட்டு நிக்கிற கிளம்பு என்றான் கல்லாக .

எல்லாம் அவ்வளவுதானா என்று அவளின் குட்டி இதயம் சுக்குநூறாகி போனது.

அத்தான் என்று ஏதோ சொல்ல வர 

போறதுன்னு முடிவு பண்ணிட்ட இதுக்கு மேல என்கிட்ட பேச என்ன இருக்கு நீ போகலாம் கீழே தான் உங்க அப்பா அம்மா இருக்காங்க அப்படியே போயிடு திரும்பி வந்துடாத என்று கதவு பக்கமாக அவளைப் பிடித்து தள்ளினான்.

அவள் அப்போவே சொன்னாள் நான் தான் நம்பலை 

அவள் அவனை கேள்வியாகப் பார்க்க உன் தங்கை தான் நான் மித்ரா கிட்ட பேசுறேன் அவள் உங்களை விட்டு போயிடுவான்னு சொன்னா அதை செய்தும் காட்டி விட்டாள் குட் என்று அவளைப் பாராட்டினான்.

போறதுக்கு முன்னாடி இதையும் கேட்டுட்டு போ நான் நந்தினிகிட்ட என்ன சொன்னேன்னு தெரிஞ்சிட்டு போ

எனக்கு பிடிச்ச ஒரே பொண்ணு என் மித்ரா தான் அவளைத்தான் நான் லவ் பண்றேன்னு அவளைத் திட்டி அனுப்பிட்டேன்.

ஆனால் நீ அவளுக்கு என்னை தூக்கிக் கொடுக்க நினைக்கிற யாருக்கு இந்த மாதிரி மனைவி அமையும் உனக்கு கோயில் கட்டுறேன் இப்போ கிளம்பு போடி என்றான் ஆத்திரமாக.

அத்தான் 

ஒன்னும் வேண்டாம் நீ கிளம்பு என்றான்.

இப்போ நான் சொல்றேன் எனக்கு நீ வேண்டாம் போ டி என்று தள்ளி விட்டான்.

அவன் தள்ளிவிட்ட வேகத்தில் கீழே விழுந்து விட நோ என்று கத்தினாள்.

பின்னர் தான் சுற்றும் முற்றும் பார்த்தாள் யாரும் இல்லை என்று.

அப்பொழுது தான் அவளுக்கு உரைத்தது அது கனவென்று.

தலையை உலுக்கிக் கொண்டவள் அங்கிருந்த தண்ணீரை எடுத்து பருகி விட்டு படப்படவென அடித்துக் கொண்ட இதயத்தை தன் கையால் அழுத்திக் கொண்டாள்.

கனவா நான் கூட பயந்துட்டேன் ச்சே இந்த நந்தினி பேசினதையே நினைச்சிட்டு தூங்கியிருப்பேன் போல அதான் கனவு வந்துருக்கு என்றவாறு மீண்டும் படுத்துக் கொண்டவள் உறங்கிப் போனாள்.

மோகமுள் தீண்டும் …

படித்து விட்டு தங்களின் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே

comments please 



Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments