Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 25

 
மோகமுள்-25:

அந்த மாலை நேரம் சுமதியிடம் மித்ரா தன் தாய் வீட்டிற்கு போயிட்டு வருகிறோம் என்று சொல்ல ஒரு நிமிஷம் இருங்கடா இதோ வர்றேன் என்று தன் அறைக்குள் சென்றார்.

தங்க நிறத்தில் ஒரு பட்டுப் புடவையையும் அதற்கேற்றாற் போல சில எமரால்ட் நகைகளையும் எடுத்து வந்தவர் மித்ராவிடம் கொடுத்து அணிந்து வருமாறு பணித்தார்.

அத்தம்மா இதெல்லாம் எதுக்கு இதுவே நல்லாதானே இருக்கு என்று வாங்க தயங்க நீ எது போட்டாலும் அழகாதான்டா இருப்ப ஆனால் கல்யாணம் ஆகி இப்போ தானே முதல் முறை அம்மா வீட்டுக்கு போற அதனால இதெல்லாம் போட்டுட்டு போ அப்போதான் அவர்களுக்கு மனசு நிறையும் என்றவர் அவள் கைகளில் திணித்தார்.

சற்று நேரத்தில் கிளம்பி வந்தவளைப் பார்த்து ஆதிக்கு அவளை விட்டுத் தன் கண்களை அகற்ற முடியவில்லை அத்தனை அழகாக இருந்தாள்.

தங்க நிறப் புடவை அணிந்து அதற்கேற்றாற்போல பச்சை கல் பதித்த அணிகலன்கள் அணிந்து அந்த தேவலோக கன்னிகைகளுக்கு போட்டியாக அன்ன நடையிட்டு இறங்கி வந்தவளைக் கண்டவனுக்கு தன் பார்வையைக் கொஞ்சம் கூட அகற்றிக் கொள்ள மனமில்லை போலும்.

மித்ராவோ அவன் பார்வையைக் கண்டு செங்கொழுந்தாகிப் போனாள்.

அவனை நெருங்கியவள் ஐயோ அத்தான் என்ன எல்லாரும் இருக்கும் பொழுது இப்படி பார்த்து வைக்கிறீங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க என்று கிசுக்கிசுத்தாள்.

அவள் இடையைப் பற்றி தன்னோடு சேர்த்து இறுக்க ஐயோ அத்தான் என்ன பண்றீங்க என்னோட மானமே போகுது என்று பதற கொஞ்சம் திரும்பி பாரு யாரு இங்க இருக்காங்க என்று கூற ஹாலில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

சரி சரி வாங்க அத்தான் நேரமா போனா சீக்கிரம் வந்துருலாம் என்று அவனை அழைக்க அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

அம்மா நாங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டோம் அங்க தான் வந்துட்டு இருக்கோம் இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்துருவோம்.

சரிமா பார்த்து வாங்க மாப்பிள்ளைக்கு என்னம்மா பிடிக்கும் கேட்டு சொல்லு நைட் இங்கேயே சாப்பிட்டு போங்க என்கவும் ஸ்பீக்கரில் போட்டு தான் பேசிக் கொண்டிருந்தாள் அதனை கேட்டுக் கொண்டிருந்தவன் இல்ல மித்ரா லைட்டா போதும் எதுவும் ஹெவியா செய்ய வேண்டாம்னு சொல்லு என்று வண்டியை ஓட்டிக்கொண்டே சைகை செய்தான்.

அம்மா நைட் அவங்க லைட்டா தான் சாப்பிடுவாங்க ரொம்ப எதுவும் வேண்டாமா சரியா.

சரிம்மா பார்த்து பொறுமையா வாங்க

ஓகே ம்மா நான் வைக்கிறேன் என்று போனை வைத்தவள் கார் கண்ணாடியை இறக்கி விட்டு அந்த மாலை நேர ஈரக் காற்றை அனுபவித்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர மித்ரா உங்க வீட்ல இப்பவே இன்னைக்கு சொல்லிடலாம் இது சரிப்பட்டு வராதுன்னு எதுக்கு அவங்களும் வீணா ஆசையை வளர்த்துக்கிட்டு இருக்கணும் நாம இப்பவே சொல்லி விடுவது நல்லது இல்லையா என்று மீண்டும் திரும்ப அதே பல்லவியை பாட கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க என்றாள்.

எதுக்கு என்றான் கேள்வியாக.

நிறுத்துங்க சொல்றேன் என்றதும் அவன் வாகனத்தை நிறுத்தவும் கதவை திறந்து கொண்டு அவள் பாட்டிற்கு இறங்கி வந்த வழியே நடக்க ஆரம்பித்தாள்.

அவள் செல்வதை பார்த்து தானும் இறங்கியவன் ஏய் மித்ரா நில்லுடி என்று அவன் சொல்ல சொல்ல அவள் காதில் விழுந்தது போலவே இல்லை அவள் பாட்டிற்கு நிற்காமல் சென்று கொண்டே இருக்க வேக எட்டுக்கள் வைத்து அவளை நெருங்கியவன் என்னடி கூப்பிட கூப்பிட போய்கிட்டே இருக்க இப்ப எங்க போற வா வந்து காரில் ஏறு என்ன ஆச்சு என்று வினவ நான் உங்க கூட வரல நான் வீட்டுக்கு போறேன் விடுங்க எங்க அம்மா வீட்டுக்கு ஒன்னும் போக வேண்டாம் என்றாள் பிடிவாதமாக.

என்னடி ஆச்சு இப்போ எதுக்கு போக வேண்டாம்னு சொல்ற என்றான் ஒன்றும் புரியாமல்.

பின்ன என்ன அவங்க இப்போதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க அது உங்களுக்கு பொறுக்கலையா அவங்க கிட்ட போய் நாங்க பிரிய போறோம்னு சொல்றேன்னு சொல்றீங்க நான் தான் ஒரு மாசம் டைம் கேட்டு இருக்கேன்ல உங்ககிட்ட அதுவரைக்கும் உங்களால் சும்மா இருக்க முடியாதா நீங்களும் நிம்மதி இல்லாம என்னையும் நிம்மதியா இருக்க விட மாட்டேங்கறீங்க நான் தான் சொன்னேன் இல்ல ஒரு மாசம் டைம் தாங்கன்னு அப்போ மண்டைய மண்டைய ஆட்டிட்டு இப்ப திரும்ப வேதாளம் முருங்க மரம் ஏறுற கதையால இருக்கு உங்க கதை.

நீங்க அங்க போய் எல்லாத்தையும் சொல்றதுக்கு அங்க போகாமலே இருக்கலாம் அவங்களாச்சும் நிம்மதியா இருக்கட்டும் நான் சமாளிச்சுக்கிறேன் வீட்டுக்கு போகலாம் வாங்க என்றாள் காட்டமாக.

சரிடி இப்ப எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் வருது வா இனிமே நான் அதை பற்றி பேசவே இல்ல போதுமா வா அவங்க நமக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க வாடி என்று இழுத்தான் அவளை.

அவள் அப்படியே பிடிவாதமாக நிற்க ஏய் மித்துமா நமக்காக காத்திட்டு இருப்பாங்கன்னு தானே சொல்றேன் எதுக்கு இவ்வளவு பிடிவாதம் நான் தான் இனிமே அதை பற்றி பேசலன்னு சொல்றேன்ல நான் இனிமேல் வாயை திறக்கல போதுமா என்கவும் சரி என்று ஒரு வழியாக மலையிறங்கினாள்.

காரின் ஹாரன் சத்தம் கேட்டதுமே தாமோதரன் உடனே வெளியே வந்து விட்டார் வாசலிலேயே காத்திருப்பார் போலும்.

ஆதியும் மித்ராவும் காரில் இருந்து இறங்குவதை பார்த்தவருக்கும் பரமத் திருப்தி.

தன் மகள் பட்டு சேலை உடுத்தி நகைகள் அணிந்து முகத்தில் சிரிப்பு ததும்ப இறங்கவும் அவரது மனம் குளிர்ந்து விட்டது. 

வாங்க வாங்க மாப்பிள்ளை என்று ஆதியை உள்ளே அழைத்து செல்ல அப்பா நானும் இங்க தான் இருக்கேன் அது என்ன அவர மட்டும் கூட்டிட்டு போறீங்க என்று செல்ல சண்டை பிடிக்க வாடா வாடா இது உன் வீடு நான் இதுல அழைக்க வேற செய்யணுமா என்று மகளை சமாதானம் செய்தவர் உள்ள வாங்க மாப்பிள்ளை உள்ள வாமா என்று அழைத்து சென்றார்.

இவர்களின் சத்தம் கேட்டு வேர்த்து விறுவிறுத்து சமையலறையில் இருந்து பிரேமா வந்தார்.

தோசை இட்லி சப்பாத்தி என்று அங்கு ஒரு மினி டிபன் கடையே இருந்தது அனைத்தையும் செய்து வைத்திருந்தார்.

அதனை பார்த்த ஆதி மித்ராவிடம் என்னடி இது இவ்வளவு செஞ்சு வெச்சி இருக்காங்க என்று கண்களாலே கேட்க அவள் நமட்டுச் சிரிப்புடன் திரும்பிக்கொண்டாள்.

என்ன மாப்பிள்ளை இதை பார்த்து பயந்துடாதீங்க உங்களால முடிஞ்ச அளவுக்கு சாப்பிடுங்க ஒன்னும் பிரச்சனை இல்ல சரி முதல் முதல் வரீங்களே அப்படின்னு உங்களுக்கு என்ன பிடிக்குமோ பிடிக்காதுன்னு தெரியாம எல்லாத்தையும் செஞ்சு வச்சுட்டேன் என்று பிரேமா கூறினார். 

பின்பு அனைவரும் சாப்பிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சிவகாமி வந்தாள்.

இவர்கள் இருவரையும் பார்த்து முதலில் திகைத்தவர் பின்னர் பிரேமாவிடம் பக்கத்து வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டு மித்ராவிடம் மட்டும் நல்லா இருக்கியா மித்ரா என்று கேட்டவர் சம்பிரதாயத்திற்கு கேட்டாச்சு என்பது போல் சென்று விட்டார்.

அவர் வந்ததுமே ஆதியின் முகமாற்றத்தை கண்டுக் கொண்ட பிரேமா, அவங்க வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு மாப்பிள்ளை மித்ரா சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது இங்க தான் இருந்தாங்க.

அண்ணன் தம்பி ஒண்ணா இருக்கக் கூடாதுன்னு ஜாதகத்துல சொன்னதனால அவங்க ரெண்டு தெரு தள்ளி இருக்காங்கப்பா.

இங்க பக்கத்துல அவங்க வீடு ஒன்னு இருக்கு அது வாடகைக்கு விட்டிருந்தாங்க ஏற்கனவே குடி இருந்தவங்க காலி பண்ணினதும் நாளைக்கு யாரோ இங்க புதுசா குடி வராங்களாம் அதான் வீடு சுத்தம் செய்ய சாவி வாங்கிட்டு போறாங்க வேற ஒன்னும் இல்ல என்று விளக்கம் கூறினார்.

சிவகாமி வெளியே நின்ற தன் கணவர் கணேசனிடம் மித்ரா வந்திருக்காங்க அந்த தம்பியும் தான் வந்திருக்காரு அப்படியே கல் வச்ச நகைதான் பட்டு சேலை தான் அப்படியே ஜொலிக்கிறாங்க நல்ல கவனிப்பு போல பொறாமை எட்டிப் பார்த்ததோ என்னவோ.

நீ மித்ரா கிட்ட பேசினியா என்று கேட்டார்.

ஹான் பேசினேன் நல்லா இருக்கியான்னு கேட்டேன்.

சரி சீக்கிரம் வாங்க சுத்தம் பண்ணிட்டு வீட்டுக்கு போவோம் என்று அதற்கு மேல் அவர் எதுவும் பேசவில்லை.

இதை கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கு நெஞ்சில் ஏதோ முள் தைத்தது போல இருந்தது.

சிவகாமி அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இங்கு பிரேமா மித்ராவை தனியாக பேச எண்ணி சமையலறையில் இருந்து கூப்பிட்டார்.

மித்ரா வந்ததும் என்னடி சந்தோஷமா தானே இருக்கீங்க எல்லாம் ஓகேவா எனக்கு வேற பக்கு பக்குனு இருக்கு என்னோட கஷ்டம் உனக்கு எங்கேயாவது புரியுதா நீங்க ரெண்டு பேரும் நல்லாருக்கணும் அதுதான் எங்களுக்கு வேணும் சொல்றது புரியுதா.

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நாங்க நல்லா சந்தோஷமா தான் இருக்கோம்.

சரி சீக்கிரம் குழந்தைக்கு ஏதாவது ஒரு வழியை பாருங்க அப்பதான் ஒரு பிடிப்பு வரும் என்று பெற்ற தாயாக எடுத்துரைத்தார்.

தாமோதரன் ஆதியிடம் தம்பி கல்யாணம் தான் எதிர்ப்பாராத சூழலில் நடந்து முடிஞ்சிடுச்சு.

மித்ராவோட கல்யாணத்துக்கு நாங்க கொஞ்சம் சேர்த்து வச்சிருந்தோம்.நீங்க வேற ஏதாவது எதிர்பார்த்தாலும் சொல்லுங்க அதை செஞ்சிடலாம் என்று கூற மித்ரா அதனை கேட்டபடியே சமையலறையில் இருந்து வந்தாள்.

அவளை கண்டு என்னடி இதெல்லாம் என்று அவளை அருகே அழைத்தான் எனக்கு தெரியாதுப்பா என்று சைகையில் சொல்லி எஸ் ஆக பார்க்க மாமா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று உடனே மறுக்க நீங்க வேண்டாம்னு சொல்றது உங்க பெருந்தன்மையா இருக்கலாம் மாப்பிள்ளை நாங்க எங்க பொண்ணுக்கு செய்யறதுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

சரி மாப்பிள்ளை நாங்க சம்மந்தி கிட்ட பேசிட்டு என்னன்னு சொல்றோம் என்று அவர் கூற பிரேமா தாலி பிரிச்சு கோர்க்கல இன்னும் அதை பற்றியும் பேசிட்டு சொல்றோம் மாப்பிள்ளை நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன் என்று சகஜமாக பேசிக் கொண்டிருக்க மித்துமா இன்னைக்கு இங்க தங்கிட்டு போங்கடா என்று கூற ஆதியோ ஐயோ என்ற ரேஞ்சில் அமர்ந்திருந்ததை பார்த்த மித்ரா இன்னொரு நாள் வந்து தங்குறோம்பா இன்னைக்கு நைட்டு ஒரு ஃபாரின் கிளைண்ட் கூட ஒரு பிசினஸ் கால் இருக்குன்னு சொன்னாங்க அது கொஞ்சம் முக்கியமான கால் ப்பா அது இல்லன்னா கூட இங்க இன்னைக்கு தங்கிடலாம் அதான் பார்க்கிறேன் என்று சமாளித்தாள் ஒரு வழியாக.

வேணும்னா இப்படி பண்ணலாம் நான் இங்க இருக்கேன் அவங்க மட்டும் போகட்டும் என்கவும் இல்ல வேண்டாம் என்று கத்தியது வேறு யாராக இருக்க முடியும் நம்ம ஆதி தான்.

அவள் நான் இங்கு இருக்கேன் என்றதும் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து கூற பிரேமா வாய் திறக்க முதலே முந்திக் கொண்டான் ஆதி..

ஐயோ மானம் போச்சே ஆதி என்று சங்கடமாக நெளிந்தான்.

இல்ல அந்த மீட்டிங்கு தேவையான பைல் மித்ராவுக்கு தான் தெரியும்.எங்க வச்சிருக்கான்னு அவளுக்கு தான் தெரியும் அதனாலதான் என்று சமாளித்தான்.

அது பொய் என்று அங்கிருந்து அனைவருக்கும் தெரியும் எப்படியும் நல்லா இருந்தா சரிதான் என்று நினைத்துக் கொண்டனர் மித்ராவின் பெற்றோர்.

சரி மாமா நாங்க கிளம்புறோம் என்று ஆதி எழுந்து கொள்ள சரி நாங்க வரோம் அத்தை என்று விடை பெற மித்ராவும் தன் பங்கிற்கு தன் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். 

இருவரும் காரை நெருங்கியதும் மித்ராவிற்கு கார்க்கதவை திறந்து விட்டு நின்று கொண்டிருந்தவன் அவள் அருகில் வந்ததும் இங்கேயே இருக்க போறேன்னு சொல்ற என்று இடுப்பில் கிள்ளி வைத்தான்.

அவள் ஜெர்க்காகி நின்றதும் இவன் ஒன்னும் தெரியாதது போல உட்கார் மித்ரா என்றான் சிரிப்பை அடக்கியபடி.

இது அனைத்தும் நந்தினி கண்ணில் விழுந்து தொலைத்தது.

இருவரையும் கண்டு நந்தினி வயிறு பற்றி கொண்டது அது நான் இருக்க வேண்டிய இடம் இவள் எப்படி இருக்கலாம் ஏதோ மித்ரா தான் அவள் வாழ வேண்டிய வாழ்க்கையை அபகரித்தது போல எண்ணம் கொண்டாள்.

இவள் தான் வேண்டாம் என்று தூக்கிப் போட்டுவிட்டு வந்ததை மறந்து விட்டாள் போல.

ஏதாவது பண்ணி ஆகணும் அது நான் வாழ வேண்டிய வாழ்க்கை நான் அதை அடைந்தே தீருவேன் மித்ராவின் முகத்தில் இருந்த சிரிப்பும் அவளுக்கு கதவு திறந்து விட்ட ஆதியைப் பார்க்க பார்க்க நோ எனக்கு வேணும் என்று மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டாள்.

என் கை விட்டுப் போன வாழ்க்கையை அடைந்தே தீருவேன் என்று..

மோகமுள் தீண்டும் ..


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments