காதல்-8:
வயிற்று வலி என்று படுத்திருந்தவள் மெத்தையில் உருண்டு கொண்டு மாமா போச்சு வலிக்குது.. எனக்கு எப்போவும் இது போல வலிக்காது மாமா.. என்று வலியில் திணறி திணறி கூறியவளை பார்த்து இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..
அவளுக்கு வலிப்பது இவனுக்கு வலிக்க ஹாஸ்பிடல் வான்னு சொன்னா கேக்குறியா.. பெரிய புலவாலி போல வாய் கிழிய பேசுறது என்று தன்னால் அந்த வலியை போக்க முடியவில்லையே என்ற காண்டில் அவளிடம் கத்தினான்..
அதை உணர்ந்து கொண்டவள் அவனை சகஜம் ஆக்கும் பொருட்டு மாமா ஒருவேளை நான் உங்களுக்கு ரொம்ப தொல்லை கொடுக்கிறேன்னு சாப்பாட்டில் பினாயில் ஊத்திட்டீங்கலா என்று சிரிப்புடன் கேட்க அவன் வலிக்குதா பிரௌனி என்று அவள் இடுப்பை அழுத்தி கொடுத்தான்..
அவளுக்கு அது நன்றாக இருந்ததோ என்னவோ.. அவன் அழுத்த அழுத்த சூப்பர் மாமா.. இங்க கொஞ்சம்.. ஹிம்ம் இங்க கொஞ்சம் என்று திரும்பி திரும்பி படுத்து அவனுக்கு காட்டிக் கொண்டிருக்க அடியேய் ஏன் இப்படி உருளுற.. ஏற்கனவே வலிக்குதுன்னு சொல்ற.. ஒழுங்கா படு என்று அதட்டினான்..
மாமா நான் ஒன்னு சொல்லுவேன் கோபப்படாதீங்க என்று பீடிகை போட என்ன சொல்ல போற.. சொல்லு என்கவும் மாமா எனக்கு கோவிலுக்கு போகணும் போல இருக்கு..
அவன் முகம் மாறுவதை கண்டு அப்படியே கைகளால் வாயை பொத்திக் கொண்டாள்.. அவள் கோவில் என்றதும் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அது அவனை தினம் தினம் குத்திக் குலைக்கிறது…
எவ்வளவு வருடங்கள் கடந்தாலும் அவன் நெஞ்சில் மாறா வடுவாய் மாறி போன அந்த சம்பவத்தை நினைத்தால் அவன் பட்ட துயரங்கள் அனைத்தையும் வரிசை கட்டி நின்று அவனை விசாரித்து போகும்..
முகமெல்லாம் சிவந்து அமர்ந்திருந்தவனை கண்டு பயந்தவள் மாமா நான் தெரியாம சொல்லிட்டேன்.. உங்களுக்கு பிடிகலைன்னா போக வேண்டாம்.. நீங்க கஷ்ட படாதீங்க எல்லாம் என்னால தான் ச்சே என்று தன் தலையில் அடித்துக் கொண்டவளை தடுத்தவன் போலாம் டா கிளம்பு என்று எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கூறினான்..
அவள் கிளம்பி வந்ததும் உனக்கு வயிறு வலி இல்லதானே.. இருந்தா சொல்லு நாளைக்கு கூட போகலாம்.. உன் சாமி ஒன்னும் கோவிச்சுக்காது என்று கூறவும் இப்போ ஒன்னும் இல்லை மாமா வயிறு வலி இல்லை வாங்க போகலாம் என்று அவன் கையை பற்றிக் கொள்ள இருவரும் வெளியே வந்தனர்..
அவள் வெளியே வந்ததும் மாமா எந்த கோவில் போறோம் என்று கேட்க இங்க பக்கத்துல ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு.. அங்கேயே போகலாம் என்கவும் சரி மாமா என்றவள் மாமா எனக்கு ஒரு ஆசை என்கவும் சொல்லு இப்போவே உம் ஆசையை நிறைவேற்றி வச்சிடுவோம்.. என்று சிரித்துக் கொண்டே சொல்ல
நீங்க என் கூட இருந்தாலே என்னுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறுது மாமா.. என்னோட ஆசை எல்லாத்தையும் நிறைவேற்றி குடுக்குற உங்க மேல அளவு கடந்த அன்பு பொங்கி வழியுது என்று தாங்கள்வெளியில் நிற்கிறோம் என்ற நினைவு இல்லாமல் அவன் உதட்டில் முத்தமிட அருகில் செல்ல
அவள் செயலை உணர்ந்தவன் அதிர்ந்து அடியேய் உன் பொங்கி வழியுற அன்பை இப்போ கொஞ்சம் தண்ணி ஊத்தி அணை டி.. என்று கூறியவன் தெரியாம உன்கிட்ட சொல்லிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே ஐயையோ.. என்று தலையில் கை வைக்க கிண்டல் பண்ணாதீங்க மாமா என்று அவன் கையில் அடித்தாள்..
சிரித்துக் கொண்டே சொல்லு என்ன ஆசை என் பிரௌனிக்கு என்று கனிவாக கேட்க மாமா உங்ககிட்ட பைக் இருக்கா.. நான் பைக்குல போனதே இல்ல.. என்னை கூட்டிட்டு போறீங்களா என்று கண்களை சுருக்கி கேட்டவளிடம் அவனால் மறுக்கவும் முடியுமோ..
பைக் இருக்கு டா.. இரு எடுத்துட்டு வரேன் என்கவும் ஐயோ எனக்கு ஜாலியா இருக்கு மாமா.. என்று அவனை கட்டிக்கொள்ள அவனுக்கு கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது..
எங்கே சாமி பார்த்து விடுவாரோ என்று பயந்தவன் அவளை விளக்கவும் மனமில்லாமல் கவி இரு டா நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேன் என்று விட்டு சென்றான்..
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருந்ததை இரு கண்கள் வெறுப்புடன் நோக்கியது..
இது தான் சரியான சமயம் வெளிய கிளம்புறாங்க..
….
ஹிம்ம் ஆமாம்.. அந்த கருவாச்சியும் தான்..
….
ச்சீ அவளை பார்த்தாலே எனக்கு கொமட்டிட்டு வருது.. அவகிட்ட போய் என்னை பேச சொல்ற என்று எரிந்து விழ அந்த பக்கம் இருந்தவர் என்ன கூறினாரோ சரி சரி இந்த கரும்பிக்கூடலாம் பேசனும்னு என் தலையெழுத்து ச்சே வை போனை என்று கூறிவிட்டு தன் அலைப்பேசியை அனைத்து வைத்தார்..
பிரசாத் பைக்கை எடுத்து வந்தவன் வா பிரௌனி வண்டில ஏறு என்று கூறவும் மாமா இந்த வண்டியில நீங்க உட்காந்துருக்குரத பார்த்தா எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா.. கோயிலுக்கு போய்ட்டு வந்ததும் முதல்ல திஷ்டி சுத்தி போடணும்..
ஏன் மாமா இவ்ளோ அழகா இருக்கீங்க.. எல்லார் கண்ணும் இன்னைக்கு உங்க மேல தான் என்கவும் அடியேய் இன்னைக்கு வயிறு வலின்னு சொல்லி கிளாஸுக்கு டேரா போட்டுட்டு நீ இதும் பேசுவ.. இதுக்கு மேலையும் பேசுவ என்கவும் ஐயோ கண்டு பிடுச்சுட்டானே என்று தன் குட்டு அவிழ்ந்ததில் திருத்திருவென முழித்தாள்..
என்ன உன் முட்டை கண்ணை வச்சு இப்படி முழிக்குற.. ஏறு திரும்ப வந்ததும் நோண்டிடுறேன் என்கவும் அவன் சொன்னதை உண்மை என்று நம்பி மாமா அப்படியெல்லாம் பண்ண கூடாது மாமா கண்ணை நோண்டிட்டா நான் எப்படி உங்களை பாக்குறது மாமா என்று அப்பாவியாக கேட்டவளை இப்பொழுதே கட்டிக் கொள்ள வேண்டும் என்று பேராவல் எழுந்தது..
சரி சரி டைம் ஆகுது ஏறுடா.. சீக்கிரம் போயிட்டு வந்துரலாம் என்று கூறியவன் திரும்பி வரும் பொழுது அவன் முகத்தில் இதே புன்னகை இருக்குமா..
அவள் வண்டியில் ஏறியதும் அவன் இடுப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ள என் பிரௌனி குட்டிக்கு இதுவாச்சும் கொஞ்சம் தெரிஞ்சுருக்கு என்று மனதுக்குள் குதூகளித்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்..
மாமா எனக்கு ஜாலியா இருக்கு.. சின்ன வயசுல எனக்கு இந்த மாதிரி வண்டில போகணும்னு ரொம்ப ஆசை.. அதுவும் அப்பாவ இப்படி கட்டி பிடிச்சுட்டு கத்திட்டே போகணும்னு அவ்ளோ ஆசை.. ஆனால் அப்போ முடியலை..
இப்போ செம ஜாலியா இருக்கேன் தெரியுமா என்று எட்டி அவன் கன்னத்தில் முத்தம் வைக்க சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்..
அடியேய் வெளிய வந்து என்ன வேலை டி பாக்குற.. இப்படிலாம் பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் கொடுக்காத டி.. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும் போல என்கவும் எப்போ பார்த்தாலும் உங்களுக்கு கிண்டல் தான் மாமா என்று அவன் தாடையில் தன் கைகளால் குத்தினாள்..
(இதுக்கு பேரு தான் முத்தமிட்டு மூச்சடைக்க வைப்பதா..)
பின்பு இவ்வாறு சில பல சேட்டைகள் செய்து இருவரும் கோவில் வந்தடைந்தனர்..
வண்டியை நிறுத்தியவன் நீ போய் கும்பிட்டு வாடா.. நான் இங்கேயே நிற்கிறேன் என்கவும் வாங்க மாமா போகலாம் ப்ளீஸ் என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தாள்.. ஆனால் அவன் அடமாக அங்கேயே நின்றுக் கொண்டான்..
சரி மாமா நான் சீக்கிரம் சாமியை கும்பிட்டு வந்துடுறேன் என்று விட்டு சென்றவள் ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை..
என்ன பண்றா இன்னும்.. சாமி கும்பிட இவ்வளவு நேரமா மழை வேற வர மாதிரி இருக்கு என்று நினைத்தவன் உள்ளே சென்றான்..
உன்னை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேன்.. உன்கிட்டேயே கூட்டிட்டு வரல்ல.. நான் ஒன்னும் உனக்காக வரலை.. என் பிரௌனிக்காக தான் வரேன் என்று மனதுக்குள் சாமியிடம் கூறியவன் கோயில் முழுவதும் தேடியும் அவன் பிரௌனியை காணவில்லை..
அவள் எங்கும் இல்லை என்றதும் பிரௌனி எங்க டி போன.. ஐயோ இங்க உனக்கு யாரையும் தெரியாதே.. எங்க டி போய் தொலைஞ்ச.. ப்ளீஸ் டி என்கிட்ட வந்ததுடு என்று மனதிற்குள் மன்றாடினான்..
தூரலாக ஆரம்பித்த மழை சிறிது நேரத்திலேயே சடசடவென்று அதிகமாக வர மழை வேற வருது.. எங்க டி போன கவி என்று தவித்தான்.. அவளை காணவில்லை என்றதுமே அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை..
அடுத்தது என்ன செய்ய வேண்டும் ஒன்றும் புரியவில்லை.. சற்று நேரம் கழித்து நீயும் என்னை விட்டு போயிட்டியா டி என்று கதற அந்த மழை நீரோடு அவன் கண்ணீரும் கரைந்தது..
ஏய் கவி என்கிட்ட வந்துடு டி.. ப்ளீஸ் என்று தவித்து கொண்டிருந்தவனுக்கு அவள் கையில் அலைப்பேசி வைத்திருப்பாள் என்று அவள் அலைபேசிக்கு அழைக்க நாட் ரீச்சபில் என்று வந்தது..
ஒருவேளை வெளியே போய் நான் இல்லைன்னு வீட்டுக்கு போய்ட்டாளோ என்று யோசித்தவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு விட்டான்..
அங்கு சென்று பார்த்தவனுக்கு ஏமாற்றமே.. வீட்டிலும் அவள் இல்லை என்றதும் தவித்துப் போனான்.. கவி நீயும் என்னை விட்டு போயிட்டியா டி..
நீ இல்லாம என்னால இருக்க முடியுமான்னு தெரியல.. எங்கடி போய் தொலைஞ்ச.. என்று பித்து பிடித்தவன் போல் கத்திக் கொண்டிருந்தான்.
அவன் கோவிலில் இருந்து பரிதவித்ததை கண்டு சிரித்தார் அந்த இரண்டு கண்களுக்கு சொந்தமானவர்..
தன் மாமனிடம் உடனே வருவதாக கூறியவள் உள்ளே வந்தாள்.. அவள் வந்தது முதல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர் இந்த கருவாச்சி கிட்ட இப்போ எப்படி பேச்சு குடுக்குறது..
ச்சே இவக்கிட்டலாம் போய் பேசணும்னு எனக்கு விதி போல.. அவ மூஞ்சியும் அவ கலரும் இவனுக்கு கொஞ்சம் கூடவா அறிவு இருக்காது.. இவனுக்கு வேற பெண்ணே கிடைக்கலையா.. போயும் போயும் இவளை போய் கட்டிருக்கான்..
பார்த்தாலே வாந்தி வருது.. வேற வழி இல்லை பேசித்தான் ஆகணும்.. இவக்கிட்ட பேசினா தான் அந்த வீட்டுக்கு போக முடியும்.. இல்லையென்றால் இந்த ஜென்மத்தில் அவனை நெருங்க முடியாது என்று நினைத்தவர் அவளை பின்தொடர்ந்தார்..
சாமியிடம் தன் மாமன் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டவள் என்ன சாமி பாக்குற என் மாமா நல்லருந்தா அவர் என்னை பார்த்துப்பாரு எப்படி என் ஐடியா என்று சாமியிடம் பேசியவள் சுற்றி வர இரண்டு சுத்து சுத்தியிருப்பாள்…
சற்று வயிறு வலிக்க ஐயோ இது வேற வலிக்குது ச்சே என்று கொஞ்சம் பொறுத்துக் கொண்டு நடந்தவளுக்கு வாந்தி வருவது போல் குமட்டல் வேறு வர தலையை பிடித்து கொண்டு ஓரமாக போக.. இதை பார்த்து கொண்டிருந்தவர் இது தான் நல்ல வாய்ப்பு என்று அவளை நெருங்கினார்..
அவள் அங்கு இருந்த படிகளில் அமர அவள் பக்கத்தில் சற்று தள்ளி அமர்ந்தவர் என்ன கண்ணு பண்ணுது என்ன ஆச்சு என்று கனிவுடன் கேட்பது போல் கேட்டார்..
இவளும் தன் தாயார் வயதை ஒத்திருந்தவரை கண்டு என்னன்னு தெரியல ம்மா ஒரு மாதிரி வாந்தி வர போல இருக்கு என்று கூறவும் வா கண்ணு அந்த பக்கம் ஒரு ஜூஸ் கடை இருக்கு..
ஒரு எலுமிச்சை ஜூஸ் குடிச்சா எல்லாம் சரியா போய்டும் என்று வார்த்தைகளில் தேன் தடவி அன்பாய் கூற அதனை நம்பியவள் இருங்கம்மா என் மாமா வெளிய எனக்காக காத்திருக்கார்.. சொல்லிட்டு வரேன் என்று எழ அவளை பிடித்து தடுத்தவர்…
இரு ம்மா ஒரு அஞ்சு நிமிஷம் அந்த பையன் நிக்க மாட்டானா.. என்று அந்த கடைக்கு கையோடு அழைத்து சென்றார்..
அவளை அங்கிருந்த டேபிளில் அமர வைத்தவர் நீ இங்கேயே இரு கண்ணு.. நான் போய் உனக்கு வாங்கிட்டு வரேன்.. எவ்வளவு தூரம் தான் நீயும் அலைவ என்று அவளை அங்கு அமர வைத்து விட்டு வந்தார்..
அங்கு நேரம் வீணாக்க எண்ணியவர் மெதுவாக சென்று அந்த கடை பையனிடம் ஒரு ஜூஸ் சொல்லியவர் ஒரு பத்து நிமிஷம் கழுச்சி போட்டால் போதும் ப்பா என்று கூறியவர் தன் அலைபேசியை நோண்ட ஆர்மபித்து விட்டார்..
இவள் பொறுத்து பொறுத்து பார்த்தவள் தன் தன்னை தேடுவான் என்று நினைத்து போன் போட எடுக்க டவர் கிடைக்கவில்லை..
ச்சே இந்த போனுக்கு அறிவே இல்லை.. பாவம் மாமா என்னை தேடுவாங்க என்று நினைத்தவள் ஜூஸும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று நினைத்தவள் அங்கு போன் நோண்டி கொண்டிருந்தவரிடம் சென்று எனக்கு ஜூஸ் வேணாம்மா..
நான் மாமா கிட்ட போறேன் அவர் என்னை தேடுவார் என்று செல்ல அவளை தடுத்து நிறுத்தியவர் டேய் தம்பி ஜூஸ் போட இவ்வளவு நேரமா டா என்று அதட்டியவரை பார்த்து முறைத்து கொண்டே ஜூஸை டேபிளில் வைத்தான்..
இந்த அம்மா லூசா.. இதுதான் மெதுவா போட சொன்னுது.. இதுவே இப்போ கத்துது.. பைத்தியம்.. எங்க இருந்து தான் வருதுங்களோ என்று முணுமுணுத்தபடி தன் வேலையை பார்த்தான்..
இந்தாம்மா குடி..என்று அவள் கையில் கிளாசை திணித்தவர்.. நீ குடி நான் போய் ஒரு போன் பண்ணிட்டு வரேன் அப்பறம் உன் புருஷன் கிட்ட போகலாம் என்று கூறியவர் அந்த கடையை விட்டு வெளியே வந்தார்..
வெளியில் வந்தவர் பிரசாத் நின்ற இடத்தை பார்க்க அவன் அப்பொழுதுதான் கோவிலில் தேடி விட்டு மழையில் நனைந்து கொண்டே வெளியே வந்தான்..
வெளியில் வந்தவன் சுற்றிலும் அவளை தேடியவாறு பைக்கை எடுக்க இப்போ போனா கரெக்டா இருக்கும் என்று கணக்கு போட்டவர் ஒன்றும் தெரியாதது போல் கடையின் உள்ளே வந்தார்..
அவளின் அருகே வந்தவர் குடிச்சுட்டியா போலாமா என்றவர் அவளை அழைத்து கொண்டு வெளியே வர எங்கம்மா உன் புருஷன் என்று அனைத்தும் தெரிந்து கொண்டே வெளியில் ஒன்றும் தெரியாதது போல கேட்க இங்க தான் நிக்க சொன்னேன் ஒருவேளை என்னை தேடிருப்பாரோ என்று கூறியவள்
ஐயோ மாமா என்னை தேடிருப்பாங்க.. நான் போகணும் என்கவும் இரும்மா ஏற்கனவே உனக்கு வயிறு வலி எப்படி உன்னை தனியா அனுப்புறது என்று கரிசனமாக கேட்டு அவளிடம் தன்னை நல்ல மனிதர் போல் காட்டிக் கொண்டார்..
பரவாயில்லை உங்களுக்கு எதுக்கு சிரமம் நான் உன்னை உங்க வீட்டுல விட்டுட்டு போறேன் வா என்று அவளை அழைத்தார்..
இங்கு வீட்டுக்கு வந்தவன் அங்கும் இங்கும் தேடியவன் அவள் இங்கும் இல்லை எனவும் போச்சு நான் தான் தொலைச்சுட்டேன் அவளை..
அவளுக்கு ஒன்னுமே தெரியாது பாவம் எங்க இருக்கான்னு கூட தெரியலை.. இந்த போன் வேற போக மாட்டேங்குது ச்சே வயிறு வேற வலிக்குதுன்னு சொன்னா நான் அவளை தனியா விட்டிருக்க கூடாது என்று தன்னை தானே திட்டியவன் ஐயோ போச்சு என்று அப்படியே தலையில் கைவைத்து கொண்டு படிக்கட்டில் அமர்ந்து விட்டான்..
பிரௌனி இப்போ நான் உன்னை எங்கன்னு தேடுவேன் என்று புலம்பி கொண்டிருந்தவன் தர்மனுக்கு போன் போடலாம் என்று போனை எடுக்க ஆட்டோ சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவன் அவன் பிரௌனி ஆட்டோவில் இருந்து இறங்கவும் அவளை நோக்கி புயல் வேகத்தில் சென்றான்..
அவள் பின்னே இறங்கியவரை கண்டு பிரேக் போட்டது அப்படியே நின்றான்.. தன்னை கண்டதும் ஓடி வந்த தன் மாமனிடம் வந்தவள் அங்கு கோவிலில் நடந்தது அனைத்தையும் கூற கற்சிலை போல் நின்று கொண்டிருந்தான்..
இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் யாரை அவன் பார்க்கவே கூடாது என்று நினைத்தானோ அதே முகம்.. அந்த முகத்தை நினைத்தாலே கோபம் வெறுப்பு கட்டுக்கடங்காமல் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை..
இப்பொழுது நேரில் கண்டதும் தன்னை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டவன் கயலை முறைத்து விட்டு தன்னறைக்கு சென்றுவிட்டான்..
அவன் தன்னிடம் பேசாமல் உள்ளே சென்றதும் சோர்ந்து போனவள் தன் பின்னால் நிற்கும் அந்த புதியவரை வாங்கம்மா உள்ளே காபி சாப்பிட்டு போகலாம் என்று அழைத்தாள்..
இல்லை வேண்டாம்மா இன்னொரு நாள் பார்க்கலாம் என்கவும் இல்ல இல்ல வாங்க என்று அவர் என்று தெரியாமல் தன்னவனுக்கு அவர் செய்த துரோகம் பற்றி அறியாமல் அவரை இழுத்து கொண்டு உள்ளே வந்தாள்..
அவரை சோபாவில் அமர்த்தியவள் இருங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்றவள் திரும்ப அவர் அவள் பின் பக்க சேலையில் ரத்த கறை இருப்பதை பார்த்தவர் முகத்தை சுளித்து கொண்டு அவளிடம் போம்மா போய் முதலில் ட்ரெஸ்ஸை மாற்று என்று கூற அவர் முகம் மாறுதலை கண்டு தன் பின்னால் பார்த்தவள் ரத்தத்தை கண்டதும் பயந்து விட்டாள்..
உடனே மாமா.. மாமா என்று அலற அங்கு தன் அறையில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவன் தன்னவளின் அலறலை கேட்டதும் என்னவோ ஏதோ என்று பதரிக் கொண்டு வந்தான்..
அவன் படிக்கட்டில் வேகமாக இறங்கி வருவதை கண்டவள் மாமா ரத்தம் என்று அழுது கொண்டே அவனிடம் ஓடி அவனை அணைத்து கொண்டாள்..
அவள் ரத்தம் என்றதிலே புரிந்தவன் அவளை அப்படியே அணைத்து தன் கையில் ஏந்தி கொண்டவன் ஒன்னும் இல்லைடா பயப்படாதா மாமா தான் இருக்கேன்ல வா நம்ம ரூமுக்கு போவோம் என்று அவளிடம் பேசிக்கொண்டே படிக்கட்டில் ஏற அதுவரை அவர்களை பார்த்து கொண்டிருந்தவர் முகத்தை சுளித்த படி வெளியே சென்று விட்டார்..
அவரை ஒரு மனுஷியாக கூட அவன் கண்டுக்கொள்ளவில்லை.. அவனை பொறுத்த வரை அவர்மனித பிறவியே இல்லை..
கயலை தன்னறைக்கு தூக்கிக் கொண்டு வந்தவன் அவள் அவன் கழுத்தில் கைகோர்த்து நெஞ்சில் சாய்ந்த படி அழுது கொண்டிருந்தவளை பிரௌனி ஒன்னும் இல்லை இங்க பாரேன் இப்போ எதுக்கு அழற..
அழாத ஒன்னும் இல்லை என்று சமாதான படுத்த மாமா பொய் சொல்லாதீங்க.. எனக்கு ஏதோ ஆயிடுச்சு.. நான் சாக போறேனா.. அதான் காலையில் இருந்து எனக்கு வயிறு வழிச்சுதா.. இப்போ பாருங்க ரத்தம் வேற வருது எனக்கு தெரியவே இல்லை..இது எப்படி வந்துச்சுன்னு.. என்று அழுதாள் அவனிடம்..
நான் செத்து போய்ட்டா எப்படி உங்களை பார்ப்பேன்.. பேயா வந்தா உங்க கண்ணுக்கு நான் தெரிய மாட்டேனே.. இப்போ என்ன பண்றது என்று அவனை பேச விடாமல் இவளாக அனைத்தையும் கற்பனை செய்து கூற அடியேய் உனக்கு இவ்வளவு அறிவு இருக்குன்னு எனக்கு தெரியாம போய்டுச்சே..என்று கிண்டலடித்தான்..
மாமா நான் சாக போறேன்னு சொல்றேன் நீங்க இப்போகூட என்னை கிண்டல் பண்றீங்க என்கவும் என்ன பிரௌனி வயசுக்கு வரலை வயசுக்கு வரலைன்னு மூக்கால அழுத.. இப்போ என்னடான்னா வயசுக்கு வந்ததுக்கும் அழுகுற என்று கேட்க அதிர்ந்தாள்..
மாமா நான் வயசுக்கு வந்துட்டேனா.. உண்மையாவா.. என்று கேட்டவள் எப்படி கண்டு பிடுச்சீங்க என்று கேட்கவும் முதல்ல நீ போய் குளி நான் அப்பறம் உனக்கு சொல்றேன் என்று கூறியவன் அவளை கீழே இறக்கி விட்டான்..
அவளை குளியலறைக்கு அனுப்பி வைத்தவன் தர்மனுக்கு போன் போட்டு கூற ரொம்ப சந்தோஷம் ப்பா.. என்று மகிழ்ந்தவர் அவங்க அம்மாக்கு சொல்லுப்பா ரொம்ப சந்தோஷ படுவாங்க என்று கூற அவரிடம் இருந்து போனை பிடுங்கிய பரத் என்ன மச்சி ஜாலியா இருக்க போல..
ஹிம்ம் ஹிம்ம் இனி கச்சேரி தான் என்று கலாய்க்க மச்சி என் மச்சினிச்சி உன்னை கேட்டதா சொல்ல சொன்னா டா என்று வேண்டுமென்றே எதை சொன்னால் அவன் அடங்குவானோ அதையே கூற ஏன் டா டேய் நல்ல நேரத்துல என்னை இதை சொல்லி பயமுடுத்துற..
நான் பாவம் டா என்னை விட்டுடுங்க.. என்று அலறினான். அதுக்கு வாயை மூடிக்கிட்டு ஒழுங்கா இருக்கணும் என்கவும் அவனிடமிருந்து போனை பிடுங்கிய தர்மன் அவங்க அம்மாக்கு போன் போட்டு சொல்லுப்பா..
நாங்க நாளைக்கு வரோம் அதுவரைக்கும் பிள்ளையை பாத்துக்கோ என்றவர் போனை அணைத்தார்..
இங்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவன் அவள் குளிச்சுட்டேன் மாமா என்று கூறவும் ட்ரெஸ்ஸை கொடுத்தவன் அணையாடையை (நாப்கின்) கொடுத்து எப்படி வைக்க வேண்டும் என்று கூற அவள் கேட்ட கேள்விகளுக்கு அனைத்திற்கும் பதில் கொடுத்துக் கொண்டே சொல்லிக் கொடுத்தான்..
பின் அவளை அழைத்து கொண்டு வந்தவன் நீ இங்கேயே இரு டா.. நான் போய் சமைச்சு எடுத்துட்டு வரேன் என்று கூற மாமா நானும் வரேன் என்று அவள் கூறவும் சரி வா நான் சமைக்கிறேன் நீ உங்க அம்மாக்கு போன் போட்டு சொல்லு என்கவும் ஹிம்ம் என்று தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அவனை பின்தொடர்ந்தாள்..
மாமா நான் உங்களுக்கு போட்டேன் இந்த போன் போகவே இல்லை மாமா என்கவும் அவளிடம் திரும்பியவன் இன்னைக்கு சொல்றேன் பிரௌனி வெளியாளுங்க கிட்ட தெரியாதவங்கிட்ட அதிகமா பேச்சு வச்சுக்க கூடாது என்று சீரியசாக சொல்ல ஹிம்ம் சரி மாமா என்று டங்கு டங்கென்று தலையை ஆட்ட சிரித்தவன் தன் வேலையை பார்த்தான்..
காந்தமென ஈர்க்கும்..
0 Comments