Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 23

 


மோகமுள் 23:


 அனைவரும் வீடு வந்து சேர்ந்ததும் சுமதி மித்ராவை அழைத்து பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லிவிட்டு அனைவரையும் சென்று ஓய்வெடுக்குமாறு பணித்தார்.


பின்பு சுமதி ஆதி மித்து மட்டுமே ஹாலில் எஞ்சியிருக்க மித்துமா நீங்க போய் டிரெஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் மதிய உணவுக்கு ரெடி பண்ணிட்டு உங்களை கூப்பிடுறேன் என்று தன் அறைக்குள் செல்ல முயன்றவரை தடுத்து இல்ல எனக்கு கொஞ்சம் ஆபீஸ்ல வேலை இருக்கு நான் போறேன் என்று ஆதி எங்கோ பார்த்துக்கொண்டு கூற கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து போகலாம் இல்லப்பா.


இல்ல எனக்கு அர்ஜெண்டா ஒரு வேலை இருக்கு என்று மித்ராவை பார்க்க ஆமாம் அத்தம்மா ஒரு டெண்டர் விஷயமா வெளியே போற வேலை இருக்கு அதைதான் சொல்றாங்க என்று அவனுக்கு பரிந்து கொண்டு வர சரி பார்த்து போயிட்டு வாங்க என்று கூறவும் சரி நாங்க சாப்பாடு வெளியே பாத்துக்கிறோம் என்று மித்ராவை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டான்.


மித்ரா அறைக்குள் வந்தவள் அவன் சில்மிஷம் செய்வான் என்று அறிந்தவள் போல வேகவேகமாக சென்று அங்கிருந்த இன்னொரு அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.


இவனும் சற்று நேரத்தில் பிரஷ் ஆகிவிட்டு வந்தவன் தன் உடைகளை களைந்து வேறு உடைக்கு மாறிக்கொண்டு என்ன மிஸஸ் மன்மதன் ஆபீஸ் வரீங்களா? இல்ல இங்கேயே இருக்கீங்களா? என்று இங்கிருந்தே நக்கலடிக்க


என் மன்மதன் எங்கே இருக்காரோ அங்கே தான் இருப்பேன் நானும் ஆபிஸ் வரேன் டெண்டர் விஷயமா ஏதோ மெயில் வந்துருக்கிறதா ஆர்த்தி சொன்னாங்க என்றவாறு உடையை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள்.


ஒஹ் உங்க மன்மதன் இல்லாம இருக்க மாட்டீர்களோ என்று தன் தாடையைத் தேய்த்தவாறு அவளருகே நெருங்கி வர ஆமாம் என் மன்மதன் இல்லைன்னா இந்த மித்ராவும் இருக்க மாட்டாள் என்றாள் உணர்ச்சிக்கரமாக .


எதிரில் இருந்தவனோ காற்றில் மிதந்து கரைந்து போனான்.


அவளை நெருங்கியவன் தன் கைவளைவிற்குள் நிறுத்தி அவள் இடையூடு கைப்போட்டு தன்னுடன் நெருக்கி அணைத்தபடி ஆமாம் உன் மன்மதன் இப்போ என்ன பண்றாரு என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டிக் கேட்க அவரா ஆபீஸுக்கு போறேன்னு சொல்லிட்டு என்னை போட்டு உருட்டிட்டு இருக்கு அந்த பொல்லாத பூனை.


நான் உனக்கு பூனையாடி பூனை என்ன பண்ணும் தெரியுமா என்று அவள் சிவந்த ஆப்பிள் கன்னத்தைக் கடித்து இன்னும் இளஞ்சிவப்பாக்கியவன் இரு டி உன்னை நைட்டு வந்து பிராண்டி வைக்கிறேன் இப்போ வா போகலாம் லேட்டாகுது என்று இருவரும் கிளம்பி டெண்டர் விஷயமாக வெளியே சென்றனர்.


இங்கு அனைவரும் அவரவர் அறையில் இருக்க ஆசி மெதுவாக நிரு தங்கி இருக்கும் அறைக்கு சென்றான்.


(இந்த பூனையை அவள் எதை வச்சு அடிக்கப் போறான்னு தெரியலயே வாங்க பார்ப்போம்.) 


அவளோ அப்பொழுதுதான் குளித்துவிட்டு அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் முடியை விரித்து போட்டு சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.


 பாப்பா என்று அவள் தலை முடியை கோதி கொடுக்க அவள் சட்டென்று என்று கண்களைத் திறந்து அவன் கையை தட்டி விட்டவள் என்ன வேணும் என்றவாறு எழுந்து கொண்டு அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டாள்.


 அவள் தள்ளி நின்றதுமே அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது இறங்கி இருந்த கோபம் சர்ரென்று தலைக்கேற என்னடி நினைச்சுட்டு இருக்க நான் போற இடமெல்லாம் வந்து பேசு பேசுன்னு டார்ச்சர் பண்ணிட்டு இப்போ ஒன்னுமே தெரியாத மாதிரி தள்ளி நிக்கிறே என்ன நெனச்சிட்டு இருக்க நானும் பாத்துட்டே இருக்கேன் பேச மாட்டேங்குற முக திருப்புற என்று அதே பல்லவியை திரும்பி பாட ஆரம்பிக்க அவள் ஒன்றும் பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் தன்னை கண்டுகொள்ளாதது போல் நின்றிருந்தது இன்னும் அவனுக்கு வெறியேற்ற என்னடி நீ நான் ஒருத்தன் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு செவிடன் காதுல சங்கு ஊதுன கணக்கா நின்னுக்கிட்டு இருக்க என்று ஆசி அறை அதிர கத்தினான்.


இப்போ எதுக்கு கத்துறீங்க நீங்க பேசுறதை நான் கண்டுக்காம நிக்கிறேன்னா எனக்கு உங்க கிட்ட பேச விருப்பம் இல்லைன்னு அர்த்தம் உங்கள பார்க்க பிடிக்கவில்லை என்று அர்த்தம் என்று அவளும் தன் பங்கிற்கு முகத்தில் அடித்தாற் போல் கூறினாள்.


என்ன பாப்பா இப்படி சொல்ற என்றான் வேதனையாக.


என்ன பாப்பா என்ன பாப்பாங்கிறேன் வேற எப்படி சொல்ல சொல்றீங்க நான் ரெண்டு வருஷமா உங்ககிட்ட கதறிட்டு இருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை ஒரு வார்த்தை இந்த ரெண்டு வருஷத்துல பேசினீங்களா நீங்க பாட்டுக்கு என்னோட நினைப்பு இல்லாம ஜாலியா இருந்திருக்கீங்க நான் தான் உங்களை ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சு துடிச்சிருக்கேன் ஆனா அப்போலாம் கண்டுக்கல இப்ப அப்படியே வந்துட்டான் பெருசா பேச போயா நீயும் உன் காதலும் ஒரு மண்ணாங்கட்டியும் எனக்கு வேண்டாம் என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.


ஏய் அமைதியா இரு இப்போ எதுக்கு இப்படி கத்துற பாரு மூச்சு வாங்குது என்றவன் பின் தொடர்ந்தான்.


பாப்பா கொஞ்சம் நான் சொல்றதை கேளுடி என்று ஆரம்பிக்க நீங்க சொல்றது நான் எதுக்கு கேக்கணும் இவ்ளோ நாள் எப்படி இருந்திங்களோ அப்படியே இருங்க போங்க நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஊருக்கு கிளம்ப டிரஸ் எல்லாம் பேக் பண்ணனும் போங்க இங்க இருந்து என்றாள்.


பாப்பா என்ன வெளியே போக சொல்றியா டி சும்மா விளையாட்டுக்கு தானே சொல்றே என்றான் உதடுகள் துடிக்க..


உண்மையா தான் சொன்னேன் கொஞ்சம் வெளியே போனீங்கன்னா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு டிரஸ் எல்லாம் எடுத்து வைப்பேன் தலை வலிக்குது என்று தலையைத் தேய்த்துக் கொண்டாள்.


பாப்பா போகாதடி இங்கே இருடி ப்ளீஸ் என்றவன் அவளை நெருங்கி அவள் கைகளைப் பிடிக்க சட்டென்று அவன் கைகளை உதறினாள்.


ஏன் டி இப்படி பண்ற எனக்கு வலிக்குதுடி இப்படியெல்லாம் சும்மா கூட பண்ணாதடி ப்ளீஸ் என்று கெஞ்சினான்.


நான் சும்மா எல்லாம் எதுவும் பண்ணல உங்கள மாதிரி நான் ஒன்னும் எதையும் தெரிஞ்சுக்காம பேசல இது செட் ஆகாதுன்னு தெரிஞ்சு தான் சொல்றேன் போறீங்களா என்று கதவை திறந்து வைத்துவிட்டு அவன் போவதற்காக வேறு எங்கோ பார்த்தபடி காத்திருந்தாள்.


கதவருகே இங்கிருந்து போ என்பது போல் நின்று கொண்டிருந்தவளை நெருங்கியவன் கதவை இழுத்து தாழ்பால் போட்டுவிட்டு அவளை அப்படியே தன்னுடன் சேர்த்து இறுக்க அவள் துள்ளி துடிக்க தன்னுடன் சேர்த்து இருகணைத்துக் கொண்டான்.


அவன் பிடியில் இருந்து விடுப்பட போராடிக் கொண்டிருந்தாள்.


என்ன பண்றீங்க விடுங்க எப்பொழுதும் நீங்க நினைச்சது போல தான் நடுக்கணும்னு எதாவது விதி இருக்கா நீங்க பேசாத போது நானும் பேசமா இருக்கணும் நீங்க பேசினா நானும் பல்லை இளிச்சுக்கிட்டு வரணுமா அப்படி எல்லாம் இருக்க முடியாது அதுக்கு வேற ஆளை பாருங்க.


நான் உங்களை ஏமாத்திட்டு அவனை லவ் பண்றேன்னு தானே இந்த ரெண்டு வருஷமா என்கிட்ட பேசல ஊருக்கு வரேன்னு சொல்லிட்டு வரல ஒரு போன் பண்ணல அட்லீஸ்ட் நான் இங்க வந்தப் போதாவது என்னன்னு என்கிட்ட பேசியிருக்கலாம் ஆனால் அதை எதையும் பண்ணல நீங்களா ஒன்னு நினைச்சிக்கிட்டு தேவை இல்லாம ரெண்டு வருஷம் வீணடிச்சிருக்கீங்க.. 


நீங்க என்ன நினைச்சு என்கிட்ட பேசாம இருந்தீங்களே இந்த ரெண்டு வருஷத்துல அது அப்படியேதான் இருக்கு எதுவும் மாற்றம் இல்லை இப்போ மட்டும் உங்களுக்கு எந்த பூதம் வந்து சொன்னுச்சு என்று அவனிடமிருந்து திமிற சாரிடி என்றான் மீண்டும் தன்னோடு அவளை இறுக்கியவாரு.


அவள் பட் பட்டென்று அவனை அடி வெளுத்து வாங்க எவ்ளோ வேணா அடிச்சிக்கோ ஆனால் விட்டுட்டு மட்டும் போகாத என்பது போல அவள் அடித்த அடிகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு மரம் போல நின்றுக் கொண்டிருந்தான்.


தன் கோபம் தீரும் வரை அவனை அடித்து ஓய்ந்தவள் ஏன்டா என்னை நீ நம்பாம போன என்று கண்ணீர் வடிய அவன் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதற அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் செவ்விதழை தன் இதழ்களால் சிறை எடுத்தவன் விடவே இல்லை.


அவன் திடீர் தாக்குதலில் நிலைக்குலைந்தவள் அவனிடம் இருந்து விடுப்பட முயற்சி செய்தவள் சற்று நேரத்தில் அவள் அமைதியாகிவிட இதழ்களை விட்டு அவளை தன்னுடன் மீண்டும் அணைத்து கொண்டான்.


பாப்பா என் மேல தான்டி தப்பு நான்தான் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டேன் என்னை மன்னிச்சிடு டி ப்ளீஸ் என்று மெதுவாக அவள் காதில் கூறினான்.


அவனை என் ஃபிரண்டுன்னு நம்பி தொலைச்சுட்டேன் டி அதுதான் நான் பண்ணிய பெரிய தப்பு உன்னை ஏன் நம்பாம போனேன்னு எனக்கே தெரியலை டி எப்படி என்னோட திரு பாப்பாவை நானே நம்பாம போயிட்டேன்னு இந்த ரெண்டு வருஷத்துல எத்தனை நாள் தூக்கம் தொலைச்சிருக்கேன் தெரியுமா


நான் சிங்கப்பூர் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் திரும்ப வீட்டுக்கு வரவும் அண்ணா பாத்துட்டு கேட்கவும் நான் எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லிட்டேன் பொறுமையா கேட்டவரு என்னை ஒரு அடி பளார் னு அடிச்சாருப் பாரு என்று இப்பொழுது அந்த அடி வலிப்பது போல தன் வலது கன்னத்தை தேய்த்து விட்டுக் கொண்டான்.


அப்புறம் அடுத்த நாளே அது பொய்யின்னு அண்ணா அவனை அடிச்சு உதைத்து அவனை என்கிட்ட சொல்ல வச்சுட்டாரு.


நான் ஏன் உன்கிட்ட இவ்வளவு நாள் பேசலனா அது தான் காரணம் என் நிரு பாப்பாவை நானே நம்பலைன்னு எனக்கு ஒரே குற்றவுணர்ச்சியா போச்சு.. உன்கிட்ட எந்த முகத்தை வச்சுக்கிட்டு பேச சொல்ற அதனால தான் நான் பேசாம விலகிப் போனேன் அது எனக்கு நானே கொடுத்துக்குற தண்டனடி


 நான் ஏன் உன்னை நம்பாமல் போனேன் பிரண்டா இருந்தாலும் நான் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துருக்கணும் நான் உன்னை நம்பாம போயிட்டேனே என்ன இருந்தாலும் நான் என்னோட பாப்பாவை நம்பி இருக்கணும் சாரிடி பாப்பா என் மேல தான் தப்பு எனக்கு உன்ன பாக்கவே ஒரே குற்ற உணர்ச்சியா இருந்தது என்னை கொல்லாமல் கொன்னுச்சு.


உன்ன விலகி இருக்கணும்னு நினைச்சாலும் இந்த பாழாப்போன மனசால உன்ன ஒரு நிமிஷம் கூட நினைக்காம இருக்க முடியலடி என்ன மன்னிச்சிடுடி வேணும்னா உனக்கு கோவம் தீரும் வர என்ன அடிச்சுக்கோ ஆனா என்னை விட்டு போக மட்டும் செய்யாதடி ப்ளீஸ் என்று அவளை இறுக்கிக் கொள்ள அவள் எதுவும் பேசாமல் அப்படியே அவன் கைகளுக்குள் நின்றான். 


அவளை விட்டு பிரிந்தவன் இன்னும் உனக்கு என் மேல கோவம் இருந்தா என்னை பிடிக்கலைன்னா நான் இதுக்கு மேல உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் பாப்பா நீ போ ஆனா உன் மனசு மாறும் வரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன் என்றவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்து விடுவித்து நெற்றியில் முத்தமிட்டு சென்றுவிட்டான்.


 இவளோ எதுவும் என்னை பாதிக்கல என்கிற ரேஞ்சில் போய் படுத்து விட்டாள்.


 இங்கு அலுவலகத்திற்கு வந்த ஆதியும் மித்ராவும் ஒன்றாக வருவதை பார்த்து அனைவரும் வணக்கம் வைத்துவிட்டு அவரவர் வேலையை பார்த்தனர்.


மித்ரா தன் கேபினுக்கு சென்றி முதலில் மெயில் செக் செய்துவிட்டு ஆதியின் அறைக்குள் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.


வாங்க மிசஸ் மன்மதன் நீங்க வரும் போது கதவை தட்டணும்னு அவசியமில்லை நீங்கதான் மன்மதனோட பொண்டாட்டி ஆச்சே என்று சிரித்தபடி கூறியவனிடம் சார் இந்த டெண்டர் பற்றி என்று நிறுத்த அவள் பதட்டத்தை கண்டவன் அந்த டெண்டர் நமக்கு தான் மித்ரா கிடைக்கும் ஏன் இவ்ளோ பதட்டம் என்றவன் அவள் அருகில் வர சார் இன்னைக்கே அந்த காண்ட்ராக்ட் சைன் பண்ண போறாங்களாம்.


அதுக்கென்ன மித்ரா வாங்க கிளம்பலாம் நமக்கு தான் அது கிடைக்கும் என்று கூலாக கூற இல்லை சார் இன்னும் நாள் இருக்கு பட் ஏன் இவ்ளோ சீக்கிரம் வைக்கிறாங்கன்னு எனக்கு குழப்பமா இருக்கு என்று கூற ஒன்னும் இல்ல இப்ப எதுக்கு பதட்டப்படுறீங்க வாங்க போகலாம் என்று அவளையும் கூட்டிக்கொண்டு அந்த அலுவலகத்திற்கு சென்றான்.


அங்கு அனைத்து தொழிலதிபர்களும் இருந்தனர்.


அங்கு தான் அவனும் அமர்ந்திருந்தான் 


அவன் ரகுவீர் ராகவன் இண்டஸ்ட்ரீஸ் உடைய ஒரே வாரிசு


அவன் அமர்ந்திருக்கும் பக்கத்து வரிசையில் ஆதியும் மித்ராவும் வந்து அமர்ந்தனர்.


அவர்கள் வந்ததை அறிந்ததும் அவனோ ஏளனமாக பார்த்து இருவரையும் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் சக தொழிலதிபர் ஒருவரிடம் புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு இங்க என்ன வேலை ஒஹ் சாரி சாரி அதெல்லாம் நார்மல் ஜோடிக்கு தானே இவங்களுக்கு தான் அந்த மாதிரி எதுவும் செய்ய முடியாதில்ல என்று ஏளனமாக கூற ஆதி அதனைக் கேட்டதும் ரௌத்திரம் ஆனான்.


மித்ராவின் காதிலும் விழவே ஆதி எழப்போக சார் அமைதியா இருங்க என்று அவனை தடுத்தாள்.


ரகுவீர் சும்மா இல்லாமல் பொம்மை கல்யாணம் பண்றதுக்கு எதுக்கு பண்ணனும் அங்க தான் ஒன்னும் வேலை செய்யாது எதுக்கு இந்த பில்டப்பு என்று நக்கலாக கூறவும் மற்றவரும் அதற்கு சிரிக்க ஆதி எழுந்து அவனை அடிக்க பாயவும் சார் என்ன பண்றீங்க என்று அவனை இழுத்து பிடித்தவளிடமிருந்து திமிர அவளால் சமாளிக்கவே முடியவில்லை.


 அத்தான் கொஞ்சம் அமைதியா இருங்க டெண்டர் முடியட்டும் அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க


விடுடி என்னை அவன் என்னவெல்லாம் நீயும் கேட்டுட்டு தானே இருக்க என்று எகிர டெண்டர் அனௌன்ஸ் பண்ண போறாங்க கொஞ்சம் அமைதியா இருங்க அத்தான் என்றாள் பொறுமையாக.


அப்போ அதுவரைக்கும் அவன் அசிங்கமா பேசுவான் என்ன பார்த்துட்டு அமைதியா இருக்க சொல்றியா என்று வேங்கையாக சீர ஐயோ அத்தான் நான் வந்து உங்களை அமைதியாக தான் இருக்க சொன்னேன் அடங்கியெல்லாம் போக சொல்லல கொஞ்சம் இருங்க டெண்டர் அனௌன்ஸ் பண்ணட்டும் யாருக்கு கிடைக்கிறது என்று பார்க்கலாம்.


இப்ப நீங்க கோவப்பட்டிங்கன்னா நம்மள வெளியே போக சொல்லிடுவாங்க அதுக்காக தான் அவர் ட்ரை பண்றாரு அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க கொஞ்சம் அமைதியா இருங்க நம்ம டெண்டர் அனௌன்ஸ் பண்ணின பிறகு பார்த்துக்கலாம்.


 சற்று நேரத்தில் ஆதீரனுக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைத்து விட ரகுவீர் கொதித்தெழுந்தான்.


எப்படி எப்படி அவனுக்கு கிடைக்கலாம் கூடவே கூடாது இப்போ வந்தவனுக்கெல்லாம் கிடைக்க கூடாது என்று யோசித்துக் கொண்டே அங்கே பார்க்க மித்ரா ஆதியிடம் கங்கிராஜுலேசன் அத்தான் சூப்பர் நமக்கே கிடைச்சிருச்ச என்று குதூகலமாக ஏதோ பேசி சிரித்து கொண்டிருந்தார்கள்.


அதனை பொறுக்க மாட்டாதவன் அவர்களை நெருங்கி அவளை மேலும் கீழும் பார்த்து என்ன மேடம் ஆதிக்கு முடியலன்னா சொல்லுங்க நான் வரேன் சின்ன வயசு வேற ஆசை இருக்கத்தானே செய்யும் என்று பல்லிளிக்க 


ஹவ் டேர் யூ பஸ்ட…?

 என்று அவனை ஓங்கி மிதித்து கீழே தள்ளி அவனை நையப் புடைத்தெடுத்து விட்டான்.


அங்கிருந்தவர்கள் அவனை விலக்கித் தள்ளுவதற்குள் பெரும்பாடு பட்டனர்.


விடுங்க இவனை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன் விடுங்க என்று தன்னை பிடித்திருந்தவர்களிடமிருந்து விடுப்பட்டவனை அத்தான் போதும் விடுங்க போகலாம் என்று அணைத்துக் கொண்டாள் மித்ரா.


ஹேய் ப்யூட்டி கவுண்ட் யுவர் டேஸ் நீ எனக்கு தான் என்றவனின் குரலை கேட்ட மித்ராவிற்கு உள்ளுற குளிரெடுக்க மீண்டும் அவன் மீது பாய்ந்த ஆதியைப் பிரித்தெடுத்து வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் களைத்துப் போனாள்.


மோகமுள் தீண்டும்…





Post a Comment

2 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments