நிரஞ்சனா வீட்டினர் வீட்டிலிருந்து புறப்பட்ட பத்தாவது நிமிடம் அம்மா சதீஷ் வெளிய ஒரு சைட் பார்க்க கூப்பிட்டான் நான் போயிட்டு வரேன் என்று கிளம்ப டேய் இருடா எங்க போற அண்ணாவும் அண்ணியும் அண்ணி வீட்டுக்கு போறாங்க அவங்க கூட போயிட்டு வா என்று அவன் எதற்காக செல்கிறான் என்று தெரிந்து கொண்டு தூண்டில் போட உடனே தன் தந்தையை துணைக்கு அழைத்துக்கொண்டவன் அப்பா அவங்க முதல் முறை மறு வீட்டுக்கு போறாங்க நான் எப்படி கூட போக முடியும் புதுசா கல்யாணம் ஆனவங்க தனியா ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு போகட்டும் நான் எதுக்கு குறுக்க நந்தி மாதிரி என்றவன் அதற்கு மேல் நின்றால் இன்னும் ஏதாவது சொல்வார்கள் என்று பயந்தவன் போல் சரி போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன் என் பிரண்டு வெயிட் பண்ணுவான் என்று வேகமாக வேகமாக சென்றான் இல்லை இல்லை ஓடினான்
தன் வாகனத்தில் ஏறி அமர்ந்தவன் நிரு ஏண்டி என்னை விட்டு போற கொஞ்சம் கூட இந்த மாமா மேல் உனக்கு பாசமே இல்லடி இரு வரேன் வந்து தூக்கிட்டு வரேன் என்றபடி வாகனத்தை விரட்டினான்
அவன் நேரமோ என்னவோ ட்ராபிக்கில் மாட்டிக்கொண்டான் ஐயோ இன்னைக்குன்னு பார்த்து தான் இவ்வளவு ட்ராபிக் ஆகணுமா? கடவுளே இன்னும் அரை மணி நேரம் தானே இருக்கு ஃபிளைட்டுக்கு என்றவனுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது எங்கு அவள் பறந்து விடுவாள் என்று.
நோ நிரு நீ இல்லனா எப்படி இருப்பேன் கொஞ்சம் என்னை பற்றி யோசிச்சியாடி ஏன்டா இப்படி ஆமை வேகத்தில் நகருறீங்க என் அவசரம் புரியாமல் என்றவன் ஹாரனை அலறவிட்டான் எரிச்சலில்.
ஒரு வழியாக ஒரு மணி நேரத்தில் ஏர்போர்ட்டுக்கு வந்தும் விட்டான்
ஆனால் அவன் கிளி பறந்து விட்டதற்கான அனவுன்ஸ்மென்ட் வந்தது.
அதனை கேட்டதும் போயிட்டா என்ன விட்டு போயிட்டா என்றவனுக்கு சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது.
சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்று கூட அவன் கவனத்தில் பதியவில்லை அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்து சென்றது கூட அவனுக்கு உரைக்கவில்லை.
அப்பொழுது சூழ்நிலைக்கு ஏற்றது போல பாட்டு வேறு ஓடியது அதுதான் அங்கு சிறப்பம்சம்
போ நீ போ தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
அதனை கேட்டவன் நீ போனா என்னடி பின்னாடியே வந்து தூக்கிட்டு வருவேன்டி என் ஜாங்கிரி என்று கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவன் வண்டியில் ஏற அங்கு அமர்ந்திருந்தவளை கண்டு நீ.. நிரு.. நிரு பாப்பா நீ நீ போகலையா வந்துட்டியா எனக்காக வந்துட்டியா என் பட்டு என்றவனுக்கு மகிழ்ச்சியில் உள்ளுக்குள் துள்ளி குதித்தான்.
அவளின் கையைப் பிடித்து தன் இடது பக்கம் நெஞ்சில் வைத்து அழுத்தியவன் நீ போயிட்டியோனு நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமாடி என்றவனை பார்த்து முறைத்தாள்
அவள் முறைப்பதற்கு காரணம் தெரியாமல் அவன் என்ன என்று பார்க்க உனக்காக நான் திரும்ப வந்தேன் உன் ரியாக்ஷன் அவ்வளவு தானா போடா நான் சிங்கப்பூர் போறேன் என்று இறங்க எத்தணித்தவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் நிரு பாப்பா போகாதடி என்று அவன் நடுங்கிய கரங்களால் அவள் கண்ணம் பற்றி அவள் செவ்விதழை வருட அவன் விழி வீச்சினை தாள முடியாதவள் சரி மாமா வீட்டுக்கு போகலாம் வா என்று வேறு பக்கமாக முகம் திருப்பினாள்.
ஒற்றை விரல் அவள் உதட்டில் வைத்து பேசாதே என்பது போல் தலையாட்டியவனுக்கு அவள் முகத்தை விட்டு கண்களை மட்டும் அகற்றவில்லை.
இப்போ எதுக்கு அப்படி பாக்குறீங்க மாமா என்னை விடுங்க வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்
அவன் எங்கு அவள் சொல்வதைக் கேட்டான் அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் விட முடியாது இனி காலத்துக்கும் விடமாட்டேன் என்று அவன் கழுத்தில் முகம் புதைக்க அவன் மூன்று நாள் தாடி முள்ளாக குத்த மாமா குத்துது என்றவளிடம் குத்தட்டும் என்று தன் தாடையால் உரச மாமா என்றால் உணர்ச்சி பிழம்பாக.
அவன் தலையை நிமிர்த்தி அவன் கண்களை பார்த்தவள் பாஸ்ட் இஸ் பாஸ்ட் பழச விடுங்க அது முடிஞ்சு போச்சு அதை பற்றி பேச வேண்டாம் இனி நோமோர் சாரீஸ் நோ மோர் ஒரிஸ் என்று கண்களைசிமிட்ட தன் தேவதை பெண்ணிடம் இனிமேல் நம்ம வாழ்க்கையில் சாரியும் தேங்க்ஸும் கண்டிப்பா இருக்கும் பாப்பா ஆனா நான் இது போல இனி பண்ண மாட்டேன் ஐ லவ் யூ டி.
ஓ அப்போ தப்பு பண்ணுவ அப்படித்தானே
ஆமா இனிமே உன் கிட்ட தப்பு தப்பா தான் பண்ணுவேன் என்று அவள் தேனூறும் இதழை முற்றுகையிட அவன் முத்தத்தை ஆழ்ந்த அனுபவித்தவள் ஹ்ம்ம் என்று முனகி மூச்சிக்கு ஏங்க அவளை ஒருவாரு விட அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து மூச்சை இழுத்து விட்டாள் வேக வேகமாக .
நான் உன்கிட்ட விளையாண்டு பார்த்தேன் இன்னைக்கு காலையில வந்து சாரி கேட்டல்ல அப்பவே என் கோபம் போயிடுச்சு நிரஞ்சனும் அம்மாவும் தான் ஊருக்கு போறதா சொன்னாங்க நான் சும்மாதான் வந்தேன். இது உன்னை தவிர வீட்ல இருக்கிற எல்லாருக்குமே தெரியும் என்றவள் நீ என்னை தேடி வருவேன்னு எனக்கு தெரியும் மாமா நான் இல்லாம உன்னால இருக்க முடியாதுன்னும் தெரியும்
நமக்குள்ள இதுவரைக்கும் எந்த ஒரு ஒளிவுமரைவும் இருந்தது இல்லை இனிமேலும் இருக்காது சரியா
கல்யாணம் பண்ணிக்கலாமாடி என்றான் பட்டென்று
மாமா கொஞ்சம் வெயிட் பண்ணு மாமா இப்போ என்ன அவசரம் என்றால் யோசனையாக
நானும் சும்மா தான் டா கேட்டேன் அண்ணாவோட லைஃப் கொஞ்சம் செட்டில் ஆன பிறகு நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான் அவன்.
நானும் அதை பற்றி தான் மாமா யோசிச்சேன். ஆதி மாமா பாவம் நம்மகிட்ட எதுவும் காமிச்சுக்க மாட்டேங்குறார். ஆனால் உள்ளுக்குள்ள அந்த வலி இருந்து அவரை கொல்லாம கொல்லுது இதுல வேற மித்ராவை கல்யாணம் பண்ணி அவளோட வாழ்க்கையும் வீணாக்கறது போல நினைச்சுட்டு இருக்காரு போல என்றவள் மித்ரா நல்ல பொண்ணு எப்படியோ ரெண்டு பேருக்கும் எல்லாம் சரியாகி நல்லா இருக்கணும் இப்ப அது மட்டும் தான் என் மனசுல ஓடுது மித்ரா கூட நாளைக்கு டாக்டரை பார்க்க போறதா சொல்லிட்டு இருந்தா என்றாள் தகவலாக..
நல்லதே நடக்கணும் நடக்கும் என்று நினைப்போம் இது ஜஸ்ட் டெம்பரவரி தான்னு முல்லை சொன்னாரு பார்க்கலாம்
இந்த மருந்துக்கு எப்படி ரியாக்ட் ஆகுதுன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் ஆனால் இது பத்தி அண்ணன் கிட்ட பேசணும்னாலும் சங்கடமா இருக்கு பார்ப்போம் என்றவன் சரி கிளம்பலாம் என்கவும் என்னை விட்டால் அந்த சீட்ல உட்கார்ந்துக்குவேன் என்றவளை இன்னும் ஒரு முறை இறுக்கி அணைத்து முத்தம் பதித்தவன் அவளை இறக்கி பக்கத்து சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டான்.
வண்டியை தன் வீட்டிற்கு கிளப்பினான்.
ஆசீயும் நிருவும் வீட்டிற்கு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த டிவியை ஆன் பண்ண என்னப்பா இவதான் உன் பிரண்டு சந்தோஷா என்றபடி சுமதி வர மம்மி நான் உன்கிட்ட பேசமாட்டேன் பாப்பா ஊருக்கு போகலன்னு தெரிஞ்சும் என்னை எல்லாரும் சேர்ந்து தவிக்க விட்டு இருக்கீங்க உங்க எல்லார் கூடையும் நான் பேசமாட்டேன் போங்க
டேய் நடிக்காதடா அப்படியே வா உனக்கு பிடிச்ச கார சட்னியும் நெய் தோசையும் நானே என் கையால பண்ணி தரேன்
இத தானே முன்னாடி நீ சொல்லி இருக்கணும் மாதாஜி என்று எழ உன் கோபம் அவ்வளவுதானா கோபால் என்று தலையில் அடித்துக் கொண்டாள் நிரஞ்சனா
நீயும் உன் கோபமும் ச்சை
அம்மா நல்லா மொறு மொறுன்னு ஊத்திக் கொண்டு வாம்மா என்றவன் அங்கிருந்த உணவு மேசையில் அமர்ந்து கொண்டு தாளம் தட்டினான்
உனக்கு வெட்கமாகவே இல்லல்ல என்று தன் அருகே கேட்ட குரலில் பாப்பா சாப்பாடு விஷயத்துல மானம் ரோஷம் வெட்கம் இதெல்லாம் பார்க்க கூடாதுடி என்றுவன் தன் தந்தையிடம் திரும்பி அப்பா அண்ணன் எப்போ வராங்க என்றதும் அவன் அங்கேயே சாப்பிட்டு வரதா இப்பதான் போன் பண்ணி சொன்னான்.
அம்மா அப்பாவுக்கு சுகர் அதிகமா இருக்குன்னு சொன்னாங்கமா என்று ஞாபகப்படுத்த அப்பாவுக்கு சப்பாத்தி போட்டுக்கலாமா டா என்கவும் ஏத அந்த வரட்டியா என்று முகத்தை சுளித்து எனக்கு வேண்டாம் என்றவருக்கு சுமதியின் முறைப்பு பதிலாக கிடைக்க அமைதியாக கப்சிப் என்று அமர்ந்து கொண்டார்.
இங்கு கிளம்பியதிலிருந்து ஆதியின் பார்வை மித்ராவையே வட்டமடித்துக் கொண்டிருந்தது
அவன் பார்வை உள்ளுக்குள் புகுந்து கலவரம் செய்ய தன் பார்வையை சாலை பக்கமாக திருப்பிக் கொண்டாள்.
மின் விளக்குகள் ஆங்காங்கே இருந்தாலும் அதனை தோற்கடிக்கும் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் சாலை பளிச்சென்று தெரிய அந்தக் ஊதக்காற்று தேகத்தை ஊசியாக குத்த மன்னவனின் பார்வையோ உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை சிலிர்க்க வைக்க பாவையோ செங்குழுந்தாகித்தான் போனாள்.
அந்த தங்க நிற சேலையில் தங்க சிலை போல் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை விட்டு அவன் பார்வையை அவனால் கொஞ்சம் கூட நகட்ட முடியவில்லை.
அத்தான் ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க ப்ளீஸ் என்றாள் கெஞ்சலுடன்.
வேறு என்னதான் அவனால் சொல்லக் கூடும்.
அவளால் அவன் பார்வையைக் சுத்தமாக எதிர்க்கொள்ள முடியவில்லை.
உடனே அவள் உள்ளங்கையை தன் கைகளுக்குள் பற்றி வைத்துக்கொண்டவன் மெதுவாக வருட இவளுக்கோ அடிவயிற்றில் பல பட்டாம்பூச்சிகள் ஒரு சேர ஒரே நேரத்தில் பறந்தது போல அவளைப் படப்படுக்க வைத்தது.
அஃ.. அத்தான்.. அவளுக்கு வெறும் காத்துதான் வந்தது
அவள் திணறுவதை பார்த்து என்ன மித்ரா என்றான் குதூகலமாக.
அவளின் படபடப்பு அவனுக்கு வேறு கதை சொன்னது.
அவள் என்ன செய்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழிப்பதும் நடுக்கமுற்ற விரல்களைக் கோர்த்துக் கொண்டு அதனை தன் பார்வையில் இருந்து மறைக்க முற்படுவது அனைத்தும் அவனுக்கு பிடித்து போனது ஏனென்றே தெரியாமல்.
அவளை அப்படியே கையில் சுருட்டி கொள்ளத் தோன்றியது.
அந்த மோண நிலையிலேயே இருவரும் வீட்டிற்கு வர ஹாலில் அமர்ந்து சிறிது நேரம் அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்க ஆதியின் கண்களோ மித்ராவை தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
அவளும் மும்பரமாக நிருவிடம் எதையோ வளவளத்து கொண்டிருந்தவள் அவன் பார்வையில் பேசா மடந்தையாகிப் போனாள்.
ஒருவாறாக அனைவரும் அவரவர் அறைகளுக்கு செல்ல மித்ராவுக்கு இன்று என்னவென்றே தெரியாமல் தங்கள் அறைக்குள் செல்லவே கால்கள் பின்னியது.
என்ன டி உள்ளே போறதா ஐடியா இல்லையா என்று தன் காதருகில் அவன் குரல் கேட்க திரும்பி பார்க்க அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டான் அவளை.
அத்தான் என்று ஏதோ கூற வர நோ மோர் டாக்கிங் மித்ரா என்றவாரு கதவை சாற்றியவன் அவளை மேலும் பேச விடாமல் இதழைக் கடித்து காதல் பயில ஆரம்பித்து விட்டான்.
எப்பொழுது கட்டிலுக்கு வந்தார்கள் அணிந்திருந்த ஆடைகள் எங்கே என்று எதுவும் தெரியவில்லை இருவருக்கும்.
இப்பொழுது இருவருக்கும் தெரிந்தது அவனும் அவளும் மட்டும் தான்.
எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது.
சட்டென்று அவளை விட்டு எழுந்தவன் கண்மண் தெரியாமல் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கிப் போட்டு உடைத்தான் ஆக்ரோஷமாக
ஏன் ஏன் எனக்கு எனக்கு மட்டும் இப்படி
மித்ராவிற்கோ கண்ணில் இருந்த கண்ணீர் விழவா வேண்டாமா என்று சமயம் பார்த்துக் கொண்டிருக்க அவன் படும் வேதனையைப் பார்த்து கன்னங்களில் வழிந்தது.
தன் உடைகளை அணிந்து கொண்டவள் சற்று நேரம் பொறுத்து அவன் பின்புறமாக வந்து அவனை பிடித்து அணைத்துக் கொண்டாள்.
என்னை விடு.. விடுடி என்னை என்றான் அவளிடமிருந்து திமிறிக்கொண்டு.
அவனை இறுக்கமாக அணைத்திருந்தாளே தவிர எதுவுமே அவனிடம் பேசவில்லை.
இந்த நேரத்தில் பேசினால் பயனில்லை என்று உணர்ந்தவள் போல அவன் அமைதியடையும் வரை மௌனமாக அழுகையில் குலுங்கியபடி காத்திருந்தாள்.
பெருங்குரலெடுத்து கத்தியவன் கொஞ்ச நேரத்தில் அமைதியாகி தரையில் தோய்ந்தமர அவனை விடாமல் தானும் அருகமர்ந்து அவனை கட்டிக் கொண்டாள்.
அவளது மடியில் படுத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் இலக்கே இல்லாமல் வெறித்திருந்தவனின் கேசத்தைக் கோதிக் கொடுக்க சிறிது நேரத்தில் சாரி மித்ரா என்றான் அவளை பார்க்க முடியாமல்.
அவன் முகத்தை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்ய திரும்பாமல் வயிற்றில் முகம் புதைத்தவனின் தேகம் அழுகையில் குலுங்கியது.
ச்சு என் அத்தானுக்கு என்னாச்சு இப்போ எதுக்கு இந்த அழுகை முதுகை தடவிக் கொடுத்தான் அவனை தேற்றும் விதமாக
என்னால முடியலை மித்து என்றவன் குரலோ உடைந்து போய் வந்தது.
சரி ஒன்னுமில்லை அத்தான் இங்கப் பாருங்க நமக்கு காலம் நீண்டு கிடக்கு இதுக்கு போய் வருத்தப்படலாமா நீங்களே சொல்லுங்க
இல்லை மித்ரா நீ என்ன சொன்னாலும் என் மனசு சமாதானம் அடையல விடு என்றவன் என்ன நினைத்தானோ விருட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு எங்கேயோ புறப்பட அத்தான் இந்த நேரத்துல எங்க போறீங்க நில்லுங்க என்றாள் பரிதவிப்போடு
விடு எனக்கு இங்க இருக்க பிடிக்கலை விடு நான் எங்கேயாவது போறேன் விடு மித்ரா என்றான் ஆத்திரமாக
இல்லை அத்தான் வேண்டாம் என்றாள் வழியை மறைத்த படி
நகரு டி எனக்கு இங்க இருந்தா பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு நகரு என்றான் இறுதியாக.
நகர மாட்டேன் நீங்க எங்கேயும் போக வேண்டாம் ப்ளீஸ் இங்கேயே இருங்க நீங்க ஒரு நிலையில் இல்லை அத்தான் என்று நகராமல் நிற்க
சொல்ல சொல்ல கேட்க மாட்டேங்குற
அவளை தள்ளி விட்டிருந்தான் ஆக்ரோஷமாக.
அவன் தள்ளி விட்ட வேகத்தில் அங்கிருந்த டேபிளில் இடித்து கீழே விழுந்திருந்தாள்.
அனைத்தும் நொடியில் நடந்து முடிந்திருக்க அத்தான் என்ற அவள் அலறலில் அவள் பக்கம் திரும்பியவனுக்கு உயிர் கையில் இல்லை.
மித்துமா என்று அவளிடம் பாய்ந்திருந்தான்.
அவன் தள்ளிவிட்ட வேகத்தில் அவள் தலை அங்கிருந்த டேபிளில் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்திருந்தாள்.
ஒரெட்டில் அவளை அடைந்தவன்
மித்து
பேபி
டேய் எழுந்திரும்மா என்னாச்சு சாரி சாரிடா தங்கம்
அவள் எழாமல் இருக்கவும் மித்து என்று முகத்தை திருப்ப அவள் நெற்றியில் உதிரம் வழிய ஐயோ இரத்தம் மித்துமா என்றவாறு அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.
அவள் அப்பொழுதும் எழவில்லை என்றதும் மித்து எழுந்திரு டி என்று அவள் கன்னம் தட்டினான்.
சற்று அவளிடம் அசைவு இருக்கவே தண்ணீர் மீண்டும் தெளிக்க கண்களை சிரமபட்டு விழித்தவள் அவனின் டி-சர்ட் காலரைப் பிடித்துக் கொண்டவள் அத்தான் எங்கேயும் போகாதீங்க என்றாள் திணறலாக.
அவனுக்கு கண்ணீர் உடைப்பெடுக்க சாரி மித்து
தலை வலிக்குது அத்தான் என்றாள் கண்கள் சொருக.
சாரி.. சாரி டா மித்து என்னாலதான் எல்லாம் என்னால தான் இப்போ ஹாஸ்பிட்டல் போயிடலாம் என்று கைகளில் அவளை அள்ளிக் கொண்டான்.
ஆசீ என்று தன் தம்பியை அழைக்க கதவுக்கு வெளியே நின்றிருந்திருப்பான் போலும் அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடினான்.
கையில் மித்ராவை ஏந்தியபடியே வண்டியை ஸ்டார்ட் பண்ணு டா ஹாஸ்பிட்டல் போகணும்
இப்போ போயிடலாம் அண்ணா என்றவன் வெளியில் விரைந்தான்.
மோகமுள் தீண்டும்…
0 Comments