மோகம் - 16 :
இன்று ராணியின் வீட்டிற்குப் பெண் கேட்க செல்வதாக இருந்தார்கள்.
மித்ரன் விக்கியிடம்
"நான் என் கார்ல வரேன் மச்சான் ,நீங்க முன்னாடி போங்க சரியா..." என்றதும் விக்கி "சரி" என்று வைத்து விட்டான்.
மித்ரனின் பெற்றோர் அடுத்த வாரம் வருவதாகக் கூறியிருந்தார்கள்.
மதுவிடம் கிளம்ப சொன்னவன் சிவகாமி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பத்திரத்தை எடுத்து வைத்தான்.
அவன் பத்திரத்தை எடுத்து வைப்பதைப் பார்த்து
"சித்திக் கிட்ட கொடுக்கப் போறீங்களா அத்தான்" என்றதும் அவன் ஆமென என தலையாட்ட அவன் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டாள்.
இருவரும் கிளம்பி வண்டியில் போகும் போது
"அத்தான் எனக்கு கொஞ்சம் சாக்லேட்ஸ் வாங்கி தாங்க" என்றதும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வண்டியை நிறுத்தினான்.
"உனக்கு எவ்ளோ வேணுமோ வாங்கிகோடா" என்றவன் பழங்கள் ,சில திண்பண்டங்கள் வாங்கினான்.
"இது எதுக்கு"
"முதல் தடவை உங்க வீட்டுக்குப் போறோம்ல அதான்."
"அங்கேயே போறோம்"
"அங்க போகாம ராணி வீட்டுக்குப் போனா நல்லாருக்காதுடா, உங்க வீட்டுக்குப் போய்ட்டு அப்புறம் ராணி வீட்டுக்கு போவோம் சரியா".
"ம்ம்"
"ஆமாம் நீ சாக்லேட்ஸ் இதுவரைக்கும் சாப்டது இல்லையே "
"இது வானுக்கு அத்தான் அவ சாக்லேட்ஸ்னா விரும்பி சாப்பிடுவா அதான் அவளுக்குக் கொஞ்சம் வாங்கினேன்" என்றாள்.
இன்னும் கை நிறைய சாக்லேட்ஸை எடுத்தவன் அதையும் சேர்த்து பில் போட்டான்.
பின் இருவரும் கிளம்பினர்.
மதி வீட்டிற்கு சென்றதும் சிவகாமி "அங்கயே நில்லுங்க" என்றதும் "ஐயோ.. சித்தி ஏன் இப்படி பண்றாங்க "என்று நினைத்துக்கொண்டே மித்ரனைப் பார்கையில் அவன் முகத்தில் ஒன்றும் கண்டுபிடிக்க முடிக்கவில்லை.
பின் திரும்பியவள் அதிர்ந்தாள்.
அங்கு சிவகாமி ஆரத்தி தட்டைக் கையில் ஏந்தியவாறு வந்தார்.
மதி மித்ரனைப் பார்த்தாள் ,மித்ரனுக்கும் இது அதிர்ச்சி தான் அவனும் இதை எதிர்ப்பார்க்கவில்லை.
சிவகாமி இருவருக்கும் ஆரத்தி சுற்றி விட்டு "வீட்டுக்குள்ள போங்க மாப்பிள்ளை" மதியிடம் "மாப்பிளையை உள்ளே அழைச்சிட்டு போ" என்று விட்டு ஆரத்தியைக் கொட்டச் சென்றார்.
வீட்டுக்குள் சென்றவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றாள் வான்மதி
"என்னக்கா அதிர்ச்சி மேல அதிர்ச்சியா" என்று கேட்டதும் மது ஆமென தலையசைக்கவும் "இனி அப்படிதான் " என்றாள்.
அவளிடம் ஏதோ கேட்க வந்த மது சிவகாமி வரவும் அமைதியானாள்.
மித்ரன் தான் கொண்டு வந்த பழங்கள் அடங்கிய பையை மதி கையில் கொடுத்துக் குடுக்க சொன்னான்.
அவன் கண்கள் சிவகாமியைக் கூர்மையாக அளவிட்டது.
மதுவிடம் பாசமாக பேசவில்லை என்றாலும் முன்பு போல குரோதத்துடனும் பார்க்கவில்லை.
சிவகாமி மதியிடம் "மாப்பிள்ளையை உன் அறைக்கு அழைச்சிட்டு போ சாப்பாடு ரெடி ஆனதும் கூப்பிடுறேன்...அப்போ வாங்க இன்னும் அந்த தம்பி (விக்கி) வர தாமதம் ஆகுமாம் கொஞ்ச நேரம் முன்னதான் போன் வந்துச்சுன்னு ராணி சொன்னா உள்ள கூட்டிட்டு போ".
வாங்கி வந்த பைகளை வான்மதியிடம் கொடுத்தாள்.
அவளை பார்த்து "என்ன வானு இது.. நம்பவே முடியலை "என்று கேட்டதும் "நீ முதல்ல மாமாவ கூட்டிட்டு ரூமுக்கு போ எல்லாம் அப்புறம் சொல்றேன்" என்றவள்
"ஹே எனக்கு சாக்லேட்ஸ் வாங்கிருக்கியா சூப்பர்" என்று குதூகலித்தாள்.
பின் இருவரும் அறைக்குள் வந்தனர். "அத்தான்.."என்று சொல்ல வந்தவளை
"உங்க சித்திய பத்தி எதும் பேசாத மது என்னால அவங்களை நம்ப முடியாது " என்றதும்
"ஏன் அத்தான் அவங்க முன்னாடி என்னை பேரு சொல்லிக் கூட கூப்பிடமாட்டாங்க இப்போ பாருங்க. ஏன் அத்தான் தப்பு பண்ணினவங்க மாறக்கூடாதா" என்று கேட்டாள்.
எதையோ நினைத்துக் கண்களை மூடி திறந்தவன்
"மதி என்னால அவங்களை மன்னிக்கவும் முடியாது அவங்க உனக்கு பண்ணின கொடுமைகளை மறக்கவும் முடியாது "என்றான்.
"சரி அத்தான் நான் எதும் பேசலை நீங்க கோபப்படாதீங்க".
அப்பொழுது கதவைத்தட்டிவிட்டு வான்மதி மோர் இருவருக்கும் எடுத்து வந்தாள்.
"இந்தாங்க மாமா எடுத்துக்கோங்க" என்றதும் எந்த பிகுவும் செய்யாமல் எடுத்துக் கொண்டான்.
பின் மதியிடம் தட்டை நீட்டி "எடுத்துக்கோக்கா" என்றவள் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததைக் கூறினாள்.
"ராணி அக்கா இரண்டு நாளுக்கு முன்னாடி வந்து பொண்ணு பாக்க வரப் போறதாகவும் அதுக்கு நீங்களும் வருவீங்க என்று அம்மாகிட்ட சொன்னதும் உன் அறையைச் சுத்தமா துடைச்சு கட்டில் மெத்தையெல்லாம் அம்மா தான் போட்டுச்சுக்கா.."
"என்னால நம்பவே முடியலைக்கா எப்படியோ இப்போவாச்சும் திருந்துச்சே" என்று பெருமூச்சு விட்டவள்
"சரி இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்க சாப்பாடு ரெடி ஆயிடும் சாப்பிட்டு ராணி அக்கா வீட்டுக்கும் போலாம்" என்று கூறிவிட்டு சென்றாள்.
பின்பு சிவகாமி அழைத்ததும் இருவரும் சென்றார்கள்.
மித்ரன் எதுவும் பேசவில்லை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய யாரிடமும் பேசவில்லை.
அப்பொழுது தான் ராமரும் வந்தார்.
மித்ரனை விசாரித்தவர் தானும் சாப்பிட அமர்ந்தார்.
சிவகாமிக்கு இவ்வளவு சமைக்க தெரியும் என்று இன்றுதான் ராமர் பார்த்தார்.
அனைத்தும் வெஜ்ஜாக இருக்கவும் ஏன் தோட்டத்துல நிக்குற கோழிய அடிச்சுக் குழம்பு வச்சிருக்கலாம்ல என்றதும்
"அட கூறுகெட்ட மனுஷா மறுவீட்டு விருந்துல அசைவம் செய்யக்கூடாது" என்று சாடினார்.
பிறகு அனைவரும் சாப்பிட்டதும் ராணி வீட்டிற்கு சென்றனர்.
அப்பொழுது தான் விக்கியின் காரும் வர மித்ரன் அங்கே நின்று அவர்களிடம் பேசிக்கொண்டே தங்கி விட மதி ராணி வீட்டினுள் சென்றாள்.
பின்பு பெண் பார்க்கும் படலம் முடிந்து திருமணத் தேதியை முடிவு செய்தனர்.
இன்னும் மூன்று மாதம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம் எனவும் விக்கிக்கு முகம் தொங்கி விட்டது.
அதை பார்த்து சிரித்த மித்ரன் "விடு மச்சான் இவ்ளோ நாள் பொருத்துட்ட இன்னும் கொஞ்சநாள் பொறுக்க மாட்டியா " என்று அவன் சொன்னது போலவே மித்ரனும் சொல்லி காட்டினான்.
" நீ எல்லாம் ஒரு நண்பனாடா சிரிக்கிற" என்றதும்
"மச்சான் உன் குயின் முறைக்கிறாங்கடா" என்று கூறி சிரித்தான்.
பின்பு அனைவரும் பேசி முடித்து வெளியே வந்தனர்.
அப்பொழுது விக்கி கிளம்பிவிட இவர்கள் இருவரும் சிவகாமியிடம் சொல்லி கொண்டு கிளம்பலாம் என்று வந்தவர்களை 'இரண்டு நாள் இருந்துட்டுப் போலாமே' என்று சிவகாமி கேட்கவும் மித்ரன் மதியைப் பார்த்தான்.
'இருக்கலாம்' என்று அவள் கண்களால் கெஞ்சவும் சரி என்று ஒத்துக் கொண்டான்.
அப்பொழுதுதான் நினைவு வந்தது வீட்டுப் பத்திரத்தைக் கொடுக்கவில்லை என்று பின்பு எடுத்து சிவகாமியிடம் கொடுத்தான் ஏதோ பேச வந்த சிவகாமியிடம்
"நீங்க மதுவ கல்யாணம் பண்ணவிட மாட்டீங்கன்னு தெரிஞ்சு தான் பத்திரத்தைக் கொடுக்கலை. இனி இந்த பத்திரம் தேவைப்படாது. "
"இனியாரலும் என்கிட்ட இருந்து மதுவ பிரிக்க முடியாது" என்று கூறினான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை மதுவே அவனை விட்டு பிரிந்து செல்வாள் என்று.
இருவரும் வீட்டில் தங்கிக் கொள்ள ஒத்துக் கொண்டதும் அவர்களுக்கு மாற்றிக் கொள்ள உடை இல்லை என்றதும் சிவகாமி மித்ரனிடம் தன் கணவனின் புது வேட்டியை எடுத்துக் கொடுத்துக்கட்டிக்க சொன்னார்.
மதிக்கு வான்மதியின் சட்டை பாவாடையை எடுத்துக் கொடுத்து உடுத்த சொன்னவர் "நான் டவுனுக்கு போய் உங்களுக்கு புது துணி எடுத்துட்டு வரேன்" என்றவர் கிளம்பினார்.
இங்கு மித்ரனோ அவஸ்தையோடு அமர்ந்திருந்தான் வேட்டி அவிழ்ந்து விடுமோ என்று.
அவன் ஒரு மாதிரி அமர்ந்திருக்கவும்
"என்ன அத்தான் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க".
"ஒன்னுமில்லை மதி.. இந்த வேட்டி அவுத்துடுமோனு பயமா இருக்கு... அதான்.."
அவன் சொன்னதைக் கேட்டு சிரித்தவள்
"அத்தான் நல்லா இறுக்கமா கட்டினா எப்படி அவிழும்" என்றவள் அவனுக்கு வேட்டியை இறுக்கி கட்டி விட்டாள்.
அவள் கை அவன் இடுப்பில் படவும் என்னென்னவோ ஆனான்.
அப்பொழுது தான் பார்த்தான் அவள் பாவாடை சட்டை அணிந்திருந்ததை .
வெளியே செல்ல எத்தனித்தவளை இடுப்பில் கைக்கொடுத்து தூக்கியவன் கட்டிலில் அமர்ந்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
"அத்தான் என்ன பண்றீங்க விடுங்க .. இங்கதான் எல்லாரும் இருக்காங்க விடுங்க.."
அவன் தூக்கவும் சட்டை லேசாக விலகி இருக்க அவள் இடுப்பை வருடிக் கொண்டே கழுத்தில் முகத்தைப் புதைத்து தன் தாடையால் தேய்த்து அவளைச் சிலிர்க்க வைத்தவன்
"மது இந்த பாவாடை சட்டையில ரொம்ப சின்ன பொண்ணா தெரியுரடி " என்றான் கிசுகிசுப்பாக.
"அத்தான் நான் சின்ன பொண்ணு தான்" என்று சிணுங்கினாள்.
"நீ சின்ன பொண்ணு தான் டி.. ஆனா பார்த்தா அப்படி தெரியலை.. எல்லாம் பெருசா இருக்கு..." என்று அவள் மார்பை அழுத்தினான்.
"அத்தான்" என்று மயக்கமாக கூறி அவன் தோளில் அப்படியே பின்னால் சாய்ந்தாள்.
அவள் பின்னால் சாயவும் போட்டிருந்த சட்டை மேலேறி அவள் வயிற்றை அப்பட்டமாக காட்டியது.
அவன் கைகள் அவள் வயிற்றை வருடிக் கொடுக்க "அத்தான்" என்று அவன் கையோடு தன்கையை வைத்து அழுத்தினாள்.
அவளைத் தன்பக்கம் திருப்பி அமர வைத்தவன் "மது எனக்கு உம்மா வேணும்டி " என்று அவள் உதட்டை தன் உதடு கொண்டு ஒற்றி எடுத்தான்.
"அதான் இப்போ கொடுத்தீங்களே அத்தான்".
"நீ கொடுடி" என்று இழைந்தான்.
''இப்போ நான் கொடுக்குறதுல நீங்க இனிமே என்கிட்ட கேட்கவே கூடாது அந்த மாதிரி கொடுக்கப்போறேன்".
"நீ முதல்ல குடு டி" என்று அவளைத் தன்னோடு இறுக்கினான்.
மெதுவாக அவன் கீழுதட்டை தன் பற்கள் கொண்டு கவ்வி தன் வாய்க்குள் ஊரப் போட்டு அவன் நாக்கை தன் இதழ்களால் இழுத்து மெதுவாக கடிக்கவும் துள்ளினான்.
அவன் தலையைப் பின்னுக்கு இழுக்க பார்க்க அவன் கழுத்தில் கைக்கோர்த்து நகரவிடாமல் தன் முகத்தோடு ஒட்டி வைத்துக் கொண்டு அவன் உதட்டைச் சப்பி இழுத்து சுவைத்தாள்.
அவன் கைகள் அவனுக்கு பிடித்த இடத்தின் அளவை கசக்கி அழுத்தி பிசைந்து அளந்து கொண்டிருந்தது.
அவள் அழுத்தி உறியவும் அதற்குமேல் பொறுக்க முடியாமல் அவளை அப்படியே மெத்தையில் கிடத்தி படர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து சிவகாமி வந்து கதவை தட்டவும் மது எழுந்து உடையைச் சரி செய்து கொண்டு வெளியே சென்றாள்.
இரண்டு செட் உடைகள் இருவருக்கும் வாங்கி வந்திருந்தார்.
"ஏய் சூப்பரா இருக்குக்கா புடவை" என்று வான்மதி கூறினாள்.
சிவகாமி மதுவிடம் அனைத்தையும் அறைக்குள் எடுத்துக் கொண்டு போக சொன்னார்.
அவள் சோர்ந்து தெரியவும் தான் சிவகாமி அவளை அறைக்கு போக சொன்னார்.
அறைக்குள் வந்தவள் துணிகளை வைத்து விட்டு சோர்வாக இருக்கவும் மித்ரன் அருகில் படுத்துக்கொண்டாள்.
பின் ஆறு மணி போல் மித்ரன் எழவும் அவன் நெஞ்சில் தலைவைத்து கையையும் காலையும் அவன் மேல் போட்டுக்கொண்டு தூங்குவதைப் பார்த்தான்.
சிறு குழந்தைப் போல் வாயை லேசாக பிளந்து கொண்டு தூங்கும் அவளைக் கண்டதும் ஆசையாக அவள் உதட்டில் ஒரு முத்தத்தைப் பதித்தான்.
பின் அவளை எழுப்பி "மதி மணி ஆறு மணி ஆயிடுச்சுடா எழுத்துக்கோ" என்று கன்னத்தை தட்டினான்.
"ஐயோ ஆறு மணி ஆயிடுச்சா சித்தி திட்டப்போறாங்க " என்று பயந்தவளை
"அதெல்லாம் திட்டமாட்டாங்க உன் சித்தி மாறிட்டாங்க'' என்றதும் ஆச்சரியமாய் பார்த்தாள்.
"எப்படி அத்தான் சொல்றீங்க நீங்க தானே சொன்னீங்க நம்ப மாட்டேன்னு அப்புறம் இப்போ எப்படி "
"அதெல்லாம் அப்படிதான் ஆனால் என்னால சகஜமா பேச முடியாது அவங்க பண்ணினதை மறக்கவும் முடியாது" என்று அவள் காலில் உள்ள வடுவை வருடி விட்டான்.
பின் இருவரும் வெளியே சென்றனர்.
மறுநாள் வான்மதி மதுவிடம் "அக்கா வாக்கா போகலாம் பம்பு செட்ல குளிச்சிட்டு வரலாம் ரொம்ப நாள் ஆச்சுக்கா வா" என்று நச்சரித்துக்கொண்டு இருந்தாள்.
பின் சிவகாமி இருவரையும் பார்த்து ''போய்ட்டுவாங்க ஆட்டம் போடக்கூடாது அப்பா இருந்தார்னா அவர்கிட்ட சொல்லிட்டு போங்க வெளியே நிப்பாரு" என்றதும் இருவரும் கிளம்பினர்.
மதி மித்ரனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
பின் சிவகாமி சமையற்கட்டில் சாம்பார் வைத்துக்கொண்டு இருக்க மித்ரன் வெளியே சேரில் அமர்ந்து தன் போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது ராணியின் அம்மா அழைக்கவும் சிவகாமி வெளியே நின்று ஏதோ பேசிவிட்டு வந்தார்.
பின் காய் வெந்துவிட்டதா என்று பார்க்க கரண்டியைக் கையில் எடுத்தவர் பட்டென்று சூடு தாங்க முடியாமல் கீழே போட்டார்.
மித்ரன் தான் அவர் வெளியே சென்றதும் கரண்டியை அடுப்பில் வைத்து பின் எடுத்து இருந்த இடத்தில் வைத்து விட்டான்.
கதவில் சாய்ந்து நின்ற மித்ரன்
"என்ன எரியுதா இப்படிதானே என் மதுவும் வலியில் துடிச்சிருப்பா.. நீங்க இப்போ மாறிட்டாலும் என் மதுவை கொடுமை படுத்தினதெல்லாம் என்னால மறக்க முடியாது" என்றான்.
"எனக்கு தேவை தான் தாயில்லா புள்ளைய அப்படி பண்ணி இருக்கக்கூடாது தான்" என்று வருந்தியவர்
"இனி அப்படி நடந்துக்க மாட்டேன் என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை" என்றதும் அவன் ஒன்றும் பேசாமல் சென்று விட்டான்.
இருவரும் குளித்துவிட்டு வந்ததும் மது மித்ரனிடம் சென்று "அத்தான் நீங்க வந்துருக்கலாம் ஜாலியா இருந்துச்சு தெரியுமா" என்று கூறினாள்.
"ஹம்ம் மதியமா நம்ம போகலாம்."
அவன் அப்படி சொன்னதும் வெளியே ஓடி "ஏய் வானு மதியம் அத்தானும் வராங்களாம்" என்றதும்
" சரி ஜாலி தான் ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க"
" ஓ நீ வரலையா"
" இல்லக்கா நைட் ஊருக்கு கிளம்ப எல்லாம் எடுத்து வைக்கணும்" என்றவள்" நீங்க போய்ட்டு வாங்க" என்றாள்.
பின்பு அனைவரும் சாப்பிட்டு ஓய்வெடுக்க இவர்கள் இருவரும் வயலுக்கு சென்றனர்.
அங்கிருந்த மாமரத்தை காட்டி
"இது எங்க அம்மா வச்ச மரமாம் அத்தான்".
"அதனால் எப்பவாச்சும் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா இங்க வந்து இந்த மரத்தடியில உட்கார்ந்துடுவேன்."
"இங்க காத்து வேற சூப்பரா அடிக்குமா இங்கையே சில நேரம் தூங்கிடுவேன்"
"இங்கு தூங்கும் போது ஒரு நாள் எனக்கு சால்வைலாம் யாரோ போர்த்தி விட்டுருக்காங்க அத்தான்" என்று சால்வையைப் போர்த்திவிட்டவனிடமே சொன்னாள்.
"அந்த சால்வைய இன்னும் வச்சுருக்கேன் ஆனா அது யாரோடதுன்னுதான் தெரியல."
அவள் அப்படி சொல்லவும் மனதுக்குள் சிரித்தவன் வெளியில் ஒன்றும் தெரியாதது போல் "ம்ம் " கொட்டிக் கொண்டிருந்தான்.
பின் பம்புசெட்டு இருக்கும் இடத்திற்கு வந்ததும் "இங்க தான் ஒருநாள் என்னை பாம்பு கடிச்சிடுச்சு "என்று சொன்னாள்.
அது அவனுக்கும் தெரியும் அவன் வண்டியில் தான் மதியை ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றனர்.
அன்று நடந்தது இன்னமும் அவனால் மறக்க முடியவில்லை.
அன்றுதான் தன் காதலை உணர்ந்த தினம்.
வெறும் ஈர்ப்பு என்று நினைத்திருந்தவன் அன்றுதான் தன்னுடைய உயிரே அவள் தான் என்றும் அவள் இல்லை என்றால் தனக்கு இவ்வுலகில் எதுவும் இல்லை என்று அவனுக்கு புரிய வைத்த தினம்.
அவன் தவித்த தவிப்பை விக்கி மட்டுமே அறிவான்.
அவளை அதிலிருந்து காப்பது போல் நெருங்கி அணைத்துக் கொண்டான்.
"அத்தான் வெட்டவெளில என்ன பண்றீங்க விடுங்க " என்றவள் விலகி நிற்க அருகில் இருந்த தொட்டியைக் காட்டி
"இறங்கு மதி குளிக்கலாம்" என்றான் குறும்புடன்.
"அத்தான் எனக்கு இதுல இறங்க பயம் அத்தான்...வேண்டாம் நான் வரலை நீங்க இறங்கி குளிங்க நான் மோட்டார் ஆன் பண்றேன்..." என்றவள் அங்கிருந்த மோட்டர் அறைக்குள் சென்று ஆன் செய்து விட்டு வந்தாள்.
அவள் வந்து தொட்டியின் அருகே அமரவும் அவள் எதிர்ப்பார்க்காத நேரம் உள்ளே இழுத்திருந்தான்.
0 Comments