Advertisement

Ad code

புயல் -24



 மோகம்-24:


தன் அறைக்கு சென்று கதிரை அழைத்து வந்தவள் அங்கு இன்னும் நின்றுக் கொண்டிருந்தவர்களைக் கண்டு முறைக்க பார்த்தி தோ போயிட்டேன் ஆனால் என்ன சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டுறது என்று கேள்வியுடன் நோக்க ஹிம்ம் என் புருஷன் அதான் உங்க அண்ணன் இப்படி படுத்துக் கிடக்க இந்த நாயிதான் காரணம் அதாவது நாங்க இருந்த வீட்டுக்கு தீ வச்சது இந்தப் பரதேசி தான் என்று பார்த்தியிடம் கூறியவாறு தீனாவை முறைத்தாள்..


டேய் என்றவாறு பார்த்தி அவனை அடிக்கப் போக சார் நீங்க ரொம்பபபப.. லேட் அதெல்லாம் குடுத்துட்டோம் நீ போய் பஞ்சாயத்தைக் கூட்ட சொல்லிட்டு அவங்க அப்பா பெரிய பண்ணைக் கிட்டயும் சொல்லிடு என்று கூறவும் ஐயோ நான் தெரியாம பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கதறினான்..


பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் தம்பி இது நீ தெரியாமப் பண்ணிட்டேனு சொல்றீங்க இதை குழந்தை கூட நம்பாது.. என் பிள்ளைக உசுருக்கு எதாவது ஆயிருந்தா என்னப் பண்றது பார்த்திபா நீ போய் பஞ்சாயத்தைக் கூட்டுப்பா இங்க சரி வரலைன்னா போலீஸ்க்கு போவோம் என்று சுந்தரம் கூறினார்.


பின் தீனா கதிரிடம் என்னை விட்டுற சொல்லுங்க அண்ணா இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க நான் நீங்க இருக்குற பக்கம் கூடத் தலைவச்சுப் படுக்க மாட்டேன் தயவு செய்து இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க இது தான் முதலும் கடைசியும் என்று கேட்க அவனை ஒரு பார்வை பார்த்தவன் தமிழிடம் கண்ணைக்காட்ட அவள் அவனை அழைத்துச் சென்றாள்..


அனைவரும் தங்கள் வேலையைப் பார்க்க சென்று விட்டனர்.. போச்சு அப்பாவுக்கு தெரிஞ்சு வெட்டிக் கூடப் போட்டுடுவார் ஐயோ என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே என்று அடுத்து வந்த ஒவ்வொரு நிமிடமும் நரகமாய் கழிந்தது…


அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சுது சங்கு தான் போச்சு ஐயோ ஏன்டா இப்படி பண்ணினா தண்ணி அடிச்சா என்ன பண்றன்னு கூட தெரியாமப் பண்றியே போச்சு எப்படியும் ஜெயிலு தான் போச்சு என்று நினைத்துக் கொண்டிருக்க அவனைக் களவாட ஒருத்தி வந்துக் கொண்டிருக்கிறாள் என்று அவன் அறிய வாய்ப்பில்லை…


பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்குக் கிளம்பியப் பார்த்தியைத் தடுத்த சுந்தரம் தலைவர் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி பண்ணை கிட்ட சொல்லு பார்த்தி வீட்டுக்கு ஒரே புள்ள அது தடமாறிப் போனாலும் பெத்தவங்களுக்குப் பிள்ளை தானே என்கவும் அப்பா உங்கப் பிள்ளையைக் கொல்லப் பார்த்துருக்கான்னு அவனுக்குப் போய் பாவம் பார்க்கிறீங்க என்கவும் நான் பண்ணைக்காகத் தான் டா பார்க்கிறேன் நீ போய் பண்ணைக் கிட்ட சொல்லு…


சரி ஏதோ பண்ணுங்க ஆனால் இது தமிழுக்கு தெரிஞ்சா நான் உங்களை தான் கை காட்டுவேன் நீங்க தான் அவளை சமாளிக்கனும் இப்போவே சொல்லிட்டேன் என்று விட்டுக் கிளம்பினான். இங்கு கதிருக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தவள் என்ன இன்னும் பஞ்சாயத்துல இருந்து ஆள் யாரும் வரலை இந்தப் பார்த்தி சொன்னான்னா இல்லையா…


வரட்டும் ஊர விட்டு ஓட வைக்கனும் இல்லை ஜெயில்ல போய் களி திங்கட்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தவளை தமிழ் என்று அழைக்க ஹிம்ம் என்ன சொல்லுங்க என்று விரைப்பாகக் கேட்கவும் ஐயோ இப்போவே டெரரா தான் இருக்கா நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டா இன்னைக்கே எனக்கு பால் ஊத்திருவா போலையே…


ஹிம்ம் பாரேன் உனக்கு வருங்காலத்துல நடக்குறதெல்லாம் முன்கூட்டியே தெரியுது என்று அவனது மனசாட்சிக் கொக்கரித்து சிரித்தது…


அம்மு என்கவும் ஹிம்ம் சொல்லுங்க என்கவும் அவன் தமிழ் என்று அழைக்க யோவ் இப்போ பேச வந்த விஷயத்தை சொல்லப் போறியா இல்லையா என்னமோ லவ் பண்ற பொண்ணுக்கிட்ட ப்ரோபோஸ் பண்ணப் போற மாதிரியே தயங்கி தயங்கி இழுத்துட்டு இருக்க என்று எண்ணையில் பொறிந்த கடுகாய் படப்படவென பொறிந்தாள்…


தமிழ்… அவள் முறைக்கவும் நான் சொல்லப் போறதைக் கேட்டுக் கோபப் படாதா தமிழ் தீனா ஏதோ தெரியாமப் பண்ணிட்டான் அவன் கொலைப் பண்ற அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை கூட இருக்கிற பயலுங்கக் கூட சேர்ந்துக்கிட்டுப் பொம்பளைப் பிள்ளைக கிட்ட சேட்டை பண்ணுவான் அதை ரைட்டுன்னு சொல்ல வரலை….


ஆனால் இப்போ பஞ்சாயத்தைக் கூட்டினா பண்ணை உயிரையே விட்டுருவாறு அசிங்கம் அது ஒரே பிள்ளை வேற ஏற்கனவே இவன் இப்படி தறுதலையா சுத்துறதைப் பார்த்து என்கிட்டையே நிறைய முறை புலம்புவாரு…


எனக்காக இந்த ஒரு முறை அவனை மன்னிச்சிடு தமிழ் என்கவும் அவள் கையிலிருந்த தட்டு பறந்து சென்று சுவற்றில் மோதிக் கீழே விழுந்தது..


ஏய் தமிழ் கோபப்படாதடி என்று இவன் கூற அவள் எதுவும் பேசாமல் கையை அவன் முன் நீட்டி நிறுத்துமாறு சைகை செய்ய அங்கு தீனா அலறும் சத்தம் இவர்கள் காதை வந்து அடைந்தது…


தமிழ் சத்தம் கேட்டு வெளியே செல்ல ஹே என்னையும் கூட்டிட்டுப் போ தமிழ் என்று கத்தவும் நீ யார்..? என்பது போல் பார்த்து விட்டு சென்று விட்டாள். ஐயோ போச்சு திரும்ப வேதாளம் முருங்கை மரம் எறிடுச்சு சுத்தம் என்று வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான்..


இங்கு பண்ணையார் தீனாவை கட்டி வைத்திருந்த இடத்திற்கு வந்தவர் அவனை அடித்து வெளுத்தார்.. என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க உன்னை என் பிள்ளைன்னு சொல்லவே வெட்கமா இருக்குடா.. எல்லாம் நீ கொடுத்த செல்லம் தான் டி ஒரே பிள்ளைன்னு பார்த்து பார்த்து வளர்த்தா நீ என்னடான்னா ஊருல இருக்கிறவன சீண்டிக்கிட்டு பொண்ணுங்க கிட்ட வம்பிழுத்துக்கிட்ட ச்சி சொல்லவே நா கூசுதுடா …


இப்பவே உன்னை வெட்டிப் போடனும்னு தான் வெறி வருது ஆனால் ஒத்தைப் பிள்ளையா போயிட்டியே ஓங்குன கை கூட ஒரு படிக்கு மேல உன்னை நோக்கி வரலை டா பெத்த பாசம் தடுக்குது ஏன் டா இப்படி பண்ற உனக்கு என்ன குறை வச்சேன் என்று கதற சுந்தரம் சங்கடமாக உணர்ந்தவர் வாங்க பண்ணை உள்ளப் போய் பேசலாம்..


அவரை உள்ளே அழைத்து சென்றவர் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த ஏற்கனவே இவன் பண்ணி வச்சிருக்க வேலைக்கு வெளிய தலைக்காட்ட முடியலை சுந்தரம் இதுல இது வேற சேர்த்துச்சுன்னா கொலைக்காரன்னு பட்டமே கொடுத்துருவாங்க என்று தன் மனக்குமுறலை வெளியிட்டார்..


இங்கு பார்த்திபன் தீனாவின் கட்டை அவிழ்த்து விட தன் தாயின் உதவியுடன் ஹாலிற்கு நடந்து வர இதனை எல்லாம் பார்த்த தமிழ் பார்த்தியை முறைத்தாள்.. ஐயோ அம்மா பேய் என்று மனதிற்குள் அலறியவாறு எங்க இந்த அண்ணனை காணும் ஐயோ போட்டுத் தள்ளிட்டாளா என்றவாறு கதிர் அறைக்கு சென்றான்..


இங்கு கதிர் மெதுவாக சுவற்றைப் பிடித்தவாரு வந்துக் கொண்டிருக்க என்ன அண்ணா உன் ரூம் குள்ளேயே நொண்டி விளையாண்டுட்டு இருக்க அதுவும் தனியா என்று நக்கலாகக் கூறியவாறு அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டான்…


அட நீ வேற ஏன்டா ஏற்கனவே ஜங்கு புங்குன்னு ஆடுவா இப்போ நான் சலங்கை வேற கட்டி விட்டுட்டேன் இனி என் கதி அதோ கதிதான் என்று கூற வா வா இனிமே தான் இருக்கு ஆட்டமே இதுக்கு சோர்ந்து போயிட்டா எப்படி என்று கிண்டல் செய்து சிரிக்க ஏன்டா நீ சிரிக்க மாட்டா இரு நீயும் கல்யாணம் பண்ணுவல்ல அப்போ நானும் சிரிப்பேன்…


அது நடக்கறப்போ சிரிச்சிக்கோ நீ வா ராசா உனக்கு கோவில் கட்டணும்னு தமிழ் சொல்லிக்கிட்டு இருந்தா வா போகலாம் என்கவும் டேய் அவ இருக்குற கோவத்துக்கு எனக்கு சமாதிக் கட்டாம இருந்தா சரி என்று தன் மனதில் எழுந்தப் பீதியை வெளிப்படையாகவே கூறினான்.


கதிர் வெளியே வரவும் அவனிடம் சென்று கையெடுத்துக் கும்பிட்டவர் கதிரு அவன் சார்பா நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.. எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளைய்யா அது எங்கயாவது போய் உயிரோட இருக்கட்டும் இனி அவனால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராம பார்த்துக்குறது என் பொறுப்பு இந்த ஒரு முை மன்னிச்சிடுயா என்று மன்றாடினார்.


கதிர் தமிழைப் பார்க்கவும் இங்க என்னப் பார்வை அதான் நீயே முடிவெடுத்துட்டியே இப்போ வந்து பெரிய இவன் போல பாக்கு என்று பார்வையாலே அவனை எரிக்கவும் அவன் பார்வை சென்ற இடத்தை தொடர்ந்து தானும் பார்த்த பண்ணை உடனே தமிழிடம் சென்று தாயி எனக்காக அவனை இந்த ஒரு முறை மன்னிச்சிடும்மா….


அவன் பண்ணிசை சரின்னு சொல்லலை ஆனால் எனக்காக இந்த ஒரு முறை கருணை காட்டும்மா தண்ணியில்லா காட்டுக்கு அவனை அனுப்பிடுறேன் என்கவும் உடனே தீனாவின் தாய் தன் முந்தானையை விரித்துப் பிடித்தவாறு என் பிள்ளையை எங்கையாவது அனுப்பி வச்சிடுறேன் போலிஸ்க்கு போக வேண்டாம்மா உன்கிட்ட மடிப்பிச்சையா கேட்கிறேன் இது தான் முதலும் கடைசியும் என்று மன்றாடினார்.


தீனாவிற்கு தன் தாயும் தந்தையும் இந்த நிலையில் நிற்பதற்கு தான் தானே காரணம் என்று தன்னையே வெறுத்தான்…


இவர்கள் இருவரும் தன்னிடம் இவ்வாறு கேட்கவும் அவர்கள் கையை இறக்கிவிட்டு கூட்டிட்டுப் போங்க உங்கப் பையனை என்று விட்டுத் தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள்.


அந்தப் பொண்ணு மன்னிச்சாலும் என்னால மன்னிக்க முடியாது.. என்று கம்பீரமானக் குரல் கேட்கவும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.. யாரு இந்தப் பொண்ணு என்று அனைவரும் கேள்வியாகப் பார்க்கவும் தீனாவும் கேள்வியாகத்தான் பார்த்தான்.


அவனுக்கும் யாரென்று தெரியவில்லை நேரே தீனாவின் முன் வந்தவள் அவன் சட்டை காலரைப் பிடித்து உலுக்கியவள் ஏன்டா எனக்கு தாலிக் கட்டி அங்க குடும்பம் நடத்திட்டு இங்க வந்து அடுத்தவனை கொலை வேற பண்றியா…


இன்னும் என்னலாம் செய்வ என்று அவனை உலுக்க அதிர்ந்தான். யாருங்க நீங்க உங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே என்று கேட்கவும் ஒஹ் உனக்கு நியாபகமில்லையா அதெப்படி நியாபகமிருக்கும் ஒரு நாளைக்கு ஒரு பொண்ணு கூட இருந்தா என்று கூறவும் அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்…


தன்னை அதிரிந்து பார்த்த பெற்றவர்களை நோக்கி அப்பா நான் அப்படியெல்லாம பண்ணலைப்பா என்னை நம்புங்க இந்தப் பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாது இந்தப் பொண்ணு பொய் சொல்லுது என்று கூப்பாடு போட நம்பத்தான் யாரும் இல்லை..


ஓகே அங்கிள் இனி உங்கப் பையனை பார்க்கனுமென்றால் இந்த அட்ரெஸ்க்கு வாங்க என் வீட்டுல எனக்கு புருஷனா இருப்பார்…


ஆனால் இனி தான் உங்க பையன் அவர் வாழ்க்கையில் நிறைய சந்திக்க போகிறார் என்று விட்டு கார்ட்ஸ் என்று குரல் கொடுக்க நாலு தடியன்கள் வர பேக் ஹிம் என்று விட்டு முன்னால் போக தீனாவை குண்டுக்கட்டாகத் தூக்கி சென்றனர்…


மோகம் மையம் கொள்ளும்….


( இது அடுத்த கதை ஹி ஹி இதுவே இன்னும் முடிக்கலையாம்னு சொல்றது என் காதுல கேக்குது பட் இது கொஞ்சம்

 டிப்ரண்டான கதை "கண்ணில் தெறிக்குதடி காதல் மின்னல்" கதையின் தலைப்பு….)

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments