காதல்-10:
ஏய் ராணி.. ராணி என்று தன் வீடு முழுவதும் தேடியவர் எங்க போனா இவ.. வர வர இந்த கழுதைக்கு வேலா வேலைக்கு சோறு கூட ஆக்கி போட முடியலையாட்டுக்கு.. அப்படி என்ன புடுங்கி கிழிக்குற வேலைன்னு எங்கேயோ போய்ட்டா..
ராணி.. ஏய் ராணி என்று கத்தவும் வர்ஷா அவர் சத்தத்தில் வெளியே வந்தவள் என்னப்பா இப்போ எதுக்கு இப்படி கத்துற.. என்று தூக்கத்தில் இருந்த எரிச்சலில் கத்தினாள்..
எங்கடா உங்க அம்மா ஆள காணோம்.. காலையிலே எங்க போய் தொலைஞ்சான்னு தெரியல.. ச்சே ஒரு சோறு குழம்பு ஆக்கி போடுறதுக்கு வலிக்குது என்று அவர் பாட்டுக்கு புலம்பினார்..
எனக்கு தெரியல ப்பா அவங்க எங்கன்னு.. இந்த குணாவ போய் பார்த்துட்டு வரேன் என்று குணா அறைக்கு போனவளுக்கு பூட்டிய அறையே அவளை வரவேற்றது..
என்ன இந்த குணா ரூம் பூட்டிருக்கு.. எங்க காலையிலே போய்ட்டாங்க என்னவா இருக்கும் என்று யோசித்து கொண்டே வந்தவள் தன் தந்தையிடம் வந்து அப்பா அவங்க இங்க இல்ல ப்பா ரெண்டு பேரும்..
ரூம் பூட்டிருக்கு என்று கூறவும் ஒஹ் சொல்லாம கொள்ளாம அப்படி எங்க அவசரமா போயிருப்பா என்று வெளியே வர தன் வீட்டின் முன்பு பாத்திரம் கழுவி கொண்டிருந்த வள்ளி இவர்களை பார்த்தவள் ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்தவள் என்ன மாமோய் அத்தையை தேடுறியாட்டுக்கு என்று ஏகத்தாளமாக கேட்டாள்..
அதுகென்ன இப்போ உனக்கு தெரியுமா அவ எங்கன்னு என்று கேட்க தெரியும் ஆனால் நான் தான் சொல்ல மாட்டேன்னு உனக்கு தெரியாதா என்று கேட்டு சிரிக்க அவளை முறைத்து விட்டு உள்ளே செல்ல போனவரை மாமோய் என்று அழைத்தவள் உன் பெரிய பொண்ணு அதான் எங்க கயல் வயசுக்கு வந்துட்டா..
அதான் பார்க்க போயிருக்காங்க என்று அவள் கூறவும் ஏதோ ஒரு சந்தோஷம் அவர் மனதில் எழுந்து முகம் பிரகாசமாக வர்ஷா பார்க்கவும் அதனை மறைத்துக் கொண்டார்..
வள்ளி சொன்ன தகவலை கேட்டு வர்ஷாவின் முகம் அப்பட்டமாக அதிர்ச்சியை காட்டியது.. அதை கண்டு நக்கலாக சிரித்த வள்ளி தன் வேலையை பார்க்க போய்விட்டாள்..
இங்கு தன்னை திட்டிக் கொண்டிருந்த அம்மாவை முறைத்து கொண்டு எதற்கெடுத்தாலும் தன் மாமனிடம் சென்று மாமா அம்மா திட்டுறாங்க அடிக்கிறாங்க என்று ஒவ்வொன்றுக்கும் அவனிடம் புகார் கூறிக் கொண்டிருந்தாள்..
காலை உணவு தான் அவன் ஊட்டி விட்டான் என்றால் மதியம் ராணி அவளிடம் பச்சை முட்டையை உடைத்து வாயில் ஊற்ற வர மாமா என்று அலறி கொண்டு ஓடி வர இவன் பதற மாப்பிள்ளை இருந்தாலும் இவ்ளோ செல்லம் ஆகாது..
இவ நல்லதுக்கு தானே குடிக்க சொல்றேன்.. எதுக்கெடுத்தாலும் மாமா மாமா.. ஏன் டி பிறக்கும் போதே உன் மாமன் கூடையே பிறந்த மாதிரி இப்படி ஒட்டிக்குற.. நம்ம ஊரு சனம் முன்னாடி இப்படி இருக்காத.. வரவளுங்க எல்லாம் கொல்லி கண்ணை வச்சு பொசிக்குடுவாளுங்க..
அவர் கூறியதற்கு ஒரு சிரிப்பை மட்டுமே உதிர்த்தவன் சரி உனக்கு பிடிக்கலைன்னா விடு பிரௌனி வா சாப்பிடலாம் டைம் ஆகுது பசிக்குமில்லையா என்று அவளை அழைத்து வந்தவன் அவளுக்கு ஊட்ட தன் தாயிடம் வக்களம் காட்டி சிரித்தாள்..
பின் அனைவரும் சாப்பிட்டதும் ராணி பிரசாத்திடம் மாப்பிள்ளை நீங்க இன்னும் ஒரு நாலு நாளைக்கு ஒன்னா படுக்க வேண்டாம்.. அவ தனியா இருக்கட்டும் உங்க பக்கத்து அறையில் இருந்துக்கட்டும்.. என்று கூற அவனுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது …
ஏதோ அவன் கூற வர ராணி முந்தி கொண்டவர் இதுக்கு மறுப்பு சொல்லாதீங்க மாப்பிள்ளை என்று கேட்க அவன் கயலை பார்க்க அவளோ அழும் நிலைமைக்கு சென்று விட்டாள்..
அவளுக்கு கண்களால் அழாதே என்று கூறியவன் ஹிம்ம் சரி என்று அவரிடம் கூறிவிட்டு தனக்கு கிளாஸ் இருப்பதாக தன் அறைக்கு சென்று விட்டான்..
தன் அறைக்கு வந்தவனுக்கு கிளாஸ் இருக்கவே அதில் கவனம் செலுத்தினாலும் ஏதோ நெஞ்சின் ஓரத்தில் முணுக் முணுக்கென்று வலித்தது..
இங்கு தன் தாயிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் கயல்விழி..
எதுக்கு ம்மா இப்போ எங்க ரெண்டு பேரையும் பிரிக்கிற.. உனக்கு என்ன ஆச்சு எதுக்கு நாங்க ஒன்னா இருக்க கூடாது என்று கேட்க இதென்ன டி அதிசயமா இருக்கு ..
புள்ளபூச்சிக்கு கொடுக்கு மொலைச்சுகிக்சோ.. அங்க பொசுக்கு பொசுக்குன்னு வாயை மூடிட்டு இருந்துட்டு இங்க இப்படி துள்ளுற.. என்று தன் மகளை பார்த்து அதிசயமாக கேட்டார்..
ம்மா வேண்டாம் கடுப்பை கிளப்பாத.. நானே என் மாமனை விட்டுட்டு எப்படி தூங்குறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன் இதுல நீ வேற இத்தனை கேள்வி கேக்குற.. உன்னை யாரு அப்படி சொல்ல சொன்னது.. இப்போ ஒன்னா இருந்தா என்ன ஆக போகுது என்று கத்தினாள்..
குணா தன் தாயிடம் ம்மா அக்கா வேற கராத்தே எல்லாம் கத்து வச்சுருக்கேன்னு சொன்னுச்சு.. இப்போ உன் பல்லு உடைய போகுதுன்னு நினைக்கிறேன் என்று கிசுகிசுப்பாக கூற டேய் உங்க அக்காவுக்கு கோவமே வராது..
இப்போ என்னடா இப்படி துள்ளுறா.. கோபம் இப்படி வருது.. என்று அவனிடம் கேட்டவர் நாலு நாளைக்கு தானே கூட படுக்க வேண்டாம்னு சொன்னேன்.. அதுக்கா இவ்வளவு கோபம் என்று மனதுக்குள் தன்னை தானே கேட்டுக் கொண்டவர் வெளியில் அதெல்லாம் முடியாது..
நான் சொல்றதை கேளு.. போ அந்த ரூமுக்கு.. உங்க ரூமுக்கு போக கூடாது போனன்னு தெரிஞ்சுது ஊருக்கு அழைச்சுட்டு போயிடுவேன் என்று குண்டை தூக்கி போட்டார்..
அதுக்கு இதுவே பரவாயில்லை என்று நினைத்தவள் ஏதோ வாயில் முனகிக் கொண்டே அந்த அறைக்கு சென்றாள்..
இங்கு வகுப்பை முடித்தவனுக்கு அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.. ஏதாவது சாப்பிட்டாளா.. பசிக்குதா.. வயிறு வலி இருக்கா ஒன்னும் தெரியலையே என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருக்க அவன் போன் ஒலியெழுப்பியது..
அவள் தான் அவனவள் தான்.. செல்ல குட்டி நினைச்சேன் கால் பண்றா.. என் பிரௌனி என்று கொஞ்சியவன் போனை ஆன் செய்து காதில் வைக்க மாமா.. ஆஹ் வலிக்குது மாமா என்று அவனை தன்னிடம் வர வைக்க நடித்தாள்..
என்னடா பண்ணுது தோ வரேன் டா கொஞ்சம் பொறுத்துக்கோ என்றவன் தன் அறையை விட்டு வெளியே வர எங்கிருந்து வந்தானோ குணா அவனருகில் வந்தவன் மாமா அக்காவை நீங்க பார்க்க கூடாதாம் அம்மா சொன்னாங்க.. என்று கூறவும் அவன் மேல் அவனால் கோபப் படவும் முடியவில்லை..
தன் பிரௌனி போலவே தன்னை மாமா மாமா என்று வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுபவனை என்ன சொல்வது.. ஆனால் இப்பொழுது தன் பிரௌனியை பார்க்க போக வேண்டுமே என்று நினைத்தவன் அவன் அறைக்கு வலது பக்கம் இருந்த அறைக்கு குணாவை அழைத்து சென்றவன் அங்கிருந்த பிளே ஸ்டேஷனை அவனிடம் காட்டிக் கொடுத்தவன் உனக்கு பிடிக்குமா என்று அவனை கவுக்க வலை வீச அவனும் அழகாய் அவன் வீசிய வலையில் மாட்டிக்கொண்டான்..
ஹிம்ம் பிடிக்கும் மாமா என்றவன் கண்களில் விளையாட போகும் ஆர்வம்.. அவனை கண்டு சிரித்தவன் சரி விளையாடு.. என்று அவனை விட்டு விட்டு வெளியே வந்து விட்டான்..
அப்பாடி மச்சானை கவுத்தாச்சு என்று பெருமூச்சு விட அவன் மனசாட்சியோ அடுத்து மாமியாரை கவுக்கனும் என்று இசைப்பாட்டு பாடியது..
இங்கு தன் மாமியார் கண்ணில் படாமல் பதுங்கி பதுங்கி தன் பிரௌனி இருந்த அறைக்கு வந்தவன் மெதுவாக தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்து அவள் அருகில் படுத்துக் கொண்டான்..
தன் இடம் வந்து சேர்ந்த நிம்மதி அவனுக்கு.. தன் மாமனின் வருகையை உணர்ந்தவள் அதுவரை குப்புற படுத்திருந்தவள் அவன் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டு மாமா இந்த அம்மா நம்மளை பிரிக்க பார்க்குது என்று அவனை கட்டி பிடித்துக்கொள்ள ஹாஹா என்று சிரித்தவன் ஏய் பிரௌனி குட்டி அவங்க எப்படி நம்மள பிரிப்பாங்க..
நாம ரெண்டு பேரும் மனசு வச்சா மட்டுமே பிரிய முடியும்.. நமக்கு இடையில் யாரையும் வர விட மாட்டேன்.. நான் கடைசி வரை உன்கூடத்தான் என்று அவள் நெற்றி முட்டி சிரித்தான்..
ஹிம்ம் நானும் உங்களை விட்டு போகவே மாட்டேன் மாமா என்று அவனை இறுக்கி கொள்ள சுகமாக கண் மூடினான்..
இருவரும் இரண்டு மணி நேரம் அப்படியே உறங்கி விட்டனர்.. நேரம் சென்றதே தெரியவில்லை இருவருக்கும்.. ராணி வந்து கதவை தட்டவும் தான் இருவரும் விழித்தனர்..
கயல் கதவை திற.. எதுக்கு தாழ்ப்பாள் போட்டு வச்சுருக்க என்று அறையின் வெளியே இருந்து குரல் கொடுக்க மெதுவாக எழுந்த பிரசாத் கயல் தன் தாயிற்கு தெரிந்தால் திட்டுவாள் என்று பயம் கொள்ள சிரித்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு பாய் என்று சைகை செய்தவன் தன் அறைக்கு செல்ல இரு அறைக்கும் நடுவே இருந்த கதவு வழியாக சென்று விட்டான்..
அதனை அதிசயமாக பார்த்த கயல் இந்த கதவை இவ்வளவு நாளா நாம பார்க்கவே இல்லையே என்று யோசித்தவள் தன் தாயின் சத்தம் கேட்கவும் சென்று திறந்தாள்..
(மாமா மாமான்னு வால் மாதிரி அவன் பின்னாடியே திரிஞ்சா இது எப்படி தெரியும்..)
இப்பொழுது ராணிக்கு தெரியாமல் இந்த கூட்டு களவானிகள் தப்பித்து விட்டார்கள்.. ஆனால் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப நம்ம பிரசாத் அன்று இரவே தன் மாமியாரிடம் அகப்பட்டு திருத்திருவென முழித்து கொண்டிருந்தான்…
எந்த வாயால் அவனை பிரிந்து செல்ல மாட்டேன் என்று கூறினாளோ அவளே அவனை விட்டு பிரிந்து செல்வாள் என்று இருவருமே கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.. விதி வலியது..
வள்ளி குமரேசனிடம் கயல் வயதிற்கு வந்து விட்டாள் என்று கூறவும் அதனை கேட்டு அதிர்ந்த வர்ஷா தன் தந்தையிடம் அப்பா வாப்பா போய் பார்த்துட்டு வருவோம். இவ சொல்ற மாதிரி ஒருவேளை அவ உண்மையாவே வயசுக்கு வந்துட்டாளோ என்னவோ வா போவோம் என்று அவரை தொல்லை செய்து சென்னைக்கு அழைத்து வந்து விட்டாள்.
அவருக்கு தன் பெரிய மகளை பிடிக்காது தான் இருந்தாலும் அவள் வயதுக்கு வந்து விட்டாள் என்ற செய்தியை கேட்டதும் அவர் மனம் நிம்மதி அடைந்தது என்னவோ உண்மை.
தர்மனிடம் போன் போட்டு ராம் பிரசாத்தின் வீட்டு முகவரியை வாங்கியவர் தன் மகளுடன் கிளம்பினார்.
இங்கு பிரசாத் இந்த அறைக்கும் அந்த அறைக்கும் தன் மாமியார் கண்ணில் படாமல் தன் பிரௌனியுடன் இருந்து கொண்டு அவர் பார்க்கும் பொழுது அவளுடன் இல்லாதது போல் பாவமாக முகத்தை வைத்து கொள்வான்.
தன்னை நினைத்தே சிரித்து கொண்டவன் என்னை எப்படி மாத்தி வச்சுருக்க பாரு பிரௌனி என்று மானசீகமாக அவளிடம் கூறியவன் அவளை பார்க்க அறைக்கு சென்றான்.
அப்பொழுது அவன் கைப்பேசி அழைக்கவும் யாரென்று எடுத்து பார்த்தான் தர்மன் தான் அழைத்தார்.
ஹலோ பிரசாத் எப்படி இருக்கே கயல் என்ன பண்றா
வணக்கம் சார் சொல்லுங்க எங்களுக்கென்ன காலையில் தானே வந்து பார்த்துட்டு போனீங்க என்று சிரித்துக் கொண்டு கேட்க
இப்படி நீ சிரிச்சா எவ்ளோ நல்லாருக்கு இப்படியே இருப்பா என்றவர் பிரசாத் கயலோட அப்பா அங்க வரார்.. நீ கயலை தனியா விடாதா சரியா என்று எச்சரிக்க
எதுக்கு அவங்க இங்க வராங்க என்று உஷ்ணமாக அவனிடத்தில் இருந்து பதில்
டேய் என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்.. அவர் போன போட்டு உன் வீட்டு விலாசம் கேட்டாரு.. எப்படி குடுக்காம இருக்க முடியும்.. அதான் உன் விலாசம் குடுத்தேன் நீ பிள்ளையை தனியா விடாத என்கவும்
ஹிம்ம் சரி சார் இப்போ எதுக்கு இங்க வராராம் இப்போ மட்டும் பாசம் பொத்துக்கிட்டு வந்துருச்சோ என்று சீரவும்
டேய் இப்போதான் சிரிச்சா நல்லாருக்குன்னு சொன்னேன் அதுக்குள்ள ஏன் டா இவ்ளோ கோவம் என்கவும் பதிலில்லை போனை எடுத்து பார்க்க கால் எப்பொழுதோ துண்டிக்க பட்டிருந்தது.
இங்கு இவர் அவன் கோபத்தை பேசவும் செகண்ட் காலில் தன்னவளின் எண்ணை பார்த்ததும் ஏன் இவ கால் பண்றா கொஞ்சம் நேரம் என்னை விட்டு பிரிஞ்சி இருக்க மாட்டேங்குறா என்று சுகமாக சலித்து கொண்டவன் இருவரின் அழைப்பையும் துண்டித்தவன் அவள் அறைக்கு சென்றான்.
என்ன பிரௌனி என்றவாறு வந்தவனை நோக்கி ஓடி வந்தவள் அவனை கட்டிக்கொள்ள அவளுக்கு எப்படியோ அவனுக்கு ஜிவென்று இருந்தது.
அடியேய் ஏன் டி இப்படி கொல்லுற என்று உள்ளுக்குள் மட்டுமே அவனால் புலம்ப முடிந்தது.
அவனை கட்டிக்கொண்டவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அன்னார்ந்து அவனை பார்த்தவள் மாமா நான் ஏன் வயசுக்கு வந்தேன்னு இருக்கு என்று சோகமாக கூற இதுவே ரொம்ப லேட் என்று உள்ளுக்குள் ஜர்க்கானவன் அவளிடம் ஏன் டா நல்லது தானே ஏன் இப்படி நினைக்குற என்று புரியாமல் வினவினான்.
வயசுக்கு வந்ததால் தானே உங்களை பார்க்க கூடாதுன்னு இப்படி இந்த ரூம்ல அடைச்சி வச்சுருக்காங்க.. நினைச்ச நேரத்துக்கு உங்களை பார்க்க முடியலை அதான் கொஞ்சம் கடுப்பாகுது என்று கூறவும் சிரித்தான்..
அவன் சிரிக்கவும் அவள் முறைத்தாள்.. மாமா நீங்க ஏன் சிரிக்குறீங்கன்னு எனக்கு தெரியும் மாமா இப்போ நான் உங்க கூட இல்லாததும் நல்லா ஜாலியா என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கீங்க என்று சோகமாக முகத்தை திருப்பவும்
அதில் உருகியவன் அவளை பின்னிருந்து தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டவன் ஹேய் பிரௌனி குட்டி நான் அப்படி நினைப்பேனா சொல்லு என்கவும் அவள் தான் இது வரையிலும் அவனை அணித்திருக்கிறாள் அவனாக அணைப்பது இது தான் முதல் முறை அவளுக்கு ஒரு மாதிரி இருக்கவும் அவனிடம் இருந்து பிரிய அவள் தவிப்பை உணர்ந்து கொண்டவன் தன் கைகளை விலக்கி கொண்டான்.
அவன் கைகளை விலக்கி கொள்ளவும் நிம்மதியாகவும் அதே நேரம் அவன் விலகளையும் தாங்க முடியாமல் அவனோட உரசி கொண்டு நின்றவள் மாமா என் கூடவே இருங்க அம்மா பேச்செல்லாம் கேட்க வேண்டாம் ப்ளீஸ் மாமா என்று அவனை பார்த்து கெஞ்ச அவளை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.
மாமா வேண்டாம் அம்மா பார்த்தா திட்டும் என்று புலம்பி கொண்டு பயந்தவாறு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு வந்தவளை அவங்க வெளியே காய்கறி வாங்க போயிருக்காங்க என்கவும் ஐயோ எங்க அம்மாக்கு இந்த ஊர் தெரியாதே என்று பதட்ட படவும் அடியேய் குணாவும் சாமி அண்ணாவும் கூட போயிருக்காங்க கவலை படாத என்று அவள் மூக்கை பிடித்து கிள்ளினான்.
ஆஹ் மாமா என்று அவன் கையை தட்டி விட்டவள் வாங்க வாங்க அம்மா வரதக்குள்ள ஆட்டுங்க என்கவும் அவளுடன் சென்றான்.
அவள் ஆழி போன்ற கண்கள் அங்கிருந்த மாமரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலை ஆசையாக பார்வையிட்டது.
அதில் ஏறி அமர்ந்தவள் மாமா வாங்க வாங்க ஆட்டுங்க என்கவும் அவனும் சிரித்து கொண்டே ஆட்டி விட மாமா இன்னும் வேகமா வேகமா என்று கத்தி ஆர்ப்பரித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
எல்லாம் அந்த கார் வாயிலில் நுழையும் வரை தான்.
அந்த வாகனத்தை கண்டதுமே அதிர்ந்தவள் தன் மாமனை திரும்பி பார்த்தாள்.
அவனும் அங்கு தான் பார்த்தான். ஊஞ்சலை ஆட்டுவதை நிறுத்தியவன் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தவள் அருகில் வந்தவன் அவள் என்ன என்று உணரும் முன்பே தன் கையில் ஏந்தி இருந்தான்.
அதை கண்ட குமரேசன் கோபத்தில் கன்னதசை துடிக்க நின்றிருந்தார்.
அவன் வேண்டுமென்றே அவரை கண்டு கொள்ளாதது போல் தன் பிரௌனியுடன் என்ன ஆச்சு டா ஏன் இப்படி உடம்பு ஜில்லிட்டு போய் இருக்கு என்று கேட்கவும் அவள் பார்வையோ அங்கு தன்னை முறைத்து கொண்டிருந்தவரிடம் தான் இருந்தது.
அவர் தன்னை முறைக்கவும் அவனிடம் இருந்து அவள் விலக முற்பட அப்பொழுது தான் இன்னும் தன்னோடு அழுத்தி பிடித்து வைத்துக் கொண்டான்.
அப்பொழுது தான் அவரை பார்ப்பது போல் யாரு நீங்க இங்க எதுக்கு வந்துருக்கீங்க என்று கேட்டான்.
என்ன தம்பி நான் யாருன்னு தெரியலையா என்று கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு கேட்டார்.
ஒஹ் சாரி சார்.. நீங்க யாருன்னு தெரியல.. உங்களை நியாபகம் வச்சுக்குற அளவுக்கு எதுவும் பண்ணலையே என்று எக்காளமாக கூறினான்.
கயல் இருவரையும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஐயோ இந்த மாமாக்கு பைத்தியம் பிடுச்சுடுச்சா எங்க அப்பாவ யாருன்னு தெரியாதுன்னு சொல்றாரு என்று திருத்திருவென விழித்து கொண்டு நின்றாள்.
நான் கயலோட அப்பா என்று தன் கட்டைக் குரலில் கூறினார்.
அப்படியா என் பொண்டாட்டியோட அப்பாவா இத்தனை வருஷம் கோமால இருந்தீங்களா என்னால நம்ப முடியலையே கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்கு மேல ஆக போகுது இதுவரைக்கும் உங்க மகளை சாரி சாரி என் பொண்டாட்டியை நீங்க பார்க்க வந்ததா நியாபகம் இல்லையே என்று நக்கலாக கூறினான்.
அவள் அவன் கையை அழுத்தி பிடித்து கொள்ளவும் கயலை திரும்பி பார்த்தவன் முறைத்தான். அவன் முறைக்கவும் அவன் கையை விட்டவள் ச்சே ரெண்டு பேருமே என்னைய முறைக்குறாங்க போங்க டா நீங்க யாருமே வேணாம் என்று மானசீகமாக புலம்பியவள் திரும்ப அவளை கெட்டியாக பிடித்து கொண்டவன் தன் கைகளில் ஏந்தி கொள்ள அதிர்ந்தாள்.
என்ன மாமானாரே இப்படி பாக்குறீங்க கண்ணு போடாம உள்ள வாங்க என்று நக்கலாக கூறியவன் உள்ளே செல்ல இந்த செவத்த பயலுக்கு கொழுப்பை பாரு என்று தாளித்தவர் வர்ஷாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.
காந்தமென ஈர்க்கும்..
0 Comments