Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 11



 காதல்-11:


அவளை கையில் ஏந்தி கொண்டு உள்ளே வந்தவன் அவள் அசையவும் உனக்கு இப்போ என்ன வேணும் எதுக்கு இப்படி ஆடிட்டு இருக்க ஒழுங்கா அமைதியா இரு என்று கடிய அவள் முகம் சுருங்கி விட்டது..


போடா உருச்ச கோழி ச்சீ ச்சீ உருச்ச சேவல் மூக்கு மேல கோவம் வருது.. அவர் மேல கோவமா இருந்தா அங்க காட்டனும் என்கிட்ட மூஞ்ச மூஞ்ச காட்டுறானுங்க.. நீயும் என்கிட்ட பேசாத நானும் பேச மாட்டேன் என்று மனதிற்குள் அவனை தாளித்தவள் அவனிடமிருந்து விடுப்பட முயன்றாள்..


எங்கு அவன் விட்டால்தானே அவளால் முயல மட்டுமே முடிந்தது.. என்ன டி வேணும் என்று கடிக்க வெளியே சொல்லியே விட்டாள்.


கோபத்துல உங்க முகத்தை பார்க்க சகிக்கவில்லை மாமா முகத்துல மிளகாய் பொடி அரச்சி ஊத்தின மாதிரி தக தகன்னு சிவந்து இருக்கீங்க.. எனக்கு பார்க்கவே பயமா இருக்கு நான் ரூமுக்கு போறேன் விடுங்க என்று அவனிடம் இருந்து இறங்க முயன்றாள்.


ஏது சகிக்கலையா அவ்வளவு கேவலமாவா இருக்கு என்று யோசித்தவன் தன் பின்னால் வருபவர்களை கண்டு கொள்ளாமல் அவளை அறைக்கு தூக்கி சென்று விட்டான்.


ஐயோ விடுங்க மாமா என்னால நடக்க முடியும் அவங்க ஏதாவது நெனைச்சுக்க போறாங்க.. ஏன் மாமா இப்படி பண்றீங்க என்று புலம்ப ஏய் வாய மூடிட்டு வரியா இல்ல வாய கடிச்சி வைக்கவா என்கவும் கப்பென்று வாயை கைகளால் பொத்தி கொண்டாள்..


ஹிம்ம் அது பேசாம வா என்று அவளை அறைக்கு அழைத்து சென்றவன் இப்போ மட்டும் பாசம் பொங்கிட்டு வருதோ நம்ப முடியலையே என்று கூற பாசமோ வேஷமோ என்ன தான் இருந்தாலும் அவர் எங்க அப்பா 

மாமா பாவம் என்று கூற


அடிங்க என்ன பாவம் அந்தாளு உனக்கு பாவம் பார்த்தாரா உன் கையில் சூடு வைக்கும் போது இந்த பாசம் பாபநாசம் எல்லாம் எங்க போயிருந்துச்சு வாயை மூடிக்கோ என் வாயில நல்லா வந்துரும் நானும் பேச கூடாதுன்னு பாக்குறேன் என்று கத்த


இப்போ எதுக்கு மாமா வலிப்பு வந்து குரங்கு மாதிரி இப்படி தைய தக்கான்னு குதிக்குறீங்க என்கவும் ஆமா டி நான் குரங்கு தான் நான் கொரங்குன்னா உங்க அப்பா கொரில்லா குரங்கு சீம்பான்ஸி உர்ராங்குட்டான் என்று சொல்லிக் கொண்டே போக நீங்க ஏதோ உளறிட்டு இருங்க என்று தலையில் அடித்து கொண்டவள் குளியலறை நோக்கி சென்று விட்டாள்.


பிரசாத் என்னென்ன மிருகங்கள் பாக்கி இருக்கோ அனைத்தையும் கூறி முடித்தவன் இவளை பார்க்க ஆளு ஆப்ஸ்கான்ட்..


இவ எங்க என்று பார்த்தவன் குளியலறையில் சத்தம் கேட்கவும் இவ இருக்காளே குள்ள புஸ்க்கு இது ஒன்னு தான் செய்யல இப்போ பைத்தியம் மாதிரி தனியா பேசவும் வச்சுட்டா என்று புலம்பி கொண்டிருந்தவன் அவள் வெளியே வரவும் அவளை முறைத்தான்.


தன்னை முறைத்தவனிடம் ஏன் மாமா நான் தான் உங்களை மாமான்னு தானே கூப்பிடுறேன் பின்ன எதுக்கு இப்படி முறைச்சு முறைச்சி பாத்து முறை மாமன்னு

யாருக்கு நிரூபிக்குறீங்க என்று கூற இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல..


என்கிட்ட மட்டும் நல்லா வாய் பேசு.. அங்க வந்து ஏதோ பேயறைஞ்ச மாதிரி நில்லு என்று கூறவும் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு அவனுக்கு எதிர் புறமாக சென்று மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.


அவள் முகத்தை கண்டு சிரித்தவன் அவளருகில் செல்ல அவன் வரவை கண்டு திரும்பி அமர்ந்து கொண்டாள். ஹே பாருடா பிரௌனிக்கு கோவமெல்லாம் வருது என்று அதிசயம் போல் கூற உடனே அவன் பக்கம் திரும்பியவள் நான் சொன்னேன்னு நீங்க மீசை வளர்த்தால் உங்க மேல கோவப்படாம இருக்க முடியுமா என்று தன் முட்டை கண்களை விரித்தவாறு அவனிடம் கேட்டாள்.


அவள் கேட்டு கொண்டதற்காக மீசையை வளர்த்திருந்தவன் அதனை முறுக்கி விட்டுக் கொண்டே அப்படியெல்லாம் இல்ல பிரௌனி கோபம் வந்தால் கொட்டிடனும்.. அது தான் நல்லது மனசுல ஏதும் வச்சுருக்க கூடாது என்று தனக்கு தானே குழி தோண்டி கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் வாயை விட்டான்.


அவன் சொன்னது தான் தாமதம் அப்போ கோபப்பட்டா உங்களுக்கு ஓகேவா என்கவும் டபிள் ஓகே என்கவும் நறுக்கென்று அவன் கையில் கிள்ளினாள்.


ஆஹ் ஏன் டி கிள்ளின எப்பா வலிக்குது கிள்ளியே அறைகிலோ சதை எடுத்துட்டா என்று அவள் கிள்ளிய இடத்தை தேய்க்க நீங்க தானே கோபப்படலாம் என்று சொன்னீங்க அதான் என்று கிளுக்கி நகைத்தவாறு அவன் கையை தேய்த்து விட இப்படித்தான் கோபத்தை காட்டுவாங்களா..


ஆமா அவர் மேல கோபம் என்றால் அவர்கிட்ட காமிக்கணும் என்னை முறைச்சு பாக்குறீங்க ஹிம்ம் என்று அவனை தன் கோலி குண்டு கண்களால் முறைக்கவும் அதில் மயங்கியவன்


என் கோவமெல்லாம் தனி ரகம் உன்னை மாதிரி கிள்ள மாட்டேன் என்று அவன் கூறவும் வேற எப்படி கன்னத்தில் அரைவீங்களா என்கவும் ஹிம்ம் என்று தலையாட்டியவாறு அவளை நெருங்கியவன் அவள் கன்னத்தில் தன் மீசை முடிகள் குத்த முத்தமிடவும் எது இது தான் நீங்க கோபப்படுறதா என்று கேட்டு முடிக்கும் முன் முத்தமிட்டவன் பற்கள் கொண்டு அவள் கன்னத்தை கடித்தான்..


ஆஹ் மாமா விடுங்க என்று அவனிடம் இருந்து பிரிந்தவள் கன்னத்தை தேய்த்தவாறு ஐய எச்சி என்கவும் சிரித்துக் கொண்டே அடியேய் பச்சக் பச்சக்னு உதட்டுல முத்தம் குடுக்கும் போது தெரியலையா அபிது எச்சில்னு என்கவும் அது அது என்று திக்கி திணறவும் என்ன என்று அவளை நெருங்கவும் நான் அம்மாவை பார்க்க போறேன் என்று குடுகுடுவென ஓடியவளை உங்க அப்பா அங்க தான் இருக்கார் என்று இவன் குரல் கொடுக்கவும் சடன் பிரேக் போட்டு நின்றாள்..


அதனை கண்டு வாய் விட்டு சிரித்தான்.


உங்க அப்பா அங்கே இருக்கார் என்று கூறியதுமே சட்டென்று நின்றவளை கண்டு அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான்.


அவள் அருகில் சென்றவன் வா பிரௌனி உங்க அப்பாட்ட போய்ட்டு கடலை போட்டுட்டு இருக்கலாம் என்று அவள் கைப்பற்றி அழைக்க அங்க போய் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும் பேசாம இங்கேயே இருங்க என்று முறுக்கி கொள்ள நீ வந்தா வா என்றவன் நான் போறேன் அந்த கட்ட மீசையா இல்ல இந்த முருக்கு மீசையான்னு இன்னைக்கு ஒன்னுல ரெண்டு பாத்துடனும் என்று விரைந்து சென்றவன் பின்னால் குடுகுடுவென்று ஓடினாள்.


அதுவரையிலும் அவள் பின்னால் வருவது தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் வந்தவன் கீழே ஹாலில் அமர்ந்திருந்தவர்கள் பார்வை வட்டத்தில் வந்ததும் வேண்டுமென்றே தன் பின்னால் ஓடி வந்தவளை அப்படியே அலேக்காக தன் கையில் தூக்கிக் கொண்டான்.


மாமா நீங்க ஏன் என்னை அடிக்கடி தூக்குறீங்க எனக்கு பயமா இருக்குல்ல என்று தன் நெஞ்சில் கையை வைத்து கொண்டு கேட்டவளுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான்.


அவளை தன் கைகளில் தாங்கியவாறே கீழே வந்தவன் இவர்களை முறைத்து கொண்டிருந்த குமரேசனிடம் என்ன மாமனாரே இப்படி உத்து உத்து பாக்குறீங்க எப்படி உங்க பொண்ணை கையில் வச்சு தாங்குறேன்னு பாக்குறீங்களா பொண்டாட்டியை கையில் வச்சு தாங்கனுமாம் அது தான் நல்ல புருஷனுக்கு அழகாம்..


ச்சே ச்சே இதை போய் உங்ககிட்ட சொல்றேன் பார்த்தீங்களா.. உங்களுக்கெங்கே அந்த அருமையெல்லாம் தெரியப்போகுது தன் மனைவியை சக மனுஷியா மதிக்குறவங்கக்கிட்ட இதை சொல்லணும்.. 


மனைவிங்குற பேரில் வீட்டு வேலைக்கு ஆள் எடுத்த உங்ககிட்ட போயும் போய் சொன்னேன் பாருங்க என்னை அடிக்கணும்.. 


அவர் கோபத்தில் பொசு பொசுவென மூச்சு விட்டு கொண்டிருக்க அவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் அவனை முறைத்த படி இருந்தார்.


அவன் அவரை பார்த்து நக்கலாக சிரிக்கவும் அவனை கலங்க வைக்க வழி கண்டுபிடித்தவராக அவர் முகத்தில் வந்து போன ஒளியை கண்டு கொண்டவன் கயலை கீழே இறக்கி விட்டான்.


இதை எல்லாம் வெறும் பார்வையாளராக மட்டுமே வர்ஷா பார்த்துக் கொண்டிருந்தாள்.


பிரசாத்தை பார்த்து நக்கலாக சிரித்தவர் வயசுக்கு வந்த பிள்ளையை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக தான் வந்துருக்கோம் எங்கே அந்த கழுதை அவளை கூப்பிடுங்க நாங்க பொண்ணை கூட்டிட்டு ஊருக்கு கிளம்புறோம் என்று கூற காண்டானவன் எங்க வீட்டுல கழுதை எல்லாம் இல்லை இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஒரு காண்டாமிருகம் வீட்டுக்குள்ள வந்துருக்கு என்று அவரை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு அசட்டையாக கூறினான்.


மேலும் அவரை பேச விடாதவன் இங்க இருக்குறது என்னோட பொண்டாட்டி.. அவளுக்கு என்ன வேணும்னு பார்த்து செய்றதுக்கு அவ புருஷன் நான் இருக்கேன்.. கல்யாணத்துக்கு வந்துட்டு ஒரு ஆசிர்வாதம் கூட பண்ணாம போனவருக்கு இப்போ எங்கிருந்து பொண்ணு வந்துச்சு..


என் பொண்ணு நான் கூட்டிட்டு போவேன் ஏய் என்று உரத்த குரலால் கயலை அழைக்க வர்ஷாவிற்கு கொண்டாட்டம் ஆனது..


இந்த ஏய் ஓய் எல்லாம் உங்க வீட்டோட வச்சுக்கணும்.. இது என் வீடு இந்த கத்துறது அதட்டுறது ஏதும் இங்க இருக்க கூடாது.. அப்பறம் என் பொண்டாட்டி ஒன்னும் ஆடு மாடு இல்ல.. மரியாதையா பேசுறதா இருந்தா பேசுங்க இல்லையா கிளம்பி போய்டே இருக்கணும்.. என்று கறார் பேர்வழியாக அவருக்கு மேல் இவன் தன் மீசையை முருக்கியவாறு கூறினான்.


பாப்பா வா வீட்டுக்கு போகலாம் என்று கயலை அழைக்க தன் தந்தை தன்னை சிறுவயதில் அழைத்தது போல் அழைக்க பரவசம் அடைந்தவள் அடுத்து அவர் வீட்டுக்கு வா என்கவும் பிரசாத் பின்னால் சென்று நின்று கொண்டாள்.


அவள் தன் பின்னால் வந்து நிற்கவும் மகிழ்ச்சியாக உணர்ந்தவன் அவளை இழுத்து தோள் மேல் கை போட்டுக்கொண்டு அவரை திமிராக எதிர்கொண்டான்.


இவர்கள் இருவரும் இங்கு முட்டிக்கொள்ள அங்கு தன் ரௌடியை காண இவர்கள் இங்கு வந்தது தெரியாமல் காலையிலே பரத் கயலின் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தான்..


நானும் எவ்வளவு நாள் தான் காத்துட்டு இருக்குறது கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களான்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு பொண்ணு பாத்துட்டேன்னு சொன்னா மட்டும் போதுமா..


ஒரு பொண்ணு போட்டோ போன் நம்பர் இதெல்லாம் குடுத்தா தானே எல்லாம் முன்னாடியே தெரிஞ்சுக்க முடியும் இந்த அப்பாக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.. நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்குறது..


நானும் பொண்ணை இன்னைக்கு காட்டுவாங்க நாளைக்கு காட்டுவங்கன்னு பார்த்தா ஒன்னும் நடக்கலை.. இவங்களை நம்பினா நாம கடைசி வரை காவி வேட்டி தான் கட்டிக்கிட்டு திரியனும்..


ரவுடி உன் மாமன் உன்னை பார்க்க வந்துட்டே இருக்கேன்.. என்று தான் பாட்டுக்கு அவள் இங்கு இருப்பது தெரியாமல் அங்கு சென்று கொண்டிருந்தான்..


அங்கு வீட்டின் அருகில் தன் காரை நிறுத்தியவன் உள்ளே வர கதவு திறந்து இருந்தது..


பாருடா நான் வரேன்னு முன்னாடியே தெரிஞ்சுருக்கு போல என்று யோசித்துக் கொண்டே வந்தவனுக்கு எப்போது டா அவளை பார்ப்போம் என்றிருந்தது..


சமயலறையில் சத்தம் கேட்கவும் அங்கு அவன் நுழைய பாத்திரம் தேய்த்து கொண்டிருந்தவளை பார்த்து வாவ் செமையா இருக்கா என் செல்லக்குட்டி என்று கொஞ்சி கொண்டவன் அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்..


அவன் அணைக்கவும் அந்நிய ஆண் ஒருவனின் கை தன் மேல் பட்டதும் வீலென்று அலறினாள் அங்கிருந்தவள்..


அவள் வாயை உடனே தன் கையால் பொத்தியவன் ஹே ரவுடி கத்தாத நான் தான் உன் மாமன் வந்துருக்கேன்..


அவளோ அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பெரும்பாடுப்பட்டாள்..


ஹிம்ம் ஹிம்ம் என்று தலையை ஆட்ட அவன் ஹேய் ஒரு நிமிஷம் சும்மா இருடி என்றவன் அந்த கேள்வியை கேட்டான்..


வந்ததே அவளுக்கு கோபம்.. ஒரே தள்ளில் தள்ளி ஏன்டா வெள்ள பன்னி மாதிரி இருந்துகிட்டு என்ன கேள்வி கேட்குற என்று அவனை மொத்தினாள் வள்ளி.


அப்படியென்ன கேள்வி கேட்டிருப்பான்.. 


ஆக மொத்தத்துல தொடப்பக்கட்டை பிய்ய போகுது..


காந்தமென ஈர்க்கும்..



Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments