மோகம்-23:
தீனா அன்று சென்னைக்கு செல்ல புறப்படும் பொழுது கதிர் அவனை அடித்து மிரட்டியதில் கோபமானவன் உன்னை எதாவது பண்ணியே ஆகனும் டா என்னையே அடிக்கிற என்று பல்லை கடித்தவன் அவனை கொல்லும் வெறியோடு தன் பண்ணை வீட்டில் தங்கிக் கொண்டவன் சரியான நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான்..
கதிரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருந்தவன் தமிழும் கதிரும் தமிழ் வீட்டில் வந்து தங்கவும் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று மூச்சு முட்டக் குடித்து விட்டு அவர்கள் இருந்த வீட்டிற்கு தீ வைத்தான்..
தீ வைத்துவிட்டு அவர்கள் படும்பாட்டை பார்த்து ரசித்தவன் பின் வாசல் வழியாகக் கதிர் வரவும் ச்சே தப்பிச்சுட்டானே என்று வருத்தப்பட்டான்.. தன்னை யாரும் பார்த்து விடக் கூடாது என்று அங்கிருந்த பெரிய மரத்தின் பின் நின்று மறைந்துக் கொண்டு தமிழ் அழுவதைப் பார்த்து ரசித்தான்..
அவன் தீ வைத்து விட்டு வரும்பொழுது அவனுடைய பர்ஸ் கீழே விழுவது கூடத் தெரியாமல் ஓடி மறைந்துக் கொண்டான்.. கதிர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வரும் பொழுது காலில் அந்தப் பர்ஸ் தட்டுப்பட தன் சட்டைப் பையில் எடுத்து வைத்துக் கொண்டான்.
கதிர் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு செல்ல பார்த்தி கதிரை அழைத்துக் கொண்டு செல்வதைக் கண்டவன் குதூகலத்துடன் தன் பண்ணை வீட்டிற்கு சென்று மட்ட மல்லாக்க படுத்து தன் செயலை வீரத் திர செயல் என்று தானே புகழ்ந்துக் கொண்டிருந்தவன் அப்பொழுது தான் தன் பர்ஸ் இல்லை என்று உணர்ந்தான் அதனை தேட தமிழ் வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்..
ஐயோ போச்சு மாட்டிப்போம் போலையே என்று திக் திக் மனதுடன் வீட்டை நெருங்கியவன் அங்கு வந்த வழி முதற்கொண்டு அனைத்தும் அலசியவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றதும் அவனை பயம் பிடித்துக் கொண்டது.
ஐயோ போச்சு இந்த விஷயம் மட்டும் எங்கப்பனுக்கு தெரிஞ்சிது அவ்வளவு தான் என்னை கொல்லாம விட மாட்டான் என்று பயத்துடன் கதிர் வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினான்.
அங்க தான் யாராவது எடுத்துருக்கனும் ஐயோ எப்படியாவது தப்பிக்கனும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு தானே வலையில் சிக்கப் போகிறோம் என்று தெரியாமல் போனது..
வீட்டின் பின்புறமாக வந்து செடிகள் பின் மறைந்து நின்றவன் ஏதோ பூச்சி கடிக்கவும் காலை உதற செடிகள் அசைந்து ஆடி காட்டிக் கொடுத்தது.
அப்பொழுது தான் வெண்ணீர் போட்டுக் கொண்டிருந்த தமிழ் ஏதோ சலசலப்பு வரவும் திரும்பிப் பார்க்க யாரும் இல்லை என்று உள்ளே சென்று கதிருக்கு துடைத்துவிட்டு அவன் சட்டையை எடுத்து வந்தாள்..
சட்டையில் கைவிட்டுப் பார்க்க ஒரு பர்ஸ் இருக்கவும் இது அத்தானேட பர்ஸ் இல்லையே இது யாரோடு என்று திறந்து பார்க்க போட்டோவில் தீனா பல் இளித்துக் கொண்டிருந்தான்.. அதை பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தவள் முன்பு யாரோ நடந்து வருவது போல சத்தம் வந்தது வீட்டிற்கு தீ வைத்தது என்று அனைத்தையும் கணக்குப் போட்டவள் இந்த நாயி தான் வீட்டுக்குத் தீ வச்சிருக்கு..
வச்சிட்டு ஓடும போது பர்ஸை மிஸ் பண்ணிருக்கனும் அதனை அத்தான் எடுத்து வச்சிருக்கனும் நீ தான் செடிக்கு பின்னாடி நிக்கிறியா வாடா மவனே என் அத்தான் இப்படி வலியில் இருக்குறதுக்கு நீ தான் காரணமா உன்னை என்னப் பண்றேன்னு பாரு என்று ஒன்றும் தெரியாதது பர்ஸை உள்ளே வைத்தவள் அடுப்பருகே சென்றாள்..
இவள் அடுப்பருகே செல்லவும் இது தான் தக்க தருணம் போய் எடுத்துட்டு வந்துடுடலாம் என்று ஓடி வர அதற்காகவே காத்திருந்தவள் எரிந்துக் கொண்டிருந்த விறகை எடுத்து அவனை அதை வைத்தே கையிலும் காலிலும் அடித்தாள்..
தன் மீது நெருப்பு படவும் ஆஹ் என்று அலறித் துடித்தவாறு ஓடினான்.அவன் ஓடவும் அவனை நோக்கி அந்த விறகை விட்டெறிய அது காலில் படவும் தடுக்கி விழுந்தவன் வலியில் துடிக்க அவனை அடித்து வெளுத்து வாங்கினாள்..
ஏன்டா நாயே என்ன தைரியம் இருந்தா என் புருஷனை பழி வாங்க எங்க வீட்டுக்கே தீ வைக்குற அப்படி மோகரதா இருந்தா என் புருஷன் கிட்ட நேரடியா மோதிருக்கனும் இப்படி கோழை மாதிரி முதுகுல சொருகிற….
நீ தான் பொட்டப் பயலாச்சே நீ அப்படி தான் பண்ணுவ ஆம்பிளையா இருந்தா என் புருஷன் கிட்ட ஒத்தைக்கு ஒத்தையா நின்னு சண்டைப் போடு சாவு டா நாயே என்று அவனை அடித்து தரத்தரவென இழுத்து வந்தவள் அங்கிருந்த தூணில் சேர்த்து கையையும் கால்களையும் கட்டி போட்டு அவன் கன்னத்தில் பளார் பளாரென நான்கு அறை அறைந்து விட்டு நாளைக்கு உன்னை இந்த ஊர்க்கராங்க முன்னாடி அசிங்க படுத்துறேன்…
எங்க வீட்டுக்கே வர நடுராத்திரியில் திருடன் மாதிரி ச்சீ உன்னைவிட்டு வச்சதே உன் அப்பா முகத்துக்காகத்தான் என் மாமன் படுத்துக் கிடக்குறது உன்னால தான் உன்னை இனியும் சும்மா விடத் தயாரில்ல ராத்திரி முழுக்க இங்கயே கிட என்று விட்டு அங்கு ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே இல்லாமல் தண்ணீர் எடுத்து சென்று குளித்து விட்டு வந்தாள்..
தீனாவோ பேயறைந்தது போல் நின்றான். இதில் நெருப்பு பட்ட இடம் வேறு திகுத்திகுவென எரிந்தது. போச்சு நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ என்று பயந்தவாறு அந்த இருட்டை வெறித்துக்கொண்டிருந்தான்.
இங்கு உள்ளே தன்னறைக்கு வந்த தமிழ் முகத்தில் அதுவும் காட்டாமல் கதிர் அருகில் படுக்க என்ன டி இருக்கானா செத்துட்டானா என்று கேட்கவும் அசால்ட்டாக ஹிம்ம் இருக்கான் இருக்கான் என்று அவன் கையிலிருந்த கட்டை வருடிக் கொடுத்தவள் அவனை அனைத்துக் கொண்டு அதுவும் பேசாமல் படுத்திருந்தாள்.
அவள் உடல் நடுங்குவதை கதிர் உணர்ந்தான்..ஏய் ஒன்னும் இல்லை டி இன்னும் நாலு நாளுல சரியா போய்டும் எதுக்கும் இப்போ பயப்படுற என்று கேட்க வெகுண்டெழுந்தவள் உனக்கென்ன நீ காயம் பட்டு இப்படி வந்து படுத்துக்கிட்ட மூஞ்சைப் பாரு நான் கேட்டேனா என் பொருள் வேணும் புக்ஸ் வேணும்னு ஏன் இப்படி என்னை கொல்லுற…
நீ பாட்டுக்கு என்னை தள்ளி விட்டுட்டு வீட்டுக்குள்ள போற உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் என்னப் பண்ணுவேன் உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கு நீ இல்லாம நான் மட்டும் என்னப் பண்ணுவேன் என்னைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சிருந்தா நீ உள்ள போயிருக்க மாட்ட தானே..
என் மேல உனக்கு பாசமே இல்லை இப்பக் கூட பாரு நான் எவ்வளவு பேசுறேன் நீ எதாவது பேசுறியா அப்படியே மூஞ்ச மூஞ்ச பாக்குற உனக்கு ஒன்னுமே தோணலையா ஜடமா நீ போச்சு ஜடத்தைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணுவேன் ஜடம் ஜடம் என்று பேசிக் கொண்டே போனாள்.
அவள் பேசப் பேச சிரிப்புடன் அவளைப் பார்த்தானே தவிர எதும் பேசவில்லை.. என்னா அலுச்சாட்டியம் பண்றா என் தமிழ் என் செல்லக் குட்டி என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். இங்கு இவள் தோரணமாக கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருந்தாள் வார்த்தைகளால்….
உனக்கு உடம்பு முழுக்க திமிரு பெரிய ஹீரோன்னு நினைப்பு அப்படியே நெருப்புல பாயுற ஓடிப் போயிடு இனி என்கிட்ட வந்த உன்னை சாவடிச்சிடுவேன் என்று அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.. இப்போ நீ என்ன பண்ற நீ தானே அணைச்சுப் பிடிச்சிருக்க என் கவும் ஹிம்ம் அது நான் பிடிப்பேன் ஆனால் நீ என்னை தொடக் கூடாது…
நான் என்ன வேணா பண்ணுவேன் உன் வேலையைப் பாரு என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கண்களை மூட அவனை என்னடி பண்ணின அப்படி அலறுறான்.. நான் கூட வீட்டுல இருக்குறவங்க எழுந்து வந்துருவாங்களோன்னு பயந்துட்டேன்…
சும்மா நாலு அடி அடிச்சேன் அவ்வளவுதான்.. அவனால தானே என் புருஷன் இப்படி படுத்துக் கிடக்கிறான் அந்த நாயை நான் சும்மா விட்டுடுவேனா அதான் கொஞ்சம் அடிச்சி தூணுல கட்டி வெச்சிருக்கேன் என்று கூற உனக்கு தைரியம் ஜாஸ்தி டி என்று அவள் மேல் கைப்போட எருமை மாடு கையை எடு என்கவும் என்ன மரியாதை தேயுது என் கவும் அதெல்லாம் அப்படி தான் தூங்குங்க என்று அவன் முடியைக் கோத அதில் மயங்கியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.
நகருங்க தாடி குத்துது இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க என்று அவன் முடியைப் பிடித்திழுத்து முகத்தை தள்ள ஏய் விடு டி என்று அவளை ஒரு கையால் பிடித்து தன்னுடன் பிணைத்தவன் படுடி வாசமா இருக்க என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து தன் நுரையீரல் முழுக்க அவள் வாசம் நிரப்பியவன் அங்கேயே வாசம் செய்தான்.
அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை அவளும் அவனை அணைத்துக் கொண்டு தூங்கினாள்.
காலையில் வடிவு தான் எழுந்து பின் கட்டிற்கு செல்ல முதலில் அவனை பார்க்கவில்லை.. பின் முகம் கழுவிட்டு வரும் பொழுது திரும்ப இவன் சிறிது முனகலுடன் தலையைத் தொங்கப் போட்டவாறு இருக்க அதிர்ந்தார்.
உடனே உள்ளே ஓடியவர் சுந்தரத்தை அழைக்க அப்பொழுது தான் அனைவரும் எழுந்து வந்தவர்கள் இவர் அழைக்கவும் என்னவோ ஏதோ என்று பதறிப் போய் பார்க்க தீனா தலையைத் தொங்கப் போட்டவாறு முனகிக் கொண்டிருந்தான்..
இவர்கள் கூட்டமாகப் பின் கட்டில் நிற்கவும் தமிழ் எழுந்து வந்தவள் சாவதானமாக முகத்தைக் கழுவி விட்டு வர வடிவு தீனாவிடம் யாரு தம்பி இங்கன உன்னை கட்டி வச்சது என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்க இவன் கிட்ட என்ன கரிசனமா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க போங்க போய் பஞ்சாயத்தைக் கூட்டுங்க…
டேய் பார்த்தி இங்க என்ன ஷோவா காமிக்கிறாங்க அதிர்ச்சியா கேள்வியா பார்த்துட்டு இருக்க என்று கேட்கவும் எய் தமிழ் இது உன் வேலை தானா என்று கேட்க டேய் நகருடா நான் மாமாக்கு முகம் கழுவி விடனும் பல்லு தேய்ச்சி விடனும் எனக்கு எகப்பட்ட வேலை இருக்கு…
நீ என்னடான்னா தேவை இல்லாமா பேசி என் டைமை வேஸ்ட் பண்ற போய் பஞ்சாயத்தைக் கூட்ட சொல்லிட்டு வா என்று உள்ளே சென்று விட்டாள்..
இவள் சொல்வது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அனைவரும் திகைத்து நிற்
க தமிழ் சென்று கதிரை வெளியே அழைத்து வந்தாள்…
மோகம் மையம் கொள்ளும்...
0 Comments