Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 2

 

காதல்-2:


அவன் சொல்வதை கேட்டு அதிர்ந்து நின்றவள் அவன் கடைசியாக பெயர் சொல்லி அழைப்பதை கூறவும் உடனே தன் நெஞ்சில் கை வைத்து கொண்டு அடியாத்தாடி புருஷனை பேரு சொல்லி கூப்பிடுவங்களா.. இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா..


ஏன் மாமா.. அவளுக எப்படி புருஷனை இப்படி பேரு சொல்லி மரியாதை இல்லாம கூப்பிடுறாங்க.. அவுங்க புருஷன் மாரெல்லாம் ஏதும் கேட்க மாடங்களா.. ஐயோ ஐயோ புருஷன் கண் கண்ட தெய்வம்னு சொல்லுவங்களே..


அப்போ இந்த வள்ளி பிள்ளை சொன்னதெல்லாம் உண்மை தானா மாமா என்று கற்சிலை போல் நின்று கொண்டிருந்தவனை போட்டு உளுக்கினாள்…


அந்த கற்சிலை கொஞ்சம் கூட ஆடாமல் அசையாமல் அதிர்ந்து நின்று கொண்டிருந்தது..


(அவர் பிரீஸ் டாஸ்க்ல இருக்காரு..)


அவள் அடியாத்தாடி என்று உச்சஸ்தாயில் கத்த ஆரம்பிக்கும் போதே இவன் அதிர்ந்து அவளை பார்த்தான் இவ என்ன இப்படி கத்துரானு..


(பாருங்களேன் அப்போவே சாருக்கு ஸ்பீக்கர் அவுட்)


அதன் பிறகு அவள் அவனை மாமா என்று அழைத்ததும் நெஞ்சு வலியே வந்து விட்டது..அவளையே அதிர்ந்து பார்த்து கொண்டிருந்தான்..


( இவ எந்த கிரகத்துல இருந்து வந்துருக்கான்னு பாத்துருப்பான் போல..)


(சத்தியமா ஏலியன்னு மட்டும் நெனச்சுடாத ராசா.. அப்புறம் கதை வேற மாதிரி போயிடும்..)


அவனை போட்டு மாமா மாமா என்று அழைத்தவள் அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க ஐயோ என் மாமனுக்கு ஏதோ ஆயிடுச்சு யாராவது கொஞ்சம் வாங்களேன் என்று ஒப்பாரியை ஆரம்பிக்க அவள் கத்தின கத்தில் அவனுக்கு காதில் இருந்து ரத்தம் தான் வரவில்லை…


அவனுக்கு காதில் கொய்யின்னு சத்தம் கேட்கவே அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தவன் ஏய் இப்போ எதுக்கு இப்படி கத்தி ஊரை கூட்டுற.. கொஞ்சம் அமைதியா இரு என்று அவளை போட்டு இவான் உளுக்கினான்..


அவன் தன்னிடம் பேசவும் உடனே சகஜ நிலைமைக்கு வந்தவள் மாமா உங்களுக்கு ஒன்னும் இல்லையே.. ஏன் கொஞ்ச நேரம் முன்ன எதையோ பார்த்து பயந்த மாதிரி நின்னீங்க என்னாச்சு.. ஏதும் பேய் பிசாசு பார்த்து பயத்துடீங்களா..


(அவன் உன்னை உன் பேச்சையும் பாத்துதான்டியம்மா ஷாக் ஆனான்..)


ஏய் நீ ஏன் என்னை மாமான்னு கூப்பிடுற.. அந்த கேள்வி அவளுக்கு லூசு தனமாக பட்டதோ.. நீங்க என்ன லூசா மாமா 


(வாடி வாடி ராசாத்தி.. கேட்டா பாரு கேள்வி வாத்திக்கு ஆம்புலன்ஸ் ரெடி பண்ணுங்கோ.. கண்டிப்பா ஒரு சம்பவம் இருக்கு..)


நீங்க என்ன லூசா மாமா.. புருஷனை வேற எப்படி கூப்பிடுவாங்க..நீங்க தானே இந்த தாலியை கட்டுனீங்க அப்போ நீங்க தான் என் புருஷன்.. உங்களை நான் மாமான்னு தான் கூப்பிடுவேன்.. என்று அவன் காலையில் கட்டிய தாலியை கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள்…

அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது..புரிந்த விஷயத்தை நினைத்து ஐயோ என்று அலறினான்..


(இவன கண்டாதான் புள்ளைங்க எல்லாம் அலறும்..வாத்தியையே அலற வச்சுட்டா.. வாடி ராசாத்தி உனக்கு சுத்தி போடணும்…)


நீ என்ன படிச்சுருக்க.. என்று பயந்து கொண்டே வினவினான்.. நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சுருக்கேன் மாமா என்று கீழே குனிந்து கொண்டு சோகமாக கூறினாள்.. அவனுக்கோ எங்கு போய் முட்டி கொள்ளலாம் என்று தெரியாமல் அவளை பார்த்த படியே இருந்தான்..


(அடுத்த பூகம்பம் வர போகுது மனச திட படுத்திக்கோ ராசா…)


உங்க ஊரு என்று ஆரம்பிக்கும் முன்பே அது கொஞ்சம் கிராமம் சிதம்பரம் உள்ள போகணும் என்று கூறியதும் ஹிம்ம் விடிஞ்சுது என்று முனக இல்ல மாமா இன்னும் ராத்திரியே ஆகலை அதுக்குள்ள எப்படி விடியும் என்று தன் மான்விழியை உருட்டியவாறு வினவினாள்…


ஹிம்ம் ஆமாம் இனி விடிஞ்ச மாதிரிதான் என்று அவன் பாட்டுக்கு ஏதோ சிந்தனையில் மூழ்க அவன் கையை பிடித்து உளுக்கியவாறு மாமா நீங்க எந்த வகுப்புக்கு பாடம் எடுக்குறீங்க பத்தாவதா இல்ல என்று ஏதோ கூற வந்தவளை பாதியிலேயே தடுத்து நிறுத்தியவன் போதும் வேண்டாம் இதுக்கு மேல போனா என் பாடி தாங்காது…


ஏன் மாமா உங்க பாடி வீக்கா இருக்கா.. நான் உங்களுக்கு சமைச்சு போட்டு உங்களை நல்லா பாதுக்குறேன்..அப்புறம் பாருங்க நீங்க எவ்ளோ பெரிய பலசாலின்னு தெரியும்.. உங்களுக்கு நல்லா எல்லாம் செஞ்சு குடுத்து இன்னும் கொஞ்ச நாளில் உங்களை குண்டா மாத்திடுறேன்.. என்று கூற இவனுக்கு ஜெர்கானது…

இவனுக்கு தலையே சுத்தியது.. ஏன் இவளை போய் சார் எனக்கு கட்டி வச்சாரு.. 


ஒன்னும் தெரியாத பெண்ணை போய் என்று யோசித்துக் கொண்டிருந்தவனிடம் மாமா உங்களுக்கு இப்போ என்ன சமைக்கட்டும்.. என்று கேட்டாள்..

அவன் இருந்த கடுப்பில் ஹிம்ம் கொஞ்சம் இலை கொடி பேப்பர்.. இதெல்லாம் தான் சாப்பிடுவேன் போ பொய் எடுத்துட்டு வா..என்று கூறிவிட்டு தன்னரைக்கு வந்து விட்டான்…


இவன் சொன்னதை கேட்டவள் முதலில் விழித்து பின் அவன் சென்றதும் தோட்டத்தை நோக்கி சென்றாள்..


அங்கு அவன் ஒரு முடிவில் இருக்க அவள் திரும்பி வரும் போது அவள் கையில் அவன் கேட்டது அனைத்தும் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்..


(என்ன பண்ணி வச்சிருக்காளோ பாதகத்தி..)


என்ன சமைக்கட்டும் என்று அவள் கேட்க இந்த கொம்பேரி மூக்கன் ஹிம்ம் செடி கோடி புல்லு பூண்டு என்று அடுக்க அவள் தோட்டத்தை நோக்கி ஓடி விட்டாள் அவன் கேட்டதை கொண்டு வர..


(போ வாசுகியே உன்கிட்ட தோத்துட்டாங்கா..)


(புருஷன் வாக்கு தவறாமை விருது உனக்கு தான்..)


ஒரு மூன்று மணி நேரம் கழித்து அவன் கேட்டதற்கு மேலேயே கொண்டு வந்து ஹாலில் வைத்தவள் மாமா மாமா என்று ஏலம் போட்டுக் கொண்டே மேலே சென்றாள்..


ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்து சலித்தவள் இந்த மாமா ஒருத்தர் இருக்குறதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு அதுல இத்தனை ரூமு.. ச்சே இவரு எங்க போயிட்டாரு மாமா மாமா..


அவனோ தன் பிரெத்தியேக அறையில் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.. இப்பொழுது மட்டும் அவள் அவன் கண்ணில் பட்டால் அவ்வளவு தான்.. கண்களாலேயே பொசிக்கியிருப்பான்..


ஆனால் அவன் தான் தன் அறையில் இருந்த உள்ளறையில் உட்கார்ந்து பிள்ளைகளை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தானே..


(ஒஹ் இந்த கோழிக்குள்ள முட்டை.. முட்டைக்குள்ள கோழி மாதிரி..)


இவள் கத்தும் சத்தம் கொஞ்சமாக கேட்க ஷிட் என்று மேசையில் தட்டியவன் தன் சிரித்த முகத்தை பிள்ளைகளுக்கு காட்டியவாரு கிளாஸ் ஓவர் என்று கூறிவிட்டு மடிக்கணினியை மூடி வைத்தவன் அறையை விட்டு வெளியே வந்தான்..


அப்பொழுது தான் இந்த மாமா எங்க போனாங்க என்று அங்கும் இங்கும் தேடியவாறு வந்தவள் இவனை தெரியாமல் இடித்து விட்டாள்..


(நெருப்பு பத்திக்கிச்சு…)


தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன் தன் மேல் முட்டி நின்றவளை நகர்த்தி நிறுத்தி ஏய் காலில் சக்கரம் கட்டிருக்கியா எதுக்கு குடுகுடுன்னு ஓடி வர என்ன ஆச்சு.. எதுக்கு இப்போ மாமா மாமான்னு ஏலம் போடுற என்று கோபத்தில் சிவந்த முகத்துடன் கத்தினான்..


அவளோ அவன் கத்துவதை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் மாமா பாருங்களேன் உங்க முகம் சிவக்குது.. என்று அவன் மொழுக்குன்னு இருந்த தாடையை தடவினாள்..


அவளின் குளிர்ச்சியான வெண்டை பிஞ்சு விரல்கள் தன் மேல் பட்டதும் சற்று நேரம் அனைத்தும் மறந்து நின்றவன்.. ஏன் மாமா நீங்க இவ்ளோ கேவலமா இருக்கீங்க என்று ஆப்பை சொருகினாள்..


இவன் வேறு உலகத்தில் இருந்தவன் இவள் இவ்வாறு கூறவும் என்ன நான் கேவலமா இருக்கேனா என்று அதிர்ச்சியாக கேட்டான்..


அவள் அசால்டாக நீங்க தான் நல்லாவே இல்லை என்று இன்னும் அவன் கன்னத்தில் இருந்து கையெடுக்காமல் தோ இங்க ஒரு மீசை இல்லை.. மீசை இருந்தாதான் அழகை இருக்கும்.. என்று மூக்குக்கும் மேலுதட்டுக்கும் இடையில் கைகளில் தடவியவாறு கூறியவள் அவன் கிளீன் ஷேவ் செய்த தாடையை தடவி ஒரு தாடி இல்ல..


ஏன் உங்களுக்கு இங்க முடி வளராதா என்று அடுத்த கேள்வியை கேட்க லூசு என்று அவள் கையை தட்டி விட்டவன் எனக்கு இப்படி இருந்தாதான் பிடிக்கும் என்று கூறினான்..

அவள் அதற்கும் அசராமல் எனக்கு பிடிக்கவே இல்லை என்றவள் என்னதான் இருந்தாலும் என்னோட தேவரகொண்டா மாதிரி வராது.. 


அவன் எப்படி இருப்பான் தெரியுமா மாமா செமையா இருப்பான்.. பார்த்தா கண்ணுக்குள்லேயே வந்து நிற்பான்..

சூப்பரா இருப்பான் தெரியுமா என்று குதூகலமாக கூற இவனுக்கு வெறியேறியது.. சரி விடுங்க சாப்பிடலாம் போய் கை கழுவிட்டு வாங்க என்றவள் சிட்டாக பறந்து விட்டாள்..


எதுக்கு இப்படி குடுகுடுன்னு ஓடுறா லூசு என்று புலம்பியவாறே கை கழுவ சென்றான்..


கை கழுவி விட்டு நிமிர எதிரில் இருந்த கண்ணாடியில் தன் முகம் தெரிய அதனை பார்த்தவன் தாடையை தடவியவாறு ஷேவ் பண்ணாம இருந்தா நல்லருக்குமோ என்று ஒரு நொடி யோசித்தவன் தன் தலையை குளுக்கியவன் நான் இப்படி தான் இருப்பேன் போ டி உனக்கு பிடிக்கலைன்னா என்ன ..


நான் யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன்.. என்று உறுதி எடுத்தவன் தன் தலை முடியை கோதியவாரு ஹாலிற்கு வர அங்கு டேபிளில் சாப்பாட்டிற்கு பதிலாக அவன் கேட்டது அனைத்தும் இருக்க அதனை பார்த்து அதிர்ந்தான்..


அங்கு அவனை பார்த்தவாறு நின்றவளை ஏய் குள்ள புஸ்க்கு இங்க வா என்று தன்னருகில் அழைத்தான்..


(என்னடா இது.. வாத்தி பேரு வைக்குறாரு.. அப்போ சீக்கிரமே குய்யா குய்யா சத்தம் இருக்கு..)


குள்ள புஸ்க்கு என்கவும் இவள் திரும்பி தன் பக்கத்தில் பார்க்க ஓய் உன்னை தான் வா இங்க என்கவும் குடுகுடுவென ஓடி வந்தவள் கடைசி நேரத்தில் பிரேக் போட முடியாமல் அவன் நெஞ்சில் மோதி நின்றாள்..


எதுக்கு ஓடி வந்து டொம்முன்னு டொம்முன்னு மோதுற மெதுவா உனக்கு நடந்து வர தெரியாதா என்று தள்ளி நிறுத்தியவன் டேபிளில் இருந்ததை காட்டி என்ன இது என்று கேட்டான்..

நீங்க தானே மாமா கேட்டீங்க இதெல்லாம் வேணும்ன்னு இப்போ இப்படி சொல்லறீங்க.. என்கவும் அதில் குறும்பு இருந்ததோ..


அவன் முறைக்கவும் என்ன மாமா நான் நீங்க கேட்டதை கொண்டு வந்துட்டேன்ன்னு பாசமா பாக்குறீங்க.. நீங்க கேட்டதும் நான் கொண்டு வந்துட்டேன் பாருங்க இதையெல்லாம் எடுக்கும் போது எவ்ளோ முள் கீறிடுச்சு தெரியுமா என்று தான் கைகளை காட்ட அதில் சிறு சிறு சிராய்ப்பு இருப்பதை கண்டவன் லூசா நீ..


அறிவு இருக்கா உனக்கு பார்த்து செய்ய மாட்டியா என்று கத்தினான்..


(என்ன வாத்தி ரொம்ப துள்ளுதே.. இப்போ துள்ளுதுன்னா அப்போ அடங்க போகுதுன்னு அர்த்தம்..)


வா என்று தன்னறைக்கு அழைத்து சென்று மருந்து போட தன் மாமனை கண்டு மெர்சலாகிட்டாள்..


தன்னை பார்த்துக்கொள்ள ஏன் அன்பாக பேச கூட யாரும் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தவளுக்கு சிறு காயத்திற்கு மருந்து போடுபவனை கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உயர்த்தெழுந்தது…


ஆனால் அவள் கனவிலும் நினைத்திருக்க மாட்டாள் மருந்து போடுபவனே தீரா காயம் உண்டாக்குவான் என்று…


தன் கைகளுக்கு மருந்து தடவிக் கொண்டே தன்னை திட்டுபவனை அதிசயமாக பார்த்தவள்.. மாமா மாமா என்று கிசுகிசுப்பாக அழைத்தாள்..

என்ன.. வேற எங்கயாச்சும் கீறி வச்சுருக்கியா.. என்று எரிந்து விழ அவளெங்கு அதையெல்லாம் கண்டு கொண்டாள்.. 


மாமா நான் ஒன்னு கேட்பேன் பதில் சொல்றீங்களா என்று கேட்கவும் அப்படி என்ன மேடம் கேட்க போறீங்க..

கேளுங்க கேட்போம் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் என்று எகத்தாளமாக கூற அதை புறந்தள்ளியவள் மாமா ஒருத்தவங்க மேல அன்பு அதிகமாச்சுன்னா என்ன பண்றது எப்படி அவங்ககிட்ட காட்டுறது என்று கேட்கவும் இது என்ன கேள்வி என்பது போல் பார்த்தான்..


(ஹே வாத்திக்கு பதில் தெரியல அதான் இப்படி பாக்குறாரு.. விடாத கேளு..கேளு..)


இதெல்லாம் ஒரு கேள்வியா என்று கேட்கவும் என்ன மாமா உங்களுக்கு இது கூட தெரியாதா தர்மன் அப்பா சொன்னாரு நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சு இந்தியா முழுக்க பிள்ளைகளுக்கு சொல்லி குடுக்குறதா சொன்னாரு.. 


இப்போ நான் கேட்ட ஒரு கேள்விக்கே இப்படி புளுக்கு புளுக்குன்னு முழிக்கிறீங்க என்று அவன் இமேஜை டேமேஜ் செய்தாள்..


ஏய் அரவேக்காடு.. இதுக்கு எப்படி பதில் சொல்றது..

ஹிம்ம் வாயால தான் மாமா இது கூட தெரியாதா என்று வயிற்றை பிடித்தபடி சிரிக்க.. அவள் சிரிக்கும் போது இதழ்களுக்கு இடையே தெரிந்த பற்கள் அவனை வா வாவென்று அழைத்தது.. தலையை குலுக்கி கொண்டவன் ஏய் சிரிக்கிறதை கொஞ்சம் நிப்பாட்டுறியா என்று கத்தவும் வாயை கைகளால் மூடி கொண்டாள்..


அவள் கண்கள் மட்டும் தெரிய அது இவனை பார்த்து நக்கலாக சிரிப்பது போல் இருந்தது..

கிட்டத்தட்ட இருபது வருடமாக யாரும் வேண்டாமென்று தனியே இருப்பவனிடம் வந்து அன்பை எப்படி காட்டுவது என்று கேட்டால் அவனும் என்ன தான் செய்வான்..


(வாத்தி மைண்ட் வாய்ஸ்சுல பேசுராறு என்னன்னு பார்ப்போம்..)


இந்த குள்ள புஸ்க்கு என்ன இப்படி ஒரு கேள்வி கேட்குது..இதுக்கு என்ன பதில் சொல்றது.. என்று யோசித்தவன் சும்மா அடிச்சு விடலாம் இவளுக்கென்ன தெரியவா போகுதுன்னு நினைத்து கொண்டு சொன்னான்..

ஆனால் அதுவே அவனுக்கு ஆப்பாக அமைவது தெரியாமல் வாத்தி வாய விட்டுருச்சு..

அன்புன்னா அதை எப்படி காட்டுறதுன்னு தானே கேட்ட என்கவும் ஹிம்ம் ஆமா மாமா சொல்லுங்க சொல்லுங்க என்று தன்னை நெருங்கியவளை பார்த்தவன்.. அவங்களுக்கு பிடுச்சது செய்யணும் ரொம்ப அன்பு அதிகமானால் அவங்களை கட்டி பிடுச்சுக்கலாம் அதுவும் பத்தலைன்னா முத்தம் கொடுக்கலாம் என்று கூற..


எங்க மாமா கொடுக்கணும் என்று அடுத்த கேள்வியை கேட்க எரிச்சலானவன் கன்னத்துல கொடுப்பாங்க என்று எரிச்சலுடன் கூறினான்..


ஒஹ் என்றவள் அவன் என்ன என்று உணரும் முன்பே கட்டி பிடித்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட செல்ல அவளுக்கு உயரம் பத்தவில்லை.. எவ்வளவு எக்கியும் அவன் கன்னத்தை எட்ட முடியாமல் ஏன் மாமா இப்படி பனைமரம் கணக்கா வளர்ந்து வச்சுருக்கீங்க..


எனக்கு உயரம் பத்தவே இல்லை குனிங்க என்று அவன் சட்டை காலரை பிடித்து இழுக்க சிலைக்கு உயிர் வந்தது..


அவள் அணைக்கவும் ஏதோ ஓர் உணர்வை அவளிடமிருந்து உணர்ந்தவன் அப்படியே நின்று விட்டான்..அவள் கட்டி பிடிக்கவும் அவன் நெஞ்சு வரை தான் அவள் இருந்தாள்..


அவள் சட்டை காலரை பிடித்து இழுக்கவும் அவள் இழுப்புக்கு கீழே குனிந்தவன் அவள் கன்னத்தில் முத்தமிடவும் அவனும் காட்டிக் கொண்டு நின்றான்..


அவனிடமிருந்து தன் இதழை பிரித்துக் கொண்டவள் மாமா எனக்கு உங்க மேல அன்பு அதிகம் ஆகும் போது இப்படி நீங்க கொஞ்சம் குனிஞ்சி நின்னுக்கோங்க அப்போதான் எனக்கு வசதியா இருக்கும்.. என்றவள் சாப்பிட வாங்க என்று சிட்டாக பறந்து விட்டாள்..


இவன் எவ்வளவு நேரம் நின்றானோ மாமா என்று அவள் அழைக்கும் சத்தம் கேட்டு தன். தலையை குலுக்கி கொண்டவன் இம்சை என்று முனகியவன் க்கீழே சென்றான்..


செடி கொடிகள் இருந்த இடத்தில் இப்பொழுது சாப்பாடு அடங்கிய பாத்திரங்கள் இருந்தது..

இவன் அதையெல்லாம் பார்த்ததும் இதெல்லாம் யாரு செஞ்சது என்கவும் நான் தான் மாமா என்கவும் ஒஹ் என்றவன் சேரில் அமர்ந்தான்.. மாமா ஒரு நிமிஷம் என்று கண்களை சுருக்கி கூறியவள் வெளியே ஓடினாள்..


எதுக்கு இப்படி ஓடுறா என்று பார்த்தவன் அதுக்குள்ள எப்படி இவ்வளவு சமைச்சா.. சாப்பிட்டுட்டு போய் முதல் வேலையா அதை தான் செய்யணும் இது நமக்கு செட்டாகாது.. என்று யோசித்தவன் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தான்..


அங்கு சாமியுடன் வந்தவள் உட்காருங்க ப்பா சாப்பிடலாம் என்கவும் வேணாம் ம்மா நீங்க சாப்பிடுங்க.. என்கவும் நான் உங்களுக்கும் சேர்த்து தன் சமச்சுருக்கேன் என்று கூறவும் சங்கடமாக நிமிர்ந்து பிரசாத்தை பார்க்க அவன் உட்காருங்க சாமி அதான் எஜமானி அம்மாவே சொல்லிட்டாங்க…


வாங்க வந்து உட்காருங்க என்கவும் அவர் அமர்ந்ததும் இருவருக்கும் பரிமாற அவள் நிற்பதை பார்த்தவன் இங்க நாங்க ரெண்டு பேரும் தானே இருக்கோம்..

எல்லாரும் போட்டு சாப்டுக்கலாம்.. நீயும் உட்காரு என்கவும் இல்ல மாமா நீங்க சாப்பிடுங்க என்கவும் அவளை முறைத்தவன் சாப்பிடு என்று தான் சிரிச்ச முகம் காட்ட அமர்ந்தாள்..


அவளுக்கு முன் பிளேட்டை எடுத்து வைத்து சாப்பாடு பரிமாற கலங்கிய கண்களை காட்டாமல் சாப்பிட சாமி அவளிடம் இந்த சின்ன வயசுல இவ்ளோ நல்லா சமைக்குரியே பாப்பா நல்லாருக்கு என்று கூறவும் அடுத்து அவள் கூறிய பதிலில் வாத்திக்கு புரையேறியது..

அவன் இருமிக் கொண்டே அவளை பார்க்க மெதுவா சாப்பிடுங்க மாமா என்று அவன் தலையில் தட்டி அவன் முதுகை நீவி விட்டு தண்ணீர் எடுத்து குடிக்க கொடுக்க அவளை பார்த்து கொண்டே தான் எடுத்த முடிவில் உறுதியானான்..


அப்படியென்ன கூறியிருப்பாள்..


வாத்தி ஷாக் ஆகுற அளவுக்கு..


சாமி கயலின் சமையலை ருசித்து ரசித்து சாப்பிட்டவர் கயலிடம் இந்த சின்ன வயசுல எவ்ளோ அருமையா சமைக்குற ம்மா.. நம்ம பிரசாத் தம்பி குடுத்து வச்சவரு என்று அவள் செய்த சாப்பாட்டை சாப்பிட்டவாறே அவளை புகழ்ந்து தள்ளினார்..

இங்கு அவன் அப்படி என்ன சின்ன வயசு இவளுக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..


என்னப்பா பத்தொன்பது வயசுலாம் சின்ன வயசா.. நான் அஞ்சாவது படிக்கும் போதே எனக்கு சமைக்க தெரியும் என்று கயல் சாமியிடம் கூறி கொண்டிருக்க இங்கு சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு அன்றைய தினம் ஐந்தாவது முறையாக ஹார்ட் வெடிச்சுடுச்சு…


ஐயோ ஒரு சின்ன பிள்ளைக்கு போய் தாலி கட்டி கூட்டிட்டு வந்துருக்கியே டா மடையா என்று நினைத்தவனுக்கு புரையேறியது..


அவன் இருமவும் ஏன் மாமா மெதுவா சாப்பிடலாம்ல என்று அவன் தலையில் தட்டி கொடுத்து முதுகை நீவி விட்டு கிளாசில் இருந்த தண்ணீரை எடுத்து கொடுத்து இந்தாங்க மாமா இதை குடிங்க என்று அவனிடம் தண்ணீர் அடங்கிய டம்ளரை குடுத்தாள்..


அதை வாங்கி அவளை பார்த்தவாறே குடித்தவன் அப்படியே சாதம் இருந்த தட்டில் கை கழுவ பட்டென்று அடி போட்டாள்..


உடனே அவன் கையை இழுத்து கொள்ளவும் சாமி சாப்பிட்டு எழுந்து சென்று விட்டார்..அவர் சென்றதும் இவன் ஏதோ கோபாமாக கேட்க வாயெடுக்க இவள் ஆரம்பித்து விட்டாள்..


(ஹிம்ம் பொண்டாட்டி வேலையை கரெக்டா ஸ்டார்ட் பண்ணிட்டா…)


இப்படி தான் பேசவே விட கூடாது ஆப் பண்ணிடனும்..

இது என்ன மாமா நீங்க படிச்சவங்க தானே .. இப்படி சாப்பாடு இருக்குற தட்டுல கை கழுவலாமா.. உங்களுக்கு வேண்டாம்ன்னு சொல்லிருந்தா நான் சாப்பிடுருப்பேனே..


இப்போ இவ்ளோ சாதம் வேஸ்ட்.. எவ்ளோ சாப்பாடு வீணா போகுது.. எவ்ளோ பேரு இந்த சாப்பாடு கூட கிடைக்காம இருக்காங்க தெரியுமா என்று ப்ரொபெசர்க்கே பாடம் எடுத்தாள்..


அவனும் இது போல் என்றும் செய்ததில்லை.. அவனுக்கு சாப்பாட்டின் அருமை தெரியும்.. இன்று இருந்த டென்ஷனில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமல் கை கழுவி விட்டான்..


இவள் கொடுக்கும் சொற்ப்பொழிவை கேட்டு தானை தானே நொந்து கொண்டான்.. ஏன்டா கையை கழுவினோம் என்று நினைக்க வைத்து விட்டாள்..


அவள் அத்தனை பேசியும் இவன் ஒன்றும் பேசாமல் இருக்கவும் அவள் அமைதியாக.. மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்..

ஆமா நீ ஏதோ சாப்பிடும் போது சாமி அண்ணா கிட்ட சொல்லிட்டு இருந்தியே என்று கேட்கவும் அவள் முதலில் இருந்து ஆரம்பிக்க ஆஹ்ஹ் இவ ஒருத்தி வளவளன்னு பேசிக்கிட்டு ஹே அது இல்லை உன் வயசு என்று கேட்கவும் ஹிம்ம் ஆமா மாமா இன்னும் ஒரு மாசத்துல என்னோட பிறந்த நாள் வருது..

எனக்கு பதினெட்டு முடிஞ்சுடுமே.. என்று குதூகலாமாக கூற கேட்டுக் கொண்டிருந்தவனின் மனசாட்சி பத்தொன்பதே இன்னும் ஆகலயாம்.. என்று எக்காலமாக அவனை பார்த்து சிரித்தது..


அதை புறந்தள்ளியவன் ஏன் அதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணினாங்க என்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நாள் தர்மன் அப்பா வந்தாரு.. எங்க வீட்டுல உங்களை பற்றி சொல்லிருப்பார் போல..

அவ்ளோதான் எனக்கு தெரியும்.. அப்புறம் தான் இன்னைக்கு கல்யாணம் நடந்துச்சு.. என்று மென்று முழுங்கினாள்..


ஒஹ் என்றவன் உன்னை எதும் கேட்களையா இந்த கல்யாணத்துக்கு சம்மதமா இல்லையான்னு என்று கேட்கவும் இல்லை என்று தலை ஆட்டினாள்..


 எதையோ நினைத்தவாறு சரி நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் யாரு வந்தாலும் கதவை திறக்க கூடாது.. முக்கியமா ஒரு பொம்பளை வரும் என்ன சொன்னாலும் திறக்க கூடாது என்றவன் கிளம்ப முனைய என்ன தனியா விட்டுட்டு போறீங்களே..போகாதீங்க மாமா..


ஏன் உங்க வீட்டுல நீ தனியா இருந்ததில்லையா

ஹிம்ம் இருந்துருக்கேன்..

ஒஹ் புது இடம்ங்குறதால பயமா இருக்கா.. வீட்டை சுத்திலும் காவல் வச்சிருக்கேன்.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் என்கவும் அவனிடம் ஓடி வந்து சீக்கிரம் வந்துருங்க மாமா எனக்கு பயமா இருக்கு என்று தன் மருண்ட விழிகளுடன் அவன் கையை பிடித்து கொண்டு கூறினாள்..


அவளை விட்டு போகதே என்று அவன் மனம் கூறினாலும் அதை புறந்தள்ளியவன் ஹிம்ம் சரி என்றவாறு தன் கையிலிருந்து அவள் கையை எடுத்து விட்டு கிளம்பி விட்டான்.


நேரே சென்றது அவன் நண்பன் பரத்திடம் தான்.. நண்பனா ஆம் நண்பன் தான்.. பரத் தான் எப்பொழுதும் என் நண்பன் என் நண்பன் என்று கூவிக் கொண்டே திரிவான்..


பிரசாத் எதையும் வெளிக்காட்டி கொள்ளமாட்டான்.. அவன் மேல் அன்பு இருந்தாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளமாட்டான்..

 

தன் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் யாரு இந்த நேரத்துல என்று தனக்குள் கேட்டவாறே வந்து கதவை திறக்க பிரசாத் நிற்கவும் டேய் நீ என்ன இங்க என்று ஒரு மாதிரி கேட்கவும் ஏன் நான் வரக் கூடாதோ என்று திரும்பி வெளியே செல்லப் போனவனை அட இவன் ஒரு இம்சை டேய் தெரியாம சொல்லிட்டேன் வாடா என்று இழுக்க..


டேய் தடியா உன்னை இழுக்குற அளவுக்கு என்கிட்ட சத்து இல்லடா தயவு செய்து உள்ள வாடா.. 


அவன் ஆடாமல் அசையாமல் இருக்கவும் யப்பா டேய் இன்னைக்கு தானே கல்யாணம் முடிஞ்சுது அங்க இருக்குற வேலையை விட்டுட்டு இங்க அதுவும் இந்த நேரத்துல என்ன பண்றனு அந்த அர்த்தத்தில் தான் டா கேட்டேன்.. வாடா வாடா என்று இழுக்க அப்பொழுது தான் கொஞ்சம் நகர்ந்தான்..


அப்பறம் என்ன புது மாப்பிள்ளை ஜாலி தான் என்று சிரித்து கொண்டே வினவ இப்போ எதுக்கு பல்லை காட்டுற.. பல்லு நல்லா இருக்குறது பிடிக்கலயா.. என்று கேட்கவும் ஐயோ என் பல்லு என்று வாயை மூடிக் கொண்டான்..


என்னடா இந்த நேரத்துல என்று கேட்கவும் அவன் வந்த காரணத்தை சொல்லவும் அதிர்ந்தான்..


காந்தமென ஈர்க்கும்…



Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments