Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 9



 காதல்-9:


கவிக்குட்டி கொஞ்சம் சூடா பால் குடிக்குறியா என்று கேட்டவனிடம் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அவள் முகத்தை திருப்பவும் மாமா உன் நல்லதுக்கு தானே சொல்லுவேன் பிரௌனி..


ஏன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்குற.. யாரையும் நம்பாதே.. இங்கு கூடவே இருந்து குழி பறிக்கும் குள்ள நரிகள் தான் அதிகம்.. அதனால் தான் உன்னை ஜாக்கிரதையாக இருக்க சொன்னேன்.. என்று தன் செயலுக்கு விளக்கம் கொடுத்தான்..


மாமா அவங்க எனக்கு வாமிட் வர மாதிரி இருக்குன்னு சொன்னதும் ஜூஸ் எல்லாம் வாங்கி கொடுத்தாங்க.. நீங்க சொல்றது ஒத்துக்குறேன்.. ஆனால் எல்லாரும் அப்படி இல்லையே என்று கூற நானும் எல்லாரும் அப்படி இருக்காங்கன்னு சொல்லலை டா..


சரி மாமா இனிமே பார்த்து இருந்துக்குறேன் என்று கூற ஹிம்ம் மை ஸ்வீட் பிரௌனி.. சூடா இந்த பாலை குடி.. கொஞ்சம் நல்லா இருக்கும் என்கவும் வேண்டாம் மாமா எனக்கு வயிரெல்லாம் ஏதோ பிரட்டுற மாதிரி இருக்கு..


கால் வலிக்குது.. இடுப்பு வலிக்குது.. என்ன மாமா வயசுக்கு வந்தா இப்படி எல்லமா வலிக்கும்.. இல்லை எனக்கு மட்டும் தான் இப்படியா என்று கேட்க வலியில் சுருங்கிய அவள் முகத்தை கண்டவன் ரொம்ப வலிக்குதா டா..


சாப்பிடவும் இல்ல.. இந்த பாலாவது கொஞ்சம் குடி டா.. என் செல்லம் தானே நீ குடி கொஞ்சமா என்று பால் டம்ளரை எடுத்து அவள் உதட்டில் வைக்க கொஞ்சம் குடிக்க இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று அவளை முழுதாக குடிக்க வைத்த பின்னரே ஓய்ந்தான்…


மாமா நான் தான் பால் குடிச்சுட்டேனே.. நீங்க சாப்பிடுங்க என்கவும் தட்டில் சாப்பாடை எடுத்து கொண்டு அவளுடன் தங்கள் அறைக்கு வந்தான்.. 


அவளை வசதியாக படுக்க வைத்தவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பாடை பிசைந்தவன் பிரௌனி ஒரு வாய் சாப்பிடு டா.. உன்னால முடியலனா சாப்பிட வேண்டாம் என்று அவளை எழுப்பி ஊட்ட ஒரு வாய் வாங்கியவள் எனக்கு போதும் மாமா..


நீங்க சாப்பிடுங்க அம்மாக்கு போன் போடவே இல்லை.. நீங்க தான் அதுக்குள்ள உங்க சொற்பொழிவை ஆரம்பிச்சுடீங்களே என்று கிண்டலாக கூற உன்னை என்று அவள் தலையில் தட்டியவன் போனை பேசு டி என்று கூறினான்..


அம்மா என்ன பண்ற.. எப்படி ம்மா இருக்க..


நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீ எப்படிம்மா இருக்க.. ஒன்னும் அங்க பிரெச்சனை இல்லையே.. மாப்பிள்ளை தம்பி எப்படி இருக்காரு என்று கேட்க


நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் ம்மா.. குணா எங்க ம்மா..?


அவன் ஏதோ ஸ்பெஷல் கிளாசாம் அதுக்கு போயிருக்கான்..


ம்மா.. என்று திணறியவளுக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை அவள் பிரசாத்தை பார்க்க அவள் பேச பேச அப்படியே ஊட்டிக் கொண்டிருந்தவன் ஒரு வாய் கொடுத்து சொல்லு டி என்றான்..


வாயில் கொடுத்துட்டு எப்படி சொல்ல முடியும் இந்த மாமாக்கு அறிவே இல்லை என்று நினைத்தவள் ம்மா நான் வயசுக்கு வந்துட்டேனாம்..


மாமா தான் சொன்னாங்க என்று அவன் மானத்தை வாங்கினாள்..


அடியேய் இதை அவங்க இப்போ கேட்டங்களா டி.. இவனுக்கு ஒரே வெட்கமாக போய் விட்டது..


(டேய் வாத்தி வெட்கப்பட வேண்டியவ எப்படி வயசுக்கு வந்துட்டேன்னு அசால்டா சொல்றா.. அவள் செய்றதேல்லாம் நீ செஞ்சுட்டு இருக்க.. என்ன டா நடக்குது இங்க..)


அவள் வயதுக்கு வந்து விட்டேன் என்று கூறியதும் அதை அவர் கிறகிக்கவே நேரம் எடுத்துக் கொண்டவர் ஏற்பட்ட மகிழ்ச்சியில் என்ன பெத்த ஆத்தா இப்போ தான் டி என் மனசு நிம்மதியா இருக்கு..


எல்லா சிறுக்கியும் என் பிள்ளையை என்னென்னலாம் சொல்லிருக்காளுங்க வரட்டும் அவளுங்க மூஞ்சில காரி துப்புறேன்..


ஆத்தா கயலு பத்திரமா இரு.. நான் நாளைக்கு காலையிலே வாரேன்.. பாத்து இருத்தா என்றவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி..


தன் வீட்டில் இருந்து வெளியே வந்தவர் ஏய் வள்ளி புள்ளை இங்க ஓடியா என்கவும் அவள் வரவே விஷயத்தை கூற போடு இப்போ பாரு அத்தை.. 


அடியே சிறுக்கிகளா கயல் வயசுக்கு வந்துட்டா எவளாம் அவ பெண்ணே இல்லை.. அவளுக்குப் பிள்ளை பிறக்காது.. அது இதுன்னு அந்த பிள்ளையை எத்தனை முறை என்னன்ன சொல்லிருப்பீங்க..


எல்லாரும் கேட்டுக்கோங்க டி.. எங்க கயல் வயசுக்கு வந்துட்டா.. இன்னையிலுருந்து அஞ்சாம் நாளு தண்ணி ஊத்துறோம்.. சிணுங்குன சிறுக்கிக எல்லாம் வந்துடுங்க என்று கத்தியவள் எங்க அத்தை உன் புருஷனை காணும் என்று கேட்டாள்..


அவரு எங்கயோ வெளிய போயிருக்காரு டி என்கவும் வரட்டும் இன்னைக்கு அந்தாளுக்கு இருக்கு என்றவள் தன் வீட்டிற்கு சென்றாள்..


 இங்கு அவளுக்கு சாப்பிட கொடுத்தவன் படுத்து தூங்கு டா.. எனக்கு ஒரு கிளாஸ் இருக்கு முடிச்சுட்டு வரேன் என்கவும் மாமா தூங்குற நேரத்துல ஏன் மாமா அந்த பிள்ளைகளை டார்ச்சர் பண்றீங்க..


தூங்குற நேரத்துல யாராவது பாடம் நடுத்துவாங்களா என்று கேட்க எனக்கு இந்த டைம் தான்டா பாடம் எடுக்க அலாட் பண்ணிருக்காங்க என்று கூறவும் எனக்கு நீங்க இல்லாம எனக்கு தூக்கம் வராது மாமா..


நீங்க லீவ் போட முடியாதா என்று கேட்கவும் இல்ல டா முடியாது.. கொஞ்ச நேரம் தான் நீ தூங்க ட்ரெய் பண்ணு.. நான் உடனே வந்துடுறேன் என்று கூறவும் ஹிம்ம் சரி மாமா என்று படுத்துக் கொண்டாள்..


இவன் பாடம் எடுக்கும் அறைக்கு போன பத்து நிமிடத்தில் உருண்டு உருண்டு படுத்தவளுக்கு தூக்கம் தான் வரவில்லை.. இந்த வயிறு வேற அப்பப்போ வலிக்குது என்று இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்தவள் மெதுவாக பூனை நடை நடந்து அவன் இருந்த அறை கதவை திறந்தாள்..


பாடம் எடுத்துக் கொண்டிருந்தவன் அவள் வரவை கண்டதும் கண்களால் அங்கிருந்த சோபாவை காட்ட அதில் போய் பொத்தென்று படுத்துக் கொண்டாள்..


அவள் வலியில் இடுப்பை பிடித்துக் கொண்டிருந்ததை பாடம் எடுத்துக் கொண்டே ஓரக்கண்ணால் பார்த்தவன் அரைமணி நேரம் சென்றதும் பிள்ளைகளிடம் பிரேக் என்று கூறியவன் அவளை பார்த்துக் கொண்டே தங்கள் அறைக்கு சென்றான்..


அவன் வரும் பொழுது கையில் தலையணைகளை கொண்டு வந்தவன் அவளுக்கு படுக்க வாகாக வைத்தவன் பிரௌனி ரொம்ப வலிக்குதா என்று அவள் இடுப்பை அழுத்தி கொடுத்தவன் குப்புற படுத்து பாரு டா.. கொஞ்சம் வலி குறையும்ன்னு நினைக்கிறேன் என்று கூற


மாமா நீங்க இவ்ளோ நல்லவங்கன்னு எனக்கு தெரியாம போய்டுச்சே என்று இழுத்து கூறி சிரிக்க அடிங்.. ஒழுங்கா படுத்து தூங்கு டி கிண்டல் பண்றியா என்று அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட ஐயோ மாமா விடுங்க நான் தூங்குறேன் என்றவள் சிரித்து கொண்டே திரும்பி படுக்க இங்க வசதியா இருக்காது டா..


 இன்னும் ஒரு அரை மணி நேரம் தான் டா நான் வந்துருவேன்.. நீ அங்க போய் கட்டில்ல படு என்கவும் நீங்க முடிச்சுட்டே வாங்க மாமா அங்க நீங்க பக்கத்துல இல்லாம எனக்கு தூக்கமே வரல நீங்க வரப்போ போய்கிறேன் என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்..


அவன் அவளை சிறிது நேரம் பார்த்திருந்தவன் பிரேக் முடியவும் கிளாஸ் எடுக்க சென்றான்..


அவ்வப்போது அவளை திரும்பி திரும்பி பார்த்தவன் அவள் தூங்கவும் ஒருவாறு கிளாசை முடித்தவன் அனைத்தையும் மூடி வைத்து விட்டு அவளிடம் வர அவள் நன்றாக தூங்கியிருக்க அவளை மெதுவாக கையில் ஏந்தியவன் அறைக்கு செல்ல மாமா என்று தூக்கத்தில் அவனை அழைத்து கைகளால் அவன் கழுத்தை வளைத்துக் கொள்ள சிரித்தவன் அவளை மெத்தையில் கிடத்தினான்..


லைட்டை அனைத்து விட்டு அவளருகில் வந்து படுத்தவன் அவளை இழுத்து தன் கைவளைவில் வைத்து கொண்டு உறங்கி விட்டான்..


நன்றாக தான் போய் கொண்டிருந்தது கயலின் தாய் வரும் வரைக்கும்.. அடுத்த நாள் அவர் கூறியதை கேட்ட பிரசாத் அதிர்ந்தான் என்றால் கயல் அழும் நிலைக்கே சென்று விட்டாள்..


அப்படி என்ன நடந்திருக்கும்..


காலையில் கண்விழித்தவன் தன் கையில் தலை வைத்து தூங்குபவளை மெதுவாக நகர்த்தி படுக்க வைத்தவன் சத்தம் போடாமல் எழுந்து கீழே வந்தான்..


ஜாகிங் சென்று வந்து அவளை எழுப்பிக் கொள்ளலாம் என்று நினைத்தவன் தோட்டத்தை சுற்றி தன் ஓட்டத்தை தொடர அப்பொழுது தான் சாமியிடம் பேசிக் கொண்டிருந்த தர்மனை கண்டவன் அவரிடம் வர தொப்பென்று அவன் முன் குதித்து வாழ்த்துக்கள் மச்சி.. முற்றும் துறந்த முனிவனா முரட்டு சிங்கிளா இருந்த உன்னை ப்ரோமோஷன் ஆயிட்ட என்று கட்டிக் கொண்டான் பரத்..


அவன் திடீரென்று வந்து கட்டி பிடிக்கவும் அதிர்ந்தவன் டேய் விடு டா.. என்ன டா பண்ற.. டேய் என்று அவனிடம் இருந்து விடுபட போராடியவன் தன்னை விடுவித்து கொண்டு நாதாரி காலையில குளிச்சியா இல்லையா.. 


இந்த நாத்தம் நாறுது எப்பா செம கப்பு என்று மூக்கை பொத்த இல்லையே நம்ம தான் நல்லா ஒரு லக்ஸ் சோப்பை கரச்சி போட்டு தானே வந்தோம் என்று நினைத்தவன் அவன் சொல்வது உண்மையென்று நம்பி தன்னை மோர்ந்து வேற பார்த்துக் கொண்டான்..


லக்ஸ் சோப்பு வாசனை தான் வருது என்று நிமிர அவன் சிரிக்கவும் என்னடா மச்சான் சிரிக்குற.. ஒஹ் மை காட்.. நீ சிரிச்சா இவ்ளோ அழகா ஐஸ்வர்யா ராய் மாதிரியே இருக்கியே.. உன் அழகை வெளியே காட்ட கூடாதுன்னு தான் இவ்ளோ நாளா தேவாங்கு மாதிரி வச்சுருந்தியா என்று நக்கலடித்தான்..


பிரசாத் முறைக்கவும் ஐயோ இவன் வேற எப்போ எந்த மோடுக்கு போவான்னு ஒன்னுமே தெரிய மாட்டேங்குது என்று நினைத்தவன் அப்பறம் மச்சி முரட்டு பீஸா இருந்த உன்னை கூடிய சீக்கிரம் முட்டா பீஸா மாத்த ஆளு ரெடி பண்ணிருக்காருன்னு கேள்வி பட்டேன் என்ற பிரசாத்தின் குரலில் எது.. டேய் நான் இன்னும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லவே இல்லை..


ஆளாளுக்கு கடுப்பேத்தாதீங்க.. எனக்கு பயத்துல உடம்பெல்லாம் நடுங்குது.. என்று கூற என்னடா நீ தான் கல்யாணம் எனக்கு பண்ணி வைக்கணும்னு கேட்டியாம் இப்போ இப்படி மாத்தி சொல்ற..


டேய் தெரியாம கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டுட்டேன்.. இனி வாயே திறக்க மாட்டேன் ஆள விடுங்கடா.. எப்பா கல்யாணம் பண்ணி வைன்னு சொன்னது ஒரு குத்தமாயா என்று வடிவேல் மாடுலேஷனில் கேட்க பிரசாத் சிரித்தான்..


அவன் சிரிப்பதை கண்டு தானும் மனம் நெகிழ்ந்தவன் நான் முட்டா பீஸா ஆகுறது இருக்கட்டும் சில்லறைய சிதற விட்ட மாதிரி சிறுச்சுட்டே இருக்கீங்களே.. என்ன விஷயம் ஹிம்ம் உங்க ஆளு வயசுக்கு வந்துடான்னு ஒரே குஷி போல..


அட எருமை மாடு உன் புத்தி ஏன் டா இப்படி போகுது.. என்று கேட்க ஹுக்கும் இவரு அப்படியே ரொம்ப நல்லவரு.. 


டேய் அவ சின்ன புள்ளை டா.. என்று தலையை கோதி சிரிக்க பார்க்க தானே போறோம் என்று இவன் கலாய்க்க அவ படிக்கட்டும் இப்போ என்ன எனக்கு என்ன வயசாகி போச்சா என்ன என்று கேட்க மிஸ்டர் ராம் பிரசாத் உங்களுக்கு இருபதுன்னு மனசுல நெனப்போ..


சரி சரி புருஷனும் பொண்டாட்டியும் ஏதோ பண்ணுங்க.. ஆகமொத்ததுல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறதில்லை.. அதுல முடிவா இருக்கீங்க போல என்று கேட்க இப்போதானே கொஞ்ச நேரம் முன்னாடி வேண்டாம்னு சொன்ன..


ஹிம்ம் அதெப்படி கல்யாணம் பண்ணாம இருக்க முடியும்.. இந்த அப்பா வேற கல்யாணம் பண்ணினா அவளத்தான் பண்ணனும்னு சொல்றாரு.. சரி பொண்ணு முகத்தை காமின்னு சொன்னா காட்ட மாட்டேங்குறாரு என்று புலம்ப அப்போ உனக்கு ஓகே தானே என்று கேட்க வேற ஆப்ஷன் இல்ல மச்சி என்று பாவமாக கூறினான்..


பிசாசு கூட குடும்பம் நடத்துன்னு நீங்களே என்னை தள்ளி விடுறீங்க பாரு அதுதான் கொஞ்சம் வலிக்குது என்று சீன் போட டேய் நீ இருக்குற வேகத்தை பார்த்தா கல்யாணம் பண்ணி வச்ச அடுத்த பத்து மாசத்துல பிள்ளை பெத்துருவ போலையே என்று கிண்டலாக கூற ஏன் நீ சொல்ல மாட்டே..


உனக்கு கயல் கிடைச்சுட்டா.. அது தங்கம்.. முகத்தை பார்த்தாலே தெரியுது என் தங்கச்சி தங்கம்னு.. உன்னை நல்லா பார்த்துப்பா என்று கூற தன் கயலை பற்றி கூறியதுமே அவன் முகம் மகிழ்ச்சியில் விகசித்தது..


என்ன மச்சி பேரு சொன்னதுக்கே முகத்துல இத்தனை பல்ப எரிய விடுற… என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க சாமியிடம் பேசியவாறு தர்மன் இவர்களிடம் வந்தார்..


கயல் எழுந்துட்டாளா பிரசாத் என்று தர்மன் கேட்கவும் இல்ல தூங்குறா.. நைட்டெல்லாம் வயிறு வலில தூங்கவே இல்லை.. அதான் தூங்கட்டும்னு வந்தேன் என்றான்..


சற்று நேரம் பொறுத்தவன் நேற்று அந்த பெண்மணி வந்ததை கூறினான்.. அவன் கூறியதும் அதிர்ச்சியானவர்கள் எப்படி சாமி நீ இருக்கும் போது அந்தம்மா வந்தாங்க.. ஏன் உள்ள விட்ட என்று கேட்க நான் நைட் பசார் போயிருந்தேன்..


அப்போதான் வந்துருக்கணும் என்று கூறவும் அவர் எவ்வாறு வந்தார் என்று அனைத்தையும் கூற கயலுக்கு ஒன்னும் தெரியாதுப்பா பாத்து இருக்க சொல்லு..


ஹிம்ம் நான் சொல்லிருக்கேன்.. அந்தம்மா ஏதோ பிளான் போட்டு தான் பண்ணுது.. பார்ப்போம் என்னை மீறி என்ன பண்ணிடுவாங்கன்னு பார்க்கிறேன் என்று கூற சரி விடுப்பா பார்த்துக்கலாம் என்று வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க வெளியில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்க அனைவரும் திரும்பி பார்த்தனர்..


கயலின் தாயும் குணாவும் இறங்க மச்சி மாமியாரை போய் அழைச்சுட்டு வாடா என்கவும் அவன் முறைக்க நான் போறேன் ப்பா என்னதான் இருந்தாலும் என் மாமியார் இல்லையா என்று பரத் செல்ல அவர் ஒரு பையை வைத்திருக்க அதை வாங்கியவன் எம்மா இது என்னடா இந்த கணம் கனக்குது என்று மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது..


அவனை பார்த்து சிரித்த பிரசாத்தை கண்டு இவன் விவரமா அங்கேயே நின்னுகிட்டான்.. சுட்டு போட்டாலும் உனக்கு அந்த விவரம் வர மாட்டேங்குது பரத்து என்று தனக்குள் புலம்பியவன் தன்னவளை தேட மறக்க வில்லை..


என்ன பிசாசு வரலையா என்று நினைத்தவன் முதராத்திரி அன்னைக்கு தான் பாக்கணும்னு விதியிருந்தா அப்படியே இருக்கட்டும் என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை அவன் எதிர் பார்க்காதது நடக்கப்போவதை..


ராணி அவர்களை நெருங்கியவர் கயல் என்ன பண்றா என்கவும் மேல மாடில ரெண்டாவது ரூம் என்று கூற சரிங்க மாப்பிள்ளை என்று உள்ளே சென்றார்..


அவர் சென்றதும் கயலை இப்போ நாங்க பார்க்க கூடாது.. நாங்க அப்பறம் வரோம் பார்த்து இருங்க என்று பரத்தும் தர்மனும் கிளம்ப குணாவிடம் பேசிக் கொண்டே உள்ளே வந்தவன் அவனுக்கு ஒரு அறையை காட்டி போய் பிரெஷ் ஆகிட்டு வா என்று கூறிவிட்டு தங்கள் அறைக்கு சென்றான்..


அங்கு ராணி தூங்கி கொண்டிருந்த கயலிடம் வந்தவர் கயலு எழுந்துரு.. குளிக்கணும் என்று அவளை எழுப்ப தன் தாயின் குரல் கேட்டதும் எழுந்தவள் அம்மா எப்போ வந்த என்று கட்டிக் கொள்ள ஹிம்ம் போய் குளி.. அப்பறம் கட்டிப்பிடிக்கலாம் என்று அவளை எழுப்பினார்..


அவள் எழும்பவும் பெட்டில் கரையை கண்டவர் இதென்னடி இப்படி கரை பண்ணி வச்சுருக்க இதெல்லாம் தெரியாம அப்படி என்ன தூக்கம் என்று திட்ட அப்பொழுது தான் உள்ளே வந்த பிரசாத்தை கண்டதும் மாமா இங்க பாருங்க இந்த அம்மா திட்டுறாங்க.. என்று அவனிடம் ஓடி போய் கட்டிக் கொண்டாள்..


அவனை கட்டிக் கொண்டு தன் தாயை திரும்பி பார்த்தவள் நீ போம்மா திட்டுற.. மாமா அம்மா திட்டுறாங்க என்று போட்டுக் கொடுத்தாள்..


சரி ஒன்னுமில்லைடா சும்மா சொல்லிருப்பாங்க விடு வா போய் குளிக்கலாம் என்றவன் ராணியிடம் விடுங்க இதுதானே முதல் முறை அவளுக்கென்ன தெரியும் நாம சொன்னா புரிஞ்சுப்பா.. நீங்க போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க.. நாங்க குளிச்சுட்டு வரோம் என்று கீழே அனுப்பி வைத்தான்..


அவர் சென்றதும் மாமா தெரியாம பெட்ல பட்டுருச்சு என்கவும் வேற மாத்திக்கலாம் விடு டா என்றவன் உனக்கு இப்போ வயிறு வலி இல்லதானே என்று கேட்கவும் இப்போ இல்ல மாமா என்கவும் நீ போய் குளி நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன் என்றவன் அவளுக்கு உடைகளை எடுத்து வைத்தவன் பின் பெட்ஷீட்டை மாற்றி விட்டு தானும் சென்று குளித்து விட்டு வந்தான்..


இருவரும் குளித்து முடித்து கீழே வர ராணி சமையல் செய்து வைத்திருந்தார்.. அவருக்கு மனது நிறைந்திருந்தது.. தன் மகள் இனி நன்றாக இருப்பாள் இனி அவளை பற்றிய கவலை வேண்டாம் என்று மனம் உறுதியாக நம்பியது..


மாப்பிள்ளை இப்படி தாங்குறாரு.. எவ்ளோ பொறுமையா இருக்காரு.. ரெண்டு பேரும் நல்லாருக்கணும் கடவுளே என்று வேண்டிக் கொண்டார்..


வாங்க சாப்பிடலாம் என்று இருவரையும் அழைத்தவர் இருவரும் டேபிளில் அமர்ந்ததும் பிரசாத் குணாவிடம் அவன் படிப்பு விஷயமாக பேசிக் கொண்டிருக்க ராணி கயலுக்கு எடுத்து வந்த உணவை கண்டதும் கயலின் முகம் போன போக்கை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான் பிரசாத்..


என்னமா இது என்று கயல் கேட்க இதை சாப்பிடு ரொம்ப சத்து என்று உளுத்தங்களியை சாப்பிட சொல்ல எடுத்து ஒரு வாய் வைத்தவளுக்கு இறங்க மாட்டேன் என்று அடம் பிடித்தது..


ம்மா இது நல்லாவே இல்லை என்று கூற ஹிம்ம் சாப்பிடு என்று மிரட்ட மாமா என்று பிரசாத்தை அழைத்தாள்..


ஏய் என்னடி உடம்புக்கு நல்லதுன்னு சொல்றேன் அவர்கிட்ட சொல்ற.. மாப்பிள்ளை இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க என்று கூற கயல் கோபமாக என் மாமா நான் செல்லம் கொஞ்சுவேன் போம்மா நீ திட்டிட்டே இருக்க..


மாமா எனக்கு இது பிடிக்கவே இல்லை.. இந்த அம்மா திட்டுறாங்க நீங்க பாத்துட்டு இருக்கீங்க என்று கேட்கவும் உன் நல்லதுக்கு தானே டா சொல்றாங்க என்கவும் கோபமாக முகத்தை திருப்ப ஏய் அது என்ன மூஞ்ச திருப்புற என்று அவள் தாய் அதட்ட விடுங்க அவ சாப்பிடுவா..


இது தானே முதல் முறை அதான் பிடிக்கல விடுங்க என்றவன் டேய் கவி நீ அது சாப்பிட வேண்டாம் விடு வா நான் ஊட்டுறேன் என்று சாதத்தை பிசைந்து கொடுக்க சாப்பிட்டவள் தன் தாயை பார்த்து சிரித்தாள்..


என் மாமா கிட்ட இருந்து கத்துக்கோ ம்மா என்று கூற ஏன் டி பேச மாட்ட நீ.. என்றவர் என் கண்ணே பட்டுடும் போல முதலில் ரெண்டு பேருக்கும் சுத்தி போடணும் என்று நினைத்தவர் அவளுக்கென்ன கையா இல்லை நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை என்று கூற ஏன் மா உனக்கு பொறாமை..


மாமா தானே ஊட்டுறாங்க.. என்றவள் நீங்க ஊட்டுங்க மாமா என்று செல்லம் கொஞ்சினாள்..


இரவு வரும் வரை நன்றாக தான் போய் கொண்டிருந்தது..


கயல் இருந்த அறைக்கு பதுங்கி பதுங்கி தன் வீட்டிலேயே திருடன் போல நடந்து கொண்டிருந்தான் பிரசாத்..


இதென்னடா வாத்திக்கு வந்த சோதனை..


 காந்தமென ஈர்க்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments