Advertisement

Ad code

மோகத்தில் முக்குளிக்க வா அழகே - 17

 


மோகம்- 17:


கிணறு வடிவத்தில் 8 அடியில் அமைக்கப்பட்டிருந்தது அந்த தொட்டி .


சிறு வயதில் அதில் விழுந்து மூச்சுக்கு திணறியதில் இருந்து அந்த தொட்டியில் இறங்க மாட்டாள் மதி .


மிகவும் ஆசையாக இருந்தால் தொட்டியின் கட்டையில் அமர்ந்து கால்களை மட்டும் உள்ளே விட்டு ஆட்டிக்கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருப்பாள்.


அதில் இதுவரை இறங்கி குளித்ததில்லை இது மித்ரனுக்கும் தெரியும் அவள் இதில் இறங்க மாட்டாள் பயப்படுவாள் என்று அதனால் தான் அவளை சீண்டவே ஒன்றும் தெரியாதது போல் அவளை அழைத்தான்.


பின்பு அவள் எதிர்பாராத நேரம் தொட்டிக்குள் இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.


முதலில் தடுமாறியவள் பின் சமாளித்து அவன் நெஞ்சில் தன் கைகளால் தட்டி 


"அத்தான் சொல்லிட்டு செய்ய மாட்டீங்களா பயந்துட்டேன்" என்று அவனை அணைத்துக்கொண்டாள்.


அவள் உச்சந்தலையில் தன் இதழைப் பதித்தவன் நெற்றி, கண், காது, மூக்கு என்று தன் இதழால் அங்கிருந்த தண்ணீரை உறிந்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான். 


தண்ணீரின் குளுமையும் தன் கழுத்தடியில் அவன் சூடான மூச்சுக்காற்றும் ஏதோ பண்ணியது அவளை.


அவனிடம் இருந்து விலக எத்தனித்தவளைத் தடுத்து அவள் இதழை வன்மையாக சிறை செய்தான். 


அவள் இதழில் மேலும் புதைய அவன் இதழ் செய்த மாயத்தில் சுற்றுபுறம் அனைத்தும் மறந்தாள். 


முத்தமிட்டுக் கொண்டே அவளோடு தண்ணீரில் மூழ்கினான் பின் மூச்சுவிட சிரமமாக இருக்கவும் தான் அவளை விட்டான். 


இருவரும் மேல் மூச்சுக் கீழ்மூச்சு வாங்கவும் அவள் உடலில் மெல்லிய நடுக்கும் ஏற்ப்பட "மது வாடா வீட்டுக்குப் போலாம்" என்றான் அவள் காதோரத்தில் கிசுகிசுப்பாக. 


"அத்தான் இந்த புடவை எல்லாம் நனைஞ்சிடுச்சு.. கொஞ்ச நேரம் மோட்டார் ரூம்ல துணிய காயவச்சிட்டு போலாம்" 


என்றதும் மனதுக்குள் 


"ஐய் கோழி குருமாக்கு ரெடி ஆயிடுச்சு "என்று குதூகலித்தவன் வெளியில் "சரி மது" என்று அவள் ஏற உதவி செய்து அவனும் தொட்டியில் இருந்து மேலேறி வந்தான்.


பின் மோட்டர் ரூமை பார்வையிட்டவன் "ஆஹா கட்டில் கூட இருக்கு.. நான் கூட தரைல புதுசா ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன்... சரி கட்டிலையும் யூஸ் பண்ணிக்கலாம்.." என்று நினைத்து மதுவைத் திரும்பி பார்த்தவனுக்கு மோகம் தாறுமாறாக ஏறியது. 


வெறும் ரவிக்கைப் பாவாடையுடன் நின்று தன் புடவையை உதறி அங்கிருந்த கொடியில் காயவைத்தவள் குனிந்து தன் பாவாடையில் உள்ள தண்ணீரைப் பிழியும் போது கண்ட பல்லத்தாக்கை பார்த்து ரொம்ப கவர்ச்சியாக இருக்கவும் படு பேஜாராயிட்டான். 


"இவ்ளோ நாள் இந்த வியூல இருந்து பார்க்கலையே" என்று வருத்தப்பட்டவன் அவள் அங்கிருந்த துண்டை தன் மேல் போட்டு மறைக்கவும் அந்த துண்டின் மேல் கோபம் வந்தது. 


மித்ரனுக்கு தன் அப்பாவின் லுங்கியைக் கொடுத்துக்கட்டிக் கொண்டு அவன் ஆடைகளைக் கழட்டித்தர சொன்னாள். 


பின் அவன் தன் உடையைக் களைந்து மாற்றிக்கொண்டு அவளிடம் கொடுக்கவும் அதை காயப்போட்டாள். 


துண்டு முன்னால் மட்டும் மறைத்திருக்க பின்னால் மறைக்கப்படாமல் ரவிக்கைக்கும் பாவாடைக்கும் இடையில் உள்ள அவள் முதுகு பகுதி அவன் கண்களைக் கவர்ந்து வா வாவென அழைத்தது. 


அதற்குமேல் சும்மா இருப்பானா பின்னாலிருந்து அணைத்து தன் கைக்கொண்டு அவள் கனிகளைப் பற்றி இருந்தான்.


அவன் அணைக்கவும் முதலில் துண்டை உறுவி கீழேப் போட்டவன் கனிகளைப் பிசைந்து "மது "என்று காதோரம் கிறக்கத்துடன் கிசுகிசுத்தான். 


"இந்த டிரெஸையும் கழட்டு இதை மட்டும் ஏன் போட்டுருக்க" என்று கைகளில் இருந்த கனிகளை அழுத்திக் கசக்கினான்.


"அத்தான்" என்ற முனகலுடன் அவள் தோளில் சாயவும் இவனுக்கு பித்தம் தலைக்கேறியது. 


அவள் ஆடைகளைக் களைந்தவன் அவள் மீது படர்ந்தான்.


(கட்டிலில் இல்லை தரையில் தான்)


பின்பு இருவரும் தங்களின் ஜலகிரிடையை முடித்துவிட்டு மாலை தான் வீட்டிற்கு திரும்பினர். 


வீட்டிலோ ராமர் சிவகாமியிடம் 


"என்ன இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் வரலை… நான் போய் ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வரேன்.." என்று சொன்னதும் 


"யோவ் கூறுகெட்ட மனுஷா அதுக ரெண்டும் சின்ன சிறுசுக அப்படி இப்படிதான் இருப்பாங்க... நீ ஏன் நந்தி மாதிரி அங்க போறேன்னு குதிக்கிற அவங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல வருவாங்க நீ வான்மதியை பஸ் ஏத்தி விட்டுட்டு வா " என்று கூறினார். 


ராமர் "ஆமாம் இல்ல" என்று அசடு வழிய சிரித்துக்கொண்டே சென்றார்.


அடுத்த நாள் இருவரும் கிளம்புவதாக கூற 


"இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாமே மாப்பிள்ளை" என்றதுமே 


"அங்க வேலை இருக்கு.. அப்பா அம்மா வேற வீட்டுல இல்லை அப்புறமா வரோம்" என்று கூறி கிளம்பினர். 


இங்கு நிவேதா தன் அம்மாவிடம் கொக்கரித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.


"ம்மா மித்ரன் எனக்கு தான்.. அந்த மதியை வீட்ட விட்டு ஓட வைக்குறதுக்கு ஒரு நல்ல விஷயம் பண்ண போறேன்"


"என்ன நிவேதா பண்ண போற எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்… உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் அப்புறம் தெருவுலதான் நிக்கனும் ..." 


"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா " என்று சிரித்தாள். 


"அந்த சொத்து முழுக்க நமக்குதான்" என்று கனவு கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள்.


இருவரும் வீட்டிற்கு வந்த மறுநாள் மித்ரனின் அம்மா அப்பாவும் வந்து விட்டனர். 


நன்றாக தான் அனைத்தும் போய் கொண்டிருந்தது ஒருநாள் மித்ரனிடம் விக்கி கால் பண்ணி 


"மச்சான் கொஞ்சம் பர்சேஸ் பண்ணனும் அப்படியே பத்திரிக்கை அடிக்க கொடுக்கனும்.. சோ வீட்டுக்கு வாடா ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்" என்றதும் 


"ஓகேடா இன்னும் அரைமணி நேரத்தில அங்க இருப்பேன்" என்றவன் ஆபிஸில் இருந்து கிளம்பினான்.


தன் காரில் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் ஒரு லாரி இவனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது அதை கவனித்தவன் "என்ன இது பாலோ பண்ற மாதிரி இருக்கு" என்று நினைத்தவன் ஓரமாக வழிவிட்டான்.


ஆனால் அப்பொழுதும் போகாமல் பின்தொடரவும் விக்கிக்கு அழைத்தான் 


"மச்சான் என்ன லாரில எவனோ பாலோ பண்றான்டா.. நீ வா" என்கவும் பதறியவன் 


"என்னடா மச்சான் இப்படி சொல்ற... "


"நீ வாடா ஒன்னும் ஆகாது..." என்றவன் வேகமெடுத்தான் .


மித்ரன் வேகமெடுக்கவும் அந்த லாரி ஓட்டுபவனும் வேகமாக வந்தவன் ஒரு சில கடைகளே உள்ள அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தி மித்ரனின் காரை இடித்துவிட்டு வேகமாக சென்று விட்டான்.


அப்பொழுதுதான் விக்கியும் வந்தான் இறங்கி ஓடிவந்தவன் மித்ரனின் கார் கவிழ்ந்து கிடக்கவும் "மச்சான்" என்று கத்தினான். 


எந்த பதிலும் இல்லை அங்கு இருந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணினார். 


அதற்குள் அங்கு இருந்தவர்களில் சிலர் மித்ரனை வண்டியில் இருந்து வெளியே இழுத்தனர். 


விக்கிக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை தான் வர சொல்லவில்லை என்றால் வந்திருக்கவே மாட்டான் என்று வருந்தினான். 


சுயநினைவின்றி பாதி முகம் இரத்தத்தில் குளித்திருந்தது கைகள், கால்களிலும் இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. 


உடனே ஆம்புலன்ஸ் வரவும் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றான்.


அங்கு சென்றதும் தான் மதிக்கு சொல்ல வில்லை என்ற நினைவே வந்தது. 


விக்கி மதுவின் எண்ணிற்கு அழைத்தான் 


"அண்ணா எப்படி இருக்கீங்க.."


"மது அருண் ஹாஸ்பிட்டலுக்கு அம்மாவ கூட்டிட்டு வாமா.."


ஹாஸ்பிட்டல் என்றதும் பதறியவள் 


"என்ன அண்ணா ஆச்சு "


"ஒன்னும் இல்லை மா சீக்கரம் அம்மா அப்பாவ கூட்டிட்டு வா நான் வைக்கிறேன் " என்றவன் போனை அனைத்தான். 


உடனே கீழிறங்கி தன் அத்தையிடம் கூறியவள் காரில் ஏறி உடனே மித்ரனுக்கு அழைத்தாள். 


நாட் ரீச்சபிள் என்று வரவும் பயத்துடன் 


"அத்தை அவருக்கு போன் போக மாட்டேங்குது பயமா இருக்கு அத்தை".


சனாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை 


"ஒன்னும் ஆகியிருக்காது மது கவலைப்படாத "என்றார்..


கிருஷ்ணன் இவர்களுக்கு முன்பே அங்கே இருந்தார்.


விக்கிதான் அழைத்துக் கூறினான். 


விக்கியின் குடும்பமும் அப்பொழுதுதான் வந்தார்கள். 


அனைவரையும் பார்த்தவள் தன் கணவன் மட்டும் இல்லை என்றதுமே போச்சு என்று நினைத்து விக்கியைப் பார்த்தவள் அவன் நடந்ததை சொன்னதும் "அத்தான் " என்று மயங்கி சரிந்தாள். 


அவள் மயங்கி சரியவும் அவளைப் பிடித்தவர்கள் டாக்டரை அழைத்தும் அதிர்ச்சியில் வந்த மயக்கம்தான் இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்துடுவாங்க பயப்பட ஒன்னுமில்லை என்றதும் மித்ரன் இருந்த ஆப்ரேசன் தியேட்டர் வெளியே காத்திருந்தனர். 


அப்பொழுது வெளியே வந்த டாக்டர் "உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை சார். பட் பிளட் அதிகாம லாஸ் ஆயிருக்கு தலைலயும் வலது கால்லையும் சின்ன அடி தென் வலது கை மூட்டுல பிராக்சர் ஆயிருக்குறதால சர்ஜரி பண்ணிருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சதும் ரூம்க்கு மாத்திடுவாங்க அப்போ அவரை நீங்க பார்க்கலாம் " என்று விட்டு சென்றார்.


ஒரு மணிநேரம் கழித்து மித்ரனை ரூமுக்கு மாற்றினார்கள். 


மது அழுது கொண்டே இருந்தாள்.


மித்ரன் மயக்க மருந்தின் வீரியம் இன்னும் அவன் உடம்பில் இருந்தது போல.. 


முழிப்பான் சிறிது நேரத்தில் தூக்கத்திற்கு சென்றுவிடுவான். 


சனா மதியை எவ்வளவு சமாதான படுத்தினாலும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. 


'என்னாலதான் இப்படி அத்தானுக்கு ஆயிருக்குமோ' என்று நினைத்து அழுது கொண்டிருந்தாள்.


மித்ரன் தூங்கவும் நர்ஸ் வந்து "யாராவது ரெண்டு பேரு மட்டும் இருங்க மத்தவங்க எல்லாரும் கிளம்புங்க " என்று விட்டு சென்றாள்.


கிருஷ்ணன் தான் இருந்து பார்த்துக் கொள்வதாக கூறி நீங்க வீட்டுக்கு போய்ட்டு காலையில் வாங்க என்று கூறினார். 


சனா, " நாம கிளம்புவோம் மதியும் விக்கியும் இருப்பாங்க எதாவது வேணும்னா விக்கி வாங்கி தருவான்.. மதி கண்டிப்பா கூப்பிட்டாலும் வரமாட்டா காலையில் வரலாம்" என்று விட்டு கிளம்பினார்கள் அனைவரும். 


விக்கி அனைவரும் கிளம்பியதும் 


"நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்மா எதாவது வேணும்னா கால் பண்ணு உடனே வரேன் " என்கவும் "ம்ம்" என்று தலையை ஆட்டினாள்.


அவன் வெளியில் சென்றதும் கதவை மூடிவிட்டு வந்தவள் மித்ரன் அருகில் அமர்ந்து அவன் தலையைக் கோதிக் கொடுத்து நெற்றியில் முத்தமிட்டாள்.


அவன் தலையில் இருந்த கட்டை வருடியவள் 


''என்னால தான் அத்தான் இப்படி எல்லாம் ஆச்சு சித்தி கூட சொல்லுவாங்க நான் ராசி இல்லாதவள் அதனால் தான் எங்க அம்மாவ நான் தான் சாகடிச்சிட்டேன்னு சொல்லுவாங்க.. ஒரு வேளை என் ராசி தான் உங்களுக்கு இப்படி ஆகுறதுக்கு காரணமா அத்தான் " என்று அழுதாள். 


சலைன் பாட்டில் தீரவும் அங்குள்ள பட்டனை தட்டி நர்ஸை அழைத்தவள் சலைன் முடியப் போகுது என்கவும் வேறு எடுத்து மாற்றிவிட்டு சென்றாள். 


மது மித்ரனைப் பார்த்தப்படியே அமர்ந்திருதாள். 


இங்கு விக்கி தனக்கு தெரிந்த ஆட்களை வரவழைத்து ஆக்ஸிடண்ட் நடந்த இடத்தில் எதாவது ஆதாரம் கிடைக்குமா என்று பார்க்க சொன்னான்.


அவனே நேரடியாக சென்று பார்க்க அங்கு ஒரு கடையில் சிசிடிவி இருக்கவும் அதில் இருந்த காட்சிகளைப் பதிவு செய்துகொண்டு வந்தான்.


பின் அந்த காட்சியில் லாரியின் எண் தெளிவாகத் தெரியவும் அதை தன் ஆட்களுக்கு அனுப்பி விசாரிக்க சொன்னவன் தனக்கும் மதிக்கும் இரவு உணவு வாங்கி வந்தான். 


கதவை தட்டி விட்டு உள்ளே வந்து மதியிடம் "இந்தாம்மா இந்த சாப்பாட்டை சாப்பிடுமா" என்றான். 


"வேண்டாம் அண்ணா " என்று மறுக்கும் போதே மித்ரனிடம் அசைவு தெரியவும் அவனிடம் சென்றாள்.


"அத்தான்" என்கவும் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான்.


மதுவைப் பார்த்து சிரிக்கவும் அவன் இடது கையைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.


மித்ரன் விழித்ததும் அருகில் வந்த விக்கி 


"சாரிடா மச்சான் நான் வர சொல்லலைன்னா நீ வந்துருக்க மாட்டதானே" என்று வருந்தியதும் 


"டேய் மச்சான் எனக்கு ஒன்னும் இல்லைடா இன்னும் கொஞ்ச நாள்ல்ல சரியா போயிடும் "


"மச்சி தண்ணி வேணும்டா" என்றதும் "இருடா நான் போய் கேட்டுட்டு வரேன் தண்ணீர் குடுக்கலாமான்னு" என்று வெளியே சென்றான்.


தன் கையைப் பிடித்து அழுது கொண்டிருந்தவளின் கையை எடுத்து தன் உதடில் ஒற்றியவன் 


"மது உன்னை விட்டுட்டு எப்படி போவேன்... உன் கூட தான் இருக்கேன் அழாத கண்ணைத் துடை.." என்று துடைத்துவிட்டான். 


"ஒன்னும் இல்லடா இன்னும் கொஞ்ச நாள்ல்ல சரியாகிடும்" 


"அத்தான் எனக்கு கொஞ்ச நேரத்துல உயிரே போயிடுச்சு அத்தான்... செத்துடனும் போல இருந்துச்சு அத்தான்..." என்றதும் "மதி" என்று அதட்டினான்.


அவளைத் தன் அருகில் அழைத்தவன் "ஒன்னும் இல்லை பயப்படாத" என்றவன் அவள் கைகளில் முத்தமிட்டான். 


விக்கி வரவும் "மச்சான் தண்ணீ கொஞ்சமா குடுக்க சொன்னாங்கடா" என்றான். 


"மச்சான் இந்த கட்டில உட்கார ஹெல்ப் பண்ணுடா" என்றதும் அங்கிருந்த லிவரை சுழற்றி பெட்டை மேடாக மாற்றி அவன் அமர உதவி செய்தான்.


பின் மதி சாப்பிடவில்லை என்று கூறிவிட்டு வெளியே இருக்கிறேன் நீங்க பேசிட்டுருங்க என்று வெளியே சென்றான்.


" மதி சாப்பிடுடா"


" எனக்கு வேண்டாம் அத்தான் பசிக்கல " என்றதும் 


"நீ தானே என்னை பார்த்துக்கனும் நீ சாப்பிடாம இருந்தா எப்படி என்னை பார்த்துப்ப.. என்கூட இருக்கனும்னா சாப்பிடு இல்லைனா வீட்டுக்கு விக்கி கூட கிளம்பு " என்று அவன் சொன்னதும் பார்சலை பிரித்து சாப்பிட்டாள்.


அவள் சாப்பிட்டதும் அவளை அழைத்து தன் கைவளைவில் அமர்த்திக்கொண்டான்.


அவன் கட்டுப் போட்டிருந்த கையை வருடிக் கொடுத்து 


"அத்தான் இது உள்ள பிளேட் வச்சுருக்காங்களாம் அத்தான் உங்களுக்கு வலிக்குதா..." என்றதும் 


"எனக்கு இப்போ வலிக்கலடா தூக்கம்தான் வருது" என்றதும் 


"சரி நீங்க தூங்குங்க அத்தான்" என்று விலகப் பார்த்தாள் .


அவளை தன் இடது கையால் வளைத்தவன் "இங்க என் கூடவே இருடா" என்றதும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். 


அவனும் இடது கையால் அவளை அணைத்துக் கொண்டு படுத்தான்.


படுத்த சிறிது நேரத்திலே மித்ரன் தூங்கி விட்டான். 


மது அவன் வலது கையை வருடிக் கொண்டே இருந்தவள் அவன் அணைப்பில் தூங்கிப்போனாள்.


மித்ரனுக்கு மயக்க மருந்தின் வீரியம் குறையவும் வலி தெரிய ஆரம்பித்தது. 


வலியால் "ச்சு" என்றதும் உடனே எழுந்து கொண்டவள் 


"என்ன அத்தான் ஆச்சு வலிக்குதா" என்றதும் 


"ம்ம் ஆமா மது "என்றதும் நர்ஸை அழைத்தாள்..


நர்ஸிடம் சொல்லி அவள் ஊசி போட்டு ஒரு அட்டை மாத்திரைக் குடுத்து 


"நாளைக்கு டாக்டர்கிட்ட சாப்பாடு என்ன குடுக்கனும்னு கேட்டுட்டு வலி இருந்தா இந்த மாத்திரையைப் போடுங்க" என்று விட்டு சென்றாள். 


ஊசிப் போட்டதும் கொஞ்ச நேரத்தில் மீண்டும் தூங்கிவிட்டான். 


பிறகு காலையில் மித்ரன் அசைந்ததும் எழுந்த மதி 


"என்ன அத்தான் வேணும்" என்றதும் 


"விக்கி வெளியே இருப்பான் கொஞ்சம் கூப்பிடு மதி" என்றான். 


"எதுக்கு அத்தான் பாத்ரூம் போகனுமா வாங்க நான் கூட்டிட்டு போறேன்" என்றதும் அவன் தயங்கியதைப் பார்த்து 


"அத்தான் நான் இதெல்லாம் பண்ணக்கூடாதா "என்று கண் கலங்கவும் "சரிவா" என்று எழுந்தான்.


அவன் எழ உதவி செய்தவள் அவன் கையைத் தன் தோள் மேல் போட்டுக்கொண்டு மெதுவாக அழைத்து சென்றாள்.


பின்பு அழைத்து வந்து அவனைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு அவனிடம் "நான் போய் முகம் கழுவிட்டு வரேன் அத்தான்" என்று சென்றாள்.


அப்பொழுது விக்கி வரவும் "மச்சான் யாருன்னு பார்த்தியா" என்றதும் 


"ம்ம் லாரி நம்பர் கிடைச்சிருக்கு மச்சான் நம்ம ஆளுங்கங்கிட்ட குடுத்து விசாரிக்க சொல்லிருக்கேன் மோஸ்ட்லி இன்னைக்கு தெரிஞ்சிடும் மச்சான்" என்றான் . 


மதி வரவும் அவனுக்கு பேசாதே என்று சைகை செய்தவன் அவளிடம் 


"மதிம்மா நீ வீட்டுக்குப் போய் குளிச்சிட்டுவாடா அதுவரைக்கும் விக்கி கூட இருப்பான் " என்று கூறினான்.


"அத்தான் நான் உங்ககூட இருக்கேன் " என்று உதட்டைப் பிதுக்கினாள் அழுகையில்.


அப்பொழுது கிருஷ்ணனும் சனாவும் வந்தனர்.


மித்ரனிடம் வந்து "எப்படிபா இருக்கு இப்போ பரவால்லையா" என்று சனா தன் மகனின் தலையைத் தடவினார்.


கிருஷ்ணன் அவன் கையைப் பிடித்துக்கொண்டு "எப்படி பா இது நடந்துச்சு" என்று கேட்டார். 


விக்கி சொல்ல வரவும் அவனுக்கு சைகை செய்தவன்  


"நான் தான் ப்பா கொஞ்சம் கவனிக்கலை அதான் இப்படி நடந்துருச்சு" என்றவன் அமைதியாக படுத்துக் கொண்டான்.


பின் சனா மதியிடம் 


"மதி நீ வீட்டுக்குப் போய்ட்டு குளிச்சிட்டு மித்ரன் பேருக்கு கோவில்ல அர்ச்சனை பண்ணிட்டு வாடா" என்றதும் "ம்ம்" என தலை ஆட்டியவள் மித்ரனை பார்த்து தலையசைத்து விட்டு சென்றாள். 


மதி குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றாள்.


மித்ரன் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு போகலாம் என்று அமர்ந்தாள்.


அப்பொழுது பக்கத்தில் யாரோ அமரும் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள். 


நிவேதா தான் தனக்கு முப்பத்திரண்டு பற்களும் இருக்கிறது என்று காட்டிக்கொண்டிருந்தாள்.


"என்ன உன் புருஷன் உயிரோடு இருக்கனும்னு வேண்டிக்கிட்டயா ... அதுக்கு இந்த ஜென்மத்துல நீ கூட இருக்கிற வரைக்கும் நடக்காது… நீ கூட இருந்தா எப்படி அவன் நல்லா இருப்பான்... நான் கேள்விபட்டது உண்மையா?"


"உங்க அம்மா நீ பிறந்ததும் செத்து போய்ட்டாங்களாமே … பாரு நீ பிறக்கும் போதே உங்க அம்மாவ கொன்னுருக்க ... இப்ப இவன கல்யாணம் பண்ணி இவனையும் மேல அனுப்ப போற போல சூப்பர்.." என்று தான் வந்த வேலையைத் திறம்பட செய்துவிட்டு கிளம்பிவிட்டாள். 


மது "தான் கூட இருப்பதால் தான் தன் அத்தானிற்கு இப்படி ஆகிவிட்டதோ " என்று நினைத்துக் கொண்டிருந்தவள் இவள் சொன்னதைக்கேட்டு முடிவே செய்துவிட்டாள் "தன்னால் தான் இப்படி ஆகிவிட்டது "என்று. 


ஆனால் இதில் மது ஒன்றைக் கவனிக்க தவறினாள். 


யாரும் சொல்லாமல் நிவேதாக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என்பதை அவள் யோசிக்கவில்லை. 


காரில் போகும் போது தப்புதப்பாக யோசித்து தன்னால் தான் இப்படி தன் கணவனுக்கு நடந்தது என்று அவளே முடிவு செய்து கொண்டு தன் கணவனைப் பிரிந்தால் அவன் நன்றாக இருப்பான் என்று தவறான முடிவை எடுத்தாள்.


இவளின் முடிவு மித்ரனுக்கு தெரிந்தால்…?


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments