மோகம் - 11:
மித்ரனால் நம்ப முடியவில்லை மதியா தன்னை அடித்ததென்று.
மதிக்கும் தன் முன்னால் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியுடன் நிற்கும் தன் கணவனை பார்க்க ஒருபக்கம் பயமாகவும் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.
ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவன் ஏதோ பேச வரவும் வாயில் கை வைத்து
"இன்னும் கொஞ்ச நேரத்துக்கு பேச கூடாது." என்றாள் கோபத்துடன்.
அவனை அழைத்து மெத்தையில் அமருமாறு கண்ணைக் காட்டினாள்.
அவனும் கீ குடுத்தது போல் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவள் சொன்னதை செய்தான்.
அவனை அமர வைத்து விட்டு டேபிளில் இருந்த சாப்பாடை எடுத்து அவனுக்கு ஊட்டினாள்.
வாய திறங்க என்று அவனுக்கு ஊட்டி தண்ணீர் குடுத்து தானும் சாப்பிட்டு கைகழுவி வந்தவள்.
அவன் பக்கத்தில் அமர்ந்து "இப்போ சொல்லுங்க.." என்றாள்.
"என்ன மதி அடிச்சுட்ட?" என்று சிறு பிள்ளை போல் பாவமாக கேட்டான் .
அந்த நேரம் பார்த்து விக்கி கால் பண்ணவும் எடுத்தான்.
"மச்சான்.." என்று மெதுவாக அழைத்தான்.
"என்ன மச்சி குரல் மெதுவா வருது.. அடி பலமோ.. ஆமாம் மச்சான்.. உன் தங்கச்சி என்னை அடிச்சிட்டாடா.." என்று சொன்னதும்
"என்னாதுதுது..?"
மதி அவனிடமிருந்து போனை வாங்கி சைலண்டில் போட்டு ,
"அத்தான்.. சாரி அத்தான்.. அது நீங்க திரும்ப திரும்ப கேட்டதும் என்னையே அறியாமல் அடிச்சுட்டேன் அத்தான்.. "
"அவளாம் ஒரு ஆளுன்னு அவ பேச்ச நான் கேட்பேனா அத்தான்.. அதான் அவ ஓவரா பேசவும் திட்டி அனுப்பிட்டேன். சாரி அத்தான் வலிக்குதா மன்னிச்சிருங்க.." என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளை திட்டி அனுப்பிட்டேன் என்று சொன்னதும்
"மதி அவள் என்ன சொன்னா? "
அவன் கேட்டதும் நிவேதா வந்தது முதல் தான் திட்டி அனுப்பியது வரை அனைத்தையும் கூறினாள் .
அவன் அமைதியாக அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க
"அத்தான் நான் உங்க அத்தை பொண்ண திட்டிட்டேன் கோபமா.."
"அதெல்லாம் இல்லைடா.."
சட்டென்று கண் கலங்கி "நீ என்னை நம்புன மாதிரி ஏன் மது அப்பா அம்மா என்னை நம்பலை.." என்று கேட்டதும் அவள் அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
"என்ன ஆச்சு அத்தான்..? அப்போ அத்தை மாமாக்கிட்ட பேசாததுக்கு நிவேதா தான் காரணமா?"
"ஆம்" என்று தலையாட்டியவன்
"அப்புறம் ஏன் நான் மதியம் வரும் பொழுது அழுது கண்ணுலாம் சிவந்து இருந்துச்சு.."
"எனக்கு நீங்க போனதுல இருந்து வயிறு வலி.. அத்தை மோரு குடுத்தாங்க.. ஆனா அப்பொழுதும் வலி நிக்கவே இல்லை.. அப்போதான் நிவேதா வந்துச்சா.. உங்கள கேவலமா பேசவும் எனக்கு கோவம் வந்துடுச்சு.. திட்டி அனுப்பிட்டேன்."
"அப்புறம் நீங்க வந்தீங்களா.. உங்ககிட்ட நிவேதா வந்தத பற்றி சொல்ல தான் வந்தேன்.. ஆனால் நீங்க நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காம கோபப்பட்டு போய்டீங்க.. திரும்பி வந்தும் நீ என்ன நம்பலையான்னு கேட்டதும், எல்லா சேர்ந்து அடுச்சிட்டேன்.. சாரி அத்தான்.." என்று மீண்டும் முத்தமிட்டாள்.
"நீ அடுச்சது வலிக்கலடா.. ஷாக்கா இருந்துச்சு.. என்னடா இது என்னோட மதுக்குட்டி வைலண்டா பிகேவ் பண்றாங்கன்னு." நினைச்சேன்.
"நான் உங்க கிட்ட பேசமாட்டேன் அத்தான்.." என்று திரும்பி அமர்ந்தவளை
"ஏன்டா மதிக்குட்டி.." என்று அவளை தன்னுடன் இழுத்து அணைத்து கொண்டு
"நீங்க எப்படி அத்தான் அப்படி நினைக்கலாம்.."
"எப்படி?"
"நான் உங்களை சந்தேகப் பட்டுருப்பேன்னு.."
"அப்படியில்லைடா மதி.."
"போங்க நீங்க பேசாதீங்க.."
தன் கைவளைவிற்குள் அவளை கொண்டு வந்தவன்
"எப்படி மதுக்குட்டி என்மேல உனக்கு இவ்ளோ நம்பிக்கை வந்துச்சு.. என்னை உனக்கு இந்த ரெண்டு வாரமா தானே தெரியும்."
அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே "ஏன்னா நீங்க என்னை காதலிக்கிறீங்க அத்தான்.."என்று வெட்கத்துடன் கூறிக்கொண்டே அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
"எப்படி மதுக்குட்டி? நான் உன்னை உன்னோட சம்மதம் கூட கேட்காம உன் சித்திய மிரட்டி கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்."
"அத்தான்.. நீங்க சித்திய மிரட்டி என்னை கல்யாணம் பண்ணிருந்தாலும் , இது வரைக்கும் என்னை சின்ன வார்த்தை சொல்லி அதட்டுனது கூட இல்லை. ஏன் என்னை கல்யாணம் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரனும்னு கூட அவசியம் இல்லையே.."
"ஆனால் நீங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க. என்னை யாரும் ஒரு சொல் சொல்லிடக் கூடாதுன்னு அப்படி பாத்துக்குறீங்க.."
"உங்க அத்தைக்கிட்டயே எனக்காக சண்டைக்கு போனீங்க. அப்புறம் சித்தி வந்தப்போ என்னை கூப்பிட்டு உங்க பக்கதுல உட்கார வச்சுக்கிட்டீங்க. "
"ஏன் இந்த இரண்டு வாரத்துல என்னை என்ன வேணாலும் பண்ணிருக்கலாம். ஆனால் நீங்க உங்க அப்பா அம்மா சொன்னதால எதும் பண்ணல அத்தான்.."
"என்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிறீங்க அத்தான். இப்போ கோபப்பட்டுட்டு போனப்ப கூட இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவீங்கன்னு தெரியும்.."
"ஏன்னா என்னை விட்டுட்டு உங்களால இருக்க முடியாது அத்தான்."
"என்னாலையும் நீங்க இல்லாம இருக்க முடியாது அத்தான்.. நானும் உங்களை விரும்புறேன்.." என்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
மது பேச பேச அவன் எந்த மாதிரி உணர்கிறான் என்றே தெரியவில்லை..
இப்பொழுது உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் யார் என்றால் நான் தான் என்பான்.
அந்தளவுக்கு அவன் உள்ளம் உவகையில் நிறைந்தது.
தானும் மதியை அணைத்துக் கொண்டு
"லவ் யூ மதி.. லவ் யூ சோ மச் மா.." என்று அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தான்.
அவளைத் தன்னிடமிருந்து பிரித்து
"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா......." என்று அவளைப் படுக்க வைத்து அவளை அணைத்துக்கொண்டு படுத்தான்.
அவள் வயிற்றிலிருந்து சேலையை ஒதுக்கிவிட்டு கைகளால் மெதுவாக அழுத்திக் கொடுத்தான், பின் தலைமுடியை கோதிக் கொடுத்தான் .
அவனுக்கு அவன் மதி தன்னை விரும்புகிறேன் என்று சொன்னதால் அவன் ஆகாயத்தில் பறந்துகொண்டு இருந்தான்.
"அத்தான் எனக்கு தூக்கம் வரல.."
"வலிக்குதா..?"
"ம்ம்.."
" டேப்லட் போடுறியா..?"
"வேண்டாம்.. நீங்க திராட்சை சாப்பிடுங்க.."
அவன் சிரித்துக் கொண்டே
"அது என்ன ஸ்லிப்பிங் டோஸா.."
"ம்ம் ஆமா.." என்று அவன் இதழை சிறைப்பிடித்தாள்.
அவன் கீழுதடை பற்களால் இழுத்து கடித்து அவனை துள்ள விட்டு பின்பு மேல் உதடை கவ்வி சப்பி நாக்கை உள்ளே விட்டு துழாவ இவன் பற்றிக்கொண்டான்.
பின்பு அவன் கை அவனுக்கு பிடித்த இடத்தை பிடித்து நசுக்கி கசக்கி, பின்பு பற்களால் இழுத்து பெரிதாக்கி வாயில் வைத்து உறிந்து அவளை தூங்க வைத்து தானும் தூங்கிவிட்டான்.
இவர்கள் இருவரும் தூங்கி விட்டார்கள் ஆனால் சைலண்டில் இருந்த போனில் நூறாவது முறையாக கால் பண்ணி மினுக்கு மினுக்குன்னு கண்ணடுச்சிட்டு இருந்தது.
வேற யாரு விக்கி தான்..
(ஏன்யா ரெண்டு பேரும் அடில ஆரம்பிச்சு ஸ்லிப்பிங் டோஸ் போட்டு தூங்கிட்டீங்க..
அங்க ஒருத்தன் அடின்னு சொன்னதுமே ஷாக் ஆகி உட்காந்தவன் தான்..
பாவம் விக்கி நீ..)
மித்ரன் தூக்கம் கலைந்து எழுந்தவன், தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்கும் தன் மதுவையே சிறிது நேரம் பார்த்தபடி இருந்தான்.
பின்பு தான் கவனித்தான் மேசை மேலிருந்த போனில் மினுக்மினுக்கென்று ஒளி வருவதை.
அதை கண்டதும் ,தான் எழுந்து மதிக்கு போர்வை போர்த்தி விட்டு வந்தவன் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.
கைப்பேசியை பார்த்தவன் திகைத்தான்.
"என்ன இது 167 மிஸ்டு கால் இருக்கு.."
அவன் விக்கி தான் பண்ணியிருப்பான் என்று நினைக்கவில்லை.
"விக்கி தான் பண்ணிருக்கான். ஏன் இத்தனை தடவை போன் பண்ணிருக்கான்."என்று நினைத்துக் கொண்டே அவனுக்கு அழைத்தான்.
இவன் அழைத்ததும் முதல் ரிங்கிலேயே எடுத்தான்.
(பயபுள்ளை போனையே பார்த்துட்டு இருந்துருக்கும் போல..)
"என்னடா மச்சான்..? இத்தனை கால் பண்ணிருக்க.. என்ன ஆச்சு.."
"என்ன ஆச்சா..? டேய் உனக்கு ஒன்னும் அடிலாம் பலமா படலல்ல.."
"ஏன்டா.. நல்லாதானே இருக்கேன்."
"டேய்.. மதி அடிச்சான்னு சொன்னல்ல."
"ஆமாம் மச்சான்.. ஆனால் சமாதானம் ஆயிட்டோம்." என்று சிரித்தான்.
"அட கிராதகா.. அதை சொல்ல வேண்டியது தானே.. நான் பயந்துட்டே இருந்தேன்."
(டேய் அவன் அதலாம் கணக்குளையே வைக்கல..
இன்னும் அடிச்சா கூட வாங்கிட்டு ,ஸ்லிப்பிங் டோஸ் போடுவான்.)
"டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. நான் நல்லாருக்கேன்.."
"அப்புறம் ஏன்டா கால் பண்ணப்ப எடுக்கல.."
"ஹி ஹி.. தூங்கிட்டேன் மச்சான்.."
அப்பொழுது தான் அவனுக்கு லேசாக விளங்கியது.
"டேய் மச்சான்.. கன்னி பையன் சாபம் உன்னை சும்மா விடாதுடா."
(ஆமாம் விக்கி அவர்களை நம்பாத.. ரெண்டும் கூட்டுக் களவானிங்க.)
"டேய் மச்சி.. நானும் கன்னிப்பையன் தான் டா."
"போடா.. உன்னை நம்பமாட்டேன்." என்று வைத்துவிட்டான்.
மித்ரன் சிரித்துக் கொண்டே கைப்பேசியை டேபிளில் வைத்து விட்டு மெத்தையைப் பார்த்தான்.
மதி இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தான்.
"தேங்க்ஸ் மதுக்குட்டி.. எங்க நீ என்னை நம்ப மாட்டியோன்னு பயந்துட்டேன்." என்று அவள் கண்ணத்தில் முத்தம் வைத்தான்.
அவள் அசையவும் கையை எடுத்தவன், "மது.." என்று மெதுவாக அழைத்தான்.
அவள் தூக்கத்திலே "ம்ம்.." என்று முனகி அவன் மேல் கைப்போட்டு அவன் நெஞ்சில் தலை வைத்து படுத்தாள்.
"மது.." என்று கிசுகிசுப்பாக திரும்ப அழைக்கவும் தன் தாடையால் அவன் நெஞ்சில் தேய்த்து திரும்பி படுத்தாள்.
அவளை இறுக்கி அணைக்கவும் கண்விழித்து "அத்தான்.."என்று அவளும் கட்டிக்கொண்டாள்.
"மது வயிறு வலி போய்டுச்சாடா.."
"ம்ம்.." என்று அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து அழுத்திக் கொடுக்க சொன்னாள்.
பின்பு "அத்தான்.. நிவேதாவ எதும் பண்ணாதீங்க.. நான்தான் திட்டி அனுப்பிட்டேன்ல.. நீங்க எதும் பண்ணாதீங்க அத்தான்.."
"அவளை சும்மாவிட்டா திரும்பவும் எதாவது பண்ணுவா.."
"இல்லை அத்தான் வேண்டாம்.. எதும் பண்ணாதீங்க ப்ளீஸ்.."
"சரிடா.."
"அத்தான் உங்க சின்ன வயசு போட்டோ இருக்கா.."
"ம்ம் இருக்குடா.."
"எடுத்துட்டு வாங்க பார்க்கலாம்.."
அவன் எழுந்து, எடுத்துட்டு வரவும் அதை பார்த்தவள்
"அத்தான் நீங்க சின்ன வயசுல அழகா இருக்கீங்க.."
"அப்போ, இப்போ எப்படி இருக்கேன்.."
அவன் கன்னத்தை வருடி, அவன் கண்களை பார்த்துக் கொண்டே ,
"இப்போ ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க அத்தான்.."
அந்த போட்டோ ஆல்பத்தில் ஆறு வயது வரைக்கும் எடுத்த போட்டோக்கள் அனைத்திலும் குடும்பமாக நால்வரும் இருந்தனர் .
அதன் பிறகு உள்ள போட்டோவில் விக்கியின் தாய் தந்தையும் இரண்டு சிறுவர்களும் நின்றிருந்தனர்.
அதை அவள் உற்று பார்ப்பதை பார்த்து
"என்ன மேடம் அப்படி பார்க்குறீங்க.. இது யாருன்னு கண்டுபிடி.." என்றான்.
"இவங்க விக்கி அண்ணாவோட அப்பா அம்மா.. இது நீங்களும் விக்கி அண்ணனுமா.."
"ஹிம்ம்.."
மற்ற போட்டோக்களிலும் இவர்கள் நால்வரும் தான் இருந்தனர்.
பின்பு சில போட்டோக்களில் மித்ரநந்தன் இருந்தான்.
"ஏன் அத்தான்.. அத்தை மாமா கூட போட்டோ எதும் எடுக்கலையா.." என்று கேட்டதும் கைகளை இறுக்கினான்.
அவன் பதில் எதும் சொல்லாமல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.
அங்கு கோபத்தில் முகம் சிவந்து கைகளை மடக்கி நின்றிருந்தவனை கண்டவள்
"என்ன ஆச்சு அத்தான்.."
அவன் கண்கள் கலங்கிருந்தனவோ.
ஆல்பத்தை எடுத்து வைத்துவிட்டு அவன் தோளைத் தொட்டு "அத்தான்.." என்றாள்.
மித்ரன் அவள் மடியில் படுத்துக்கொண்டு அவள் வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை வளைத்து கொண்டான்.
"என்ன அத்தான் ஆச்சு.." என்று கேட்டதும் அவன் அனைத்தையும் கூறினான்.
அவன் கூறி முடித்ததும்
"நான் உங்களுக்கு எல்லாமாவும் இருப்பேன் அத்தான்.. நீங்க வருத்தப்படாதீங்க. "
"இருங்க அத்தையும் மாமாவையும் எப்படி நீங்க ஏன் அத்தான தவிக்க விடலாம்னு கேட்கிறேன்."
என்ன நடந்திருக்கும்..
0 Comments