மோகம் - 21:
மது உண்டாகி இருக்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து மித்ரன் இந்த உலகில் இல்லை..
ஏற்கனவே மதுக்குட்டி மதுக்குட்டி என்று கொஞ்சி திரிபவனுக்கு அவள் வயிற்றில் இன்னொரு குட்டி இருக்கிறது என்று அறிந்த பின் சொல்ல வேண்டும்.
அவள் வேகமாக குனிந்தாலே மது பார்த்துடி எதுக்கு ஸ்ட்ரைன் பண்ற என்று அதட்டுவான்.
அதற்கு அவளோ அத்தான் ரொம்ப பண்றீங்க என்று சுகமாக சலித்துக் கொள்வாள்.
அவ்வப்பொழுது வாந்தி மயக்கம் என்று அவளைப் பாடாய் படுத்த மித்ரன் எந்நேரமும் அவளுடனே இருந்தான்..
ஆபிஸ் ஒர்க் அனைத்தையும் வீட்டிலிருந்தே பார்த்து கொண்டு அவள் பக்கத்திலேயே அமர்ந்திருப்பான்.
அன்றும் அப்படி தான் அவளை தன் தோளில் சாயவைத்து அவள் தலையை ஒரு கை கோத மறு கை மடியிலிருந்த மடிக்கணினியில் வேலை பார்த்தது.
அப்பொழுது அவள் அவனை விட்டும் எழவும் என்னாச்சு மது என்று பதட்டமாக எழ அத்தான் ரெஸ்ட் ரூம் தான் போறேன் வேற ஒன்னுமில்லை என்று கையைக் காட்ட ஹிம்ம் வா நான் கூட்டிட்டு போறேன் என்று அவள் அருகில் வர தலையில் அடித்துக் கொண்டவள்
அத்தான் இது உங்களுக்கே ஓவரா தெரியல என்கவும் அப்படியா சொல்ற என்று ஒற்றை புருவ உயர்த்தி வினவ அந்த பாவனையில் சொக்கிப்போனவள் அவனை வந்து அனைத்துக் கொண்டு அவனது இது மார்பில் பல இச்சுகளை வாரி வழங்கினாள்.
அவளை அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் மது உனக்கு எதாவது வேணுமா.. நீ ஏன் என்கிட்ட இது வேணும் அது வேணும்னு கேட்க மாட்டேங்கிற.. என்று அவள் நாடியை உயர்த்தி அவள் கண்களில் தன் கண்களை கலக்க விட்டவாரு கேட்டான்.
நான் வேணும்னு சொல்றதுக்கு முன்னாடியே எல்லாமே எனக்கு நீங்க தந்துடுறீங்க அத்தான்..
போடி பொய் சொல்லாத
அட உண்மையா அத்தான்
இல்ல நீ என்கிட்ட எதுவுமே ஆசையா கேட்கிறதில்ல என்று முகம் வாடினான்.
அவன் உதட்டை கிள்ளி முத்தமிட்டவள் எனக்கு எப்பொழுதும் நீங்க தான் அத்தான்..
எப்பொழுதும் எங்கேயும் என் கூட இப்படியே இருக்கணும் அது தான் எனக்கு மிகப் பெரிய ஆசையே என்று கூறியவளுக்கு அப்பொழுது தெரியவில்லை அவனை கதற விடப்போவது.
அவளை அப்படியே கட்டி பிடித்து கொண்டவன் மது உன்னை போலவே எனக்கு ஒரு குட்டி பாப்பா வேணும்டி என்று கிசுக்கிசுத்தான்.
ஹூகும் எனக்கு உங்களை போலவே பையன் தான் வேணும் அவனும் உங்களை போலவே என் கூடவே இருக்கணும் என்கவும்
நோ மது நான் மட்டும் தான் உன்னை சுத்திட்டே இருப்பேன் என்றவன் அவள் வயிற்றில் கை வைத்து டேய் மகனே என் மதுக்குட்டி எனக்கு மட்டும் தான் வேணும்னா அப்பப்போ கொஞ்சம் விட்டுக் கொடுக்கிறேன் என்று தன் பிள்ளையிடம் இப்பொழுதே டீல் பேசினான்.
அவன் பேசியதை ரசித்தவள் அத்தான் உங்களை போல ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை என்று சிரிக்க
அவனுக்கு மட்டுமில்ல மது உனக்கும் தான் உனக்கு எப்பொழுதும் நான் தான் பர்ஸ்ட் இந்த குட்டி பையனெல்லாம் எனக்கப்பறம் தான் சரியா என்கவும் ஹிம்ம் சரி அத்தான் இப்போவாச்சும் என்னை விடுறீங்களா என்கவும் சரி என்று அவளை விட்டான்.
மது மித்ரன் தம்பதியருக்கு மது சொன்னது போலவே ஆண் குழந்தை...குட்டி மித்ரனே தான்.
அதுவும் மருத்துவமனையில் வலியில் மது அலறும் போது என் மதுவை என்ன பண்றீங்க விடுங்க என்று கதவை உடைக்க ஆரம்பிக்க அவனை உள்ளே விட்டு அவள் பக்கத்திலேயே இருக்கும்படி கூற அதன்பிறகு அவன் அலறினான்.
ஐயோ மதுக்குட்டி இப்படின்னு தெரிஞ்சிருந்தா குழந்தையே வேணாம்னு சொல்லியிருப்பேனே..
என்னால தானே இப்போ உனக்கு இவ்வளவு கஷ்டம் என்னை மன்னிச்சிடு டா என்று அவளிடம் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்ட அங்கிருந்த செவிலியரும் மருத்துவர்களும் சிறு சிரிப்புடன் தங்கள் பணியை செய்துக் கொண்டிருந்தனர்.
மருத்துவரோ வலி வரும்பொழுது நல்லா புஷ் பண்ணுங்க மா வந்துடும் என்கவும் மது தலையை ஆட்டினாள்.
அவள் வலியில் ஒவ்வொரு முறையும் அலறும் பொழுதும் இவன் கண்ணில் இரத்தக் கண்ணீர் ஆறென பெருகியது.
அவனை பொருத்தவரை இனி அடுத்த குழந்தைக்கு தடா தான்.
சிறு நேரத்தில் வலியில் மது கட்டிலின் கம்பியை பிடிக்க அவள் கைகளில் தன் கையை கொடுக்க அதன் பிறகு தான் அவன் உணர்ந்தான் அவள் தாங்கும் வலி எவ்வளவு என்பதை.
வலி வரவும் மூச்சை பிடித்து கொண்டு புஷ் பண்ண அவர்களின் மகனும் படுத்தியதும்போது இனி என் அப்பா தாங்க மாட்டார் என்று நினைத்தான் போலும் குட்டி மித்ரனாகவே வெளியில் வந்து விட்டான்.
அவள் சோர்ந்து போய் மூச்சு வாங்கவும் அவளை அப்படியே அணைத்துக்கொண்டவன் சாரி டா என்னால தான் சாரி மதுக்குட்டி என்று அழுது கரைய அந்த நிலையிலும் தன் கணவனை கண்டு சிரிப்பு தான் வந்தது.
இப்போ எதுக்கு அத்தான் இவ்வளவு அலப்பறை.. நம்ம குட்டியை பாருங்க நான் சொன்னது போல குட்டி மித்ரன் தானே.
போங்க போயிட்டு அவன் கூட சண்டை போடுங்க அதுக்கு முன்னாடி எனக்கு டையர்டா இருக்கு என்று கண்களை மூட மருத்துவர் அவனிடம் காபி டீ ஏதாவது கொண்டு வந்து கொடுங்க சார் என்கவும் வெளியில் விரைந்தான்.
வெளியில் தன் அன்னையை பார்த்ததும் தன்னையும் இப்படி தானே வலியை தாங்கி பெற்றெடுத்திருப்பார் என்று நினைத்தவன் அவரை அணைத்தவன் மீண்டும் டேமை திறந்து விட்டான்.
பின் காபியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல அங்கு கண்ட காட்சியில் காண்டாகி விட்டான்.
அவன் புத்திரன் தன் சிறு கைகளால் அன்னையை அணைத்துக் கொண்டு தன் பசியாறி கொண்டிருக்க மது என்று புகார் வாசிக்க ஆரம்பிக்கவும் அத்தான் என்று அதட்டினாள்.
இது என் இடம் என்று மல்லுக்கு நிற்க ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
அவளுக்கு பிரசவ வலியே மறந்து போய் விட்டிருந்தது மித்ரனின் செயலில்.
அவளுள் ஓடியதெல்லாம் மித்ரனை இனி எப்படி சமாளிக்க போகிறோம் என்று தான்.
அந்த சின்னக்குட்டிக்கு பெயர் தமிழ்வேந்தன்.
ஆனால் தந்தையைத் தன் தாயிடம் நெருங்க கூட விட மாட்டான்.
தன் தாயிடம் தந்தை நெருங்கி அமர்ந்திருந்தாலே உர்ரென்று முறைத்துப் பார்த்துத் தன் செப்பு இதழ்களைப் பிதுக்கிக்கொண்டு அழ ஆரம்பித்துவிடுவான்.
மித்ரன் விலகியதும் தன் நான்கு பற்களைக் காட்டி அழகாக சிரிப்பான்.
சரியான வில்லனா இருப்பான் போல…என் பொண்டாட்டிக்குப் பக்கத்துல கூட உட்கார விடமாட்டேங்கிறான் என்று புலம்புவதைப் பார்த்து சிரித்தாள் மதி.
அன்றும் தன் தாயிடம் பால்குடித்துக்கொண்டிருக்கும் வேளையில் மித்ரன் வந்ததை எப்படி தான் அறிந்தானோ தெரியவில்லை தலையை நீட்டி தன் தந்தையைப் பார்த்து முறைத்தான் தன் குட்டிக் கண்களால்.
அப்பொழுது வேண்டுமென்றே அவனை பார்த்துக்கொண்டே தன் மதுக்குட்டி கன்னத்தில் அழுத்தி "இச்சு" கொடுத்ததும் வீலென்று கத்த ஆரம்பித்தான்.
"அத்தான் ஏன் இப்போ இப்படி பண்ணுனீங்க அழுகிறான் பாருங்க" என்று தன் மகனை சமாதான படுத்தினாள்.
அவன் உடனே எழவும் அழுகையை நிறுத்தித் தன் பற்களைக் காட்டி சிரித்தான்.
அவன் சிரிப்பில் மயங்கியவன் டேய் மகனே நான் கொஞ்சமா குடிச்சிட்டு நம்ம புள்ளைக்கு வேணுமேன்னு விட்டு வச்சா அந்த பாலையே குடிச்சிட்டு எனக்கே நீ வில்லன் வேலை பார்க்குரியா"
இருடா உனக்கு வைக்காம மொத்ததையும் நானே குடிச்சிடுறேன் அப்போ என்ன பண்ணுவேன்னு பார்ப்போம் அத்தான் சின்னப்பிள்ளைக் கிட்ட பேசுற பேச்சா இது என்று அதட்டியதும் என்ன புரிந்ததோ அந்த சின்ன குட்டிக்கு கைதட்டி சிரித்தான் தன் தந்தையைப் பார்த்தான்.
(சரியான கேடி பயபுள்ளையா இருக்கும் போல…)
மச்சான் ஏதாவது ஒரு வழி சொல்லுடா.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று ஏதோ கப்பலே மூழ்கி விட்டது போல் தலையில் கை வைத்து தன் முன் அமர்ந்திருந்த தன் நண்பனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தான்..
வேறு யாரு எல்லாம் நம்ம பாவப்பட்ட விக்கி தான்..
ஆனால் மக்களே ஒரே ஒரு நண்பனை வைத்து கொண்டு இவன் பாடு இருக்கே..
ஏன்டா டேய் உன்னை நண்பனா வச்சிருக்கிறதுக்கு நான் தான் டா தலையில் கை வச்சிட்டு இருக்கணும் என்று சலித்துக்கொள்ள என்னடா மச்சான் என்று அவனை கட்டி அணைத்து கொண்டு பாவமாக கேட்டான்.
இப்படி பாவமா முகத்தை வச்சே எல்லாத்தையும் கவுத்துடு டா என்று தானும் அணைத்து கொண்டவன் ஏன்டா மச்சான் இது உனக்கே நல்லாருக்கா
எனக்கு நல்லாதான் டா இருக்கு ஆனால் பாக்குறவங்க தான் தப்பா நினைப்பாங்க என்று மித்ரன் கூற விக்கி புரியாமல் பார்த்தான்.
யாரை தப்பா நினைப்பாங்க
வேற யாரை நம்ம ரெண்டு பேரையும் தான்
நம்ம ரெண்டு பேரையும் தப்பா நினைக்க என்ன மச்சான் இருக்கு
இப்படி நடு ரோட்டுல கட்டிபிடுச்சிட்டு நின்னா தப்பா நினைக்காம என்னடா செய்வாங்க என்று சிரித்த படி கேட்க
அட ச்சீ கருமம் பிடுச்சவனே தள்ளுடா.. என் குயின் வீட்டுல எனக்காக காத்துட்டு இருப்பா என்று அவனை விட்டு நகர விக்கியை நோக்கி தன் இருக்கைகளையும் நீட்டி மச்சான் பொண்டாட்டி வந்ததும் நண்பனை நடுரோடுன்னு கூட பாக்காம அம்போன்னு விட்டுட்டு போறியே.. இது உனக்கே நியாயமா இருக்கா என்கவும்
டேய் போடா போடா உன் டகால்டி வேலையை என்கிட்டையே காட்டுறியா டா..
உன் பிள்ளை விடலன்னு நீ சும்மா இருந்த இதை என்னை நம்ப சொல்ற.. உன் மனசாட்சியை தொட்டு சொல்லு பிக்காலி பயலே நேத்து எப்படியும் அஞ்சு ரவுண்டாவது போயிருப்ப.. உன்னை பற்றி எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா.. ஓடிடு டா என்று அவனை விரட்ட
மித்ரன் சிரித்து கொண்டே அவனிடம் இருந்து தப்பி ஓடியவன் மச்சி கணக்கு தப்பா சொல்ற டா அஞ்சு இல்ல ஆறு மச்சான் என்று ஓட அட நாயே நான் மூணு தான் டா என்று ஸ்டன் ஆகி நிற்க
வயசாயிடுச்சு மச்சான் உனக்கு அதான் ஏதும் வேலை செய்யல போல என்று கிண்டல் பண்ண அடிங்க இருடா உன் மகன் கிட்ட உன்னை போட்டு கொடுத்தால் தான் சரி படுவ படவா என்று அவனை நாலு மொத்து மொத்தினான்.
ஆமா மச்சான் எப்போ நந்தன் வரான்..
இன்னும் ஒரு வாரத்துல வரான் டா.. அதுக்கப்பறம் கொஞ்சம் வேலை குறைஞ்சிடும்.. அடிக்கடி ஓடத் தேவையில்லை.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்..
ஹிம்ம் சரிடா நான் வீட்டுக்கு கிளம்புறேன் என் ஏஞ்சல் காத்துட்டு இருப்பாங்க என்கவும்
மச்சான் ஏஞ்சல் வந்ததும் குயினை டீலில் விட்டுட்டியா..
என் குயின் இல்லனா ஏஞ்சல் இல்லடா ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் என்று தன் மகளையும் மனைவியையும் நினைத்தபடி விக்கி கூறினான்.
ஆம் மக்களே விக்கி ராணி தம்பதியருக்கு தனுஷா என்ற மகள் இருக்கிறாள்.
அது என்ன மாய மந்திரமோ தெரியவில்லை பெண் பிள்ளைகள் என்றாலே தகப்பனுக்கு தனி பிரியம் போல..
இங்கு விக்கியை அவன் வீட்டில் விட்டு விட்டு தன்னறைக்கு வந்த மித்ரன் கண்டதென்னவோ தாயும் மகனும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்ததை தான்.
மது ஒருக்களித்து படுத்திருக்க தன் மார்பில் முகம் புதைத்து படுத்திருந்த மகனின் உடலை தட்டி கொடுத்தவாறு இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
மதுவின் பின்னோடு சென்று படுத்து கொண்டவன் அவள் இடையில் தன் கையை படர விட்டு மது என்று அவள் காதில் கிசுகிசுத்தான்..
ஹிம்ம்.. அத்தான் என்று பிள்ளையை தட்டிக் கொடுக்க ஏய் மது இந்த பக்கம் திரும்புடி
அத்தான் தூக்கம் வருது இப்போதான் குட்டி தூங்க ஆரம்பிச்சான் சத்தம் போடாதீங்க எழுந்துர போறான் என்று தூக்கத்தில் கூற
அடியேய் இப்போதான் தூங்க ஆரம்பிச்சானா இதை தானே முதலில் நீ சொல்லியிருக்கணும் எப்படியும் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு எழுந்திரிக்க மாட்டான்..
அதுக்குள்ள தக்காளியை தெளிக்கவிடலாம் என்று கணக்கு போட்டவன் எதற்கும் யோசிக்கவில்லை.
மெதுவாக எழுந்து வந்தவன் மதுவிடம் பால் குடித்து விட்டு படுத்துறங்கியவனை அலுங்காமல் குலுங்காமல் மெதுவாக கையில் ஏந்தியவன் பக்கத்தில் உள்ள தொட்டியில் படுக்க வைத்து மெதுவாக ஆட்டி விட அவன் நல்ல நேரம் போல குட்டி எழவில்லை.
அப்பாடா என்று நிமிர்ந்தவன் இவ இப்போதான் கும்பகர்ணனுக்கு தங்கச்சின்னு நிருபிக்கணுமா..
அவளருகில் சென்று அணைத்து படுத்துக் கொண்டவன் அடியேய் மது.. மதுக்குட்டி என்று கொஞ்சி கொஞ்சி அவளை தன் பக்கம் திருப்பியவன்
மதும்மா என்னடி பகலில் தூக்கம் என்று அவள் திரட்சியில் முகத்தை வைத்து புரட்ட அவன் தலையை அங்கேயே அழுத்தி பிடித்துக் கொண்டவள் அத்தான் தாக்கம் வருது வாங்க தூங்குங்க என்று அவனையும் தட்டிக் கொடுத்து தாங்க வைக்க போக
காரியத்தையே கெடுத்தா என்று நினைத்த மித்ரன் மதுக்குட்டி எனக்கு உடம்பு ஏதோ பண்ணுதுடி உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன் என்னன்னு தெரியல என்று கூற தூக்கத்திலிருந்து அடித்து பிடித்து எழுந்தாள்.
அவன் உடலை தடவி கழுத்தில் கைவைத்து பார்த்து என்ன ஆச்சு அத்தான் என்று தொட்டு தடவ அவள் செய்கையை என்றும் போல் இன்றும் ரசித்தவன் வெளியே அவளிடம்
மது என்னன்னு தெரியல டி உள் காய்ச்சல் போல ஹாஸ்பிடல் போய் பார்த்தா எல்லாம் நல்லா தான் இருக்குன்னு சொல்றான்..
அப்பறம் வர வழியில தான் ஒரு பாட்டி சொன்னாங்க.. தாய்ப்பால் குடிச்சா எந்த நோயா இருந்தாலும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிடுமாம் என்று அவள் செழுமைகளை பார்த்தவாறே எச்சில் விழுங்க கூறினான்.
தன்னவனை பற்றி அறியாதவளா அவள்..
கள்ளன் எப்படி பொய் சொல்றான் என் செல்ல அத்தான் என்று உள்ளுக்குள் கொஞ்சி கொண்டு வெளியில் ஒன்றும் தெரியாதவள் போல அச்சோ அப்படியா அத்தான் இப்போ என்ன பண்றது என்று கையில் வெண்ணையை வைத்து கொண்டு எங்கு எங்கு என்று தேடினாள்..
அவன் முகம் போன போக்கை பார்த்தவள் சரி அத்தான் குட்டி கொஞ்சம் வச்சுட்டு நீங்க குடுச்சிடுங்க என்று அவனை இழுத்து தன் மேல் போட கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா என்பது போல இரண்டு தக்காளிகளில் எதை எடுக்க எதை விட என்று தெரியாமல் திண்டாட மது இது சரி பட்டு வராது என்று அவன் வாயில் ஒன்றை திணிக்க லபக்கென்று வாயில் வாங்கி தன் வேலையை தொடங்கி விட்டான்.
முட்டி முட்டி மோதி சப்பு கொட்டி குடத்தை காலி செய்தவன் இந்த குட்டி பயலுக்கு மிச்சம் வைக்கவே மாட்டேன்.. என்னா கத்து கத்துறான் என்று தன்னவளின் எழில் கோலங்களை அளந்தவன் முக்கடலில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்து விட்டான்.
விக்கி ராணி தம்பதியருக்கு தனுஷா என்ற மகள் இருந்தாள்.
இந்த இரண்டு வருடங்களில் மித்ரநந்தன் லண்டனில் இருந்து தன் தாய் நாட்டிற்கு வந்து தங்கள் பிஸ்னஸில் பாதியை அவன் தான் பார்த்துக் கொள்கிறான்.
வான்மதி தன் படிப்பை முடித்ததும் மது மித்ரனிடம் சொன்னாள்.
இப்பொழுது வான்மதி மித்ரநந்தன் பொறுப்பேற்று நடத்தும் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள்.
மித்ரன் வீட்டில்தான் தங்கி வேலைக்கு செல்கிறாள்.
அன்று மித்ரநந்தன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான். அப்பொழுது ஹாலில் அமர்ந்து வான்மதி வேந்தனைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.அப்பொழுது இவன் வருவதைப் பார்த்து டிவியில் டோரா புஜ்ஜி ஓடிக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்து சொல்வதுபோல் "வேந்து கண்ணா குரங்கு பாருடா குரங்க வந்துருச்சு" என்று வேண்டுமென்றே சத்தமாக சொன்னாள்.
அவளை முறைத்தவன் "இருடி வீட்டுக்கு வந்தா தைரியம் வந்துருமா.. உனக்கு இருக்கு" என்று மனதுள் கருவியவன் தன் அறைக்கு வேகமாக சென்றான்.
சிறிது நேரம் கழித்து வான்மதி வேந்தனை தூக்கிக்கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.
அப்பொழுது யாரோ குதிப்பதுபோல் தொப்பென்று சத்தம் கேட்கவும் பயப்படாமல் இது தனக்கு பழகிய விஷயம் என்பதால் மெதுவாகவே திரும்பினாள்.
நந்தன்தான் பால்கனி வழியாக இவள் அறைக்கு வந்திருந்தான்.
அப்பொழுதும் வேந்தனிடம் "குரங்கு வந்துருச்சுடா" என்று சொன்னதும் "ஏய் நான் உனக்கு குரங்காடி" என்று கேட்கவும் "ஆமாம் குரங்கு தான் வால் இல்லா குரங்கு... இப்படி பால்கனி விட்டு பால்கனி தாவி குதிக்கிற நீ குரங்கு தான் டா "என்று சொன்னாள்.
இவர்கள் சண்டை சுவாரஸ்யமாக இருந்ததுவோ சின்னவன் இவர்களை மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஆபிஸ்ல அப்படியே பம்முற இங்க வந்தா மட்டும் தைரியம் வந்துடுச்சா" என்று நக்கலாக வினவவும் "ஆமாம் டா இப்போ அதுக்கு என்ன" என்றவளை முறைத்தவன் அவள் கையில் இருந்த வேந்தனுக்கு குட்ரைட்டா செல்லக்குட்டி என்று கன்னத்தில் முத்தமிடும் போது இவள் முகத்தை திருப்பவும் அதைப் பார்த்து உடனே அவளை இழுத்துக் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான்.
அந்த அதிர்ச்சியில் வாயை ஆவென பிளக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் இதழைச் சிறைசெய்தான்.
இதை கண்ட வேந்தன் இருவர் தலையோடு தன் தலையை முட்டினான்
(இந்த கேடி குட்டி அவங்க அப்பாக்கு மட்டும்தான் வில்லன் போல)
ஆனால் அந்த கேடிக்கே மித்ரன் தகப்பன் இல்லையா அந்த கேடி விட்டு வைத்த மிச்சத்தை இந்த கேடி பால் குடத்தில் முட்டி முட்டி குடத்தைக்காலி பண்ணிக் கொண்டிருந்தான்.
மோகங்கள் என்றென்றும் தொடரும்….
0 Comments