மோகம் - 12:
மித்ரனுக்கு பத்து வயது இருக்கும் போது ஒரு பெரிய பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்தனர்.
மித்ரனும் புது இடத்திற்கு செல்கிறோம் என்ற உற்சாகத்தில் அதனைக் கண்டுக் கொள்ளவில்லை.
ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு தன் அப்பா அம்மாவை பிரியும் நேரம் தான் அவன் தன் தாய் தந்தையுடன் இருக்க முடியாதோ என்று பிரிவை உணர்ந்தான்.
பின்பு தன் தந்தையிடம் "அப்பா நான் வீட்டுல இருந்தே படிக்கிறேன் பா.. உங்களை விட்டு என்னால இருக்க முடியாது பா.. நான் உங்க கூடவே வரேன் பா." என்று அவர் கைகளைப் பிடித்து அழுதான்.
சனா உடனே "மித்து.. அம்மா உன்னை வந்து பார்க்கிறேன் டா கண்ணா.. அப்பாக்கு பிஸ்னெஸ் மீட்டிங்ஸ் இருக்குறதால அடிக்கடி வெளிய போற மாதிரி இருக்கும் டா கண்ணா.. அப்படி போகும்போது நானும் போக வேண்டியது இருக்கும்."
"அப்படி போகும் போது உன் படிப்பு ஸ்பாயில் ஆகக் கூடாதில்லையா அதான் உன்னை ஹாஸ்ட்டலில் சேர்த்தோம்.."
"அம்மா வந்து அடிக்கடி பார்க்கிறேன் சரியா." என்று அவனை சமாதான படுத்திவிட்டு சென்றனர்.
ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் மித்ரனை வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
அந்த பள்ளியில் படிக்கும் போது தான் விக்கியின் தோழமைக் கிடைத்தது.
ஒரு நாள் அழுது கொண்டு மித்ரன் பள்ளிக்கு வந்தான்.
விக்கி "ஏன்.." என்று கேட்டதும்
"என்னை மூன்று மாதமா அம்மா அப்பா பார்க்க வரவில்லை.. ஜெர்மனி போயிருக்காங்கலாம்." என்று விக்கியிடம் சொன்னான்.
விக்கி வீட்டிற்கு கொஞ்சம் பக்கத்திலே அந்த பள்ளி இருந்ததால் விக்கி வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தான்.
மித்ரன் விக்கியிடம் "எனக்கு ஆசையா இருக்குடா விக்கி.. நம்ம ப்ரெண்ட்ஸ் அம்மா அப்பாலாம் வாரவாரம் வந்து அவங்களை பார்த்துட்டுப் போறாங்க.."
"போன வாரம் கூட ஆகாஷ் அம்மா வந்தாங்கடா.. அவனுக்கு பிடிக்கிற சாக்லெட்ஸ்லாம் வாங்கிட்டு வந்தாங்க.. அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டாங்கடா." என்று ஏக்கமாக கூறினான்.
அன்றே விக்கி தன் தந்தையிடம் சென்று அனைத்தையும் கூறி "என்னையும் ஹாஸ்ட்டலில் சேருங்கப்பா.." என்றான்.
அவர் விக்கியை ஹாஸ்ட்டலில் சேர்த்துவிட்டு அன்றிலிருந்து வாரவாரம் குடும்பமாக இருவரையும் பார்த்து விட்டு அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து ஹாஸ்ட்டலில் விட்டு செல்வார்கள்.
அப்பொழுதிலிருந்து மித்ரன் விக்கியுடனும் அவனது குடும்பத்துடனும் இன்னும் நெருக்கமானான்.
முதலில் மித்ரனின் பெற்றோருக்கு இது பெரிதாக தெரியவில்லை.
வருடங்கள் செல்ல செல்ல விடுமுறைக்கு வீட்டிற்கு வருபவன் நந்துவிடம் பேசுபவன், இவர்களிடம் கேட்டால் பதில் சொல்வான், இல்லை என்றால் தன் அறையில் முடங்கிக்கொள்வான்.
அவன் பெற்றோர்கள் அவனை நெருங்க முயல அவன் விலகி சென்றான்.
மனதால் என்றோ விலகி இருந்தான்.
அப்பொழுது தான் கிருஷ்ணனும், சனாவும் தங்கள் தவறுகளை உணர்ந்தனர்.
பணம் பணம் என்று பிள்ளையைக் கவனிக்கவில்லையோ என்று காலம் கடந்து யோசித்தனர்.
மித்ரன் லண்டனில் தன் படிப்பை முடித்து தமிழ்நாட்டிற்கு வந்த சமயம் அது.
மித்ரன் தன் அறையில் யாரிடமோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது வீட்டுக்கு வந்த நிவேதா அவனை பின்னால் இருந்து அணைத்தாள்.
அவள் அனைத்ததும்
"ஏய் கையெடு.. என்ன பண்ற? ச்சீ.." என்று அவளைப் பிரித்துவிட்டான்.
"என்ன மித்து..? நான் கட்டிப் பிடிக்கக்கூடாதா.." என்று கொஞ்சலாக கேட்டு அவனை திரும்பக் கட்டியணைக்க வந்தவளைப் "பளார்.." என்று அறைந்தவன் அறுவெறுப்புடன் அவளைப் பார்த்தான்.
அவன் தன்னை அறைந்ததும்
"என்னையா அடிக்கிற இரு உன்னை என்ன பண்றேன்னு பாரு.." என்று தன் மனதில் வன்மத்துடன் எண்ணியவள் கீழே சென்று ராதாகிருஷ்ணனிடம்
"மாமா..மித்து என்ன அடிச்சுட்டாரு.. அவரு என்னை கிஸ் பண்ண வந்ததும் நான் வேணாம்னு சொன்னேன் என்று என்னை அடிச்சுட்டார்.." என்று நீலிக்கண்ணீர் வடித்தாள்.
மித்ரன் அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டே வந்தவன் கோபத்துடன் ஏதோ சொல்ல வந்தவனை கிருஷ்ணன் என்ன என்று கூடக் கேட்காமல் அறைந்துவிட்டார்.
சனாவும் அங்குதான் இருந்தார் அதிர்ச்சியுடன் தன் மகனைப் பார்த்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை.
அவருக்கு ஒரு பெண் இதில் பொய் சொல்ல மாட்டாள் என்று நினைத்து தான் தன் பிள்ளையை அடித்தார்.
ஆனால் அந்த நிவேதா இதற்கும் மேலும் பேசுவாள் என்று பாவம் அவருக்கு தெரியவில்லை.
மித்து தன் தந்தை தன்னை நம்பாமல் அறைந்ததும் கோபத்துடன் தன் அறைக்கு சென்றவன் தான் அதன்பிறகு இருவரிடமும் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை.
பின்பு விஸ்வநாதன் மூலமாக தான் தெரிந்தது.
தன் மகளும் மனைவியும் பேசிக்கொண்டதைக் கேட்டு கிருஷ்ணனிடம் கூறினார்.
அதற்கு பிறகு எவ்வளவோ அவனிடம் பேச முயற்சி செய்தனர்.
ஆனால் அவன் பூட்டிய மனக்கதவை திறக்கவே இல்லை.
மதி வந்ததிலிருந்து தான் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுகிறான்.
அதற்கு முன்னால் முத்துவை தன்னறைக்கு எடுத்து வர சொல்வான்.
அவனைப் பார்ப்பதே அரிதாக இருக்கும்.
அனைத்தையும் மதியிடம் சொல்லியதும் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
அவளுக்கு இப்பொழுது அவன் பத்துவயது சிறுவன் போல தான் தெரிந்தான்.
அம்மா அப்பா இருந்தும் பாசத்துக்காக ஏங்கி இருக்கிறான் என்று நினைத்து அவள் துடித்தாள்.
அவனை அணைத்துக்கொண்டு முகம் முழுக்க முத்தமிட்டு
"நான் இருக்கேன் அத்தான் உங்களுக்கு.." என்று அணைத்துக்கொண்டாள்.
மித்ரனும் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
தனக்கென்று யாரேனும் ஒருவராவது இருக்கிறார்கள் என்றாலே அது நமக்கு தனி பலம் தானே..
"அத்தான் அவங்க உங்களை நம்பாம அடிச்சது தப்பு தான்."
"ஆனால் ஒரு பொண்ணு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்ல மாட்டாள்.. ஆனால் இந்த நிவேதா இப்படி பண்ணுவான்னு அவங்களுக்குத் தெரியாதுல்ல அத்தான்."
"அவங்க கிட்ட பேசுங்க அத்தான்.. அவங்க பண்ணினது தப்புதான்.. நான் இல்லன்னு சொல்லல்ல.. ஆனால் இப்போ அவங்க நீங்க ஒரு வார்த்தை பேசிட மாட்டீங்களான்னு ஆவலா உங்க முகத்தைப் பாக்கும்போது கஷ்டமா இருக்கு அத்தான்."
"நீங்க அவங்களுக்காக ஏங்குன நேரம் அவங்க உங்க கூட இல்லைதான். ஆனால் அவங்க பண்ணின அதே தப்ப நாமும் ஏன் செய்யனும் அத்தான்."
"எல்லாத்தையும் மறந்துடுங்க அத்தான்.. அவங்களை மன்னிச்சு ஏத்துக்கோங்க அத்தான் ப்ளீஸ்."
"அப்போ நான் இழந்ததெல்லாம் திரும்ப கிடைச்சிடுமா மது.."
"போனது வராது தான் அத்தான்.. ஆனால் இனிவரப் போற காலங்கள்ல்ல நாம சந்தோஷமா இருக்கனுமில்ல அத்தான்.."
"அதுமில்லாம இப்போ கல்யாணம் வேற இன்னும் ஒரு வாரத்துல வரப் போகுது. அதுக்கு அவங்க மனசுல எந்த குறையும் இல்லாமா சந்தோஷமா இருக்கனும் அத்தான்."
"பேசுங்க அத்தான்.. கஷ்டம் தான்.. ஆனால் உங்க அப்பா அம்மா தானே புரிஞ்சுக்கோங்க அத்தான்." என்று அவன் தாடையை பிடித்துக் கேட்டாள்.
"ஹிம்ம்.. பார்க்கலாம் மது.. உடனேலாம் மாற முடியாது.. உனக்காக முயற்சி பண்றேன்." என்றதும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு
"செல்லக்குட்டி அத்தான் நீங்க.. நான் சொன்னதெல்லாம் கேக்குறீங்க.." என்று தாடையை பிடித்துக் கொஞ்சினாள்.
"நான் பிஸ்னெஸ்மேன் மதுக்குட்டி.. ஆதாயம் இல்லாமா எதுமே செய்யமாட்டேன். உன் பேச்ச கேக்குறேன்னா.. உன்கிட்ட இருந்து நான் எதாவது எதிர்ப்பார்ப்பேன்.
அதை நீ அப்படியே தரனும்.. என்ன தருவியா.." என்று புருவத்தை ஏற்றி இறக்கிக் கேட்டான்.
"என்கிட்ட ஒன்னுமே இல்லையே அத்தான்.." என்று உதட்டைப் பிதுக்கி கூறியவளைப் பார்த்து
"இப்போதைக்கு இது தான் மதுக்குட்டி வேணும்." என்று பிதுக்கிய உதடை சிறைப்பிடித்தான்.
அவனிடம் இருந்து பிரிந்தவள் ''போங்க அத்தான்.. நீங்க எப்போ பார்த்தாலும் முத்தம் குடுக்குறேன்னு சொல்லி கடிக்கிறீங்க.." என்று புகார் வாசித்தவள்
"அத்தான் நான் உங்களை ஒன்னு கேட்கனும்னு நினைச்சேன்.."
"என்ன மது.." என்றான் அவள் உதட்டின் மேலே கண்ணாக.
"மறந்துடுச்சு அத்தான்.. இருங்க யோசிக்கிறேன்." என்றவளை இழுத்து தன் கைவளைவில் வைத்துக்கொண்டு அவள் உதட்டை வருடினான்.
"அத்தான்.. இப்படி பண்ணினா நான் எப்படி யோசிக்கிறது" என்று சிணுங்கினாள்.
"அதெல்லாம் யோசிக்க வேண்டாம்.. தானா அதுவே நியாபகம் வரும். அப்போ சொல்லு இப்போ வா.." என்று அவளை கைகளில் அள்ளியவன் மெத்தையில் கிடத்தி பக்கத்தில் படுத்தான்.
(ஏன்டா ஆவுனா பட்டு பட்டுன்னு தூக்குற...)
உடனே அவள் எழுந்து
"அத்தான் நியாபகம் வந்துருச்சு.."
"என்னது.."
"நீங்க எப்போ ரிஜிஸ்டர் பண்ணிங்க நம்ம கல்யாணத்தை.."
"அது மூணு மாசம் முன்னாடி.."
"என்னது மூணு மாசம் முன்னாடியா.." என்று அதிர்ந்தவள்.
"எப்படி அத்தான்?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் .
அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் தான் உளறிகொட்டியதை மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன்.
"அது சீக்ரெட் மதுக்குட்டி.. அப்புறம் சொல்றேன்.."
"அத்தான் ப்ளீஸ்.."
"அப்புறம் தான்.."
"சரி.. ஆனால் ரிஜிஸ்டர் பண்ண கையெழுத்து வேணும்.. அப்புறம் நானும் இருக்கனும்ல.. எப்படி பண்ணீங்க."
"எல்லாம் ஆளு கரெக்ட் பண்ணிதான் பண்ணினேன்.. உன் கையெழுத்து உன்கிட்ட தான் ஆளு வச்சு வாங்கினேன்."
"எப்போ அத்தான் வாங்குனீங்க."
"மூணு மாதம் முன்னாடி நூறுநாள் வேலைவாய்ப்பு அரசாங்கம் அறிவித்த போது நீங்க கையெழுத்துப் போட்டீங்கள்ல்ல.. அப்போ சுட்டது தான்." என்று சிரித்தான்.
"அத்தான் அப்போ சித்திக் கிட்டையும் அப்படி தான் வாங்கினீங்களா?" என்று வாயைப் பிளந்தாள்.
"ஹிம்ம்.. ஆமாம் உங்க சித்தி சும்மா உன்னை கேட்டா குடுக்க மாட்டாங்க.. அதான் சொத்தை வச்சு மடக்கினேன்."
"டவுட் கிளியர் ஆயிடுச்சா.. என் வேலைய நான் பார்க்கலாமா.." என்றான் .
"என்ன வேலை அத்தான்.. அதான் நைட் ஆயிடுச்சே.. இதுக்கு மேலயா ஆபீஸ் போறீங்க." என்றாள்.
"அங்க யாரு போறது..இங்கதான் வேலை." என்று அவள் மார்பை முட்டினான்.
"எப்போ பார்த்தாலும் இதே தான் உங்களுக்கு வேலையா.." என்றாள்.
"என்ன பண்றது இன்னும் ஒருவாரத்துக்கு இதை வச்சு தான் காலத்தை ஓட்டனும்."
"ரொம்பலாம் சலிச்சுக்க வேண்டாம்." என்று நகர்ந்தாள்.
"ஐயோ.. மதுக்குட்டி காரியத்தையே கெடுத்த போ.." என்று அவள் மார்பில் புதைந்தான்.
சிறிது நேரம் கழித்து சாப்பிட கீழே இறங்கவும் மித்ரனுக்கு தெரியாமல் சனாவை பார்த்துக் கண்ணடித்தவள், நேரே அவரிடம் சென்று
"உங்களுக்கே இது நியாயமா இருக்கா அத்தை? என் புருஷன் மேலே உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை.." என்றதும் அவள் எதைப்பற்றி கூறுகிறாள் என்று விளங்கியதும் தன் மகனை தானே நம்பவில்லையே என்று வேதனையுடன் பார்த்து அழுதார்.
அப்பொழுது கிருஷ்ணன் சோர்ந்த குரலில்
"என் பிள்ளையை நம்பாம நானே அடிச்சுட்டேன்.. எந்த பொண்ணும் அந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சுத் தான் என் பிள்ளையை கை நீட்டிட்டேன்.." என்று வருத்தப்பட்டார்.
அவர்கள் இருவரும் வருத்தப் படுவது பிடிக்காமல் "மது..." என்றான்.
"இருங்க.." என்று ஏதோ சொல்லப் போனவளை இழுத்து தன் அருகில் அமர்த்தி தன் அன்னையை பார்த்து "நீங்க சாப்பாடு வைங்க மா......"என்றான்.
மது சிரித்து கொண்டே அவன் அருகில் சாய்ந்து "கோவம் போய்டுச்சா.." என்றாள்.
"ஹிம்ம்.." என்றான்.
"ஐயோ.. கோவமா இருக்காறோ.." என்று பார்த்தாள்.
சனாவோ தன் மகன் பேசியதும் ஆனந்தத்தில் சிலையாக மாறியவர் மித்ரன் அழைக்கவும் தான் தெளிந்தார்.
கிருஷ்ணன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க "நீங்களும் வாங்கப்பா.." என்றான்.
அவர் ஒரு தலையசைப்புடன் வந்து அமர்ந்தார்.
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் அறைக்கு செல்லும் முன் "எப்படி உங்க பிள்ளையை பேச வச்சேன் பார்த்திங்களா.?" என்றாள் கெத்தாக.
சனா கண்கலங்கி அவள் தாடையை வருடவும்
"சரி சரி போய் தூங்குங்க.. நான் போறேன்." என்று தன் அறைக்கு வந்தவள் மித்ரனிடம் வந்து
"அத்தான் உங்களுக்கு என்மேல கோபமா.."
"இல்லையே.."
"அப்போ சரி.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அத்தான்.. அத்தை மாமாட்ட பேசினதுக்கு.."
"தேங்க்ஸ் லாம் வேண்டாம்.. எனக்கு வேற வேணும்."
"என்ன அத்தான்.."
அவளை நெருங்கி "ஸ்லிப்பிங் டோஸ் தான் வேணும்.." என்று கண்ணடித்தான்.
"ஓ.. தாராளமா.." என்று அவனை நோக்கி கையை விரித்தாள்.
0 Comments