காதல்-16:
அவள் அனைத்தையும் கூறியதும் தான் தன்னை கண்டதும் ஏன் அழுதாள் என்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது.
அவள் சொல்ல சொல்ல குமரேசன் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. நான் என் தம்பியை பார்க்க போயிருந்தால் இவர் இப்படி கட்டுக்கதை சொல்லி வைத்திருக்கிறார்.
ச்சே என்ன மனுஷன் இவர் என்று சலித்து கொண்டவன் தன் பிரௌனி ஏதேனும் தன்னை தவறாக புரிந்து கொண்டாளோ என்று நினைத்தவன் அவள் கைகளை பற்றி கொண்டு பிரௌனி அன்னைக்கு உன்கிட்ட எங்க போறேன்னு சொல்லாம போனது தப்புதான்.
அப்போ இருந்த பதட்டத்துல எனக்கு சொல்ல தோணலை என்று அவன் கூற எனக்கு நீங்க எங்க போனீங்க எதுக்காக போனீங்கன்னு விளக்கம் தேவையில்லை மாமா.. நான் அதை கேட்கவும் மாட்டேன் உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. என்று அவள் கூறவும் அவளை தாவி தன்னோடு அணைத்து கொண்டவன் லவ் யூ பிரௌனி லவ் யூ சோ மச் என்று அவன் முகம் முழுக்க முத்தமிட்டான்.
அவளிடமிருந்து பிரிந்தவன் அவள் கைகளை இறுக்கமாக தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டவன் பிரௌனி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது தர்மன் சாரோட வற்புறுத்தலால் இருக்கலாம்..
எனக்கு அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி யார் மீதும் நம்பிக்கை இல்லை.. கல்யாணத்துக்கு முன்பு யாருக்கிட்டையும் அதிகமா பேச்சு வச்சுக்க மாட்டேன், இப்பொழுதும் அப்படித்தான்..
யாரை பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும் யாராவது வந்து என்னிடம் பேசினால் கூட ஏதோ ஒரு வேலை என்னால் அவர்களுக்கு ஆக வேண்டியாதாக இருக்கும் இல்லை பணத்தேவை இருக்கும் என்று தான் என் மனம் நினைக்கும்.
அதுக்கு விதி விலக்கு தர்மன் சார்,சாமி அண்ணா,பரத்.. இவங்களை தான் என் மனம் நம்பும்.. ஆனால் இவர்களிடம் கூட அதிகம் பேச மாட்டேன்.. அப்படியே இருந்து பழகி போயிடுச்சு..
இப்படி தான் எல்லாரும் என்று என் மனசு பிக்ஸ் ஆயிடுச்சு.. எனக்குன்னு ஒரு வட்டம் போட்டு வச்சுட்டேன் அதை தாண்டி நானும் போக மாட்டேன் யாரையும் அந்த வட்டத்துக்குள் சேர்க்கவும் மாட்டேன் என்று உறுதியோடு இருந்தேன். அதை உடைக்கவே நீ என் வாழ்க்கையில் வந்த போல.
முதலில் தர்மன் சார் கல்யாணம் பண்ணிக்கோன்னு என்கிட்ட சொல்லும் போது மறுத்துட்டேன். அவரும் அப்போ ஏதும் கண்டுகளை. இப்போ ரெண்டு மாதத்துக்கு முன்னாடி வந்து நீ கல்யாணம் கட்டியே தீரனும்ன்னு
ஒரே பிடிவாதம்.
நான் முடியாதுன்னு சொன்னேன் ஆனால் அவர் என்னிடம் பண்ணி தான் ஆகணும்னு சொல்லிட்டாரு, என்னை சமாதான படுத்த என்னென்னவோ சொன்னாரு உனக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா..? நீ சம்பாரிக்கிற பணமெல்லாம் யாருக்கு சேர்த்து வச்சுட்டு வர..? கடைசி காலத்துல தனியா எப்படி இருப்ப அது இதுன்னு சொல்லி ரிஜிஸ்டர் ஆபிஸ் வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டார்.
நானும் வேண்டா வெறுப்பா தான் கல்யாணம் பண்ணினேன்.. சேர்ந்து வாழனும் அப்படி எந்த ஆசையும் இல்ல.. வீட்டுல எப்பொழுதும் நான் மட்டும் தான் இருப்பேன்.. இப்போ புதுசா நீ இருப்ப அப்படின்னு நினைச்சுட்டு அதை நான் பெருசா கண்டுகளை..
அதுக்கப்பறம் தான் நீ இன்னும் பெரிய மனுஷியே ஆகலைன்னு சொன்னதும் என்னடா சின்ன பிள்ளையை போய் நமக்கு கட்டி வச்சுட்டாங்களேன்னு ஒரு கோபம்..
உன் சம்மதம் இல்லாம கல்யாணம் நடக்க வாய்ப்பில்லைன்னு உன் மேலையும் கோபம் அதான் அன்னைக்கு நைட் பரத் வீட்டுக்கு போய் டிவோர்ஸ் பேப்பர் கையோடு வாங்கிட்டு வந்தேன்..
உன்னை சுத்தமா கை விடனும்னு நினைக்கல.. உன் விருப்பப்படி இருந்துக்கலாம்னு நினைச்சு தான் அந்த முடிவு எடுத்தேன். அப்பறம் தான் உன் கையில் சூட்டு காயம் பார்த்ததும் எனக்கு என்னோட சின்ன வயசு நியாபகம் வந்துடுச்சு.
அப்பறம் தான் தர்மன் சார் கிட்ட போய் உன்னை பற்றி கேட்டேன்.. என்னை போலவே நீயும் கஷ்டத்தை அனுபவிச்சிருக்கன்னு உன் மேல ஒரு இது.. அது என்னன்னு தெரியல.. அதும் இல்லாம நீ வேற எப்போ பார்த்தாலும் என்னையே சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தியா..?
அவ்வளவு நாள் நான் தனியா தான் இருந்தேன்.. இப்போ எனக்கே எனக்குன்னு ஒரு ஆள் இருக்கும் போது அது தனி பலம் கொடுத்துச்சு.. அப்பறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே என்றவன் அவளை பார்க்க மாமா யாரும் இல்லைன்னு இனி நீங்க கவலை படவே தேவையில்லை..
இனிமே நீங்க தனியா இருக்கணும்னு அவசியமும் இல்லை. எப்பொழுதும் நான் உங்க கூடவே இருப்பேன் மாமா நம்ம பிள்ளைகளும் என்று அவனை கட்டிக்கொண்டாள்.
அவளை தானும் அணைத்து கொண்டவன் அப்பறம் பிரௌனி நான் அன்னைக்கு நைட் டெல்லி போனேன் என்று கூறவும் அவள் அமைதியாக ஹிம்ம் கொட்டினாள்.
என் தம்பிக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுன்னு போன் வந்துச்சு.. அதான் அந்த நேரத்துல கிளம்பி போனேன்.. ஆக்சிடெண்ட்னு சொன்னதும் எனக்கு இருந்த பதட்டத்துல சொல்லாம அப்படியே கிளம்பிட்டேன் என்று கூறவும் என்னது உங்களுக்கு தம்பி இருக்காங்களா என்று அதிர்ச்சியாக வினவினாள்.
அவன் ஹிம்ம் என்று தலையாட்ட உங்க கூட பிறந்த தம்பியா என்று அதிர்ச்சி மாறாமல் கேட்க ஹிம்ம் என்கவும் அவ்வா இவ்ளோ நாள் என்கிட்ட சொல்லவே இல்லை என்று அவனை அடிக்க ஹே பிரௌனி நான் இல்லடி அவன் தான் நான் நேரா வந்து அண்ணிகிட்ட பேசுவேன் நீங்க ஏதும் சொல்லாதீங்க சர்ப்ரைசா இருக்கட்டும்னு சொன்னான்.
அதான் சரின்னு நானும் விட்டுட்டேன்..
ஒஹ்.. இப்போ அவருக்கு உடம்பு எப்படி இருக்கு..
இன்னும் ரெண்டு நாளில் நம்ம வீட்டுக்கு வந்துருவான் கை எலும்பு தான் லைட்டா கிராக் விட்டுருக்குன்னு சொன்னாங்க மத்தபடி நல்லாருக்கான் என்று கூறியவன் அவள் முகத்தை பார்க்க ஹிம்ம் வாங்க அப்போ நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்..
ஹேய் பிரௌனி நான் கத்துனது வெளியே கேட்டுருக்குமே உங்க வீட்டுல ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க அதெல்லாம் நீங்க கத்தினது முதல் இப்போ என்னை தூக்கிட்டு உள்ள வந்தது வரை எல்லாம் தெரியும்.. என்றவள் இனி நான் அதை பற்றி கேட்க மாட்டேன் மாமா..
சொல்லணும்னு நினைச்சிருந்தா நீங்க சொல்லிருப்பீங்க.. கேட்டதுக்கே அவ்ளோ கோபம் என்றால் அது உங்களை எந்தளவுக்கு பாதிச்சிருக்குன்னு புரியுது சாரி மாமா உங்களை கஷ்டப்படுத்தினதுக்கு என்று அவனிதழில் தன்னிதழை ஒற்றி எடுத்து என்ன மாமா நீங்க குடுக்கும் போது மட்டும் ஏதோ ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு..
இப்போ நான் குடுத்தா சப்புன்னு இருக்கு என்கவும் சிரித்தவன் அவள் உதட்டை நெருங்க வெளியில் ராணி இருவரையும் சாப்பிட அழைத்தார்.
நான் வெளியே வரல.. இங்க சாப்பாடு எடுத்துட்டு வா பிரௌனி என்று கூற ஹிம்ம் என்றவாறு எழுந்து வெளியே சென்றாள்.
வெளியே இவர்களுக்காக காத்திருந்தவர்கள் இவள் மட்டும் தனியே வரவும் எங்க டி மாப்பிள்ளையை அழைச்சுட்டு வா சாப்பிடலாம் என்கவும் அவருக்கு நான் ஊட்டி விடணுமாம் நான் ஊட்டி விட்டால் தான் என் புருஷனுக்கு சோறு இறங்கும் நீங்க அவர் சாப்பிடுறத பார்த்துட்டு கண்ணு வச்சுட்டா என்ன பண்றது.. என்று அவன் காதில் விழுவது போலவே கூறினாள்.
இங்கு அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவன் ஜர்க்காகி ஐயோ மானத்தை வாங்குறாளே என்று அலறியவன் இரு டி உன்னை அலற விடுறேன் என்று மனதிற்குள் சபதம் எடுத்தவன் அறையை விட்டு வெளியில் வந்தான்.
அவன் வெளியில் வந்ததும் எப்படி வர வச்சேன் ஹா கயலா கொக்கா என்று தலையை சிலுப்பி கொண்டவள் அவனிடம் சென்று வாங்க மாமா வந்து உட்காருங்க சாப்பிடலாம் என்கவும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்..
அப்பொழுது தான் வெளியில் சென்றிருந்த மருதுவும் துரையும் வரவே அவர்களும் சாப்பிட அமர அவர்களை பார்த்து சிநேகமாக புன்னகைத்தவன் குனிந்து கொள்ள கயல் அவனுக்கு பரிமாற என்ன அத்தை மகளே புருஷன் வந்ததும் தலை வெளிய தெரியுது என்று மருது கிண்டலாக கூற நீ தான் என்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னியே.. இப்போ மட்டும் எதுக்கு பேசுற மாமா என்று கிண்டலாக கூறினாள்..
இருவரும் கிண்டலாக பேசிக் கொள்ள பிரசாத்திற்கு கடுப்பாக இருந்தது. தனக்கு பரிமாறி கொண்டு மருதுவிடம் வாய் சவடால் செய்து கொண்டிருந்தவளை கண்டு உள்ளுக்குள் அவன்கிட்ட பேசாத பிரௌனி எனக்கு பிடிக்கவே இல்லை என்று பொறுமினான்.
