மோகமுள் -20:
எதுக்குடி கிள்ளின என்று இடுப்பை தேய்த்து கொண்டு காரில் ஏறி அவள் அருகே அமர்ந்துகொண்டு அவளை பார்க்க அவளோ எதுவும் பேசாமல் முறைத்து கொண்டிருந்தாள்.
ஹெய் நான் உன் முறை மாமன் தான்டி அதுக்குன்னு இப்படியா பப்ளிக் பிளேஸ்ல பாத்து வைக்குற.. இப்படிலாம் மாமன சைட் அடிக்க கூடாது கண்ணு பட்டுறும் சரியா என்று அவள் கன்னத்தை கிள்ள அதற்கும் ஒரு முறைப்பு தான் பரிசாக கிடைத்தது.
அதற்குள் கோவில் வந்திருக்க அனைவரும் வண்டியில் இருந்து இறங்கினர்.
இவர்களுக்கு முன்பாகவே அங்கு அனைவரும் வந்திருந்தனர்.
சுமதியும் நிரஞ்சனாவும் பூஜைக்கு அனைத்தையும் தயார் செய்து கொண்டிருக்க சக்கரவர்த்தி மித்ராவின் பெற்றோரிடம் பேசி கொண்டிருந்தார்.
ஊர்மிளா யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அங்கு இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு கொண்டு கைபேசியில் ரீல்ஸ் பார்த்து கொண்டிருந்தார்.
இவர்களின் கார் வரவும் அதனை பார்த்து விட்டு அவ்வளவு நேரம் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு வாயை சும்மா வைத்து கொண்டிராமல் எங்க போயிட்டு இப்படி தொப்பலா நனஞ்சிட்டு வர மித்ரா.
கோவிலுக்கு இப்படித்தான் வருவியா என்று அனைவர் முன்பும் அவளை சாட உடனே ஆதி சும்மா இருப்பானா.
அத்தை புதுசா கல்யாணம் ஆனவங்க அப்படி இப்படி இருப்பாங்கன்னு உங்களுக்கு தெரியாதா
அதனால் தான் தலையில் தண்ணி தெளிச்சுட்டு வந்தோம் என்று அவருக்கு குட்டு வைத்தவன் மித்ரா வா இங்க ஒரு சம்பிரதாயம் இருக்கு.
இந்த குளத்தில் மூன்று முறை மூழ்கி எழுந்து தான் சாமி சண்ணிதிக்குள்ள போகனும்னு ஐதீகம்.
வா போகலாம் என்று அவளை தோளோடு அணைத்து அழைத்து போக ஊர்மிளாக்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பதென்றே தெரியவில்லை.
நிரஞ்சன் தன் தாய் அருகில் வந்து உனக்கு இது தேவையா அவங்க எப்படி வந்தா உனக்கென்ன நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்மா சும்மா இருக்காம தேரை தெருவுல இழுத்து விட்ட கதையா இருக்கு உன் கதை என்று அவனும் அவன் பங்கிற்கு திட்டி விட்டு செல்ல ஊர்மிளாக்கு முகம் தொங்கி போனது.
மற்ற அனைவரும் உனக்கு இது தேவை தானென்று நகர்ந்து விட்டனர்.
மித்ராவின் பெற்றோருக்கு ஊர்மிளா சாடவும் அதனை கண்டு கலக்கமுற்று இருந்தவர்களுக்கு ஆதியின் பதிலடி கண்டதும் மனம் நிம்மதியுற்றது.
குளத்திற்கு அவளை இழுத்துச் சென்றவன் மித்ரா தாயையும் தந்தையும் பாவமாக பார்த்து வைக்க சட்டென்று நின்றவன் அவர்களை நோக்கி திரும்பி வாங்க மாமா வாங்க அத்தை என்று மருமகனாக அழைக்க மித்ராவுக்கு மயக்கம் வராத குறை தான்.
என்ன அம்மா அப்பாகிட்ட இவரு பேசுறாரு என்று அதிர்ச்சியாக பார்த்தாள்.
எப்ப வந்தீங்க மாமா
இப்பதான் மாப்பிள்ளை கொஞ்ச நேரம் முன்ன தான்
அத்தை சாப்டீங்களா என்று ஏதோ பேசிக் கொண்டிருக்க மித்ரா பேச வரவும் அவளை கண்டுகொள்ளாமல் சரி மாப்பிள்ளை நீங்க குளத்துல மூழ்கி எழுந்திட்டு வாங்க நேரமாச்சு சாமி கும்பிட என்று உள்ளே சென்று விட்டனர்.
உதட்டை பிதுக்கிக்கொண்டு என்ன உங்க கிட்ட மட்டும் பேசுறாங்க என்கிட்ட பேசல என்னோட முகத்தை கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்று புகார் வாசித்தாள்
நான் பேசினேன் என்கிட்ட பேசினாங்க நீயும் போய் பேசு பேசுவாங்க
இப்ப கூட பேசப்போனேன் அப்படியே பாக்காம போறாங்க என்று கண்ணை கசக்க நீ ஏதோ புதுசா அவங்க கிட்ட பேசுற மாதிரி தயங்கி தயங்கி பேச ட்ரை பண்ற
அவங்க உன் அப்பா அம்மா தானே அவங்ககிட்ட உனக்கென்ன தயக்கம் அப்ப நீ தான் பேசணும் உன் மேல தப்பு இருக்கு மித்ரா அப்போ நீ தான் இறங்கி போகணும் என்று கூற நீ பேசு அவங்க கண்டிப்பா பேசுவாங்க அவங்க கோபம் பனியா கரைஞ்சு போயிடும் சரியா இப்ப எதுவும் நினைக்காம வா வந்து மூழ்கி எழுந்து வரலாம் என்று அழைத்து போனான்.
அத்தான் குளம் ஆழமா இருக்குமா என்று கால் வைக்க பயப்பட ஆழமா இல்ல என்று தயங்க அவன் தயக்கத்தை கண்டவள் ஆழம் இல்லனா வேற என்ன இருக்கு என்று கேள்வியாக பார்க்க சிரித்து கொண்டே ரெண்டே ரெண்டு முதலை மட்டும் சுத்திக்கிட்டு இருக்கறதா சொன்னாங்க அதுங்க பாட்டுக்கு அங்க இருக்கட்டும் நீ வா வந்து இறங்கு என்று நக்கலாக கூற என்னது முதலையா என்று ஓட பார்த்தவளை எங்கடி போற என்று இழுத்து குளத்திற்குள் தள்ளினான்.
ஐயோ அத்தான் என்று அலறியவாறு குளத்தில் விழுந்தாள் தானும் சேர்ந்து இறங்கியவன் நீரில் தத்தளித்தவளை பிடித்துக் கொண்டே மூன்று முறை மூழ்கி அவளை தன்னுடன் அணைத்தவாறு வா போகலாம் என்று அழைக்க உங்கள என்று அடிக்க பாய்ந்தவளிடம் இருந்து தப்பித்தவன் ஏய் முதலைடி என்று கத்த அதிர்ந்து திரும்பி அங்கு பார்க்க வெறும் தண்ணீர் மட்டும்தான் இருந்தது.
அவளின் அதிர்ந்த முகத்தைக் கண்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.
உங்களை இருங்க வரேன் என்று கத்திக்கொண்டு துரத்தி வர இவனும் முடிஞ்சா பிடிடி என்று நிற்காமல் ஓட்டம் பிடித்தான்.
அவள் அவனைத் துரத்திக்கொண்டே ஓடி வர யாரென்றே தெரியாத மூவர் அவளை வழிமறித்தனர்.
என்ன பாப்பா ஊருக்கு புதுசா என்று அந்த கூட்டத்தில் ஒருவன் பல்லை இளித்துக் கொண்டே கேட்க அம்மூவரும் அவளை மேலும் கீழும் பார்த்து நோட்டமிட்டனர்.
மச்சான் வெளியூர் போல அதான் பலபலன்னு இருக்கா குட்டி என்று இன்னொருவன் கூற மற்றொருவன் தண்ணீரிலிருந்து இப்போதான் எழுந்து வந்த போல டா அப்படியே பிரிட்ஜ்ல இருந்து எடுத்த ஆப்பிள் போல இருக்காடா என்று மாற்றான் மனைவி என்று தெரிந்தும் அவளை முற்றுகையிட்டு அசிங்கமாக வர்ணிக்க ஹலோ மிஸ்டர் நகருங்க நான் போகணும் வழியை விடுங்க என்று போக பார்க்க எங்க கண்ணு போக பாக்குற என்று அவளை தொட வந்தான் ஒருவன்.
அவனால் தொட முயல மட்டுமே முடியும்.. யார் மேலடா கை வைக்கப் போற நாயே என்று ஓங்கி மிதிக்க மூன்று பல்டி அடித்து போய் விழுந்தான் அவன்.
மீதி இருந்த இருவரும் எவன்டா எங்க ஊருக்குள்ள வந்து என் மச்சானை அடிச்சது என்று திரும்ப அவனுக்கும் மூக்கில் ஒரு குத்து விட முன் பல் உடைந்து கிலி மூக்கு உடைந்து ரத்தம் குடகுபுவென பெருக்கெடுத்தது.
அங்க ருத்ர மூர்த்தியாய் நின்று கொண்டிருந்த ஆதி தான் அவனை எட்டி மிதித்து தள்ளி இருந்தான்.
இவன் ஓடிக்கொண்டே இருக்க என்ன சத்தத்தை காணோம் என்று திரும்பி பார்க்க அங்கு மூவரும் மித்ராவை சுற்றி நிற்பதை பார்த்தவன் அவர்கள் அருகில் புயலென வரவே அவர்கள் பேசியது அனைத்தும் காதில் விழ ருத்ரமூர்த்தியாக மாறி யாரு மேலடா கைய வைக்க பாக்குறீங்க பொட்ட பசங்களா?
எங்க கை வைங்க பார்க்கலாம் என் பொண்டாட்டி மேல முடிஞ்சா கை வச்சுப் பாரு என்று சீர மித்ராவை இழுத்து முன்னால் விட்டான்.
அவளோ அத்தான் வாங்க இங்கிருந்து போகலாம் என்று இழுக்க அவன் அவள் பேச்சைக் கேட்கும் நிலைமையில் இல்லை அங்கு நின்ற இன்னொருவனை குட்டியா உனக்கு.. பிச்சு எடுத்துடுவேன் ராஸ்கல் என்று அடித்து புரட்டி எடுத்தான்.
இங்கு கோவிலின் உள்ளே இருந்தவர்கள் இருவரும் இன்னும் வரவில்லையே என்று இவர்களை காண வெளியில் எட்டி பார்க்க புழுதிப் பறக்க சண்டை நடந்தது.
அதனை கண்டதும் ஆசியும் நிரஞ்சனும் என்னவோ ஏதோ என்று ஓடி வந்தனர்.
ஆதியை தடுக்க விடுங்கடா அவனுங்களை இன்னைக்கு பொலக்காமல் விடமாட்டேன்.. யாரு மேல கை வைக்க பார்க்கிறானுங்க.. தில்லு இருந்தா என் பொண்டாட்டி மேல கை வையுங்க.. வச்சு பாருங்கடா சாவடிச்சிடுவேன் என்று திமிர அவனை அடக்கவே பெரும் பாடகி போனது நிரஞ்சனுக்கும் ஆசிக்கும்.
அவன் அடித்த அடியில் மூவரும் துண்டை காணோம் துணியை காணும் என்று ஓடிவிட்டார்கள். வெளியூர்காரனா இருந்தா சொம்பைன்னு நினைச்சுட்டீங்களாடா இனிமே எவனாவது வாலாட்டுங்க ஒட்ட நறுக்கிடுறேன் என்று ஆத்திரம் அடங்காமல் கத்தினான்.
மித்ராவிடம் சென்று உனக்கு ஒன்னும் இல்ல தானே மித்ரா என்று அவளை ஆராய்ந்து கொண்டே கேட்டான்.
ஒன்னும் இல்ல அத்தான் எதுக்கு இவ்வளவு கோவம் என்று கேட்டு வைக்க அவளை முறைத்தவன் என் பொண்டாட்டி மேல ஒருவன் கை வைக்க வருவான் அதை பார்த்துட்டு என்னை சும்மா இருக்க சொல்றியா என்று அவளிடம் எகிறினான்.
ஆதி கண்ணா நேரமாயிருச்சு வாப்பா சாமி கும்பிடனும் என்று சுமதி அழைக்க ஒன்றும் பேசாமல் மித்ராவை அழைத்து சென்றான்.
அப்பொழுதும் அவன் அவள் கைகளைப் பற்றியபடியே தான் இருந்தான்.
கோவிலின் உள்ளே அனைவரும் செல்ல சாரி மித்ரா நான் உன்னை தனியா விட்டுட்டு வந்துருக்க கூடாது என்னை மன்னிச்சிருடா என்றவன் பயந்துட்டியா என்று வினவவும் அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தான் அதான் நீங்க இருக்கீங்களே அப்புறம் எனக்கென்ன பயம் என்று அவன் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.
மித்ராவின் பெற்றோர் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள் ஏனோ இங்கு வந்த பொழுது இருந்த மனநிலை அவர்களிடம் இப்பொழுது இல்லை.
தன் மகளின் வாழ்க்கை என்னாக போகிறதோ என்ற கவலையில் இருந்தவர்கள் இங்கு நடந்த அனைத்தையும் அவர்களும் தான் பார்த்தனர். பார்த்தப் பிறகுமா சந்தேகம் வரும்.
இல்லவே இல்லை.. ஆதி அவளுக்கு பரிந்து கொண்டு வந்ததும் சற்று நேரம் முன்பு நடந்த சண்டையை பார்த்த பின்புமா அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருக்க அவர்கள் ஒன்றும் சின்ன குழந்தைகள் அல்லவே.
கோவிலுக்கு வாங்க என்று சக்கரவர்த்தி நேரில் சென்றே அழைத்திருக்க சுமதி தொலைபேசியில் பேசியிருக்க இன்று காலையிலேயே ஆதியும் அவர்களுக்கு அழைத்து பேசியிருந்தான்.
ஆம் என் மித்ராவை எனக்கு குடுத்துருங்க நான் அவளை பார்த்துக்குறேன் என்றும் நேற்று அப்படி உங்களிடம் பேசியிருக்க கூடாது ஏதோ ஓர் மன உளைச்சலில் அப்படி பேசிட்டேன் இனி என் முழுமைக்கும் மித்ரா வேண்டும் என்று தெள்ளிதெளிவாக பேசியிருக்க அதனை நேரிலும் பார்த்து விட்டவர்களுக்கு பரம திருப்தி.
அவர்களின் பிரார்த்தனை எல்லாம் ஒன்றே ஒன்று தான். இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். அவன் விபத்து விஷயம் கூட பின்னுக்கு போய்விட்டது .. கலவியும் காமமும் மட்டுமே வாழ்க்கை இல்லை அல்லவா..
மோகமுள் தீண்டும்..
மோகமுள் - 21 படிக்க இங்கே சொடுக்கவும்...
கதையை தொடர்ந்து படிக்க இந்த தளத்தை follow button ✅ press panni follow செய்து கொள்ளுங்கள் மக்களே..
உடனுக்குடன் update வரும்..
உங்கள் கருத்துகளை comments section - ல் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
0 Comments