மோகமுள் - 22 :
மித்ராவும் நிருவும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் எல்லாரும் சாப்பிட வாங்கப்பா என்று சுமதி கோவில் உள்ளிருந்து அழைக்க வாங்க வாங்க எல்லாரும் போகலாம் சாப்பிட கூப்பிடுறாங்க என்று ஆசீ அழைக்க அவர்களுடன் போக எத்தனித்த மித்ராவை ஆதி தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டான்.
மற்ற மூவருக்கும் நீங்க போங்க என்று கண்ணைக் காட்ட ஆசீ நிருவைப் பார்க்க இப்பொழுது பாராமுகம் காட்டுவது அவள் முறையானது.
என்ன முகத்தைத் திருப்பிக்கிட்டு போறா என்று உள்ளுக்குள் அதிரப் பின்ன நீ செஞ்சு வச்சிருக்க வேலைக்கு உன்னைத் தூக்கி வச்சு கொஞ்சுவாங்கலா அவளும் ஊர்ல இருந்து வந்ததுல இருந்து உன்கிட்ட எவ்வளவு முறைப் பேச முயற்சி செஞ்சிருப்பா நீ எங்கேயாச்சும் முகம் கொடுத்துப் பேசுனியா இப்போ அவ முகம் திருப்பிட்டுப் போறது மட்டும் உனக்கு வலிக்குதோ உனக்கு வந்தா ரத்தம் அவளுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று அவன் மனசாட்சி அவனை வறுத்தெடுக்க இப்ப என்ன பண்றது என்று அதனிடமே ஐடியா கேட்க இப்ப வந்து கேளு என்ன பண்றதுன்னு கொஞ்சம் கஷ்டம் தான் கொஞ்சம் பொறு ஏதாவது ட்ரைப் பண்ணுவோம் என்று ஆறுதல் சொல்லச் சரி என்று சமாதானம் ஆகியவன் நிருவைத் தொடர்ந்து நிரஞ்சனும் ஆசீயும் உள்ளே சென்றனர்.
மித்ரா இருடி கொஞ்சம் பேசணும் என்று அவளைப் பிடித்து வைத்திருக்க என்ன அத்தான் பேசணும் வாங்க சாப்பிட போலாம் டைம் ஆச்சு நீங்க காலையில இருந்து எதுவுமே சாப்பிடாம இருக்கீங்க வாங்க என்று அவன் கையைப் பிடித்து இழுக்க இருடி கொஞ்சம் பொறு சாப்பாடு தானே அப்புறம் சாப்பிட்டுக்கலாம் என்று தடுத்து நிறுத்தியவன் எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும் டி என்று படபடப்பாகக் கூற என்ன விஷயம் அத்தான் ஏதாவது பிரச்சனையா என்று இவள் பதறிக் கொண்டே அந்த டெண்டர் விஷயம் எதுவும் பிரச்சனை ஆகிடுச்சா நீங்க சொன்ன மாதிரி தானே நான் கோட் பண்ணினேன் என்று இவளாக ஒன்று நினைத்துப் பேசிக்கொண்டே போக அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து நிறுத்து டி கொஞ்சம் அவசரக் குடுக்க போல நான் என்ன சொல்ல வரேன்னு புரியாம நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போனா என்ன அர்த்தம் கொஞ்சம் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.
என்ன சொல்லுங்க அத்தான் என்று அவனைப் பார்க்க உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்குமா என்று கேட்க இவளுக்குச் சப்பென்றாகி போனது.
என்ன அத்தான் இதைக் கேட்கத்தான் இவ்வளவு பில்டப்பா நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன் என்று அவன் இடுப்பில் தன் முழங்கையால் இடித்தாள்.
ஐஸ்கிரீம் யாருக்குத் தான் பிடிக்காது நான் டென்ஷனா இருந்தா ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அப்படியே குளுகுளுன்னு ஆயிடுவேன் அப்படியேதான் வாயில போட்டா கரையும் பாருங்க என்ன டேஸ்ட் தெரியுமா என்று ஐஸ்கிரீம் சாப்பிடுவதைச் சிலாகித்து சொல்லத் தீரனும் இவ கிட்ட கேட்டேன் பாரு என்ன சொல்லணும் என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான்.
கடைசியா எப்போ சாப்பிட்ட சொல்லு என்று கேட்கவும் டெய்லியும் சாப்பிடுவேன் இப்ப ரெண்டு நாளா தான் சாப்பிடல முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு கூறியவள் அதை ஈடுகட்ட தான் இந்த அண்ணா கிட்ட ஐஸ்கிரீம் கேட்டேன் அவர் என்னவோ அவர்ச் சொத்தை கேட்டதைப் போல மேலையும் கீழையும் பார்த்துட்டு மூணு தான் இருக்குன்னு என்னை ஏமாத்திட்டாரு என்று சோகமாகக் கீதம் பாடினாள்.
அடியே உன்ன பெத்தாங்களா இல்லச் செஞ்சாங்களாடி என்று புலம்ப இல்ல அத்தான் என்ன மியூசியம்ல இருந்து எடுத்துக்கிட்டு வந்தாங்க ஒரே பீஸ் தான் வேற எங்கேயும் கிளைகள் இல்லை என்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே அவனைப் பார்த்து குறும்பாக ஒற்றைக் கண்ணடிக்கவும் அனைத்தும் மறந்தவனுக்கு மோகமுள் தீண்ட ஆரம்பித்துவிட்டது.
அவளை அப்படியே ஒரு மரத்தின் பின்னால் தள்ளிக் கொண்டு போனவன் என்ன அத்தான் என்னாச்சு எதுக்கு என்னை இங்கே கூட்டிட்டு வரீங்க வாங்க நேரமாச்சு சாப்பிட போலாம் என்று மீண்டும் அதே பல்லவி ஆரம்பிக்கக் கொஞ்ச நேரம் அமைதியா இருடி இந்தத் தொனத்தொனக்குற வாயைக் கொஞ்சம் மூடி வை.
என்ன அத்தான் புரியாம பேசுறீங்க வாயை மூடினால் நான் எப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவது என்று கையில் உருகி வழிந்த ஐஸ்கிரீமை நக்கி கொண்டே கேட்க ஐயோ இப்படி என்னை டெம்ட் பண்றாளே தெரிஞ்சு பண்றாளா தெரியாம பண்றாளா அவளுக்குப் புரியுதா இல்லையா என்னோட அவஸ்தை என்று யோசித்தவன் அவளை நெருங்கி உடலும் உடலும் உரச அவனுக்குள் மோகத்தீ பற்றி எரிய அவள் முகத்தோடு தன் முகத்தை வைத்து இழைத்தவன் தன் மீசை முடிகளால் அவளுக்குக் குறுகுறுப்பூட்ட அம்மணியோ ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் படு பிசி.
அவனோ அவளின் வலது காதில் மெல்லக் கடித்து நச்சென்று ஒரு முத்தம் பதித்தவன் மித்ரா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்டி என்று கிறக்கமாகக் கூற அதை உணரும் நிலைமையில் அவள் இல்லை.
அவன் ஐஸ்கிரீம் எனக்கு வேணும் என்பது மட்டும் புரிந்தது உடனே அவனிடம் இருந்து ஐஸ்கிரீமை மறைத்துக் கொண்டாள்.
அத்தான் இது போங்கு ஐஸ்கிரீம் தர மாட்டேன் நீங்க எல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது நான் தான் சின்ன பொண்ணு நான் தான் சாப்பிடனும் என்று கூறவும் ஆதியும் ஆமாண்டி நீ சின்ன பொண்ணு தான் ஆனா பார்த்தா அப்படித் தெரியலையே என்று அவள் அங்க லாவண்யங்களைக் கண்களால் சிறை எடுத்தபடி கூற அத்தான் இது கோயில் என்ன பண்றீங்க என்பதற்குள் பாதி வார்த்தை அவன் இதழுக்குள் ஒளிந்து விட்டது.
அவள் இதழை ஜவ்வு மிட்டாயாக இழுத்து சுவைத்தான் விட்டால் கடித்து மென்று தின்று விடுவான் போல முதலில் அவனைத் தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றவள் அவன் இதழ்ச் செய்த மாயத்தில் அவனுள் மூழ்கி அவனுக்கு ஒத்துழைத்தாள்.
இருவருக்கும் தானு மாறாக ஹார்மோன்கள் ஏற உடலில் உஷ்ணம் கூட கையில் வைத்திருந்த ஐஸ்கிரீம் உருகி வழிந்தது.
அவளும் அவன் கையில் உருகி வழிந்தாள் அந்த ஐஸ்கிரீம் போலவே.
அவளை விட்டு பிரிந்தவன் அவள் மதிமுகத்தைத் தன் விரல்களால் அளந்து கொண்டே மித்து இரண்டு வாரம் முன்னாடி நீ வி ஆர் மாலுக்கு வந்தியா என்று கேட்டான் அவளுக்கு ஏதோ மாயத்திற்குக் கட்டுப்பட்டவள் போல மோன நிலையில் சஞ்சரித்துக் கொண்டே அத்தான் என்னாச்சு எதுக்குக் கேக்குறீங்க என்று கண்களைத் திறந்தவாறு கேட்டாள்.
சொல்லுடி கேள்வி கேட்காத பதில் சொல்லு என்றான் அவசரமாக.
ஆமா அத்தான் வந்தேன் இல்ல இல்ல எங்க வீட்டாளுங்க எல்லாரும் வந்தோம் நான் எங்க அம்மா அப்பா என்று நி நிறுத்தியவள் அவனைத் தயக்கமாக பார்க்கச் சொல்லு அப்புறம் என்று ஊக்கினான் ஒரு வித எதிர்பார்ப்போடு நந்தினி என்று அவள் சொல்லவும் அவன் உடல் இறுகி விரைப்பதை உணர்ந்தவள் இதுக்குத் தான் சொல்லாமல் தயங்கினேன் நீங்க தான் சொல்லு சொல்லுங்குறீங்க என்று அவன் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் சரி சொல்லு அப்புறம் என்கவும் நந்தினி அப்புறம் எங்க பெரியம்மா பெரியப்பா எல்லாரும் வந்துருந்தோம் என்று அவனைப் பார்க்க மேலே சொல்லு என்பது போல் கண்ணசைக்க அன்னைக்கு நீங்களும் அந்த மாலுக்கு வந்து இருந்தீங்க தானே அத்தான் நான் உங்களைப் பார்த்தேன் அங்க இருந்து புட் ஸ்ட்ரீட்ல ஒரு ஐஸ்கிரீம் ஷாப்ல நானும் ஒரு குட்டி பாப்பாவும் அங்க தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருந்தோம்.
நீங்க கூட அங்க தான் யாருக்கிட்டையோ போன் பேசிட்டு இருந்தீங்க சட்டுன்னு திரும்பி ஏய் னு என்னைப் பார்த்துட்டு கத்தவும் ஒரு வேலை என்னைத் திட்ட தான் கூப்பிடுறீங்களோனு நான் உங்ககிட்ட மாட்ட கூடாதுன்னு ஓடியே போயிட்டேன் என்று கூடுதலாக அனைத்தையும் அவனிடம் கூறினாள்.
அப்படி ஓடும் போது தான் என்னோட வாக்கெட்டும் காணாம போயிடுச்சு நானும் திரும்பி வந்து தேடி பார்த்தேன் கிடைக்கல அங்க உள்ளவங்க கிட்டையும் கேட்டுப் பார்த்தேன் யாருக்கும் தெரியலன்னு சொல்லிட்டாங்க என்று தன் வாக்கெட் தொலைந்த வேதனையில் புலம்பினாள்.
நான் எங்க உன்ன பார்த்தேன் பார்த்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது நான் தான் எல்லாக் குழப்பத்துக்கும் காரணமா என்று தனக்குள் யோசித்தான்.
தன் மனதுக்குப் பிடித்தவள் மித்ரா தான் அப்பொழுதும் அவள் தான் இப்பொழுதும் அவள் தான் இனிவரும் காலங்களிலும் அவள் மட்டும் தான் என்று காற்றில் பறந்தவன் அவளிடம் கவனம் செலுத்தினான்.
லாக்கெட் காணாம போயிருச்சா என்று எதுவுமே தெரியாதவன் போல கேட்டான்.
ஆமா அத்தான் அது என்னோட லக்கி லாக்கெட் தெரியுமா யாரு திருடிட்டுப் போனாங்கன்னு தெரியல என்று வருந்த அந்தத் திருடனே நான் தான் டி என்று உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.
அப்பொழுதே அவளிடம் நடந்த அனைத்தையும் கூறியிருந்தால் பின்னாளில் வரும் பிரச்சனை அனைத்தையும் தடுத்திருக்கலாமோ என்னவோ ஐ லவ் யூ மித்துக்குட்டி இதுக்கு மேல நீ இல்லனா நான் இருப்பேனா என்பது சந்தேகம் தான் என்னைக்கும் உன்னைப் பிரிய மாட்டேன் உனக்குச் சப்ரைஸ் கொடுக்கிறேன் பாரு அதுல அப்படியே நீ பிரமிச்சுப் போயிடனும் என்று மனதோடு அவளிடம் பேசியவன் வெளியில் அவளிடம் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.
சரி வா மித்துச் சாப்பிட போகலாம் என்று அவளை அழைத்துச் சென்றான் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் மித்ராவின் பெற்றோர் ஆதியிடம் வந்து மாப்பிள்ளை மறு வீட்டுக்குக் கண்டிப்பா வரணும் என்று அழைக்கக் கண்டிப்பாக வரோம் மாமா என்றவன் நீங்க எங்க கூடவே வீட்டுக்கு வாங்க மாமா காரில் போயிடலாம் என்று மித்ராவின் மனதை அறிந்தவன் போல கூறினான் அவளுக்கும் அதுதான் தோன்றியது தன் தாய் தந்தையை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அதேபோல ஆதியும் கூற அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லைத் தன் மனதில் நினைப்பதை அப்படியே நிறைவேற்றும் கணவன் யாருக்குத் தான் கிடைப்பான் எனக்குக் கிடைச்சிருக்கு என்று மனதில் கடவுளுக்கு உடனடியாக நன்றிச் சொல்லிக் கொண்டாள்.
அவர்கள் பதில் சொல்வதற்கு முன்பே ஊர்மிளா சும்மா இருக்காமல் ரெண்டு கார்த் தானே ஆதி இருக்கு எப்படி அவங்களும் வர முடியும் என்று கேட்டு வைக்க அவர்கள் முன்பு ஊர்மிளாவைக் கடிய முடியாமல் சுமதி சக்கரவர்த்தி தம்பதியினர்ச் சங்கடமாக பார்க்க இல்லப்பா நாங்க வரும்போது கார்ப் புக் பண்ணி தான் வந்தோம் அந்த டிரைவர்ப் பையனுக்கு வேலை இருக்காம். எங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான் எங்களை வீட்ல விட்டுட்டு வெளியே அவன் வேலையைப் போய் பார்க்கட்டும் நாங்க இன்னொரு நாள் வருகிறோம் நீங்க பத்திரமா போயிட்டுக் கால் பண்ணுங்க நாங்க வரோம் என்று அனைவரிடம் விடைப் பெற்றுக் கொண்டார்கள்.
சம்மந்திகிட்ட இப்படித்தான் பேசுறதா என்று தன் தங்கையின் செயலைத் தாங்க முடியாமல் சக்கரவர்த்தி கத்தினார்.
நீ இங்கே இருந்து ஏதாவது ஒரு குடைச்சல் கொடுத்துட்டே தான் இருப்பே நீ எங்க கூட ஊருக்குக் கிளம்பு இன்னிக்கு என்று நிரஞ்சன் தன் பங்கிற்குத் தாயிடம் சாடினான்.
நான் வரமாட்டேன் போடா என்கவும் அவன் அவர் முன்பே டிக்கெட் புக் செய்து விட்டு நீ வர அவ்வளவுதான் இல்லன்னா இப்போ போன் பண்ணுவேன் அப்பாவுக்கு என்று மிரட்டினான்.
சரி வந்து தொலைகிறேன் என்று கத்திவிட்டுக் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.
ஏன் நிரஞ்சா அம்மா அப்படித்தான் உனக்குத் தெரியுமே இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும் பா என்று சுமதி கூற இல்ல அத்தை அவங்க இங்க இருந்தா சரிப்பட்டு வராது அவங்களுக்கு மித்ராவைப் பிடிக்கல அவங்க செய்ற ஒவ்வொரு செயல்களிலும் பேச்சிலையும் அது நல்லாவே தெரியுது கொஞ்ச நாள் கழிச்சு நான் கூப்பிட்டு வரேன் கிளம்புங்க வீட்டுக்குப் போகலாம் என்று அனைவரிடமும் கூறியவன் நிருவிடம் நீ அந்த வண்டியில வா நான் மாமா கூட கொஞ்சம் பேசணும் என்று சக்கரவர்த்தி காரில் ஏறிக்கொண்டான்.
பின்பு முன்னிருக்கையில் ஆசியும் நிருவும் அமர்ந்திருக்கப் பின்னால் ஆதியும் மித்ராவும் அமர்ந்திருந்தனர்.
ஆசீ வண்டியை ஓட்டிக்கொண்டு நிறுவைத் திரும்பி பார்க்க அவளும் முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
உடனே ஆசீ இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி என்று பாட்டு போட இப்ப பாட்டை நிறுத்த போறியா இல்லையா என்று பல்லுக்கிடையில் வார்த்தைகளைக் கடித்து துப்பினாள் பின்னால் கேட்காதவாரு இந்த நிரஞ்சன் எதுக்குத் தான் இப்படிப் பண்றான்னு தெரியல என்று தன் தமையனைத் திட்டித்தீர்த்தாள்
ஆசியின் மேல் உள்ள கோபத்தில்.
ஆசீ மெதுவாக அவள் கையைத் தொட சட்டென்று இழுத்துக் கொண்டவள் கத்த போக கையை இழுத்துக் கொண்டான்.
என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே உன்னைச் சேராமல் உள்ள வாழாதே உன்னை அனைச்சாலும் நினைச்சாலும் சுகம் தானம்மா என்ற வரிகள் கேட்கப் பின்னாடி இருந்த ஆதி மித்ராவைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
ஐயோ அத்தான் என்ன இது நிருவும் ஆசீயும் இருக்காங்க என்ன பண்றீங்க நகருங்க என்று அவனிடம் இருந்து நகர அவள் தோல் மேல் வைத்திருந்த கையை அவள் இடைக்கு இடம்பெயர அவளுக்குப் புதுவிதமான இம்சைச் செய்தான்.
அத்தான் என்ன பண்றீங்க என்று நெளிந்து கொண்டே அவனை அதட்ட அப்ப தள்ளி போகாத இல்லன்னா இப்படித் தான் பண்ணுவேன் என்று ஜாலி மூடில் ஜல்சா பண்ணிக் கொண்டிருந்தான்.
இடையில் ஒரு காபி ஷாப்பில் வண்டியை நிறுத்த அவள் இறங்காமல் இருப்பதைக் கண்ட ஆசீ பாப்பா இறங்கிப் போய் காபி குடிச்சிட்டு வா என்கவும் அவள் எதுவும் பதில் பேசாமல் இருந்தாள்.
அதுவரைப் பொறுமை கடைப்பிடித்திருந்தவன் வெகுண்டெழுந்தான்.
என்னடி நானும் காலையிலிருந்து பாத்துகிட்டு இருக்கேன் முகத்தைத் திருப்புற பேச மாட்டேங்குற என்ன நெனச்சிட்டு இருக்க என்று பொறுமை இழந்து கத்த ஆரம்பித்து விட்டான்.
தானும் இவ்வளவு நாள் அதைத்தான் இவளுக்கும் செய்து கொண்டிருந்தோம் என்று உணராமல் ஒருநாளுக்கே இவனால் தாங்க முடியவில்லை அப்போ நிருவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வசதியாக மறந்து போனானோ .
மோகமுள் தீண்டும்…
0 Comments