காதல்-7:
சற்று நேரம் அவளுடன் தோட்டத்தில் இருந்து விட்டு கவி வா உள்ளே போகலாம்.. பருப்பு குக்கரில் வச்சுட்டு வந்துருக்கேன்.. வா வா மாலை நேரமா வந்து இங்க உட்காரலாம்.. அப்போ இன்னும் குளுகுளுன்னு காத்து வரும்.. வாவென்று அவளை அழைத்து கொண்டு போனான்..
இங்கு நடப்பதை அனைத்தையும் தர்மனிடம் அவ்வபொழுது சாமி தொலைபேசியில் கூறுவார்..
அன்றும் அப்படித்தான் இவர்கள் தோட்டத்தில் வந்து சற்று நேரம் உலாவியதை உடனே தர்மனுக்கு போன் போட்டு சொன்னார்..
ஐயா.. நம்ம தம்பி எவ்ளோ மாறிடுச்சு தெரியுமா.. கயல் பாப்பாவ அப்படி தாங்குது என்று கூறிக்கொண்டிருக்க பிள்ளைங்க நல்லா இருந்தா போதும் சாமி.. இனி அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க..
நாம இனி நிம்மதியா இருக்கலாம்.. என்று கூறியவர் ஆனால் ஒன்னு மறந்துடாத சாமி.. அந்தம்மா எப்போ வேண்டுமென்றாலும் வரும்.. கயலுக்கு அவங்களை பற்றி தெரியாது..
நல்லவள் போல நடுச்சி ஏதாவது குழப்பி விட்டுட போகுது.. பார்த்துக்கோ சாமி.. என்று பேசிவிட்டு வைக்க அங்கு பரத் அவரை முறைத்து கொண்டிருந்தான்..
என்ன டா.. இப்படி முறைச்சு பாக்குற.. நான் ஒன்னும் நீ கட்டிக்க போற பொண்ணு இல்லைடா.. இப்படி முறைச்சு முறைச்சு பாக்குற.. நானே வயசான காலத்துல ஒன்னும் முடியாம இருக்கேன்.. என்னை போய் இப்படி முறைச்சு பாக்குறான் பொசக்கெட்டபய.. போடா அங்குட்டு.. என்று அவனை விரட்ட
என்ன தாடி.. உனக்கு வயசாகி போச்சா.. வயசானவன் பாக்குற வேலையா நீ பாக்குற.. உன் தில்லாலங்கடி வேலையை என் கிட்டையே காமிக்குறியா என்று அவரை முறைத்தவாறு கேட்டவனை
நான் என்ன டா பண்ணினேன்.. நான் பாட்டுக்கு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.. உன்னை ஏதும் நான் தொல்லை பண்ணலையே.. பின்ன எதுக்கு இப்படி காலையிலே கடிக்குற.. போடா..
நீ ஏன் சொல்ல மாட்ட.. நீ எல்லாம் ஒரு அப்பாவா.. கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னவனுக்கு கல்யாணத்தை பண்ணி கோர்த்து விட்டுட்டு போன.. அதுக்கூட ஒரு விதத்தில் நியாயம்..
ஆனால் எனக்கு பார்த்து வச்சுருக்கியே பொண்ணு.. எம்மாடி.. எனக்கு இப்போவே தலை சுத்தது.. நான் என் கல்யாணத்தை பற்றி எவ்வளவு கனவு கண்டு வச்சுருந்தேன்..
ஆனால் நீ போட்ட பாரு.. பெரிய குண்டு.. என் கனவு எல்லாம் போச்சு.. என்று ஒப்பாரி வைக்கவும் டேய் இப்போ என்ன உன் கனவு கலைஞ்சி போச்சு.. சிதைஞ்சு போச்சுன்னு டைலாக் பேசிட்டு இருக்க.. அந்த பெண்ணுக்கு என்ன குறைச்சல் என்று வினவினார்..
எனக்கு அது பொண்ணா என்பதே ஒரு டவுட் தான்.. என்று தலையில் கைவைத்து கொண்டு அவர் பக்கத்தில் அமர நல்ல பொண்ணு தான் டா.. கொஞ்சம் பொறாமை அவ்வளவுதான்.. அதுதான் அவளை தப்பு செய்ய தூண்டுது.. அவள் அறியாமல் எல்லாம் செய்கிறாள்..
நீ கல்யாணம் பண்ணிக்கோ.. அப்பறம் காலப்போக்கில் மாறிடுவா.. என்று கூற அப்போ முடிவே பண்ணிட்டியா என்று கேட்க எஸ் மை சன்.. இந்த ஜென்மத்தில் உனக்கு வர்ஷா தான்.. இதை நான் சொல்லல.. கடவுள் எப்போவோ முடிவு பண்ணிட்டார்..
பண்றதெல்லாம் பண்ணிட்டு அப்படியே கடவுள் மேல பழியை போடுறது.. இது எனக்கு தெரியாதா.. போங்கய்யா நீங்களும் உங்க கல்யாணமும் என்று புலம்பிக்கொண்டே சென்றான்..
இங்கு பிரசாத் போனில் நேற்று பேசியவர் வீட்டிற்கு வந்திருக்க அவருடன் சிறிது நேரம் பேசியவன் அவரை அனுப்பி வைத்து விட்டு மேலே தன் அறைக்கு சென்றான்..
அப்பொழுது தான் குளித்து விட்டு வந்தவள் அவன் வாங்கி தந்த சுடிதாரை அணிந்தவள் குங்குமத்தை வகுட்டில் வைத்து கொண்டிருக்க இவனை கண்ணாடி வழியே கண்டவள் மாமா நீங்க வாங்கி குடுத்த ட்ரெஸ் எப்படி இருக்கு..
மாமா நல்லாருக்கா என்று கண்களை விரித்து அவனை பார்த்து ஆர்வமாக கேட்டு அவன் முன் சுற்றி காண்பிக்க சூப்பரா இருக்கு பிரௌனி.. உனக்குன்னு தச்ச மாதிரி இருக்கு..
என் பிரௌனி இவ்ளோ அழகா.. வாவ்.. என்று கூற அவளுக்கு வெட்கமாக போய்விட்டது.. மாமா நான் இந்த மாதிரி ட்ரெஸ் இப்போதான் போடுறேன் தெரியுமா என்கவும் ஹிம்ம் உனக்கு எது போட்டாலும் அழகா இருக்கும் பிரௌனி என்று கூறியவன் சொல்ல வந்ததையே மறந்துட்டேன்..
உனக்கு நாளையில் இருந்து சொல்லி கொடுக்க டீச்சர் வருவாங்க.. நீ ஆசை பட்டது போலவே படிக்கலாம் என்கவும் குதூகலமானவள் மாமா எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு.. என்று சந்தோஷத்தில் குதித்தவள் இப்போ நான் படிக்க போறேன் மாமா..
இது எல்லாம் சாத்தியமானது உங்களால் மட்டும் தான் மாமா.. எனக்கு உங்க மேல அதிகமா அன்பு வருதே என்று சொல்லி கொண்டே அவன் நகர்வதற்குள் அவனை கட்டி பிடித்து அவன் இதழில் நொடியில் முத்தம் பதித்து தன் தாயிடம் கூற போனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி விட்டாள்..
அங்கு ஒருவன் அவள் ஏற்படுத்திய உணர்வு குவியல்களில் இருந்து வெளிப்பட முடியாமல் முகம் சிவந்து நின்றவனை கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்..
(இது என்ன புது விதமான நோயா இருக்கு.. ஒருவேளை இவன் ஏலியனா மாறிட்டானோ)
அந்த பக்கி உரசிட்டு போனதுக்கே இப்படி ஜர்க்காகி நிக்குறான்..
(டேய் அவ சும்மா உரசுனதுக்கே இப்படி அடிக்கடி ஆப் ஆகி நிக்குற.. விளங்கிடும்)
தலையை குளுக்கியவன் இந்த குள்ள புஸ்க்கு என்னை சீண்டுறதுலயே குறியா இருக்காள்.. எப்பா இவ படுத்துற பாட்டுல நான் ஒருவழியாகிடுவேன் போலையே..
ஹே குள்ள புஸ்க்கு நான் பாவம் டி.. என்று அவளுடன் மனதோடு பேசியவாறு குளிக்க சென்றான்..குளித்து முடித்து வந்தவனுடன் விஷப்பரிட்சை இருக்கு என்பது தெரியாமல்..
தன் தாயுடன் பேசியவள் தன் தம்பியிடம் கொடுக்க சொல்லி தன் மாமனின் புராணம் பாடினாள்.. என் மாமா இப்படி .. அப்படி என்று கூறியவள் சரி சரி நான் நாளையில் பிஸி ஆகிடுவேன்.. என்னை தேடாதீங்க என்று கிளுக்கி நகைத்தவாறு போனை வைத்தாள்..
இங்கு குளித்து முடித்து தலையை துண்டால் துடைத்து கொண்டு வந்தவன் மாமா மாமா என்று கத்தி கொண்டே அவள் வரும் அரவம் கேட்டு திரும்பி நின்று கொண்டான்..
மாமா நான் அம்மாகிட்ட எல்லாம் சொல்விட்டேன் அவங்களுக்கும் அவ்வளவு சந்தோஷம் தெரியுமா என்று கூற சரி சரி போ போய் கீழ இரேன்.. நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன் குள்ள புஸ்க்கு என்று கூற ஹிம்ம் என்று திரும்பி போக அவள் திரும்பி போவதை கண்டு திரும்பினான்..
ஆனால் அவளோ விளையாட்டாக உடனே திரும்பி நான் உங்களை பார்த்துட்டேன் பார்த்துட்டேன்.. ஹாஹா உங்களை பார்க்க கூடாதுன்னு தானே என்னை போக சொன்னீங்க என்று அவனை பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்தாள்..
மாமா என்ன மாமா இது எல்லாம் என்று கண்களில் வடியும் கண்ணீருடன் அவனருகே செல்ல ஒன்னும் இல்லை என்றவாறு ஷர்டை எடுத்து வேகமாக அணிந்தான்..
போடாதீங்க மாமா.. இது என்ன நான் பார்க்கணும்.. விடுங்க விடுங்க என்று அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்தாள்..
இரண்டு மாதங்கள் கடந்திருந்தது..
ஆஹ்.. உஹ்.. டிஷ்யூம்.. டிஷ்யூம்.. என்று சத்தம் கொடுத்தவாறு பிரசாத் வயிற்றில் குத்திக் கொண்டிருந்தாள் கயல்விழி..
அவள் குத்துவது தனக்கு வலிக்கவில்லை என்பது போல் அவளிடம் சிரித்து கொண்டே பலம் பத்தலை கவி.. இன்னும் ட்ரை பண்ணு.. உன்னால முடியும் என்று ஊக்கப்படுத்தியவன் அவள் முன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றான்..
ஹிம்ம்.. இன்னைக்கு போதும் மாமா.. உங்களுக்கு வலிக்கும் என்று அவள் குத்திய இடங்களில் தன் கைகளில் கட்டிருந்த பெல்ட்டை அவிழ்த்து விட்டு அவனுக்கு தேய்த்து விட்டாள்..
ஹேய்.. ஒன்னும் இல்லை டா.. வா வந்து சீக்கிரம் பிரெஷ் ஆகு.. கிளாஸுக்கு டைம் ஆச்சு.. எனக்கும் ஒரு கிளாஸ் இருக்கு வா வா என்று அவளை அவசர படுத்தியவன் அவளை குளியலறை அனுப்பி வைத்து விட்டு தான் சமயலறைக்கு வந்தான்..
காலை உணவு சமைத்து முடித்தவன் அவளுக்கும் தனக்கும் ஒரு கிளாசில் டீயும் ஒரு கிளாசில் சத்து பானமும் எடுத்து கொண்டு மேலே தன்னறைக்கு எடுத்து சென்றான்..
அவன் பால்கனிக்கு எடுத்து செல்ல அங்கு ஏற்கனவே குளித்து விட்டு தன் கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தாள் கவி.. தான் எடுத்து வந்ததை அங்கிருந்த மேசையில் வைத்தவன் காற்றில் ஆடும் பட்டு போன்ற கூந்தலை மெல்ல தடவினான்..
உனக்கு எப்படி இவ்ளோ நீட்டா முடி இருக்கு என்கவும் சாமி அப்பாகிட்ட கேட்டு உரம் வாங்கி போட்டேன் மாமா என்று சிரிக்காமல் கூற குள்ள புஸ்க்கு உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு என்று அவள் தலையில் செல்லமாக குட்டிவிட்டு நான் பிரெஷ் ஆகிட்டு வரேன்.. நீ குடி என்றுவிட்டு சென்றான்.
(வாங்க.. வாங்க வாத்தி குளிச்சுட்டு வருவதற்குள் ஒரு பிளாஷ்பேக் போய்ட்டு வரலாம்)
அன்று அவன் குளித்து விட்டு வந்ததும் இவள் வெளியே செல்வது போல் பாவ்லா காட்டியவள் அவன் திரும்பவும் அவன் உடலை பார்த்து அதிர்ந்து விட்டாள்..
அவன் உடனே ஷர்டை எடுத்து போடவும் அவனை தடுத்தவள்
என்ன மாமா இது..? என்ன ஆச்சு ஏன் இப்படி என்று அவன் புஜங்கள் மார்பு வயிறு என்று அனைத்து இடங்களிலும் உள்ள சூட்டு காயத்தை தடவியவள் தனக்கு சுருட்டால் வைத்ததுக்கே அவ்வளவு வலித்தது என்றால் தன் மாமனின் உடலை பார்த்தால் கம்பியால் இழுத்தது போல் வரி வரியாக சூட்டு காயங்கள் இருக்கவும் எப்படி இவ்வளவு வலி தாங்கினான் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை…
மாமா.. என்ன மாமா இதெல்லாம்.. சொல்லுங்க.. யாரு இப்படி பண்ணினது.. உங்களுக்கு வலிச்சுருக்குமே.. என்று அந்த வடுக்களை வருட கண்கள் சிவந்து முகத்தை திருப்பி கொண்டானே ஒழிய பதில் கூறவே இல்லை..
அவன் கூறுவான் என்று அவன் முகத்தை பார்க்க அவன் பதில் பேசாமல் இருக்கவும் அவனை தன்னுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டவள் அழுதாள்..
அவள் விட்ட ஒவ்வொரு கண்ணீரும் அவன் பட்ட காயங்களுக்கு மருந்தாக அதன் மேல் பட அதுவரை அப்படியே நின்றிருந்தவன் அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கி கொண்டான்..
சற்று நேரம் அவளை அணைத்து கொண்டிருந்தவன் அவளிடமிருந்து பிரிந்து எதுவும் பேசாமல் சட்டையை மாட்டிக்கொண்டு எனக்கு கிளாஸ் இருக்கு கவி.. நான் போய் முடிச்சுட்டு வரேன் என்று தன்னறைக்குள் நுழைந்து கொண்டான்..
அவள் அப்படியே நின்று கொண்டிருந்தவள் மீண்டும் தன் மாமனின் குரலில் தான் நினைவுக்கு வந்தாள்..
உள்ளே சென்றவன் கவி வா நான் உனக்கு படம் ஏதாவது போட்டு தரேன்.. என்று அவளை தனியே விடாமல் உள்ளே அழைக்க ஹிம்ம் என்று தலையாட்டியவாறு உள்ளே சென்றாள்..
அவளுக்கு தன்னுடைய மடிக்கணினியில் படம் வைத்து கொடுத்தவன் சோபாவில் இருந்துக்கோ என்று அவளிடம் கூறியவன் தன் கணினியின் முன் அமர்ந்தவன் அன்றைய பாடங்களை பிள்ளைகளுக்கு எடுக்க தொடங்கினான்..
அவன் கவனம் அங்கு பாடம் எடுப்பதில் இருக்க இவள் கவனம் முழுவதும் அவன் மேல் தான்.. அவனையே பார்த்து கொண்டிருக்க பிரேக்கில் என்ன அப்படி வெறிச்சு வெறிச்சு பாக்குற..
என்ன டா.. என்று கேட்டவன் அங்கிருந்த பிரிட்ஜை திறந்து பழங்களை எடுத்து அவளிடம் கொடுத்தவன் தனக்கு தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டவன் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்..
அவள் பழத்தை வைத்துக் கொண்டு அதனை பார்த்தபடி இருக்க ஓய் குள்ள புஸ்க்கு சாப்பிடு.. பசிக்கும்.. என்று கூறியவன் பாடம் எடுப்பதில் மூழ்கி போனான்..
அன்றிலிருந்து அவன் எங்கு சென்றாலும் அவனுடனே போவது.. முன்பும் அப்படித்தான்.. ஆனால் இப்பொழுது பசை போட்டு ஒட்டியது போல் அவனை சிறிதும் தனிமையில் விடாமல் அவனுடனே இருந்தாள்..
இரவு படுக்கும் பொழுதும் அவன் கையை நீட்ட சொன்னவள் நீட்டியதும் அவன் கை மேல் தலை வைத்து கொண்டு அவன் புறம் திரும்பி படுத்தவள் தன் இடது கையை அவன் மேல் போட்டு கொண்டவள், என்ன நினைத்தாளோ கையை எடுத்து அவன் கையை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு இனி எப்பொழுதும் உன்னை பிரிய மாட்டேன் என்று அவனை அணைத்தவாறு தூங்கிப் போனாள்..
அவளையும் அவள் செயலையும் விசித்திரமாக பார்த்து கொண்டிருந்தவன் அவள் தூங்கவும் தானும் சிரித்தபடி தூங்கி விட்டான்..
(வாத்தி மைண்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணிட்டேன்.. உனக்கு ஏன் டா புத்தி இப்படி போகுது..)
அடுத்த நாள் காலை எழுந்தவுடன் அவளை தான் உடற்பயிற்சி செய்யும் அறைக்கு அழைத்து சென்றவன் யோகா சிலவற்றை சொல்லி கொடுக்க முதலில் அவன் முன் செய்ய ஒரு மாதிரி இருக்கவும் தயங்கியவள் அவன் ஊக்கப்படுத்தவும் அவன் சொல்லிக் கொடுத்த யோகாவை செய்தாள்…
பின் அவன் ஒரு புறம் தன் உடற்பயிற்சியை தொடங்க தான் செய்வதை விட்டுவிட்டு அவன் அருகில் வந்தவள் மாமா இப்படி செஞ்சு தான் இப்படி படிக்கட்டு வச்சுறுக்கீங்களா..? என்று ஆச்சரியமாக வினவியவளை ஹிம்ம் என்று தண்டால் எடுத்துக் கொண்டிருந்தவன் எழ அவனை நெருங்கினாள்..
அவனை நெருங்கியவள் அவன் தேகத்தில் செதுக்கி வைத்தது போலிருந்த அவன் சிக்ஸ் பேக்கை தன் வெண்டை பிஞ்சு விரல்களால் வருட அவள் விரல்கள் தன் மேல் பட்டதும் சிலிர்த்தவன் அவள் கையை அப்படியே பிடித்து கொண்டான்..
விடுங்க மாமா.. தொட நல்லாருக்கு.. எனக்கும் இது போல வருமா.. என்று கேட்க சிரித்தவன் ஹிம்ம் வரும்.. பட் கொஞ்சம் அதிகமா ஒர்க்கவுட் பண்ணனும் என்று கூறினான்..
பின் இருவரும் சாப்பிட்டு விட்டு அவளுக்கு பாடம் எடுக்க டீச்சர் வரவும் அவளை அவருடன் அனுப்பி வைத்தவன் நல்லா படி.. நான் வந்து பார்க்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தான்..
டேய் இதெல்லாம் ஓவரா தெரியலையா டா.. ஏதோ ரொம்ப தூரமா போற மாதிரி இத்தனை முறை சொல்ற.. ஒரே வீட்டுல பக்கத்து அறையில் இருக்குறதுக்கே இப்படியா.. ஷப்பா முடியலை..
அவளும் அவனை விட்டு எங்கோ வெகு தூரம் பிரிந்து செல்வது போல் அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு சென்றாள்..
பாடமெல்லாம் முடிந்ததும் தன்னறைக்கு வந்தவள் முகம் பொலிவிழந்து காணப்பட்டது.. அவள் முகச் சோர்வை கண்டவன் வெளியே நின்றிருக்கும் ஆசிரியரை அனுப்பி வைத்துவிட்டு அவளிடம் வந்தவன் என்ன குள்ள புஸ்க்கு அமைதியா இருக்காங்க..
கிளாஸ் எப்படி போச்சு.. உனக்கு பிடுச்ச மாதிரி நடத்துறாங்களா..? அவங்க சொல்லி கொடுப்பது புரியுதா..? என்று கேட்டவனை பார்த்து ஹிம்ம் என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு தலையை ஆட்டினாள்..
என்ன மேடம்? வாயை திறக்கவே மாட்டேங்குறாங்க.. என்ன ஆச்சு? என்று வினவவும் மாமா நான் ஒன்னு சொல்லுவேன்.. நீங்க திட்டக் கூடாது சரியா என்று கேட்கவும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது..
ஹிம்ம்.. சொல்லு திட்ட மாட்டேன் என்று சிரிப்புடன் கூறவும் அடிக்க கூடாது.. கோபமா பேசக்கூடாது சரியா என்று கேட்கவும் சரி சொல்லு டி.. என்ன ஆச்சு. அந்த டீச்சர் ஏதாவது சொன்னாங்களா என்று கேட்கவும் இல்ல இல்ல அவங்க ஏதும் சொல்லலை மாமா..
நான் தான் மாமா.. என்று தயங்கியவள் மாமா எனக்கு உங்க கூடவே இருக்கணும்னு தோணுது.. நீங்க எனக்கு சொல்லி தாங்க மாமா.. இப்போவே ஏதோ ரொம்ப நாள் பிரிஞ்ச மாதிரி இருக்கு மாமா என்று அவனிடம் சீரியஸாக கூறிக் கொண்டிருந்தாள்..
டேய் மூணு மணி நேரம் தானடா பாடம் எடுத்தாங்க.. அது மட்டும் இல்லாம நான் தான் ரெண்டு முறை வந்துட்டு போனேனே என்று கொஞ்சிக் கொண்டே அவளிடம் கூற இன்னும் அவன் மேல் சலுகையாய் சாய்ந்துக் கொண்டவள் தெரியல மாமா உங்க கூடவே இருக்கணும் போல இருக்கு..
நான் என்ன பண்ணட்டும்.. அந்த டீச்சர் நல்லா சொல்லி கொடுத்தாலும் நான் பெயில் ஆயிடுவேன் போல.. உங்க கூட இருக்கணும்னு உங்க நினைப்பாவே இருக்கு மாமா.. அவங்களுக்கு பதிலா நீங்களே எனக்கு சொல்லி தாங்க ப்ளீஸ்..
ப்ளீஸ் மாமா.. எனக்கு படிச்ச மாதிரியும் இருக்கும்.. உங்க கூடவே இருந்தது போல இருக்கும்.. ஹிம்ம் ப்ளீஸ் மாமா சரின்னு சொல்லுங்களேன் என்று அவனை பார்த்து கெஞ்சிக் கொண்டே அவன் கையை பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டிருந்தாள்..
ஏதோ உள்ளுக்குள் இதமாக உணர்ந்தவன் அவளிடம் சரி என்றுவிட்டு போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.. அன்றிலிருந்து அவளுக்கு அவனே குருவானான்..
இங்கு குளித்து முடித்து வந்தவன் துண்டை கொண்டு தலையை துவட்டிக் கொண்டு வரவும் எப்பொழுதும் அங்கிருந்த டேபிள் மேல் ஏறி நின்றவளுக்கு நேராக வந்து நிற்கவும் அவன் கையில் இருந்த துண்டு இவள் கைகளுக்கு மாறியது..
நன்றாக அவன் தலையை துவட்டி விட்டவளிடம் தன் டீ கப்பை எடுத்து நீட்டினான்.. அது என்னவோ தெரியவில்லை அன்று அவள் ஒரு மடக்கு குடித்து விட்டு இவனிடம் கொடுக்க அதுவே தினமும் வழக்கமானது…
அன்று மதியம் மாமா வயிறு வலிக்குது என்று சுருண்டு படுத்தவளிடம் என்ன டா பண்ணுது.. ஹாஸ்பிடல் போவோமா.. வா என்று தூக்கவும் வேண்டாம் நான் வரலை கொஞ்ச நேரம் தூங்கினா சரியா போய்டும் என்று கூறவும் ஹே அதெப்படி தூங்குனா சரியா போகும்..
வா போகலாம் என்று இழுக்க இவள் அவனை இழுத்து கட்டிலில் அமர வைத்து அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.. அவள் தலையை கோதி கொடுத்தவன் அவள் உறங்கவும் தட்டிக் கொடுத்தான்..
அன்று இரவே.. மாமா மாமா.. இரத்தம் இரத்தம் என்று அலறிக் கொண்டே தன்னிடம் ஓடிவந்தவளை என்னவோ ஏதோ என்று பதறி ஓடிவந்தவன் தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.. அதனை பார்த்து அங்கிருந்தவர் முகத்தை சுளித்தார்..
காந்தமென ஈர்க்கும்...
0 Comments