Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 1

 

காதல்-1:


இப்பொழுதெல்லாம் எல்லாம் ஆன்லைன் மயமாகி விட்டதால் எல்லோரிடமும் கைப்பேசி இருக்கின்றது சிறு பிள்ளைகள் உற்பட.. 


அதுவும் இந்த கொரோனா வந்ததில் இருந்து, எங்கு பார்த்தாலும் ஆன்லைன் கிளாஸ், ஆன்லைன் ஷாப்பிங். மூலை முடுக்கெல்லாம் ஆன்லைன்…


தன் வீட்டில் தன் பிரத்தியேக அறையில் அமர்ந்து, மடிக்கணினியை குடைந்து கொண்டிருந்தான் அவன்.. பிரசாத் தி கிரேட் ராம் பிரசாத்.


நீட் கோச்சிங்கின் பெஸ்ட் பேக்கல்ட்டி என்று அனைவராலும் அறியப்பட்ட, அறியப்படும் ராம் பிரசாத்…


தன்னிடம் பயிலும் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தவன், வைப்ரேட் மோடில் போட்டிருந்த தன் கைப்பேசி அழைக்கவும், ‘இப்போ யாரு கால் பண்றது?’ என்று எடுத்தவனின் முகம் அப்பட்டமாக எரிச்சலைக் காட்டியது. 


திரையில் தெரிந்த பெயரைக் கண்டதும், எரிச்சலைக் காட்டிய முகம் சற்று கனிந்ததோ?


“ஹலோ” என்று முதிர்ந்த குரல் கேட்கவும், “வணக்கம் சார்” என்று அவர் பேசுவதற்காக அமைதிக் காத்தான்.. 


“வணக்கம் பா வணக்கம். எதாவது வேலையில் இருந்தியா..?தொல்லை பண்ணிட்டேனா..?” என்று கேட்கவும், “இல்லை சார்.. இன்னும் கிளாசுக்கு பதினைந்து நிமிஷம் இருக்கு. சொல்லுங்க சார்.” என்கவும் 


“நான் பேச வந்த விஷயம், எப்பொழுதும் கேட்குறது தான், கல்யாணம் பண்ணிக்கிரியா..?” என்று கேட்டதும் “சார்.. என்னைப் பற்றி தெரிஞ்சும், எப்படி சார் திரும்பத் திரும்ப கேட்கிறீங்க..?” என்று அவனது குரல் இறுக்கத்துடன் வெளிவந்தது..


ஏதோ பேச வந்தவரைத் தடுத்து நிறுத்தியது அவனது குரல்.. 


“சார்.. எனக்கு கல்யாணம் வேண்டாம். தயவு செய்து, ப்ளீஸ் இன்னும் ஒருமுறை இதுபற்றி என்கிட்ட பேசாதீங்க.. வேண்டாம், எனக்கு விருப்பமில்லை. இப்படி இருக்கத்தான் எனக்கு விருப்பம்.. நீங்க நினைக்குறது கனவுல கூட நடக்காது.” என்று கோபத்துடன் கூறினான்.


“டேய் ராம்..! இந்த தர்மராஜ் கிட்டையே குரலை உசத்தி கோபமா பேசுவியா..? படவா நீ என்ன பண்ணுவியோ..? ஏது பண்ணுவியோ..? எனக்கு தெரியாது.. இன்னும் ரெண்டு நாட்களில் உனக்கும், நான் பாத்து வச்சிருக்கிற பொண்ணுக்கும் கல்யாணம் அவ்ளோதான் சொல்லிட்டேன்.” என்று தானும் தன் பங்குக்கு கத்தியவர் போனை வைத்து விட்டார்.


அவர் போனை அணைத்ததும், “ச்சே” என்று தன் கையை மடக்கி சுவற்றில் குத்தியவாறு போனை டேபிளில் விட்டெறிந்தான்.


பாவம் அதன் கவசத்தில் வெகு பாதுகாப்பாக இருந்ததால் தப்பித்தது இல்லையென்றால் சுக்கு நூறாக உடைந்திருக்கும்.. ஐயோ ஏன் இவரு கல்யாணத்தைப் பிடிச்சிக்கிட்டுத் தொங்குறாரு.. கேட்டா வயசு ஏறிக்கிட்டே போகுதுன்னு சொல்லுவாரு இப்போ என்ன வயசாயிடுச்சு இருபத்தொன்பது தான் ஆகுது..


இதை சொன்னா கிழப்பயலானதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணப் போறியா என்று கிண்டல்ங்கிற பேருல கடுப்படிப்பார்.. ச்சே இப்போ என்னப் பண்ணலாம் என்று தன் நீண்ட நெடியக் கால்களால் அந்த பிரத்யேக அறையை அளந்துக் கொண்டிருந்தான்.அது என்ன பிரத்யேக அறை என்று தானே கேட்கிறீங்க..இந்த ராம் இருக்கானே ஐயோ சாரி ப்ரோபஸர் இந்த ராம் இருக்காரே இவருக்கு எல்லாம் பெர்பக்ட்டா இருக்கனும் மிஸ்டர் பெர்பக்ட் என்று பட்டமே கொடுக்கலாம்.


அந்தளவுக்கு எந்த ஒரு வேலை எடுத்தாலும் தொட்டது துலங்கும் என்பது போல் அவனிடம் ஒரு செயலைக் கொடுத்தால் சொன்ன நேரத்திற்கு கரெக்ட்டா பெர்பெக்டா செய்து முடிப்பதில் வல்லவன்.. என்ன ஒரே ஒரு குறைதான் சாருக்கு கொஞ்சம் மூக்கு நீண்டு ஷார்ப்பா இருக்குறதால கொஞ்சமே கொஞ்சம் கோபம் மட்டும் மூக்கு மேல நின்னு நர்த்தனம் ஆடும்…அவ்ளோதான் மொத்தத்துல நம்ம ராம்பிரசாத் அக்மார்க் நல்ல பையன்.. நம்மை சொக்க வைக்கும் சொக்கத்தங்கம்..வாங்க எப்படி சொக்க வைக்கிறான்னு பொறுத்திருந்து பார்ப்போம்..


என்ன செய்து தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனை கைப்பேசியில் இருந்து வந்த ஒலி அவனை கலைத்தது.. அவன் ஆன்லைன் கிளாஸ் எடுக்க வேண்டிய நேரம் என அதில் ரிமைண்டர் காட்டவும் தன் மூக்குக் கண்ணாடியை ஏற்றி விட்டவாறு தன் கணினியை ஆன் செய்தவன் கிளாஸ் தொடங்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கவே இன்று நடத்த வேண்டிய பாடங்களின் குறிப்புகள் அடங்கிய பைலை சிஸ்டமில் ஏற்றினான்.


அவன் கீழ் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒவ்வொருவராக ஜாயின் ஆகிக் கொண்டிருக்க நேரம் சரியாக ஏழு மணியாகவும் ஹாய் காய்ஸ் வெல்கம் டூ கிளாஸ் லெட்ஸ் பிகின் என்று ஆரம்பிக்க ஒரு நிமிடம் கழித்து ஒரு மாணவன் ஆன்லைன் கிளாஸில் லேட்டாக இணையவும் அவனை ஒய் ஆர் யூ லேட் ரமேஷ்.. இது தான் நீங்க கிளாசுக்கு வர டைமா என்று தன் சிடுமூஞ்சியைக் காட்டவும் அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் திருத்திருவென முழித்தான்.


இன்னொரு தரம் இதுப்போல லேட்டா வந்தீங்கன்னா பிளாக் பண்ணிடுவேன் பி கேர்புல் என்றவாறு தன் வகுப்பை ஆரம்பித்தான். அந்த மாணவன் சாரி சார் என்றவாறு அப்பாடி தப்பிச்சோம் என்று மானசீகமாக நினைத்துக் கொண்டவன் வகுப்பைக் கவனிக்க ஆரம்பித்தான். நம் ராம்பிரசத்தைப் பொறுத்த வரையில் மூன்று "டி"யும் அவன் உயிர் மூச்சு ஒன்று டெடிக்கேஷன் இரண்டு டிசிபிளின் மூன்று டிக்னிட்டி இவை மூன்றையும் கர்மசிரத்தையாகக் கடைப்பிடிப்பவன் தன் மாணவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பான்.

இப்படி டெடிக்கேஷன் டிக்காஷன் என்று பினாத்திக் கொண்டிருப்பவனிடம் அந்த டிக்காஷன் எப்படி போடுறது அதுல போட்டா டீ நல்லாருக்குமா என்று கேட்கும் அவனவளைக் கோர்த்து விட்டால் தினமும் டெடிக்கேஷனும் டிக்காஷனுமாக அவர்கள் வாழ்க்கை ஜோராகப் போகும்.. என்ன நான் சொல்றது சரிதானே கோர்த்து விட்டுருவோம்…


ராம் நான் என்னைக்கும் உனக்கு நல்லது தான் நினைப்பேன்னு நம்புறதானே.. நீ நம்பினாலும் நம்பாமல் போனாலும் நான் உன் நல்லதுக்குத்தான் பண்ணுவேன். தயவு செய்து முகத்தை சிரிச்ச மாதிரி வை ராம்.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க முகத்தை ஒழுங்கா சிரிச்சா மாதிரி வை என்று அதட்ட ஆடாமல் அசையாமல் முகத்தை இறுக்கமா வைத்திருந்தான் ராம்பிரசாத்.

 எனக்கு கல்யாணம் வேண்டாம்ன் சொல்லிட்டு இருக்கேன் உங்களுக்குப் புரியாதா எதுக்கு போர்ஸ் பண்றீங்க என்கவும் நான் ஏன் உன் பேச்சைக் கேட்காம இப்படி எல்லாம் பண்றேன்னு உனக்கு இப்போ கோபம் வரும் ஆனால் நான் உங்க ரெண்டு பேரோடு நன்மைக்காகத் தான் சொல்றேன்.. இது வரைக்கும் எப்படி இருந்தியோ தெரியாது அதையெல்லாம் விடு..

 இனி உன் வாழ்க்கை நல்லாருக்கும் ராம் எனக்கு அது மட்டும் போதும்.. அதுமட்டும் தான் வேணும் இந்த விஷயத்துல நான் சுயநலவாதி தான் ராம் இனியும் உன் பேச்சைக் கேட்கிறதா இல்லை.. இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தா உங்க ரெண்டு பேரோடு வாழ்க்கையும் ரொம்ப ரொம்ப நல்லாருக்கும் தயவு செய்து முகத்தை ஒழுங்கா வச்சிக்கிட்டு இறங்கு.. எல்லோரும் உன்னைத் தான் பார்ப்பாங்க என்று கூறியவர் அவன் முகத்தை இறுக்கமாகவே வைத்திருக்கவும் ராம் என்னை கோபக்காரனா மாத்தாத என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.


நீ ஒன்னும் சின்னப் பிள்ளை இல்லை. என் மேல உனக்கு மரியாதை இருந்தா நான் சொன்னதைக் கேட்டு நட இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.. நான் போறேன் என்று காரில் இருந்து இறங்கினார்.


வெளியே கல்யாணப் பெண்ணுக்குரிய கலையே இல்லாமல் பேருக்கு இரண்டு மெலிதான செயின்கள் போட்டு நிறம் மங்கி சாதாரண புடவை உடுத்திக் கண்களில் கண்ணீர் முட்ட தலையைக் கீழேக் குனிந்துக் கொண்டு நின்றிருந்தாள் கயல்விழி.


அவளது பக்கத்தில் யாரும் நிற்காமல் அவள் மட்டுமே ஆதரவற்ற பிள்ளைப் போல் நின்றுக் கொண்டிருக்க தர்மராஜ் அவளை நோக்கி சென்றவர் அவள் தலையைக் கனிவுடன் தடவிக் கொடுத்தவர் எப்படி இருக்க கயல் மா நல்லா இருக்கியா என்று கேட்க ஹிம்ம் என்று கண்கள் கலங்க தலையாட்டினாள்.


அவளது கண்கள் கலங்கவும் அழித மா இன்னையோட உன் கஷ்டக் காலம் முடியப் போகுது இனி எதுக்கும் நீ கலங்கக் கூடாது. ராம் உன்னை இனி பார்த்துக்குவான் சரியா என்கவும் பயத்துடன் தலையாட்டினாள்.அவள் கையைப் பிடித்துக் கொண்டு தட்டிக்கொடுக்க தன்ன ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.


அப்பொழுது தான் பார்ப்பது போல் அங்கு யாருக்கு வந்த விருந்தோ என்பதுபோல் நமக்கென்ன என்று நின்றிருந்தவர்களைப் பார்த்து வாங்க வாங்க இப்போ மாப்பிள்ளை வந்துடுவான் இன்னும் கொஞ்ச நேரத்துல சிம்பிளா கல்யாணத்தை முடிச்சதும் நீங்க கிளம்பலாம் என்று தர்மராஜ் கூறவும் ஹிம்ம் என்று அங்கு நின்றிருந்த ஒரு பெரியவர் தலையசைக்க அவர் அருகில் அவரது மனைவி மற்றும் ஒரு பையனும் ஒரு பெண்ணும் நின்றுக் கொண்டிருந்தனர்.


இங்கு காருக்குள் அமர்ந்திருந்தவன் சரி பார்த்துக்கலாம் என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று ஆழ மூச்சி சடுத்து விட்டு காரை விட்டு இறங்கினான். இங்கு அவன் இறங்கவும் அதுவரைப் பிராக்கு பார்த்துக் கொண்டிருந்தவள் கார் கதவு திறக்கும் சத்தத்தில் இந்தக் கருப்பிக்கு அப்படியென்ன பெரிய மன்மதனை மாப்பிள்ளையா பார்த்திருக்கப் போறான் இந்தக் கிழவன் என்று நினைத்துக் கொண்டே பார்த்தாள்.


காரிலிருந்து இறங்கியவனைப் பார்த்தவள்கத்துக்கும் அதிர்ந்தாள். ஆறடியில் அம்சமாக கிரேக்க சிற்பம் போல உடற்பயிற்சி செய்து அணிந்திருக்கும் சட்டையைத் தாண்டி திமிரி நிற்கும் தசைக் கோளங்களும் நான் யாருக்கும் அடங்க மாட்டேன் என்று அவனைப் போலவே காற்றில் அலைப் பாயும் கேசத்தைத் தன் கரம் கொண்டு கோதியவாறு இறங்க இவளுக்குப் போய் இப்படியொரு மாப்பிள்ளையா என்று மனதுக்குள் நொந்தவள் ச்சே இவளுக்கு போய் இப்படி அமையுது என்று பொறாமையில் பொசுங்கினாள் வர்ஷா.


அவள் மட்டும் இல்லை அங்கு நின்றிருந்த மற்ற மூவருக்கும் அதிர்ச்சி தான். காரிலிருந்த இறங்கியவன் அங்கிருந்த யாரையும் கவனிக்காமல் நேரே தர்மராஜ் நின்ற இடத்திற்கு செல்ல வாங்க பையன் வந்துட்டான் போகலாம் என்று தன் இடது கையில் கயலின் கையையும் வலது கையில் ராமின் கையையும் பிரித்தவாறு ரிஜிஸ்டர் அலுவலகத்துள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.


அவர்கள் பின் சென்ற நால்வரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.வர்ஷாவோ ஐயோ இவ்ளோ ஹேன்சமா இருக்கானே இந்தக் கருப்பிக்குப் போய் இப்ப ஒருத்தனா.. ச்சே இவளுக் நல்லதே நடக்கக் கூடாது என்று கடவுளிடம் வேண்டினாள்.


(இவள் வேண்டினால் நடந்திடும்மா…)


இருவரையும் உள்ளே அழைத்து வந்தவர் சார்ப்பதிவாளரிடம் இவங்க தான் சார் நான் சொன்னவங்க எல்லாம் ரெடியா இருக்கா சார் என்று கேட்டு அவர் முன்பு மாலையை மாற்ற சொல்லி இருவரிடமும் மாலையைத் தந்த தர்மராஜ் மாலையை வாங்கிக் காண்டு போடாமல் நின்றுக் கொண்டிருந்த ராமின் விலாவில் இடித்து அவனை சுயநினைவுக்கு அழைத்து வந்தவர் போடு என்று கண்களால் சைகை செய்தார்.


பின் எதையும் கண்டுக் கொள்ளாமல் தன் முன்னால் தரையைப் பார்த்தப்படி தலையைக் குனிந்துக் கொண்டு நிற்கும் பெண்ணின் முகத்தைக் கூடப் பார்க்காமல் மாலையிட்டவன் அவள் ராமுக்கு மாலையிட்டதும் தர்மராஜ் மங்கள நாளை ராமின் கையில் திணிக்கவும் அதனை அவளின் கழுத்தில் கட்டித் தன் சரிப் பாதியாக ஏற்றுக் கொண்டான்.


கயலுக்கு அவன் தாலி கட்டியதும் இந்த வாழ்க்கை எனக்கு என்ன வைத்துக் காத்துருக்கோ வள்ளி சொன்னது போல நடக்குமா இல்லை வேறு மாதிரி நடக்குமா இவரைப் பார்த்தால் பயமா வேற இருக்கு முகமெல்லாம் சிவந்து தக்காளிப் பழம் போல் இருக்காரு இப்போ என்னப் பண்றது..


(ஹிம்ம் அவனை பிழிஞ்சி ஜூஸ் போடு..)


அவன் தாலிக் கட்டவும் அவளை அறியாமலே கண்கள் நீரை சொறிந்தது. பின் இருவரும் சேர்ந்து தர்மராஜின் கால்களில் விழுந்து வணங்க கயல் மட்டும் சென்று அங்கு நின்ற பெரியவர்களில் காலில் விழ அந்த பெரியவர் முகத்தைத் திருப்பிக்கொண்டு கால்கள் பின் இழுத்தவாரு நகர்ந்து நிற்க அந்தப் பெண் அவளைத் தூக்கி விட்டு நல்லாரும்மா என்று வாழ்த்தியவர் குணி வா அக்காக்கிப்ப குடு என்று சொல்லவும் அவன் தன் பாக்கெட்டில் இருந்து தான் கொண்டு வந்திருந்த பணத்தை எடுத்துக் கொடுக்கவும் வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்.


அக்கா பிடிக்கா என்று அவள் கையைப் பிடித்து வைத்து அழுத்தியவன் இனி உனக்கு சந்தோஷ காலம் க்கா ஜாலியா இரு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை மாமாவப் பார்த்தா நல்லவரா தான் தெரியுது சரியா எதவாது பிரச்சனை என்றால் எனக்கு கூப்பிடு உடனே வருவேன் சரியா என்றவாரு தன் பையில் இருந்து ஒரு புது போனை எடுத்து அவள் கையில் திணித்தான்.


டேய் இது ஏன்டா எனக்கு.. எனக்கு வேண்டாம் குணா இதை வச்சுக்கிட்டு நான் என்னப் பண்ணுவேன் என்று கேட்க நீ வச்சுக்கோ க்கா உனக்கு தான் இதுல என் நம்பர் சேவ் பண்ணி வச்சிருக்கேன் அவசரம்னா கூப்பிடு.. ப்போ இப்போ போய் மாமா கூட நில்லு பாரு உன்னையே முறைச்சு முறைச்சுப் பாக்குறாரு என்று அவளை அனுப்பி வைத்தான்.


தர்மராஜ் அவர்களை ராமிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த பெரியவர்களைச் சுட்டிக்காட்டி இவங்க தான் கயலோட அம்மா அப்பா பக்கத்தில் நின்றிருந்த வர்ஷாவை காட்டி கயலோட தங்கை வர்ஷா குணாவை காட்டி கயலோட தம்பியென ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார்.


பின் அனைவரையும் பார்த்து வணக்கம் என்று கைக்குவித்தவன் அதோடு தன் வேலை முடிந்து விட்டதுபோல் தர்மராஜிடம் திரும்பி போகலாமா சர் என்று கேட்க சரிங்க நாங்க வரோம் என்று தர்மராஜ் சொல்லிக் கொண்டு கிளம்ப அவர்களும் புறப்பட்டனர்.


இங்கு கீதாவை அழைத்துக் கொண்டு வந்த தர்மராஜ் பின்னாடி ஏறுமா என்று அவளைப் பின் சீட்டின் கதவைத் திறந்து விட்டு அவள் ஏறியமர்ந்ததும் சாற்றியவர் ராம் முன்பக்கம் ஏறப்போக டேய் போடா பின்னாடி என்று அவனை பின்னுக்கு தள்ளிவிட்டுத் தான் முன்பக்கம் ஏறி டிரைவர் பக்கத்தில் அமர்த்துக் கொண்டார்.


காரில் ஏறியதும் நீ யாரோ நான் யாரோ என்பது போல் ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்துக் கொண்டான்.ஒரு முக்கால் மணி நேரம் காரில் பயணம் செய்ய ராமின் வீடு வரவும் சட்டென்று காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்று பார்க்க இந்த பயல் வீட்டுல ஒரு சாமிப்படம் வச்சிருக்கானா ஒன்னும் இல்லை ஒரு விபூதி ஒரு குங்குமம் ஒன்னு இல்லை என்று அவனை வசைப்பாடிக் கொண்டே வந்தவர் அங்கு பக்கத்தில் இருந்த சிறு ஓட்டி வீட்டிற்குள் சென்று சாமி என்று அழைத்தார்.


அவர் வந்ததும் தம்பி வந்துருச்சா ஐயா என்று வெளியே பார்த்தவர் தான் கரைத்து வைத்திருந்த ஆரத்தி தட்டை எடுத்து தர்மராஜிடம் நீட்டினார். அதனை வாங்கியவர் அங்கு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவனை நில்லுடா ஆரத்தி எடுக்கனும் என்று தடுத்து நிறுத்தியவரைப் பார்த்து முகத்தை சுளித்தான்.


இப்படியே முகத்தை சுளிக்காதடா அப்புறம் அப்படியே கோணிக்கப் போகுது அப்புறம் கயல் உன்னைப் பார்க்கக் கூட மாட்டாள் என்று அவன் முகவாயில் இடித்தவர் அங்கு காருக்கருகேயே பேந்த பேந்த பயத்துடன் விழித்துக் கொண்டிருந்தவளை கயல் என்று அழைத்து உள்ளே வரச் சொன்னவர் அவன் பக்கத்தில் நிற்க வைத்து விட்டு ஆரத்து இருவருக்கும் எடுத்து திலகமிட்டவர் உள்ளே போங்க இரண்டு பேரும்.. 


பிள்ளையை அழைச்சிட்டுப் போ என்று அவள் கையைப் பிடித்து அவன் கைக்குள் திணித்தவர் ஆரத்தியை வெளியே கொட்டச் சென்றார்.

ராம் தன் கைகளில் பொதிந்திருந்த மாநிறக் கையை வெறித்துக் கொண்டிருந்தான்.கையின் நிறம் மாநிறமாக இருந்தாலும் தன் கையிலிருந்த அவள் கையின் ஜில்லுப்பு தன்மையும் அதன் மென்மையும் அவனை ஏதோ செய்தது. அவனை அறியாமலே அக்கையை உற்றுப் பார்த்துக் கொண்டே தன் கையுடன் இறுக்க அவள் அதிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.


அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுப் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது அவன் பார்வை சென்ற இடத்தைக் கண்டவள் அவன் வெண்மை நிறக் கையுடன் தன் மாநிறக் கையை சேர்த்து வைத்துப் பார்த்தவள் சட்டென்று கையை விலக்கிக் கொண்டாள்.

அவள் கையின் மென்மையை உணர்ந்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அவள் கையை எடுத்துக் கொள்ளவும் எப்படி அவள் கையை எடுக்கலாம் என்ற கோபம் எழஅவளை உறுத்து விழித்தவன் சட்டென்று உள்ளே சென்று விட்டான். ஏன் அந்தக் கோபம் என்று அவள் ஆராய முற்படவில்லை.


கயலோ என் கையை அவர் கைக்கூட வச்சுப் பார்க்கவே அவருக்கு பிடிக்கவில்லை போல என்று தன்பாட்டுக்குக் கற்பனை செய்துக் கொண்டு நிற்க வா மா உள்ளே போகலாம் என்று ஆரத்தியைக் கொட்டிவந்த தர்மராஜ் அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

பின் சாமியை அழைத்து கயல் இவர் பெயர் சாமி நம்ம வீட்டுத் தோட்ட வேலைகள் எல்லாம் இவர் தான் பார்த்துக் கொள்கிறார் என்று அவளிடம் அறிமுகப் படுத்தினார்.


இங்கு அறிமுகப்படலம் நடக்க மேலே தன்னறையில் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.


தர்மன் கயல்மா பிரசாத் நல்ல பையன் என்ன கொஞ்சம் கோபம் வரும்.. அவன் ஏதாவது பேசினாலும் நீ அதையெல்லாம் மனசுல வச்சுக்காத சரியா.. நான் அடிக்கடி வரேன் ரெண்டு பேரும் பார்த்து இருங்க…

அந்த தடிப்பய இப்போ கீழ இறங்கி வர மாட்டான்.. அவன் வரதுக்குள்ள கிளம்புறேன்.. இல்லனா எதாவது பேசுவான்.. 


சரி பாத்து இரு இதுவரைக்கும் அவன் தான் சமைச்சு சாப்பிட்டுட்டு இருந்தான்.. இனி தான் நீ வந்துட்டியே.. அது மட்டுமில்லாம இந்த வீட்டுல சாமி படம் கூட இருக்காது..

ஏன் டா ஒரு சாமி படம் கூட வீட்டுல வைக்க மாட்டியான்னு கேட்டா அதுக்கு நம்பிக்கை இல்லைன்னு வியாக்கியானம் பேசுவான்.. 


எதுக்கும் இப்போதைக்கு அவனை விட்டு தள்ளியே இரு.. இல்லனா கடிச்சு கொதறிடுவான்..

சரி நான் போயிட்டு வரேன்.. எதாவது வேணும்னா சாமிக்கிட்ட கேளு இல்லனா என் போனுக்கு ஒரு போன் போடு சரியா.. என்று அவள் தலையை தடவி விட்டு கிளம்பி விட்டார்..அவருடனே சாமியும் வெளியே சென்று விட்டார்..


சற்று நேரம் அப்படியே நின்றவள் என்ன செய்வது எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.. இங்கு தன் அறையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தவன் கீழே எதும் சத்தம் கேட்கவில்லை என்று இறங்கி வந்தான்..


வந்தவன் பாரத்ததென்னவோ தன் கையை பிசைந்து கொண்டு காலை ஆட்டி கொண்டு இருந்தவளை தான்..அவளை பார்த்து இதுங்களை எல்லாம் ஆரம்பத்துலயே அடக்கி வச்சாதான் நம்ம பொழைக்க முடியும் இல்லனா அசந்த நேரமா பார்த்து நம்ம தலைலையே கல்லை தூக்கி போட்டுடுங்க…


(இவன் எங்கயோ செமத்தையா அடி வாங்கிருப்பான் போலையே.. பயபுள்ள இப்படி கதறுது..)


ம்க்கும் என்று செறும அவன் சத்தத்தில் பதறி எழுந்தவள் அவனை பார்த்து என்னவென்று கண்களால் கேட்க ஓ உனக்கு அவ்ளோ கொழுப்பா..ஏன் உனக்கு வாய் பேச வராதோ என்று மனதில் நினைத்து கொண்டு அவளை நெருங்கி நின்றான்..


அவன் தன்னை நெருங்கி நிற்கவும் தர்மன் கூறியதை தவறாக புரிந்து கொண்டு சட்டென்று சற்று பின்னே நகர்ந்து நின்றாள்..அவர் கூறியது வேறு அர்த்தத்தில் இவள் புரிந்து கொண்டதோ வேறு அர்த்தத்தில்..


அவன் கிட்ட போகாத கடிச்சு கொதறிடுவான்னு சொன்னதை அப்படியே நம்பியவள் அவன் தன்னை கடிச்சுடுவானோ என்று பயந்து தள்ளி நிற்க இவனுக்கு சுர்ருன்னு கோபம் வந்தது..


ஏய் இப்போ எதுக்கு தள்ளி நிக்குற.. நான் என்ன உன்னை கடிச்சா தின்னுடுவேன்.. ஏதோ பேயை கண்ட மாதிரி பின்னாடி போற என்கவும் அவள் பூம் பூம் மாடு ஆட்டுவது போல் தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட அவன் முறைக்கவும் இல்லையென்று திரும்ப தலையாட்ட ஏய் நிறுத்து என்று கத்தினான்..


அவன் கத்தவும் பயந்தவள் சட்டென்று கண்களில் கண்ணீர் விழாவ வேண்டாமா என்ற நிலமையில் கையை எடுத்து வாயில் வைத்து பொத்தி கொண்டாள்.. அவள் கண்ணீரை கண்டதும் வெறியானவன் என்ன அழுது நாடாகமாட போறியா என்று இரக்கமே இல்லாமல் கேட்க வாயில் கை வைத்தவாறே தலை ஆட்ட ஏன் அம்மணிக்கு வாய் பேச வராதோ..


அவள் பாவமாக தன்னையே பார்க்க அந்த விழிகளை கூர்ந்து பார்த்தவன் தன்னை சுருட்டி இழுப்பது போல் உணர்ந்தவன் ஏய் முதல்ல வாயில இருந்து கையை எடு.. என்கிட்ட இந்த ஊமை பாஷை எல்லாம் பேசாத.. வாயை திறந்து பதில் சொல்லு.. அப்பறம் இந்த அழுகை இங்க இருக்க கூடாது..


இன்னொரு முறை நீ என் முன்னாடி அழுது எதாவது சீன் போடுற வேலை வச்சுக்காத சரியா..என்று கேட்கவும் அவள் ஹிம்ம் என்று மெதுவாக கூற என்ன சத்தத்தை காணும் எனக்கு கேட்கலை என்று கூற ஹிம்ம் சரிங்க சார்.. என்று கத்தி கூறினாள்..


அவள் கூறிய சார் அவனுக்கு ஏதோ இடித்தது.. ஹேய் இந்த சாரு மோருலாம் இங்க யாரும் குடிக்குறது இல்ல.. என்னை அப்படி கூப்பிடாத..என்றவனை பார்த்து ஏதோ கேட்க வருவதும் பின் தயங்குவதுமாக இருக்க என்ன இப்படி அப்படி ஆட்டிட்டு இருக்க என்ன எதாவது சொல்லனுமா…


இந்த மாதிரி ஆடுறது குதிக்குறதெல்லாம் இங்க வச்சுக்காத எல்லாம் உங்க வீட்டோட வச்சுக்கோ..என்ன புரியுதா என்கவும் சரிங்க என்று சொல்லிக்கொண்டே மண்டையை ஆட்டினாள்.. பதில் வாய் சொல்லும் போது ஏன் இந்த தலையும் ஆடுது..நீ என்ன ஸ்கூல் படிக்கிற பாப்பாவா ஒழுங்கா நடந்துக்கோ..


அவளை பேச விடாமல் இவனே அனைத்து ரூல்சும் போட்டுக்கொண்டிருந்தான்.. அவள் போடும் காலமும் வருமோ.. வரும் வரும் அப்போ ப்ரொபெஸோரோட முழி பிதுங்கும்..


சரி சொல்லு என்ன சொல்ல வந்த.. என்று மிரட்டும் தொனியில் கேட்க ஏற்கனவே பேச அவளுக்கு தந்தி அடிக்குது இதுல இப்படி கேட்டா எங்கிருந்து பதில் வரும்.. அவள் ஏதும் கூறாமல் அவனை பார்த்து பயந்து மருண்ட விழிகளுடன் பார்க்க ஏய் சொல்லு எனக்கு டைம் ஆச்சு என்று அவசர படுத்தினான்..


மெதுவாக திக்கி திணறி உங்களை சார்ன்னு கூப்பிட கூடாதுன்னா வேற எப்படி கூப்பிடனும் நீங்க டீச்சர்ன்னு அப்பா சொன்னாரு அதான் சாருன்னு கூப்பிட்டேன் என்று பயந்து கொண்டே கூறினாள்..

ஹிம்ம் உனக்கு நான் புருஷன் தானே புருஷனை எப்படி கூப்பிடுவ அப்படியே கூப்பிடு.. அதான் இப்போ எல்லாம் ட்ரெண்டியா கூப்பிடுறேங்குற பேருல பேரு சொல்லி கூப்பிடுறது டாங்குறது.. அப்படிலாம் கூப்பிடு என்று நக்கலாக கூறினான்..


அவள் அதையெல்லாம் கேட்டு ஐயோ என்று வாயில் கை வைத்தவாறு நிற்க அவள் அப்படியே நிற்பதை பார்த்து ஒஹ் உனக்கு உனக்கு என் பேரு தெரியாதா.. என் பேரு ராம் பிரசாத்.. நீங்க எப்படி மேடம் கூப்பிட போறீங்க என்று எகத்தாளமாக கேட்டான்..

அதற்கு அவள் அடுத்து கூறிய பதிலில் அதிர்ந்து நிற்பது அவன் முறையானது..

பாவம் பயபுள்ள மிரண்டுடுச்சு முதல் நாளே..


காந்தமென ஈர்க்கும்…


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments