மோகம்-14:
மறுநாள் மது ரமேஷைப் பற்றி கேட்டதற்கு "அவனுக்கு ஏதோ ஊருல வேலையாம் மது ,அதான் அனுப்பிருக்கேன்" என்று மித்ரன் சொன்னான்.
அதை கேட்டு மனதில் நிம்மதியாக உணர்ந்தாள்.
கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருப்பதால் பரப்பரப்பாக வேலை நடந்துக் கொண்டிருந்தது.
அன்று காலையிலேயே மதுவும் மித்ரனும் கல்யாணத்திற்கு உடைகள் எடுப்பதற்காக கிளம்பினார்கள்.
கிருஷ்ணனும், சனாவும் முக்கியமான ஒருவருக்கு பத்திரிக்கைக் குடுக்க வேண்டும் என்பதால் தாங்கள் பத்திரிக்கைக் கொடுத்துவிட்டு வருகிறோம் என்று முன்பே கிளம்பி இருந்தனர்.
இருவரும் முதன் முதலில் ஒன்றாக வெளியே செல்கிறார்கள் என்றதுமே மது குஷியாக இருந்தாள்.
மித்ரன் மதுவிடம் வந்து "கிளம்பு மது கல்யாணத்துக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வரலாம்".
"நாம போறோமா அத்தான்.. ஐ சூப்பர் போலாம் போலாம்" என்று குதூகலமாக கிளம்பினாள்.
இருவரும் கிளம்பி வெளியே வந்தனர். கார் அருகில் வந்து அவளுக்கு கதவை திறந்து விட்டு ஏறுமாறு கூறினான்.
தன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்த போதும் இவ்வாறு தான் அவன் செயல் இருந்தது.
அன்று இருந்த தன் மனநிலைக்கும் இன்று இருப்பதற்கும் எவ்வளவு மாற்றம் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தாள்.
அவள் ஏதோ யோசித்துக்கொண்டு இருக்கவும் தன் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டைப் போட்டவன்.
"என்ன மதுக்குட்டி யோசனை எல்லாம் பலமா இருக்கு.. நீ யோசிக்கிறத பார்த்தா என் பர்ஸ் இன்னைக்கு காலி போலவே " என்றான்.
"அதில்லை அத்தான்" என்று தான் நினைத்ததைக் கூறினாள்.
"ஓ.. அப்படியா" என்று அவளுக்கு சீட் பெல்டைப் போடுகிறேன் என்று அவன் கை அவள் மேல் விளையாடியது.
"அத்தான் சும்மா இருங்க ,ஒழுங்கா வண்டி ஓட்டுங்க"
"மது இப்போலாம் வர வர நீ என்ன ரொம்ப மிரட்டுற" என்று புகார் கூறினான்.
அதற்கு சிரித்தவள் "நான் பழைய மதுமதின்னு நினைச்சிங்களா, நான் இப்போ மதுமதி மித்ரேஷ்வரன், மித்ரனோட பொண்டாட்டியாக்கும் என்கிட்ட கொஞ்சம் உங்க வாலை சுருட்டியே வச்சுக்கோங்க இல்லைனா என் புருஷன்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன் ஜாக்கிரதை" என்று வேண்டுமென்றே மிரட்டினாள்.
"ஓ...அப்படியா" என்றவன் "உன்னை வந்து வச்சுக்கிறேன்" என்றவன் சிரித்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினான்.
பெரிய துணிக்கடையாக பார்த்து காரைப் பார்க் செய்து விட்டு "மது விலையெல்லாம் பார்க்கக்கூடாது சரியா, நல்ல சாரிஸா எடுத்துப்போட சொல்லி பாரு, அந்த புடவையில் உன்னை பார்க்கும் போது நான் அப்படியே மயங்கி விழுந்துடனும் சரியா".
"ஏன் நல்ல சாரி கட்டினாதான் அழகா உங்க கண்ணுக்குத் தெரிவேனா"
"அய்யோ நான் அப்படி சொல்லலை மதுக்குட்டி.. நீ ஒன்னுமே போடாம இருந்தாலே போதும்னு நினைக்குறவன் நான்.. என்னை போய் இப்படி சொல்லிட்டியே "என்று வருத்தப்படுபவன் போல் முகத்தை வைத்தவனின் முதுகிலே செல்லமாக ஒரு அடி வைத்து "அத்தான் எங்க வந்து என்ன பேச்சு பேசுறீங்க" என்று வெட்கப்பட்டுக் கொண்டே கேட்டாள்.
"அப்போ நம்ம அறையா இருந்தா உனக்கு ஓகேவா மதுக்குட்டி" என்று குழைந்தான்.
"அத்தான் அடி வாங்க போறீங்க, வாங்க வந்து புடவையப் பாருங்க" என்று அவனை புடவை செக்ஷனிற்கு அழைத்துச் சென்றாள்.
"புடவையைப் பற்றி எனக்கு எதும் தெரியாது மது"
"நான் எடுக்கிறேன் அத்தான், நீங்க அந்த புடவை எனக்கு நல்லாருக்குமான்னு பார்த்து சொல்லுங்க" என்றாள்.
அந்த நேரம் சரியாக சனாவும் கிருஷ்ணனும் வந்து விட்டார்கள்.
மெரூன் கலரில் தங்க ஜரிகையுடன் அத்தனை அழகாய் இருந்தது.
அந்த புடவை அனைவருக்கும் அது பிடிக்கவே அதனை எடுத்தனர்.
பின்பு மித்ரனிற்கு வேட்டியும் சட்டையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
கிருஷ்ணன் ரிஷப்ஷன் வைப்பதாக கூறினார் ஆனால் மித்ரன் வேண்டாம் என்று விட்டான். அதான் கல்யாணம் நடுக்கதில்லை போதும் என்றான்.
திருமண நாளும் வந்தது.....
சனா தன் மருமகளை வைரத்தாலே அலங்கரித்திருந்தார்.
மது அத்தனை அழகாக இருந்தாள்.
"அக்கா ரொம்ப அழகா இருக்க.. மாமா உன்னைப் பார்த்து ஃபிளாட் ஆகப் போறார் பாரு"
"ச்சு சும்மா இரு வானு, சித்தி வேற முறைச்சுப் பாக்குறாங்க" என்றாள் கிசுகிசுப்பாக.
"அவங்களை விடுக்கா.. அவங்க எப்பொழுதும் இப்படி தான் அதெல்லாம் நீ கண்டுக்காத நீ மாமா பற்றி மட்டும் நினைச்சிட்டிரு. "
ஆம் சிவகாமி, ராமர், வான்மதி , ராணி ,ராணியின் பெற்றோர் அனைவரும் வருவதற்கு கிருஷ்ணன் வண்டி அனுப்பிருந்தார்.
நேற்று இரவு தான் அனைவரும் மித்ரன் வீட்டிற்கு வந்தனர்.
வீட்டை வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரித்திருந்தார்கள் அதைப் பார்த்ததுமே சிவகாமிக்கு காற்று போன பலூன் போல முகம் சுருங்கிவிட்டது.
இன்று வைரத்திலேயே அனைத்தும் அணிந்திருந்தவளைக் கண்டு பொறாமையில் பொசிங்கினார்.
"ஐயோ இத்தனையும் இவளுக்கா இவளுக்கு வந்த வாழ்வைப் பாறேன்.. ஐயோ என் வயிறு எரியிதே".
(ஜெலுசில் வாங்கி போடு சிவகாமி..)
"இம்புட்டு நகை அவளுக்கேவா, வெளியே எவ்ளோ ஜனங்கள் வந்துருக்காங்க" என்று வாயைப் பிளந்தார்.
ஆம் கிருஷ்ணன் தன் சொந்தக்காரர்கள், பிஸ்னஸ் பங்குதாரர்கள், பின்பு திரைப்படக் கலைஞர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் அழைத்திருந்தார்.
தன் தங்கைக்கும் பத்திரிக்கை நேரிலே சென்று வைத்திருந்தார்.
ஆனால் விஸ்வநாதன் மட்டும் தான் வந்திருந்தார் கல்யாணத்திற்கு.
அங்கு மணமகன் அறையில் விக்கி மித்ரனை ஓட்டிக் கொண்டிருந்தான் .
"மச்சான் என் கண்ணே பட்டுடும் போல டா, உன்னை இப்படி பார்க்க எவ்ளோ அம்சமா இருக்க தெரியுமா என் கண்ணே பட்டுடும் போலடா ".
"டேய் வேண்டாம் நானே இந்த வேஷ்டி சட்டை போட்ட கடுப்புல இருக்கேன்"
"ஏன் மச்சான் வேஷ்டி இடுப்புல நிக்க மாட்டேங்குதா"
"டேய் இப்போ நீ வாய மூடலை உன் குயின் கிட்ட இருந்து உன்னைப் பிரிச்சிருவேன்".
"க்கும் இப்போ மட்டும் ஒன்னாவா இருக்கோம் பிரிக்குறதுக்கு"
"மச்சான் நான் அவங்க வீட்டுல பேசுறேன்டா"
"யாரு நீ பேசப்போறியா அண்டப்புழுகு புழுகாதடா. எப்போடா மது கைல சிக்குவான்னு பார்த்துட்டுருக்க.. நீ பேச போறியா."
"ஹி ஹி ஹி தெரிஞ்சிடுச்சா மச்சான்" என்று சிரித்தான் .
"போடாங்க நீயெல்லாம் ஒரு நண்பனாடா.."
"ஏன்டா மச்சான் இப்படி சொல்ற"
"பின்ன என்னடா ப்ரெண்டோட லவ்வுக்கு உதவிக் கூட பண்ண மாட்டேங்குற "
"டேய் உன் குயின் வீட்டுல பேசுறதுக்காக தான் அவங்களை கல்யாணத்துக்கு வர வச்சேன்" என்றதும்
"மச்சான் உனக்கு பெரிய கோயிலா கட்டுறேன்டா. என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த விடிவெள்ளியே.."
"டேய் நிறுத்து நிறுத்து கொஞ்சம், மூச்சு வாங்குது பாரு"
"அப்புறம் உனக்கு கல்யாணம் தான் ஜாலி தான்"
"ச்சீ போடா எனக்கு வெட்கமா வருது " என்று சிணுங்கினான்.
"மச்சான் ப்ளீஸ்டா இதுக்கு மேல என்னால தாங்கமுடியாது" என்று அவன் சிரிக்கவும் விக்கியும் சிரித்தான்.
பின்பு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் கூப்பிடவும் மித்ரன் வேட்டி சட்டையில் கம்பீரமாக மேடையில் அமர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ என்றதும் மதுவை வானுவும் ராணியும் அழைத்து வந்தார்கள்.
மித்ரன் மதுவை நிமிர்ந்து பார்த்தான் அவளும் இவனை தான் பார்த்தாள்.
அவன் பார்வையைக் கண்டதும் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவன் பக்கத்தில் அமர்ந்ததும் ஐயர் சொன்னதை இருவரும் அவரைப் பின்பற்றி அவர் சொன்னதை செய்தார்கள்.
"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்கவும் ஐயர் கொடுத்த மாங்கல்யத்தை மதுவின் கழுத்தில் கட்டினான்.
பின்பு அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து வீடு வந்தனர்.
அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.
மது மிகவும் படப்படப்பாக உணர்ந்தாள்.
மித்ரனை எப்படி எதிர் கொள்வது என்று அவளுக்கு பயமாக இருந்தது.
கணவன் தனக்கு புதியவன் அல்ல தான் ஆனால் நேற்று அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தற்கே உடம்பெல்லாம் அவளுக்கு சிலிர்த்தது.
என்ன சொல்லியிருப்பான்....
(ஹிஹிஹி சொல்லமாட்டேனே.. சும்மா.. ஹி ஹி..)
முன்தினம் சிவகாமி, ராமர், வான்மதி, ராணியின் குடும்பமும் வந்த போது அவர்களை வரவேற்று அவர்களுக்கென ஒதுக்கிய அறையை காட்டி விட்டு தன் அறைக்கு வந்தவளை மித்ரன் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
முதலில் அவள் கவனிக்கவில்லை கபோர்டில் இருந்து இரவு உடையை எடுத்துக் கொண்டிருக்கும் போது தன் முதுகில் சூடான காற்று படவே திரும்பிப் பார்த்தவள் மித்ரன் தான் என்றதும் "என்ன அத்தான் ஏதாவது வேணுமா "என்று கேட்டவாறு தன் இரவு உடையை எடுத்தாள்.
அவனிடமிருந்து பதில் எதும் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்த்தவள் அவன் பார்வையின் மாற்றத்தைக் கண்டுக் கொண்டுத் தலையைக் குனிந்துக் கொண்டாள்.
இன்னும் அவளை ஒட்டி நின்று உடல் உரச "மதி நாளைக்கெல்லாம் இந்நேரம் நமக்கு..." பேசியதை நிறுத்தியவன் "மது என்னை நிமிர்ந்து பாறேன்..." முடியாது என்று தலையை ஆட்டியவள் "அத்தான் நான் டிரெஸ் மாத்தனும்" என்றவள் அவனைத் தள்ளிவிட்டு குளியறைக்குள் புகுந்து விட்டாள்.
மித்ரன் சிரித்துக்கொண்டே "நீ இங்கே தானே வந்தாகனும்" என்று நினைத்தவன் மெத்தையில் சென்று படுத்துக் கொண்டான்.
மதி உடை மாற்றி வரும் போது மித்ரன் தன் ஒரு கையைக் கண்களை மறைத்தவாறும் மறுகையை வயிற்றில் வைத்துக்கொண்டு படுத்திருந்தான்.
அவனைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றவள் பால்கனிக்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டாள்.
அவள் வந்தது முதல் தன்னை நின்று பார்த்து விட்டு சென்றது வரை அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
பின்பு சிரித்துக் கொண்டே பால்கனிக்கு சென்றவன் அவள் மடியில் படுத்துக் கொண்டு "இங்க வந்து உட்கார்ந்தா உன்னை விட்டுடுவேனா" என்று தன் முகத்திற்கு நேராக இருந்த அவள் வயிற்று சதையைப் பல்பட கடித்தான்.
"ஆ.. அத்தான் வலிக்குது" என்று அந்த இடத்தைத் தடவி விட்டவள்
"ஏன் அத்தான் இப்படி கடிக்குறீங்க''
"என்ன மதுக்குட்டி இதுக்கே இப்படி கத்துற.. அப்போ நாளைக்கு இன்னும் நிறைய இடத்துல கடிப்பேன்.. இன்னும் நிறைய பண்ணுவேனே.. அதுக்கு என்ன பண்ணுவ.." என்றவனை கலவரத்துடன் பார்த்தாள்.
"நாளைக்கு நடக்கப் போறதுல கொஞ்சம் சேம்புல் பார்க்கலாம்" என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கேட்டான்.
"அதெல்லாம் வேண்டாம் அத்தான்.. பயமா இருக்கு" என்று நடுங்கியவளை எழுந்து அப்படியே தன் கைகளில் அள்ளியவன் அறைக்கு வந்து மெத்தையில் கிடத்தினான்.
அவள் திரும்பி படுக்க எத்தனிக்க "மது நீ இப்போ திரும்பிப் படுத்த ஊஞ்சல்ல பண்ணினதை உடம்பு ஃபுல்லா பண்ணுவேன் எப்படி வசதி" அவன் அப்படி சொல்லவும் அதிர்ந்தவள் அப்படியே படுத்துக் கொண்டாள்.
விளக்கை அணைத்து விட்டு அவளருகில் படுத்தவன் அவள் மேல் கையைக் போட்டுக் கொண்டு நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டான்.
அவன் அப்படியே இருக்கவும் "அத்தான் கோபமா என் மேல" என்றாள் அவனிடம் பதில் இல்லை .
"அத்தான் அதுக்குள்ள தூங்கிட்டீங்களா" என்று கேட்டதும் அவள் நெஞ்சில் அழுத்தமாக முட்டினான் ஆனால் பேசவில்லை.
அவன் தூங்கவில்லை என்று தெரிந்ததும் தன் நெஞ்சில் இருந்து அவன் தலையைப் பிரித்தாள்.
"ப்ச் " என்ற சத்தத்துடன் மீண்டும் அவள் நெஞ்சில் புதைந்துக் கொண்டான்.
"அத்தான் அத்தான்" என்கவும் பதில் இல்லை "டேய் மிது" என்றதும் அவள் ஒரு பக்க திராட்சையைச் சட்டையுடன் கடித்தவன் "டேய்யா.. அடிங்க.. இந்த வாய் இருக்கே" என்று அவள் கீழுதட்டை தன் இரு விரல் கொண்டு இழுத்துப் பிடித்தவன் பற்களால் கடித்து பின் தன் இதழ்கள் கொண்டு சப்பி விடுவித்தான்.
"அத்தான்" என்று மது அழைத்ததும்
"நான் பேசுறது தான் பிடிக்கலைல விடு" என்றவனின் வாய் அப்படி சொன்னாலும் அவன் கை அவள் இரவு உடையைக் களைந்துக் கொண்டிருந்தது.
"அத்தான் நான் பிடிக்கலைன்னு சொன்னேனா".
அவள் திராட்சையைத் தன் கைகளால் நிமிண்டிக் கொண்டே "அப்போ நான் அப்படி பேசுறது உனக்குப் பிடிக்குமா மது" என்றான்.
"அத்தான் நீங்க அப்படி பேசும்போது எனக்கு ஒருமாதிரி இருக்கு அப்படியே வயித்துக்குள்ள ரயில் தடத்தடன்னு ஓடுற மாதிரி இருக்கு என்னமோ பண்ணுது அத்தான்" என்றாள்.
நாம செய்யப்போறத ப்ளான் பண்ணி வச்சுக்கிட்டா நமக்கு தானே மது நல்லது.
(யோவ் எதுக்குலாம் ப்ளான் போடுறதுன்னு விவஸ்த்தை இல்லையா)
"அப்படியே உன்னை என் முத்தத்தாலேயே குளிப்பாட்டனும் மது.. எப்படியோ நாளைக்கு பிரியாணி ரெடி..." என்று அவள் வயிற்றில் தன் முகத்தைப் புதைத்து கிச்சுக்கிச்சு மூட்டியவன்
"நாளைக்கு உன் உடம்புல என் உதடு படாம ஒரு இடமும் இருக்கக் கூடாது மது"
"அப்படியே ஒவ்வொரு இடத்துலையும் உதட்டால் முத்தம் கொடுத்து நாக்கால்.." ஏதோ சொல்லப் போனவனை இழுத்து அவன் வாயில் தன் ஒருபக்க மார்பைத் திணித்தாள்.
அவன் ஏதோ திரும்பிப் பேச வர தன் மார்போடு அவனை அணைத்தவள் "பேசாம திராட்சையைச் சாப்ட்டு தூங்குங்க அத்தான் தூக்கம் வருது".
*****
சனா அவளை அழைத்துக் "குளிடா மது நான் புடவை நகையெல்லாம் எடுத்துட்டு உன்னைக் கூப்பிடுறேன் சரியா" என்றார்.
"சரி அத்தை" என்றவள் தங்கள் அறைக்கு வந்தாள்.
கபோர்டில் துண்டை எடுத்துக்கொண்டு திரும்பியவள் மித்ரன் மீது மோதினாள்.
"இவங்க எப்போ வந்தாங்க "என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே
"உன் பின்னாடியே குடுகுடுன்னு ஓடி வந்துட்டேன் மது" என்றான்.
"குளிக்க போறியா.. அப்போ சேர்ந்தே குளிப்போம்"
"இல்ல அத்தான் எனக்கு கூச்சமா இருக்கு "
"என்ன மது.. என்கிட்ட என்ன கூச்சம்" என்று அவள் கன்னத்தை வருடினான்.
"அத்.. அத்தான்" அவள் திணறுவதை வெகுவாக ரசித்தான்.
"சரி நீ போய் குளி அம்மா வந்துருவாங்க " என்றவன் வெளியே சென்றான்.
இவள் குளித்து முடிக்கவும் சனா வந்து அவளை அழைத்துச் சென்றார்.
அவளை அலங்கரித்தவர் அவள் கன்னம் வழித்து "அழகா இருக்கடா" என்றவர் அவள் கையில் பால் சொம்பைக் கொடுத்து அவள் அறையில் விட்டு விட்டுச்சென்றார்.
அறைக்குள் வந்தவள் அதுக்குள்ள எப்படி இவ்ளோ பண்ணினாங்க என்று பூக்களால் அலங்கரித்த மெத்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"வாங்க மிஸஸ்.மித்ரேஷ்வரன்" என்று அவள் பின்னால் இருந்து குரல் வரவும் திரும்ப எத்தனித்தவளைத் திரும்ப விடாமல் பின்னால் இருந்து அணைத்தவன் அவள் கையில் இருந்த சொம்பை வாங்கி அங்கிருந்த மேசையில் வைத்தான்.
"அத்தான்" என்றாள் வெறும் காத்து தான் வந்தது .
அவள் உடல் நடுங்கவும் "ரிலாக்ஸ் மது" என்றவன் அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு கைகளில் அணிந்திருந்த வளையல்களைக் கழற்றினான்.
பின்பு கழுத்தில் அணிந்திருந்த ஆரத்தைக் கழற்றி வைத்தவன் அவள் முன்னால் வந்து யோசிக்கக் கூட இடம் கொடாமல் அவள் இதழைச் சிறைப் பிடித்தான்.
அவன் அவள் இதழில் செய்த மாயத்தில் தன் கைகளைக் கொண்டு அவன் தலைமுடியை இறுக்கிப் பிடித்தாள்.
அவன் கை முந்தானையை அகற்றி பின் இடையில் படிந்து கொசுவத்தை அவிழ்க்க கையை அங்கு வைக்க அவன் கையைத் தன் கைக்கொண்டு அழுத்திப் பிடித்தாள்.
அவள் கையை விளக்கி விட்டு புடவையை முழுவதுமாக விளக்கினான்.
அவளை அப்படியே கைகளில் ஏந்தியவன் மெத்தையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான்.
ரவிக்கையையும் களைந்து அவள் நெஞ்சில் முகம் புதைத்தவன்" மதி" என்று அழைத்தான் "ம்ம் "என்ற முனகல் மட்டுமே வந்தது.
"மது"
"ம்ம்"
" மது இங்க திராட்சை மல்கோவா இன்னும் நிறைய பழங்கள் இருக்கு எனக்கும் அகோரப்பசி எதை முதல்ல சாப்பிடுறதுன்னு தெரியலை நீ சொல்லேன்"
"இல்லை அத்தான் ஆப்பிள் ஆரஞ்சு தான் இருக்கு "
"ஆரஞ்சு இப்போதான் சாப்பிட்டேன்" என்று அவள் உதட்டைப் பார்த்துக் கூறியவன் "திராட்சையைச் சாப்பிடுவா மல்கோவா சாப்பிடவா".
அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது "அத்தான்" என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் .
அவன் அதன் பிறகு எதற்கும் காத்திருக்க வில்லை தன் கைகளால் தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் இரண்டு குன்றுகளையும் பிடித்தவன் ஒன்றை தன் வாயால் தண்டித்தும் மற்றொன்றை தன் கைகளுக்குள் அடக்க முடியாமல் அடக்கி கசக்கி விரல்களால் நிமிண்டினான் .
வாயில் வைத்ததையும் விட்டு வைக்க வில்லை பற்களால் கடித்து தன் எச்சில் கொண்டு ஒத்தடமிட்டுத் திரும்பக் கவ்வி இழுத்து உறிஞ்சினான்.
மதுவோ உணர்வுகளை அடக்க அவனிடமே தஞ்சம் அடைந்தாள்.
இருவரும் மோகமெனும் கடலில் மூழ்கி முக்குளித்து அதிகாலையில் தான் கரையை அடைந்தனர்.
0 Comments