Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 21

 


மோகமுள் - 21:

கோபத்தில் இன்னும் தீரனுக்கு கைகள் நடுங்கி கொண்டு இருந்தது.
 
அவன் இதழ்களோ அகராதியில் இல்லாத கெட்ட வார்த்தைகளை வைத்து வசை பாடி கொண்டிருந்தது.

சுமதி தீரனை அழைத்து ஒரு தாம்புலத்தை அவன் கையில் கொடுத்தார். அதில் அவனுக்கும் மித்ராவிற்கும் மாற்றுடை இருந்தது.

கண்ணா ரெண்டு பேரும் போய் டிரஸ் போட்டுக்கிட்டு வாங்கப்பா என்று அனுப்பி வைத்தார்.

அவன் அப்படியே நிற்க மித்ரா தாம்புலத்தை கையில் வாங்கியவள் ஆதியை கைப்பிடித்து அவர்கள் காட்டிய அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அறைக்குள் வந்தும் அவன் என்னவோ போலிருக்க கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவனிடம் வந்தவள் அத்தான் என்னாச்சு இப்போ ஒன்னும் ஆகலல்ல அப்புறம் எதுக்கு இப்படி இருக்கீங்க.. இங்க பாருங்க என்று தன்னை நோக்கி முகத்தை நிமிர்த்த அவள் என்ன என்று உணரும் முன்பே இடை நொறுங்க இழுத்து அணைத்திருந்தான்.

சிறிது நேரம் அவனை தானும் அமைதியாக அணைத்திருந்தவள் அத்தான் ஒன்னும் ஆகல இல்ல இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க விடுங்க அதான் எதுவும் நடக்கவில்லை ஏதாவது நடக்கும் முன்னாடி நீங்க வந்துட்டீங்களே அப்புறம் என்ன என்று கேட்டவள் ஆனா இந்த மித்ராவுக்காக இப்படி இறங்கி சண்டை போடுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல சோ ஸ்வீட் தீரா என்று கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.

தெரியலடி ஆனா எனக்கு ஒரு செகண்ட் பதறிடுச்சு என்று மீண்டும் அவளை அணைத்துக் கொள்ள சரி சரி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே கட்டிப்புடிச்சிட்டு நிக்க போறீங்க சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு போங்க எல்லாரும் வெளிய நிக்கிறாங்க என்று அவனை உந்த அப்போ வா நீயும் மாத்து என்று குசும்பு பண்ண இந்த லொள்ளு தானே அத்தான் வேணாங்கறது நீங்க முதல்ல மாத்திட்டு போங்க அப்புறம் நான் மாற்றிக்கொண்டு வருவேன் சரியா என் தங்கப்பிள்ளை தானே என்று தாஜா பண்ண

இல்ல நான் போக மாட்டேன் என்று முறுக்கினான்.

என் வைரம் தானே புஜ்ஜு குட்டி மாத்துடா என்று அவன் வலது பக்க தொடையில் கை வைக்க அச்சோ என்னடி பண்ற என்று தீரனுக்கு குரல் கிளுகிளுப்பாக வர அத்தான் சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு போனா உங்களுக்கு நல்லது இல்லன்னா என்று கண்களை உருட்டிக் கொண்டே அவனை மிரட்ட ஐயோ கையை எடுடி எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று உள்ளே சென்ற குரலில் கூறினான்.

மோகம் தாறுமாறாக ஏறியது பல்லை கடித்துக் கொண்டு பெறுமை காத்தான்.

அப்போ சில்மிஷம் பண்ணாம நல்ல பிள்ளையா டிரஸ் மாத்திட்டு கிளம்புங்க இல்லனா என்ன நடக்கும் என்று பார்க்கிறீர்களா என்று அவள் கையை மேலே ஏற்ற ஆஹ் கண்கள் சொருக முச்சை நன்றாக இழுத்து விட்டவன் என்னடி மித்துமா இப்படி எல்லாம் பண்ற என்று திணறினான் தலைக்கேறிய மோகத்தில்.

ஆஹ் என்னவோ பண்ணுது விடு டி என்று நெளிந்து கொண்டே அவள் கையை தட்டி விட்டான்.

அவள் கை வைத்ததற்கே அடி வயிறு தடத்தடக்க ஆதி உணர்ச்சி பிழம்பாக மாறி இருந்தான்.

தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் நீ வெளியே போ டி அப்போ தான் மாத்துவேன் என்கவும் 
அதெல்லாம் முடியாது நீங்க என் முன்னாடியே மாத்துங்க எல்லாம் பார்க்க போறது தானே என்று சட்டமாக கைகளை கட்டிக் கொண்டவளைக் கண்டு அவன் தான் தலையில் அடித்து கொள்ள வேண்டியதாகி போனது.

என்னடி இப்படி பண்ற என்று கிறங்கிய படி கூற அவள் நகருவதாய் தெரியவில்லை.

சற்று நேரம் பொறுத்து பார்த்தவன் தன்னை கண்களை அகற்றாமல் நின்றவளைக் கண்டு ஐயோ என்ன டி இப்படி பார்த்து வைக்கிற உன் கோலி குண்டு கண்ணை கொஞ்சம் மூடு டி உன் பார்வை என்னை என்னவோ பண்ணுது.

என்ன பண்ணுது அத்தான்

எனை வாட்டுது தாக்குது சூடேற்றுது நீ போடி என்று ராகம் இழுக்க முடியாது என்றவள் சட்டென்று அவனை நெருங்கி அவன் பேண்டில் கையை வைக்க அதிர்ந்தவன் அட போடி அடி மடியிலேயே கை வைக்கிறதுனா இதுதானா எம்மா தாயே ஆள விடு என்று திரும்பி நின்றவன் சட்டென்று தாம்புலத்தில் இருந்த வேட்டியை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டவன் உள்ளுக்குள் கையை விட்டு பேண்டை கழட்டி போட்டு விட்டு திரும்பினான்.

அதுவரை கண்களை மூடியிருந்தவள் அவன் திரும்பும் அரவம் கேட்கவும் என்ன அத்தான் நீங்களே அதுக்குள்ள வேட்டியை கட்டிக்கிட்டீங்க நான் கட்டிவிடலாம்னு இருந்தேன் என்று அவனை நெருங்கி அவனது சட்டை பொத்தானில் கைவைக்க ஏதே நீ கட்டிவிடுறியா என்று அலறினான்.

ஆமா அத்தான் நீங்க மட்டும் காலையில புடவை கட்டி விடுறேன்னு சொன்னீங்கள்ள நானும் பதிலுக்கு செய்யணும் தானே என்கவும் போடீங்க 
இங்க நின்றால் என் கற்புக்கு உத்தரவாதம் இல்லை போல போடி நான் வெளியே போறேன் என்று ஓட பார்த்தவனை பிடித்தவள் இப்போ ஓகே தானே அத்தான் கோபம் போயிடுச்சா என்று கன்னம் கிள்ள அவள் நெற்றியில் செல்லமாக முட்டி முத்தம் பதித்தவன் சீக்கரம் புடவையைக் கட்டிக்கிட்டு வா நான் வெளியே நிற்கிறேன் என்று வெளியில் சென்று கதவருகில் நின்று கொண்டான். 

சற்று நேரத்தில் என்னன்னவோ செய்து நார்மல் மோடிற்கு கொண்டு வந்திருந்தாள்.

மித்ராவும் சிறிது நேரத்தில் உடையை மாற்றிக் கொண்டு வர இருவரும் உள்ளே செல்ல பூஜை இனிதே ஆரம்பித்தது. செம்மலையப்பர் கம்பீரமாக வீற்றிருக்க அருகில் கருப்பசாமி கையில் அரிவாளுடன் இருக்க கீழே படையல் அனைத்தும் இருந்தது.

பூஜை சிறப்பாக நடந்து முடியவே இருவரையும் அழைத்த சுமதி ஐயர் கொடுத்த மாலையை இருவரின் கைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னார். இருவரும் மாலையை மாற்றிக் கொண்டதும் ஐயர் பெரியவங்க காலில் விழுந்து கும்பிட்டுக்கோங்க என்று கூறினார்.

இருவரும் சுமதி சக்கரவர்த்தி தம்பதியினர் காலில் விழுந்து வணங்க அட்சதை தூவி வாழ்த்த பின்னர் மித்ராவின் பெற்றோர் காலில் விழுந்து வணங்க பதினாறு செல்வமும் பெற்று நீண்ட காலம் வாழனும்பா நல்லாருங்க என்று ஆதியை எழுப்பி தன்னுடன் அணைத்துக் 
கொண்டார் மித்ராவின் தந்தை.

தந்தை தீரனை அணைத்திருந்ததைக் கண்டு என் அப்பா எனக்கு மட்டும் தான் அத்தான் நகருங்க என்று தீரனை விலக்கி தன் தந்தையை அணைத்து கொண்டு அப்பா சாரிப்பா மன்னிச்சிருங்க பா எனக்கு அந்த நேரத்தில என்ன பண்றதுன்னு தெரியல..

அந்த நிலைமையில் சாரை பார்த்ததும் என்னால எப்படி ப்பா சும்மா இருக்க முடியும் என்று கண்ணீர் கண்களோடு தன் தந்தையைப் பார்த்தவள் நடந்த சம்பவத்தை நினைத்த மாத்திரத்தில் தீரனுக்கு உடல் இறுகியது.

அதனை புரிந்து கொண்ட மித்ராவின் தாய் ஏய் மித்ரா இப்போ எதுக்கு கோயில்ல கண்ணை கசக்கிட்டு இருக்க என்று அதட்டவும் மித்ரா தன் தாயைப் பார்க்க அவரோ தீரனை நோக்கியபடி கண்ணை காட்டினார்.

இங்கு நடத்ததை பார்த்துக் கொண்டிருந்த ஊர்மிளா மனதிற்குள் பணம் பத்தும் செய்யும் என்னமா சீன் போடுதுங்க நல்லா எங்க ஆதியை வளைச்சுப் போட்டுட்டா என் மாயம் மந்திரம் செஞ்சாலோ இவளை ஏதாவது சொன்னா அவனுக்கு அப்படியே பொத்துக்கிட்டு வருது என்று புலம்பித் தள்ளினார்.

அங்கிருந்து நகர முயன்றவனை விடாமல் பிடித்தவள் அத்தான் அங்க பாருங்க ஐஸ்கிரீம் வண்டி வாங்க வாங்க வாங்கி கொடுங்க என்று தீரனை இழுக்க ஏய் இன்னும் காலை சாப்பாடே யாரும் சாப்பிடல முதல்ல மாப்பிள்ளை சாப்பிடட்டும் ஐஸ்கிரீம் எல்லாம் அப்புறம் சாப்பிடலாம் என்று மித்ராவின் தாய் அதட்டினார்.

அவளுக்கு அப்படியே முகம் சுருங்கி போக நீங்க எல்லாம் ரெடியா எடுத்து வைங்க அத்தை நாங்க இப்போ வரோம் என்று தீரன் மித்ராவை அழைத்துக் கொண்டு நகர ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க மாப்பிள்ளை என்கவும் நீ போம்மா அங்குட்டு என்று தன் தாயை விரட்ட அதிகமா சாப்பிடாத அப்புறம் தலைவலி தான் வரும் என்று விட்டு பெரியவர்கள் உள்ளே செல்ல சிறியவர்கள் ஐவரும் ஐஸ்கிரீம் வண்டியை நோக்கி சென்றனர்.

அண்ணா நாலு சாக்லேட் ஐஸ்கிரீம் ஐந்து வெண்ணிலா ஐஸ்கிரீம் என்று கூற ஏய் மித்ரா நாம ஐந்து பேரு தான இருக்கோம் அதற்கு எதுக்கு இவ்வளவு வாங்குற என்கவும்
என்ன அத்தான் ஐஸ்கிரீம்ல கஞ்சத்தனம் எல்லாம் பார்க்கக் கூடாது. இதெல்லாம் உங்களுக்கு இல்ல எனக்கு மட்டும் தான் நீங்க உங்களுக்கு வாங்கிக்கோங்க என்கவும் அதிர்ந்தான்.

என்னடி இதெல்லாம் உனக்கா என்று அதிர்ந்தான்.

ஆமாம் அத்தான் இதுவே கம்மி தான் தெரியுமா இதுவே அதிகம் சாப்பிட்டு சாப்பாடு சாப்பிட முடியலன்னா என்ன பண்றது என் அம்மா வேற இருக்காங்க திட்டுவாங்க அதான் கம்மியாக சொல்லிருக்கேன் என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒலிம்பிக்கில் ஒரு பாயிண்டில் தங்கத்தை தவற விட்டது போல முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

அவள் கூறியதைக் கண்டு மற்ற மூவருக்கும் பாப்பாடா இது என்று ஒற்றே சிரிப்பு தான்.

கடைக்காரரோ மூன்று ஐஸ்கிரீம் தான் இருக்கு என்கவும் என்ன அண்ணா இவ்வளவு கம்மியா வச்சிருக்கீங்க ஐஸ்கிரீம் எப்பொழுதும் ஸ்டாக் வச்சிக்கணும் அண்ணா என்ன மாதிரி நாலு கஸ்டமர் வந்தா உங்களுக்கு தானே லாஸ் என்று கிளாஸ் எடுத்தவள் அவர் மூன்று ஐஸ்கிரீமை நீட்டவும் வாங்கிக் கொண்டவள் ஆண்கள் மூவரையும் பார்த்து நீங்க எல்லாரும் பெரிய பசங்க அதனால உங்களுக்கெல்லாம் ஐஸ்கிரீம் பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் அதனால தான் அந்த கடைக்காரரை அம்மா விடுறேன் இல்லனா என்று நிறுத்த 

இல்லனா என்ன பண்ணியிருப்ப என்று நக்கலாக தீரன் வினவ அவரை உண்டில்லைன்னு ஆக்கிருக்க மாட்டேன் என்றவளின் பேச்சு தான் இங்கிருந்தது கைகளோ ஐஸ்கிரீம் டப்பாவை திறப்பதில் தான் ஆர்வமாக இருந்தது.

நிரு ஆசியை பார்த்துக் கொண்டே ஏதேதோ நினைவில் உழன்று முகம் வாடிப் போய் நிற்க அவளைப் பார்த்த மித்ரா என் நிரும்மா சோகமா இருக்க என்று வினவினாள்.

ஒன்னுமில்லை மித்து என்று சுரத்தே இல்லாமல் பதில் கூற ஹேய் நிரு கவலைப்படாத நான் உனக்கு ஐஸ்கிரீம் தரேன் சரியா முகம் சிரிச்ச மாதிரி வை பார்ப்போம் என்றவள் அவளிடம் ஒன்றைக் கொடுத்து உனக்கு ஒன்னு எனக்கு ரெண்டு சரியா கணக்கு சரியா போச்சு என்று கூற இதை கேட்டுக் கொண்டிருந்த ஆதிக்கு மண்டையில் அலாரம் அடித்தது.

இது இது இந்த குரல் தானே அன்னைக்கு ஷாப்பிங் மாலில் கேட்ட அதே கிசுக்கிசு குரல் சந்தோஷமும் சிரிப்புமாக மித்ரா என்று ஆதி மித்ராவை அழைக்க அங்கு பெரியவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்தனர்.

மோகமுள் தீண்டும்…

மோகமுள் - 22 படிக்க இங்கே சொடுக்கவும்..

கதையை தொடர்ந்து படிக்க இந்த தளத்தை follow button ✅ press panni follow செய்து கொள்ளுங்கள் மக்களே.. 



உடனுக்குடன் update வரும்.. 



உங்கள் கருத்துகளை comments section - ல் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



நன்றி..




Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments