Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 18

 


காதல்-18:

"அத்தான்! நீங்க ஏன் மாமாவுக்கு வலிக்கும்படி சுளுக்கு எடுக்குறீங்க? மாமா பாவம்.. பார்த்து மெதுவா பண்ணுங்க" என்று அவன் வலியில் அலறுவதை கண்டவள் பொறுக்க முடியாமல் மருதிடம் கூற..

அதுவரை கத்திக்கொண்டிருந்த வாத்தி இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்தானோ என்னவோ..

காதல் வந்தாலே மனதில் கள்ளமும் சேர்ந்து வந்துவிடும் போல.

வாத்தி எதிலுமே டாப் கியர் தான்.

தன் அருகில் நின்று தலை முடியை வருடி கொண்டிருந்தவளின் இடையூடு கையிட்டு தன் முகத்தை அவள் வயிற்றில் புதையுமாறு தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன் அவளுக்கே உரிய நறுமணத்தை முகர்ந்து தன் நுரையீரல் முழுக்க நிரப்பிக் கொண்டான்.

மருது முன்னாடி இருக்க அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்கவும் அவள் விலக நினைத்து சற்று தள்ளி நிற்கவும் "ஐயோ! வலிக்குது பிரௌனி" என்று தன் அலறலை ஆரம்பிக்க அவளும் உண்மை என்று நம்பி "ஒன்னுமில்ல மாமா.. சரியா போய்டும். கவலைப்படாதீங்க நான் தான் கூட இருக்கேன்ல" என்று தனக்கு தெரிந்த வகையில் அவனை சமாதானம் செய்தாள்.

(ஏய் பிரௌனி அவனை நம்பாத.. சரியான கேடி வாத்தியா இருக்கான்) 

"அவன் சுளுக்கு எடுக்குறேங்குற பேரில் அழுத்தி இழுக்கிறான் பிரௌனி.. எனக்கு வலிக்குது" என்று அவளை அணைத்தவாறு மருதை பார்த்து கண்ணடித்தான்.

'மகா நடிகன் டா நீ' என்று நினைத்து கொண்டு மருது வாத்தியை பார்த்து சிரித்தான்.

"அத்தான் அப்புறம் சுளுக்கு எடுத்துக்கலாம்.. மாமாக்கு ரொம்ப வலிக்குது போல விடுங்க" என்கவும் "ஐயையோ அப்புறமா எடுத்துக்கலாமா திரும்பவுமா அந்த வலியை யாரு தாங்குறது" என்று அலறியது வேறு யாராகத்தான் இருக்க முடியும் எல்லாம் நம்ம வாத்தி தான்.

"ஏன் மாமா சுளுக்கு எடுக்க வேண்டாமா? அப்பறம் எப்படி கால் சரியாகும்" என்று குழப்பத்துடன் கயல் வினவ மாட்டிக்கொண்ட திருடன் போல திருதிருவென விழித்தான்.

'ஐயோ நானே வாயை திறந்து மாட்டிக்கிறேன் போலவே' 

தன்னை சமன் செய்து கொண்டவன் "இப்ப பரவால்ல பிரௌனி அதான் வேண்டாம்னு சொன்னேன்".

"ஹிம்ம் மருது அத்தான் சுளுக்கு நல்லா எடுக்கும்.. அதான் கை வச்சதும் உங்களுக்கு சரியா போயிடுச்சு போல"

"சரி கயலு நான் போறேன் அண்ணனை கூடவே இருந்து அவரை பார்த்துக்க" என்கவும் "ஹிம்ம் நல்லா சொல்லு மருது" என்று வாத்தி சைடில் ஏத்தி விட "அவரை விட்டு எங்கும் போகதே.. திரும்ப எங்கேயாவது இடிச்சிக்க போறாரு".

(அவன் இடிச்சுகிட்டத நீ பார்த்த.. ஒன்னும் தெரியாத பிள்ளையை எப்படி எல்லாம் ஏமத்துறீங்க டா டேய் நீங்க நல்லா வருவீங்க டா) 

மருதை பார்த்து "ரொம்ப நல்லவன்டா நீ" என்று வாயசைத்தவன் மனதிற்குள் மருது சென்றதும் 'கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதே' என்று ஒரு குரல் கேட்க அப்படியே அணைத்துக் கொண்டான்.

அவன் முகம் சற்று மேலே ஏற அவன் செயலில் திணறித்தான் போனாள்.

"மாமா" என்று வெறும் காத்துதான் வந்தது.

அவள் ஏற்படுத்தும் புது விதமான மயக்கத்தில் கிறங்கிப் போனவன் "பிரௌனி" என்று அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் ஆழ புதைந்தான்.

அவன் செயலில் கால்கள் தள்ளாட பிடிமானம் இல்லாமல் அவன் மீதே விழ நச்சென்று அவன் முகத்தில் வந்து மோதியது ராட்சச கனிகள்.

இதைதானே அவனும் எதிர்பார்த்தான்.. விடுவானா?

தன் நரம்போடிய கைகளை கொண்டு அந்த ராட்சச கனிகளை கொய்ய அதுவோ அவன் கைகளில் அடங்காமல் ஆட்டம் காட்டியது.

அவன் மேலிருந்தவளோ அவனைத் தள்ளி விடுவதற்குப் பதிலாக தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.. என்னே விந்தை!!.

அவள் தன்னை தள்ளுவாள் என்று நினைத்தவனுக்கு அவள் அணைக்கவும் குஷியானவன் கனிகளை கைகளால் அள்ள தொடங்கினான்.

"கவி.. அடியேய் கவி.." என்று அழைக்கவும் அவளிடமிருந்து "ஹிம்ம்" என்ற சத்தம் மட்டுமே வந்தது.

"கவி எனக்கு இந்த பிரௌனி வேணும்டி" என்று அவள் கனிகளில் ஒன்றை கடிக்க "மாமா" என்று தன்னுடன் சேர்த்து இன்னும் இறுக்கினாள்.

"மா.. மாமா.. என்ன இப்படி பண்றீங்க?" என்று திக்கி திணறி அந்த நேரத்திலும் கேள்வி கேட்டாள் என்றால் பாருங்களேன்.

'ஐயையோ! இந்தா ஆரம்பிச்சுட்டா இவளை பேசவிட்டால் நமக்கு ஒன்னும் கிடைக்காது..' என்று நினைத்தவன் "மருது சொன்னதை நீ கேட்ட தானே பிரௌனி" என்றான்.

அவள் ஆமென்று தலையாட்டவும் 'அப்படி வா வழிக்கு' என்று உள்ளுக்குள் குதூகளித்தவன் "என்ன சொன்னான்?" என்று வினவினான்.

"உங்க கூடவே இருந்து உங்களை பார்த்துக்க சொன்னாங்க."

"அப்போ நீதான என்னை பத்திரமா பாத்துக்கணும்" என்கவும் 

'டிங்கு டிங்கென' தலையை ஆட்டினாள். 

எனக்கு சுளுக்கு போகணும் என்றால் எனக்கு இந்த பிரௌனி வேண்டுமென்று கனிகளை பிடித்து அழுத்தியவன் அவள் தன்னை குழப்பமான முகத்துடன் பார்க்கவே அவளிடம் "ஆமாம் பிரௌனி அதுதான் மருது சொன்னான்.."

"இதை எப்படி அவன் வெளியே சொல்லுவான்.. அதான் மூடி மறைச்சு பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போனான்" என்று அப்பட்டமாக பொய் கூறினான்.

(அவன் அப்படியாடா சொன்னான்.. டேய் வாத்தி உன்னை என்னவோன்னு நினைச்சேன்.. ஆனா நீ இருக்கியே.. சரியான தில்லாலங்கடி வேலை பாக்குற)

"ஒஹ்" என்றவளின் காப்பி நிற உதடுகள் அவனை அழைக்க விடுவானா அப்படியே கவ்விக்கொண்டான்.

ஏற்கனவே அவனின் முத்தத்திற்கு பழகியவள் அதில் திலைத்திருக்க அவள் இதழ்களை மென்று தின்று கொண்டிருந்தவனின் கைகள் என்னவோ விஷம வேளை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அவளின் தாவணியின் தலைப்பை விலக்கியவன் ஆடாமல் அசையாமல் நின்ற குன்றுகளை தன் கைகளால் பதப்படுத்தினான்.

கைகளுக்கும் கால்களுக்கும் இடையில் உள்ள ரவிக்கை அவனுக்கு இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்து அவள் இதழ்களிலிருந்து பிரிந்தவன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "பிரௌனி எனக்கு இது வேணும்"

ஏதோ சாக்லேட் வேணும் என்பது போல் கேட்டான்.

குழந்தை போல் முகத்தை வைத்து கொண்டு கேட்டவனை பார்த்து உருகித்தான் போனாள் பருவ மங்கையும்..

அவனுக்காக தன் உயிரை கூட தருபவள் இதை கொடுக்கமாட்டாளா.

வெட்கம் பிடுங்கி திங்க தலையை கீழே குனிந்து கொண்டாள்.

அவளை பார்த்து கொண்டிருந்தவன் அதனை கண்டு அவளுக்கு விருப்பம் இல்லையோ என்று சோர்ந்து போய் "பிரௌனி விடுடா ஒன்னுமில்ல.. நீ நார்மலா இரு" என்று விலகிப் போகவும் அவனின் குரலில் உள்ள ஏமாற்றம் அவளை கொல்லாமல் கொன்றது.

"நானே உங்களுக்கு தான் மாமா.. நீங்க என்னை என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கலாம்" என்று அவனை தன்னோடு கட்டிக்கொண்டு அவன் கைகளை எடுத்து அவன் விரும்பிய இடத்தில் வைக்க குஷியானவன் "உனக்கு ஓகேவா பிரௌனி?"

"ஹிம்ம்" என்ற முனகல் மட்டுமே வந்தது அவளிடமிருந்து.

"உனக்கு விருப்பம் இல்லேன்னா விடுடா பரவால்ல" எனவும் 'ஐயோ இந்த மாமா இருக்காரே' என்று நினைத்தவள் அவன் வன்மையான உதடுகளை தன் பற்களை கொண்டு கடித்து இழுத்து சுவைத்தாள்.

அவள் செயலில் கவரப்பட்டவன் தன்னுள் இருந்த மோக மேகங்கள் ஒன்றுக்கொன்று மோதி இடியும் மின்னலுமாக இவனை உலுக்கி எடுக்க பிடிமானத்திற்காக அவளின் மலைமுகடுகளை பிடித்துக்கொண்டான்.

அவளை மெத்தையில் புரட்டிப் போட்டவன் தன் பாரத்தை முழுதாக அவள் மேல் போடாமல் படர்ந்தவன் அவள் நெற்றி, கண்கள், மூக்கு என்று முத்தமிட்டவன் அவள் இதழ்களில் மென்மையாக மையம் கொண்டான்.

மலரினும் மெல்லியவளின் பட்டு போன்ற இதழ்களை மெதுவாக மிக மெதுவாக சுவைத்தவன் அவள் சங்கு கழுத்து அருகே வர பாவையவள் திணறி போனாள்.

அவன் பிடரி முடியோடு கையிட்டு தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவள் அவன் ஏற்படுத்திய குறுகுறுப்பு தாங்காமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள்.

"பிரௌனி" என்று அவள் கழுத்தில் செல்ல கடி கடித்து அங்கேயே மையம் கொள்ள

"மாமா.. குத்துது" மயக்கத்துடன் வந்தது அவள் வார்த்தைகள்.

"என்னடி குத்துது.." மிகுந்த மோகத்துடன் வந்தது அவன் வார்த்தைகள்.

அவனை இறுக்கி அணைத்து கொண்டவள் "மாமா எனக்கு ஏதோ பண்ணுது"

"என்னடி பண்ணுது".

அக்மார்க் கணவன்-மனைவிக்குள் வரும் கிசுகிசு குரலில் பேசிக் கொண்டனர் இருவரும்.

(ஒருவழியா தேறிட்டாங்க)

"ஒரு மாதிரி குறுகுறுன்னு இருக்கு மாமா.. எனக்கு எப்படின்னு சொல்ல தெரியல மாமா.."

"அது அப்படித்தான் இருக்கும்.. இப்ப பண்ண போறது இன்னும் ஜிவ்வுன்னு இருக்கும்."

அவன் அவ்வாறு கூறியதும் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

தன்னை காந்தமென ஈர்க்கும் அவள் கண்களில் முத்தமிட அவன் மீசை முடி குத்தி அவளுக்கு நோவு குடுத்தது.

"மாமா உங்க மீசை குத்துது".

"நீதான பிரௌனி மீசையை வளர்க்க சொன்ன.. குத்துனா வாங்கிக்கோ.." என்கவும் "ஹிம்ம்" என்ற முனகல் மட்டுமே அவளிடமிருந்து.

பிரௌனி கண்ணை திரடி என்றவனும் அவளின் ரவிக்கையை கலைய அவனின் செயலை உணர்ந்து இன்னும் இறுக மூடி கொண்டாள்.

பிரௌனி ஏய் என் செல்லம்ல இங்க பாரு டா என்கவும் கண்களை திறந்து அவனை பார்க்க மீண்டும் அவள் மயக்கும் கண்களில் முத்தமிட்டவன் ரவிக்கையை மொத்தமாக கலைந்தான்.

அங்கு கண்ட காட்சியில் வாயில் எச்சில் ஊர மொட்டாக இருந்ததை தான்தான் இனிமேல் மலர செய்து அது காயாகி கனியாக வேண்டுமென்று புரிந்தவன் அப்படியே மொட்டை கவ்விக்கொண்டான்.

"ஹக்" என்ற வித ஒலியுடன் அவனை அப்படியே தன் நெஞ்சோடு அழுத்தி கொள்ள அங்கு கிடைத்த அமிர்தத்தில் மூச்சடைத்து போனான்.

இதழ் கொண்டு மலையை கொய்தவன் அதன் நுனியில் நின்ற திராட்சையை பற்கள் கொண்டு கடித்து இழுக்க அவன் கொடுக்கும் சுகம் தாளாமல் வெட்டி துடித்தாள்.

"மாமா.. ஹாஹ் ஹாங்.." என்று வாயால் மூச்சு விட்டவள் வயிற்றில் கோடி மத்தாப்புக்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது.

ஒன்றை நாவால் நிரடி கொண்டிருந்தவன் மற்றொன்றை கைகளில் அள்ளி இழுத்து கிள்ளி விளையாடினான்.

அதன் மேல் அந்த சுகத்தினை தாங்க முடியாதவல் அவனை மேலே இழுத்து அவன் இதழ்களை வன்மையாக கடித்து சுவைத்தாள்.

அவளின் வன்மைக்கேற்ப இங்கு குன்றுகள் வன்மையாக சூறையாடப்பட்டது.

அவள் இதழில் இருந்து பிரிந்தவன் பக்கத்தில் படுத்து அவளை இழுத்து தன் மேல் படுக்க வைத்து கொண்டான்.

இருவருக்கும் இதுவரை காணாத உலகை கண்டதில் கண்களில் பூச்சி பறந்தது.

அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தவள் சும்மா இருக்காமல் கேள்வி கேட்டு வைத்தாள்.

"மாமா நமக்கு பாப்பா எப்போ வரும்".

"இப்போ வராது பிரௌனி"

"நீ படிச்சு முடிச்ச பிறகு தான் வரும்"

"ஒஹ்.. அப்போ இப்போ பண்ணினது"

அடக்க மாட்டாமல் சிரித்தவன் "பிரௌனி நான் இன்னும் உன்னை ஒன்னுமே பண்ணல.. அப்பறம் எப்படி பாப்பா வரும்"

"அப்போ வராதா"

"இப்போதைக்கு வராது.. நீ படிச்சு முடி.. அப்பறம் வரும்"

"ஹிம்ம்.. நீங்க சின்ன வயசுல ரொம்ப சுட்டியா மாமா.. எனக்கு நம்ம பாப்பாவும் உங்களை போலவே வேணும்"

அவள் சிறுவயதை நினைவு கூர்ந்ததும் தன் சிறுவயது நிகழ்வுகள் வந்து அவனை புரட்டி போட்டது.

அந்த நினைவில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அவன் அமைதியாக இருக்கவும் என்னாச்சு மாமா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க என்று அவன் முகத்தை எட்டி பார்க்க அவன் கண்கள் கலங்கி முகம் ரத்தமென சிவந்திருந்தது.

அவனை அப்படி பார்த்ததும் பயந்தவள் "சாரி மாமா தெரியாம கேட்டுட்டேன் சாரி" என்று அவனிடம் மன்னிப்பு கேட்க அவளை இறுக்கி அணைத்து கொண்டவன் "இதை இப்போவே சொல்லி முடிச்சுடுறேன் பிரௌனி.. ஒருவேளை எதிர்காலத்தில் இதனால நமக்குள்ள பிரச்சனை வர கூடாது."

"இதுக்குமேல இந்த பேச்சு வேண்டாம்.." என்றவன் தன் குழந்தை பருவத்தை அவளிடம் கூற ஆரம்பித்தான்.

சைலஜா கேரளாவில் சித்த மருத்துவம் பயின்று கொண்டு தன் தந்தைக்கு அவ்வப்பொழுது உதவியாக இருந்து வருகிறார். 

சைலஜாவின் தந்தை சித்த மருத்துவத்தில் புகழ் பெற்றவர் அவர் கைவைத்தால் எந்த பிணி என்றாலும் உடனே அகன்றுவிடும் என்று பலரால் நம்பப்பட்டது..

அவர் நடராஜன்.. கன்னியாக்குமாரியை சேர்ந்தவர், சித்த மருத்துவம் படித்து அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 

அவரிடம் சித்த மருத்துவத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறியே இருந்தது.

அவர் நினைத்தது போலவே தான் இதுவரையில் அவரிடம் வந்த அனைத்து நோயாளிகளும் முழுமையாக குணமடைந்து விடுவர்.

ஆங்கில மருந்துகளால் சரிப்படுத்த முடியவில்லை என்று மருத்துவர்களால் கைவிரித்து விடப்பட்டவர்கள் இவரை நாடி வந்து குணமடைந்து சென்றவர்கள் ஏராளம்.

இவரிடம் சென்றால் குணமடையாத நோய்களே இல்லை என்று மக்களால் போற்றப்பட்டவர்.. ஏன் இவரிடம் வெளிநாடுகளில் இருந்து வந்து கூட சிகிச்சை பெற்றவர்கள் பலர் உண்டு.

அவர் இளமை காலங்களில் சித்த மருத்துவத்தில் கொடி கட்டி பறந்தவர் கேரளாவில் இந்துஜா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் சைலஜா. சைலஜா பிறந்த இரண்டு நாட்களில் இந்துஜா ஜன்னி வந்து இறந்து விட்டார்.

தன் மனைவியை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை தன் மனைவியை தன்னால் காப்பாற்ற இயலவில்லையே என்று மனம் உடைந்தவருக்கு சித்த மருத்துவத்திலும் சறுக்கல் ஆரம்பித்திருந்தது.

சைலஜா பார்க்க அத்தனை அழகாக இருப்பார். தான் தான் அழகு என்ற கர்வம் கூட அவருக்கு இருந்தது. தன்னை போல் உள்ளவர்களிடம் மட்டும் தான் பேச்சுக்கொடுப்பார்.

சிறு அழுக்கு கூட கைகளில் படக்கூடாது என்று நினைப்பார். சொகுசாக வாழ வேண்டும் என்று நினைப்பவர் மொத்தத்தில் சொகுசு பூனை.

சித்த மருத்துவம் படித்தது கூட தந்தையின் வற்புறுத்தலால் தான்.. சித்த மருத்துவம் இறங்குமுகம் கண்ட தருணம்.. தன் தந்தைக்கு மருத்துவ சாலையில் உதவியாக இருந்து வந்த சமயம் அது.

எப்பொழுதும் போல் வேண்டா வெறுப்பாக வந்து "ச்சே இதையெல்லாம் நான் செய்யணுமா.. என் கை என்னாகுறது பார்க்கவே அறுவெறுப்பாக இருக்கு எல்லாம் இந்த அப்பவால தான்.."

"அந்த பச்சிலை எடுத்து அரைக்கணும்.. இந்த களிம்பு தடவு அந்த களிம்பு தடவு அப்படி இப்படின்னு என் கையை வீணாக்கி வச்சுருக்காரு ச்சே சீக்கிரம் இந்த ஜோசப்ப வர சொல்லி போகணும்.."

"இவர் கூட இருந்து இன்னும் என்னென்ன பாடுபடனுமோ" என்று உள்ளுக்குள் புலம்பியவாறு தன் வேலையை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது வெளியில் ஏதோ பெரும் சத்தம் கேட்கவும் அனைவரும் வெளியில் சென்று பார்க்க ஒரு லாரி இருசக்கர வாகனத்தில் வந்தவரை இடித்து தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டது..

அங்கு சென்று பார்க்க ஒரு வாலிபன் கருப்பாக இருந்தாலும் வாட்ட சாட்டமாக நன்றாக இருந்தான். தலையில் அடிப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருக்க வலியில் முனகி கொண்டிருந்தான்.

அவனை இவர்கள் எழுப்ப முனைய அவனால் கால்களை ஊன்ற முடியவில்லை.

பின் நடராஜன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தன் குடிலுக்கு அந்த வாலிபனை அழைத்து வந்தார்.

"அம்மாடி சைலஜா.. இங்கு வா" என்று தன் மகளை அழைக்க வேண்டா வெறுப்பாக வந்தார்.

"என்னப்பா" என்று முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு கேட்க "இங்க வந்து இந்த தம்பிக்கு தலையில் பச்சிலை வச்சு கட்டு போடும்மா".

"அவருக்கு காலில் எலும்பு முறிவு போல நான் அதை பார்க்கிறேன்" என்று விட்டு அவன் கால் பக்கம் சென்றார். 

அங்கு படுத்திருந்தவனை பார்த்தவளுக்கு அவனுக்கு வைத்தியம் பார்க்க சுத்தமாக விருப்பம் இல்லை.

"ச்சி.. இவன் என்ன இப்படி இருக்கான் காட்டான் போல இவ்வளவு பெருசா கருப்பா இருக்கான். ச்சே என் கை அவன் மேல பட்டா கூட அவன் கருப்பு கையில் ஒட்டிக்கும் போல" என்று நினைத்து கொண்டு அப்படியே தன் யோசனையில் நின்று கொண்டிருந்தாள்.

"என்னம்மா யோசனை? ரத்தம் போகுது பார் போய் சுத்தம் செய்து கட்டு போடு" என்றவர் அவன் கால்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

அவர் கால்களை பிடித்து அழுத்தி பார்க்கவும் அவன் வலியில் முனக "ஒன்றுமில்லை கொஞ்சம் வலிக்க தான் செய்யும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்க" என்று அவனுக்கு கட்டிட்டவாறு சாதாரணமாக தான் அவள் கூறினாள்..

ஆனால் அரை மயக்கத்தில் இருந்தவனுக்கு அவள் தேவதையாக தெரிந்தாள்.

இதுவரை தனக்கென்று யாரும் இல்லை என்று நினைத்து கொண்டிருந்தவன் மனதில் புதிதாக அவளின் அக்கறையான சொற்களால் அவள் மீது நேசம் துளிர் விட ஆரம்பித்திருந்தது.

தாய் தந்தை அன்பு கிட்டாமல் அனாதையாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு அவள் சொற்கள் பனிமழை சாரலாய் மனதை குளிர்வித்தது.

அவளை பற்றி எதுவும் தெரியாமலே அவள் மேல் தன் நேசத்தை வளர்க்க ஆரம்பித்திருந்தான்.

அவள் கல்லூரியில் படிக்கும் பொழுதே அவளுடன் படித்த ஜோசப் என்பவனை காதலித்து வந்தாள்.

நடராஜன் பழமைவாதி என்பதால் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்று தெரிந்து தான் காதலித்த விஷயத்தை சொல்லாமல் இருந்தாள்.

ஜோசப் பரம்பரை பணக்காரன் இல்லை என்றாலும் அவன் தந்தை ஏதோ பிசினஸ் செய்வதாக கூறுவான்.. அவன் மிடில் கிளாஸ் இல்லாத வரையில் அவளுக்கு அவன் பிடித்தம் தான்.

சொகுசாக கையில் அழுக்கு படாமல் வாழ வேண்டும் என்பது தான் சைலஜாவின் மிகப்பெரிய ஆசை..

இரண்டு வார காலம் குரு பிரசாத் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று கொண்டான்.

அப்பொழுது தான் நடராஜன் அவனிடம் பேச்சு கொடுத்தார். அவனை பற்றி கேட்கவே அவன் அனாதை என்பதையும் ஆசிரமத்தில் வளர்ந்து படித்து இப்பொழுது வங்கியில் அசிஸ்டண்ட் மேனேஜர் ஆக பணிபுரிகிறான் என்பது வரை அனைத்தையும் கூறினான்.

அவ்வப்பொழுது சைலஜாவின் மேல் ஆர்வமாக படியும் குருவின் பார்வையை கண்ட நடராஜன் ஒரு முடிவுக்கு வந்தவர் அவனிடம் அதனை பற்றி பேச எண்ணினார்.

ஓர் அந்தி மாலை பொழுதில் கையில் ஊன்று கோலை வைத்து மெதுவாக நடந்து கொண்டிருந்தவனிடம் வந்தவர் அவனிடம் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

"தம்பி என் பெண்ணை பற்றி என்ன நினைக்குறீங்க?" என்று கேட்கவும் சிறிது திடுக்கிட்டவன் அவரிடம் "நல்ல பெண்.. அன்பான பெண் ஐயா" என்று கூறியவன் சற்று தயங்கி ஏதோ பேச வர அவர் அவனிடம் "உங்களுக்கு யாருமில்லை தம்பி.. எனக்கும் வயசாயிடுச்சு.."

"என் பெண்ணை ஒரு நல்லவன்கிட்ட பிடுச்சு கொடுத்துட்டா நான் நிம்மதியா இருப்பேன் அதான் உங்ககிட்ட அதை பற்றி பேசலாம்னு வந்தேன்."

"என் பெண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பதில் எனக்கு பரிபூரண சம்மதம்.. உங்களுக்கு சைலஜாவை கட்டிக்க விருப்பமா? என்று கேட்க இவன் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனான்.

"ஐயா உண்மையாக தான் சொல்றிங்களா?" என்று சந்தோஷத்தில் கூவியவன் "நானே இதை பற்றி உங்ககிட்ட பேசனும்னு நினைச்சேன் ஐயா.. எனக்கு ஷைலுவை திருமணம் முடிப்பதில் பரிபூரண சம்மதம்.."

"நீங்க எதுக்கும் கவலை படாதீங்க ஐயா.. இனி ஷைலு என் பொறுப்பு அவளை இனி என் கண்ணின் மணி போல் பார்த்து கொள்வேன்." என்று கூற 

"இனியும் என்ன தம்பி ஐயா.. மாமா என்று வாய் நிறைய கூப்பிடுங்க" என்று இருவரும் தங்களுக்குள் பேசி முடித்தார்கள்.

ஆனால் இதனை பற்றி முக்கியமாக பேச வேண்டியவளிடம் கலந்து பேசாமல் இவர்களே முடிவை எடுத்தது தான் வினையாகி போனதோ..

அதற்கு மேல் நடராஜன் எதுக்கும் தாமதிக்கவில்லை. கல்யாண தேதியை குறித்தவர் அதனை குருவிடம் கூறினார்.

"மாமா.. ஏன் இவ்வளவு சீக்கிரமே கல்யாணம்.. ஷைலுட்ட கேட்டீங்களா அவங்க என்ன சொன்னாங்க.. அவங்களுக்கு என்னை கட்டிக்க சம்மதமா" என்று கேட்டான்.

"நல்ல விஷயத்தை உடனே முடிச்சுடனும் தம்பி.. எதுக்கு தள்ளி போட்டுக்கிட்டு.. அதுமட்டுமில்லாமல் என் பொண்ணு நான் சொல்ற பேச்சை தட்ட மாட்டாள்."

தன் மகள் மேல் இருந்த நம்பிக்கையில் அவளிடம் கலந்து பேசாமல் அனைத்தையும் முடிவு செய்தார்.

"உங்களை போய் அவளுக்கு பிடிக்காமல் போகுமா.. நல்ல பையன்.. கை நிறைய சம்பாதிக்கிறீங்க.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் பொண்ணை கண்கலங்காம பார்த்துக்குவீங்கன்னு இதை விட வேறு என்ன வேணும்."

"பாப்பாக்கு ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கட்டுமே.. கல்யாணத்துக்கு தேவையானதை எல்லாம் நாம செய்துட்டு அவளிடம் சொல்லிக்கலாம்" என்று அவர் சிரித்தபடி கூற "நீங்க சொன்னால் சரிதாங்க மாமா."

அவர்தான் தன் பெண் மேல் கொண்ட அதீத நம்பிக்கையில் பேசுகிறார் என்றால் இவனாவது அவளிடம் சென்று பேசியிருக்கலாம். அங்கு தான் அவன் தவறு செய்து விட்டான்.

அப்பொழுதே அவளிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் பின்னால் வரும் சங்கடங்களை தவிர்த்திருக்கலாம் விதி வலியதல்லவா.

"சரி தம்பி சிம்பிளா அடுத்த வாரம் கோவிலில் கல்யாணத்தை வச்சுக்கலாம்.. உங்க சைட் யாரெல்லாம் கூப்பிடனுமோ கூப்பிடுங்க.." என்றவர் தன் வீடு நோக்கி கிளம்பினார்.

இங்கு சைலஜா தன் அலைப்பேசியில் ஜோசப்பிடம் "எப்போ என்னை வந்து கூட்டிட்டு போவ? எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை.. இந்த அப்பா வேற எப்போ பார்த்தாலும் அதை செய் இதை செய்ன்னு வேலை சொல்லிட்டிருக்கார்".

"கொஞ்ச நாள் பொறுத்துக்கோ பேபி.. நான் வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்.. அதுக்கப்பறம் நீ ராணி போல இருக்கலாம்" என்கவும் இவளுக்கு அப்படியே இறகில்லாமல் பறந்தாள்.

"சரி சீக்கிரம் கூட்டிட்டு போ உன்னை நம்பி தான் நான் இருக்கேன். இங்கு வேற ஒரு கருவாயன் என்னையே பார்த்துட்டு இருக்கான்".

"பேபி அழகா இருந்தா நாலு பேரு பார்க்கத்தான் செய்வாங்க அதையெல்லாம் நீ கண்டுக்காத.. நீ என்னோட தேவதை கொஞ்சம் பொறுத்துக்கோ எல்லாம் சரியாகிடும்" என்றவன் "அப்பறம் பேசலாம் பேபி" என்று வைத்து விட்டான். 

அவளுக்கே சந்தேகம் வந்து விட்டது "இவன் உண்மையிலேயே என்னை காதலிக்கிறானா.. இல்லை யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்டுருவானா.. இவனை எதுக்கும் கொஞ்சம் தள்ளியே வச்சிருப்போம்" என்று நினைத்துக் கொண்டவள் அலைப்பேசியை அணைத்து விட்டுத் திரும்பினாள்.

இவள் திரும்பவும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த குருவை பார்த்தவளுக்கு எரிச்சலாக வந்தது. 

"ச்சே இவன் வேற எப்போ பார்த்தாலும் இப்படி பார்த்து வைக்கிறான்.கொஞ்சம் கூட அறிவே இல்லை" என்று உள்ளுக்குள் நினைத்தவளுக்கு அங்கு நிற்பது மூச்சடைப்பது போல் இருந்தது.

"எதுக்குடா என்னை இப்படி உத்து பாக்குற?" என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அவனை முறைத்தவள் விருட்டென்று அந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட்டாள்.

குரு தான் கட்டிக் கொள்ள போகும் பெண் தானே என்று பார்த்தான். அவன் பார்வையில் கள்ளம் இல்லை காதல் மட்டுமே இருந்தது. இப்பொழுதே அவளை தன் மனைவியாக நினைத்து மனதளவில் அவளுடன் வாழ ஆரம்பித்து விட்டான்.

குரு நடராஜனிடம் சென்றவன் "மாமா கல்யாணத்துக்கு துணிகள் எடுக்க போகலாமா" என்று கேட்கவும் "சைலஜாவை கூட்டிட்டு போய் வாங்கிட்டு வாங்க மாப்பிள்ளை."

|அவங்க என் கூட வர விருப்பப் படுவாங்களான்னு தெரியலை மாமா" என்றவன் "நீங்களும் வாங்க மாமா" என்று அவரையும் அழைத்தான்.

"இல்லை மாப்பிள்ளை எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க நான் இங்கேயே இருக்கேன்" என்றவர் தன் மகளை அழைக்க சென்றார்.

சைலஜா தன் அறையில் குருவை வசைப்பாடிக் கொண்டே தன் உடைகளை மடித்துக் கொண்டிருந்தாள்.

"எவ்ளோ திண்ணக்கம் இருந்தால் என்னையே உற்று பார்ப்பான்.. கொஞ்சம் கூட ஒரு அறிவு இல்லை ச்சே என்ன மனுஷன் இவன். கண்ணை பாரு அப்படியே நோண்டி போடணும் போல் வெறி வருது."

இங்கு இவள் அவனை மனதில் வருத்தெடுக்க இவளின் தந்தை "அம்மாடி சைலஜா குரு தம்பி கூட டவுன் வரைக்கும் போயிட்டு வந்துரும்மா.." என்கவும் "எதுக்குப்பா நான் யாருடனும் தனியா போக விரும்பல.." என்று அவனுடன் செல்ல மறுத்தாள்.

"குரு நல்ல பையன் ம்மா.. அவனை பார்த்து ஏன் பயம் உனக்கு. அவனுக்கு எதோ துணி எடுக்கணுமாம்.. அவன் இந்த ஊருக்கு புதுசு தானே.. அதான் என்கிட்ட கேட்டான் கடை எதுவும் தெரியாதுன்னு.. எனக்கு அசதியா இருக்குன்னு உன்னை அனுப்பறதா சொன்னேன்".

"கொஞ்சம் நீ கூட போயிட்டு வந்துரும்மா.. பாவம் தெரியாத இடமில்லையா.. மொழியும் தெரியாது.. கொஞ்சம் தடுமாற்றமா தானே இருக்கும்.." என்று கூறவும் "சரிப்பா நான் போயிட்டு வரேன்" அவரிடம் கூறியவள் வெளியே செல்ல கிளம்பினாள்.

தன் தந்தையிடம் செல்கிறேன் என்று அவள் கூறினாலும் ஏனோ உள்ளுக்குள் நெருடலாகவே இருந்தது..

'இதுவரை யாருடனும் தனியே அனுப்பாதவர் எவனோ ஒருவன், அதிகம் பழக்கம் இல்லாதவன், யாரென்றே தெரியாதவனுடன் நம்பி அனுப்புகிறாரா?' என்று சிறிது சந்தேகம் எழத்தான் செய்தது அவளுக்கு.

அதே சிந்தனையுடன் கிளம்பி குருவுடன் கடைவீதிக்கு சென்றாள்.

காந்தமென ஈர்க்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments