என் விடியல் எப்போது?
சிறுக்கதை எழுதியது சஹானா லக்ஷ்மண்
"ஏய், சீக்கரம் சோத்த கொண்டா.. நான் சீக்கிரம் வெளியே கிளம்பனும்.. இன்னும் எவ்வளவு நேரம்?. நல்லா ஊட்டுலையே தின்னுட்டு தின்னுட்டு தூங்குற.. சீக்கிரம் எழுந்து சோத்தை ஆக்க முடியாதா?" என்று காலையிலேயே தன் மனைவியைத் திட்டினான் மணி.
சாப்பாடை எடுத்து வந்து தரையில் வைத்தாள் மாதவி.
தன் கணவனுக்கு உணவு பரிமாறியப் படியே "என்னென்னு தெரியலைங்க, தலை பாரமாவே இருக்கு, மயக்கம் வர மாதிரி இருக்கு…" என்று கூறினாள்.
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? ஆஸ்பத்திரிக்கு வரியா போய்ட்டு வருவோம்.." என்றான் விட்டேத்தியாக.
"சரிங்க, போகலாம்"
தன் கணவன் தன் மேல் அக்கறையுடன் கூறியதும், சந்தோஷத்துடன் சரியென்று கூறினாள்.
"சரி, ரெடி ஆகியிரு. நான் சாயுங்காலம் வந்து கூட்டிட்டுப் போறேன்" என்றதும், "சரி" என்று கூறிவிட்டு அவனுக்குப் பரிமாறினாள்.
அவன் சாப்பிட்டதும் கிளம்பி விட்டான்.
அவள் சாப்பிட்டாளா? என்று ஒரு வார்த்தைக் கூடக் கேட்கவில்லை.
மாதவியும் அதைத்தான் எதிர்ப்பார்த்தாள் போல.
அவன் சென்றதும் அவளது முகம் கூம்பிப் போனது.
வீட்டில் தன் மனைவி மட்டும் தானே இருக்கிறாள், யார் அவளை கவனிக்க இருக்கிறார்கள்? தன்னை நம்பி வந்தவளைத் தான்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் அவன் பாட்டிற்கு சென்று விட்டான்.
அவனைப் பொறுத்த வரையில், மனைவி என்பவள், அவனுக்கு வாய்த்த அடிமை. அப்படித்தான் அவனது எண்ணமும் இருந்தது.
மணிக்கும் மாதவிக்கும் திருமணமாகி மூன்று மாதங்களே ஆகியிருந்தது.
மணி 28 வயது இளைஞன். வேலை வெட்டி இல்லாமல் ஊதாரியாக திரிந்தவனுக்கு, அவன் பெற்றோர் பெண் பார்க்க, வேலை செய்யாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை.
மணியின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் தான். அவனுக்குக் கூடப் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள்.
இவன் தான் கடைசி மகன். அவனது பெற்றோர் மற்ற நால்வருக்கும் கல்யாணம் செய்து வைத்து, அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்து விட்டனர்.
அதே போல மணிக்கும் கல்யாணம் செய்து வைத்து விட்டால், தங்கள் வேலை முடிந்தது என்று நினைத்தார்கள் அவனது பெற்றோர்.
ஆனால் மணியோ, எந்த கவலையும் இல்லாமல் தன் நண்பர்களுடன் ஊரைச் சுற்றிக் கொண்டு தண்ணி தம்மு என்று அடித்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தான்.
அப்பொழுதுதான் பக்கத்து ஊரில் ஒரு பெண் இருப்பதாக இவனின் பெற்றோருக்கு ஒரு தரகர் கூறினார்.
ஏழ்மையான குடும்பம் தான். பொண்ணு பேரு மாதவி. வயசு 17 ஆகுது.
நகை ஒரு அஞ்சுபவுன் போடுவாங்க என்றதும், மகனுக்கு பெண் கிடைக்கவில்லை என்று இருந்தவர்கள் உடனே மாதவியின் பெற்றோரிடம் பேசி முடித்து, மாதவிக்கும் மணிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மாதவி பயந்த சுபாவம். ஆனால் பருவ மங்கைகளுக்கே உரிய கல்யாண கனவுகள் அனைத்தும் அவளுக்கும் இருந்தது.
ஆனால் கல்யாணம் முடிந்து முதல் இரவில், தன்னிடம் ஏதும் பேசாது தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள தன் மேல் விழுந்து, தனக்கு வலிக்கிறது என்று சொல்லியும் அதனை கண்டுக் கொள்ளாமல் வேகமாக ஆண்டக் கணவனின் மேல் அதிருப்தி ஏற்பட்டது.
ஆனால் அவள் மனதில் என்றாவது ஒரு நாள் தன்னிடம் சிரித்துப் பேசி, தன் ஆசைகளைக் கேட்டு, அவன் ஆசைகள், எண்ணங்கள் அனைத்தையும் தன்னிடம் பகிர்ந்துக் கொள்ள மாட்டானா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.
ஆனால் மணி கல்யாணம் ஆனதில் இருந்து, யாரும் எதும் என்னை இனி கேட்க முடியாது என்ற தயிரியத்தில், தன் நண்பர்களுடன் சம்பாதிக்கிற பணம் அனைத்தையும் தண்ணீர் அடித்து, சீட்டுக்கட்டு விளையாடி பணத்தை செலவழிப்பான்.
வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுவான். பணம் இல்லை என்றால் கொஞ்ச பணம் கையில் இருந்தால் ஆட்டோ ஓட்டாமல் நண்பர்களுடன் தண்ணீ அடிக்க போய்டுவேன்.
தனிக் குடித்தனம் வைத்ததில் இருந்து, நேரங்கெட்ட நேரத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவான்.
ஒருநாள் மாதவி ஏன் இப்படி என்று கேட்டதற்கு, பளார் என்று அறைந்து, "எதுத்து எல்லாம் பேசக் கூடாது. உன் வேலை மூணு வேளையும் சோறு ஆக்கி வைக்கிறது மட்டும் தான். புரியுதா? இந்த கேள்வி எல்லாம் என்னை கேட்கக்கூடாது. புரியுதா?" என்று போதையில் மட்டையாகி விட்டான்.
அவனுக்கு பயந்துக் கொண்டு எதுவும் கேட்க மாட்டாள். அவன் நண்பர்கள் வேறு அவனிடம், "டேய் மச்சான், இப்போவே உன் பொண்டாட்டிய அடக்கி வச்சிரு டா. இல்லைன்னா, நம்மை அவர்கள் அடிமை ஆக்கி விடுவார்கள். அதற்கு முன்பு நாம் அவர்களை அடக்கி வைக்க வேண்டும்" என்று கூறினான்.
அன்றிலிருந்து அவளை அடிமை போலவே தான் நடத்தினான். அவனுக்கு நேரத்திற்கு சாப்பாடு இருக்கனும். கொஞ்சம தாமதம் ஆனாலும் திட்டுவான். "வீட்டில் தானே இருக்க, இந்த வேலை கூட செய்ய முடியலையா உன்னால்?" என்று திட்டுவான்.
ஒரு நாள் அவனிடம் மளிகை சாமான் வாங்க பணம் இல்லை என்று கேட்டதும், திட்டிக் கொண்டே குடுத்தான். அதைக் கேட்டதும் இவளுக்கு அவமானமாக இருந்தது.
அதன்பிறகு, அவனுக்கு தெரியாமல் காலையில் அவன் வேலைக்கு சென்ற பிறகு, வயலிற்கு வேலைக்கு போக ஆரம்பித்தாள். அந்த பணத்தை சேமித்து வைத்து இருந்தாள்.
அவள் வீட்டிலும் கண்டுக் கொள்ளவில்லை. தன் மாமனார் மாமியாரும் கண்டுக் கொள்ளவில்லை. தண்ணி தெளித்துவிட்டு விட்டனர் போல.
அவளுக்கு ஒரே ஆறுதல் பக்கத்து வீட்டு செல்வி தான். அவர் தன் மகள் போல இவளை பார்த்துக் கொள்வார்.
அவருக்கு ஒரே மகள்தான். அவளையும் கட்டிக் கொடுத்து, செல்வியும் அவர் கணவனும் தான் இருக்கின்றனர்.
இன்று, "ஹாஸ்பிட்டலிற்கு கிளம்பி இரு" என்றவன் மாலை நேரம் ஆகியும் வரவில்லை. இவள் ஆசை ஆசையாகக் கிளம்பி வாசற்படியில் அமர்ந்திருக்கவும், செல்வி பார்த்து விட்டு, "என்ன மாதவி, ஏன் வெளியே உக்காந்திருக்க?" என்று கேட்டார்.
"இல்லம்மா, எனக்கு மயக்கமா, தலையெல்லாம் பாரமா இருக்கு. அதான் காலையில் அவர்கிட்ட சொன்னேன். வந்து ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன் என்று சொன்னார். அதான் அவருக்காக காத்துட்டு இருக்கேன். இவ்ளோ நேரமாகியும் இன்னும் வரலை" என்று முகம் வாடக் கூறினாள்.
"தலை குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு மாதவி?" என்று கேட்டதும், "ஒன்றரை மாதம் இருக்கும் மா. ஒரு வேலை அதுவா இருக்குமா ம்மா?" என்று முகம் பிரகாசமாக கேட்டாள்.
"சரி, மணி வர மாதிரி தெரியலை. வா, நாம போய் செக் பண்ணிட்டு வந்துருவோம்" என்றதும், இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பி சென்றனர்.
இருவரும் குழந்தை தான் என்று உறுதி படுத்திக் கொண்டு வர, அப்பொழுதும் மணி வந்திருக்கவில்லை.
உள்ளே சென்றவள், எப்படி இந்த விஷயத்தைத் தன் கணவனிடத்தில் கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தவள், வெகு நேரமாக அவன் வருவான் என்று வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அசதியில் அப்படியே தூங்கியிருந்தாள்.
பன்னிரெண்டு மணிக்கு, முழுக் குடிப் போதையில் வந்தவன், அவள் தூங்குகிறாள் என்று கூடப் பாராமல், அவள் மேல் சரிந்து தன்னை அவளுக்குள் புகுத்தினான்.
முதலில் தூக்கத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல், பின்பு தன் கணவன் என்று அறிந்து, அவன் வேகமாக இயங்கவும், "ஐயோ!" என்று பதறியவள் அவனை தன்னிடம் இருந்து தள்ளினாள்.
அவன் அசையவே இல்லை. தன் வேலையில் குறியாக இருந்தான்.
அவன் வேகத்தை இன்னும் அதிகரிக்கவும், மூச்சு வாங்கிக் கொண்டே, "என்னங்க... மெதுவாங்க... வயித்துல பாப்பா இருக்கு" என்றதும், ஒரு நொடி தன் அசைவை நிறுத்தியவன், பின் மெதுவாக அவளைக் கையாண்டான்.
பின் அவள் பக்கத்தில் வேக வேகமாக மூச்சு விட்டு சரிந்து படுத்தவன், சிறிது நேரம் கழித்து ஒருக்களித்து படுத்து, அவள் புடவைக் கொசுவத்தைத் தளர்த்தியவன், அவள் அடிவயிற்றை வருடிக் கொடுத்தான்.
இது போல ஒரு செயலை அவனிடம் அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
"தன் கணவன் நல்லவன்தான். சேர்க்கைதான் சரியில்லை. இன்னும் பொறுப்பு வரவில்லை. அதனால்தான் இப்படி இருக்கார். அவர் பிள்ளை என்றதும் உள்ளம் துடிக்குதோ.. பிள்ளையைச் சாக்காய் வைத்து, நாளைக்கு இவர்கிட்ட பேசனும்" என்று நினைத்தவள், அதன் பிறகு கலைப்பில் உறங்கி விட்டாள்.
காலையில் எழுந்ததும், "என்னங்க, நமக்கு பாப்பா வரப் போகுது. இனிமேல் நாம கொஞ்சம் பொறுப்பா இருக்கனுமுங்க" என்று பொதுவாக தான் கூறினாள்.
உடனே அவள் சொன்னது அவன் தன்மானத்தை சீண்டுவது போல் இருக்க, கோபம் வர பார்த்தது.
கர்பிணி என்று தன் கையை மடக்கி, தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவளை முறைத்து விட்டு வெளியே சென்றுவிட்டான்.
அவள் இப்பொழுது அவன் குழந்தையைச் சுமக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் அவளுக்கு அறை கிடைத்திருக்கும் கண்டிப்பாக.
அன்று இரவும் குடித்துவிட்டு தான் வந்திருந்தான். அதுவே தொடர்ச்சி ஆனது.
அவளுக்கு பிரசவ நாளும் நெருங்கியது. அன்று மதியம், வலி அவளுக்கு விட்டு விட்டு வர, தன் கணவனை கைப்பேசியில் அழைத்தாள்.
அவன் எடுக்கவில்லை என்றதும், பக்கத்து வீட்டு செல்வி அம்மாவிற்கு அழைத்தாள்.
அவர் வந்து பார்த்து, தன் கணவரிடம் கூறி, ஒரு ஆட்டோ பிடித்து மாதவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தன் கணவனை எதிர்பார்த்து ஓய்ந்து போனாள்.
ஆனால் அவன் வரவே இல்லை. வீட்டுக்கு இரவு வந்தவன், வீடு பூட்டியிருக்க, தன் மனைவிக்கு போன் போட்டான்.
"வீட்டுல இருக்காம எங்கே போனா இவ? வரட்டும்" என்று நினைத்தவன், அவன் அழைப்பு எடுக்கப் படவும், "ஏய் மாதவி, எங்கே டி போன?" என்று பேசியவனின் குரலை அந்த பக்கத்தில் இருந்தவர் தடுத்தார்.
"நிறுத்துப்பா, கொஞ்சம். மாதவிய xxx இந்த ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கோம். அவளுக்கு விட்டு விட்டு வலி வருது. சீக்கிரம் வா. இன்னும் குழந்தை பிறக்கலை. வா" என்றதும், உடனடியாக அவர் சொன்ன மருத்துவமனைக்கு கிளம்பினான்.
அங்கு சென்று பார்த்ததும், முகமெல்லாம் சிவந்து வலியில் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தாள், அவன் மனைவி மாதவி.
அவளைப் பார்த்ததும், இவனுக்கு உள்ளுக்குள் எதுவோ பிசைந்தது.
அவள் அருகில் சென்றவன், அவள் தலையில் கை வைத்து வருடி விட்டான்.
அதுவரையில் வலியில் கண் மூடியிருந்தவள், அவன் ஸ்பரிசத்தில் கண்விழித்தவள், அவனை பார்த்ததும் அழுதுக் கொண்டே, "மாமா, வலிக்குது மாமா. ரொம்ப…" என்று கூறினாள்.
"ஒன்னும் இல்லைடா, இப்போ சரியா போயிடும்" என்று அவளை சமாதானப் படுத்தினான்.
அவனுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது, தனக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியும் என்று.
சிறிது நேரத்தில், வலி அடுத்தடுத்து வரவும், அவளை பிரசவ அறைக்குக் கூட்டிச் சென்றனர். இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ தன் உயிரே விட்டுப் போவது போல் வலித்தது.
அவன் அதை ஆராயவில்லை. சிறிது நேரத்தில், ஒரு செவிலியர் வந்து, "தம்பி, உள்ளே வாப்பா. டாக்டர் கூப்பிடுறாங்க" என்றதும், "என்னவோ ஏதோ" என்று பதறிப்போய் அவர் பின்னால் சென்றான்.
அவன் வாழ்வில் இதுவரை இவ்வளவு பயந்ததே இல்லை. தன் மனைவிக்காக இவ்வளவு பதறுவான் என்று அவனுக்கே அப்பொழுதுதான் தெரிந்தது.
உள்ளே சென்றதும், அவனை கண்டதும் டாக்டர் அவனிடம், "மிஸ்டர், உங்க மனைவியைக் கொஞ்சம் ஒத்துழைக்க சொல்லுங்க. இல்லைன்னா, தாய் குழந்தை இரண்டு பேருக்குமே ஆபத்து" என்றதுமே பதறி மாதவியிடம் சென்றான்.
"மாது, இங்கே பாரேன். கொஞ்சம் வலி பொறுத்துக்கோடா. பாப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வெளியே வந்துரும்" என்று அவள் தலையை வருடிக் கொண்டே கூறினான்.
"மாமா, ரொம்ப வலிக்குது மாமா. என்னால தாங்க முடியலை" என்று அழுதுக் கொண்டே கூறினாள்.
அவனுக்கும் அழுகை வர, அவன் அழுவதைப் பார்த்து, "ஒன்னும் இல்லை மாமா" என்று அவன் அழுவதைப் பார்க்க முடியாமல், அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, மூச்சை இழுத்து தன்னால் முடிந்த வரை இயன்றாள்.
அவள் கை அழுத்தத்திலே அவனுக்கு தெரிந்தது அவளின் வலி.
அவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது, "ச்சே, சின்னபிள்ளையை இப்படி கஷ்டப் படுத்துறோமே" என்று வருந்தினான்.
இதுவரை அவள் தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. தான் அவளை நாடும் போதெல்லாம் தன்னை அப்படியே ஏற்றுக் கொண்டாள். அந்த கணம் ஒரு முடிவு எடுத்தான். இனி அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று.
வலியில் கத்தி, தன் தாய் தந்தையைப் பதற வைத்து, வெளியே வந்தாள் அவர்களின் புதல்வி.
குழந்தை வெளிவந்ததும், மாதவி அசதியில் மயக்கமாக அதை பார்த்து பதறியவன், "டாக்டர், என் மனைவி மயக்கமாகிட்ட. கொஞ்சம் வந்து பாருங்க" என்றதும், "அது ஒன்னுமில்லை மிஸ்டர். அசதியால தான். நோ ப்ராபிளம்" என்று கூறினார்.
அவள் நெற்றியில் முதல் முதலாக முத்தமிடுகிறான். அன்பாக, ஆசையாக.
குழந்தையை சுத்தப்படுத்தி அவன் கையில், "பெண் குழந்தை" என்று கொடுத்தப் பொழுது, குழந்தையைப் பார்த்தவன் பார்த்தப்படியே இருந்தான். தன் மனைவியைப் போலவே அத்தனை அழகாக இருந்தாள்.
பின் செல்வி வந்து பார்த்து விட்டு, "பெண் குழந்தை பிறந்திருக்கு. இவ்வளவு நாள் எப்படி இருந்தியோ, இனி உறுப்புடியா ஒரு வேலையப் பாரு" என்று கூறிவிட்டு, கொஞ்சம் பணத்தை அவன் கையில் கொடுத்தார்.
அவரைப் புரியாமல் பார்த்தவன், "இது எதுக்கு?" என்றதும், "இது உன் பொண்டாட்டி பணம் தான். ஹாஸ்பிட்டல் செலவு போக மீதிப் பணம்" என்று கொடுத்தார்.
"நாங்க போயிட்டுக் காலையில் வரோம். கூடவே இருந்து பார்த்துக்கோ. எங்கேயும் போயிடாத…" என்று கூறிவிட்டு கிளம்பினார்.
மூன்று நாட்கள் இருந்து விட்டு வீட்டிற்கு வந்தனர்.
அந்த மூன்று நாட்களும் மாதவியை விட்டு மணி நகரவேயில்லை.
செல்வி தான் சத்தம் போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு இருந்த வரைக்கும் சாப்பாடு கூட செல்வி தான் எடுத்து வந்து கொடுத்தார்.
இருவருடைய பெற்றோரும் கடமைக்கு வந்து பார்த்துவிட்டு கிளம்பி விட்டனர். அப்பொழுது தான் மணி உணர்ந்தான். இனி தனக்கு தன் மனைவி, மகள் மட்டுமே. அவர்களுக்கும் நான் மட்டுமே இருக்கிறேன்.
அவர்களைப் பார்த்துக் கொள்ள தான் மட்டும்தான் இருக்கிறோம் என்று உணர்ந்தான்.
மாதவியை ஒரு வேலை செய்யவிடவில்லை. அவளிடம் கேட்டு சமையல் கூட அவனே செய்தான். அவளை சாப்பிட வைத்துவிட்டு, இவன் ஆட்டோ ஓட்ட செல்வான்.
ஒரு நாள் அவளிடம், "இந்த பணம் ஏது மாதவி?" என்று கேட்டான். அடிப்பானோ என்று பயந்தவள், பயந்துகொண்டே அவனிடம் தான் வேலைக்கு சென்றதை சொல்ல, அவன் ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு மாதம் கடந்திருந்தது….
தினமும் சம்பாதிக்கும் பணத்தை தன் மனைவியிடம் கொடுத்தான். அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள், "நீங்க குடிக்கலையா?" என்று கேட்டதும், "நான் இனி குடிக்க மாட்டேன் மாது. உனக்கு தான் நான் குடிச்சா பிடிக்கலையே, அதான் நிறுத்திட்டேன்" என்றதும், தனக்காக என்றதும், சந்தோஷத்தில் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
"மாது" என்று அழைத்தான்.
"ம்ம்."
"பாப்பா பிறக்கும் போது என்னை கூப்பிட்டல்ல அப்படி கூப்பிடு டி."
"ம்ம்." எப்படி என்று யோசித்தாள்.
"மாமா" என்று கூப்பிட்டது நியாபகம் வர, அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
"மாது, கூப்பிடு டி" என்றான்.
"மாமா" என்று மயக்கமாக கூறினாள்.
"இன்னும் சத்தமா?" என்று அவளை தன்னுடன் இறுக்கினான்.
"மாமா…. மாமா.." என்று அவன் காதருகில் கிசுக்கிசுப்பாக அழைத்தாள்.
அவள் குரலில் மயங்கியவன், அவளிடம் இழைந்துக் கொண்டே, "மாது, இப்போ பண்ண முடியுமா?" என்று கேட்டதும், "எது மாமா?" என்று புரியாமல் திருப்பி அவனிடமே கேட்டாள்.
"அதுதான் டி" என்று அவளைப் பிடித்து இழுத்தான்.
"பண்ணலாம் மாமா" என்று வெட்கத்துடன் கூறி, அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவள் அனுமதி தந்ததும், இதுவரை அவன் செய்யாததை செய்தான்.
தன் இதழைக் கொண்டு அவள் உடல் முழுவதும் வருடினான். உணர்ச்சி மிக கடித்தான். மாதவி சுகத்தில் அனத்தித் துடித்தாள்.
அவள் "மாமா... மாமா…" என்றும், அவன் "மாது…. மாது…" என்றும், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.
கண், காது, மூக்கு என முத்தமிட்டவன், அவள் இதழை முற்றுகையிட்டான்.
"என்னை மன்னிச்சிடு டி மாது. இவ்வளவு நாள் உன்னை கஷ்டப் படுத்தினதுக்கு. இனி நீ வேலைக்கு போக வேண்டாம்டி. நீ என்னோட மகாராணி டி. வீட்டுல இரு. நான் உனக்கு சம்பாரிச்சுப் போடுறேன் … இனி உன்னை நல்லாப் பார்த்துக்கிறேன். நீ வலியில் துடிச்சப்போ, என் உயிரே என்கிட்ட இல்லை டி. என்னை மன்னிப்பியா?" என்றதும், "ஐயோ மாமா, என்ன? என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க? பழசை எல்லாம் மறந்துடுங்க" என்று அவனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உறங்கிப் போயினர்.
காலையில், மாதவிக்கு விழிப்பு வர, அவளால் எழ தான் முடியவில்லை. அவள் கணவன் தூக்கத்தில் அவளை இறுக்கி அணைத்து, அவள் நெஞ்சில் முகம் புதைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான்.
பொழுது விடிந்து விட்டதை உணர்ந்து, அவனை விலக்கி எழ முயல, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
சிணுங்கிக் கொண்டே, "மாமா, விடிஞ்சிடுச்சு" என்றதும், "வா, தூங்கு. பரவா இல்லை" என்று அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டான்.
மாதவிக்கு விடிந்து விட்டது ...
இனி ஒவ்வொரு நாளும் அவள் பொழுது அழகாக விடியும்..
வணக்கம் மக்களே, படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைப் பதிவிடுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் சஹானா லக்ஷ்மண்.
நன்றி.
0 Comments