காதல்-15:
அவ்வளவு எளிதில் அந்த தேன்நிற இதழ்களிடம் இருந்து பிரிந்து விட முடியுமா என்ன..? அவள் சிரிக்கவும் தன்னை வாவென்று அழைத்த இதழ்களின் கட்டளைக்கிணங்க உடனே தன் இதழ் சேர்த்து பூட்டியவனுக்கு அவளிடம் இருந்து பிரியத்தான் மனமில்லை.
அவளுக்கோ அவன் இதழ் சேர்த்ததும் எழுந்த புது விதமான உணர்ச்சி குவியல்களில் தன்னை தொலைத்தவளின் ஒரு கை அவன் பனியனை இறுக பற்றியிருக்க மறு கை அவன் கேசத்தை இறுக பற்றிக் கொண்டிருந்தது.
சற்று நேரம் கழித்து அவளிடமிருந்து பிரிந்தவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொள்ள அவனிடம் மாமா ஏன் இப்படி பண்றீங்க என்று அவன் சிவந்த உதட்டை வருடியவாறு கேட்க அவன் தான் முழித்தான்..
ஐயோ இவ வேற ஒருத்தி கேள்விக்கு பொறந்தவ, கேள்வியா கேட்டு என்னை கொல்ல போறா என்று தன் மனதிற்குள் அலரியவன் என்ன சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்க அவன் உதட்டை ரப்பராய் இழுத்தவள் மாமா சொல்லுங்க ஏன் அப்படி பண்ணுனீங்க?
அவனை இன்று ஒரு வழி ஆக்காமல் விட போவதில்லை என்பது போல் கேட்க அவனோ என்ன சொல்லி சமாளிக்கன்னு தெரியலையே அறிவே இல்லடா ராம் உனக்கு சின்ன பிள்ளைக்கிட்ட போய் இப்படி பண்ற என்று தன்னையே கடிந்து கொள்ள அவன் மனசாட்சியோ ஆமா சின்ன பிள்ளை அவக்கூட சேர்ந்து சொப்பு வச்சு விளையாடு வந்துட்டான் காலையிலே நல்லவன் ஆள பாரு நீ தேற மாட்டடா என்று காரித்துப்பியது.
எங்களுக்கு தெரியும் நீ மூடிக்கிட்டு கிளம்பு என்கவும் அப்பறம் ஏன் டா இப்போ அப்படி உதட்டை பிச்சி தின்ன யாருக்காக இந்த நல்லவன் வேஷம் அவ உன் பொண்டாட்டி தானே உனக்கில்லாத உரிமையா என்று ஏற்றி விட எதை எப்போ பண்ணனும்னு எங்களுக்கு தெரியும் நீ பேஹ் என்று அதனை விரட்டியவன் ராம் கொஞ்சம் கட்டு பாட்டோட இருக்கணும் ( அதற்கு அவள் விட்டால் தானே ) என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் கேள்வியாக பார்த்தவளிடம் திரும்பினான்.
ஒன்றும் தெரியாதது போல் ஹான் என்ன பிரௌனி கேட்ட என்று கேட்க ஹிம்ம் என்று சலிப்பாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவள் அவனை நெருங்கி அவன் உதட்டில் தன் உதடை ஒற்றி இப்படி மாமா ஏன் இப்படி பண்ணுனீங்க..?
அது அது வந்து பிரௌனி இது ஒரு வகை மருந்து டா என்கவும் மருந்தா எதுக்கு மாமா இந்த மருந்து எனக்கு குடுத்தீங்க எனக்கு தான் ஒன்னும் இல்லையே நான் நல்லா தான் இருக்கேன் என்று கேட்கவும் ஆஹா ஆரம்பிச்சுட்டா டா என்றவன் அது உனக்கு இல்லை டா எனக்காக தான் அப்படி பண்ணினேன் என்று வாயை விட்டான்.
அவன் அவ்வாறு சொல்லவும் பதறியவள் என்னாச்சு மாமா உடம்பு ஏதும் சரியில்லையா என்று அவன் நெற்றி கழுத்து என்று கை வைத்து பார்க்க அவள் கை பட்டதும் அவன் உடம்பில் சூடு ஏறியது.
அவள் குளிர்ச்சியான விரல்கள் அவன் தேகத்தில் பட்டதும் சிலிர்த்தவன் ஜூரம் கண்டவன் உடல் போல் காந்த ஐயோ இவ கை பட்டதுக்கேவா இப்படி.. டேய் ராம் நீ என்ன பாடு பட போறியோ போச்சு..
ஐயோ மாமா சூடா இருக்கு உடம்பு அதான் அப்படி பண்ணுனீங்களா.. அவனும் ஹிம்ம் என்று பாவமாக முகத்தை வைத்து கொள்ள இங்க எல்லாம் கசாயம் வச்சு குடிச்சா சரியா போய்டும் மாமா என்கவும் ஐயோ கசாயமா உவேக் என்று உள்ளுக்குள் அலறியவன் எங்கு தனக்கு அதனை போட்டுக் கொண்டு வந்து கொடுத்து விடுவாளோ என்று பயந்தவன் அவளிடம் கசாயம் போடுறதெல்லாம் பழைய டெக்னிக் பிரௌனி..
இப்போலாம் இப்படி தான் பண்றாங்க ( அடப்பாவி ) இது தான் சிரமமே இல்லாத டெக்னிக் இதே இந்த கசாயம் எல்லாம் போட்டா டைம் ஆகும் இதுன்னா வேலை சிம்பிள் அப்பறம் இது பண்ணினா நல்லாருக்கும் என்று முத்தத்தின் நினைவில் ஜொள்ளு விட அவளும் அவனுக்கு ஏற்றார் போல் ஆமா மாமா நல்லா தான் இருந்துச்சு அப்படியே பறக்கிற மாதிரி என்று கையை காற்றில் ஆட்டியவாறு கூறினாள்.
உனக்கு பிடுச்சுதா பிரௌனி எப்படி இருந்துச்சு என்று அதை பற்றி அவளிடம் பேசுவது அவனுக்கு உல்லாசமாக இருந்ததோ என்னவோ அவனும் அந்த பேச்சை தொடர ஹிம்ம் ஆமா மாமா செமையா இருந்துச்சு வயித்துல ஏதோ பண்ணுது நல்லாருந்துச்சு என்று கூறியவள் மாமா அது ஒரு நாளைக்கு எத்தனை முறை பண்ணினா உங்களுக்கு ஜூரம் போகும்.
அந்த பேராசைக்காரனோ நாம நினைக்கும் போதெல்லாம் பண்ணலாம் கவி அதுக்கு இவ்ளோன்னு லிமிட் ஏதும் இல்லை.. என்கவும் இங்க கொஞ்ச நேரம் முன்னாடி ஒருத்தன் நல்லவன் வேஷம் போட்டுட்டு இருந்தான் அவனை பார்த்தியா அவன்கிட்ட ஒரு கேள்வி கேட்கணும் என்று ஆஜராகியது.
வேறு யாராக தான் இருக்க முடியும் அவனுடைய மனசாட்சி தான்..
உன் நெஞ்சை தொட்டு சொல்லுடா உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா என்கவும் தோ தான் நீ இருக்கியே என்று ஏளனமாக கூற ஆனா உன்னை மாதிரி ஒரு மானங்கெட்ட ரோஷங்கெட்ட மனுஷனுக்கு மனசாட்சியா இருக்குறது எவ்வளவு பெரிய தியாகம் தெரியுமா என்று அது பாட்டுக்கு கத்த ஏய் போ அங்குட்டு என்று துரத்தியவன் தன் பிரௌனியிடம் கவனத்தை செலுத்தினான்.
அப்போ வாங்க மாமா பண்ணலாம் என்று அவனை நெருங்க டைம் ஆகுது டா வா முதலில் குளிச்சிடுவோம் அப்பறம் நிறைய பண்ணலாம் வெளியே எல்லாரும் நமக்கு தான் வெய்ட் பண்ணுவாங்க.. முதலில் நம்ம வீட்டுக்கு போகணும் வா வா குளிச்சுட்டு கிளம்புவோம் என்கவும் ஒஹ் அப்படியா என்று முகத்தை தொங்க போட அவள் எதிர்பார்க்காத நேரம் அவள் இதழ் சேர்க்க அவனுடன் தானும் சேர்ந்து கொண்டாள்.
ஆத்தா கயலு என்று வெளியில் இருந்து யாரோ அழைக்க திடுக்கிட்டு அவனிடம் இருந்து விலக ஒன்னுமில்லை பிரௌனி வெளியே தான் கூப்பிடுறாங்க என்கவும் இதோ வரேன் ம்மா என்று குரல் கொடுத்தவள் வாங்க மாமா குளிக்கலாம் என்கவும் நீ போய் குளிடா நான் வரேன் என்றவன் அவளை அனுப்பி வைத்தான்.
அவளும் எங்கு போனாய் என்று கேட்கவும் இல்லை அவனும் எதற்காக சென்றான் என்று கூறவில்லை..
ராம் குளித்து விட்டு இடையில் துண்டுடன் வந்தவன் அங்கு கண்ணாடியின் முன்பு தன் நீண்ட கூந்தலை ஜடை போட்டுக் கொண்டிருந்தவளை கண்டு வாவ் பிரௌனி இந்த ட்ரெஸ் உனக்கு நல்லாருக்கு என்று அவள் தாவணி அணிந்திருந்ததை கண்டு அவளருகில் வர கண்ணாடி வழியாக அவனை பார்த்தவள் அவனை கேட்ட கேள்வியில் அப்படியே மரம் போல் நின்றான்.
அப்படி அவள் என்ன தான் கேட்டாள்? வாங்க பார்ப்போம்…
மாமா உங்க அம்மா அப்பா எல்லாரும் எங்கே..? நீங்க மட்டும் ஏன் தனியா இருக்கீங்க..? உங்க அம்மா ஏன் உங்களை விட்டு போனாங்க..? என்று அவன் நெஞ்சின் மீதிருந்த தழும்புகளை பார்த்தவாரு கேட்டாள்.
தன் கை முஷ்டிகளை மடக்கி பற்களை கடித்து கொண்டு கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தவனின் அருகில் சென்றவள் மாமா உங்க அம்மா என்று அவள் ஆரம்பிக்கும் போதே ருத்ர மூர்த்தியாக கண்களை திறந்தவன் கண்கள் சிவக்க அவள் கழுத்தை நெறித்து எனக்கு அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல யாரை பற்றியும் இனி என்கிட்ட எதுவும் கேட்காத எல்லாம் செத்து போய்ட்டாங்க புரிஞ்சிதா என்று அரக்கத்தனமாக கத்தியவன் ஷர்ட்டை மாட்டிக்கொண்டு வெளியில் சென்று விட்டான்.
தன் மாமன் தானா இது? அவருக்கு என்னை காயப்படுத்தவே தெரியாது.. ஆனால் இது என்று தன் வலிக்கும் கழுத்தினை தடவி விட்டவள் அவன் தள்ளியதில் கீழே விழுந்து கிடக்க இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்தவள் மெத்தையில் அமர்ந்தாள்.
இங்கு இவன் சத்தம் கேட்டு என்னவோ ஏதோவென்று வந்தவர்களை இருந்த கோபத்தில் யாரையும் கண்டுக்கொள்ளாமல் வெளியில் சென்று விட்டான்.
அவன் வேகமாக செல்லவும் துரை தன் மகன் மருதமுத்தை அவரை போய் பாரு என்னாச்சுன்னு என்று அவன் பின்னால் அனுப்பி வைத்தவர் கயல் இருக்கும் அறைக்கு வெளியே நின்றார்.
பெண்கள் அனைவரும் அவள் அறையில் தான் இருந்தனர். ராணி தன் மகளிடம் என்னடி பண்ணின மாப்பிள்ளை இப்படி கத்துற அளவுக்கு என்னாச்சு ஏதாவது சேட்டை பண்ணுனியா என்று எதுவும் தெரியாமல் கேட்க ஏற்கனவே அவன் மேல் அவ்வளவு கோபத்தில் இருந்தவள் ஏன் நான் ஏதாவது பண்ணினாத்தான் உன் மருமகன் கத்திட்டு போவாரா..
போம்மா ஒன்னுமில்லை.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவரே வருவார்.. என்று கூற அப்பறம் ஏன் டி வீடே அதிரும் படி அப்படி கத்தினாரு என்று கேட்க மனதிற்குள் ஹிம்ம் பாட்டு பாடி பார்த்தாரு என்று பதில் கூறியவள் வெளியில் அவர்களிடம் ஏதோ எக்ஸ்பிரிமெண்டாம் கத்துனா வீடு இடியுதான்னு செக் பண்ணி பார்த்தார்..
போம்மா என்னை கொஞ்சம் தனியா விடுங்க என்றவள் அப்படியே திரும்பி படுத்துக் கொள்ள வா ராணி அவ பேசுறதுல இருந்தே தெரியலையா அவ புருஷனை பற்றி மூச்சு கூட விடமாட்டான்னு வா நாம போவோம் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் என்று துரையின் மனைவி பங்கஜம் கூற அப்படி சொல்லுத்த இன்னும் எண்ணி பத்தே நிமிஷத்துல அந்த மனுஷன் இங்க இருப்பாரு..
போங்க போய் வேலைய பாருங்க என்று அவள் கண்களை மூடிக் கொள்ள வெளியில் இருந்த துரை அதான் புள்ளை சொல்லுதுள்ள வாங்க வந்து வேலைய பாருங்க என்றவர் சிரித்துக் கொண்டே தன் வயலை நோக்கி சென்றார்.
இங்கு வேகமாக வெளியில் வந்தவன் எங்கு போகிறோம் என்று தெரியாமல் அவன்பாட்டுக்கு நடக்க ஐயோ நடந்தே சென்னைக்கு போய்டுவான் போலையே என்று நினைத்த அவன் மனசாட்சி அவன் நடைக்கு பிரேக் போட்டது.
ஒரு ஐந்து நிமிடம் நடந்திருப்பான்.. டேய் அவங்க செஞ்ச தப்புக்கு அவளை ஏன் டா இப்போ தள்ளிவிட்டு வந்த? பாவம் ஏற்கனவே இந்த மாதிரி நேரத்துல இடுப்பு வலிக்கும் இதுல நீ தள்ளிவிட்டதுல எப்படி விழுந்தாளோ எங்க அடி பட்டுச்சோ..
உன் வாழ்க்கையை பற்றி அவளுக்கு ஒன்னும் தெரியாது.. நீ தானே அவகிட்ட அதை சொல்லியிருக்கணும் அதை விட்டுட்டு பாவம் அந்த பிள்ளை உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு இன்னும் எதையெல்லாம் அனுபவக்கினுமோ என்று சோக கீதம் பாட ஐயோ பிரௌனி என்று வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான்.
அவன் பின்னால் பத்தடி தூரத்தில் வந்த மருது அவன் நிற்கவும் என்ன நின்னுட்டாப்புல என்று யோசித்தவன் அவனை கவனிக்க பிரசாத் நெற்றியில் அடித்து கொள்ளவும் ஹாஹா தெளிஞ்சிடுச்சு என்று நகைத்தவன் இனிமே ஃப்லோ பண்ண தேவையில்லை நாம நம்ம வேலையை போய் பார்ப்போம் என்று சென்றுவிட்டான்.
வரும் வழியில் சாரி பிரௌனி அவங்களை பற்றி பேசினாலே இப்படி தான் என்னையே கட்டுப்படுத்த முடியாம போய்டுது ச்சே இன்னைக்கு உன்னை தள்ளி விட்டுட்டேன்.. எனக்கு எதுக்கு தான் இப்படி கோபம் வருதுன்னு தெரியல சாரி டா என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டியவன் விறுவிறுவென வீட்டிற்கு வந்தான்.
அங்கு இவன் வரும் சத்தம் கேட்கவே பங்கஜம் ராணியிடம் எட்டு நிமிஷம் என்று சிரிக்க ராணியும் சிரித்தபடி தன் வேலையை பார்த்தார்.
அப்பொழுது தான் படுக்கையில் இருந்து எழுந்தவள் காபி போட்டு குடிக்கலாம் என்று வெளியில் வர வேகமாக வந்தவன் அவள் இடுப்பில் கை வைத்திருக்கவும் அறிவே இல்ல டா உனக்கு என்று தன்னை தானே திட்டி கொண்டவன் அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக்கொண்டவன் கதவை கால்களால் மூடியவன் சாரி டா சாரி பிரௌனி என்றவாறு அவள் இதழை சிறை பிடித்துக் கொண்டான்.
இதழ் முத்தம் நீடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் அவன் அவளிடமிருந்து பிரியவும் அவனை கண்டு கொள்ளாமல் வெளியில் செல்ல முயன்றவளை அப்படியே தன்னோடு அணைத்து கொண்டவன் சாரி டா கோபம் வந்துடுச்சு சாரி சாரி இனிமே இப்படி நடக்காது..
நான் தள்ளி விட்டதுல எங்கேயாவது அடி பட்டுருச்சா வலிக்குதா என்று அவள் இடுப்பை அழுத்தி கொடுக்க அவள் எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள்.
டேய் பிரௌனி என்னை மன்னிச்சிடு டா அது ஏதோ என்னையே அறியாமல் கோபம் வந்துடுச்சு ப்ளீஸ் என்று கண்கள் சுருக்கி தன்னிடம் கெஞ்சுபவனை கண்டு அதற்கு மேலும் மௌனம் சாதிக்க விரும்பாமல் கொஞ்சம் பேசணும் இப்படி உட்காருங்க என்று மெத்தையைக் காட்டினாள்.
இங்க வா பிரௌனி என் கூட உட்காரு என்று தன்னுடன் அணைத்து கொண்டு அமர அவனிடம் இருந்து பிரிந்தவள் அவனருகில் மெத்தையில் அமர அவளை பாவமாக பார்க்க பேசணும் அதுக்கு இதுதான் வசதி என்றவள் தான் இங்கு வந்த பிறகு நடந்ததை கூறினாள்.
குமரேசன் பெல்ட்டை எடுத்து அடிக்க சென்றதையும் பின் அதனை தான் தடுத்து அவரிடம் பேசியதையும் கூறியவள் அதற்கு அடுத்து நடந்ததையும் கூறினாள்.
அடடா அதுக்கு அப்புறம் வேற நிறைய நடந்திருக்கு.. வாங்க அடுத்து என்ன நடந்தது என்று நாமும் பார்ப்போம்.
என்னை தேடி என் புருஷன் வருவாரு நீ வாம்மா நாம நம் மாமா வீட்டுக்கு போவோம் என்று தன் தாயை அழைக்க அவள் சொல்வதை கேட்ட குமரேசன் பெருங்குரலெடுத்து சிரித்தார்.
எது உன்னை தேடி அந்த செவத்த பய வரப் போறானா.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. ஏதோ அந்த தர்மன் சொன்னதுக்காக உன்னை கல்யாணம் பண்ணியிருக்கலாம்.. உன்னை காலத்துக்கும் வச்சு வாழனும்னு அவனுக்கு அவசியம் இல்லை.
அதான் நல்லா விவரமா டிவோர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிருக்கான். அப்படி அவ்வளவு பெரிய உத்தமனா இருந்துருந்தா எதுக்கு அந்த ராத்திரி நேரத்துல எங்க போறேன்னு கூட சொல்லாம அவ்வளவு வேகமா போகணும்.
அவர் சத்தம் போடும் பொழுதே வள்ளி இவர்களை பார்த்தவள் தன் தாய் தந்தையை அழைத்து வந்திருந்தாள்.
இவன் இப்போ எதுக்கு வயசுக்கு வந்த பிள்ளையை வீட்டுக்குள்ள விடாம இப்படி பண்ணிட்டு இருக்கான் என்று தன் மனைவியிடம் கூறியவர் வள்ளியிடம் நீ போய் அவளை அழைச்சிட்டு வாத்தா நாம நம்ம வீட்டுக்கு போவோம் என்று கூற வள்ளி கயல் அருகில் செல்லவும் அதுவரை பொறுத்திருந்தவள் தன் மாமனை அவர்ப்பாட்டுக்கு பேசிக்கொண்டே போக காளியாக மாறியிருந்தாள்.
என் புருஷனை பேச உங்களுக்கு அருகதையே இல்ல.. இவ்ளோ நேரம் அப்பான்னு தான் சும்மா இருந்தேன்.. விட்டா நீங்க பாட்டுக்கு பேசிட்டே போவீங்களா.. ஆமா நான் தான் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டேன்.
இப்போ அதுக்கு என்ன..? அவருக்கு நான் பொருத்தமில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அதனால் தான் அதில் கையெழுத்து போட்டேன். நீங்க சொன்ன மாதிரி அவர் கிடையாது.. அவரா வந்து இதுல கையெழுத்து போடுன்னு சொல்லலை.. நானா தான் போட்டேன்..
அந்த ராத்திரியில் போனாருன்னு சொல்றீங்களே அவர் எங்க போனா உங்களுக்கென்ன அவர் தான் உங்களுக்கு பிடிக்காத பொண்ணோட மாப்பிள்ளையாச்சே.. உங்களுக்கு எதுக்கு புதுசா அக்கறை.
இனியொரு தரம் என் புருஷனை பற்றி நீங்க பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்கோங்க அவ்ளோதான் என்று விரல் நீட்டி எச்சரிக்க அவமானமாக உணர்ந்தவர் ஏய் சும்மா ஏதாவது பேசி ஒப்பேத்தாத அவன் அந்த ராத்திரி நேரத்துல போறான்னா ஏதாவது தொடுப்பு வச்சுருப்பான் என்று கேவலமாக கூற அதுவரை பொறுத்திருந்தவள் தன்னவனை தப்பாக கூறவும் அவரை அடிக்கவே பாய்ந்து விட்டாள்.
அவரை அடிக்க பாய அவளை பெண்கள் மூவரும் பிடித்து கொள்ள அவர்களிடமிருந்து திமிரியபடி என் புருஷனை பற்றி எனக்கு தெரியும் அவர் எங்கு போனா உங்களுக்கென்ன வந்துச்சு உங்களை போல ஒன்னும் பெத்த பொண்ணு கருப்பா இருக்குன்னு ஒதுக்கி வைக்கல என்று கத்தினாள்.
எல்லாரும் உங்களை போலன்னு நினைச்சுடீங்களா அவரை பற்றி பேச உங்களுக்கு தகுதியே இல்ல என் புருஷனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ஹான் என்று மூச்சு வாங்க கத்த ஏன் அவனை பற்றி தெரியாது நல்லா தெரியும்..
அவனை அவங்க அம்மாக்காரி தன்னந்தனியா விட்டுட்டு போனதும் தெரியும்.. அவன் ரோட்டுல பிச்சை எடுத்ததும் தெரியும்.. என்று அவளை காயப்படுத்தவே கூற சரியாக அவளை தாக்கியது.
அவளுக்கு நெஞ்சில் சுருக்கென்ற வலி.. என்ன பிச்சை எடுத்தானா.. தன்னவனா அந்த சிறிய வயதில் என்னன்ன கஷ்டங்களை அனுபவித்தானோ என்று தன்னவனுக்காக வருந்தியவளை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டனர்.
தன்னவனுக்கு உடனடியாக பேச வேண்டும் என்ற உந்துதல் வர தான் கொண்டு வந்த பையை பார்க்க அலைப்பேசியை அங்கேயே வைத்துவிட்டு வந்திருந்தாள்.
ச்சே என்று தலையில் அடித்துக் கொண்டவள் குணாவிடம் அவன் கைப்பேசியை வாங்கி போட போகவில்லை என்றதும் இந்த மாமாக்கு ஒழுங்கா ஒரு போன் கூட போக மாட்டேங்குது.
அதன் பிறகு அவன் வரவிற்காக காத்திருந்தவள் அவன் வந்ததும் அவன் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தானோ என்று நினைத்து அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
காந்தமென ஈர்க்கும்..
0 Comments