மழை-6:
சாணுவிற்கு துண்டெடுத்துக் கொடுக்க அவன் ரெஃபிரெஷ் செய்துக் கொண்டு வந்ததும் இருவரும் கீழே வந்தனர். டைனிங் டேபிளில் அனைவரும் அமர்ந்திருக்க.. ஜெயா ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு வர சட்டென்று தலை சுற்ற.. அவரையே பார்த்துக் கொண்டிருந்த வீர் அவர் தடுமாற "அம்மா" என்று கூவியவாறு பட்டென்று எழுந்து தன்னோடு அணைத்துப் பிடித்துக்கொண்டான்.
வீர் தாங்கி பிடிக்கவும்.. அதற்குள் அவர்களிடம் வந்திருந்த மகேன் "ம்மா என்னாச்சு..?" என்று அவர் கையை பிடித்து பள்ஸ் பார்க்க.. "அம்மா காலையில் சாப்பிட்டாங்களா இல்லையா..?" என்று தந்தையை நோக்கி கேட்டான். "நீங்க வீட்டுல இல்லையென்றதும் அவள் சாப்பிடவே இல்லை.. நான் எவ்வளவோ சொன்னேன் மகேன்.. சுகர் லோ ஆகிடுமென்று.. அவள் எங்கு என் பேச்சைக் கேட்டாள்.." என்று தன் மகன் தாங்கியிருத்த தன் மனைவியை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டு தலை முடியை வருடிக் கொடுத்தார்.
அதற்குள் கிச்சனிற்கு சென்று கொஞ்சம் சர்க்கரை எடுத்து வந்த ஐஸ்வர்யா தன் அம்மாவிடம் கொடுக்க.. அதனை வாங்கி தன் வாயில் போட்டவர் சற்று நேரத்தில் தெளிவடைந்தார். பின்பு மகேன் தன் தந்தையை நோக்கி "அம்மா சாப்பிடலையென்று நீங்களும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்களே.." என்று கேள்வியாக கண்கள் இடுங்க அவரை நோக்க அவர் ஒன்றும் பேசாமல் தன் மனைவியின் கையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் அவர் தலையை வருடிக் கொடுத்தார்.
"ஹிம்ம்" என்று பெருமூச்சு விட்டவாறு எழுந்தவன் "என்ன இன்னும் சவுண்ட் வரலையென்று" தன் தம்பியை திரும்பிப் பார்க்க.. தனக்கு வந்த கோபத்தை தன் கை முஷ்டி இறுக்கியவாறு கட்டுப் படித்தியவன் "இன்னும் எதுக்கு ரெண்டு பேரும் உட்காத்திருக்கீங்க..? எழுந்து மேல உட்காருங்க.." என்று பற்களைக் கடித்தவாறு அடக்கப்பட்டக் கோபத்துடன் கத்த மனதுக்குள் சிரித்துக் கொண்டே மகேன் தன் இருக்கையில் சென்று அமர.. ஐஷூவும் சாணுவும் நிற்க "உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா.." என்று கர்ஜிக்க பட்டென்று தங்கள் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.
தன் மனைவி எழ உதவி செய்தவாறு தானும் எழுந்துக் கொண்ட விஜயன்.. ஜெயாவை இருக்கையில் அமர்த்தி அவர் பக்கத்து இருக்கையிலேயே தானும் அமர்ந்துக் கொண்டார். "ஜெயா நான் பரிமாருறேன்" என்று எழ "உட்காரு ஜெய்" என்றது விஜயன் என்று நினைத்தால் அது தவறு வீர் தான் அவ்வாறு கூறினான். கோபம் வந்தால் அவன் இப்படி தான்.. விஜயன் ஜெயாவை 'ஜெய்' என்று தான் அழைப்பார் அது போல ஜெயா விஜயனை 'விஜி' என்று அழைப்பார்.
கோபம் வந்தால் மட்டும் அவர்களின் அழைப்பை இவன் கடன் வாங்கிக் கொள்வான். (இது புதுசா இருக்கே) வீர் அவ்வாறு கூறவும் கப்சிப்பென சட்டென்று இருக்கையில் அமர்ந்துக் கொள்ள.. "இவங்க பெரிய சத்தியவான் சாவித்திரி.. இவங்க சாப்பிடலைன்னா.. இவரும் சாப்பிட மாட்டாராம்.. இந்த வயசுல ரோமியோ ஜூலியட்னு மனசுல நினைப்பு.. நேராநேரத்துக்கு சாப்பிடுங்கன்னு எத்தனை தடவை சொல்றது.. இனிமே ஊட்டிதான் விடணும் போல.." என்று வசைப்பாடியவாறே இருவருக்கும் பரிமாறினான்.
"இங்க என்ன பார்வை..? உங்களுக்கெல்லாம் போட முடியாது.. நீங்களே போட்டு கொட்டிக்கோங்க.." என்று அவனை பார்த்த மற்ற மூவரையும் முறைத்து விட்டு சென்று டிவி முன்பு உட்கார்ந்துக் கொண்டான்.
(ஐயோ டிவி நீ ரொம்ப பாவம்.. டிவியின் மைண்ட் வாய்ஸ்.. ஒளிமயமான எதிர்காலம் என் கண் முன்னே தெரிகிறது...)
"போடா ஆங்கிரி பேர்டு மண்டையா.. நீ போடலைனா எங்களுக்கு சோறு தண்ணீ இறங்காதா.." என்று தன் தமையனின் முதுகை பார்த்து வக்களம் காட்டியவள்.. தன் அண்ணனுக்கும் அன்பனுக்கும் பரிமாறி தனக்கும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். மகேன் அடுத்து என்ன நடக்கும் என்று அறிந்தவனாக அமைதியாக சாப்பிட்டான். சாணுவோ தன்னருகே அமர்ந்திருந்த தன்னவளிடம் அவள் காதோரம் சற்று சரிந்து "ஏன் ஐசு..? உன் அண்ணங்காரன் இப்படி ருத்ரதாண்டவம் ஆடிட்டுப் போறான்.." ஊப்பென்று பெருமூச்சு விட்டு தன் காதை குடைந்து கொண்டான்.
(ஐயோ பாவம் காது ஜவ்வு கிழிஞ்சிடுச்சுப் போல...)
அவன் அப்பப்பா இப்படித்தான் குரங்கு வித்தை காமிப்பான்(வீர் கிரேட் இண்சல்டிங் சோ சேட்) அதெல்லாம் கண்டுக்காதீங்க இப்போ காமிச்சது வெறும் டீஸர் தான்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓட்டுவாங்க பாருங்க ஒரு படம்.. காட்சிகள் அனைத்தும் உல்டாவா மாறும் பாருங்க.." என்றவாறு தன் தட்டிலிருந்த உணவை கொறிக்கத் தொடங்கினாள். இங்கு வேக வேகமாக சாப்பிட்ட விஜயனும் ஜெயாவும் ஒரு தட்டில் சாப்பாடைப் போட்டு வீர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றனர்..
அங்கு மூஞ்சை ஏழு முழத்துக்கு தூக்கி வைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தவனின் கையில் இருந்த ரிமோட் படாதப்பாடு பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்கிருந்த கோபத்தில் ரிமோட்டின் பட்டனை அழுத்தி நசுக்கிக் கொண்டிருந்தான்.. டிவிக்கு மட்டும் வாய் இருந்திருந்தால்.. நம்மூர் கிழவிகளே தோற்றுப் போய் விடுவர்.. அந்தளவுக்கு கிழித்து நார் நாராக தொங்க விட்டிருக்கும் .
"போடா பொசக்கெட்டப் பயலே.. உன்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகுறதுக்கு.. காயிளாங் கடையிலேயே சும்மா இருப்பேன்.." என்று கூக்குரலிட்டது.
நொடிக்கொருதரம் அந்த ரிமோட் பட்டனை அழுத்திக் கொண்டிருக்க டிவியில் சிரிக்க வைக்கும் காமெடி சேனல்.. ரசிக்க வைக்கும் பாட்டு சேனல்.. அழுக வைக்கும் சீரியல்.. என அனைத்தும் வந்துப்போக அவன் இடது பக்கம் விஜயனும் வலது பக்கம் ஜெயாவும் அமர்ந்து ஜெயா அவன் நாடியைப் பிடித்து தன்னை பார்க்க செய்தார்.
அவர் கையைத் தட்டி விட்டவன்.. உர்ரென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு ரிமோட்டை பாடாய் படுத்த ஜெயா அவன் கன்னத்தில் முத்தம் வைத்து.. அவனைப் போலவே அடங்காத தலைமுடியை தன் விரல்களால் கோதிக் கொடுத்தவாறே.. "என் செல்லக்கண்ணா தானே.. அம்மாவ இந்த முறை மன்னிச்சிடு கண்ணா.. காலையில் பயங்கரமான கனவு டா.. அதான் ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஒன்றென்றால் என்னால் எப்படி கண்ணா தாங்க முடியும்..? அதான் அந்த டென்ஷனில் சாப்பிட தோணலை.. என் செல்லக்குட்டி தானே சாப்பிடுடா.." என்று சாதத்தை பிசைந்து ஊட்டவும் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டான்.
வீர் எப்பொழுதும் இப்படித்தான் தன் அம்மா "கண்ணா" என்றால் வெயிலில் வைத்த வெண்ணெய் கட்டியாய் கரைந்து விடுவான்.அதுவும் அவர் அவன் தலைமுடி கோதுவது என்றால் அப்படியே பிளாட்டாகிடுவான். தன் தாய் தலை கோதும் சுகத்திற்கு அவன் என்றுமே அடிமை. இப்பொழுதும் ஜெயா தன் மகனை பற்றி தெரியுமாதலால் அவனை தாஜா பண்ண அவனும் சரியாகி விட்டான்.
ஆனால் கடந்த மூன்று வருடங்களாக தன்னை தன் தாய் கண்ணாவென அழைக்கும் போதெல்லாம் தன் சாக்லேட் நிறத்தழகி தான் கண்களுக்குள் மின்னி மறைகிறாள்.
அவளை நினைக்கும் போதே ஜில்லென்ற ஓர் உணர்வு அவனை தாக்க.. "ஏன் டி தினம் தினம் என்னை கொல்லுற ராட்சசி..?" என்று தனக்குள்ளே தன் சாக்கியிடம் முறையிட்டுக் கொள்வான்.
"ம்மா நாங்க சின்ன குழந்தையில்லை.. எங்களுக்கு எதும் ஆகாது.. நீங்க தேவையில்லாம கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.." என்றவாறு அவர் ஊட்ட சாப்பிட்டுக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையின் நெஞ்சில் சாய்ந்துகொண்டான்.
இதனை கண்ட ஐஸ்வர்யா "டேய் தடியா..! எருமை மாடு அளவுக்கு வளர்ந்துருக்க எழுந்திருடா.. எனக்கு தான் எங்க அப்பா அம்மா நகருடா.." என்று அவன் கையைப் பிடித்திழுத்தாள். "சாரி உலகழகி அவர்களே.. பட்டா போட்டாச்சு.. உங்களுக்கு இந்த இடம் தர முடியாது.." என்கவும் "இதென்ன ஃபிளாட்டா டா.. பட்டா போடுறதுக்கு.." என்று இருவரும் சண்டை பிடித்துக் கொண்டிருக்க "சரி சரி போதும்.. உங்க சண்டையை நிறுத்துங்க" என்று ஐஷூக்கு ஜெயா ஒரு கவளம் ஊட்ட "அவ்ளோதான் இதுக்கு மேல கிடையாது.. இப்போ தானே தட்டு நிறைய கொட்டிகிட்ட.. பத்தாதுக்கு என் மச்சி பிளேட்ல இருந்ததையும் விட்டு வைக்கல.. அதும் பத்தலையென்று.. இப்போ இங்க வந்துட்ட.. அது வயிரா இல்ல சேமிப்பு கிடங்கா..? போட்டு நோன்ஸ்டாப்பா உள்ள தள்ளிட்டே இருக்க.." என்று வேண்டுமென்றே அவளை வம்புக்கிழுத்தான்.
"யாருடா நோன்ஸ்டோபா கொட்டிகுறா.. நீயா நானா.. எருமா நில்லுடா.." என்று துரத்த அனைவரும் அவர்களின் செயலில் உள்ளம் நிறைந்து சிரிக்க அதை குலைக்கவே அந்த ஃபோன் அழைப்பு வந்தது.
எல்லாம் அந்
த அழைப்பு வரும் வரை தான்…
மழை பொழியும்...
0 Comments