மோகமுள் - 19:
என்ன இப்படி சொல்றாரு அப்போ இன்னும் கோபமாக தான் இருப்பாங்களா..
பின்ன நீ அவர்களுக்கும் பிடிக்காம ஒரு கல்யாணம் பண்ணியிருக்க உன்னை எந்த கஷ்டமும் பட விடாம இவ்வளவு நாள் வளர்த்துருக்காங்க.. அவர்களை கஷ்டப்படுத்திருக்க உன் சாரைப் பற்றி யோசிச்ச நீ உன் அப்பா அம்மாவை பற்றி கொஞ்சமாவது யோசிச்சியா..
அவங்க உன்னை நினைச்சிக்கிட்டு சாப்பிட்டாங்களோ இல்லையோ என்று அவள் மனசாட்சி அவளை இடித்துரைத்தது.
‘நான் போன் பண்ணினா கூட எடுக்கவேயில்லையே என்று கண்கள் கலங்க அமர்ந்திருந்தவளின் மனதை அறிந்தவன் போல என்ன மித்து பேபி என்ன யோசனை என்று தன் புறம் அவள் கவனத்தை திருப்பினான்.
மித்ரா இங்க பாரு இந்த பக்கம் எவ்வளவு பசுமையா இருக்கு என்று வெளியில் கண்ணை காட்ட அங்கு கண்ட இயற்கை எழிலில் தன் மனக்கவலையில் இருந்து மீண்டவள் ஏய் சூப்பரா இருக்கு
இது எந்த இடம் அத்தான் சூப்பரா இருக்கு என்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையாக காணப்பட இவர்கள் சென்று கொண்டிருந்த சாலை அருகே ஒரு நீர்தேக்கம் வேறு இருந்தது.
இது தான் எங்க பூர்வீகம் அப்பா அவங்க சிறு வயதுல பங்காளிகளுக்குள்ள நடந்த சொத்து பிரச்சனையினால் சென்னைக்கு வந்துட்டாங்க அதுக்கப்பறம் அப்பா தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்த நிலைமைக்கு வர காரணம்.
வருடா வருடம் தவறாம எங்க குலதெய்வ கோவிலுக்கு வருவாங்க அம்மாவும் அப்பாவும் .
நானும் ஆசியும் எப்போவாச்சும் வருவோம் என்று கூற உங்களுக்கு இந்த ஊரில் வீடெல்லாம் இருக்கா அத்தான் என்று கேட்கவும் ஓஹ் இருக்கு பழைய காலத்து வீடு தான் ஆனா அமைதியா அழகா இருக்கும் ..
இங்க ஒரு தாத்தா இருக்காரு ரொம்ப நம்பிக்கையானவர் அவர் பேரு முனியன் அவர்கிட்ட தான் வீடு பராமரிக்கிற பொறுப்பை பார்த்துக்க சொல்லி விட்டிருக்கார்.
இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று ரம்மியம் கொஞ்சம் அந்த இயற்கை எழிலைக் கண்டு வியந்து போனாள்.
ஓர் இடத்தில் ஆசி காரை நிறுத்தவும் என்னாச்சு கோவில் வந்துடுச்சா என்று மித்ரா சுற்றும் முற்றும் பார்க்க கீழே மூவரும் இறங்கினர்.
ஆதி தான் இறங்கி கொண்டு பின்பு மித்ரா இறங்குவதற்காக கை நீட்ட அவன் கையை பிடித்தபடி இறங்கி கொண்டே கோவில் வந்துடுச்சாங்க என்கவும்
இல்ல இன்னும் கொஞ்சம் தூரம் போனா வந்துரும் இங்க ஒரு அருவி இருக்கு வா அங்க போயிட்டு வரலாம். இந்த ஊருல அருவியா என்று வாயை பிளந்தவளை இழுத்துக் கொண்டு சென்றான்.
சாலையைக் கடந்து இடது பக்கமாக ஒரு குறுகலான மண் பாதை தெரியவும் இதுல தான் போகணும் மித்ரா வா என்று முன்னால் செல்ல என்னங்க காடு மாதிரி இருக்கு
ஆமாம் காடு தான் என்று கண்ணை சிமிட்டினான்.
அவன் ஒற்றை கண்ணசைவை கண்டே பெண் மான் மயங்கியது.
இருவரின் தோள்கள் உரச கைகள் எப்பொழுது பிண்ணிப் பிணைந்து கொண்டது என்று தெரியவில்லை..
இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை ஆனால் அடிக்கடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு திரும்பிக் கொண்டனர்.
ஆமா காடுன்னு சொல்றீங்க அப்போ இங்க சிங்கம் புலி எல்லாம் இருக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வினவினாள்.
ஓஹ் யானை மான் சிங்கம் புலி எல்லாம் இருக்கும் நான் கூட ஒரு முறை இங்கு வந்த போது பார்த்திருக்கேன் என்று நமட்டுச் சிரிப்புடன் கூறினான்.
என்னது யானையா என்று அவனை நெருங்கி இடுப்பை வளைத்துக் கொண்டவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.
ப்ச் அத்தான் இப்போ எதுக்கு சிரிக்குறீங்க வாங்க கார்கிட்ட போகலாம் எனக்கு பயமா இருக்கு என்று பயத்தில் வெடவெடத்துக் கொண்டே கூறினாள்.
ஏய் அருவி பார்க்க வேண்டாமா
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் வாங்க அத்தான் போகலாம் என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
ஹேய் நான் இருக்கும் போது உனக்கு என்னடி பயம் வா இன்னும் கொஞ்ச தூரம் தான் இதுவரைக்கும் வந்துட்டு அருவிகிட்ட போகலன்னா எப்படி வா அதான் நான் இருக்கேன்ல என்று அவள் இடையூடு கைப்போட்டு தூக்கிக் கொண்டான்.
ஐயோ அத்தான் விடுங்க உங்களுக்கு வலிக்கப்போகுது என்று பதறவும் என்னால் எதுவுமே முடியாதுன்னு நினைச்சிட்டியா மித்ரா என்று சட்டென கோபமாய் கத்த இப்போ எதுக்கு அத்தான் இப்படி கத்துறீங்க உங்களுக்கு வலிக்கப் போகுதுன்னுதான் சொன்னேன் எனக்கென்ன தூக்கிட்டுப் போங்க எப்போ பார்த்தாலும் அதை பற்றியே நினைச்சுக்கிட்டு இனி திரும்ப வரும் போதும் நீங்க தான் தூக்கிட்டு வரணும் இப்போவே சொல்லிட்டேன் என்று அவன் கழுத்தோடு கை போட்டு அப்படியே அணைத்துக் கொண்டாள்.
இன்னும் அவன் முகம் இறுக்கமாக இருக்கவே தன் தலையில் அடித்துக் கொண்டவள் உனக்கு பேசவே தெரியல மித்ரா இப்போ பாரு எப்படி முகம் வாடி போச்சுன்னு.
அவனை திசை திருப்ப அவன் கன்ன தசையில் எட்டி காக்கா கடி கடித்து ஒரு முத்தம் வைத்தாள்.
ப்ச் இப்ப எதுக்குடி கடிச்ச என்று காட்டமாக கேட்டபடியே பொறுமையாக அவளை சுமந்து கொண்டே அந்த ஒரு வழி பாதையில் நடந்து சென்றான்.
இல்ல அத்தான் திடீரென்று ஒன்னு நியாபகம் வந்துச்சு அதான்.
என்ன நியாபகம் வந்துச்சு
இல்ல என்று தயங்கியவள் கொஞ்சம் சொன்னா ஒரு மாதிரி இருக்கும்.
என்னன்னு முதலில் சொல்லு அப்பறம் என்ன மாதிரி இருக்குன்னு நான் சொல்றேன் அதே முசுடு மன்னன் குரலிலே கூறினான்.
இல்ல இப்ப உங்களை பார்க்கும் பொழுது என்று இடை நிறுத்தினாள்..
பார்க்கும் பொழுது என்று அவனும் கேள்வியாக பார்க்க
அப்படியே உங்களை என்று அவன் முகம் அருகே தன் முகத்தை கொண்டு வந்தவள் அவன் கண்களில் தன் கண்களை கலக்க விட
“என்னை” என்று எச்சில் விழுங்கினான்.
உள்ளுக்குள் என்னடி பார்வை இது கொல்லுறியே உயிரை அடியோடு அள்ளுறியே என்று அவள் பார்வைக்கே ஒரு பாம்பு தலை தூக்கியது.
சட்டென்று அவளை தன் உடல் உரச கீழே இறக்கி விட இறங்கியவள் பார்வையை மட்டும் அவன் விழியை விட்டு எடுக்கவே இல்லை.
அப்படியே மேனியை உரசி நின்றவள் மொத்த எடையையும் அவன் மேல் போட்டு அப்படியே சாய்ந்து தீரா என்று அவன் கழுத்தூடு தன் கைகளை விட்டு அவன் பிடரி முடியை இறுகப் பற்ற அவன் விரிந்த கண்களில் மோகம் குடியேறிக் கொள்ள அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே அவனிதழில் தன் இதழைப் புதைக்க முற்றும் மறந்தான்.
நினைவில் அவனும் அவளும் மட்டுமே…
ஆரம்பித்தது மட்டுமே அவள் அதன் பிறகு தனதாக்கிக் கொண்டான்.
தன் உயரத்துக்கு அள்ளிக் கொண்டவன் அவள் இதழை விடவேயில்லை.
விடவும் மனதில்லை..
வெகு தூரத்தில் யானை ஒன்று பிளிரும் சத்தம் கேட்கவே சட்டென பிரிந்து கொண்டனர்.
தன்னை சமன் செய்து கொண்டவன் ஒன்றும் தெரியாதது போல் அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.
அவள் வழியை மறைத்து நின்றவள் தூக்கிட்டு நடங்க அத்தான் என்று கைகளை நீட்ட அப்புறம் ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை மித்ரா என்று ஒரு மார்கமாக கூற பத்தடி தள்ளி நின்று கொண்டாள்.
அவள் செயலைக் கண்டு சிரித்தவன் நீ தான் ஒரு மாசத்துல பிள்ளை பெக்க போறியா என்று நக்கலாக வினவ அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் இப்போ வந்து அருவியைக் காட்டுங்க என்று முன்னால் நடந்தாள்.
ஒஹ் உன்னை இருடி என்று நினைத்தவன் ஏய் மித்ரா புலி டி என்கவும் ஐயோ எங்க எங்க அத்தான் என்று அலறியவள் தன் சிங்கத்திடம் வந்து மாட்டிக் கொண்டாள்.
அவளை தன்னுடன் அணைத்துப் பிடித்துக் கொண்டவன் ஹேய் அதெல்லாம் ஒன்னுமில்லை சும்மா சொன்னேன் பயப்பிடாத என்று வாய்விட்டு சிரித்தான்.
போங்க நான் பயந்துட்டேன் என்று சிணுங்கிக் கொண்டே அவனுடன் நடந்தாள்.
சற்று நேரத்தில் சலசலவென தண்ணீர் பாயும் சத்தம் கேட்க
ஐய் கிட்ட வந்துட்டோமா என்று துள்ளிக் குதித்து ஓடினாள்.
ஏய் பார்த்து போடி அங்க கொஞ்சம் சகதியா இருக்குமென்று சொல்லி முடிக்கவில்லை ஆஹ் என்று அலறிக்கொண்டே கீழே விழுந்து கிடந்தாள்.
சொல்ற பேச்சையே கேட்கிறதில்லன்னு முடிவில இருக்கியா டி என்று திட்டிக்கொண்டே கைக்கொடுத்து அவளை தூக்கினான்.
நான் விழுந்து கிடக்கிறேன் அப்போ கூட என்னை திட்டுறீங்க அத்தான் என்று குறைப்பாடிக் கொண்டே அவன் கையைப் பிடிமானத்திற்கு பிடித்துக் கொண்டு எழுந்தாள்.
ஐயோ என்னோட புடவையெல்லாம் சகதியா போச்சு அத்தான் இப்போ எப்படி கோவிலுக்கு போறது என்று கேட்க அவனோ அவளுக்கு பின்னாடி இருந்த அருவியைக் காண்பித்தான்.
ஐய் வாங்க வாங்க போகலாம் என்று விழுந்ததை மறந்தவள் அவனை இழுத்துக் கொண்டு அருவிக்கரைக்கு சென்றாள்.
சுற்றிலும் பச்சை பசேலென்று நெடிய மரங்கள் இருக்க நடுவில் பாலென கொட்டும் அருவியைக் கண்டதும் குழந்தை போல ஆர்பரித்தாள்.
அருவிக்கடியில் சென்று நனைந்தவள் ஆதியையும் அழைக்க வேண்டாமென்று மறுத்தான்.
விட்டுவிடுவாளா அவனையும் இழுத்து நனைய வைத்தவள் அப்படியே அவனை அணைத்துக் கொண்டு சற்று நேரம் நின்றாள்.
அதில் காமம் இல்லை.
இனி எனக்கு நீ மட்டுமே என்பது போல் ஓர் அணைப்பு.
தாய் சேயை அணைப்பது போல்.
எந்த விகல்பமும் இல்லாத ஓர் அணைப்பு.
சற்று நேரம் நின்றிருந்தவர்கள் அப்படியே சாலையை நோக்கி நடந்து வந்தனர்.
நிசப்தம் மட்டுமே கவ்வி இருந்தது.
தூரத்தில் அண்ணா என்று ஆசி அழைக்கும் குரல் கேட்டது.
உடனே தன் கைப்பேசியை எடுத்து குறுஞ்செய்தி அனுப்பியவன் மித்ராவுடன் விரைந்தான்.
சாலையை அடைந்ததும் அங்கு கண்ட காட்சியில் மித்ரா ஆதியிடம் என்னங்க இது என்கவும்
அங்கு ஆசி கையில் வைத்திருந்ததை கண்டு பார்த்தா தெரியல சரக்குடி என்றான் நமட்டு சிரிப்புடன்.
நீங்க குடிப்பீங்களா என்றாள் அதிர்ச்சியுடன்..
ஆமா நல்லாவே குடிப்பேன்
அவளின் அதிர்ந்த பார்வை மாறவேயில்லை.
உடனே ஆசி ஐயோ அண்ணி எங்களுக்கு யாருக்குமே அந்த பழக்கம் இல்லை இது சாமிக்கு படைக்க
என்னது காமிக்கு இதை வச்சு படையல் போடுவீங்களா
ஆமாம் வாங்க நீங்க பார்க்கத்தானே போறீங்க என்று காரில் ஏறினர்.
குடிப்பன்னு சொல்றீங்க என்று அவன் இடையில் கிள்ளியவள் ஆதியை முறைத்து விட்டு தானும் ஏறிக் கொண்டாள்.
மோகமுள் தீண்டும்…
மோகமுள்- 20 படிக்க இங்கே சொடுக்கவும்....
கதையை தொடர்ந்து படிக்க இந்த தளத்தை follow button ✅ press panni follow செய்து கொள்ளுங்கள் மக்களே..
உடனுக்குடன் update வரும்..
உங்கள் கருத்துகளை comments section - ல் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
0 Comments