காதல்-17:
தான் பின்னே செல்ல செல்ல தன்னை நோக்கி நிதானமாக ஒரு ஒரு அடியாக எடுத்து வைத்து வருபவனை கண்டு உள்ளுக்குள் ஏதோ ஓர் ஆகா உணர்வு தன்னை ஆட்கொள்வதை உணர்ந்தாள்.
மாமா என்ன இப்படி பாக்குறீங்க நல்லாவே இல்லை எனக்கு எதுவோ பண்ணுது ப்ளீஸ் மாமா அப்படி பார்க்காதீங்க என்றவாறு தன் கைகளால் முகத்தை மூடி கொண்டாள்.
எது நல்லா இல்லையா இது என்ன பிரௌனி பதில்..
(ஹிம்ம் உன் ரொமான்டிக் பார்வை அவளுக்கு பிடிக்கலையாம்.. விளங்குதா இல்லை சோப்பு போட்டு விளக்கணுமா?)
அவள் ஏதும் பேசாமல் இருக்க என்ன பிரௌனி சட்டுன்னு பிடிக்கலைன்னு சொல்லிட்ட என்னை உனக்கு பிடிக்கலையா அப்போ என்று சற்று குரல் இறங்கி ஒலிக்க அதனை கேட்டு பதறியவள் ஐயோ மாமா அப்படியெல்லாம் இல்லை.
உங்களை பிடிக்காமல் போகுமா எனக்கு இந்த உலகத்துளையே உங்களை தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..
அப்போ என்னை உனக்கு பிடிக்குமா பிரௌனி
ஹிம்ம் ரொம்ப பிடிக்கும் மாமா என்றவள் அவனிடம் நெருங்கி நின்று கொண்டு அவன் கைகளை எடுத்து தன்னை சுற்றி போட்டு கொண்டாள்.
அவளை தன்னுடன் நெருக்கி அணைத்து கொண்டு எவ்வளவு பிடிக்கும் பிரௌனி என்று அவள் காதில் மீசை முடிகள் உரச கிசுகிசுவென கேட்க அவன் செயலில் சிலிர்த்தவள் கைகளை விரித்து இவ்வளவு என்றவள் இல்லை இல்லை நீங்க இல்லைனா நான் இல்லை என்கிற அளவுக்கு பிடிக்கும் மாமா என்று கூறினாள்.
அவள் பட்டுப்போன்ற கன்னத்தில் முத்தம் வைத்தவன் என் பட்டுக்குட்டி எனக்கு ஒரு முத்தம் என்று அவன் கன்னம் காட்ட அங்கு ஒரு முத்தம் பதித்தவள் மாமா இந்த முத்தம் அப்பறம் இங்க முத்தம் என்று தன் உதட்டை காட்டியவள் இதெல்லாம் நல்லாருக்கு..
ஆனால் காலைல பண்ணினீங்களே அது வேண்டாம் என்கவும் ஏன் பிரௌனி பிடிக்கலையா என்று கேட்டான்.
அவளுக்கு அதை எப்படி அவனிடம் விளக்கவுது என்று புரியவில்லை. அது இல்லை மாமா என்று தினறியவள் ஒரு மாதிரி இங்க ஏதோ பண்ணுது என்று தன் வயிறை காட்ட அது அப்படித்தான் டா இருக்கும் அப்பறம் இன்னும் கொஞ்சம் நேரம் போனால் நல்லா இருக்கும்.
அப்பொப்போ கொஞ்சம் அந்த மாதிரி பண்ணிக்குறேன் என்று அனுமதி கேட்க ஹிம்ம் என்று கூறினாள்.
அப்பறம் பிரௌனி அந்த மருதுகிட்ட நீ அதிகமா பேசாத சரியா என்கவும் ஏன் மாமா? மாமா ரொம்ப நல்லவங்க என்று கூற எனக்கு பிடிக்கலை பிரௌனி அவன்கிட்ட நீ பேசுறது என்கவும் அதிர்ந்தாள்.
ஏன் மாமா என்னாச்சு?
நீ காலையில் சொன்னியே அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னு அதான் கோவம் நீ எனக்கு மட்டும் தான் பிரௌனி உன்னை யாருக்கும் இனி தர மாட்டேன் என்று சிறுபிள்ளை போல் கூற மாமா இது என்ன சின்ன பிள்ளை போல ஏதோ பொம்மையை தர மாட்டேன் என்பது போல சொல்றீங்க என்று சிரித்தாள்.
அவனோ தீவிரமாக ஆமாம் பிரௌனி நீ எனக்கு மட்டுமே நீ என்னோட பொம்மை தான் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் தெரிஞ்சோ தெரியாமலோ என்கிட்ட வந்துட்டே நீ எனக்கு மட்டும் தான் என்று அவளை கட்டிப்பிடித்து கொண்டான்.
அவன் தலையை கோதியவாறு மாமா இங்க உள்ளவர்கள் எல்லாம் மருது மாமாக்கிட்ட என்னை கல்யாணம் பண்ண சொல்லும் போது அவ சின்ன பொண்ணு அவளை போய் என்னை கட்டிக்க சொல்றீங்க இப்போ என்ன அவசரம் என்று சத்தம் போட்டார் அதிலிருந்து யாரும் ஏதும் பேசல.
நான் சும்மா விளையாட்டிற்கு அவங்ககிட்ட அப்படி சொன்னேன் மாமா என்று கூற ஹிம்ம் என்றவாறு அவள் இடையை சுற்றி தன் கைகளை போட்டுக்கொண்டவன் அவள் கைகளை எடுத்து தன் தலையில் வைத்து கோத சொல்லி வயிற்றில் முகம் புதைத்து கொண்டான்.
தலை கோதும் சுகத்தில் தன்னை தொலைத்தவன் தூக்கத்தில் கண்கள் சொக்க பிரௌனி எனக்கு தூக்கம் வருது நான் படுக்குறேன் என்கவும் சரி மாமா தூங்குங்க என்கவும் நீயும் என்கூட இரு என்று அவளையும் தன்னுடன் படுக்க வைத்து கொண்டு அவள் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டு தூங்கி போனான்.
அவன் என்னவோ தூங்கி போனான் ஆனால் அவளுக்கு தான் தூக்கம் வரவில்லை அவன் செயலை ஏற்கவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் அவன் தலையை கோதி கொடுத்தாள்.
சிறிது நேரம் சென்று அவனை விலக்கி விட்டு எழ முனைய அவளை விடாமல் பிடித்து கொண்டவன் பிரௌனி என்று தூக்கத்தில் அரை கண் விழித்தவன் தூங்கு டா என்று நெஞ்சில் முகத்தை வைத்து தேய்த்து முத்தம் கொடுத்தபடி அணைத்து கொண்டு உறங்கினான்.
அவன் நெஞ்சில் முகம் புதைக்கவும் இவளுக்கோ உடம்பு ஷாக் அடித்தது பொல் உதறல் எடுத்தது.
மாமா என்று அவன் முகத்தை விலக்க பார்க்க அந்த அசைவில் விழித்தவன் என்னாச்சு பிரௌனி என்கவும் ஒன்னுமில்லை மாமா என்று அவனை தள்ள முயல தன் கைகள் கொண்டு அவள் கனிகளை பற்றியவன் தூக்கக்கலக்கத்தில் ஸாப்ட்டா மெத்து மெத்துன்னு இருக்கு டா என்று தலை வைத்து அவள் பதிலை எதிர்பாராமல் அவள் மேல் தன் ஒரு காலை போட்டு தனக்குள் அடக்கியப்படி தன் தூக்கத்தை தொடர்ந்தான்.
அவன் செய்கையில் அதிர்ந்தவள் அவன் கைகளை விலக்க முயல அவன் கைகள் இன்னும் இறுக்கி பற்ற ஒன்றும் படுத்து கொண்டாள்.
சிறிது நேரம் விழித்திருந்தவள் எப்பொழுது தூக்கம் அவளை தழுவியது என்று அவளுக்கே தெரியவில்லை.
நான்கு மணியளவில் பிரசாத் எழ அவன் அசைவில் கண் விழித்தவள் அவன் செயலில் அதிர்ந்து விழித்தாள்.
தூக்கத்தில் இருந்து எழுந்தவன் என்ன தலையணை இப்படி இருக்கு என்று தொட புசுப்புசுவென்று இருக்க என்ன இப்படி இருக்காதே என்று கைகளால் அழுத்தியவாறே கண்களை திறக்க அவன் தலை வைத்த பகுதி ஏறி இறங்கி கொண்டிருக்கவும் குழப்பமானவன் நன்றாக கண்களை விழித்து எழுந்தவன் பார்த்தது தன்னை அதிர்ந்து பார்க்கும் தன்னவளை தான்.
அப்பொழுது தான் அவனுக்கு தெரிந்தது தான் கை வைத்த இடம் எது என்பதை..தன்னை தானே கடிந்து கொண்டான் அறிவேயில்லை டா ராம் உனக்கு என்று தன்னவளை பார்த்தான்.
அவள் மாறி மாறி தன்னையும் தன் கைகளையும் பார்க்க சட்டென்று தன் கைகளை விலக்கி கொண்டவன் சாரி பிரௌனி தூக்கத்துல தெரியல என்றவாறு எழுந்தவன் சாரி சாரி என்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
சாரி பிரௌனி தூக்கத்தில் என்ன பண்ணினேன்னு எனக்கு தெரியல என்றவன் அவள் ஏதும் கேட்கும் முன் குளியலறைக்குள் புகுந்திருந்தான்.
எப்பா இவக்கிட்ட மாட்டுனோம் கேள்வி கேட்டே சாவடிச்சுடுவா இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்துருந்தா ஏன் மாமா அங்க கையை வச்சீங்க அது இதுன்னு கேள்வி கேட்டே நமக்கு கண்ணு முழி பிதுங்க வச்சுருப்பா.
(இருந்தாலும் நீ இவ்ளோ கேள்வி கேட்க கூடாது பிரௌனி பாரு வாத்தி பாவம்ல)
ஏய் ரைட்டரு நீ மட்டும் என் கையில் கிடைச்ச ஒன்னும் தெரியாத சின்ன பிள்ளைய எனக்கு கட்டி வச்சுட்டு இப்படி பாடா பட்டுட்டு இருக்கேன்.
நீயெல்லாம் நல்லா வருவ பேஹ்
(ஏன்டா டேய் காலையிலே இப்படி , இதுக்கே இப்படின்னா இன்னும் நீ பாக்க வேண்டியது எவ்வளவோ இருக்கே ஹாஹாஹா)
ஆனா சாப்ட்டா இருந்துச்சு நல்லா மெத்து மெத்துன்னு என்று உள்ளுக்குள் பல்லிலிக்க அவன் மனசாட்சியோ கேவலமாக காரி துப்பியது இங்க ஒரு நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு ஒருத்தன் சுத்திட்டு இருந்தான் அவன் எங்கன்னு பார்த்தியா வாத்தி
அப்படியா என்று வியந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து அப்படி யாரும் என் கண்ணுக்கு தென்படலை, சரி சரி நீ போ என் பிரௌனி குட்டி எனக்காக வெயிட்டிங்.
எப்பா டேய் பொண்டாட்டிய பார்த்தா மட்டும் எப்படி டா இப்படி அந்தர் பல்டி அடிக்குறீங்க முடியலடா உங்களோட என்று புலம்பியவாறு சென்று மறைந்து கொண்டது.
முகம் கழுவிவிட்டு வெளியில் வந்தவன் அவன் எப்படி விட்டு சென்றானோ அதே நிலையில் நின்றவளை கண்டு ஆஹா இவளை யோசிக்க விடக்கூடாதே என்று நினைத்தவன் ஆஹ்ஹ் கவி என்று காலை பிடித்தான்.
தன்நினைவில் இருந்து வெளியில் வந்தவள் ஐயோ மாமா என்ன ஆச்சு என்று அவன் காலை பிடிக்க வர ஐயோ கால பிடிச்சா கண்டுபிடுச்சிருவா என்று யோசித்தவன் அவள் கையை தன் கையால் பிடித்து கொண்டு ஆஹ்ஹ் பிரௌனி என்று வேண்டுமென்றே சிணுங்கி என்னை அங்க கட்டிலுக்கு கூட்டிட்டு போ பிரௌனி என்று அவள் மேல் நன்றாக சாய்ந்து கொண்டான்.
ஒன்னும் இல்லை மாமா சரியா போய்டும் என்றவாறு அவனை பிடித்து கொண்டு கட்டிலில் அமர வைத்தவள் எங்க மாமா காட்டுங்க எப்படி இடிச்சுக்கிட்டீங்க..
அவனோ திருத்திருவென விழித்தவன் பிரௌனி சுளுக்கு போல என்று வாயில் வந்ததை அடித்து விட இருங்க மாமா எண்ணெய் எடுத்துட்டு வரேன் என்று வெளியில் செல்ல அப்பாடா என்று கட்டிலில் நன்றாக சாய்ந்தமர்ந்தான்.
சாரி பிரௌனி தூக்கத்தில் என்ன பண்ணினேன்னு எனக்கு தெரியல என்றவன் அவள் ஏதும் கேட்கும் முன் குளியலறைக்குள் புகுந்திருந்தான்.
எப்பா இவக்கிட்ட மாட்டுனோம் கேள்வி கேட்டே சாவடிச்சுடுவா இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்துருந்தா ஏன் மாமா அங்க கையை வச்சீங்க அது இதுன்னு கேள்வி கேட்டே நமக்கு கண்ணு முழி பிதுங்க வச்சுருப்பா.
(இருந்தாலும் நீ இவ்ளோ கேள்வி கேட்க கூடாது பிரௌனி பாரு வாத்தி பாவம்ல)
ஏய் ரைட்டரு நீ மட்டும் என் கையில் கிடைச்ச ஒன்னும் தெரியாத சின்ன பிள்ளைய எனக்கு கட்டி வச்சுட்டு இப்படி பாடா பட்டுட்டு இருக்கேன்.
நீயெல்லாம் நல்லா வருவ பேஹ்
(ஏன்டா டேய் காலையிலே இப்படி , இதுக்கே இப்படின்னா இன்னும் நீ பாக்க வேண்டியது எவ்வளவோ இருக்கே ஹாஹாஹா)
ஆனா சாப்ட்டா இருந்துச்சு நல்லா மெத்து மெத்துன்னு என்று உள்ளுக்குள் பல்லிலிக்க அவன் மனசாட்சியோ கேவலமாக காரி துப்பியது இங்க ஒரு நல்லவன் வல்லவன் நாலும் தெரிஞ்சவன்னு ஒருத்தன் சுத்திட்டு இருந்தான் அவன் எங்கன்னு பார்த்தியா வாத்தி
அப்படியா என்று வியந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து அப்படி யாரும் என் கண்ணுக்கு தென்படலை, சரி சரி நீ போ என் பிரௌனி குட்டி எனக்காக வெயிட்டிங்.
எப்பா டேய் பொண்டாட்டிய பார்த்தா மட்டும் எப்படி டா இப்படி அந்தர் பல்டி அடிக்குறீங்க முடியலடா உங்களோட என்று புலம்பியவாறு சென்று மறைந்து கொண்டது.
முகம் கழுவிவிட்டு வெளியில் வந்தவன் அவன் எப்படி விட்டு சென்றானோ அதே நிலையில் நின்றவளை கண்டு ஆஹா இவளை யோசிக்க விடக்கூடாதே என்று நினைத்தவன் ஆஹ்ஹ் கவி என்று காலை பிடித்தான்.
தன்நினைவில் இருந்து வெளியில் வந்தவள் ஐயோ மாமா என்ன ஆச்சு என்று அவன் காலை பிடிக்க வர ஐயோ கால பிடிச்சா கண்டுபிடுச்சிருவா என்று யோசித்தவன் அவள் கையை தன் கையால் பிடித்து கொண்டு ஆஹ்ஹ் பிரௌனி என்று வேண்டுமென்றே சிணுங்கி என்னை அங்க கட்டிலுக்கு கூட்டிட்டு போ பிரௌனி என்று அவள் மேல் நன்றாக சாய்ந்து கொண்டான்.
ஒன்னும் இல்லை மாமா சரியா போய்டும் என்றவாறு அவனை பிடித்து கொண்டு கட்டிலில் அமர வைத்தவள் எங்க மாமா காட்டுங்க எப்படி இடிச்சுக்கிட்டீங்க..
அவனோ திருத்திருவென விழித்தவன் பிரௌனி சுளுக்கு போல என்று வாயில் வந்ததை அடித்து விட இருங்க மாமா எண்ணெய் எடுத்துட்டு வரேன் என்று அவள் வெளியில் செல்ல அப்பாடா என்று கட்டிலில் நன்றாக சாய்ந்தமர்ந்தான்.
எப்பா இவளை டைவெர்ட் பண்ண எப்படியெல்லாம் நடிக்க வேண்டியதா இருக்கு சப்பா இப்பவே கண்ணை கட்டுதே..
(இப்போ பாரு வாத்தி நீ அலறுறதை இந்த வீடே கேட்க போகுது என்று நான் மனதில் நினைத்தது அவனுக்கு கேட்கவில்லை பாவம்)
இங்கு வெளியே வந்தவள் எண்ணெய் எடுத்து கொண்டு வந்தவளை கண்ட மருது ஓய் என்னாச்சு எண்ணெய் எடுத்துட்டு போற என்று வினவ மாமா என்று அழைக்க போனவள் தன்னவன் நினைவு வரவும் அத்தை மகனே உங்களை அழைப்பது என்று அவனிடமே கேட்க இதுக்கு முன்னாடி எப்படி கூப்பிட்டியோ அப்படித்தான் இப்போவும் கூப்பிடு..
ஹா அதெல்லாம் இனி அப்படி கூப்பிட முடியாது என்று கூற அவனுக்கு ஏன் என்று புரிந்தவன் சிரிப்புடன் அவளை பார்த்து எம்மா பரதேவதை நீ எப்படி வேணும்னாலும் கூப்பிடு எனக்கு எந்த பிரெச்சனையும் இல்லை.
இப்போ எதுக்கு இந்த எண்ணெய் என்று அவள் கையில் வைத்திருந்ததை காட்டி கேட்க அது மாமாக்கு சுளுக்கு என்று கூறியவள் நீங்க சுளுக்கு எடுப்பீங்க தானே என்று கேட்டவள் அவனை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
அதுவரை நன்றாக கால்களை ஆட்டிக்கொண்டு படுத்திருந்த பிரசாத் ஐயோ என்று வலியில் கத்தினான்.
அடேய் கிராதகா விடுடா வலிக்குது என்று அலற மாமா ஒன்னும் இல்லை இன்னும் கொஞ்ச நேரத்துல சரியா போய்டும் என்று அவன் கைகளை பிடித்து கொள்ள இருங்க அண்ணா சுளுக்கு எடுக்கும் போது அப்படித்தான் இருக்கும் அப்பறம் வலி போய்டும்.
ஐயோ இவன் வேற ஆளில்லாத கடையில யாருக்கு டா டீ ஆத்துற ஐயோ வலிக்குதே பிரௌனி என்று அவள் இடையோடு கையிட்டு அணைத்து கொண்டு ஓரக்கண்ணால் மருதை பார்த்து கண்ணடித்தான் கேடி வாத்தி..
காந்தமென ஈர்க்கும்.
0 Comments