Advertisement

Ad code

புயல் -27

 


மோகம்-27:


தமிழ் தன் அத்தை வீட்டாருடன் ஊருக்கு சென்ற பத்து நிமிடங்களில் சசியை அழைத்துக் கொண்டு கதிர் தன் வீடு வந்து சேர்ந்தான்.. 


கதிருக்கு கையிலிருந்த காயம் நன்றாகவே ஆறியிருந்தது.. காலில் இருந்த காயமும் பாதி அறியிருக்க இப்பொழுது அவனால் நடக்க முடிந்தது..


சசிக்கு வீடு எரிந்தது பற்றி முந்தின நாள் தான் வடிவு கூறியிருக்க இன்று காலையிலிருந்தே நான் வரேன் அங்க என்று அடம்பிடித்தவளை அழைத்து வரத்தான் கதிர் சென்றிருந்தான்.


அவனை என் அண்ணா விட்டீங்க என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த விடும்மா பொழைச்சுப் போகட்டும் சின்னப் பையன் என்றவன் அதான் தமிழ் அடிச்சிட்டாளே என்று அன்று நடந்ததைக் கூறினான்..


பின் தான் தமிழ் எங்க அண்ணா என்று கேட்க இங்க தான் இருந்தா என்று தன்னறைக்கு சென்று பார்க்க அங்கில்லை என்றதும் வெளியே வந்தான்.


அம்மா என்று அழைக்க வடிவு கைகளை துடைத்தவாரு சமையல் அறையில் இருந்து வர எங்கம்மா தமிழ் ரூம்ல இல்லை எங்க போயிருக்கா களத்துக்கு போயிருக்காளா என்று கேட்டான்.


இல்லப்பா அவங்க அத்தை மாமா ஊருல இருந்து வந்தாங்க அவங்க ஊருக்கு வரியான்னு கேட்டாங்க புள்ளையும் ஆசைப்பட்டு போகவான்னு எங்களைப் பாத்துச்சு அதான் போயிட்டு வான்னு அனுப்பி வச்சோம் என்று கூறினார்.


ஒஹ் என்று அமைதி காத்தவன் யாரெல்லாம் வந்தான்னு சொன்னீங்க அவங்க அத்தை மாமா அவங்க பையன் வந்திருந்தான் என்று கூறவும் எதுக்கு முன்னப் பின்ன தெரியாதவங்கக் கூட அனுப்புறீங்க என்று கத்தியவன் கோபமாக வெளியே சென்று விட்டான்..


கதிர் சுலபத்தில் கோபப்படக்கூடிய ஆள் இல்லை.. கத்தி பேசவும் மாட்டான்.. இவன் இப்பொழுது கத்தவும் இவை இப்போ எதுக்கு இப்படி கத்திட்டுப் போறான் என்று புலம்பிக் கொண்டே செல்லவும் தானும் அவர் பின்னால் சென்ற சசி அண்ணன் சொல்றதுல என்ன தப்பு இருக்கு ம்மா..


அவ அண்ணன் கூட போயிருந்தாக் கூட அதை ஏத்துக்கலாம்.. இதென்ன தனியா போற பழக்கம் என்று கேட்கவும் அவங்க வந்து கூப்பிட்டாங்க இவளுக்கும் ஆசை இருந்துருக்கும்ல தான் ஊருக்குப் போகனும்னு அதான் போயிருக்கா விடு டிஎன்று தன் வேலையைப் பார்க்க சென்று விட்டார்..


ஒரு இரண்டு மணி நேரம் பொறுத்து பார்த்த சசி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் உடனே தமிழுக்கு ஃபோனை போட்டாள்… அப்பொழுது தான் ஊருக்கு வந்திறங்கியவள் நான் எங்க வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று செல்லப் போனவளை தடுத்து நிறுத்திய சொர்ணம் இங்க தங்குமா அங்க இன்னும் சுத்தம் பண்ணலை நாளைக்கு சுத்தம் செய்ய சொல்றேன் என்று கூறினாள்..


சரி என்று உள்ளே வந்து சோஃபாவில் அமர ராக்கேஷும் பக்கத்தில் அமர்ந்தான்.. ஏதோ அவன் பேச வர அப்பொழுது சசி தமிழுக்கு அழைத்தாள்.. தன் போன் அடிக்கவும் சட்டென்று வெளியே எழுந்து சென்று விட்டாள்..


(ராக்கேஷு மூக்கு உடைஞ்சு கீழ விழுந்துடுச்சு அச்சோ பாவம்…)


வெளியே வந்தவளிடம் சசி அனைத்தையும் கூற மண்டை வலி வந்தது தான் மிச்சம்..


அதுவும் இவளது போனை எடுத்ததும் ஸ் ஹா என்ற கதிரின் முனகலை கேட்டதுமே தமிழின் உலகம் நின்று விட்டது.. போச்சு டேய் கதிரு என்னடா பண்ணி வச்சுருக்க எவடா அவ என் சக்காலத்தி என்று புலம்பிக் கொண்டே திரும்ப அவள் பின்னே ராக்கேஷ் நிற்கவும் ஏற்கனவே இருந்தக் கோபத்தில் என்ன என்று ஆக்ரோஷத்துடன் கேட்டாள்..


அவள் குரலை கேட்டுப் பயந்தவன் இரண்டடி பின்னால் வைத்தவன் தள்ளி நின்றுக் கொண்டான்.. 


தடி மாடு எவன்னு தெரியலை என் புருஷனை விட்டு மூணு மணி நேரம் பிரிஞ்சி இருந்ததுக்குள்ள என் புருஷை கெடுத்துட்டாளுக


 (அப்போ கூடப் பாருங்க இவ அவனை குத்தம் சொல்லலை..)


ஏன்டா கதிரு நான் உனக்கு வேண்டாமா நான் சும்மா இருந்தாலும் இறுக்கி அணைச்சு மொச்சு மொச்சுன்னு முத்தம் கொடுத்து கடிச்சு வச்சியேடா எரும மாடு இப்போ ஹான் ஹான் சத்தம் கொடுக்கிற நாயே என்று திட்டியவாறு நிமிர்ந்து பார்க்க ராகேஷ் அதிர்வுடன் அவளை நோக்கினான்..


அவனை கண்டு என்ன இங்க பார்வை என்று கேட்கவும் தமிழ் என்ற குரல் பின்னாடி இருந்து கேட்கவும் தமிழின் உலகமே வண்ண மயமானது.. அத்தான் என் செல்லாக் குட்டி என்று கத்திக் கொண்டே திரும்பியவள் அங்கு வந்துக் கொண்டிருந்தவனை பார்த்து பாய்ந்து ஓடி அவன் மேல் தொத்திக் கொண்டாள்..


அவன் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு இடுப்பில் கால்களால் கிடுக்குப் பிடிப் போட்டுக் கொண்டு அவன் முகம் முழுக்க மொச்சு மொச்சுன்னு முத்தத்தை வாரி வழங்கினாள்.


அத்தான் நீங்க வருவீங்கன்னு தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை ஐ லவ் யூ அத்தான்.. என்று அவனை அப்படியே கட்டிக் கொண்டாள்..


கதிருக்கு இருந்த கோபத்தில் கிளம்பி வந்தவன் எப்படி என்கிட்ட சொல்லாம இவ தனியா போகலாம் என்ன நினைச்சிட்டு இருக்கா இவளை என்று கோபத்துடன் வர தன்னை கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்து தன் மேல் ஏறிக் கொண்டதும் இருந்த கோபம் எல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போனது..


( ஆக இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா கோபமா இருக்கும் போது போய் மேல ஏறி உட்கார்ந்துடனும் அதுக்கப்புறம் பேச்சே வராது எங்கருந்து கோபம் வரதுக்கு..)


அப்படியே அவளை அணைத்துக்கொண்டு வந்தவன் அங்கு நின்று வாயைப் பிளந்து அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த ராக்கேஷை கண்டுக் கொள்ளாமல் உள்ளே சென்றவன் தமிை இறக்கி விட்டான்.


தமிழ் சென்று சொர்ணத்தை அழைத்து வர வாங்க வாங்க தம்பி என்று அமர சொன்னார். கதிர் பரவால்லைம்மா நாங்க கொஞ்சம் நேரம் கழிச்சு வரோம் என்றவன் தமிழிடம் திரும்பி தமிழ் போ போய் நீ எடுத்துட்டு வந்த துணிப்பையை எடுத்துட்டு வா என்கவும் அவனை கேள்வியாகப் பார்த்தாள்.


உங்க வீட்டைப் பார்க்கணும்னு தானே வந்த வா தமிழ் அங்க போகலாம் வீடு சுத்தம் பண்ணி வைக்க சொல்லிருக்கேன் நீ போய் எடுத்துட்டு வா என்று அவளை அனுப்பி வைத்தான்.


உடனே சொர்ணம் ஏன் தம்பி இங்கேயே தங்கலாமே என்று எப்படியாவது இங்கு அவளை தங்க வைக்கும் முயற்சியில் கூற இல்லம்மா இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு நாங்க கொஞ்சம் அப்படி இப்படி இருப்போம் இங்கு தம்பி சின்னப் பையனை வச்சிக்கிட்டு எப்படி என்று வேண்டுமென்றே ராக்கேஷை பார்த்துக் கூறினான்..


இருவரும் அதிர்ந்து பார்ப்பதை கண்டுக் கொள்ளாமல் புறந்தள்ளியவன் தமிழ் தன் பையை எடுத்துக் கொண்டு வரவும் போலாமா தமிழ் என்று அவள் கையில் இருந்த துணிப்பையை வாங்கிக் கொண்டவன் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு நடக்க அவளும் அவனுடன் தொத்திக் கொண்டு அவனிடம் தன் வீட்டைப் பற்றிக் கூறியவாறு நடந்தாள்..


அவர்கள் சென்ற பின் ராக்கேஷ் தன் அன்னையிடம் என்னம்மா இது என்று கேட்க இவ வேண்டாம்டா உனக்கு பார்த்தல்ல ரெண்டும் எப்படி இழைஞ்சிட்டுப் போகுதுங்கன்னு நான் உனக்கு நல்லப் பொண்ணா பார்த்து வைக்கிறேன் என்றவர் என்ன ஒன்னு அந்த வீடு தான் நமக்கு கிடைக்காது கைவிட்டுப் போயிடுச்சு என்று தன் பிரச்சனையைப் புலம்பியவாறு சென்றார்..


ஏய் தமிழ் நீ எனக்குத்தான் அந்த கருவாயன் வேண்டாம் உனக்கு நீ எப்படி இருந்தாலும் நீ எனக்குத்தான் சொந்தம்.. நான் சொந்தமாக்கிக்குவேன் என்று சவால் விட்டவன் தன் தந்தையைப் பார்க்க சென்றான்..


இங்கு இருவரும் நடந்தே வீடு வந்து சேர ஏற்கனவே கதிர் வீட்டை சுத்தம் செய்யுமாறு ஆட்களிடம் கூறியிருந்ததால் எல்லாம் பக்காவாக இருந்தது.. 


அங்கு வீட்டைப் பார்த்ததும் தன் குழந்தைப் பருவம் நியாபகம் வர கதிரிடம் இருந்து பிரிந்தவள் வீட்டை சுற்றி சுற்றி ஓடி வந்தாள்.. கதிர் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கூடக் கண்டுக் கொள்ளவில்லை அவள்..


பின் ஒருவாறு அவள் அனைத்து இடங்களிலும் ஓடியாடி சுற்றிப் பார்த்து விட்டு வர கதிர் சோஃபாவில் அமர்ந்திருந்தான்.அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து அவன் தோள் சாய்ந்து மூச்சு வாங்கினாள்.அவளை அப்படியே தன் கைகளில் தூக்கியவன் அங்குள்ள அறைக்கு தூக்கிச் சென்றான்..


தூக்கிச் சென்றவன் மெத்தையில் அப்படியே போட யோவ் லூசா நீயி என்கவும் ஆமாம் டி நான் லூசு என்கிட்ட சொல்லாம கிளம்பி வந்ததுக்கு இன்னும் உன்னை எதும் செய்யாம இருக்கேன்ல நான் லூசு தான்.. என்ன தைரியம் இருந்தா என்கிட்ட சொல்லாம் கொள்ளாம ஊருக்கு கிளம்பி வருவ என்று முயன்று வரவழைத்துக் கோபத்துடன் வினவ 


ஹிம்ம் எல்லாம என் புருஷன் நாய்க்குட்டிப் போலப் பின்னாடியே வருவான்ற தைரியத்துல தான் என்று தெனாவெட்டாகக் கூறினாள்.. 


என்ன திமிரு டி உனக்கு போன் போட்டா போனக் கூட எடுக்கலை என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல 


ஹிம்ம் உன்னைதான் நினைச்சிட்டு இருக்கேன் என்றவள் ஆமா வாடா மாட்டுனியா நீ என் நான் போன் போட்டதும் எடுக்கலை அது மட்டுமில்லாம வாட்சப் ல இருக்க அதுவும் ஆன்லைன்ல ஏன்டா எருமமாடு நான் கூட நினைச்சேன் நம்ம புருஷனுக்கு ஒன்னும் தெரியாது வாட்சப் ல இருக்கானோ இல்லையோன்னு பார்த்தா நீ ஆன்லைன் ல..


அப்புறம் ஏன்டா போனை எடுக்கலை என்றதும் நான் போன் பண்ணும் போது நீயும் தான் எடுக்கலை அது போலத்தான் இதுவும் என்றவன் மெத்தையில் அமர்ந்தான்..


( வேணாம் கதிரு இப்போவே ஓடிடு இல்லனா இன்னைக்கு உன் பொண்டாட்டி இடுப்பெலும்பை உடைச்சிடுவா ஓடிடு ஓடிடு..)


அவன் சட்டைக் காலரை இழுத்து தன் முகம் பார்க்க வைத்தவள் நான் கேட்டதுக்கு எல்லாம் எடக்கு மடக்காவே பேசுனியே என்று கேட்க ஆமா அப்படி தான் பேசுவேன் என்னடி பண்ணுவ என்று திமிராகக் கேட்க என்னப் பண்ணுவேனா இருடா உனக்கெல்லாம் வாயால சொன்னா பத்தாது…


கை தான் உனக்கு பேசனும் அப்போ தான் உனக்கு புரியும் இல்லையா என்று அவனை மெத்தையில் தள்ளி அவன் மேல் படர்ந்தவள் அவன் சட்டை மீது கை வைக்க ஏய் என்ன டி பண்ற விடு டி என்று அவன் அலற அலற அவள் விடவேயில்லை…


ஏன் டா எவ டா அவ நான் லைன்ல இருக்கும் போதே ஹான் ஹான் முனகுற என்று கூறவும் அவனுக்கு சுத்தமாக விலங்கவில்லை இவள் எதைப் பற்றி பேசுகிறாள்.. என்ன ஆச்சு இவளுக்கு உளறுரா என்று ஏய் என்ன டி தமிழ் எனக்கு ஒன்னும் புரியலை என்கவும் உனக்கு ஒன்னும் புரியாது புரிஞ்சாலும் புரியாத மாதிரியே நடிப்ப..என்று மொத்தினாள்..


ஐயோ அம்மா அடிக்கிறா கிள்ளுறா என்னடி பண்ற ராட்சசி விடு டி கீழ இறங்கு டி என்கவும் முடியாது நான் என்னா வேணாப் பண்ணுவேன் சொல்லு நான் கடைசியா போன் பண்ணும் போது எங்க இருந்த என்று அவன் கழுத்தைக் கடிக்க கிளுக்கிளுப்பானவன் எய் தமிழ் வேணாம் டி என்று அவளை தன் மேலிருந்து தள்ளியவாறு சிரித்தான்..


முடியாது நான் எதாவது பண்ணும் போது அப்படியே ஜடம் போலவே இருப்ப போன்ல அப்படியே முனகுற என்று பார்ட் பார்ட்டாக அவன் உடல் பாகத்தில் கடிக்க ஆரம்பித்தாள்..


ஏய் வேணாம் தமிழ் என்னை உசுப்பேத்துற அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன் அப்புறம் என்னை எதும் கேட்கக்கூடாது என்கவும் அப்படித்தான் பண்ணுவேன் டா கிழவா…


ஹா ஹா கிழவா தாத்தா தானே நீ உன்னால ஒன்னும் பண்ண முடியாது தானே என்று அவனை உசுப்பேத்த அவளை தன் மேலிருந்து பிரட்டித் தள்ளியவன் அவள்

 மேல் படர்ந்தான்.. அவள் முனகலில் ஆரம்பித்து அவன் முனகலில் முடிந்தது..


மோகம் மையம் கொள்ளும்…

Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments