மோகம்-10:
வசந்தா வீட்டில் தன் கணவரிடம் மித்ரன் தான் இண்டஸ்டிரிய மூட வச்சது என்று கூறினார்.
"நீ ஏன் அவன் பொண்டாட்டிய போய் திட்டிட்டு வந்த.. வீடு தேடி போய் கேவலமா பேசுவ.. அவன் சும்மா இருப்பானா.. நான் பெத்ததும் சரியில்லை.. வாச்சதும் சரியில்லை.."
"இப்போ எதுக்கு நிவிய இதுல இழுக்கிறீங்க.."
"உன் பொண்ணு ஏற்கனவே பண்ணினது போதாதுன்னு, நீ வேற போய் இந்த வேலை பண்ணி வச்சிருக்க.. அதான் மித்ரன் இப்படி மொடக்கி வச்சுட்டான்.."
"உங்களால எனக்கு 50 லட்சம் நஷ்டம்.. உங்களால உதவி தான் பண்ண முடியல, உபத்திரம் பண்ணாமலாவது இருங்க.. இதுக்கு மேல என்னால இழக்க முடியாது." என்றார் விஸ்வநாதன்.
"ஏங்க எவளோ ஒரு பிச்சைக்காரியை கூட்டிட்டு வந்து அவ தான் பொண்டாட்டின்னு சொன்னா, நாங்க சும்மா விட்ருவோமா... நான் என் பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்து எல்லாத்தையும் வளைச்சு போடலாம்னு பார்த்தா.. இந்த மித்ரன் இப்படி எவளையோ இழுத்துட்டு வந்துருக்கான்."
"வசந்தா.. அது அவன் இஷ்டம் அதுமில்லாம உன் பொண்ணு பண்ணினதுக்கு இதுவரைக்கும் அவங்க வீட்டுக்குள்ள கூட அவளால் போக முடியல.. இதுல உன் பொண்ண எப்படி அவங்க மருமகளா ஏத்துப்பாங்க."
"நீங்க இனி யாரும் அங்க போக கூடாது.. போனீங்கன்னு தெரிஞ்சுதுன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்."
என்று கூறிவிட்டு அவர் கிளம்பியதும்
"என்னம்மா காலையிலேயே உன் வீட்டுக்காரர் என்ன சொல்லிட்டு போறார்.." என்று வந்தாள் நிவேதா.
"மித்ரன பத்தி தான்."
"சரி.. மித்ரனோட பத்தினி எப்படி இருந்தா.."
(பொறாமை.....)
"நல்லாதான் இருக்கா.. அவளுக்கு என்ன.. நான் போய் சும்மா நாலு வார்த்தை பேசுனதுக்கே பொல பொலன்னு கண்ணுல இருந்து தண்ணி ஊத்துது.."
"அந்த கழுதையை ஈசியா அடிச்சித் துரத்திடலாம்.."
(நீ பேசுனது உனக்கு நாலு வார்த்தையா அடியாத்தி.. சரியான ரவுடியா இருப்ப போல..)
"அப்போ இன்னைக்கே போய் நான் கொஞ்சம் அள்ளிப் போட்டுட்டு வரேன்.."
"இல்லை நிவி..உங்க அப்பா அங்க போக கூடாதுன்னு சொல்லிருக்காரு.."
"அடப்போமா நான் யாருக்கும் தெரியாம அவ மட்டும் இருக்குற டைமா பார்த்து போய்ட்டு வரேன்."
"சரி என்ன பண்ணப்போற நிவி.."
"முன்னாடி அந்த பெருசுங்க கிட்ட ஒரு பிட்டை போட்டேன்ல.. அதைதான் இவக்கிட்டையும் சொல்ல போறேன்.."
"வேணாம் நிவி.. அதுக்குத்தான் உன் அப்பா இதுவரைக்கும் உன்கிட்ட பேசலை.. அதெல்லாம் வேண்டாம்.."
"நான் யாருக்கும் தெரியாம தான் மா போகப் போறேன்.. ஒன்னும் பிராப்ளம் இல்லை மா.. அப்பா சொன்னதை கேட்டல்ல.. 50 லட்சம் நஷ்டம்.. எல்லாம் அவளால தானே.."
"ஆமாம் நிவி.. ஒத்த பைசாவுக்கு ப்ரொஜனம் இல்லாதவ.. 50 லட்சம் போச்சு.."
"ம்ம் எந்த பொண்ணாலையும் தன் புருஷன் இன்னொருத்தி கூட இருந்தான்னு சொன்னா பொருக்க முடியாது.. கண்டிப்பா சந்தேகம் வரும்.. அதைதான் இவக்கிட்டையும்
சொல்லி விரிசல் உண்டாக்கனும்.."
