காதல்-12:
அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு ஹேய் ரவுடி என்ன பேச்சே காணும் என்று அவள் வாயில் கை வைத்து அவளை பேச விடாமல் செய்தவன் லூசு போல் அவளிடம் இவ்வாறு கேட்க ஹிம்ம் ஹிம்ம் என்று திணறியவள் கையை மட்டும் எடு டா இன்னைக்கு என் கையில் கைமா தான் நாயே என்று மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தாள்.
ஹே ரவுடி உன்னை எங்க அப்பா பொண்ணுன்னு சொன்னதும் எனக்கு செம ஷாக் தெரியுமா.. இந்த பாஜாரிய நம்ம கட்டிக்கணுமா அதுக்கு காவி வேட்டி எடுத்து கட்டிகலாமேன்னு தோணுச்சு..
ஆனால் என்ன தான் இருந்தாலும் நீ கயலுக்கு சப்போர்ட்டா இருந்துருக்கணும் அவளை இவ்வளவு கொடுமை படுத்தியிருக்க கூடாது..
பாவம் எப்படியோ கடவுளா பார்த்து அவளை பிரசாத்க்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க.. அவள் இனிமே கண்டிப்பா நல்லா இருப்பா.. ராம் அவளை நல்லா பார்த்துக்குவான் என்று அவன் கயலை பற்றி கூறவும் அதுவரையில் அவன் கைகளில் திமிறி கொண்டிருந்தவள் தன் தோழியும் மாமா மகளுமான கயலை பற்றி பேசவும் அதுவும் தன்னை போலவே அவனும் அவளுக்கு சாதகமாக பேச அவனை அவன் முகம் பார்க்காமலே அவளுக்கு பிடித்து போனது..
உன்னை கல்யாணம் பண்ண சொன்னப்போ வேண்டாம்னு தான் தோணுச்சு ஆனால் அப்பா சொல்லவும் மறுத்து சொல்ல முடியலை..
நானும் உன் போட்டோ காமிப்பாங்கன்னு வெய்ட் பண்ணினா யாரும் அதை பற்றி பேச்சையே எடுக்கல.. அதான் இவங்களை நம்பினா கன்னி கழியாம கைலாசம் போக வேண்டியது தான்னு நெனச்சுட்டு உன்னை பார்க்க ஓடோடி வந்தேன்..
அவள் அமைதியாக இருக்கவும் ஹேய் நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நெனைச்சுக்காத என்றவன் என்னடா இது பீடிகை போடுது அப்படி என்ன தான் இவன் கேட்க போறான் என்று நினைத்து கொண்டிருந்தவள் அவன் அடுத்து கேட்டதில் அடிங்க நாரப்பயலே யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்ட என்று அவனிடம் இருந்து திமிறியவள் அவனை ஒரே தள்ளு தள்ளி அங்கு பக்கத்தில் கிடந்த தொடப்பக்கட்டையால் அடி வெளுத்தாள்..
அடியேய் இப்போ எதுக்கு டி இந்த குமுறு குமுறுற.. ஐயோ அம்மா வயசுக்கு வந்துட்டியான்னு கேட்டது ஒரு குத்தமாயா இப்படி அடிக்கிறாளே அடியேய் நிறுத்துடி என்று அவளிடம் இருந்து தப்பித்தவன் அவளை பிடித்து கொண்டான்.
அவள் அவனிடம் இருந்து திமிர ப்ளீஸ் டி தெரியாம கேட்டுட்டேன் நீ அடிக்குறது வலிக்குது டி வேண்டாம் டி என் பாடி தாங்காது.. என்று பாவமாக கூற அவளுக்கு சிரிப்பு வந்தது..
அவன் இன்னும் இன்னும் அவள் உயிர் வரை சென்று தன்னை அறியாமலேயே தன் தடத்தை பதித்தான்.
அப்படி என்னத்த டி உன்கிட்ட கேட்டேன் இப்படி மேரி கோம் மாதிரி பறந்து பறந்து அடிக்கிற.. முதலில் இந்த தொடப்பக்கட்டையை கீழே போடு என்று அவளிடம் இருந்து பிடுங்கி கீழே போட்டான்.
யாராவது பொண்ணுகிட்ட போய் நீ வயசுக்கு வந்துட்டியான்னு கேப்பாங்களா.. இது மட்டும் எங்க ஊருல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சுது இந்நேரம் உங்களை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருப்பாங்க..
இந்த மாதிரி வேற எங்கேயும் பேசி அடி வாங்கிடாதீங்க என்றவள் முதலில் என்னை விடுங்க எதுக்கு இப்படி பிடுச்சுட்டு நிக்குறீங்க முதலில் நகருங்க என்கவும் ஹே ரவுடி நான் தானே இப்படி இருந்தா என்ன இப்போ என்று சரசமாக கூற நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்லை என்கவும் புரியவில்லை அவனுக்கு..
என்ன சொல்ற புரியலை
ஹிம்ம் நீங்க தேடி வந்த வர்ஷா நான் இல்லை..
அப்போ நீ யாரு என்று கேட்டவாறு அவளை விட்டு விலகினான்..
நான் கயலோட அத்தை பொண்ணு வள்ளி என்கவும்
என்னது என்று அதிர்ந்தவன் சாரி சாரிங்க நான் எனக்கு பார்த்த பொண்ணுன்னு நெனச்சு தான் இப்படி என்று கூற புரியுது என்றவள் விலகிப்போக சென்றவள் அவனை பார்த்து பளிச்சென்று சிரித்து அந்த பஜாரியை கல்யாணம் பண்ண வாழ்த்துக்கள் என்றாள்..
ஆனால் அவள் முகத்தில் இருந்த சிரிப்பு அவள் கண்களை எட்டவில்லை.. அவளை கண்டுகொண்டவன் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்..
அவனை மனதில் ஆயிரம் யோசனைகள் ஒரு முடிவு எடுத்தவன் அவள் கைகளில் தான் வாங்கி வந்திருந்த போனை திணித்தவன் சீக்கிரமே அப்பாவை கூட்டிட்டு வரேன் என்கவும் அவனை புரியாமல் பார்த்தாள்..
அவள் கன்னத்தை தட்டி அப்பாவை கூட்டி வந்து கூடிய சீக்கிரம் பொண்ணு கேட்கிறேன் ரெடியா இரு ப்ளாக்பெர்ரி என்றவன் தெரிஞ்சோ தெரியாமலோ முன்னாடி கட்டிப்பிடுச்சுட்டேன்..
இப்போ தெரிஞ்சே தான் என்றவன் அவளை இறுக்கி அணைத்தவன் மாமா பத்தி கனவு கண்டுட்டே இரு ப்ளாக்பெர்ரி நான் சீக்கிரமே வரேன் இந்த போன்ல கால் பண்றேன் மறக்காம எடு.. நாம பேசுவோம் என்றவன் வந்தது போலவே கிளம்பிவிட்டான்..
வந்தவன் வெறுங்கையோடு செல்லவில்லை அவள் மனதை கொள்ளையிட்டு சென்று விட்டான்.
அவளுக்கோ மனதில் பல எண்ணங்கள் எழுந்தாலும் ஒருவேளை வர்ஷா இவரை காதலித்திருந்தால் என்று அவள் அனைத்து எண்ணங்களுக்கும் முற்று புள்ளி வைத்தது..
அவர்கிட்ட பேசணும் இதைப்பற்றி என்று நினைத்து கொண்டவள் வீட்டில் வேலைகளை முடித்து விட்டு தன் வீட்டிற்கு சென்றாள்.
இங்கு இருவரும் சண்டை கோழிகளாக நின்று கொண்டிருக்க அவன் பேசுவதை பொறுக்க முடியாமல் கோபத்தை அடக்கி கொண்டிருந்தவர் கயல் அவன் பின்னால் சென்று நிற்கவும் கோபமானவர் ஏய் இவ்ளோ நாள் சோறு போட்ட என்னை எதுத்துக்கிட்டு நேத்து வந்தவன் கூட ஒட்டிட்டு நிக்குற என்று கேவலமாக கூற உங்களுக்கு இவ்ளோ தான் மரியாதை இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. என்று கர்ஜித்தான்.
அப்பொழுது தான் மார்க்கெட் சென்று வந்த ராணியும் குணாவும் இவர்களை இங்கு எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் அதிர்ந்த விழிகளில் இருந்தே தெரிந்தது..
ராணியை கண்டதும் ஏய் அவளை கூட்டிட்டு வீட்டுக்கு போ.. சொல்லாம கொள்ளாமல் வீட்டை விட்டுட்டு வந்துட்ட என்று கையை ஓங்க அவர் கையை பிரசாத் பிடித்துக் கொண்டான்..
பொம்பளையை கை நீட்டி அடிக்குறவன் ஆம்பளை இல்லன்னு எங்கேயோ படிச்ச நியாபகம் என்றவன் இப்போ தான் சொன்னேன் இது என் வீடு.. உங்க அதட்டுற வேலையை உங்க வீட்டோட வச்சுக்கணும் இது ஒன்னும் சந்தை கடையில்லை என்றவன் அவர் கைகளை விட்டான்.
அவனை நெருங்கி நின்றவர் யாருக்கும் கேட்காதவாறு எவ்ளோ நாள் காப்பாதுவ.. உன்கிட்ட இருந்து அவளை பிரிக்கிறேன் அப்போ தெரியும் நான் யாருன்னு என்றவர் தன் மனைவியை முறைக்க அவரும் மருமகன் இருக்கும் தைரியத்தில் அவரை முறைத்தார்.
பிரசாத்திற்கு பற்றிக் கொண்டு வந்தது…
எந்த தகப்பன் தன் மகளின் வாழ்க்கையை அழிக்க இப்படி சவால் விடுவார்கள் ஆனால் அவன் முன்னால் இருந்தவர் அதை தானே செய்தார்..
அவரை கண்டு அவன் இதழ்கள் இகழ்ச்சியாய் வலைந்தது.. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துக்கொள் என்று இவனும் கண்களால் அவருக்கு சவால் விட்டான்..
அன்றிலிருந்து இரண்டாம் நாள் வீட்டிற்கு வந்த ப்ராசாத்தை வரவேற்றது வெறும் வீடு தான்..
குமரேசனை முறைத்த ராணி பின் அவரை கண்டு கொள்ளாமல் கயலிடம் சென்று ஏன் டி நீ இங்க நிக்குற போ உள்ள போய் ரூம்ல இரு நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்றவர் அவளை விரட்ட ஏய் நான் அவளை ஊருக்கு வர சொல்லிட்டு இருக்கேன்..
நீ என்னடி அவளை உள்ளே போக சொல்ற என்று கர்ஜித்தார் குமரேசன்.
அவரை திரும்பி பார்த்து முறைத்தவர் அவளை எங்க கூப்பிடுறீங்க அங்க இருந்தப்போ வராத பாசம் இப்போ எப்படி வந்துச்சு.. மாப்பிள்ளை முன்னாடி நான் ஏதும் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.. உங்களை யாரும் இங்கு அழைக்களையே என்று எகத்தாளமாக கூறினார்.
ஏய்.. அங்க வீட்டை திறந்து போட்டுட்டு இங்க வந்துட்டு பேச்சை பாரு.. நீ எல்லாம் பொம்பளையா டி என்கவும் ஏன் இத்தனை வருஷம் குடும்பம் நடத்தும் போது உங்களுக்கு தெரியலையா பொம்பளையா..
என் பிள்ளைக்காக தான் இதுவரைக்கும் நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாடிட்டு இருந்தேன் இதுக்கு மேல உங்க பேச்சை கேட்கணும்னு எந்த அவசியமும் இல்லை.. வந்தோமா போனோமானு இருங்க என்கவும் நீ அங்க வீட்டுக்கு வந்து தானே டி ஆகணும் அப்போ இருக்கு உனக்கு என்று கறுவினார்..
நான் அங்கே வர மாட்டேன் இருக்கவே இருக்கு என் அண்ணன் வீடு.. கயலை சுட்டிக் காட்டியவர் தோ இவளுக்காக மட்டும் தான் உங்களை சகிச்சுட்டு இருந்தேன்.. உங்க அம்மா கூட சேர்ந்துட்டு எவ்வளவு ஆட்டம் போட்டீங்க..
சின்ன பிள்ளைன்னு கூட பார்க்காம என் பிள்ளைக்கு சூடு வச்சீங்க.. நான் எதையும் மறக்கவே இல்லை.. மறக்கவும் மாட்டேன்.. என் பிள்ளை இனிமேலாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்..
அவளை நிம்மதியா இருக்க விடுங்க என்றவர் திரும்ப குமரேசன் ஏதோ சொல்ல வர குணா அவரிடம் வந்தவன் அப்பா போதும் நிறுத்துங்க.. முதலில் நீங்க ஊருக்கு கிளம்புங்க என்கவும் டேய் அவர் இங்க இருக்கட்டும் எதுக்கு போகணும் நீங்க இங்கே இருங்க என்று கூறியது வேறு யாருமில்லை கயல் தான்.
அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்க்க ஏய் உனக்கென்ன பைத்தியமா பிடுச்சுருக்கு என்பது போல் அனைவரும் அவளை பார்த்தனர்.
வாங்க என்று அவர்களை அழைத்து சென்றவள் அவர்களுக்கு அறையை காட்டியவள் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம் என்று விட்டு வர அக்கா உனக்கென்ன பைத்தியமா அவரை பற்றி தெரிஞ்சும் எப்படி நம்புற..
அவர் என்னை பாப்பான்னு கூப்பிட்டாரு டா.. சின்ன வயசுல அப்படி தான் கூப்பிடுவாறு.. பாவமா இருக்குடா அவரால எந்த பிரெச்சனையும் வராது அதான் மாமா இருக்காங்களே அவங்க பார்த்துப்பாங்க என்று திடமாகக் கூறினாள்..
உன்னலாம் திருத்த முடியாது டி என்று ராணி தலையில் அடித்துக் கொண்டு சென்றுவிட்டார். குணாவும் அறைக்கு சென்று விட கயலும் பிரசாத்தும் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
இங்கு அறையில் வர்ஷா ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.. என்ன இப்படி ஒத்துமையா இருக்காங்க.. விட கூடாதே என்று நினைத்தவள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
குமரேசன் என்கிட்டேயே சவால் விடுறியா இருடா உன்னை என்கிட்ட கெஞ்ச வைக்கல நான் குமரேசன் இல்லடா.. என்று அவன் மேல் வஞ்சம் வைத்தார்.
பிரசாத் கயலை பார்த்த படி இருக்க கயல் மனதிற்குள் போச்சு மாமாவும் திட்ட போறாரு ச்சே இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியல.. எல்லார்ட்டையும் திட்டு வாங்கணும் போல என்று நினைத்துக் கொண்டே அவனருகில் வந்து நிற்க அவளை பார்த்தவன் தன்னோடு கட்டிக் கொண்டான்..
அவளோ அதிர்ந்தவளாக உங்களை புரிஞ்சுக்கவே முடியலை மாமா நீங்க திட்டுவீங்கன்னு நினைச்சா கட்டிப்பிடிக்கிறீங்க என்று கேட்க சிரித்தவன் நான் கோபமா தான் பிரௌனி இருக்கேன் என்று கூற பட்டென்று தன் இருக்கைகளால் கன்னத்தை பொத்தி கொண்டாள்.
எப்படி பிரௌனி உன்னால் மட்டும் இப்படி இருக்க முடியுது என்கவும் எப்படி இருக்கேன் என்று கேள்வி கேட்டவளை இறக்கி விட்டவன் உன்னை ஒரு ஆளா கூட மதிக்காத அந்த கிடா மீசையை சேர்த்துகிட்டியே அதை கேட்டேன் என்று கூறினான்.
பார்க்க பாவமா இருந்துச்சு மாமா அதான் நீங்க எல்லாரும் அவரை திட்டும் போது ஒன்னும் பேச முடியாமல் நிக்குறாரு பாவம் அவர் இங்க இருக்குற வரைக்கும் இருக்கட்டும் என்று கெஞ்ச அவன் பெருமூச்சு விட்டவன் அவர் தான் கொஞ்ச நேரம் முன்னாடி நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க போறதா சவால் விட்டார் என்று கூறவும்
ஐயோ மாமா போச்சு இப்போ என்ன பண்றது என்கவும் சிரித்தவன் இப்போ வந்து கேளு என்ன பண்றதுன்னு போடீங்க வந்துட்டா பாவமா இருக்கு பாயாசமா இருக்குன்னு..
அவள் பயப்படவும் அவள் கைகளை தன் கைகளோடு கோர்த்து கொண்டவன் கவலை படாத பிரௌனி உங்க அப்பவால ஒன்னும் புடுங்க முடியாது என்றவன் தன் போனில் கிளாஸ் இருப்பதாக செய்தி வரவும் சரி வா கிளாஸ் இருக்கு நாம போவோம் என்று அழைத்து கொண்டு சென்றான்.
அன்று இரவே ஒரு போன் கால் வர அவசரமாக கிளம்பியவன் பிரௌனி கொஞ்சம் அர்ஜண்ட் டா நான் சீக்கிரம் வந்துருவேன் கவலைப்படாத என்ன சரியா என்று அவள் கன்னம் தட்டியவன் மிகவும் பதட்டமாக இருந்தான்.
அவளை விட்டு போகவும் அவனுக்கு மனது இல்லை.. ஆனால் போய் ஆக வேண்டிய கட்டாயம்.. அவனின் மற்றும் ஓர் உயிர் அங்கு என்ன நிலையில் இருக்கிறதோ என்ற அச்சம் அவன் மனதை சூழ்ந்திருந்தது..
இவன் இல்லாத நேரம் பார்த்து வர்ஷாவின் கையில் அவர்கள் இருவரும் கையெழுத்து போட்டிருந்த டிவோர்ஸ் பேப்பர் மாட்ட அதனை தன் தந்தையிடம் சந்தோஷமாக கொண்டு சென்று நீட்டினாள்..
இது போதுமே இது மட்டும் போதும்.. என்கிட்டேயே சவால் விடுறியா.. உன்னை சுத்தல்ல உடுறேன் நீயா நானான்னு பார்ப்போம்..
அன்றே கயலை இழுத்து கொண்டு தன் ஊருக்கு சென்றுவிட்டார்.
காந்தமென ஈர்க்கும்...
0 Comments