காதல்- 3:
பரத் பிரசாத்திடம் என்ன டா இந்த நேரத்துல வந்துருக்க என்று கேட்கவும் எனக்கு டிவோர்ஸ் பேப்பர் ரெடி பண்ணி கொடு என்கவும் அதிர்ந்தான்..
டேய் கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட முழுசா ஆகளையே டா அதுக்குள்ள என்னாச்சு..ஏன் இந்த முடிவு.. அப்பா எது செய்தாலும் நம்ம நல்லதுக்கு தானே டா செய்வாரு..
இது அவருக்கு தெரிஞ்சா மனசு ரொம்ப கஷ்ட படுவாரு டா.. எதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுடா.. உன்னை வற்புறுத்துறேன்னு நினைக்காத டா இருந்தாலும் யோசிச்சுக்கோ..
அவன் தன் மனதில் தோன்றியதை கூறிவிட்டு அவன் முகம் பார்க்க பிரசாத் ஏதோ யோசனையில் இருந்தான்..
அவன் தயங்குவதை பார்த்து என்ன டா ஆச்சு என்று கேட்கவும் அது என்று சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க என்கிட்ட ஷேர் பண்ணனும் விரும்பினால் சொல்லு டா இல்லனா வேண்டாம்..
அதெல்லாம் ஒன்னும் இல்லை எனக்கு யாரு மேலேயும் நம்பிக்கை இல்லை அதனால தான் எனக்கு இந்த கல்யாணம் ஏதும் வேண்டாம்னு சார் கிட்ட சொன்னேன்..
ஆனால் அவர் கேட்காம இப்படி பண்ணி வச்சுட்டாரு.. சரி பண்ணி வச்சுட்டாரு பார்த்துக்கலாம் என்று பார்த்தால் அந்த பெண்ணுக்கு இன்னும் பதினெட்டு வயசு கூட முடியலை டா..
கிட்டத்தட்ட என்னை விட பதினோரு வயசு சின்ன பொண்ணு.. பத்தாவது வரைக்கும் தான் படிச்சுருப்பா போல..
சின்ன பிள்ளையா வேற இருக்கா..ரொம்ப சேட்டை பண்ணுவா போல.. இதெல்லாம் பரவாயில்லை.. எனக்கு இப்போ இந்த வயசு தான் பிரெச்சனை..
அதான் டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிக்கிட்டு மேல படிக்கிறாளான்னு கேட்கணும்.. படிக்க வச்சுட்டா அவள் அவ லைப் பார்த்துக்குவா இல்லையா..
இப்போ அவங்க வீட்டுக்கு அனுப்பினாலும் திரும்ப சேர்த்து வைக்க தான் முயற்சி செய்வாங்க.. அதான் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு கையெழுத்து வாங்கணும்..
நீ ரெடி பண்ணி கொடு.. இவ எனக்கு செட் ஆக மாட்டா..
டேய் பிரசாத்.. என்னடா ஸ்கூல் படிக்கிற பிள்ளையா இருக்கும் போல..இருந்தாலும் அப்பா எதும் காரணமில்லாமல் செய்ய மாட்டாரு டா..
யாருமே அதிக வயசு வித்யாசத்துல கல்யாணம் பண்றது இல்லையா.. நீ எதுக்கும் அப்பாகிட்ட பேசிட்டு முடிவு பண்ணுடா.. என்கவும் அவன் எடுத்த முடிவில் இருந்து மாறுவதாய் இல்லை என்பது போல் சட்டமாக அமர்ந்திருந்தான்..
பின்பு பரத் எழுந்து சென்று அவன் கேட்டபடி அனைத்தும் ரெடி செய்தவன் வந்து அவனிடம் நீட்ட அதை வாங்க பிரசாத் கையை நீட்டவும் உடனே அந்த டிவோர்ஸ் பேப்பரை இழுத்து கொண்டான்..
டேய் என்று அவனை முறைக்க மச்சி முறைக்காத டா காலையில் உன் கல்யாணத்துக்கு வர முடியலைல அதான் இப்போ விஷ் பண்றேன் ஹேப்பி மேரிட் லைஃப் என்று கை குலுக்க தன் கையை நீட்டினான்..
டேய் இது உனக்கே ஓவரா தெரியல.. நான் இப்போ தானே உன்கிட்ட டிவோர்ஸ் பேப்பருக்கு ரெடி பண்ண சொல்லி வாங்க போறேன்.. நீயே விஷ் பண்ற..
நீ இப்போ டிவோர்ஸ் பேப்பர் எல்லாம் வாங்கினாலும் உனக்கு டிவோர்ஸ் கிடைக்காது மச்சி.. என்கவும் எப்படி சொல்ற..
தெரியல பட் எனக்கு தோணுது.. உனக்கு கிடைக்காதுன்னு.. என் மனசு சொல்லுது என்கவும் ஹிம்ம் அதையும் பார்க்கலாம்.. என்றவன் அவனிடமிருந்து அந்த பேப்பரை பிடுங்கியவன் கிளம்ப போக..
ஹிம்ம் மச்சான் உன் கல்யாணத்துக்கு வரலனு கோபப்படாத எனக்கு காலையில் கோர்ட்ல ஒரு முக்கியமான கேஸ் இருந்த்துச்சு.. அதான் வர முடியலை என்கவும் ஹிம்ம் சரி என்றவாறு தன் வீட்டிற்கு கிளம்பினான்..
அதே நேரம் இங்கு கயல் வீட்டில் அவளது தாய் ராணி புலம்பி கொண்டு அழுதார்.. என் புள்ளைக்கு ஒன்னுமே தெரியாதே எப்படி அவ்ளோ பெரிய சிட்டில போய் இருக்க போகுதோ..
கடவுளே என் புள்ளைய நீ தான் பாதுக்கணும் எப்படியோ பேய்க கிட்ட இருந்து காப்பாத்திட்ட..
மாப்பிள்ளை என் புள்ளைய நல்லா வச்சுக்கணும்..
(அவன் தானே நல்லா வச்சுப்பான்)
அவர் பாட்டுக்கு தன் முந்தானையால் கண்ணீரை துடைத்து விட்டு புலம்பிக் கொண்டிருக்க ஏய் அங்க என்ன சத்தம் என்று அவரது கணவனின் சத்தம் கேட்க முகத்தை நன்றாக துடைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்..
என்ன டி உன் புள்ளை வீட்டை விட்டு போனது துக்கமோ.. என்று நக்கலாக கேட்க அவரது பக்கத்தில் அமர்ந்து படிப்பதாக சீன் போட்டுக்கொண்டிருந்த வர்ஷா நக்கலாக சிரித்தாள்..
எங்கயா என் புள்ளைய நீ வீட்டுக்குள்ள இருக்க விட்ட இங்க இருந்த வரைக்கும் என் புள்ளை பிச்சைக்காரி போல தானே இருந்தா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்..
வெளியில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க இவக்கிட்ட பேசுறதும் ஒன்னு தான் செவுத்து கிட்ட பேசுறது ஒன்னு தான் என்று கூற செவுத்துகிட்ட பேச வேண்டி தானே..
எதுக்கு என்னை கூப்பிட்டு வச்சு பேசிட்டு இருக்க என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்தார்..
சரி சரி நான் வரும் போது மீனு கரி எல்லாம் வாங்கிட்டு வரேன் நல்லா சமைச்சு வை ஒரு வெட்டு வெட்டனும்..
எப்போடா இந்த சனியன் வீட்டை விட்டு போகும்னு பாத்துட்டு இருந்தேன் இன்னைக்கு அதுக்கு காலம் வந்திருக்கு..
தீபாவளி போல கொண்டாடனும் என்று தான் பெற்ற மகளையே ஏதோ எதிர போல இல்லை இல்லை தீண்ட தகாதவர் போல கூறிக் கொண்டே வெளியே சென்றார்.. அதில் அவருக்கு பெருமை வேறு..
என்னா மதர் வாயே திறக்க மாட்டுற.. உன் புள்ளை போன வருத்தமா.. சோ சேட்.. எப்படியும் அந்த பெரிய படிப்பு படிச்ச மேதாவி உன் புள்ளைய பத்து நாளில் துரத்தி விட தான் போறான்..
கவலை படாத உன் புள்ளை உன் கிட்டேயே வந்துரும் என்று அவர் நெஞ்சில் பாரத்தை ஏற்றி விட்டு சென்று விட்டாள்..
உடனே உள்ளுக்குள் பயந்தவர் ஐயோ.. படுபாவி இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சு.. ஒரு நாள் கூட ஆகலை.. அதுக்குள்ள இப்படி சொல்லிட்டு போறாளே என்று சாடியவர் தன் மகன் அறைக்கு சென்றார்..
அவன் அறைக்கு அருகே வந்து தம்பி தம்பி என்று அழைத்து கதவை தட்டினார்..
ம்மா கதவு திறந்து தான் இருக்கு உள்ள வாம்மா என்கவும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவர் தம்பி அக்காவுக்கு போன் போட முடியுமா டா..
புள்ளை எப்படி இருக்குன்னு கேக்கணும் டா.. புள்ளை அங்க என்ன பண்ணுதோ தெரியாத ஊரு வேற.. அவளுக்கு வேற ஒன்னும் தெரியாது..
ஒரு சூது வாதும் இல்லை.. ஒரு போன் போட்டு குடுப்பா.. என் மனசு திக்கு திக்குன்னு அடிச்சுக்குது..
ஏன் ம்மா ஏதாவது அந்த நரி சொன்னுச்சா என்று கரெக்டா பாய்ண்டை பிடிக்க அவர் அமைதியாக இருக்கவும் அவர் அமைதியாக இருப்பதை வைத்தே இது அவள் வேலை தான் என்று அறிந்தவன்…
இவளை.. இவக்கிட்ட யாராவது வந்து கேட்டங்களா.. என்று கோபமாக வெளியே செல்ல பார்க்க அவனை இழுத்து பிடித்தவர் அவளை விடு குணா..
இப்போ நீ புள்ளைக்கு போன போடு.. அவகிட்ட பேசினாதான் என் மனசு நிம்மதியா இருக்கும்..
குணா போன் போடவும் அங்கு கயல் சமையல் அறையில் வேலையாக இருந்தாள்.. அவளது போன் ஹாலில் இருந்தது..
அடித்துக் கொண்டே இருக்க அவள் வந்து எடுப்பதற்கும் பிரசாத் வீடு வரவும் சரியாக இருந்தது..
கைப்பேசியை எடுத்து கொண்டே அவனை பார்த்தவள் அவனிடம் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள்..
இவள் அணைக்கவும் அதிர்ச்சியானவன் ஹேய் என்ன பண்ற நகரு என்று அவளை தள்ளி நிறுத்தியவன் என்ன என்று தன் உர் முகத்தை காட்டவும் மாமா நீங்க வெளியே போகும் போது என்னையும் அழைச்சுட்டு போங்க..
எனக்கு இங்க தனியா இருக்க பயமா இருக்கு..
ஒஹ் என்று கதை கேட்பது போல சொன்னவன் சரி போன் வருது பாரு எடுத்து பேசு என்கவும் எனக்கு எப்படி அழுத்தி பேசுறதுன்னு தெரியாது மாமா..
இவள் நடிக்குறாளா இல்லை இவளுக்கு உண்மையா தெரியலையா என்று உள்ளுக்குள் நினைத்தவாறே போனை அட்டெண்ட் செய்து இப்படி தான் பண்ணனும் என்று காட்டி கொடுத்தவன் பேசு என்பது போல் சைகை செய்தான்..
அவனிடம் இருந்து போனை வாங்கிவள் காதில் வைத்து ஹலோ என்கவும் அந்த பக்கம் அக்கா எப்படி இருக்க ..
நான் நல்லா இருக்கேன் டா..
நீங்க எப்படி இருக்கீங்க.. அம்மா அழுவுதா.. அம்மாகிட்ட சொல்லு நான் நல்லாருக்கேன்னு..மாமா என்னை நல்லா பாதுக்குறாருன்னு சொல்லு..
இந்தா நீயே அம்மாட்ட பேசு அது தான் பேசணும்னு சொன்னுச்சு..
குடு டா
ஹலோ கயலு.. நல்லருக்கியா ம்மா
ம்மா நான் நல்லருக்கேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்..
நீ நல்லாருந்த போதும் டா.. மாப்பிள்ளை எங்க மா..
இங்க தான் ம்மா.. மாமா பக்கத்துல தான் இருக்காரு..
சரிம்மா வெளிய எங்கையும் தனியா போய்டாத.. தெரியாத ஊரு.. வெளிய தனியா போக கூடாது சரியா..
ஹிம்ம் சரிம்மா.. நான் போகலை.. போனா மாமா கூட தான் போவேன்..
ஹிம்ம் சரி டா நான் நாளைக்கு பேசுறேன் வைக்கட்டா என்கவும்
ம்மா லட்சுமி மேகலை ராமு கொம்பன் எல்லாரையும் கேட்டதா சொல்லு சரியா…
ஹிம்ம் சரிம்மா நான் வைக்கிறேன் என்று வைத்து விட்டு இப்போதான் நிம்மதியா தூங்க முடியும் என்று குணாவிடம் அவன் கைப்பேசியை கொடுத்து விட்டு நிம்மதியாக தன் வேலைகளை பார்க்க சென்றார்..
ராணி போனை அனைத்ததும் அங்கிருந்த டீபாயின் மீது போனை வைத்தவள் பிரசாத்தை பார்த்து சிரித்தாள்…
சிரிப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் சின்ன பொண்ணா இருக்கியே என்று தனக்குள் புலம்ப..
கல்யாணமே வேண்டாம்னு சொன்னவன் எதுக்கு டா சின்ன பொண்ணுன்னு கவலை படுற என்று அவன் மனசாட்சி வாரியது..
மூடிட்டு போ என்று அதனை அடக்கியவன் என்ன உன் தம்பி பெரிய ரவுடி போல.. எதா இருந்தாலும் கால் பண்ணுன்னு சொல்றான்..
உன்னை என்ன நான் கடிச்சா சாப்பிட போறேன்.. காலையில் உன் தம்பி அப்படி சொல்லிட்டு போறான்..
ஏய் குள்ள புஸ்க்கு நீயே ஒரு பொடிசு.. இதுல அவன்லாம் எந்த மூளைக்கு.. என்று நக்கலாக கூறினான்..
அவனுக்கு என் மேல ரொம்ப பாசம் மாமா என்று கூற சரி சரி தூங்கு போ உன் இடத்தை காட்டுறேன் என்று அவளை அழைத்து சென்றவன் அவள் அடுத்து கூறிய பதிலில் விடிய விடிய தூங்காமல் ஆந்தை போல ஆலோட்டோம் போட்டு கொண்டிருந்தான்..
என்னடா பண்ணி வச்சுருக்கீங்க…
பிரசாத் மைண்ட் வாய்ஸ்..
ஹாஹாஹா
தன் மகளிடம் பேசி விட்டு குணவிடம் போனை கொடுத்து விட்டு சமையலறைக்கு வந்தவர் தனக்கும் தன் மகனுக்கும் தட்டில் சாதம் போட்டு எடுத்து வந்தார்..
அங்குருந்த சாப்பாடு மேசையில் வைத்தவர் தம்பி.. தம்பி.. சாப்பிட வாப்பா என்று அழைக்க தோ வரேன் ம்மா என்று வந்தவன் அவன் பாட்டுக்கு அங்கு முறைத்து கொண்டிருந்த வர்ஷாவை கண்டு கொள்ளாமல் அமர்ந்து சாப்பிட்டான்..
என்ன உங்க ரெண்டு பேருக்கு மட்டும் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடுறீங்க.. என்று அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை பார்த்து கத்தினாள்..
அவள் கத்துவதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவ என்ன நான் இங்க இப்படி கத்திட்டு இருக்கேன்..
நீங்க என்னடான்னா ஒரு பதிலும் சொல்லாமா சாப்பிட்டுட்டு போயிட்டே இருக்கீங்க..
உங்க மனசுல என்ன நெனச்சுட்டு இருக்கீங்க.. அவ இங்க இல்லைன்னு நல்லா ஆடுறீங்க போல..
நாங்க ஏதும் பண்ண மாட்டோம்னு நெனைப்பா.. இருங்க அப்பா வரட்டும்.. உங்களை என்ன பண்றேன்னு பாருங்க என்று இறைந்து கத்தினாள்..
நீ எவ்ளோ வேணாலும் கத்து.. எங்க காது கேட்காது என்பது போல் அவர்கள் தங்கள் வேலையை முடித்தனர்..
அதான் கை கழுவும் வேலை..
ராணி சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து கொண்டு சமையலறைக்கு செல்ல அங்கு நின்ற குணா வர்ஷா அருகில் வந்து அவள் முகத்துக்கு நேரே ஏப்பம் விட்டவன்..
இனி உன்னால ஒன்னும் புடுங்க முடியாது.. கயல் மேல கை வைக்கணும்னா மாமாவை தாண்டி தான் எதா இருந்தாலும் பண்ண முடியும்.. போடி வந்துட்டா.. என்று அவளை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு அவன் அறைக்கு சென்றான்..
சிறிது நேரம் கழித்து சமையலறையில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வந்த ராணி.. எங்கோ பார்த்து கொண்டு இருக்குறத போட்டு திண்ணா திண்ணுங்க..
இல்லைனா பட்னி கிடந்தா பட்னி கிடங்க.. நான் தூங்க போறேன் .. என்னை எழுப்பி இதை செஞ்சு கொடு அதை செஞ்சு கொடுன்னு சொல்ற வேலை இனி இருக்க கூடாது..
இனி என் இஷ்டம் போல தான் சமைப்பேன்.. சாப்பிட்டா சாப்பிடுங்க.. இல்லைனா உங்க வயித்தை காய போடுங்க என்று எனக்கென்ன வந்தது என்பது போல் குணாவின் அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டார்..
ஒஹ் அவ இங்க இல்லனதும் உங்க ஆட்டத்தா ஆரம்பிக்குறீங்களா.. இருங்க அப்பா வரட்டும்.. என்று தன் தந்தைக்காக காத்திருந்தாள்..
குமரேசன் மார்க்கெட் சென்று கோழி முதல் மீன் வரை ஒன்று விடாமல் அனைத்தையும் வாங்கி வந்தவர் தன் செல்ல மகள் சோபாவில் கோபமாக அமர்ந்திருக்கவும் அனைத்தையும் வைத்து விட்டு அவளிடம் சென்றார்..
என்னம்மா ஏன் இப்படி உட்காந்துருக்க.. எங்க அவ.. நீ மட்டும் இங்கே தனியா உட்காந்துருக்க என்று வினவினார்..
அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு எப்பயோ தூங்க போய்ட்டாங்க..
என்ன அதுக்குள்ள எங்க அந்த கழுதை.. நான் இதெல்லாம் வாங்கிட்டு வரதா சொல்லிருந்தேனே..
நீங்க வாங்கிட்டு வரது எல்லாம் இனி அவங்க சமைக்க மாடங்களாம்..
அவங்க சமைக்குறது தான் நம்ம சாப்பிடணுமாம்.. இப்போ நீங்க வாங்கிட்டு வந்தது கூட சமைக்க முடியாதாம்.. ஏற்கனவே இருந்த சாப்பாடு தான் சாப்பிடனும்ன்னு சொல்லிட்டு போய் தூங்கிட்டாங்க..
அப்படியா சொன்னா அவ..இரும்மா இன்னைக்கு அவளை என்ன பண்றேன்னு பாரு என்று வீர சவடால் விட்டு சென்றார்..
குணா அறைக்கு வந்தவர் கதவை தட்ட யாருமே ஒரு குரல் கூட குடுக்க வில்லை..
இதுபோல் கதவை தட்டுவார்கள் என்று முன்பே அறிந்த இருவரும் உஷாராக காதில் பஞ்சை வைத்து கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்..
தட்டி தட்டி பார்த்த குமரேசனுக்கு கை வலி வந்தது தான் மிச்சம்..அப்பா நீங்க எவ்ளோ தான் தட்டினாலும் அவங்க திறக்க மாட்டாங்க..
விடுங்க தட்டாதிங்க.. எல்லாம் அவ இங்க இருந்து போயிட்டாள்ளா.. அந்த தைரியம் தான்..
இனி நம்மால எதுவும் அவளை பண்ண முடியாதுங்குற தைரியம் தான்..என்று கூறியவள் இருக்கிறதை சாப்பிட்டு தூங்க வேண்டியது தான்..
இப்போதைக்கு இதை தவிர வேற வழியில்லை என்று அவள் இருந்த சாப்பாடை போட்டு சாப்பிட்டு விட்டு சென்றாள்..
இந்த வெட்கங்கெட்ட குமரேசனும் சாப்பிட்டு விட்டு தன் அறையில் சென்று முடங்கி கொண்டார் எதுவும் செய்ய முடியாமல்..
இங்கு பிரசாத் தலையில் கை வைத்து கொண்டு வாழ்நாளில் இதுவரைக்கும் கடவுளை கும்பிடாதவன் அவரை முதன் முறையாக அழைத்து அவரிடம் புலம்பி கொண்டிருந்தான்..
யோவ் உங்களுக்கெல்லாம் என்னை பார்த்தா எப்படி தெரியுது.. என்னய்யா பண்ணி வச்சுருக்கீங்க..
கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் தான்.. அதுக்குன்னு இப்படியா கோர்த்து விடுவீங்க..
இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியலையா.. என்னை என்ன கேனைன்னு நினைசீங்களா..
இல்லை நானும் தெரியாம தான் கேக்குறேன் நான் என்ன சொம்பையா.. என்று வாத்தி புலம்பி தள்ளினான்..
என்ன பாக்குறீங்க.. நான் இப்படி எல்லாம் ஏன் புலம்புறேன்னு தானே பாக்குறீங்க..ஆறடி அரச மரத்தை வேரோடு ஒரே வார்த்தையில் சாச்சு புட்டு எப்படி தூங்குறா பாருங்க..
அவ தான் காரணம்.. ஹிம்ம் ஹிம்ம் அவ கூட இல்லை இந்த பொல்லாத ரைட்டர் தான் காரணம்.. கல்யாணம் வேண்டாம்னு விறைப்பா திரிஞ்சுது ஒரு குத்தமா..
கல்யாணம் பண்ணி வைக்கிறேன்ற பேருல ஒரு குழந்தை பிள்ளைய பிடுச்சி எனக்கு கட்டி வச்சுருக்கு இந்த ரைட்டரு..
நான் ஏன் லூசாட்டும் புலம்புறேன்னு தானே கேக்குறீங்க.. வாங்க நீங்களே அந்த அநியாயத்தை வந்து பாருங்க..
(வாத்தி ரீவைண்ட்.. ஹாஹாஹா)
தன் தாயிடம் பேசிவிட்டு போனை வைத்தவள் அவனை பார்த்து சிரிக்க என்ன உன் உடன் பிறப்பு கூட பேசிட்டியா..
ஹிம்ம் ஆமா மாமா தம்பியும் பேசினான்.. அம்மாகிட்டையும் பேசினேன்..
இந்த ஊரு எனக்கு புதுசு இல்லையா அதான் வெளிய தனியா போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க..
அதான் நான் சொன்னேன்..வெளிய போறதா இருந்தா மாமா கூட தான் போவேன்னு.. நீங்க அடுத்த முறை வெளியே போனா என்னையும் கூப்பிட்டு போங்க மாமா..
தனியா இருக்க பயமா இருக்கு என்கவும் சரி சரி நீ வா உனக்கு தூங்க இடம் காட்டுறேன்.. அங்க வந்து படுத்துக்கோ என்று அழைத்தவனை மாமா என்று அழைக்க திரும்பினான்..
என்ன வேணும் என்கவும் இந்தாங்க இந்த போன நீங்களே வச்சுருங்க.. அம்மா போன் பண்ணினா என்கிட்ட குடுங்க என்கவும் ஏன் நீயே வச்சுறு என்று அவன் வாங்காமல் இருக்கவும் என்கிட்ட இருந்தா நான் மறந்துடுவேன் மாமா..
எங்கயாவது மறந்து வச்சுட்டா தொலைஞ்சி போய்டும்.. நீங்க பத்திரமா வச்சுருங்க.. என்று அவன் கையை பிடித்து திணித்தாள்..
சரி வா என்று அவளை அழைத்து சென்றவன் அவன் அறைக்கு பக்கத்து அறையை காட்டி அங்கு படுத்துக் கொள்ளுமாறு சொல்ல சரி என்று உள்ளே சென்றவள் அவன் வராததும்..
நீங்க இங்க படுக்கலையா மாமா என்கவும் உடனே கோபமானவன் என்ன இங்க உன்கூட என்னால படுக்க முடியாது..
நான் என் ரூம்ல போய் படுத்துக்குவேன்.. நீ இங்கேயே படு என்று அவன் அறைக்கு செல்ல குடுகுடுவென அவன் பின்னால் ஓடி வர அவள் ஓடி வரும் சத்தம் கேட்கவும் இவளை ஒரே இம்சை இவளோட என்று பல்லை கடித்தவாறு நின்றான்.
இவன் நிற்பான் என்று தெரியாமல் பின்னோடு ஓடி வந்ததவள் அவன் முதுகில் மடாரென்று இடித்து கொண்டு நின்றாள்..
அவள் இடிக்கவும் உடனே திரும்பியவன் ஏய் லூசு உன்னை உன்னை.. என்று பல்லை கடித்தவன் என்ன உனக்கு இப்போ ப்ரெச்சனை.. எதுக்கு இப்போ என் பின்னாடியே வர ..
உனக்கு அறிவில்லை நான் தான் உன்னை அங்க படுக்க சொன்னேன் தானே.. அப்பறம் எதுக்கு மாமா மாமான்னு நை நைன்னு நச்சரிச்சுட்டு என் பின்னாடியே ஓடி வர..
இப்போ என்ன.. நான் உன் கூட படுக்கணும் அது தானே வேணும் என்று அவன் இரட்டை அர்த்தத்தில் பல்லை கடித்தவாறு கேட்க அவள் அதை அறியாமல் ஹிம்ம் என்று தலையை ஆடியவள் ஏன் மாமா உங்களை நான் மாமான்னு கூப்பிடுறது பிடிக்கலையா என்று கேட்டாள்..
ஆமா பிடிக்கலை அதுக்கென்ன இப்போ என்று எரிச்சலாக கூற சரி இனி நான் உங்களை அப்படி கூப்பிடலை என்றவள் எனக்கு தனியா படுக்க பயமா இருக்கு…
நீங்க படுக்குற இடத்துலயே நானும் படுத்துக்குறேன் என்கவும் அவளை உற்று பார்த்தவன் வா என்பது போல் தலையசைக்க அவனை தொடர்ந்தாள்..
தன்னறைக்கு அவளை கூட்டி வந்தவன் அங்கிருந்த சோபாவை காட்டி இதுல படுத்துக்கோ.. நான் அங்கே படுத்துக்குறேன் என்று சொல்லவும் ஹிம்ம் என்று தலையை ஆட்டியவள் நைட் எனக்கு தெரியாம தனியா விட்டுட்டு எங்கையும் போய்டாதீங்க என்று அந்த சோபாவில் படுத்துக் கொண்டாள்…
ஹேய் ஏன் இந்த ட்ரெஸ்ஸோட படுக்குற.. கசகசன்னு இருக்கும் போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வந்து படு என்கவும் என்கிட்ட வேற ட்ரெஸ் இல்லை மாமா என்கவும் இப்போதானே வெளிய போய்ட்டு வந்தேன்..
அப்போ சொல்லிருக்கலாம்ல என்று கத்த நான் மறந்துட்டேன் என்று தலையை தொங்க போட சரி சரி நாளைக்கு காலையில் போய் வாங்கிக்கலாம் என்றவன் ஹிம்ம் அப்பறம் வேற என்னன்னு வேணும்னு லிஸ்ட் போட்டு வை என்கவும் ட்ரெஸ் மட்டும் தான் மா.. என்று வாயை பொத்தி கொண்டாள்..
ஹேய் உனக்கு ட்ரெஸ் மட்டும் போதுமா.. வேற ஏதும் வேண்டாமா மேக்கப் ஐடெம்ஸ் அப்பறம் இந்த நேப்கின் என்று கூற மேக்கப்லாம் நான் போட மாட்டேன்..
கடைசியா என்ன சொன்னீங்க.. ஆஹ் நேப்கின் அது எதுக்கு எனக்கு.. நான் தான் இன்னும் வயசுக்கே வரலையே.. என்று அவன் தலையில் பெரிய பாராங்கல்லை எடுத்து போட்டாள்..
அது எனக்கு தேவை படாது என்று அசால்டாக கூறியவள் படுத்து உறங்கி விட்டாள்..
அதை கேட்டவனுக்கோ தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வு..
என்னடா பண்ணி வச்சுருக்கீங்க.. ஒரு சின்ன புள்ளைய போய் கட்டி வச்சுருக்கீங்களே நீங்க எல்லாம் நல்லா வருவீங்க டா என்று புலம்பி கொண்டே அவள் பக்கம் திரும்ப அவள் நல்ல உறக்கத்தில் சோபாவில் இருந்து விழுவது போல் திரும்பி படுத்தாள்..
அவளை சென்று தன் கைகளில் தாங்கி கொண்டவன் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்து விட்டு விடிய விடிய உறங்காமல் முழித்து கொண்டிருந்தான்..
இந்த சம்பவத்தில் டிவோர்ஸ் பேப்பரை மறந்தே போனான்..
காந்தமென ஈர்க்கும்..
0 Comments