பாவம் அவள் அதனை அறியவில்லை. அவனை ஏன் டி மாமான்னு கூப்பிடுற அப்போ நான் யாரு என்று பொறாமையில் வெந்து கொண்டிருந்தவன் என் பிரௌனி எனக்கு தான் என்று தனக்குள் மீண்டும் மீண்டும் தனக்கே கூறிக் கொண்டவன் தன்னருகில் பரிமாறி கொண்டிருந்தவளை அங்கிருந்த யாரையும் கண்டுக் கொள்ளாமல் அப்படியே இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
சாப்பாடை பிசைந்து அவள் வாயருகில் கொண்டு சென்று சாப்பிடு பிரௌனி என்று அவளுக்கு ஊட்டி விட்டவன் தங்களை கண்டு சிரித்துக் கொண்டிருந்த மருதுவை இவள் எனக்கு மட்டுமே என்பது போல் பார்த்து வைத்தான்.
மாமா எல்லாரும் இருக்காங்க ஏன் இப்படி பண்றீங்க என்னை விடுங்க என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற முடியாது பிரௌனி என்றவன் சாப்பிடு என்று ஊட்டி விட்டான்.
அவள் அவஸ்தையுடன் அங்கிருந்த அனைவரையும் பார்க்க அவர்கள் தங்களுக்குள் பேசியவாறு உணவை உண்டு கொண்டிருக்க மாமா என்ன இது எனக்கு கூச்சமா இருக்கு விடுங்க என்று சிணுங்க விட மாட்டேன் பிரௌனி நீ இங்க தான் இருக்கணும் என்று அவள் இடையில் அழுத்தம் கொடுத்து தன்னுடன் சேர்த்தனைத்தபடி அவளுக்கு ஊட்டினான்.
மாமா கூச்சமா இருக்கு விடுங்க நான் அந்த இடத்தில உட்காந்துக்குறேன் என்று ஒரு நாற்காலியை காண்பிக்க அவன் முடியாது என்பது போல் தலையை இடம் வலமாக ஆட்டியவன் அவள் காதோரம் தன் மீசை முடிகள் குத்த ஆடாம அசையாம உட்காந்துருந்தா உனக்கு ஊட்டி முடிச்சதும் விட்டுடுவேன்..
இப்படி ஏதாவது சேட்டை பண்ணினா நானும் பண்ணுவேன் என்கவும் அவள் என்ன என்பது போல் அவனை பார்க்க அவள் இடுப்பில் இருந்த விரல்களை கொண்டு சென்று அவள் வயிற்றில் வருட சிலிர்த்தவள் உடல் நடுக்கம் கொள்ள என்ன மாமா இப்படி பண்றீங்க என்று நடுக்கத்துடன் கேட்டாள்.
சொல் பேச்சு கேட்கலைன்னா இப்படி தான் என்றவன் அவளுக்கு ஊட்ட அதற்கு மேல் பேசாமல் அனைத்தையும் வாங்கிக் கொண்டாள்.
அன்று இரவு தன் பக்கத்தில் படுத்திருந்தவளிடம் டேய் உன் கையை குடு என்கவும் அவள் தன் கையை அவன் புறம் நீட்ட தன் நெஞ்சோடு வைத்து கொண்டு தன் கடந்த காலத்தை நினைத்து பார்த்தவாரு அவளிடம் அனைத்தையும் கூறினான்.
இரவு நேர சமையலுக்கு பங்கஜமும் ராணியும் சமைத்து கொண்டிருக்க பங்கஜம் ராணியிடம் மாப்பிள்ளை நல்லவரா தான் அண்ணி இருக்காரு நம்ம கயலை எப்படி பார்த்துக்குறாரு..
ஹிம்ம் ஆமா அண்ணி மாப்பிள்ளைக்கு பிள்ளை மேல பாசம் இருக்கு, நான் இப்போ அவங்க வீட்டுக்கு போன போது அப்படி பாத்துக்குறாரு என் கண்ணே பட்டுடும் போல.. நான் கூட நினைச்சேன் பட்டணத்து பையன் எப்படி இருப்பானோ என்னவோன்னு நம்ம பிள்ளை இனிமேலும் கஷ்டப்படுமோன்னு பயந்துட்டே இருந்தேன்..
ஆனா பிள்ளையை நல்லா வச்சுருக்காரு என் மனசு நிறைஞ்சு போச்சு..இதை விட வேற என்ன வேணும் என் புருஷங்காரன் சும்மா இல்லாம அதையும் இதையும் சொல்லவும் நானும் நம்பி பிள்ளையை இங்க அழைச்சுட்டு வந்துட்டேன்.
அதான் மாப்பிள்ளை நைட் வந்து நிக்குறாரே என்று பங்கஜம் கூறி சிரிக்க ஆமா அண்ணி அவரு வந்ததும் தான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு..
எப்படியோ பிள்ளைங்க நல்லா இருந்தா சரி என்று பெருமூச்சு விட்டு தன் வேலையை பார்க்க அப்பொழுது வள்ளி அங்கு தண்ணீர் குடிக்க வர கயலுக்கு கல்யாணம் முடிச்சாச்சு அப்படியே நம்ம வள்ளிக்கும் முடிச்சுட்டா நானும் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் என்று பங்கஜம் கூற எல்லாம் நேரம் வரும் போது தன்னால் அமையும் அண்ணி என்று பேசி கொண்டிருக்க அதை கேட்ட வள்ளி அதுக்குள்ள உனக்கு நான் பாரமாய்ட்டேனா என்று கத்த இப்போ ஏன் டி கத்துற..
காலத்துக்கும் இங்கேயே இருக்க முடியுமா எப்படியும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிதானே ஆகணும். இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்ன்னு இந்த குதி குதிக்குற
எனக்கு கல்யாணம் வேண்டாம் நான் பண்ண மாட்டேன் என்று கத்தி விட்டு அவள் பாட்டுக்கு தன்னறைக்கு சென்று விட்டாள்.
இப்போ நான் என்ன சொன்னேன் அண்ணி இப்படி கத்திட்டு போறா.. கல்யாணம் பண்ணனும்ன்னு சொன்னது தப்பா என்று புலம்ப திரும்பி வந்த வள்ளி அப்படி கல்யாணம் பண்ணனும்னு ஆசை இருந்தா நீ பண்ணிக்கோ என்று விட்டு தன்னறைக்கு வந்து விட்டாள்.
இவ வர வர சரியில்லை அண்ணி சிடு சிடுன்னு இருக்கா எதுக்கெடுத்தாலும் கோவம் மட்டும் வந்துடும்.
இங்கு தன்னறையில் வள்ளி எரும மாடு மேல வந்து பன்னி மாதிரி விழ மட்டும் தெரியும்.. பெரிய டயலாக் எல்லாம் விட்டான் எங்க அப்பாவ கூட்டிட்டு வரேன் பொண்ணு கேக்குறேன் அது இதுன்னு பீலா விட்டான் ஒரு போன் கூட பண்ண மாட்டேங்குறான்.. என்று அவன் குடுத்த போனை பார்த்து கொண்டிருந்தாள்.
கயல் பிரசாத்தின் புது அவதாரத்தில் அதிர்ந்து போய் அவன் பக்கத்தில் செல்லவே பயந்து போனாள்.
அனைவர் முன்பும் பிடித்து இழுத்து சேட்டை செய்வான் என்று அவள் கனவா கண்டாள்.
அவன் யாரிடமும் ஓட்டவில்லை என்று தான் அவனை வெளியில் அழைக்க சத்தமாக தன் தாயிடம் அவ்வாறு கூறினாள்.
இவன் என்னவென்றால் எல்லோரும் இருக்கும் இடம் என்று கூட பாராமல் மடியில் அமர்த்தி ஊட்டி விட இவளுக்கு தான் பக்கென்று ஆனது.
இதில் மருது வேறு அவர்கள் இருவரையும் சிரிப்புடன் பார்த்து தலையை மெதுவாக அசைக்க இவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
அதன் பின் அவனருகில் அவள் செல்லவே இல்லை. இந்த மாமா புதுசு புதுசா பண்றாங்க என்று நினைத்தவள் தன் தாய் பின்னால் சுற்றி கொண்டிருந்தாள்.
"ஒரு இடத்தில போய் உட்கார் டி எதுக்கு இப்படி அலஞ்சிட்டு இருக்க?"
நான் சும்மா தானே ம்மா இருக்கேன். உனக்கு என்ன இப்போ போ ம்மா ஏதாவது சொல்லிட்டே இருக்க நான் பாரு உன்னை மாமாக்கிட்ட சொல்றேன்.
சரி தான் போ டி போய் மாப்பிள்ளை கூட இரு ஏதாவது வேணுமான்னு கேளு இல்லனா தூங்க சொல்லு ராத்திரி நேரத்துல வந்தவரு சரியா தூங்கிருக்க மாட்டாரு போய் அவர் கிட்ட இருந்து என்ன வேணுமோ பார்த்து செய் என்கவும் ஐயோ எம்மா உன் மாப்பிள்ளைக்கு ஏதோ ஆயிடுச்சு ம்மா ஒரு வேளை ராத்திரி வந்தது தான் ஏதோ காத்து கருப்பு அடிச்சிருச்சோ என்னவோ என்று மனதிற்குள் நினைத்தவள் அங்கிருந்து கழண்டு கொண்டு வள்ளி அறைக்கு சென்றுவிட்டாள்.
இவள் வள்ளி அறைக்கு போனது தெரியாமல் இவளை தேடி கொண்டு வந்தவன் தயங்கி சமையல் அறை வாயிலில் நிற்க பங்கஜம் பார்த்து ராணியிடம் கூற வாங்க தம்பி ஏதும் வேணுமா என்கவும் குரலை செருமியவன் கயல் என்று தயக்கமாக கூற அங்க தானே அனுப்பி வச்சேன் உங்க அறைக்கு வரலையா?
கழுதை ஒரு இடத்துல இருக்க மாட்டேங்குறா என்று திட்ட தொடங்கவும் ஒன்னும் இல்லை சும்மா தான் தேடினான் திட்டாதீங்க என்றவன் திரும்பி செல்ல இந்தாங்க தம்பி மோர் குடிங்க நான் கயலை அனுப்பி வைக்கிறேன் என்று பங்கஜம் கூறினார்.
அவன் அறைக்கு செல்லவும் கயலு என்கவும் வள்ளி அறையில் இருந்து எட்டி பார்த்தவள் என்னம்மா என்கவும் மாப்பிள்ளை தம்பிக்கு ஏதோ வேணுமாம் என்ன வேணும்னு கேளு போ என்கவும் போம்மா நான் வள்ளி கூட இருக்குறேன் என்கவும் ஏய் போ டி இன்னும் நீ என்ன சின்ன பிள்ளையா உன்கிட்ட ஏதாவது வேணும்னா சொல்லுவார் போ கூட இரு என்கவும் சிணுங்கி கொண்டே செல்ல அவள் அறை உள்ளே செல்லும் வரை பார்த்தவர் தன் வேலையை பார்க்க சென்றார்.
அறையின் உள்ளே சென்றவள் கண்டதும் வெறும் அறையை தான் எங்க இந்த மாமாவை காணும் எங்க போனாங்க என்று யோசித்தவள் நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன் மாமா யாராவது இப்படி பண்ணுவாங்களா அதுவும் எல்லாரும் இருக்கும் போது வரட்டும் இருக்கு என்று தனக்கு தானே பேசிக்கொள்ள அப்போ இங்க அப்படி செய்தால் உனக்கு ஓகேவா பிரௌனி என்று அவளை பின்னால் இருந்து
தன்னுடன் அணைத்து கொண்டு அவள் பின் கழுத்தில் மீசை வைத்து உரச பெண்ணுக்குள் ஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது.
அவளுக்காக அவன் வளர்க்கும் மீசை அவளை ரொம்ப தொந்தரவு செய்தது அவன் செயலில் நெளிந்தவள் மாமா என்கவும் வெறும் காற்று தான் வந்தது.
அவன் தன்னுடன் இன்னும் நெருக்கி இறுக்கவும் மாமா எனக்கு கூசுது விடுங்க என்கவும் அவளை விட்டவன் தன்னை நோக்கி திருப்பினான்.
அவன் முகத்தை பார்த்தவள் சட்டென குனிந்து கொள்ள ஓய் பிரௌனி என்னை பாரு என்கவும் குனிந்து கொண்டு தலையை மட்டும் மாட்டேன் என்று ஆட்டியவள் குனிந்த நிலையிலே இருக்க அப்படியே தூக்கி கொண்டு மெத்தையில் அமர்ந்து தன் மடிமீது அமர்த்திக் கொண்டான்.
அவள் அப்பொழுதும் அவன் முகம் பார்க்காமல் வேறு பக்கம் பார்க்கவும் கவி இப்போ நீ என்னை திரும்பி பார்க்கலன்னா காலையில் அத்தனை பேர் முன்பும் செய்ததை இப்போ செய்வேன் என்று அவள் இடையில் கை வைக்க அவன் கைகள் மீது தன் கைகளை வைத்தவள் கலவரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
குட் என்றவன் அவளிடம் முன்னாடியே நீ என்னை பார்த்திருந்தால் ஏதும் செய்திருக்க மாட்டேன் ஆனால் இப்போ எனக்கு அது போல செய்யணும்னு தோணுது பிரௌனி நல்லாருந்துச்சு தானே என்று கூச்சமில்லாமல் கேட்கவும் அதிர்ந்து பார்த்தாள்.
மாமா எனக்கு ஒரு மாதிரி இருக்கு விடுங்க உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு நீங்க ஏன் ராத்திரி வந்தீங்க ஏதோ பேய் அடிச்சுடுச்சோ அதான் இப்படி எல்லாம் பண்றீங்களா என்று அப்பாவியாக கேட்க அவளை அணைத்து கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்தான்.
என் பட்டுக்குட்டி பிரௌனி செல்லக்குட்டி என்று ஒவ்வொரு குட்டிக்கும் அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க அவனை தடுத்து நிறுத்தியவள் தீவிரமான முகத்துடன் மாமா நீங்க இப்போ நான் சொல்றதை செய்றீங்களா எனக்காக ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்கவும் அவனோ எது காலையில் பண்ணினதா என்றவன் எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல பிரௌனி வாவென்று அவளை தன்னுடன் சேர்த்து அணைத்தான்.
ஐயோ மாமா அது இல்லை இது வேற என்கவும் என்ன செய்யணும் சொல்லு என்கவும் அது இங்கிருந்து வலது பக்கம் திரும்பினா சாமியறை இருக்கும் நீங்க போய் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டு நெற்றியில் விபூதி பூசிட்டு வாங்க என்கவும் அவள் எதற்கு சொல்கிறாள் என்று புரிந்தவன் எனக்கு சாமி கும்பிடும் பழக்கம் இல்லை பிரௌனி என்கவும் அவனை கெஞ்சுதலாக பார்த்தாள்.
"மாமா ப்ளீஸ் எனக்காக "
"சரி டா அப்போ நான் இதை செய்யணும் என்றால் எனக்கு ஒரு லஞ்சம் தரணும் பரவால்லையா"
"என்னது மாமா சொல்லுங்க செஞ்சிடலாம்"
ஹிம்ம் அப்போ காலையில் நான் உன்கிட்ட பண்ணினேன் இல்லையா அதை இன்னொரு முறை பண்ணனும் என்கவும் அதிர்ந்தாள் என்னாது என்று.
(வாத்தி பலே கில்லாடி தான்)
அவள் அதிர்ந்து நிற்கும் நேரத்தில் வெளியே சென்றவன் சாமியறைக்கு சென்று அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு அறைக்குள் வந்து இங்க பாரு பிரௌனி நீ சொன்னதை நான் செஞ்சிட்டேன்..
நீ எனக்கு வாக்கு கொடுத்திருக்க வா என்று அவள் அருகே வர மாமா இதெல்லாம் போங்கு போங்க நீங்க என்னை ஏமாத்துறீங்க என்றவள் பின்னால் நகர ஹாஹா பிரௌனி சொன்ன சொல் மாற கூடாது என்று அவளை நெருங்கினான்.
காந்தமென ஈர்க்கும்..
0 Comments