(அடிப்பாவிங்களா ஒரு குடும்பத்த கெடுக்க எப்படியெல்லாம் ப்ளான் போறீங்க…)
இங்கு மதி மித்ரன் ஆபிஸ்க்கு கிளம்பியதும் தனதறைக்கு வந்தவளுக்கு வயிற்றில் வலி ஏற்படவும் தேதியைப் பார்த்தாள்
"ஓ அதான் வலிக்குது போல.." என்று குளியலறைக்குள் நுழைந்தாள்.
பின்பு கீழே இறங்கி வந்ததும் சனா இவளிடம்
"மதி நான் ஷாப்பிங் போறேன்.. நீயும் வரியாடா.." என்றார்.
"இல்லை அத்தை.. எனக்கு வயிறு வலிக்குது.. இன்னைக்கு சுத்தமா முடியாது. ரொம்ப வலிக்கும்.. நான் வீட்டுலையே இருக்கேன்.. நீங்க போய்ட்டு வாங்க.."
அவள் கன்னம் தொட்டு "ரொம்ப வலிக்குதா மதி.. இரு வரேன்.." என்று சமையலறைக்கு போய் மோரில் வெந்தையம் போட்டு எடுத்து வந்தார்.
மதியிடம் "இதை குடிடா.. அப்படியே முழுங்கிடு.. இல்லனா கசக்கும்.."
அவள் குடித்து முடித்ததும் "இன்னும் கொஞ்ச நேரத்துல வலி குறைஞ்சிடும் டா.. நீ போய் ரெஸ்ட் எடு.. நான் போய்ட்டு வரேன் சரியா.."
"சரி அத்தை. "
இவர்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தன் காரில் அமர்ந்து இவர்களை வேவு பார்த்துக் கொண்டிருந்தவள் அனைவரும் கிளம்பியதும் வீட்டிற்குள் வந்தாள்.
இவள் வந்ததும் முத்து வந்து
"எல்லாரும் வெளியே போய்ட்டாங்கமா.."என்றார்.
"நான் இந்த வீட்டோட புது மருமகளைப் பார்க்கனும்.."
"அவங்க.." என்று முத்து ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே
"யாரு அண்ணா.." என்று மேலிருந்து குரல் கேட்டது .
"மித்ரன் சாரோட அத்தை பொண்ணு மா.. இவங்க பேரு நிவேதா.."
"சரி அண்ணா.. நான் பார்த்துக்கிறேன்.. நீங்க போய் உங்க வேலையப் பாருங்க..."
"சரிம்மா.. " என்று அவர் வெளியே போய் மித்ரனுக்கு அழைத்தார்.
ஆனால் அவன் எடுக்கவில்லை..
மீட்டிங் நடப்பதினால் தன் கைப்பேசியை சைலண்டில் போட்டிருந்தான்.
நிவேதா வந்தவள் சிறிது நேரத்திலேயே கிளம்பி விட்டாள்.
(என்னஅள்ளி போட்டியோ)
இங்கு மித்ரன் மீட்டிங் முடிந்ததும் தன் கைப்பேசியை எடுத்தான்.
"என்ன இத்தனை மிஸ்டு கால்ஸ் இருக்கு' என்று யோசித்துக்கொண்டே முத்துவிற்கு அழைத்தான்.
"என்ன அண்ணா இத்தனை தடவை கால் பண்ணிருக்கீங்க."
"தம்பி உங்க அத்தை பொண்ணு வந்தாங்க.."
"யாரு நிவேதாவா." என்றான் சற்று அதிர்ச்சியுடன்.
"ஆமாம் தம்பி.. சின்னம்மா கூட பேசனும்னு சொன்னாங்க. நான் அவங்க வீட்டுல இல்லைனு சொல்றதுக்கு முன்னாடி சின்னம்மா கீழே இறங்கி வந்துட்டாங்க.. அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்."
"சரி அண்ணா.. நான் வீட்டுக்கு வரேன்." என்று தன் கைப்பேசியை அனைத்து விட்டு
"மது அவ சொன்னது எதையும் நம்பாத மது.. நீயும் என்னை நம்பலைனா.. என்னால தாங்க முடியாது.." என்று அவளிடம் மானசீகமாக பேசிய படியே வந்தான்.
வந்தவன் வேகமாக தன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கு மெத்தையில் மது குப்புற படுத்திருந்தாள்.
"மது.." என்று அழைத்தவன் அவள் அருகில் சென்றான்.
அவன் குரல் கேட்டு எழுந்தவள் முகம் அழுது அழுது கண்கள் சிவந்து இருக்க மித்ரன்
"நீயும் நம்பலையா மது.." என்று சற்று கோபத்துடன் கேட்டவன் அவள் "உங்க அத்தை பொ..." என்று ஏதோ பேச வந்தவள் கழுத்தை நெறித்து
"நீயும் என்னை நம்பலையா ச்சீ.. ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க.." என்று அவளை மெத்தையில் தள்ளி விட்டவன்
வேகமாக வெளியே கிளம்பிவிட்டான்.
(நடந்தது என்ன ஹி ஹி..
நிவேதா என்ன கூறியிருப்பாள்.
மித்ரனின் இந்த செயலுக்கு மதியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..)
"மச்சான் மதிக்கூட என்னை நம்பலைடா.." என்று விக்கியிடம் புகார் வாசித்தான்.
"டேய் மதி உன் கிட்ட வந்து சொன்னாளா.. நான் உங்களை நம்பலை.. இல்லை, ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டாளா."
"இல்லைடா."
"அப்புறம் எப்படிடா சொல்ற.. அவ உன்னை நம்பலன்னு."
"மதி அப்படிலாம் நினைக்க மாட்டாடா.. போய் என்னன்னு பேசு அவக்கிட்ட.. புலம்பாம போடா வீட்டுக்கு." என்று அனுப்பி வைத்தான்.
மதி மித்ரன் தன்னை தள்ளிவிட்டு சென்றதும், இந்த அத்தானுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது..
வரட்டும் இன்னைக்கு இருக்கு.. கோபத்தை குறைங்கன்னு சொன்னா கேக்குறாங்களா.. எதையுமே தெளிவா கேட்காம ,என்னை பேசக்கூட விடாமா.. எதுக்கு தான் இவங்க இப்படி பண்றாங்கன்னு தெரியல..
அவள் கீழ் இறங்கவும் சனா அப்பொழுதுதான் ஷாப்பிங் முடித்து வந்தார்.
"ஏன்டா மதி அழுதியா.. என்ன ஆச்சு?"
"வயிறு வலிதான் அத்தை.. நிக்கவேயில்லை.. ரொம்ப வலிச்சுது.. அதான் அழுதுட்டேன்."
"சரிடா சாப்பிடு வா.. நான் எடுத்து வைக்கிறேன்."
"அப்புறம் அத்தான் வந்ததும் சாப்ட்டுக்கிறேன் அத்தை. "
"சரிடா நீ போய் ரெஸ்ட் எடு.. சாப்பாடு வேணும்னா கால் பண்ணு.. நான் முத்துவ மேல அனுப்புறேன் சரியா.."
"ம்ம் சரி அத்தை.. "
தோட்டத்திற்கு போவதாக கூறிவிட்டு வெளியே தன் கணவனது கார் நிற்கிறதா என்று பார்த்தாள் இல்லை என்றதும் தன் அறைக்கு வந்து
விக்கிக்கு கால் பண்ணினாள்.
"அண்ணா எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க.."
"நான் நல்லாருக்கேன் மா.. அங்க எதாவது பிரச்சனையா மா.. இங்க வந்து இவ்வளவு நேரம் புலம்பிட்டு போறான்."
"அவரோடு அத்தை பொண்ணு வந்துச்சு.. அதை சொல்ல போனேன். உடனே நீயும் என்னை நம்பலையானு கேட்டு கோபப்பட்டு வந்துட்டாங்க.. இப்போ அங்க இருந்தா வீட்டுக்கு வர சொல்லுங்க அண்ணா.."
"இப்போ தான் மா கிளம்பினான்.. நான் சொல்லிருக்கேன்.. வருவான் மா.."
"சரி அண்ணா.."
"மதி நிவேதா சொன்னது.." என்றவனை இடைமறித்து
"அண்ணா அந்த பொண்ணு சொன்னதெல்லாம்,நான் ஒரு பொருட்டாவே எடுத்துக்கல.."
"அத்தான் தான் என்னன்னு கூட கேட்காம கோவப் பட்டுட்டு கிளம்பிட்டாங்க.. அதான் இவ்ளோ நேரம் வரவேயில்லை.. சாப்பிடவும் இல்லை.. அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்.."
"சரி மா பார்த்துக்கோ அவனை.. நான் வைக்கிறேன்.."
"சரி அண்ணா.." என்று போனை அனைத்தவள் நிவேதா தன்னிடம் கூறியதை நினைத்துப் பார்த்தாள்.
மதி முத்துவை அனுப்பி விட்டு நிவேதாவிடம்
"வாங்க நிவேதா, உட்காருங்க.. என்ன சாப்டுறீங்க.."என்று கேட்டாள்.
நிவேதா திமிராக
"எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடுறேன்."
"சரி சொல்லுங்க.." என்று அவளைக் கூர்மையாக பார்த்தாள்.
"உன் புருஷன் இருக்கானே ,அதான் மித்ரன்.. அவன் என்கிட்ட ஒரு வாட்டி தப்பா நடந்துக்க டிரை பண்ணினான்.. சரியான பொம்பளைப் பொறுக்கி..." என்றாள்.
"ஓ.. அவ்வளவு தானா.. சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டீங்களா.."
அவள் அலட்ச்சியமாக கேட்டதும்
"ஹேய் நான் சொல்றது உண்மை அவனைவிட்டு போயிடு.. அவன் என்கிட்டயே அப்படி நடந்துக்கிட்டான்னா. அப்போ இன்னும் எத்தனை பேரு.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
"போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல பேசினா வாயில பல்லு இருக்காது. என் புருஷன பொம்பளை பொறுக்கின்னு சொன்னப் போவே உன் பல்ல ஒடைச்சிருக்கனும்.
மாமாவோட தங்கச்சி பொண்ணாச்சேன்னு பார்த்தா.. நீ ரொம்ப ஓவரா பேசுற.. ரெண்டு நிமிஷத்துல இடத்த காலி பண்ணணும்.. இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியாது".
"ஏன் பட்டிக்காட்டுல இருந்து வந்துருக்கா.. ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சீங்களா. உங்க அம்மா பேசும் போது அன்னைக்கு நான் வாய் பேசாம இருந்ததுக்கு காரணம் அவங்க வயசுல பெரியவங்க.. அதனால ஒன்னும் பேசல. கிளம்பு இங்கிருந்து போ..." என்று கத்தினாள் .
நிவேதாவின் பயந்த முகம் நினைவில் வர சிரித்தாள்.
"இந்த அத்தான் வரட்டும் இருக்கு அவருக்கு.."
(டேய் மித்ரா சும்மா இருந்த பிள்ளைய இப்படி வைலண்ட் ஆக்கிட்டியே டா)
மித்ரன் தன் அறைக்கு வந்தான்.
முன்பு போலவே தான் மதி படுத்திருந்தாள்.
அவன் வரவும் இவள் எழுந்து அவனை கண்டுக் கொள்ளாமல், தன் அத்தையை அழைத்து சாப்பாடு குடுத்து அனுப்புமாறு சொல்லி வைத்து விட்டு ,டேபிள் மேல் இருந்த சேனிட்டரி நேப்கினை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
மதி தன்னை கண்டுக்கொள்ளாமல் தன் அன்னையிடம் பேசியது அவனுக்கு காண்டாகியது.
"என்கிட்ட மட்டும் கோவப்படுறா.." என்று நினைத்துக் கொண்டான்.
(யாரு அவ மட்டும் தான் கோவப்படுறாளா.. அப்போ சாரு நீங்க பண்றதெல்லாம்.)
அவள் நேப்கினை எடுக்கவும் "ஐயோ.. வயிறு வலிக்குமே.." என்று நினைத்தான்.
அவள் வெளியே வரவும் அவளிடம் சென்று
"வயிறு வலிக்குதா மது.." என்று கையைப் பிடித்தான்.
அவள் உடனே கையை உதறவும் கோபத்துடன் கத்தப்போனவன், கதவு தட்டும் சத்ததில் கதவைத் திறந்து முத்து குடுத்ததை வாங்கி கொண்டு கதவை மூடியவன் டேபிளில் வைத்து விட்டு அவளிடம் வந்தான்.
"மது.." என்று அழைத்தான்.
அவளிடம் பதிலில்லை.
அவன் அவளை தன் பக்கம் திருப்பவும்
"என்ன?" என்றாள் கோபமாக.
"எதுக்கு என்கிட்ட பேசமாட்டுற.. முகத்த கூட பார்க்க மாட்டுற."
"பின்ன நீங்க பண்றதுக்கு உங்களை கொஞ்சுவாங்களா.."
"அப்போ அவ சொன்னத நம்புறியா மது.."
அவன் திரும்ப திரும்ப அதை கேட்கவும் வைத்தாளே ஒரு அறை பட்டென்று..
மரியாதைலாம் கைவிடப்பட்டாச்சு..
அப்புறம் என்ன..?
(ஒரே வைலன்சுதான் ஹாஹா)
0 Comments