மோகமுள்- 27:
அப்பொழுதுதான் அனைவரும் அவரவர் அறையில் உறங்க எத்தனிக்க ஆதியின் அறையில் இருந்து சத்தம் வரவே பதறிப்போய் வெளியில் வந்தனர்.
ஆசீயும் சத்தம் கேட்டு வெளியில் வந்தவன் என்னவென்று பதறிக் கொண்டு ஆதியின் அறைக்கு விரைய சுமதி தடுத்தார்.
கேள்வியாகப் பார்த்தவனை “வேண்டாம் ஆசி.. இரு போகாத.. போய் கதவை தட்டினால், இன்னும் கோபம் தான் வரும். மித்ரா பார்த்துப்பா.. அவன், ஏற்கனவே ஏதோ கோபத்தில் தான் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறான்.. நாம் போய் இப்போ நின்னா, சங்கடப்படுவான்."
என்ன நடந்திருக்கும் என்று ஒருவாரு யூகித்தவாறு கூறினார்.
அவரும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார் ஆதியின் பார்வையும் மித்ராவின் வெட்கத்தையும்.
சற்று நேரத்தில் அமைதியாக இருக்கவும் அனைவரும் ஹாலிலேயே அமர்ந்திருந்தனர்.
சற்று நேரத்தில் ஆசீசீசீ.. என்று ஆதி கத்தி அழைக்கவும் அறைக்கு பக்கத்திலே நின்றிருந்தான் போலும் அண்ணன் கூப்பிட்டு குரலுக்கு அவன் அறைக்கு ஓடினான்.
கதவை திறந்து கொண்டு வந்தவன் வண்டியை எடுடா ஹாஸ்பிடல் போகணும் என்று மித்ராவை கைகளில் ஏந்தி கொண்டு அவன் பின்னே விரைந்தான்.
ஆசி ஆதி மித்ரா ஒரு காரிலும் மற்ற மூவரும் இன்னொரு காரில் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மித்ராவோ பாதி மயக்க நிலையில் இருந்தும் அவன் டி-ஷர்ட் காலரை பிடித்தவள் விடவே இல்லை.
போகும் வழி எல்லாம் மித்து என்னால தான்டா சாரி சாரி டா என்ன மன்னிச்சிடு என்றவாறு புலம்பிக்கொண்டே வந்தான்.
மித்ரா இங்க பாரு கண்ணை மூடாத என்கிட்ட பேச ட்ரை பண்ணு என்று அவள் சொருகும் விழிகளை பார்த்துக்கொண்டே டேய் மித்ரா நோ இங்க பாரு என்று கன்னம் தட்டிக் கொண்டே அழுதான்.
ஆம் அழுதான் கண்ணீர் உடைப்பெருக்க தன்னால் தான் எல்லாம் என்று நினைக்கவே மனமெல்லாம் ரணமாக வலித்தது.
அப்பொழுதும் அந்த நிலைமையிலும் அவன் டி-சர்ட் காலரை பிடித்துக் கொண்டு இருந்த வளைக் கண்டு இவனுக்குள் உயிர் உருகியது.
எங்கு அவன் தன்னை விட்டு எங்காவது சென்று விடுவான் என்கிற பயத்தில் அந்த மயக்க நிலையிலும் விடாமல் கெட்டியாகப் பிடித்திருந்தாள்.
போகும் வழி எல்லாம் மித்ரா மித்ரா என்று ஜெபம் போல் பிதற்றி கொண்டே வந்தான்.
தன் அண்ணன் வேதனையைக் காண சகிக்காமல் ஸ்டியரிங்கில் குத்தி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் வாகனத்தை மருத்துவமனைக்கு விரட்டினான்.
சிறிது நேரத்தில் மருத்துவமனை வரவே மித்ராவை தன் கைகளில் அள்ளிக்கொண்டு உள்ளே ஓடினான்.
அங்கிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க முல்லைநாதன் தான் வந்தார்.
என்ன ஆதி என்ன ஆச்சு என்றவாறு மித்ராவை பரிசோதித்தார்.
அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிப் போனான்.
உடனே ஆசீ முந்திக்கொண்டு தவறி விழுந்து டேபிள்ல இடிச்சுக்கிட்டாங்க டாக்டர் விழுந்ததும் மயங்கிட்டாங்க என்றான் தன் அண்ணனை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.
ஓகே சின்ன காயம் தான் ஒரு ரெண்டு தையல் மட்டும் தேவைப்படும் என்கவும் தையல் போடாதீங்க டாக்டர் தையல் போடாமல் ஹீல் ஆகாதா
ஆகும் கொஞ்சம் டைம் எடுக்கும் என்றார் அவள் காயத்தை துடைத்துக் கொண்டே
சின்ன காயம் தான்னு சொல்றீங்க ஏன் மித்ரா எழவே இல்ல என்றான் ஒருவத பாட்டத்துடன்.
விழுந்த அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் ஆதி சரி கொஞ்சம் வெளியில் வெயிட் பண்றீங்களா டிரெஸ்ஸிங் முடிச்சிட்டு கூப்பிடுறேன்.
ஆதியின் டி-ஷர்ட் காலர் இன்னும் மித்ராவின் கையில் தான் இருந்தது அவனும் அவள் அருகே குனிந்து கொண்டுதான் நின்றான் இவ்வளவு நேரமும்.
அதற்குள் நர்ஸ் வந்து டிரிப்ஸ் போட்டுவிட்டு போக அவள் கையை தன் சட்டையில் இருந்து விலக்க முயல அத்தான் எங்கேயும் போகாதீங்க இங்கேயே இருங்க என்றாள் தீணமான குரலில்.
அவன் முல்லைநாதனை நிமிர்ந்து பார்க்க நர்ஸ் ஒரு சேர் போடுங்க என்று அதில் அமர சொன்னவர் மித்ராவின் காயத்தை ஆராய்ந்தார்.
ஆதி அவள் கையை தன் டி-ஷர்டில் இருந்து விலக்க அவள் முகம் சுளிக்கவும் இங்கதான் மித்ரா எங்கேயும் போகல என்று கைகளுக்குள் அவள் டிரிப்ஸ் ஏராத கையைப் பொத்திப் பிடித்தவாறு வேதனையில் முகம் கசங்க அவளையே விழியாகட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளுக்குள் நொறுங்கி போயிருந்தான்.
என்னால தான் இப்போ இவ இப்படி வலி அனுபவிச்சிட்டு இருக்கா என்னால தான் அவளுக்கு கஷ்டம் என்னால ஒரு சுகத்தை கூட அவளுக்கு தர முடியல நான் என்ன பண்ணுவேன் என்னை விட்டு போயிடுன்னு சொன்னாலும் போக மாட்டேங்குறா அவ போகலன்னா என்ன நானே போறேன் நான் உனக்கு வேண்டாம் மித்ரா நான் உன்னை விட்டு மொத்தமா போறேன் நான் உன் கூட இருந்தா உனக்கு தான் கஷ்டம் என்று அவன் பாட்டுக்கு தேவையில்லாமல் அனைத்தையும் நினைத்து குழப்பிக் கொண்டு இருந்தான்.
அவனின் கசங்கிய முகத்தைக் காண பிடிக்காமல் ஆசீ வெளியில் வர சக்கரவர்த்தி சுமதி நிரு அங்கு நின்றிருந்தவர்கள் மூவரும் ஒரு சேர ஒன்றும் இல்லை தானே ஆசீ மித்ரா எப்படி இருக்கா என்கவும் ஓகே தான் ப்பா ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு இருக்காங்க
ஆ.. ஆதி என்று கவலையாக பார்க்க வேதனையாகப் பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.
அண்ணி அண்ணனை தன்னை விட்டு நகர விடவே இல்லை அதிர்ச்சியில் தான் மயங்கிட்டாங்கன்னு சொன்னாரு சின்ன காயம் தான்னு டாக்டர் சொன்னாரு என்றவாறு தன் அன்னையை கட்டிப்பிடித்து ஏன் ம்மா அண்ணனுக்கு மட்டும் இப்படி நடக்குது பாவம் அவர் வரும் வழியெல்லாம் என்னால தான் என்னால தான் கதறிக்கிட்டே வந்தார் ஏன்மா இப்படி என்று அழுதான் அனைவரும் அவனை சமாதானப்படுத்தி அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
டிரெஸ்ஸிங் பண்ணியாச்சு ஆதி ப்ளீடிங் எதும் அதிகமா இல்ல டிரிப்ஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு போகலாம் இந்த மாத்திரைகள் ஒரு அஞ்சு நாள் மட்டும் போட சொல்லுங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் டிரெஸ்ஸிங் பண்ணனும் அப்போ தான் சீக்கிரம் காயம் சரியாகும் நாளை மறுநாள் வந்து காயம் பார்த்துட்டு டிரெஸ்ஸிங் பண்ணிக்கலாம் என்றவாறு விடை பெற்றார்.
மித்ரா இன்னும் கண்களைத் திறக்கவில்லை.
ஒரு கையில் டிரிப்ஸ் இறங்கி கொண்டிருந்தது மறு கை இவன் கையில் பொத்தி வைத்திருந்தான்.
தலையில் கட்டுப் போட்டு வதங்கிய கொடிப் போல கிடந்தவளை காண காண தன்னையே அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்தியும் என்னை இப்படி பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்கியே அப்படி என்னடி லவ் என் மேல என்று அவள் கையில் முகம் புதைத்துக்கொண்டான்.
சற்று நேரம் கழித்து அஃ.. அ.. அத்தான் என்று அவன் தலையை வருடிவிட சட்டென்று நிமிர்ந்து பார்க்க அவள் சிவந்த கண்களை கண்டு அவனுக்கு கண்கள் கலங்கியது.
அத்தான் இப்ப என்ன ஆச்சு எதுக்கு இப்போ கண் கலங்குது என்று சற்று அதட்டினாள்.
சிறிது நேரம் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் தன் மனதைக் கல்லாக்கி கொண்டு மித்ரா வேண்டாம் இந்த மாதிரி எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு நீ இங்கே இருக்கணும் உங்க அம்மா வீட்டுக்கு போடா இனிமே எதுவும் வேண்டாம் நான் டிவோர்ஸ் அப்ளை பண்றேன் என்கவும் கையில் ஏறிக் கொண்டிருந்த டிரிப்ஸை பிடுங்கி போட ரத்தம் சொட்ட சொட்ட அவனையே வெறித்தபடி இருந்தாள் எதுவும் பேசாமல் .
ஏய் என்னடி பண்ற ஐயோ நர்ஸ் என்று கத்த உடனே நர்ஸ் வர அவர் பின்னாடியே மொத்த குடும்பமும் வந்து விட்டது.
நர்ஸ் பிளாஸ்டர் போட்டு விட்டு செல்லும் வரை அமைதியாக இருந்தவள் பார்வையை மட்டும் அவனை விட்டு இம்மியளவு கூட அகட்டவில்லை.
அவளோ அவனைத்தான் அழுத்தமாகப் பார்த்து வைத்தாள்.
செவிலியர் சென்ற அடுத்த நிமிடம் மற்றவர்கள் எஞ்சி இருந்தார்கள்.
இன்னொரு முறை விட்டுட்டு போன்னு ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தது சாம்பிள் தான் இன்னொரு முறை என்ன விட்டுட்டு போ மித்ரான்னு ஒரு வார்த்தை வந்தாலும் நான் செத்துப் போயிடுவேன் என்றுவாறு கண்களை மூடி அமைதியாக படுத்துக்கொண்டாள்.
அவளுக்கு அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை.
ஏதாவது ஒரு விஷயம் நடந்து விட்டால் கூட என்னை விட்டு போயிடு மித்ரா என்று எதற்கெடுத்தாலும் கூறினால் என்ன அர்த்தம்? அவளும் என்னதான் செய்வாள்.
அதற்கு ஏன் அவள் அவனை திருமணம் செய்ய வேண்டும் விட்டுவிட்டு செல்வதற்காகவா தன் பெற்றோரை எதிர்த்துக் கொண்டு திருமணம் செய்தாள் இது ஏன் இவருக்கு புரிய மாட்டேங்குது இன்னைக்கு வீட்டுக்கு போனதும் முடிவா பேசிடனும் என்றும் முடிவு எடுத்தவளாய் கண்களை திறந்தாள்.
அங்கு அவள் பேச்சின் வீரியத்தை தாங்க முடியாமல் அதிர்ந்து நின்ற ஆதியை கண்டவள் அவனை முறைத்து விட்டு அங்கு நின்ற சுமதியிடம் திரும்பி அத்தம்மா வீட்டுக்கு கிளம்பலாம் என்கவும் உனக்கு ஒன்னும் இல்ல தானே மித்ரா ஏதாவது பண்ணுதாம்மா என்றபடி அவளருகில் வந்து தலை வருடி கொடுக்க இப்ப ஓகே தான் அத்தம்மா அத்தம்மா ஒன்னும் இல்ல நல்லா இருக்கேன்.
சரிடா கொஞ்ச நேரம் இரு என்றவர் திரும்பி தன் கணவரிடம் ஏங்க போய் டாக்டர்கிட்ட வீட்டுக்குப் போகலாமான்னு கேட்டுட்டு வாங்க என்று சக்கரவர்த்தியை அனுப்பினார்.
பின்னர் முல்லைநாதன் வந்து பரிசோதித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கூறிவிட்டு சென்றார்.
நீங்க போங்க அத்தம்மா வரேன் என்று அவர்களை முன்னால் போக சொன்னவள் தன்னை பார்த்துக் கொண்டிருந்த ஆதியை நோக்கி தூக்கு என்பது போல் கைகளை நீட்டினாள்.
ஒன்றும் பேசாமல் அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டவன் காரை நோக்கி நடந்தான்.
வீட்டிற்கு வந்ததும் ஏதாவது சூடா குடிக்கிறியா மித்ரா பால் கொண்டு வரவா இல்ல அத்தம்மா அதெல்லாம் வேண்டாம் தூக்கம் வருது என்றாள் சோர்வாக நான் போய் தூங்குறேன் என்றபடி ஆதியின் நெஞ்சில் சுகமாக சாய்ந்து கொண்டாள்.
அவளை ஏந்தி கொண்டு தன் அறைக்கு செல்ல எத்தணித்தவனை ஆதி மித்ராவை ரூம்ல விட்டுட்டு வா உன்னிடம் கொஞ்சம் பேசணும் என்று சக்கரவர்த்தி கூறினார்.
அவன் சென்றதும் ஆசி நிரும்மா நீங்க போய் ரெஸ்ட் எடுங்கடா எல்லாம் சரியாகிவிடும் என்று அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
அறைக்கு வர அங்கு அனைத்தும் சுத்தமாகி இருந்தது.
மித்ராவை அறையில் படுக்க வைத்து போர்வை போர்த்தி விட்டவன் அவளை சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான்.
ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவன் கீழே இறங்கி வந்தான்.
அவன் வந்ததும் சக்கரவர்த்தி அவனை அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டவர் குரலை செருமினார்.
அங்குதான் சுமதியும் இருந்தார் ஆனால் அவர் எதுவும் பேசவில்லை ஆதி கண்ணா என்ன நடந்தது என்று நான் கேட்க போறது இல்ல அது உங்க தனிப்பட்ட விஷயம் அது உங்க பிரைவசி அதுல தலையிடல.
ஆனா உனக்கு கிடைச்ச வாழ்க்கையை நீ எங்க தவற விட்டுவிடுவியோ என்று எனக்கு பயமா இருக்கு உனக்கு கிடைச்சிருக்குறது நல்ல வாழ்க்கை தக்க வச்சிக்கிறது தான் புத்திசாலித்தனம் உனக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை உனக்கே தெரியும்.
ஆனால் இப்ப நீ நீயா இல்ல அதனால தான் இதை கூட நான் சொல்றேன் சரியா
எதுவுமே நிரந்தரம் இல்லா கண்ணா எல்லாமே மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது.
வாழ்க்கையில் இது ஒரு அங்கமா நினைச்சுக்கோ எல்லாரும் எப்பொழுதும் சந்தோஷமா இருப்பதில்லையே எல்லாருக்கும் சந்தோஷம் துக்கம் என்று மாறி மாறி தான் வரும் அதுதான் வாழ்க்கை அப்படி இருந்தா தான் நமக்கு சுவாரசியமாக இருக்கும்.
எனக்கு கஷ்டமா இருக்கு எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்னு சொல்றத விட ரெண்டு பேரும் சேர்ந்து ஃபேஸ் பண்ணனும் நீ தனியாள் இல்லை உனக்கு சப்போர்ட்டுக்கு இப்போ மித்ரா இருக்கா
அதுக்கு உன் மனசை தயாராகிக்கோ.
மித்ரா சின்ன பிள்ளை இல்ல அவளுக்கு எல்லாம் தெரிஞ்சு தான் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டாள்.
அவள் உன்னை அளவுக்கு அதிகமாகவே காதலிக்கிறாள். நீ உடன் இருந்தால் அவள் எதை வேணாலும் பேஸ் பண்ண தயார்.
அவளுக்கு இந்த உலகத்திலேயே எது முக்கியம் தெரியுமா நீ நீ மட்டும் தான் உன்னை உனக்காக மட்டும்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்மகிட்ட இருக்கிற பணமோ அந்தஸ்தோ இது எதை பற்றியும் அவளுக்கு கவலையில்லை அவளுக்கு அவளுக்கு அது தேவையும் இல்ல அது உனக்கும் தெரியும்.
அவளுக்கு தேவை எல்லாம் நீ மட்டும் தான் நீ இப்படி உடைந்து போய் நின்னா அவ தாங்குவாளா அதோட வெளிப்பாடு தான் ஹாஸ்பிடல்ல உன்கிட்ட நடந்துகிட்டது.
காரணம் அவள் உயிரையும் விட உன்னைதான் அவ அதிகமா நேசிக்கிறாள். அதனால் அதிகமா யோசிக்காம அவ கூட மனசு விட்டு பேசி அடுத்து என்ன பண்ணலாம் அதிலிருந்து எப்படி குணமாகி வரலாம்னு யோசி அத விட்டுட்டு நீ கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்தாதே.
ஆண்மைங்கிறது என்ன தெரியுமா தன்னை நம்பி வந்த பொண்ணை எந்த சூழ்நிலையிலும் அவளை கண்கலங்காம அவ மனசு அறிஞ்சு நடக்கிறதுலையும் அவளை மனதளவிலும் உடல் அளவிலும் கஷ்டப்படுத்தாமல் இருப்பது தான் பேராண்மை.
நல்லா யோசிச்சு முடிவு எடு. ஆனா அது நல்ல முடிவா தான் இருக்கணும் உனக்கு வேற சாய்ஸும் மித்ரா உனக்கு கொடுக்க போறது இல்ல.
அவள் ஹாஸ்பிடலில் பேசினதை வச்சு சொல்றேன் பாத்துக்கோ என்றவர் எழுந்து கொள்ள அவனும் எழ தன் மகன் கலங்கி இருப்பதை பொறுக்க மாட்டாமல் அவனை வந்து அணைத்துக் கொண்டார்.
மனசுல எதுவும் போட்டு குழப்பிக்காத கண்ணா எல்லாம் சரியாகும் இப்படியே இருந்துராது சரியா போய் தூங்கு என்று அவன் அறைக்கு அனுப்பி வைத்தார்.
தன் அறைக்கு வந்த ஆதியை வரவேற்றது என்னவோ வெறும் கட்டில் தான்.
மித்ரா என்றவாறு அங்கிருந்த குளியலறையைத் தட்டியவன் சத்தம் இல்லை என்றதும் திறந்து பார்த்தான் அங்கும் இல்லை அவள் பேசியது அவன் மனதை ரொம்பவே பாதித்திருக்க அவளைக் காணாமல் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது நெஞ்சம் படப்படுவன அடித்துக் கொண்டது தேக்கு மரக் கால்கள் செயலிழுந்தது போல நகர மாட்டேன் என்கிறது இதற்கு பெயர் என்ன? ஏன் நான் அவளுக்காக இப்படி துடிக்க வேண்டும்.
அவனுக்கு கிடைத்த பதில் என்னவோ காதல் காதல் காதல் மட்டும் தான் ஆம் காதல் தான் அவளை நிரம்பவே காதலிக்கிறான்.
என்னை இனி போகச் சொன்னால் செத்து விடுவேன் என்றது அவளுடைய காதலை பரைசாற்றுகிறது என்றால் அவளுக்காக தன் மனக்கவலைகள் அனைத்தையும் எதிர்க்கொள்ள தயாராகிறான் என்றால் அதுவே காதல் தானே.
மோகமுள் தீண்டும்…
எபியைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் பதியுங்கள்.
உங்கள் கருத்துகளை எதிர்நோக்கி அன்புடன் உங்கள் சஹானா..
4 Comments
Nice
ReplyDeleteThank you sis keep supporting
DeleteVery episode sis semaya iruku
ReplyDeleteThank you sis keep supporting
Delete