Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 24


மோகமுள் 24:

ஏன் அத்தான் இப்படி பண்றீங்க அந்த சார் தான் எப்பொழுதும் ஏதாவது தேவையில்லாத வேலை தான் பண்ணுவாருன்னு உங்களுக்கு தெரியும் தானே எதுக்கு இவ்வளவு கோவம் அடிதடி எல்லாம் அவர் தான் ரெளடி மாதிரி பிகேவ் பண்றாருன்னா நாமும் ஏன் அவர் லெவலுக்கு இறங்கி சண்டை போடனும் அது வெளிப்பார்வைக்கு நம்மை இன்னும் குறைத்து காட்டுமில்லையா என்று அறிவுறுத்தினாள்.

அவன் என்னை சீண்டிகிட்டே இருக்கான் மித்ரா நானும் எவ்வளவுதான் பொறுத்து போறது இவன் மீண்டும் மீண்டும் என்கிட்ட வந்து மோதுறதைப் பார்த்தா எனக்கு என்னவோ ஆக்சிடென்ட் நடந்ததுக்கும் இவனுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது அவன்னு மட்டும் எனக்கு தெரியட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு என் கையால தான் சாவு என்று கர்ஜிக்க அதனை கேட்டுக் கொண்டிருந்த மித்ராவும் அவன் சொன்ன விஷயத்தில் சிலையாகி போனாள்.

 ஒருவேளை அந்த ரகுவீர் தான் அத்தானோட ஆக்சிடென்ட்க்கு காரணமா என்று யோசிக்கவே அவளுக்கு உடல் எல்லாம் வேர்த்து விட்டது.

 அவள் உறைந்து போய் அமர்ந்திருந்ததை பார்த்த ஆதி மித்ரா என்னடி என்ன ஆச்சு அவளது கன்னத்தை தட்டி நினைவுக்கு கொண்டுவர அவன் முகத்தை தன் கையால் வருடி கண்கள் கலங்க அத்தான் வேண்டாம் இந்த சண்டை அடிதடியெல்லாம் எதுவும் வேண்டாம் நீங்க எனக்கு எப்பொழுதும் வேணும்.

அவன் கூட நமக்கு சண்டை எல்லாம் வேண்டாம் ப்ளீஸ் என்று ஆதியின் கையைப் பிடித்து கொண்டு கெஞ்ச ஹேய் மித்ரா இப்ப என்ன ஆச்சுன்னு இதுக்கு போய் அழுகுற ஒன்னும் இல்ல அவனால என்னை ஒன்னும் பண்ண முடியாது அன்னைக்கு கார்ல பிரேக் பிடிக்கல அதான் ஆக்சிடென்ட் ஆச்சு நான் சும்மா ஒரு சந்தேகம் இருக்குன்னு தான் சொன்னேன் அதுக்கு ஏன் இவ்ளோ பீல் பண்ற விடு சில் பேபி என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.

அவளை அணைத்தவனது உடலோ உள்ளுக்குள் கனன்ற கோபத்தில் நடுங்கியது அதனை உணர்ந்தவள் அத்தான் நீங்க இப்போ ஓகே தானே என்றாள் பரிவுடன்.

நீங்க இந்த பக்கம் வாங்க கார் ஓட்ட முடியாது இந்த நிலைமைல என்றாள் கனிவாக.

 அவள் சொல்வது தான் தனக்கும் சரியென்று படவே பக்கத்து இருக்கைக்கு தாவியவன் ஆமாம் நான் இப்போ இருக்கிற டென்ஷன்ல கார் ஓட்ட முடியாது நீயே ஓட்டு என்று கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

அவனை கண்டு வேதனையுற்றவள் அத்தான் வீட்டுக்கு போகவா என்று கேட்டாள்.

தன் மனதை அறிந்து செயல்படும் அவளை நினைத்து மனம் நெகிழ்ந்தவன் சரி என்று அவள் பக்கமாக சாய்ந்து அவள் தோளில் சாய்ந்து கொண்டான். 

வீட்டிற்கு வந்தும் அப்பொழுதும் எழாமல் கண்கள் மூடி இருந்தாலும் அவன் கருவிழி அங்குமிங்கும் அலைபாயுவதைக் கண்டு கொண்டவள் அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

மெதுவாக அவன் தலைமுடியை வருடிவிட்டவாறு அத்தான் வீடு வந்துருச்சு இறங்கலாமா என்று மென்மையாக கேட்க சட்டென்று எழுந்தவன் போலாம் மித்ரா என்று காரில் இருந்து இறங்கியவன் அங்கு இருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு சென்று விட்டான். 

அவன் செல்லும் வேகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்று யூகித்த சுமதி உள்ளே வந்த மித்ராவிடம் என்ன மித்துமா ஏதாவது பிரச்சனையா என்ன ஆச்சு என்று சரியாக யூகித்து கேட்க அவள் அங்கு நடந்த அனைத்தையும் கூறினாள்.

நீங்க ஏதும் கவலைப்படாதீங்க அத்தம்மா அத்தான் பார்த்துப்பாங்க எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் வார்த்தைகள் கூற உடனே ஊர்மிளா எப்படி சரியாகும் இன்னும் எங்க ஆதிக்கு என்னவெல்லாம் கேட்கணுமோ கடவுளே அவன் யாருக்கு என்ன பாவம் செய்தான் என்று உண்மையான வருத்தத்துடன் புலம்ப சுமதிக்கு கண்களில் ஆறென கண்ணீர் பெருகியது.

அத்தம்மா ப்ச் இப்போ எதுக்கு கண் கலங்குறீங்க ஒரு குழந்தை வந்தா எல்லாம் சரியாகிவிடும் நான் சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் நீங்க கவலையை விடுங்க என்று தேற்றினாள்.

கண்களைத் துடைத்து கொண்ட சுமதி நீங்க சாப்பிட்டு இருக்க மாட்டீங்க நீ போய் பிரஷ் ஆகுமா நான் போயிட்டு சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று மித்ராவை அனுப்பி வைத்தார்.

சரியென்று தங்கள் அறைக்கு வந்த மித்ரா கண்டதென்னவோ பால்கனியில் நின்று வானத்தை வெறுத்துக் கொண்டிருந்த ஆதியைத்தான்.

 அவன் அருகே சென்று கைகளைப் பிடிக்க அவளை நோக்கி திரும்பியவன் மித்ரா நான் உனக்கு வேண்டாம் என்றான் தீர்க்கமாக.

உடனே அவள் ஏதோ சொல்ல வர இல்ல மித்ரா நீ எது சொன்னாலும் என்னோட முடிவை நான் மாத்திக்க போறதா இல்ல இது சரிவராது நான் டிவோர்ஸ் கொடுக்கிறேன். நீ உன் வாழ்க்கையை பாரு அதுதான் எல்லாருக்கும் நல்லது. என் கூட இருந்தா உனக்கும் கஷ்டம் தான் என்னோட வலி என்னோடவே போகட்டும் நீ வாழ வேண்டிய பொண்ணு உன் வாழ்க்கையை நீ நிறைவா வாழனும். நீ என்கூட இருந்தா கண்டிப்பா அது நடக்காது என்று எந்த உணர்வையும் வெளி காட்டாமல் வானத்தை வெறித்தபடியே கூறினான்.

அத்தான் எனக்கு ஒரு மாதம் டைம் கொடுத்து இருக்கீங்க மறந்துட்டீங்களா 

ஏய் மித்ரா புரியாம பேசாதடி இன்னைக்கு அவன் பேசும் போது நீயும் அங்க தானே இருந்த அப்புறம் எப்படி உன்னால இப்படி பேச முடியுது எனக்காக பார்த்து உன் வாழ்க்கையை வீணாக்காத மித்ரா வேண்டாம் இதோட எல்லாமே நிறுத்திக்கலாம் ப்ளீஸ் என்று கெஞ்சினான். 

சரி அத்தான் நீங்க சொல்றதுக்கு நான் ஒத்துக்கிறேன் உங்க பாயிண்டுக்கே வரேன் ஆனா எனக்கு ஒரு மாசம் டைம் வேணும் நான் இங்கதான் இருப்பேன் அதுக்கப்புறம் நானே போயிடுவேன் என்று சொல்ல சுமதி உணவு எடுத்து வந்தவர் அதனை கேட்டு அதிர்ந்து நிற்க மித்ரா ஏதேர்ச்சையாகப் பார்க்க நேரிட அவரை பார்த்து கண்ணடித்தாள்.

அவரும் ஆதியை சமாதானம் செய்யத்தான் அப்படி சொல்கிறாள் அவனை விட்டு செல்ல மாட்டாள் என்று நினைத்தவர் உணவு தட்டை வைத்துவிட்டு சென்றுவிட்டார். 

அத்தான் நீங்க அப்புறமா யோசிங்க எனக்கு பசிக்குது வாங்க சாப்பிட போகலாம் என்று கைப்பிடித்து இழுக்க வேண்டாம் எனக்கு பசிக்கல என்று அதே கடினமான குரல்.

இப்ப எதுக்கு முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கீங்க நீங்க அப்புறமா முகத்தை திருப்பிக்கோங்க இப்ப என்கூட வந்து உட்காருங்க நீங்க சாப்பிட வேண்டாம் ஆனா எனக்கு பசிக்குது வாங்க என்று விடாப்பிடியாக அவனை இழுத்துக்கொண்டு அறைக்குள் வந்தாள்.

வந்தவன் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டான். 

இவள் உணவு தட்டை எடுத்துக் கொண்டு அவனிடம் வர எனக்கு சாப்பாடு வேண்டாம்னு சொன்னேன் உனக்கு காது கேட்கலையா மித்ரா என்று பொறிந்து தள்ள எனக்கு காது நல்லா தான் கேக்குது உங்களுக்கு யார் சாப்பாடு கொடுத்தா என்று சாதத்தை பிசைந்து கொண்டே அவனுக்கு பதில் கூறினாள்.

ஏதாவது கூட கூட பேசிக்கிட்டே இருக்காத மித்ரா எனக்கு இரிடேட் ஆகுது என்று கத்திய அவன் வாயில் உணவை திணித்தாள்.

என்னடி பண்ற வாயில் சாதத்தை வைத்துக் கொண்டே அவளை முறைத்தான்.

ஐயோ சோ க்யூட் அத்தான் சாப்பிட்டு தண்ணி குடிங்க ரொம்ப சூடா இருக்கீங்க என்று அவனுக்கு சாப்பாடு ஒரு வழியாக ஊட்டி முடித்தவள் தானும் உண்டு விட்டு அனைத்தையும் சுத்தப்படுத்திவிட்டு வந்தாள்.

கட்டிலில் சாய்வாக அமர அவள் கைபேசி அழைத்தது.

எடுத்து பார்க்க அவள் அம்மா தான் அழைத்தார்.

அம்மா தான் என்று அழைப்பை எடுக்க 

அம்மா வீட்டுக்கு போயிட்டீங்களா 

இப்பதான் போனீங்களா? 

ஓ சரி சரி அப்பா என்ன பண்றாரு 

இன்னைக்கு ஆபீஸ் போயிட்டு சீக்கிரமே வந்துட்டோம்மா டயர்டா இருந்துச்சு

இன்னைக்கா சரிமா நான் அவங்க கிட்ட கேட்டுட்டு அவங்களுக்கு எந்த கமிட்மெண்ட்ஸும் இல்லன்னா கூட்டிட்டு வரேன்மா என்று அழைப்பை துண்டித்தாள்.

என்ன என்பது போல் பார்த்த ஆதியிடம் மித்ரா அம்மா இன்னைக்கு ஃப்ரீயா இருந்தா வீட்டுக்கு ரெண்டு பேரையும் வர சொன்னாங்க என்று அவன் முகம் பார்க்க இதுக்கு மேல நான் ஆபீஸ் போகல சாயுங்காலம் நிரஞ்சன் ஊருக்கு கிளம்புறான் அவன் கிளம்பினதும் உங்க வீட்டுக்கு போகலாம் என்றவன் உங்க அத்தமாகிட்ட சொல்லிடு நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் என்று நன்றாக கால் நீட்டி படுத்துக் கொண்டான்.

சரி நான் போய் அத்தம்மாக்கிட்ட சொல்லிட்டு வரேன் என்று எழப்போக அவளை தடுத்து இழுத்து தன் பக்கத்தில் போட்டவன் அதெல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம் உனக்கு டயர்டா தானே இருக்கு தூங்கு என்று அவள் கையில் தலை வைத்து அவளை அணைத்துக் கொண்டு கண்களை மூடினான். 

ஆனால் அவனால் உறங்க முடியவில்லை.

அவன் உறங்கவில்லை என்று அவன் இப்படியும் அப்படியும் உருண்டு கொண்டே இருக்க அவனை இழுத்து தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டு அவன் கேசத்தை வருடியவாறு எதையும் நினைக்காமல் தூங்குங்க அத்தான் என்று வருடிக் கொண்டே குட்டிக் குட்டி முத்தங்கள் அவன் முகம் முழுக்க கொடுக்க அடுத்த ஐந்தாவது நிமிடம் உறங்கி விட்டான்.

இங்கு தன்னறையில் இருந்த ஆசிக்கு இருப்பு கொள்ளவில்லை ஒரு வேலை நிரு ஊருக்கு போயிட்டா என்ன பண்றது நோ நிரு என்னை விட்டுப் போகாதடி என்னால தாங்கிக்க முடியாது ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடி என்று மானசீகமாக அவளிடம் மன்னிப்பு வேண்டினான். 

என்ன நினைத்தானோ உடனே நிரு இருந்த அறைக்குள் சென்றான்.

அங்கு அவளோ உறங்கிக் கொண்டிருந்தாள் அவளை நெருங்கியவன் அவளது பின்புறமாக சென்று அணைத்தபடி படுத்துக் கொண்டான்.

அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 நிரு எனக்கு நீ மட்டும் தான் டி நீ எனக்கு வேண்டும் உன்னை யாருக்கும் நான் கொடுக்க மாட்டேன் நான் அப்படி செஞ்சிருக்க கூடாது சாரி சரியா இந்த மாமாவை இந்த ஒரு முறை மன்னிச்சிருடி என் தங்கம் என் பட்டு டி நீ என்று கொஞ்சி அவள் கழுத்தில் முத்தங்கள் பல பதித்தான்.

அவளை அணைத்துக் கொண்டே கண்ணயர்ந்து விட்டான்.

பிற்பகல் 3 மணி இருக்கவே நிரு தூக்கத்தில் இருந்து மெல்ல எழ முயற்சித்தாள்.

தன் இடையில் ஏதோ அழுத்தமாக உணரவும் கண்களை நன்றாக திறந்து பார்க்க வலிய கரம் ஒன்று அவளின் இடையே இறுக்கமாய் அணைத்திருந்தது.

சற்று பின்னால் திரும்பி பார்க்க ஆசீ தான் அவள் முதுகில் முகம் புதைத்து உறங்கவும் அவன் சீரான சுவாசத்தை கண்டு கொண்டவள் உறங்குகிறான் என்று உறுதி படுத்திக் கொண்டு காற்றில் ஆடும் அவன் சிகையை கோதி கொடுத்தவள் என்னை ரெண்டு வருஷம் பாடா படுத்தி எடுத்துட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி வந்து சாரி கேட்டா உடனே மன்னிச்சு ஏத்துக்கணுமா முடியவே முடியாது. எனக்கு வலிச்ச மாதிரி உனக்கும் வலிக்கட்டும் அப்பதான் இதுக்கு மேல இது மாதிரி எதுவும் செய்ய மாட்டே என்று அவன் மீசையை பிடித்து ஆட்ட தூக்கத்திலிருந்து அவன் அசையவும் அப்படியே கண்களை மூடி படுத்துக் கொண்டாள் தூங்குவது போல.

ஆசி கண் விழித்தவன் அவளை கண்டு பாப்பா லவ் யூ டி என்று நெற்றியில் முத்தம் வைக்க ஐ ஹேட் யூ கொஞ்சம் நீங்க எழுந்து போனா நான் டிரஸ் எடுத்து வைப்பேன் என்று கூற பாப்பா என்றவன் அவள் முறைக்கவும் சட்டென்று அவளை விட்டு எழுந்து கொண்டவன் தன் அறைக்கு சென்று விட்டான்.

அச்சச்சோ பிள்ளை கண்கலங்குதே ரொம்பதான் ஓவரா போறோமோ தனக்கு தானே யோசித்தவள் பின் இல்ல இல்ல கரெக்டா தான் யோசிக்கிறோம் என்றுவாறு தன் உடைகளை எடுத்து வைத்தாள்.

நான்கு மணி ஆகவே அனைவரும் ஹாலில் இருக்க நிரஞ்சன் இங்கிருந்தே ம்மா அந்த நாலு சாரீ எடுத்து வைக்கிறதுக்கு இவ்வளவு நேரமா சீக்கிரம் வாங்க என்று அவசரப்படுத்த ஊர்மிளா வேண்டா வெறுப்பாக இருடா வரேன் அவசரத்துக்கு பொறந்தவன் கத்திகிட்டே இருக்கான் என்று புலம்பியபடியே தன் உடைகள் அடங்கிய பெட்டியை இழுத்துக் கொண்டு வந்தார். 

டேய் நிரஞ்சன் என்று பத்தாவது முறையாக மகனிடம் கெஞ்சினார் முடியவே முடியாது என்று முழுதாக மறுத்தான்.

டேய் ஒரு பத்து நாள் இருந்துட்டு வரேன் டா 

வேண்டாம்மா கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னை கூட்டிட்டு வரேன் இப்போ கிளம்பலாம் என்றவன் நிருவிடம் திரும்பி ந கிளம்பலாமா என்கவும் நான் எப்பவோ ரெடி என்று ஆளுக்கு முந்திக் கொண்டு போக ஆசியோ வேணும்னே பண்றா இவ என்று உள்ளுக்குள் கருவினான்.

எதையும் மறக்கல தானே எல்லாத்தையும் எடுத்துகிட்டியா என்று ஆசியைப் பார்த்தவாறே கேட்டான்.

எல்லாம் எடுத்து வச்சுட்டேன் எனக்கானது இங்கே எதுவுமே இல்லை என்றாள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்.

மூவரும் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர். 

மித்து எங்க ஆதி மாமாவை பத்திரமா பாத்துக்கோ நான் கிளம்புறேன் என்று அவளை அணைத்து விடுவித்தாள். 

அவர்கள் மூவரும் சென்ற பின்னர் ஆதியும் மித்ராவும் கிளம்பி வந்தவர்கள் அத்தம்மா நாங்க என் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துடறோம் இன்னைக்கு தான் இவங்க ஃப்ரீயா இருக்காங்க அதான் போயிட்டு வந்துடலாம்னு பார்த்தோம்.

அதுக்கென்ன பார்த்து போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார் இன்னும் பாராமுகம் தான் ஆதி சுமதியிடம்.பேசும் நாளும் வெகு விரைவில்.

மோகமுள் தீண்டும்…

படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க டார்லீஸ் அடுத்த யூடி வருது உடனே 



 

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments