Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 13



 காதல்-13:


வீட்டுக்கு வந்த பரத் தன் தந்தையிடம் யப்பா நான் வர்ஷாவை பார்க்க போனேனா என்று ஆரம்பிக்கவும் டேய் அவள் அவங்க அப்பாவோட இங்க வந்துட்டாளே என்று கூறினார்.


இப்போ வந்து சொல்லு அவ இங்க வந்துடான்னு.. நீயெல்லாம் ஒரு அப்பாவா சொல்லு தாடி நீயெல்லாம் ஒரு அப்பாவா சொல்லுயா சொல்லு என்று கேட்க ஏன் டா இப்படி கத்துற எங்கயோ செமத்தையா வாங்கிருப்ப போலையே என்கவும் திருத்திருவென முழித்தான்.


என்ன டா நீ முழிக்குறது சரியில்லையே என்ன ஆச்சு என்கவும் தான் அங்கு சென்றது முதல் அனைத்தையும் கூறியவன் எப்பா எனக்கு ப்ளாக்பெர்ரி தான் வேணும்.. நான் பிக்ஸ் ஆயிட்டேன் என்கவும் எதையோ நீ மறைக்குறன்னு தோணுது மை சன்..


அது என்னன்னு முதலில் சொல்லு அப்பறம் என் முடிவை சொல்றேன் என்கவும் விட மாட்டாரே இவரு என்று உள்ளுக்குள் அவரை திட்டியவன் அவளிடம் தொடப்பக்கட்டையில் அடிவாங்கியதை கூற அடக்கமாட்டாமல் சிரித்து விட்டார்.


இந்த அநியாயம் எந்த ஊரில் நடக்கும் பையன் அடி வாங்கிட்டேன்னு சொல்றேன் அதை கேட்டு கெக்க பெக்கென்னு சிரிக்குற முதல் அப்பா நீயா தான் இருப்ப என்கவும் அவர் சிரித்து கொண்டே டேய் எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டு தான் அடி வாங்குவாங்க.. நீ அதுக்கு முன்னாடியே வாங்கிட்ட..


நீ எவ்ளோ பெரிய அதிஷ்டசாலி தெரியுமா என்றவர் வள்ளி நல்ல பொண்ணு தான் நாளைக்கே அவங்க வீட்டில் பேசிடலாம் என்கவும் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அட ச்சீ தள்ளு டா என்று அவன் முதுகில் செல்லமாக அடி போட்டார்.


அப்பா வர்ஷா கிட்ட நான் தான் மாப்பிள்ளைன்னு சொல்லிட்டீங்களா என்கவும் இல்லப்பா இனிமே தான் பேசனும்னு நெனச்சேன் அவளுக்கு சுத்தமா இதை பற்றி தெரியாது..


வேதநாயகம் ஐயாக்காக தான் அந்த ரெண்டு பிள்ளைகளையும் ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொண்டுகணும்னு நெனச்சேன் குணா ஆம்பளை பிள்ளை அவன் அவனை பார்த்துக்குவான்..


 ஆனால் பெண் பிள்ளைகளை அப்படி விட முடியாது இல்லையா கயலுக்கு ஒன்னுமே தெரியாது அது அப்பாவி பிள்ளை..எப்படியோ அது நல்ல மனசுக்கு பிரசாத் கூட நல்லா இருக்கும்.


இப்போ வர்ஷா தான் என்ன பண்றதுன்னு தெரியலை.. அவளும் நல்ல பிள்ளை தான் என்ன ஒன்னு எல்லாரும் அவளையே தாங்கி பிடிக்கணும்ன்னு நினைப்பாள்.. தன் அக்கா தானே என்று நினைக்க மாட்டா..


சின்ன பிள்ளை தானே அந்த பக்குவம் இல்லை என்னை பொறுத்த வரைக்கும் அவள் ஒரு ஸ்பாயில்டு கிட்.. அவள் கண்ணாடி பாத்திரம் மாதிரி மெதுவா கையாலுனும்.. அதான் என்ன பண்றதுன்னு தெரியல.. பார்ப்போம் அவளுக்கானவன் இனிமேவா பிறக்க போறான் பார்ப்போம் என்கவும் ஹிம்ம் சப்பா என்று பரத் பெருமூச்சு விட ஏன்டா அவக்கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன்னு நினைப்பா


இல்லப்பா இவ்வளவு நேரம் ரம்பம் போல அறுத்தியே அதான் நான் இன்னும் உயிரோட இருக்கேனான்னு செக் பண்ண மூச்சு விட்டு பார்த்தேன் என்றான்..


அடிங்க என்று அவனை துரத்த பிரசாத்திடம் இருந்து போன் கால் வந்தது..


என்ன இந்த நேரத்துல கூப்பிடுறான் என்று நினைத்து கொண்டே மணியை பார்க்க மணி இரவு ஒன்றை நெருங்க என்னப்பா பிரசாத் கால் பண்றான் என்று அழைப்பை ஏற்றான்..


அந்த பக்கம் பிரசாத்தின் குரல் பதட்டமாக கேட்டது..


டேய் பரத் இன்னும் ஒரு மணி நேரத்துல நமக்கு டெல்லிக்கு பிலைட் கிளம்பு சீக்கிரம் என்கவும் அவன் டெல்லி என்றதும் எதுவும் கேட்காமல் ஓகே டா இன்னும் பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன் என்றவன் கைபேசியை அணைத்து விட்டு தர்மனிடம் விஷயத்தை கூறியவன் கிளம்பினான்.


அங்கு தன் பிரௌனியிடம் ஆயிரம் பத்திரம் சொல்லிக்கொண்டு அவளை பிரிய முடியாமல் பிரிந்தவன் பத்திரமா இரு பிரௌனி உடனே வந்துருவேன்.. என்றவன் போய்ட்டு வந்து நிறைய சொல்லணும் என்றவன் அவள் உச்சந்தலையில் தன் இதழை பதித்தவன் அங்கு இருந்தவருக்கு நன்றாக கேட்கும் படியே நான் இல்லாத நேரம் ஏதாவது ஏடாகூடமா பண்ணனும்னு நினைச்சீங்க அப்பறம் என்ன பண்ணுவேன்ன்னு எனக்கே தெரியாது என்று வெளிப்படையாகவே மிரட்டியவன் பரத் வரவும் அவனுடன் கிளம்பி விட்டான்..


இவன் என்னடி ஏதோ பொண்டாட்டியை பார்க்க போற மாதிரி இப்படி வேகமா போறான் எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு என்று அவர்ப்பாட்டுக்கு கூறிவிட்டு சென்றுவிட்டார்.


கயல் அவரை ஒரு பார்வை பார்த்தவள் ஏதும் பேசாமல் தன் அறைக்கு சென்று விட்டாள்.


கயலுக்கு வீட்டில் பிரசாத் இல்லாததும் என்னவோ போல் இருந்தது.. அவளும் என்ன தான் செய்வாள் இந்த மனம் அவனையே தேடி ஓடிக்கொண்டிருந்தது.


வீட்டில் அத்தனை நபர்கள் இருந்தாலும் யாருமே இல்லாதது போல் இருந்தது. அவள் மனம் பிரசாத்திற்காக ஏங்கியது.


 மாமா எப்போ வருவீங்க.. எனக்கு நீங்க இல்லாம ஏதோ மாதிரி இருக்கு.. என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல என்று மானசீகமாக அவனிடம் உரையாடிக் கொண்டிருந்தாள்.


தன்னவனை நினைத்த படி இருக்க அவள் அறைக்குள் வந்த வர்ஷா அவள் துணிகள் அடங்கிய கப்போர்டை நோண்டி கொண்டிருந்தாள்.


ஏதோ சத்தம் கேட்கவும் நினைவுக்கு வந்தவள் அங்கு வர்ஷா நோண்டி கொண்டு இருக்கவும் என்ன வர்ஷா வேணும் என்கவும் எனக்கு போட்டுக்க ட்ரெஸ் வேண்டும் நானே எடுத்துப்பேன் நீ ஒன்னும் எடுத்து கொடுக்க வேண்டாம் போ அங்குட்டு என்று அவளை விரட்டியவள் ஏதோ பேப்பர் அவள் கையில் தட்டுப்படவும் அதனை பிரித்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி..


டிவோர்ஸ் பேப்பரை அவள் கையில் பார்த்ததும் அதிர்ந்த கயல் வர்ஷா அதை இங்கு கொடு என்கவும் அவள் பேச்சை கேட்காமல் தன் தந்தையிடம் எடுத்து சென்று நீட்டினாள்.


அதனை வாங்கி பார்த்தவர் ஹாஹா என்று சிரித்தவர் இது போதுமே அவன் என்னவோ உத்தமன் மாதிரி அப்படி பேசினான்.. இப்படி டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கி வச்சுருக்கான்..


 ஏய் ராணி இங்க வாடி என்று உரக்க அழைத்தார். 


ராணி ராணி என்று அழைக்க ராணி வரவும் என்னமோ ஊர்ல இல்லாத மருமகனை கண்டது போல எல்லாம் அவன் பார்த்துப்பான்னு சொன்ன இப்போ என்ன உன் மருமகன் டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டு வச்சுருக்கான் என்று குண்டை தூக்கி போட்டார்.


குமரேசன் கூறியதை கேட்டு அதிர்ந்தவர் என்னடி இது என்று கயலிடம் கேட்க அம்மா அது உண்மை இல்லை ம்மா என்கவும் ஏய் உண்மைய சொல்லு என்று அவர் கர்ஜித்தார்.


ஹிம்ம் ஆமா ம்மா நானும் மாமாவும் தான் கையெழுத்து போட்டோம் என்றவள் மேலும் கூற வர அவளை பேசவே விடாமல் குமரேசன் அதான் அவளே சொல்லிட்டாலே பார்த்துக்கோ நல்லா.. அவன் படிச்சவன்னு நிரூபிச்சுட்டான்..


நம்ம முன்னாடி நல்லா பார்த்துக்குற மாதிரி நடுச்சுட்டு இவக்கிட்ட பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு கழட்டி விடலாம்னு தெளிவா பிளான் போட்டிருக்கான் என்று கூறினார்.


ராணி நெஞ்சில் கை வைத்தவர் அப்படியே நின்று விட்டார்..


மாமா அப்படி எல்லாம் இல்லை.. அது கல்யாணம் ஆன புதிதில் நடந்தது இப்போ அப்படி இல்லை என்று கூற 


ஏய் ராணி அவளுக்கென்ன தெரியும் நீ அவளை ஊருக்கு கூட்டிட்டு கிளம்பு அவருக்கு பொண்டாட்டி வேணும்னா அவரே வருவார்..


யாருக்கு தெரியும் இவளை கழட்டி விட்டுட்டு வேற எந்த பொண்ணையாவது கல்யாணம் பண்ணிக்கிலாம்னு கூட நெனைச்சுருப்பார்.. ஒருவேளை இப்போ கூட நாம அவ்ளோ கேட்டும் எங்க போறேன்ன்னு சொல்லவே இல்லையே என்று அதையும் இதையும் கூறி ராணியை வைத்தே கயலை ஊருக்கு அழைத்து சென்று விட்டார்..


வாடா என்கிட்ட சவால் விடுறியா.. என்கிட்ட இப்போ வந்து தானே ஆகணும் என்று உள்ளுக்குள் கருவிக்கொண்டார்.


இங்கு கயலை விட்டு வர மனதே இல்லாமல் வந்தவன் பிலைட்டில் ஏறி அமர்ந்தவன் மனம் முழுக்க முழுக்க கயலை சுற்றியே இருந்தது.


அவளை தனியே விட்டுவிட்டு வந்திருக்க கூடாதோ என்று காலம் கடந்து யோசித்தான். அந்த ஆளு லூசு தனமா ஏதாவது பண்ணி வச்சா என்ன பண்றது இப்போ என்று யோசித்து கொண்டிருந்தான்.


அவனருகில் வந்தமர்ந்த பரத் மச்சான் என்னடா ஆச்சு.. ஏன் இப்போ டெல்லிக்கு என்று கேட்கவும் ஆக்சிடெண்ட்ன்னு போன் வந்துச்சு டா என்கவும் என்னடா சொல்ற ஜெபிக்கு ஒன்னும் இல்லையே என்று பதட்டமாக கேட்டான்.


காலில் அடின்னு சொன்னாங்க, வண்டில வந்துட்டு இருக்கும் போது ஸ்கூல் பொண்ணு திடீர்னு வந்ததும் வண்டிய திருப்பும் போது கீழ விழுந்து அடி பட்டுருச்சாம்..


இப்போ அங்க இருந்து தான் போன் வந்துச்சு, என்று பின்னாடி சீட்டில் தலை சாய்த்து கொண்டான்.. விடு மச்சான் ஒன்னும் இல்லை கவலை படாத உலகம் சரியா போகும் என்று தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான்..


ஜெபி இருந்த மருத்துவமனையை அடைந்தவர்கள் அங்கிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் சென்று ஹலோ மேம் ஒரு அஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி ஜெய் பிரசாத்ன்ற பேரில் யாராவது அட்மிட் ஆகி இருக்காங்களா என்று வினவவும் இருங்க சார் ஒரு நிமிஷம் செக் பண்ணிட்டு சொல்றேன் என்றவள் செகண்ட் ப்லோர் போய் பாருங்க சார், ரூம் நம்பர் 209 என்று கூறியதும் இருவரும் விரைந்து சென்றனர்.


அங்கு காலிலும் கையிலும் கட்டு போட்டு நித்திரையில் இருந்தான் ஜெய் பிரசாத், ராம் பிரசாத்தின் தம்பி இவர்கள் மூவருக்கும் செல்லமான ஜெபி இருபத்தைந்து வயது இளைஞன், எம்.பி.ஏ முடித்துவிட்டு டெல்லியில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிபுரிகிறான்.


அவன் அருகில் சென்ற பிரசாத் அவன் தலையை கோத அங்கிருந்த நர்ஸ் வந்து அவர் மயக்கத்தில் இருக்கார் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விடுவார் என்று கூறியவர் கையில் சிறு எலும்பு முறிவு எனவும் காலில் சின்ன காயம் என்று கூறினார்.


ஒரு ஐந்து நாட்கள் இங்கு இருக்கட்டும் பின் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.. டாக்டர் சாரை பார்க்கணும் என்கவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரௌண்ட்ஸ் வருவார் அப்போ பார்க்கலாம் சார், இப்போ ஒரு ஆப்ரேஷன் போய்ட்டு இருக்கு என்றவர் வெளியில் சென்றுவிட்டார்.


அவர் வெளியில் சென்றதும் இவனை யாருடா வண்டி எடுத்துட்டு போக சொன்னது லூசு பய இப்படி கையை உடைச்சுட்டு படுத்து கிடக்கிறான் என்று கத்த ஆரம்பித்து விட்டான்.. பரத்தால் அவனை சமாளிக்க முடியவில்லை.


டேய் அவன் என்ன சின்ன பையனா இவ்ளோ நாள் பைக் அவன் ஓட்டளையா, ஏதோ ஒரு பொண்ணு தான் குறுக்க வந்துருச்சுன்னு நீ தானே சொன்ன அப்பறம் எதுக்கு அவனை திட்டிட்டு இருக்க கொஞ்ச நேரம் அமைதியா இருடா, வாயை திறந்தால் மூடவே மாட்டேங்குற உன்னை வச்சு எப்படி தான் கயல் குடும்பம் நடத்துதோ..


அந்த பிள்ளைக்கு கோயில் கட்டணும் என்கவும் டேய் கயலை தனியா விட்டுட்டு வந்துட்டேன் அந்தாளு வேற அங்க தான் இருக்கான் என்கிட்டேயே சொல்றான் உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு காமிக்குறேன்னு.. எனக்கு ஏதோ மனசுல சரியா படல டா என்று புலம்பினான்.


டேய் எருமை அதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன நீ கிளம்பு நான் இங்கே பாத்துக்குறேன் என்கவும் இல்ல டா இவனை இப்படி விட்டுட்டு போகவும் மனசு இல்ல அவளை அங்க அந்தாளுக்கிட்டு விட்டுட்டு இருக்கவும் முடியாது.. இவங்க வேற அஞ்சு நாள் இங்க இருக்கணும்னு சொல்றாங்க இப்போ என்ன பண்றது என்று இருதலைகொல்லி எரும்பாய் தவித்தான்..


இங்கும் இருக்க முடியாமல் அங்கும் செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தான்.


சற்று நேரம் பொறுத்து டாக்டர் வரவும் அவரிடம் அனைத்தையும் கேட்டுக்கொண்டவன் தன் தம்பி கண் திறப்பதற்காக காத்துக்கொண்டு இருந்தான்.


இரண்டு மணி நேரம் கழித்து மெல்ல கண் திறந்தவன் தன் தமையனை அங்கு கண்டதும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் விழித்தவன் அடுத்த நிமிடம் அவன் முகம் கலவரமானது.


ஜெபி கண் விழித்ததும் ராம் பிரசாத் அவனிடம் சென்று அவனை கட்டி அணைத்து கொண்டான்.. ஜெபிக்கோ இதென்னடா ஆச்சரியம் என்று தன் கண்களை விரித்தவன் தன் தமையனை அடிப்படாத கையால் அணைத்தவன் எதிரில் இருந்த பரத்தை பார்த்து என்ன இது இவ்ளோ ஆச்சரியமாக இருக்கு இது என் அண்ணா தானா என்று கண்களால் வினவ ஆமா என்று தலையை ஆட்டினான்..


இதுவரையில் யாரிடமும் தன் உணர்ச்சிகளை வெளிகாட்டாதிருந்தவன் இப்பொழுது வெளிப்படுத்தவும் அனைவருக்கும் ஆச்சரியம்..


ஆனால் அதற்கு காரணமானவளோ இங்கு தன் ஊருக்கு தன் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தாள்.


காரில் இருந்து இறங்கியவர்கள் உள்ளே செல்ல கயல் வெளியே நின்றாள். அவள் என்றும் அந்த வீட்டில் இருந்தது இல்லையே இப்பொழுது மட்டும் எப்படி உள்ளே செல்வாள். அப்படியே மரம் போல் நிற்க ராணி உள்ளே வந்தவர் தன் மகள் வெளியில் நிற்கவும் அவளிடம் சென்று அழைத்து வந்தார்.


வாசற்படியில் கால் வைக்கவும் எங்க டி உள்ள வர என்று குமரேசனின் குரல் அவர்களை தடுத்து நிறுத்தியது. அங்க அவன் இருந்த தைரியத்துல என்னா பேச்சு பேசுற என்றவர் தன் இடுப்பில் இருந்த பெல்ட்டை அவிழ்த்தவர் இப்போ கூப்பிடு டி உன் மருமொவனை என்று நக்கலாக கூறியவர் இந்த வீட்டு வாசலில் கால் வைக்க மாட்டேன்னு சொன்ன.


இப்போ எதுக்கு டி உள்ள வர என்று ராணியின் அருகில் வந்தவர் எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என்கிட்டையே அப்படி பேசுவ.. அவன் இனிமே வர மாட்டான் அவ்ளோதான் நீங்க கனவு கண்டுட்டு இருங்க அவன் இவளுக்காக வருவான்னு.


தொல்லை ஒழிஞ்சுதுன்னு போய்கிட்டே இருப்பான். அவன் எவ்வளவு விவரமா கையெழுத்து வாங்கிட்டு நடிச்சுருக்கான்.. நீ அவன் இருக்குற தைரியத்துல என்னை எதுத்து பேசுற என்றவர் பெல்டால் அடிக்க போக அதனை பிடித்து தடுத்து நிறுத்தியது வேறு யாருமல்ல கயல்தான்.


ஆஹா கருப்பு பெல்ட் வேலை பார்க்க ஆரம்பிச்சுடுச்சு.. எங்க மாமா கரெக்ட்டா கத்து கொடுத்திருக்கார் என்று பிரசாத்திற்கு இங்கிருந்து பறக்கும் முத்தம் அனுப்பியவன் அங்கு கவனித்தான்.


ஏய் என்ன தடுக்குற விடு என்று கர்ஜிக்கவும் வாயே திறக்காமல் அவரை அலட்சியமாக பார்த்தவள் ஒரு இழுவை தான் இழுத்தாள் அவள் கையில் பெல்ட் வந்து விட்டது.


தன் தாயிடம் திரும்பியவள் ம்மா நீ சொன்னதுக்காக தான் அங்கே இருந்து உன்கூட வந்தேன்.. மாமாக்கு ஏதாவது வேலையா இருக்கும் அவர் வருவாரு.. நாம இங்க இருக்க வேண்டாம் வா போகலாம் என்கவும் ஏய் அவன் வர மாட்டான்.. உன்னை தேடிட்டு அவன் இங்க வர போறானா நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும் என்று நக்கலாக கூறினார்.


அவர் உங்களை போல இல்ல யாராவது பெத்த பொண்ணோட வாழ்க்கையோடு விளையாடுவங்களா.. அவர்க்கிட்டையே உங்க ரெண்டு பேரையும் பிரிக்குறன்னு சொல்லி வச்சுருக்கீங்க, நீங்க எல்லாம் என்ன ஜென்மமோ, அப்போவே முடிவு பண்ணிட்டேன் உங்களுக்கும் எனக்கும் இனி எந்த உறவும் இல்லை என்றவள் கசந்த முறுவளுடன் இதுக்கு முன்னாடியும் அப்படி இருந்ததா எனக்கு நியாபகம் இல்லை.


ம்மா நீ வா மாமா வீட்டுக்கு போவோம் என் புருஷன் என்னை தேடிட்டு வருவாரு வந்து சிலர் முகத்துல கறியை பூசுவார்.. நீ வா ம்மா என்றவள் தன் அன்னையை அழைத்து கொண்டு வள்ளி வீட்டிற்கு சென்றாள்.


கயலை தேடி வருவானா..?


காந்தமென ஈர்க்கும்.. 


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments