மோகம்-26:
தமிழின் தொலைப்பேசி அடிக்க எடுக்காமல் அதையே வெறித்து பார்த்தவாறு நீங்க அடிச்சுட்டு இருங்க நானும் பாத்துட்டு இருக்கேன்.. எவ்வளவு அசால்டாக சொல்றீங்க அவனை மன்னிக்க சொல்லி அதெப்படி அவனை மன்னிக்க முடியும் முடியவே முடியாது…
நீங்க என்னடான்னா அவனுக்கு வக்காளத்து வாங்கிட்டு வரீங்க எனக்கெல்லாம் அவ்வளவு பெரிய மனசில்லை அவனை மன்னிக்கிற அளவுக்கு நீங்க பெரிய தியாகியாவே இருந்துட்டு போங்க என்று வறுத்தெடுத்தாள்..
மீண்டும் மீண்டும் அவள் தொலைப்பேசி அடிக்க ச்சே என்றவாறு எடுத்து பார்க்க சசி தான் அழைத்தாள்.. ஐயோ அக்கா என்று அதிர்ந்தாள் ச்சே அத்தான்னு நினைச்சு எடுக்காம விட்டுட்டோமே என்று தன்னையே கடிந்துக் கொண்டவள் போனை அட்டெண்ட் செய்து ஹலோ என்றாள்..
என்ன தமிழ் எங்கிருந்த இவ்வளவு நேரம் போன் இத்தனை முறை அடிச்சேன் எடுக்கவில்லையே…
தூங்கிட்டேன் அக்கா (சும்மா உத்து உத்து பாத்துட்டு இருந்தேன்னா சொல்ல முடியும்..)
என்ன தமிழ் இப்படி பண்ற
என்னக்கா பண்ணினேன்…
இன்னும் நாலு நாளுல வரவேற்பு வச்சிக்கிட்டு உன்னை யாரு அங்கப் போக சொன்னது…
இல்லக்கா என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து நிறுத்திய சசி
என்ன தான் இருந்தாலும் அண்ணன் கிட்ட சொல்லாமப் போனது தப்பில்லையா தமிழ்…
இப்போ தான் கல்யாணம் ஆன புதுசு வேற இப்படியெல்லாம் விட்டுட்டுப் போகக் கூடாது தமிழ் ருசிக்கண்ட பூனைங்க இவங்களெல்லாம் சூட்டோட சூடா நம்ம முந்தானையில் முடிஞ்சி வச்சுக்கனும்…
இல்லன்னா போற வரவளுங்க எவளாவது கிடைச்ச கேப்புல தனக்கு சொந்தமாக்கிக்குவா.. உனக்கு நான் சொல்லி புரியனும்னு இல்லை புரிஞ்சி நடந்துக்கோ…
அதுவும் நீ போன கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்துச்சு வீட்டுக்கு.. நீ ஊருக்குப் போனதை சொன்னதும் கோபமா எங்கேயோ கிளம்பி போயிடுச்சு இன்னும் வீட்டுக்கு வரலை போன் போட்டாலும் ரிங் அடிச்சுக்கிட்டே இருக்கு…
ஆனால் போன் எடுக்கலை கேட்டா பிஸின்னு வருது எனக்கு எதோ தப்பா படுது தமிழ் இப்போவே சொல்லிட்டேன் இதுக்கு மேல உன் சாமர்த்தியம் என்று அசால்டாக பெரிய பாராங்கல்லையே எடுத்து தலையில் போட்டு அவளுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டு இவள் வைத்து விட்டாள்..
ஐயோ அவசரப்பட்டுக் கிளம்பி வந்தது தப்போ அத்தான் கிட்ட சொல்லிட்டு வந்துருக்கனுமோ போச்சு ஐயோ நானே என் தலையில மண்ணள்ளி போட்டுக்கிட்ட கதையா போச்சே…
இந்த மனுஷன் எவளையும் கண்டுக்காம போனாக்கூடா ஒருத்தியும் இவன் மேலருந்து கண்ண எடுக்க மாட்டாளுங்களே இப்போ இந்த அக்கா வேற இப்படி சொல்றாங்க.. ஐயோ என் அத்தானுக்கு ஒன்னுமே தெரியாதே ஐயோ என் பச்சப் பிள்ளையே விட்டுட்டு வந்துட்டேனே..
(ஹூக்கும் வாயில் விரல் வச்சாக்கூட கடிக்கத் தெரியாது இல்ல தமிழு..)
அதற்கு மேல் அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்… ஐயோ அத்தனை முறை போன் போட்டாங்களே நான் தான் எடுக்கலை என்று அவனுக்குப் போட புல் ரிங் போய் கட்டானது…
உடனே வாட்சப் ஓப்பன் பண்ண இவங்க வாட்சப்பில் இருப்பாங்களான்னு தெரியலையே என்று நினைத்துக் கொண்டே அவன் நம்பரை செர்ச் பண்ண இருந்தான் அதுவும் ஆன்லைனில் அதை பார்த்ததுமே அடியாத்தாடி இதென்ன ஆன்லைன்ல இருக்காரு…
ஆனால் போன் எடுக்க மாட்டுறாரு என்று திரும்ப நார்மல் கால் போட கட்டானது.. திமிரப் பாரேன் கட் பண்றதை...டேய் கதிரு மண்டையைப் பொளந்துருவேன் போனை எடுடா என்று திட்டிக் கொண்டே போன் போட அப்பொழுதும் எடுக்கவில்லை…
மறுபடியும் வாட்சப் சென்று பார்க்க அப்பொழுதும் அவன் ஆன்லைனில் இருப்பதாக காட்ட வெறியானாள்… உடனே டேய் கதிரு தடியா என் கையில மாட்டுனா இன்னைக்கு நீ மர்கையா தான் அடி வெளுக்கிறேனா இல்லையான்னு பாரு போன் இத்தனை முறை அடிக்கிறேன் ஒரு முறையாவது அடிக்கிறியா டா என்று முதல் முதல் அவனுக்கு வாட்சப்பில் செய்தி அனுப்பினாள்..
அவங்க கடிச்சிக்கட்டும் அதுக்கு முன்னாடி தமிழ் அப்படி எங்கப் போனா இப்போ ஏன் இந்த வாட்சப் போர் ஏன் நடக்குதுன்னு பார்ப்போம் வாங்க…
தமிழ் தன்னை கிழவன் என்றதும் அன்று இரவு தங்கள் அறையில் கதிர் தமிழிடம் ஏய் நான் கிழவனா உனக்கு எங்க நல்லா பார்த்து சொல்லு என்று அதட்ட அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்பது போல் அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவள் ஆமா கிழவன் தான் அதுக்கென்ன இப்போ என்று தெனாவெட்டாகக் கேட்டாள்…
அவன் அதிர்ந்து நோக்கவும் போயா கிழவா என்று அவனை திரும்பவும் கிழவன் என்று கூறி அவனை இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்து அனைத்துக் கொண்டு தூங்கி விட்டாள்..
இதுப் போலவே ஒரு வாரமும் அவனிடம் கிழவன் கிழவனென்று சொல்லி சொல்லியே வாயடைத்தவள் அவனிடம் அதன் பிறகு பேச வே மாட்டாள் இவனையும் பேச விடாமல் வாயடைத்து விடுவாள்..
சுந்தரம் தமிழின் அத்தை வீட்டிற்கு பத்திரிக்கை கொடுக்க நேரில் சென்றார்.. அப்பொழுது நடந்தது அனைத்தையும் கூறி வரவேற்பு வைத்திருப்பதாகக் கூறி விடைப் பெற்றார்.
சுந்தரம் சொன்ன கல்யாண விஷயமே அதிர்ச்சியைக் கொடுத்தாள் பத்திரிக்கையில் இருந்த தமிழின் போட்டோவைப் பார்த்து ராகேஷன் மனம் அதிர்ந்தது..
ராகேஷ் தமிழின் அத்தை சொர்ணவள்ளியின் ஒரே மகன்.. பத்திரிக்கையைப் பார்த்தவன் பார்த்தபடியே இருந்தான் இவ என்ன இப்படி இருக்கா அவளைப் பார்த்தவாரே அம்மா என்று கத்தினான்.. என்னடா எதுக்கு கத்துர என்று அவனிடம் வந்தவர்களை ம்மா எனக்கு வேணும் என்று தமிழின் புகைப்படத்தை நோக்கிக் கையை நீட்டினான்…
டேய் கல்யாணம் ஆனவள் உனக்கெதுக்குடா என்று முகத்தை சுளித்தவாறு கேட்க ம்மா இப்போ வந்துட்டுப் போனாரே அவரு சொல்றதை வச்சு பார்க்கறப்போ இது விருப்பப்பட்டு நடந்தக் கல்யாணம் இல்லை…
அவங்க அம்மாக்காக உசரம் தான் கல்யாணம் பண்ணி இருப்பா எப்படியும் இங்க வர வச்சுட்டா இவளை ஒரே நாளில் மடக்கிடுவேன்..
(அதுக்கு வாய்ப்பே இல்லை.. செமத்தையா வாங்கி கட்டிக்கப் போறான்…)
எப்படி இருக்கா பாரு ம்மா பட்டிக்காட்டுல வளர்ந்த மாதிரியா இருக்கா இவன் பாரு அவளுக்கு மேட்சே இல்லை ம்மா நான் தான் ம்மா அவளுக்கு சரியான துணை என்று கூறவும் ஹிம்ம் ஆமா அம்மா நான் இவளை கல்யாணம் பண்ணியே ஆகனும்…
இவனின் இச்செயலை ஆதரிக்கும் பெற்றோர் நல்லவர்களாகவா இருக்க முடியும்.. எல்லாம் ஜாடிக்கேத்த மூடி தான்.. சொர்ணவள்ளியின் கணவர் ராமதாஸ் எய் சொர்ணம் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இவளை வளைச்சுப் போட்டுட்டா உங்க பூர்வீக சொத்து நமக்கு வந்துடும் என்ன சொல்ற என்று கேட்கவும் சூப்பர்ங்க என்று கைதட்டி சிரித்தவர்கள் அடுத்த நாளே கதிர் வீட்டிற்கு வந்தனர்…
குடும்பமாக வந்தவர்களை வரவேற்று கேள்வியாகப் பார்த்து நின்ற வடிவிடம் சென்று சொர்ணம் என்னக்கா என்னை தெரியலையா நாங்க தான் தமிழோட அத்தை மாமா அவன் என் பையன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் எங்க தமிழ் என்று தேட தோ கூப்பிடுறேன் என்று தமிழை அழைத்தார்.
அவர் அழைத்ததும் நம்ம வீடு தானே என்று எப்பொழுதும் போல் பாவாடை சட்டையில் வர இவர்கள் அமர்ந்திருந்தனர்.. தமிழ் இவர்களை சிறு வயதில் பார்த்தது அவளுக்கு உடனே நியாபகம் வரவில்லை இவர்கள் யாரென்று..
ஆனால் ராகேஷோ வெளியே நல்லப் பிள்ளை போல் அமர்ந்துக் கொண்டு உள்ளே ஐயோ நேரில் இன்னும் செமையா இருக்காளே என்று உள்ளுக்குள் மாற்றான் மனைவி என்றும் பாராமல் வர்ணித்துக் கொண்டிருந்தான்.
ஆத்தா தமிழு எப்படி இருக்க என்று அவளை அணைத்துக் கொண்டு பாச (அம்புட்டும் வேஷம்)மழையைப் பொழிந்தாள் சொர்ணம்..
நம்ம ஊருக்கு ஒரு முன வந்துட்டுப் போ தமிழ் எங்கக் கூட வரியா ஒரு இரண்டு நாள் இருந்துட்டு உடனே வந்துரலாம் என்று கேட்க தமிழுக்கும் ஆசையாக இருந்தது போயிட்டு வரலாம் இந்த அத்தானைக் கொஞ்சம் தவிக்க விடலாம் என்று யோசித்தவள் வடிவையும் சுந்தரத்தையும் பார்த்தாள்…
நீ போறதுன்னா போயிட்டு வா தமிழு உன் இஷ்டம் தான் என் கவும் துள்ளிக் குதித்து ஓடினாள் ஊருக்குக் கிளம்ப.. அவள் அப்படி துள்ளிக் குதித்து ஓடுவதை இவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டனர். அவளுக்கு இங்கு இருக்க பிடிக்காமல் தான் இப்படி ஓடுகிறாள் இவளை எப்படியும் தங்கள் பக்கம் வலைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டுக் கொண்டிருந்தனர் அந்த மூடர்கள்…
அவர்களுக்கு தெரிய வில்லை அது இரும்பு வலைக்க முடியாதென்று இவர்களிடம் யார் சொல்வது..
கிளம்பி வந்தவள் வடிவிடம் அத்தை அவங்க வந்தா சொல்லிடுங்க நான் ரெண்டு நாளில் வந்துருவேன்னு என்று அனைவரிடமும் கூறிவிட்டு அவர்களுடன் புறப்பட்டாள்.. அப்புறம் என்ன ராக்கேஷுக்கு வாயெல்லாம் பல்லு தான்
( எப்படியும் தமிழ் தட்டி கையில் குடுக்கப் போறா அதான் இப்பவே சிரிச்சிக்கிறான் போல..)
இப்பொழுது வாட்சப்பில் அவனை திட்டி மெசேஜ் அனுப்ப உடனே புளு டிக் காமித்தது..
அதனைப் பார்த்ததும் வாடா தீவெட்டி தலையா என்று அவனின் பதிலுக்காகக் காத்திருந்தாள்..
நீ தான் என்கிட்ட சொல்லாம ஊருக்குப் போயிட்டியே அப்புறம் என்ன இதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புற மூடிட்டு வைடி வந்துட்டா..
என்று காய்ந்தான்..
அதனை பார்த்தவள் ஐயோ என் அத்தான் இப்படி எல்லாம் பேச மாட்டாங்களே என்று இவளே கற்பனை செய்துக் கொண்டு எங்க இருக்கீங்க என்று அனுப்ப
அதை உனக்கெதுக்கு சொல்லனும் முடியாது நான் எங்க வேணாலும் இருப்பேன் நீ ஏன் அதை கேக்குற என்று பதில் வந்தது..
ஐயோ ஐயோ எந்த சீமை சித்ராங்கி மடக்குனான்னு தெரியலையே பேச்செல்லாம் ஒரு மார்கமா தான் இருக்கு..
சொல்லுங்க அத்தான் எங்க இருக்கிங்க.. என்று மீண்டும் கேட்கவும் நான் தான் கிழவனாச்சே எதுக்கு என்கிட்ட பேசுற பேசாதே என் பதில் வந்தது…
ஐயோ அத்தான் அது நான் சும்மா சொன்னேன்.. என்று பதில் அனுப்பவும் அவன் அதற்கு எதுவும் பதில் அனுப்பவில்லை…
மீண்டும் தமிழ் அத்தான் நான் போன் பண்ணினா ஏன் எடுக்க மாட்டுறீங்க என்று அனுப்ப
நீயும் தான் நான் பண்ணும் போது எடுக்கலை இப்போ நீ பண்ணினா நான் உடனே எடுக்கனுமா என்று பதில் வந்தது…
ஐயோ இந்த அத்தான் என் ஏட்டிக்குப் போட்டியாவே பேசுறாங்க என்று நினைத்தவள் அத்தான் இப்போ நான் கால் பண்றேன் எடுங்க என்று மெசேஜ் அனுப்பிவிட்டு உடனே போட சிறிது நேரம் கழித்தே எடுத்தவன் காதில் வைக்கும் இவளும் அதுவரை என்ன எடுக்க மாட்டுறாங்க என்று போனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் எடுத்ததும் காதில் வைக்க மறுபக்கம் ஸ்ஸ் ஹா என்று கதிரின் குரலை
கேட்டதும் ஐயோ என்று தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்.
அடுத்து என்ன நடக்கும்…
மோகம் மையம் கொள்ளும்…
0 Comments