Advertisement

Ad code

மோகத்தில் முக்குளிக்க வா அழகே - 15



 மோகம்-15:


மதி தூக்கக் கலக்கத்தில் கண் விழித்துப் பார்க்க அறை இருட்டாக இருக்கவும் இன்னும் விடியலைப் போல என்று நினைத்தவள் தன் நெஞ்சில் முகம் புதைத்துத் தூங்கும் கணவனை அணைத்துக் கொண்டுத் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.


சிறிது நேரம் கழித்து நெஞ்சில் சுருக்கென்ற வலி ஏற்ப்படவே "ச்சு" என்று தட்டி விட்டு தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.


மித்ரன் தான் தூக்கம் கலைந்ததும் தன் வாய் அருகே இருந்த திராட்ச்சையைக் கடித்தான். 


மது கண்டுக் கொள்ளாமல் தட்டி விட்டதும் கோபம் கொண்டு வாயில் வைத்து இழுத்துச் சப்பி உறிந்தான்.


(கோபப்பட்டு பண்ற வேலையாடா இது…)


அவன் உறியவும் தூக்கம் கலைந்தவள் "அத்தான் தூக்கம் வருது விடுங்க, நீங்க என்னைத் தூங்கவே விடமாட்றீங்க'' என்று அவனை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.


அவன் சிரித்துக் கொண்டே 

"மது எழுந்திரி மணி மூணு ஆச்சு" என்றான்.


"அத்தான் இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு எழுந்திரிக்க.. நீங்க ஏன் நடு சாமத்துல எழுப்பி விடுறீங்க'' என்றவளின் காதருகே குனிந்து கிசுகிசுப்பாக 


"மது நைட் மூணு மணி இல்லைடி, பகல் மூணு மணி ஆயிடுச்சி". 


அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியானவள் எழுந்தாள்.


அறை அப்பொழுதும் இருட்டாக இருக்கவே 


"ஏன் அத்தான் பொய் சொல்றீங்க எனக்கு தூக்கம் வருது தூங்க விடுங்க" என்று அவனை இழுத்துத் தன் மார்பில் புதைத்துக் கொண்டு தூங்கினாள்.


அவள் செயலில் அடக்க மாட்டாமல் சிரித்தவன் 


"மது உண்மையா விடுஞ்சிடுச்சி இங்க பாரு" என்றவன் மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்துப் பட்டனை அமுக்க திரை சீலைகள் அனைத்தும் விலகி அறையின் விளக்குகள் ஒளிரத் தொடங்கின. 


அவன் சொல்லவும் ஜன்னலின் வழியே பார்த்தவள் "ஐயோ ஆமாம் அத்தான் விடிஞ்சிருச்சி" என்றவளைப் பார்த்து "அது விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு மது" என்று சிரித்தான். 


"அப்போ உண்மையாவே மணி மூணு ஆயிடுச்சா? அச்சோ நான் இப்போ எப்படி கீழேப் போய் அத்தை முகத்துல முழிப்பேன் " என்றவள் 


"எல்லாம் உங்களால் தான் அத்தான் என்னை நேற்று சீக்கரமா தூங்க விட்டுருந்தீங்கன்னா நான் முன்னாடியே எழுந்திருப்பேன்".


"அதெல்லாம் கவலைப் படாத மது இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்தோம்னா சரியா போய்டும் "


"எப்படி அத்தான்"


"அதுவா இப்போ மணி மூணு ஆகுதா இன்னும் கொஞ்சம் நேரம் ஆச்சுனா நைட் வந்துருமா நைட் வந்துடுச்சுன்னா திராட்சை, ஆரஞ்சு பழம் எல்லாம் சாப்பிட்டா அடுத்த நாள் காலைல எழுத்துக்கலாம் ஓகேவா"


"அத்தான் நான் கூட ஏதோ யோசனை சொல்வீங்கன்னு பார்த்தா இப்படி சொல்றீங்க" என்று தலையணையால் அவனை அடி வெளுத்தாள். 


"மதுக்குட்டி நீ இப்போலாம் வர வர வைலண்டா மாறிட்டே வர" என்று குற்றம் சாட்டினான்.


"நான் சொன்னதைத் தவிர உனக்கு வேற ஆப்ஷன் இல்லை மதுக்குட்டி" என்றான்.


"சரி விடுங்க பார்த்துக்கலாம்" என்றவள் எழ முனைய அவள் கையைப் பிடித்துத் தடுத்தவன்


"எங்க போற குளிச்சுட்டுக் கீழேப் போறேன் அத்தான்"


"அதெல்லாம் வேண்டாம்" என்று திரும்ப ரிமோட் கொண்டு அறையை இருட்டாக்கியவன் அவளை இழுத்துத் தன்மேல் போட்டுக் கொண்டான்.


"அத்தான் விடுங்க நான் போறேன்"


"வாய்ப்பே இல்லை மதுமா இப்போதைக்கு உன்னை விட மாட்டேன்" என்றவன் "இப்போ நான் திராட்சை சாப்பிட போறேன் டிஸ்டர்ப் பண்ணாத மதுக்குட்டி " என்றவன் அதை ஜவ்வாய் இழுத்து வாயில் அதக்கிக் கொண்டான். 


"ஆ..அத்தான்" என்று மார்போடு தலையை அழுத்த இன்னும் அழுத்தமாக இழுத்து உறிந்தான்.


அவனது ஒரு கை மார்பைப் பற்றிக்கொண்டும் மற்றொரு கை அவள் இடையில் விளையாடியது. 


அவன் செய்கையை தாங்க முடியாதவள் நெளிந்தாள்.


அவள் நெளியவும் அவள் மேல் படர்ந்து தன் வேலையைத் தொடர்ந்தான்.


பின் சிறிது நேரம் கழித்து அவன் தூங்கவும் மது குளித்து வந்தாள். 


ஆனால் அவளுக்கு வெளியே எப்படி செல்வது என்று சங்கடமாக இருந்தது.


சிறிது நேரம் கழித்து மித்ரன் கண் விழித்துப் பார்த்தான். 


புது மலராக தலை குளித்துப் பலப்பலவென்று இருந்த வட்ட முகம் அவனை மிகவும் ஈர்த்தது.


அவள் படப்படப்பாக இருக்கவும் அவளை அழைத்தான். 


"மது இங்க கொஞ்சம் வா எனக்கு உடம்பு சரியில்லைனு நினைக்கிறேன்" என்று பாவமாக சொன்னான் .


அவள் உடனே பதறி அவன் அருகில் வந்து 


"என்ன அத்தான் ஆச்சு" என்று அவன் நெற்றியில் கழுத்தடியில் கை வைத்துப் பார்த்தாள்.


லேசாக சுடவும் 


"ஐயோ, ஆமாம் அத்தான் சுடுது ,வாங்க அத்தான் ஹாஸ்பிட்டல் போகலாம்" என்றவளிடம் 


"நீ போய் காஃபி போட்டு எடுத்துட்டு வா மது.. மாத்திரைப் போட்டா சரியா போய்டும்" என்றவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். 


மது கீழே சென்ற போது வீட்டில் யாருமே இல்லை..


"எங்க போயிருப்பாங்க வேலை செய்றவங்களையும் காணுமே.. எங்கே போய்ட்டாங்க எல்லோரும் " என்று யோசித்தவள் காஃபியைப் போட்டு எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள். 


குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்கவும் 


"இப்போ எதுக்கு இவங்க குளிக்குறாங்க.. ஏற்கனவே உடம்பு சுடுது" என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே இடுப்பில் வெறும் டவலுடன் அவன் வர இவளுக்கு முகம் சிவந்து மூச்சுத் தடைப்பட்டது.. திரும்பி நின்றுக் கொண்டாள்.


அவன் அவளை ஏமாற்றாமல் பின்னால் இருந்து அணைத்து "யாருமே வீட்டுல இல்லையா மது" என்று கிசுகிசுப்பாக காதுமடலை உதட்டால் வருடியவாறு கேட்டான்.


அவன் செயலில் சிலிர்த்தவள் "ஆமாம் அத்தான் எங்க யாரையும் காணும்"


"அம்மாவும் அப்பாவும் லண்டன் நேற்று இரவே கிளம்பிட்டாங்க''


"ஏன் அத்தான்"


"அப்பாக்கு அங்க ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும் அப்படியே நந்துவையும் பார்த்துட்டு வரலாம்னு அம்மாவும் கிளம்பிட்டாங்க''. 


"என்கிட்ட சொல்லவே இல்லை அத்தான்"


"நான் தான்டா அவங்ககிட்ட நான் மதுகிட்ட சொல்லிக்கிறேன் என்று சொன்னேன்".


"அப்புறம் வீட்டுல ஒருத்தரையும் காணும் வேலை செய்றவங்கலாம்" என்றவளைப் பார்த்து " நான் இரண்டு நாளைக்கு லீவு குடுத்துருக்கேன்". 


"ஓ…" என்று உதட்டை வலைத்தவளை நெருங்கியவன் 


"மது இங்க யாருமே இல்லை நீயும் நானும் மட்டும் தான் இப்போ உன்னை என்ன வேணாலும் நான் பண்ணுவேன்" என்று வில்லன் போல் பேசியவனைப் பார்த்து சிரித்தவள் " அத்தான் உங்களுக்கு செட்டே ஆகல " என்று சிரித்தாள். 


"மிஞ்சிமிஞ்சிப் போனா திராட்சைச் சாப்புடுவீங்க இன்னும் கொஞ்சம் போனா " என்று ஏதோ சொல்ல வந்து நிறுத்தியவளைக் கண்டு 


"அப்புறம் என்ன பண்ணுவேன் மது " என்று அவள் இடையை வருடினான்.


சிலிர்த்தவள் "அத்தான்.." என்று அவன் மேல் மயக்கமாக சாய்ந்தவளை திருப்பி அவள் இதழைச் சிறை செய்தான்.


அவன் முத்தத்தில் மயங்கி நின்ற வேளை அவள் உடைகளை களைந்து தன் உடல் கொண்டு அவளைப் போர்த்தினான். 


திராட்சையைப் பற்களால் லேசாகக் கடித்து அவளைத் துள்ள விட்டு "இதை மட்டும் என்னால விடுவே முடியலை மது.. இது தினமும் வேணும்னு தோணுது" என்றவனின் வாயில் வைத்து அவனை பேச விடாமல் செய்தாள்.


(உடம்பு சரியில்லாதவன் பண்ற வேலையாடா இது...அவ்வ்வா)


சிவகாமி காலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார்.


ஒன்பது மணி போல எழுந்து வந்த வான்மதி "அம்மா காஃபி" என்றவளைப் பார்த்து முறைத்தார். 


எதும் பேசாமல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். 


"அம்மா "என்று அவள் கத்தவும்


"இருடி ஒரு கை தானே இருக்கு, நானே எத்தனை வேலைய செய்வேன் இதுல இன்னும் கொஞ்ச நேரத்துல வயலுக்குப் போகலையான்னு நச்சரிப்பாரு அந்த மனுசன்"


"ஓ... இப்போ தான் இதெல்லாம் உனக்கு தெரியுமா.. மதி இருக்கும் போது மட்டும் அவளை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவ.. ஏன் நீ அஞ்சு மணிக்கு எழுந்து வேலை செய்யுறது"


"ஏன் சீக்கரம் எழ முடியலையோ" என்று எகத்தாளமாக கேட்டாள்.


"ஏன் இவ்ளோ பேசுற நீ எழுந்து வேலை செய்ய வேண்டியது தானே.. ஒரு காஃபி போடக்கூடாதா.. நான் தான் வேலை செய்றேன்ல"என்று கடுப்பாகக் கேட்டார். 


"நீ தானே சொன்ன.. வேலை செய்யக் கூடாதுன்னு அதான் நான் செய்யலை". 


"நான் எப்போ டி உன்னை செய்ய கூடாதுன்னு சொன்னேன்.."


"நீ தான் நான் மதி தனியா வேலை செய்யுறான்னு செய்யப் போனா நீ என்ன கூப்பிட்டுச் செய்யக் கூடாதுன்னு சொன்னல்ல.. அதான் அப்போவும் செய்யல்ல இப்போவும் செய்ய மாட்டேன்"


"இப்படி தானே மதியும் எல்லா வேலையும் செய்வா வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வயலையும் வேலை செய்வா"


"நீ வீட்டு வேலைக்கே இப்படி சலிச்சுக்குற " என்று நொடித்தாள்.


"எல்லா வேலையும் நீயே செஞ்சா தான் மதி எவ்ளோ கஷ்டப் பட்டுருக்கானு தெரியும் " என்றவள் "எனக்கு நீ போடுற காஃபி ஒன்னும் வேண்டாம்" என்றவள் தனதறைக்கு சென்று விட்டாள். 


"வர வர இந்த கழுதைக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு" என்று புலம்பிக் கொண்டே வேலைகளைச் செய்தார்.


( சிவகாமி இப்படி தனியே புலம்ப விட்டுட்டாங்களே உன்னை…. )


சிறிது நேரம் கழித்து ராமர் வந்தார் 


"ஏய் இன்னும் அடுப்படியிலே எவ்ளோ நேரம் உட்காந்துருப்ப சோத்த எடுத்தா நான் சீக்கரம் காய் எடுத்துட்டுப் போகனும்"


"பத்து மணிக்கு மேல போனா ஒரு கடைக்காரனும் காய்களை வாங்க மாட்டுறானுங்க அப்படியே எடுத்தாலும் ரொம்ப கம்மியான விலைக்குத் தான் எடுத்துக்குறானுங்க இன்னும் என்ன பண்ற" என்று கத்தினார். 


"என்ன சத்தம் அதிகமா கேக்குது ஏன் உன் பொண்ணு இங்க இல்லனு அதிகாரம் பண்றியோ "என்றார்.


"ஏய் நீ இப்போ எதுக்கு என் புள்ளைய இழுக்குற சோத்தைப் போடு"


"சாப்பிட்டவர் சிவகாமியிடம் நான் காய் போட்டுட்டு வயலுக்கு அப்படியே வந்துடுறேன் நீ மதியத்துக்கு சோத்தை எடுத்துக்குட்டு போய் களைய வெட்டு வெறும் பில்லா கிடக்கு" என்றவர் கிளம்பினார். 


சிவகாமி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வயலுக்கு சென்றார்.


சிறிது நேரம் வேலை செய்ததில் இடுப்பு வலியெடுக்க சற்று நேரம் மரத்தடியில் அமர்ந்தார். 


அப்பொழுது தான் நியாபகம் வந்தது அவருக்கு ஒருநாள் மதிக்கு வயிறு வலி என்று அவளால் ஒன்னும் செய்ய முடியாமல் இருக்கவும் அவள் ரொம்ப சிரமப்பட்டு அன்று வீட்டு வேலைகள் முடித்து இதுப் போலத் தான் மரத்தடியில் அமர்ந்திருந்த போது ,தான் அவளைத் திட்டியதை நினைத்துப் பார்த்தார்.


'பாவம் இருந்தாலும் நீ இவ்ளோ பண்ணிருக்க கூடாது சிவகாமி அந்த புள்ளையும் தினமும் இப்படி தான வேலை செஞ்சிருக்கும்' என்று அவர் மனசாட்சி அவரைக் கேள்வி கேட்டது. 


"நான் ரெண்டாம் தாரம்னு எனக்கு சொத்து செல்லாதுன்னு இந்த ஊர்க்காரங்க அள்ளிப் போடவும் அவளுங்க பேச்சக் கேட்டு அவரு குடிப் போதையில் இருக்கும் போது சொத்தை என் பேருக்கு மாத்திக்க கையெழுத்து வாங்கினேன்". 


"இருந்தாலும் அந்த புள்ளைய அவ்ளோ கொடுமைப் படுத்திருக்கக் கூடாது சரி இனிமே அந்த புள்ளை வரும்போது நல்லா பார்த்துக்குவோம்" என்று நினைத்தவர் தன் வேலையைப் பார்க்க தொடங்கினார்.


(என்ன சிவகாமி நீ நல்லவளா மாறிட்டியா….)


இங்கு மதி தன் கணவனிடம் "அத்தான் எப்போ அத்தை மாமா வருவாங்க " என்று கேட்டு அவனை நச்சரித்தாள். 


"தெரியலை மது அங்கு வேலை முடிஞ்சதும் தான் வருவாங்க அவ்ளோ சீக்கரம் நந்து அவங்களை விட மாட்டான்". 


கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. 


"ஏன் அத்தான் உங்க தம்பி விடமாட்டாங்க."


"அவன் அவங்கக்கூட ரொம்ப க்ளோஸ் பட் நான் அப்படி இல்லை.. அது சின்ன வயசுல இருந்தே பழக்கமாயிடுச்சு அப்படியே ஒதுங்கிட்டேன். இப்போ ஒட்டனும்னா கஷ்டமா இருக்கு " என்று சோகமாக சொன்னான்.


அவன் அப்படி சொல்லவும் தானும் வருந்தியவள் "ஐயோ இவங்களை இப்போ சமாதானம் படுத்தனுமே " என்று யோசித்தவள் கபோர்டில் இருந்து அவன் சட்டையைத் எடுத்து தன் உடைகளைக் களைந்து அவன் சட்டையை மாட்டியவள் அவன் சாட்ஸை எடுத்துப் போட்டுக் கொண்டு அவன் உடற்பயிற்சி செய்யும் டம்பில்ஸை தூக்க முடியாமல் தூக்கி "அத்தான் இது இப்படிதானே பண்ணனும்" என்று அவன் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள். 


அவளைத் திரும்பிப் பார்த்தவன் அடக்க மாட்டாமல் சிரித்தான். 


தொல தொலவென சட்டை கழுத்தில் இறங்கி கீழே தொடை வரை நீண்டிருக்க ,அவனின் சாட்ஸ் அவளுக்கு முழங்காலை தாண்டி எப்பொழுது வேணாலும் அவிழிந்து விழும் நிலையில் சாட்ஸ்சுமாக அவளைப் பார்க்க சிரிப்புத் தான் வந்தது. 


"இது என்ன மது கோலம்" என்று கேட்கும் போது முடி கண்களில் படுகிறது என்று ஒதுக்கக் கையை எடுத்தாள். 


சாட்ஸ் இடுப்பில் நிற்காமல் நழுவியது "ஐயோ" என்பதற்குள் நழுவிக் கீழே கிடந்தது.


வெறும் சட்டையுடன் நிற்கவும் அவளை நெருங்கினான்.


"ஐயோ.. இவரு வேற வராறே " என்று கீழே குனிய லூசாக இருந்த சட்டை நழுவி இன்னும் அவனுக்கு விருந்து வைத்தது. 


சட்டை நழுவியதும் உடனே எழுந்தவள் "அத்..." என்பதற்குள் அவள் இதழைச் சிறைப் பிடித்திருந்தான்.


அவள் இதழில் தேன் எடுத்துக் கொண்டே அவள் கையில் இருந்த டம்பில்ஸை வாங்கி ஓரமாக போட்டவன் கைகள் அவனுக்குப் பிடித்த இடத்தை சட்டையின் மேலாக வருடியது. 


அந்த வருடலில் சிலிர்த்தவள், உணர்ச்சிகள் மேலோங்க அவன் உதட்டைக் கடித்தாள்.


அவள் கடிக்கவும் அவன் கைகள் அவள் இடையை இறுக்கியது. 


மது நிற்க முடியாமல் தோய்ந்து அவன் மேல் சாயவும் அவளை அப்படியே தூக்கிக் கொண்டான்.


பின்பு அவளை மெத்தையில் கிடத்தி அவள் மீது படர்ந்தான். அவள் கழுத்தில் கடித்து "எதுக்கு மது டம்பில்ஸ தூக்குன"


" நீங்க சோகமா இருந்தீங்களா அதான் என்ன பண்றதுன்னு தெரியலை.. அதான் இப்படி பண்ணினா சிரிப்பீங்கன்னு நினைச்சுப் பண்ணினேன்"


அவள் அப்படி சொல்லவும் சிரித்தவன் அவளைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.


இருவரும் தூங்கிக் கொண்டிருக்க போன் அடிக்கவும் மித்ரன் எழுந்தான். 


மது அசையவிம் அவளைத் தட்டிக் கொடுத்துப் போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான் . 


விக்கி தான் அழைத்தான்


"மச்சான்" 


"சொல்லு மச்சி"


" என்னடா பண்ற"


" தூங்கி இப்போ தான் எழுந்தேன் "


"இப்போ என்ன தூக்கம்.. ம்ம்ம் நடத்து நடத்து"


" ஏய் "


"சரி சரி நான் சொல்ல வந்தது கேளு"


"சொல்லுடா மச்சி"


" என் குயின் வீட்டுக்குப் பொண்ணு கேட்கப் போறோம்டா இப்போதான் கால் பண்ணி வர சொன்னாங்க நம்ம எப்போ கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டு சொல்றேன்."


"ஹே சூப்பர் மச்சி"


" சரி உன் வேலைய பாருடா "


"நான் குயின் கூட டூயட் பாடப் போறேன்" 


"போடா போடா" என்றவன் போனை அனைத்தான்.


மது பக்கத்தில் படுத்துக் கொண்டு திரட்ச்சையைச் சப்பி இழுத்து அவளை எழுப்பினான்.


(என்னடா இப்படிலாம் எழுப்புற ....)


அவன் வாயில் வைத்து இழுக்கவும் "அத்தான்.." என்று தூக்கக் கலக்கத்தில் முனகியவள் அவனுக்கு இன்னும் வசதியாக வாயில் வைத்து அணைத்துக் கொண்டு உறங்கினாள்.



Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments