Advertisement

Ad code

மோகமுள் தீண்டாதோ தீரனே - 17

 


மோகமுள் - 17:

ஐயோ மித்ரா நீயா இப்படி சார் கிட்ட வாயாடிக்கிட்டு இருந்த என்னால நம்பவே முடியல என்று தன்னை தானே கிள்ளி கிண்டலும் செய்து கொண்டாள்.

நான் லவ் பண்றேனா அதுவும் என்னோட சாரையா இன்னும் என்னடி சார் என்று தனக்குத்தானே தலையில் கொட்டும் வைத்துக் கொண்டாள்.

அத்தான் என்னோட ஆதி அத்தான் என்றவள் சற்று நேரம் முன்பு நடந்த அனைத்தும் கண் முன் வர இந்த அத்தானுக்கு ரொம்ப தான் சேட்டை கடிச்சு வச்சுட்டாரு என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

 திடீரென்று இன்னொரு மனம் அவளிடம் ஒருவேளை உன்னை பிடிக்காமல் ஒரு மாதத்தில் போக சொல்லிட்டாருன்னா என்ன பண்ணுவ என்று இடித்துரைக்க கண்டிப்பா கெஞ்சுட்டு இருக்க மாட்டேன் அவருக்கு தொல்லை கொடுக்காமல் போயிடுவேன்.

என்னடி இப்படி போயிடுவேன்னு பொசுக்குன்னு சொல்லிட்ட எங்க உன் ஆதி அத்தான விட்டுட்டு உன்னால இருந்துற முடியுமா? என்ற அவள் மனம் கேள்வி கேட்க அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தெரியல அவங்க இல்லாம என்னால ஒரு வாழ்க்கை நினைச்சு கூட பார்க்க முடியல இப்ப நான் சந்தோஷமா இருக்கேன் அவரை லவ் பண்றேன்னு மட்டும் தெரியுது அவரில்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியல.

அவரை நான் லவ் பண்ணாதப்பவே ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்க முடியாது அப்படி பார்க்காமல் இருந்ததால எத்தனை நாள் நைட்டு நான் தூங்காம இருந்துருக்கிறேன் உனக்கு தான் தெரியுமே.

இப்ப சொல்லவே வேண்டாம் .. அவர் இல்லையென்றால் அதற்கு மேல் அவளால் அப்படி நினைக்கக் கூட முடியவில்லை.

நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு இப்போ எதுக்கு என்னை அழ வைக்க பாக்குற போ இங்கிருந்து நான் இப்ப சந்தோஷமா இருக்கேன் என் அத்தானுக்கு நான் அவரைப் போலவே ஒரு குழந்தை பெத்து கொடுப்பேன் இல்ல இல்ல ஒன்னு இல்ல கஞ்சத்தனமா இருக்கு நோ, நான் நிறைய நிறைய பிள்ளை பெற்றுக் கொடுப்பேன் என் அத்தானுக்கு.. என்னோட சேட்டைக்கார அத்தான் என்று கொஞ்சிக் கொண்டாள்.

 இவரு வீட்லதான் இப்படி சாந்தமா இருக்காரு ஆபீஸ்ல பார்க்கணுமே என்ன மித்ரா இன்னும் இதை முடிக்கலையா அதை முடிக்கலையா கடுவன் பூனை போல சும்மா சும்மா நோண்டிக்கிட்டே இருப்பார் என்று அவன் நினைப்பிலேயே உழன்று கொண்டு வந்தவளை தடுத்து நிறுத்தியது நாராசமான ஒரு குரல்.

வாம்மா மகாராணியம்மா உனக்கு இப்பதான் விடிஞ்சதா இவ்ளோ லேட்டா எழுந்து வர இப்படி வந்தா எங்கிருந்து வீடு விளங்கும் எப்படி செல்வம் தழைச்சு நிற்கும்.

கல்யாணமான பொண்ணு போலவா வந்து நிக்கிற.. ச்சே உன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பார்த்தியா உனக்கெங்கு இதெல்லாம் தெரியப்போகுது. எங்க ஸ்டேட்டஸ் என்னன்னு முதலில் தெரியுமா..

தெரிஞ்சிருந்தா நீ ஏன் இப்படி வந்து நிக்கப் போற உன்னையெல்லாம் இப்பவே வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும் இல்லன்னா தலைமேல ஏறி ஆடிடுவ என்று காலையில் வந்ததும் குத்தி பேச ஆரம்பித்து விட்டார் ஊர்மிளா.

இல்ல ம்மா… அத்தம்மா கொடுத்த டிரெஸ் செட் ஆகலை அதான் அதை மாத்திட்டு வரதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு இனிமே இப்படி நடக்காது என்று கூறினாள்.

அதற்கும் அவர் சும்மாவா இருந்தார். எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆரம்பித்து விட்டார்.

ஹிம்ம எங்க போய் சொல்வேன் இதெல்லாம் என் ஆதி ரேஞ்சுக்கு நீயெல்லாம் பக்கத்துல கூட நிக்க முடியாது கடைசியில் உன்னை போய் கட்டுவான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை. உன் அப்பா அம்மாதான் உன்னை தலை முழுகிட்டாங்களே இனி யாரு உனக்கு செய்வா எங்க ஆதிக்கு எவ்வளவு பெரிய இடத்துல இருந்துலாம் சம்மந்தம் வந்துச்சு தெரியுமா.

கோடியில் புரல்றவனுக்கு ஒன்னுமில்லாதவள கட்டி வச்சிட்டோமேன்னு நைட்டெல்லாம் தூக்கமே வர மாட்டேங்குது நீ என்னடான்னா நல்லா தூங்கி எழுந்திருச்சு வர உனக்கென்னமா இனி என்ன கவலை இருக்கப் போகுது என்று இவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டே போக மித்ராவிற்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது.

என்ன ஊர்மிளா இது என்று கர்ஜனையாக குரல் வந்தது.

தன் அண்ணனின் குரலைக் கேட்டதும் ஐயயோ மொத்தமாக கேட்டுட்டாரோ என்று உள்ளுக்குள் பதறி போய்விட்டார்.

ஆம் சக்கரவர்த்தி தான் அங்கு நின்றிருந்தார்.

இப்பொழுது தான் தன் மனைவி வந்து ஏங்க நம்ம பிள்ளை இனி சந்தோஷமா இருப்பாங்க.. எப்படியோ ரெண்டு பேரும் நல்லாருந்தா சரி தான் என்று தான் அவர்களின் அறையில் கண்டதை வைத்து தன் அனுமானத்தைக் கூற ஆஹ நீ தான் அந்த கரடியா என்னங்க கரடின்னு சொல்றீங்க என்று சிணுங்க பின்ன நீ பண்ணினதுக்கு பேரு என்னம்மா கரடி வேலை தானே என்று மீண்டும் கிண்டல் செய்ய நான் என்னங்க பண்ணுவேன் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னுட்டு உங்க பையன் இப்படி பாய்வான்னு எனக்கெப்படி தெரியும் என்றவரிடம் இப்போ மட்டும் அவன் என் பையனா? 

ஆமா உங்களை மாதிரி தான் என்று அந்த வயதிலும் அவர் வெட்கப்பட

என்னை மாதிரியா மதி என்று சக்குவும் சரசமாக கேட்க 

ஐயோ இல்லை இல்லை பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்சக் கதையால்ல இருக்கு நீங்க பண்றது என்று கிண்டல் செய்ய

யாரை பார்த்து கிழவன்னு சொன்ன என்று சுமதியை வம்பிழுத்துக் கொண்டே தங்களின் அறையை விட்டு வெளியில் வந்தவர் ஊர்மிளா தன் மருமகளிடம் பேசுவதைக் கேட்டதும் வெகுண்டார்.

என்ன ஊர்மிளா இதெல்லாம் இப்படி தான் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுக்கிட்ட பேசுவியா என்ன நினைச்சிட்ட இருக்க உன் மனசுல மித்ரா ஆதியை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா இப்போ அவன் நிலைமையை யோசிச்சு பார்த்தியா? என்று தன் தங்கையை சாடியவர் சுமதி நீ ஏன் நின்னுட்டிருக்க போய் நகையெல்லாம் எடுத்துட்டு வந்து மித்ராவுக்கு போட்டு விடு என்று அருகே நின்ற தன் மனைவியிடம் இரைந்தார்.

ஹிம்ம சரிங்க இதோ எடுத்துட்டு வரேன் என்று தன் அறைக்குள் சென்றார்.

சக்கரவர்த்தியின் சத்தம் கேட்டு தங்கள் அறையிலிருந்த ஆசீ நிரஞ்சன் நிரஞ்சனா முதற்கொண்டு அனைவரும் ஹாலிற்கு வந்து விட்டனர்.

தன் தாயின் குணம் அறிந்ததுதான் என்பது போல் தன் தாய் தான் ஏதோ வேண்டாத வேலை செய்திருக்கிறார் என்று நிரஞ்சனும் நிரஞ்சனாவும் அமைதியாக இருந்தனர்.

தன் தந்தை கோபப்படுகிறார் என்றால் விஷயம் பெரியது என்று புரிந்து கொண்ட ஆசீ நிரஞ்சனாவை முறைத்தான்.

அவன் பார்வையைக் கண்டவன் என்ன ஏன்டா முறைக்கிற எங்க ம்மா ஏதாவது பண்ணுச்சுன்னா அதை என்னமோ நான் சொல்லிக் கொடுத்து பண்ணின மாதிரி இப்படி முறைக்கிறான் போடா ஓசி மணி என்று அவளும் பதிலுக்கு முறைத்து விட்டு மனதினுள் வருத்தெடுத்தாள்.

அச்சோ மாமா அவங்க ஏதும் சொல்லலை.. சும்மா பேசிட்டு இருந்தோம் என்று மித்ரா மழுப்பப் பார்க்க சுமதி தன்னறையிலிருந்து சில நகை பெட்டிகளுடன் வந்தவர் மித்ரா இங்க வாடா இங்க வந்து உட்காரு என்று அவளை அழைத்து அமரவைத்து போட்டு விட்டார்.

அப்பொழுதும் அடங்காமல் ஊர்மிளா இந்த அன்னகாவடிக்கு வந்த வாழ்வை பாரேன் என்று அவரால் மனதுக்குள் பொருமித்தள்ளினார்.

நிரும்மா நீ வாடா இந்த ஆரம் போடு என்று நிருவையும் சுமதி அழைக்க இல்லை அத்தை அதெல்லாம் வேண்டாம் என்று நிரஞ்சனா மறுக்க ஏய் போடி போய் போட்டுக்கோ என்று வாயெல்லாம் பல்லாக தன் மகளை ஏவினார்.

இரும்மா உன்னை அப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்தா தான் சரிப்படுவ என்று முனகியவள் ஆசீயை முறைத்துக் கொண்டே சென்று மித்ரா அருகில் அமர்ந்தாள்.

நகைகளை போட்டு விட்டு இப்போதான் என் மருமகளுங்க ரெண்டுபேரும் அழகா இருக்காங்க என் கண்ணே பட்டுடும் போல என்று கன்னம் வழித்து நெற்றி முறித்தார்.

இன்னும் தன் அண்ணன் கோபமாக இருக்கவே இல்லை அண்ணா கல்யாணம் ஆன சுமங்கலி பொண்ணு வகுட்டுல குங்குமம் வைக்காம இருக்கக் கூடாதுன்னு தான் மித்ரா கிட்ட சொன்னேன் என்றவர் மித்ராவை பார்த்து அப்படி தானே மித்ரா உன்கிட்ட சொன்னேன் என்று கேட்டவரின் பார்வையில் ஆமாம் என்று சொல் என்ற கட்டளை இருந்ததுவோ.

சக்கரவர்த்தி பேச ஆரம்பிக்கவும் சுமதி அவரின் கையை அழுத்திப் பிடித்து வேண்டாம் என்று கண்ணை காட்ட அங்கு ஆதி வந்துக் கொண்டிருந்தான்.

வந்தவன் அனைவரையும் ஒரு முறை பார்த்து மித்ராவிடம் கண்களை நிலைக்க விட்டவன் சற்று குரலுயர்த்தி மித்ரா இங்க வாவென்று அழைத்து விட்டு அவன் பாட்டுக்கு பூஜை அறைக்கு செல்ல மித்ராவும் அவன் பின்னே சென்றாள்.

அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இவன் எதுக்கு அங்க இழுத்துட்டுப் போறான் என்று திகைத்துப் பார்க்க அங்கு நடந்ததை பார்த்து அனைவரும் என்னடா நடக்குது இங்க ? நான் பார்க்கிறது கனவா நிஜமா டா நிரஞ்சா என்னடா இது ஒரே நைட்ல ஒபாமா ஆன மாதிரி என் அண்ணன் இப்படி மாறிட்டாரு என்று நிரஞ்சன் கையைக் கிள்ளி வேறு பார்த்துக் கொண்டான்.

டேய் ஏன்டா கிள்ளுற நிஜமாதான்டா உன் அண்ணன் குப்புற விழுந்து கிடக்குறான் என்று அவனும் ஷாக்கை குறை ஷாக்கை குறை என்ற ரேஞ்சில் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

(வாங்க என்ன நடக்குதுன்னு நாமும் பார்க்கலாம்.. வாங்கோ வாங்கோ ஆதி சர்கஸ் காட்டப் போறான்)

தன் பின்னே வந்தவளை இழுத்து தன் எதிரில் நிற்க வைத்தவன் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகுட்டில் வைத்து ஏன்டி உன் வாயெல்லாம் என்கிட்ட மட்டும்தானா.. அவங்கள பேச விட்டுட்டு அப்படியே செஞ்சு வைச்ச சிலை மாதிரியே நிக்குற என்று அவளுக்கு மட்டும் கேட்டுக்கும்படி கூறியவன் தன் அத்தையிடம் என் பொண்டாட்டிக்கு நான் தான் குங்குமம் வச்சி விடனும்னு எனக்கு ஒரு ஆசை அத்தை அதான் அவளை வைக்க விடல .. இப்போ உங்களுக்கு நல்லா புரிஞ்சுருக்குமே என்று அவள் தன் மனைவி என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லாது சொல்லிவிட்டான்.

ஆஹ இவங்க பேசின எல்லாத்தையும் கேட்டுட்டாரு என்று மித்ரா கணவனின் செயலை அனுமானித்துக் கொண்டிருக்கும் போதே 

சூப்பர் மாமா இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என்று நிரஞ்சனா ஆதியிடம் ஹை பை குடுத்தவள் பார்த்தியா மித்து எங்க ஆதி மாமா எவ்ளோ பெரிய காதல் மன்னன் பார்த்தியா என்றவள் ஆதியின் கையை எடுத்து மித்ராவின் வலது கையில் பிடித்துக் கொடுத்து என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் மித்ரா கடைசி வரை எங்க மாமாவ கண்கலங்காம பார்த்துக்கோ என்று வராத கண்ணீரைத் தட்டி விட ஏய் வாண்டு உன் சேட்டையை ஆரம்பிச்சிட்டியா என்று ஆதி அவள் தலையில் தட்ட அந்த இடமே கலகலப்பானது.

சரி கண்ணா வாங்க நேரமாச்சு கோவிலுக்கு கிளம்பலாம் என்று சுமதி கூற அனைவரும் கிளம்பினர்.

மோகமுள் தீண்டும்…


மோகமுள் - 18 படிக்க இங்கே சொடுக்கவும்..


கதையை தொடர்ந்து படிக்க இந்த தளத்தை follow button ✅ press panni follow செய்து கொள்ளுங்கள் மக்களே.. 

உடனுக்குடன் update வரும்.. 

உங்கள் கருத்துகளை comments section - ல் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி..






Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments