Advertisement

Ad code

புயல்_25

 


மோகம்-25:


அந்தப் பெண் கூறியதும் நாலு தடியர்கள் வந்து தீனாவை குண்டுகட்டாகக் தூக்கிச் சென்றனர். என்னப் பண்ணை அப்படியே நிக்கிறீங்க என்ன தான் இருந்தாலும் நம்ம பிள்ளை சொல்றதையும் கேளுங்க யாருன்னே தெரியாதுன்னு சொல்றான்…


நீங்களும் சும்மா இருக்கீங்க என்று கேள்வி எழுப்பவும் அந்தப் பொண்ணு தான் சொல்லிட்டுப் போகுதே சுந்தரம் எனக்கு புருஷனா இருப்பான்னு பத்தாதக்கு அட்ரெஸ் வேற குடுத்துட்டுப் போகுது பார்க்க பெரிய இடம் மாதிரி தெரியுது… 


இனியாச்சும் திருந்துறானான்னு பார்ப்போம் நான் வரேன் சுந்தரம் என்றவர் அவன் செஞ்சதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மன்னிச்சிடுங்க எல்லாரும் என்றவர் மனைவியுடன் கிளம்பிவிட்டார்..


சுந்தரம் வடிவிடம் சமாதானமா போனது தமிழுக்குப் பிடிக்கலையா என்று கேட்க பின்ன காயம் பட்டது அவப் புருஷனக்கு சும்மாவா விடுவா பண்ணை கேட்டதால் தான் அம்மா போனா இல்லன்னா இந்நேரம் அவன் ஜெயிலில் கம்பி எண்ணிட்டு இருப்பான்.


என் பிள்ளைக்கு எதாவது ஆயிருந்தா என்ன ஆகுறது அவளுக்கும் கோபம் இருக்காதா என்று தமிழின் மனநிலையைக் கூற கதிரிடம் போப்பா போய் கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வை தமிழ் கோவப்படுறது சரி தான்.. நான் இல்லைன்னு சொல்லலை போ கோபமா இருக்கும் சமாதானம் பண்ணு என்று அசால்டாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்…


அதனை கேட்டவனுக்கு தான் ஈரக் கொலையே நடுங்கியது.. ஹிம்ம் நீ போப்பா போய் வாங்கி கட்டிக்கோ என்று நக்கலாகப் பார்த்தி கூறினான். கதிர் முறைக்கவும் நான் இல்லை தமிழ் இந்த அண்ணன் தான் என்று விட்டு ஓட ஒரு நிமிடம் கதிருக்கு தூக்கி வாரி போட்டது.


திரும்பிப் பார்க்கவும் தமிழ் இல்லை என்றதும் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானவன் ஐயோ கதிர் உனக்கு பயப்படத் தெரியும்னு எனக்கு இப்போ தான் தெரியுது என்று அவன் மனசாட்சி நக்கலாகச் சிரிக்க நீ எல்லாம் என் மனசாட்சி தானா என்று காரித்துப்பி விட்டு தமிழ் என்று கத்தி அழைத்தான்.


ஆனால் பாருங்க ப்பா இவன் இவ்வளவு கத்தி கூப்பாடு போட்டும் யாரும் வெளியே வரலை இரண்டாம் முறை இன்னும் சற்றி குரலை உயர்த்தி அழைக்கவும் வெளியே வந்தவள் முறைத்தாள்…


அவள் முறைக்கவும் இவன் அவளுக்கு மேல் முறைத்தான் என்ன ஒரு முறை கூப்பிட்டா வர மாட்டியா வந்து கூட்டிட்டுப் போ என்று அதட்டவும் அவள் முகம் மாறியது.. இன்னும் ஒரு முறை அதிர்ந்து பேசினால் கூட கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடுவது போல் பாவமாக அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள்..


அம்மாடி இவக்கிட்ட இருந்து இப்படி தான் தப்பிக்கனும் இல்லைன்னா என்னை தோரணமா கட்டி தொங்க விட்டுறுவா என்று மனதிற்குள் தனக்குத் தானே பேசிக் கொண்டவன் வந்து கூப்பிட்டுப் போக சொல்ல சொல்லி ஒரு ஆள் வைக்கனுமா என்று அதட்டவும் அவ்வளவு தான் வந்தே விட்டது…


கண்ணீர் வழிய பட்டென்று துடைத்துக் கொண்டவள் தலையைக் கீழே குனிந்தவாரே வந்து அவன் பக்கத்தில் நிற்க அவனும் ஏதும் பேசாமல் அவளைப் பார்த்தவாறு நின்றான்..


உள்ளுக்குள் ஐயோ புள்ளை பயந்துடுச்சு என்று நினைத்துக் கொண்டிருந்தவன் கையை எடுத்து தன் தோளை சுற்றிப் போட்டுக் கொண்டவள் அவன் இடுப்பை சுற்றிக் கையைப் போட்டு தன்னோடு நெருக்கிப் பிடித்துக் கொண்டவள் அவனை அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தாள்..


அவனை கட்டிலில் அமர வைத்து விட்டு அங்கு இருக்கப் பயந்துக் கொண்டு வெளியே போனவளை அழைத்தான்.. ஏய் தமிழ் இங்க வா எங்க அதுக்குள்ள போற நான் உன்னை போகவே சொல்லலையே இப்பொழுதும் அதே மிரட்டும் பாவம் அவன் குரல்களில் நிறைந்திருந்தது..


தமிழுக்கு திக்கென்று இருந்தது.. என்ன தமிழுக்கு பயமா ஆம் பயமே தான் தன் அத்தானின் மேல் எவ்வளவு காதல் அன்பு இருக்கிறதோ அதே அளவு இந்தக் குரலுக்கு பயமும் உண்டு..இந்தக் குரலைக் கேட்டால் போதும் அப்படியே தன் வால் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அமைதியாகி விடுவாள்..


அவன் தடுத்ததும் கையைப் பிசைந்துக் கொண்டே திரும்ப இங்க வா எனக்கு தூக்கம் வருது வந்து தூங்க வை என்கவும் ஙே என்று முழித்தாள்…


அதென்னடா கதிரு தூக்கம் வருது தூங்க வை இதுல லாஜிக்கே இல்லையே என்று அவன் மனசாட்சிக் குரல் கொடுக்க நீ மூடிட்டு இரு நாங்க பாத்துக்குவோம்…


அவள் அங்கேயே நிற்கவும் வந்தியா என்று அழைக்கவும் உடனே குடுகுடுவென்று அவனருகே சென்றவள் அவன் படுக்க உதவி அவன் தலை முடியைக் கோத அந்த சுகத்தில் கண்கள் மூடியவன் சற்று நேரத்தில் கண்களைத் திறந்து எனக்கு கட்டிப் பிடிக்க பஞ்சுத் தலகாணி வேண்டும் என்று கேட்டான்…


அவனுக்கே இது ஓவரா தான் இருந்துச்சு ஆனாலும் பரவால்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு என்று கூறிக்கொண்டு அவளைப் பார்க்க இந்த ரெண்டு தான் அத்தான் இருக்கு இதை இப்போதைக்கு யூஸ் பண்ணிக்கோங்க நான் சாயுங்காலம் பார்த்தியைப் போய் வாங்கி வர சொல்றேன் என்று பயந்தே படியே கூறினாள்..


(டேய் பச்சப் பிள்ளையை இப்படி ஏமாத்துற..)


இல்லை இந்த தலகாணில பஞ்சு இல்ல 


(பாராங்கல்லா இருக்கு)


ச்சே கடைக்காரன் ஏமாத்திட்டான்.


(அது வாங்குன உன்ன தான் குத்தம் சொல்லனும் நீ தான் பாத்து வாங்கனும்) 


அவளை ஓரக் கண்ணால் பார்த்தவாரே ச்சே தூக்கமே வராதே என்று அவளுக்கு கேட்கும் படி மெத்தையில் குத்திய வறு முணுமுணுத்தான்.


ஹே தமிழ் இங்க வா மேல ஏறி படு என்கவும் எனக்கு தூக்கம் வரலை அத்தான் என்று தப்பிக்க பார்க்க வர முடியுமா முடியாதா என்று கேட்க உடனே ஏறிப் படுத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யனும் என்பது போல் அவனை பார்த்தாள்…


என் பக்கம் திரும்பி ஒருக்களிச்சுப் படு என்று சாவிக் கொடுத்தது பொம்மையும் அதன்படி செய்தது.. 


அவளை அணைத்து அவள் தலை முடிக் கோதவும் அவனையே கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஏதோ பேச வரவும் அவள் உதட்டில் ஷூ என்று கை வைத்து தடுத்தவன் அவள் காதோரம் ஹஸ்கி வாய்சில் கண்ணை மூடு தமிழ் என்கவும் அவளும் அந்த குரலின் வசியத்திற்கு கட்டுப் பட்டவள் கண்களை மூடினாள்..


எப்பொழுது தூங்கினாள் என்றே தெரியாமல் கண்ணயர்ந்து விட அவள் சீரான மூச்சை வைத்தே உறங்குகிறாள் என்று உறுதிப் படுத்தியவன் தன் பஞ்சுப் பொதிகளில் முகத்தைப் பொதிந்து அவள் வாசனையை உள்ளிழுத்தவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்கி விட்டான்..


மதியம் ஒரு மணிப் போல கதவு தட்டப்படவும் தான் எழுந்தாள் ஆனால் எழ முடியவில்லை.. அவன் தான் அவளை அணைத்துக் கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறானே.. பிராடு அப்படியே நான் திட்டுவனு என்னை தூங்க வச்சிட்டு நீங்களும் தூங்கிட்டீங்களா என்ன தான் நீங்க கோல்மால் பண்ணினாலும் நான் மசிய மாட்டேன் உங்ககிட்ட பேசவும் மாட்டேன் என்றவள் அவன் உச்சந்தலையில் முத்தம் வைத்தாள்…


( இதுங்க ரெண்டுமே பேச்சு ஒன்னா இருக்கு செயல் வேறயா இருக்கு… இதுங்க கூட இருந்தா நமக்குப் பைத்தியம் பிடுச்சிடும்….)


அவனை விலக்கி படுக்க வைக்க முயல அவள் முயல் குட்டியில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு விடாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்…


எப்படி டைட்டா பிடிச்சிருக்காங்க என்று அவன் கையை எடுத்து நகர்த்தி தான் எழுந்துக் கொண்டவள் கதவை திறக்க அவள் நகர்த்தி படுக்க வைத்ததுமே விழிப்பு வந்தவன் எழுந்து அமர்ந்தான்..


இவள் கதவை திறக்கவும் பார்த்தி தான் நின்றுக் கொண்டிருந்தான் தமிழ் அப்பா உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க என்று கூறவும் போய் உங்க அண்ணனை கூட்டிட்டு வா எனக்கு போகத் தெரியும் என்றவள் கதிரைத் திரும்பி பார்த்து உதட்டை சுழிக்கவும் இப்படி சுழிச்சே உசுப்பேத்துராளே…


வே என்ன தமிழ் அதிசயமா இருக்கு என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு பாட்டு பாடிட்டு இருப்ப என்று நக்கலாகக் கேட்கவும் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ இப்போவும் என் புருஷன் எனக்கு மட்டும் தான் இப்போ கோபமா இருக்கேன் அதான் நீ அழைச்சிட்டு வா என்று விட்டு வெளியே சென்றாள்…


அண்ணா என்னாச்சு இன்னும் சமாதானமாகலையா என்று கேட்கவும் ஹிம்ம் நானும் தூங்கி எழுந்தா சரியா போய்டுவான்னு நினைச்சா இவ இப்படி சொல்லிட்டுப் போறா என்கவும் ஒஹ் இது புது டெக்னிக்கா இருக்கே கோபமா இருந்தா தூங்க வச்சிட்டா போய்டுமா என்று கேட்கவும் அவ தான் இப்படி சொல்லிட்டுப் போறாளே எங்க அதெல்லாம் ஒர்கவுட் ஆகலை…


இல்லை அண்ணா எனக்கு ஒன்னும் அப்படி தெரியலை அவ கோபமா இல்லாதப் போலத்தான் தெரியுது சரி நீ வா அப்பா கூப்பிட்டாரு என்று அழைத்து சென்றான்..


கதிர் வந்ததும் கதிரு உங்க வரவேற்பை இரண்டு வாரம் தள்ளி வச்சிக்கலாம் இப்போ இருக்குற நிலைமைல உன்னால நடக்க முடியாதில்லையா இந்த நாளை விட்டா ரெண்டு வாரம் கழிச்சு தான் நல்ல நாள் இருக்குன்னு சொன்னார்க அதான் அதுலையே வச்சிடலாம்னு சொன்னேன்…


அப்புறம் பத்திரிக்கை அடிக்கிற இடத்துலையும் சொல்லிட்டேன் தேதியை மாத்த சொல்லி இன்னும் ரெண்டு கொடுத்துடுவோம்னு சொன்னாங்க.. பத்திரிக்கையெல்லாம் நானும் பார்த்தியும் போய் கொடுத்துட்டு வந்துருவோம்..


சரிப்பா சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றவர் வெளியில் சென்று வருவதாக சொல்லி கிளம்பி விட்டார்..


 ஏய் தமிழ் அண்ணாவை கூட்டிட்டுப் போ என்கவும் இங்க வாயேன் என்று அவனை அருகில் அழைத்தவள் ஆமா உன்னை அடிக்கடி நந்திதா பேக்கரி பக்கம் பாக்குறதா ஒரு கிளி வந்து சொன்னுச்சு என்ன அப்படியா என்று கேட்க இவனுக்கு திக்கென்று ஆனது…


அவன் அதிர்ந்து நிற்பதைப் பார்த்து சிரித்தவள் என்ன லவ்ஸா உங்க அண்ணன் கிட்ட சொல்லவா என்று கேட்கவும் ஏய் நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்ட நாங்க எல்லாம் பண்ணக் கூடாதா என்று வினவ நீ என்ன அரை கிழவனா ஆயிட்டியா அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சொல்ற…


ஏய் அப்போ எங்கண்ணனை அரை கிழவன்னு சொல்றியா என்கவும் அரை கிழவன் இல்லை உங்க அண்ணன் முழு கிழவன் போதுமா என்று வேண்டுமெ

ன்றே கதிரைப் பார்த்தவாறு கூற அதிர்ந்தான் என்னாது கிழவனா நானா…


மோகம் மையம் கொள்ளும்…

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments