மோகமுள் -18:
மாமூ என்று அங்கு நிரஞ்சனிடம் பேசிக் கொண்டிருந்தவனை நிரஞ்சனா அழைத்தாள்.
அவன் காது கேளாதது போல் நிரஞ்சனிடம் தன் பேச்சை தொடர்ந்தான் ஆசீஷ் சக்கரவர்த்தி.
அவள் அருகே வரவும் நிரஞ்சன் ஒரு நிமிஷம் ஆசீ அம்மா கூப்பிடுறாங்க போல என்று மெதுவாக அவர்களுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கிப் போய் விட்டான்.
நிரஞ்சனாவிடம் இருந்து தப்பிக்கு இருபா நானும் வரேன் என்று நகர எத்தனிக்க அதற்குள் நிரு அவன் வழியை மறைத்துக் கொண்டு நின்றாள்.
மாமூ நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசணும் என்று பேசவில்லை என்றால் விட மாட்டேன் என்பது போல் வழியை மறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
நீங்க என்கிட்ட என்ன பேசணும் என்று பட்டும் படாமல் அவள் யாரோ எவரோ என்று ஒன்றும் தெரியாதது போல் பேசினான்.
என்ன மாமா ? எதுக்கு இப்படி பண்றீங்க? நான் தான் எதுவும் பண்ணலன்னு சொல்றேன்ல அப்புறம் எதுக்கு என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க நீங்க பேசலனா எனக்கு கஷ்டமா இருக்கு மாமூ ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோங்க எனக்கு இங்க வலிக்குது என்று தன் நெஞ்சில் கை வைத்து ஏன் மாமா புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க என்று அவள் ஆதங்கத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தாள்.
அவள் கண்ணீர் கண்டதும் உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் இரத்தமே ஓடும் என்பது போல கைமுஷ்டிகளை இறுக்கிக் கொண்டு கண்கள் சிவக்க இறுகிப்போய் கல் என ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தான்.
மாமா இன்னும் என்ன சந்தேகப்படுறீங்களா ? ஜஸ்ட் ஒரு பிரண்டா தான் மாமூ பேசினேன் அவன்கிட்ட.. அவன் இப்படி பண்ணுவான் என்று எனக்கு தெரியல அன்னைக்கு நீ கேட்டப்ப கூட நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன்.
உன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பார்க்கணும்னு நினைச்சேன் அதான் அப்படி சொன்னேன் என்னை நம்பு மாமு நான் அப்படி பண்ற ஆளு இல்லன்னு உனக்கே தெரியும் தானே அப்புறம் எதுக்கு மாமா என்கிட்ட பேச மாட்டேங்குற பேசு ப்ளீஸ் என்று அவன் கையை பிடிக்க வந்தவளிடமிருந்து நகர்ந்து கொண்டவன்
நான் உனக்கு தேவை இல்லை நிரஞ்சனா என்று பட்டும் படாமல் எங்கோ பார்த்துக்கொண்டு கூறினான்.
அவன் கூறியதோ வேறு அர்த்தத்தில்
அவள் புரிந்து கொண்டதோ வேறு அர்த்தத்தில்
அப்போ இனிமே எல்லாம் அவ்வளவு தானா.. நான் உன் நிரு பாப்பா இல்லையா மாமூ எல்லாம் முடிஞ்சி போச்சா என்று உதடு துடிக்க உள்ளம் பதற அழுகையூடே கேட்டாள்.
அவன் அப்பொழுதும் அசைந்தானில்லை பிடித்து வைத்து மண்சிலை போலவே நின்று கொண்டிருந்தான்.
அவனை பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவள் அப்போ இனி என்கிட்ட நீ பேசமாட்ட அப்படித்தானே என்ற கேள்வியோடு பார்த்தாள்.
அதற்கும் அவனிடத்தில் பதிலில்லை.
நான் உனக்காக தான் ஊர்ல இருந்து வந்தேன் நீயே வேண்டாம்னு சொல்லும்போது உன்னை கட்டாயப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை என்று தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவள் நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன் இனிமே இந்த ஊர்ல எனக்கு என்ன வேலை கிடக்கு நான் போறேன் இனி எப்பவும் இந்த ஊருக்கு திரும்பி வரமாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் அவள் சென்ற வழியே தன் மனமும் போவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
காதில் கைப்பேசியை இடுக்கி கொண்டு வந்த ஆதீரன் தன் தம்பி கசங்கிய முகத்துடன் நிற்கவும் தோளில் தட்டிக் கொடுத்து வெளியே அழைத்து வந்தான்.
ஹாலில் அனைவரும் குழுமியிருக்க இன்னும் என்னடா யாரும் கிளம்பாம இருக்கீங்க என்றவாரு சுமதி வர அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை முறைத்தனர்.
அனைவரையும் கிளம்ப சொல்லிவிட்டு அவர்தான் கொஞ்சம் பொறுங்க அங்க பூசாரி கிட்ட எல்லாம் ரெடியானு கேட்டுட்டு வரேன் என்று கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார்.
சரி சரிடா முறைக்காதீங்க கிளம்புங்க என்று பொதுவாக கூறியவர் மித்ரா ஆதி நீங்க ரெண்டும் பேரும் உங்க கார்ல வந்துருங்க என்கவும் அந்த காரில் அத்தனை பேருக்கு எப்படி இடம் பத்தும் என்று தன் அன்னை முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாலன் ஆதீரன்.
ஓ சார் என்கிட்ட பேச மாட்டாராம் ஆனா நான் கட்டி வச்ச பொண்ணு மட்டும் வேணுமாம்.. இருடா மகனே உன்னை கதற விடுறேனா இல்லையா பார் என்று உள்ளுக்குள் நினைத்தவர் அப்போ சரி ஆசீ நீயும் நிரஞ்சனும் அண்ணா கூட கார்ல வந்துருங்க என்று ஒரு பெரிய அணுகுண்டை தூக்கி அவன் நெஞ்சில் போட்டார்.
நெஞ்சு பனால்..
மித்ராவிடம் திரும்பியவர் வா மித்ரா நாம இந்த கார்ல போகலாம் என்றவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
மித்ராவோ ஆதியை திரும்பி பார்க்க ஒரே தலைவலியா இருக்கு கோவிலுக்கு கூட நிம்மதியா போக விடுறாங்களா என்று தலையை வருடி கொண்டே மித்ராவை பார்க்க அத்தம்மா நான் அவங்க கூட வரேன் தலை வலிக்குது போல என்று கண்களால் கெஞ்ச ஆதியோ சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான்.
ஆஹா நடிகன் டா நீ என்று தன்னை தானே மெச்சிக் கொண்டான்.
மித்ரா ஆசீயிடம் ஆசி அவங்களுக்கு தலை வலிக்குது போல நீங்க கார் ஓட்டிட்டு வரீங்களா என்கவும் ஓகே அண்ணி நோ ப்ராப்ளம் நீங்க வண்டியில் ஏறுங்க என்று ஆசியும் நிரஞ்சனும் முன்னால் ஏறிக்கொண்டனர்.
ஆதி மனதில் எழுந்த குதூகலத்துடன் காரில் ஏறி அமர மித்ராவும் ஏறி அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
இங்கு முன்னாள் அமர்ந்திருந்த ஆசியோ முன்னாள் நின்ற காரில் தன்னை கண்டு கொள்ளாமல் ஏறிய நிருவைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன பாக்க மாட்டேங்குற என்று அவன் மனம் அடித்துக் கொண்டது.
இவன்தான் சற்று நேரம் முன்பு அவளிடம் பேச என்ன இருக்கு என்று கேட்டான். இப்பொழுதும் அவனுக்கு அவள் பார்க்கவில்லை என்றதும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனை நினைத்து அவனுக்கே விந்தைதான்.
அவனை கண்ட நிரஞ்சன் டேய் நீ ஓகே தானே நான் ஓட்டவா இந்த பக்கம் வரியா என்கவும் இல்லடா நானே ஓட்டுறேன் என்று காரை ஸ்டார்ட் செய்தான்.
இங்கு ஆதியோ மித்ராவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அச்சோ என்ன இப்படி தலை வலிக்குது என்று நெற்றியை வருடி கொண்டே அமர்ந்திருந்தான்.
என்ன அத்தான் ரொம்ப வலிக்குதா என்று அவன் பக்கமாக திரும்ப அவன் நெற்றியை வருடி கொண்டே இருக்கையில் பின்னால் சாய அவனை இழுத்து தன் மடியில் சாய்த்து அவன் நெற்றியை இதமாக வருடி விட்டாள்.
ஆஹா இதல்லவா சொர்க்க சுகம் என்று கண்கள் சொருக அவள் மடியில் நன்றாக சாய்ந்து படுத்துக் கொண்டவனிடம் காபி எதுவும் குடிக்கிறீங்களா வண்டியை நிறுத்த சொல்லவா என்கவும் அதான் உங்க அத்தம்மா கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி எதுவும் சாப்பிட கூடாதுன்னு அத்தனை பேரையும் பட்டினி போட்டு அழைச்சிட்டுப் போறாங்களே.. சாப்பிடல அதான் எனக்கு தலைவலி வந்துடுச்சு என்று தன் அன்னையைப் பற்றி மனைவியிடம் குற்ற பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தான்.
நாம வேணா யாருக்கும் தெரியாம போய் சாப்பிட்டு வந்துருலாமா என்று கிசுக்கிசுப்பாக அவன் காதில் கூற அன்று ஷாப்பிங் மாலில் கேட்டு மயங்கிய அதே கிசுக்கிசுப்பான குரல்.
சட்டென்று அவள் மடியிலிருந்து எழுத்து கொண்டான்.
என்னாச்சுங்க என்று மித்ரா வினவ
ஒன்றுமில்லை என்று அமைதியாகிவிட்டான்.
மனதில் ஏதேதோ குழப்பம் இந்த குரல் என்று சுய அலசலில் ஈடுப்பட்டவளை களைத்தான் நிரஞ்சன்.
ஆதி கோவிலுக்கு உருப்படியா போய் சேர்ந்துவருவோமா டா என்று ஆசியைப் பார்த்துக் கொண்டே நக்கலாக வினவ
டேய் ஆசீ உன் மனசுல இருக்கிறதை நிருக்கிட்ட சொல்லு எதுக்குமே மௌனம் தீர்வு இல்லை என்று ஆதீரன் தன் தம்பியிடம் கூறினான்.
அவனிடமிருந்து ஒரு தலையசைப்பு மட்டுமே.
நிரஞ்சன் வேறு ஆமாம் சீக்கிரம் ஊருக்கு போறதுக்குள்ள பேசிடு அப்புறம் வாழ்நாள் முழுக்க பேச முடியாம போயிடுச்சுனா என்ன பண்றது என்று அவன் பங்கிற்கு நெருப்பை மூட்டி விட்டான்.
என்னடா எல்லாரும் இப்படி பயமுறுத்திறீங்க என்று மனதுக்குள் பயந்தவன் ஒரு வழியாக திருவிடம் பேச முடிவெடுத்தான்.
(அதுக்கு அவ உன்கிட்ட பேசணுமே ஹா ஹா)
இங்கு இன்னொரு காரில் சக்கரவர்த்தி காரை ஓட்ட அவர் அருகில் ஊர்மிளா அமர்ந்திருக்க பின் இருக்கையில் சுமதியும் நிரஞ்சனாவும் அமர்ந்திருந்தனர்.
ஊர்மிளாதான் காரில் ஏறும் பொழுது அண்ணி நான் முன்னாடி உட்காந்துக்குறேன் நீங்க உங்க மருமகள் கூட பின்னாடி இருங்க என்று முன்னிருக்கையில் ஏறி அமர்ந்துக் கொண்டார்.
என்ன நிரும்மா அமைதியாக வர என்னாச்சு என்று எப்பொழுதும் கலகலப்பாக சிரித்து அரட்டை அடித்துக் கொண்டு வரும் நிரஞ்சனா இப்பொழுது அமைதியாக வருவதை பார்த்து தான் கேட்டார்.
ஒன்னுமில்லை அத்தை என்று அந்த அப்பக்கம் திரும்பிக்கொள்ள
அவளை தன் பக்கமாக திருப்ப அவள் கண்கள் கலங்கியிருந்ததை கண்டவர் என்னாச்சும்மா ஏதாவது பிரச்சனையா இந்த ஆசீ ஏதாவது சொன்னானா என்று துல்லியமாக கணித்து கேட்க
அவன் பேசலைங்கிறது தான் இங்க பிரச்சனையே என்று உள்ளுக்குள் தவித்தவள் அதெல்லாம் ஒன்றுமில்லை அத்தை என்று மழுப்பினாள்.
அப்புறம் ஏன் உன் கண் கலங்குது. சொல்லு ஆசிக்கும் உனக்கும் ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியுது என்றதும் நிரஞ்சனா அதிர்ந்து பார்க்க என்ன எப்படி கண்டுபிடிச்சேன்னு பார்க்கிறியா என்று விளைவும் ஆமாம் என்று தலையாட்டினாள்.
அதான் உங்க ரெண்டு பேரு மூஞ்சிலையும் எழுதி ஒட்டிருக்கே.
அவன் பார்க்காத போது நீ அவனை பார்க்கிறதும் நீ பார்க்காத போது அவன் உன்னை பார்க்கிறதும் எல்லாம் எனக்கு தெரியும் என்கவும் அமதியை கட்டிப்பிடித்துக் கொண்டே ஒரே அழுகை.
அவள் கண்ணீரை துடைத்து விட்டவர் என் செல்லம்ல அழக்கூடாது ஆதிக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு அவங்க வாழ்க்கையை இனி அவங்க பார்த்துப்பாங்க இனி உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் அடுத்த வேலை என்றவர் என்ன பிரச்சனைன்னு கேட்ட மாட்டேன்.
எதுவாக இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க சரியா
அவனை பற்றி தான் உனக்கு தெரியுமே மனசுல போட்டு எல்லாத்தையும் குழப்பிக்குவான் வெளியில் எதுவும் சொல்ல மாட்டான். நான் கூட கேட்டு பார்த்துட்டேன் வாயே திறக்க மாட்டேங்கிறான் அமுக்குலி என் தன் இளைய மகனை செல்லமாக வைதுக் கொண்டார்.
அவன் என்னை அழ வச்சிட்டான் அத்தை இன்னைக்கு அவனுக்கு இருக்கு ஆகுற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை என்னை ஏதும் கேட்கக் கூடாது இன்னைக்கு இந்த ஆசியை கதர விடுறேன் பாருங்க என்று சிரித்தாள்.
அவ்ளோதான் இப்போ எப்படி சிரிச்ச முகமா அழகா இருக்க என்னு கன்னம் வழித்து நெற்றி முரித்தார்.
எல்லாம் உங்க பையன் கண்ணுதான் என்று கிண்டலடித்தாள்.
ஆதியுடன் அமர்ந்திருந்தவளுக்கோ அப்பா அம்மா வேற கோவிலுக்கு வரதா அத்தம்மா சொன்னார்களே என்கிட்ட பேசுவாங்களா கடவுளே என்கிட்ட பேசணும் என்று ஒரு இன்ஸ்டன்ட் விண்ணப்பம் வேறு கடவுளுக்கு பார்சல் அனுப்பினாள்.
என்னாச்சு மித்ரா என்று அவள் முனுமுனுப்பை கேட்டப்படி வினவ சற்று தயங்கியவள் இல்ல அப்பா அம்மா என்கிட்ட பேசுவாங்களான்னு தெரியல என்கவும் பின்ன நீ பண்ணி வச்சிருக்கிற வேலைக்கு உன்னை தூக்கிக் கொஞ்சுவாங்களா என்று இன்னும் சற்று அவளை பயமுறுத்தினான் ஆதீரன்.
மோகமுள் தீண்டும்…
மோகமுள் - 19 படிக்க இங்கே சொடுக்கவும்..
கதையை தொடர்ந்து படிக்க இந்த தளத்தை follow button ✅ press panni follow செய்து கொள்ளுங்கள் மக்களே..
உடனுக்குடன் update வரும்..
உங்கள் கருத்துகளை comments section - ல் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி..
0 Comments