மழை-5:
'இவள் நம்மை கட்டிப்பிடித்தபடி வந்ததை கூறுகிறாளா..?' என்று சரியாக தவறாக நினைத்து.. "எப்படி சாப்பிடாம துங்காம கட்டிப்பிடுச்சுட்டே பைக்கில் போக முடியும்..?" (அட சோத்து மூட்டை) என்று புரியாமல் அவளிடம் கேட்க.. அதற்கு நகைத்தவள் சட்டென்று அவனை தாவி அணைத்துக்கொண்டாள்.
"ஐ லவ் யூ மாமா.. ஐ லவ் யூ சோட்டு.." என்று அவனை இறுக அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட.. சுதாரித்தவன் சட்டென்று அவளை தன்னிடமிருந்து விலக்கி "பாப்பா.. ஹிம்ம்.. ஐஸ்வர்யா கொஞ்சம் இரு.. எப்படி திடீர்னு காதல்..? நாம அதிகமா சந்திச்சது கூட இல்லையே..! அப்புறம் எப்படி காதல்..?" என்று கேட்க "நீங்க என்னை பார்க்கலை மாமா.. ஆனால் நான் உங்களை பார்த்துருக்கேன்.." என்று அவனை பார்த்ததை அவனிடம் கூறினாள்.
"எனக்கு அப்போ பத்து வயசு இருக்கும்.. அப்போ மாமா இறந்துட்டதா சொல்லி உங்க வீட்டுக்கு வந்தபோது தான் உங்களை பார்த்தேன்.. நீங்க அழுதுட்டு இருந்தீங்க.. உங்களை என்கூட அழைச்சிட்டு போய் விளையாண்டு உங்களை சிரிக்க வைக்கணும்னு தோணுச்சு.. அப்போ நான் சின்ன பிள்ளை தானே எனக்கு விவரம் தெரியலை.."
"அதுக்கப்பறம் ஊருக்கு வந்ததும்.. உங்க அழுத முகமே அடிக்கடி நியாபகம் வரும்.. அப்படியே உங்களை நினைச்சுகிட்டு இருந்துருப்பேன் போல.. அப்புறம் நான் பெரிய மனுஷி ஆனப்போ நீங்க வந்தீங்கள்ள.. அப்போ தான் உங்க மேல ஒரு இது.."
"நீங்க பாட்டுக்கு வந்தீங்க.. அத்தை சொல்லசொல்ல என் முகத்தை கூட பார்க்காம எல்லாத்தையும் செய்து எனக்கு நீங்க மாலை போட்டபோது கூட என்னை நிமிர்ந்து பார்க்கலை.. சரி என்னை தான் பார்க்கலைன்னு நினைச்சேன்.. ஆனா நீங்க யாரையும் தப்பா ஒரு பார்வை கூட பார்க்கலை.. அதில் உங்க மேல ஒரு ஈர்ப்பு வந்து அது காதலா மாறிடுச்சு போல.." என்று தன் தலைவனிடம் தன் காதலை கூற "ஹிம்ம் அப்புறம்.." என்கவும் "ஙே" என்று விழித்தாள்.
"ஐஸ்வர்யா நான் சொல்றதை நீ எப்படி எடுத்துக்க போறன்னு தெரியலை.. பட் இதை பேசலையென்றால் நாம்தான் கஷ்டப்படணும்.." என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறவும் 'அவன் தன்னை வேண்டாமென்று கூறி விடுவானோ' என்ற பயத்தில் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அவளின் பூமுகம் வாடுவது பிடிக்காமல் "ஐஸ்வ.." என அவன் ஏதோ சொல்லவாரம்பிக்க அவள் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் மழை பொழிய "மாமா ப்ளீஸ் பிடிக்கலைன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. என்னால அதை தாங்க முடியாது.." என்று அழ அவள் அழுவது பிடிக்காமல் "ஹே ஐசு..! அழாதா.." என்று அவள் தோளில் கைப்போட்டு தன்னோடு சேர்த்தணைத்தவாறு அவளை தேற்றினான்.
அவளை தன்னுடன் அணைத்தவாறே அழைத்து.. அங்கிருந்த மெத்தையில் அமர வைத்தவன்.. தேம்பி கொண்டிருந்தவளிடம் "ஐசு இங்க என்னை பாரேன்..!" என்று அவள் நாடியைப் பிடித்து தன்னை பார்க்குமாறு செய்தான்.
( ஒருவேளை என்னை பார் என் அழகை பாரென்று சர்க்கஸ் காட்டப் போறானோ..இருக்கும் இருக்கும் நமக்கெதுக்கு)
அவனை பார்த்தவள் "மாமா எனக்கு புரியுது நான் சுயநலமா யோசிக்கிறேன்னு.. ஆனால் நான் உங்களை ரொம்ப விரும்புறேன்.." என்றவள் தன்னை திடப்படுத்திக் கொண்டு "உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை மாமா.. நான் இப்படியே உங்களை நினைச்சிட்டே காலம் முழுக்க இருந்துடுவேன் மாமா.. உங்களை கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்தலை.. நீங்க சந்தோஷமா இருந்தாலே போதும்.. என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா விடுங்க.. நீங்க வருத்தப்படாதீங்க.." என்று அவள் பாட்டுக்கு ஏதேதோ அவனிடம் உளறிக்கொண்டிருந்தாள்.
"உன்னை பிடிக்கலைன்னு நான் சொன்னேனா.? இந்த குண்டு ஐஸ் எனக்குத்தான்.." என்று நெற்றியில் முத்தமிட்டவாறு அவள் பொசுபொசு டெடிபியர் உடல்வாகை கேலி செய்தவாறு தன் காதலைக் கூறினான்.
அதில் அகமகிழ்ந்தவள் "மாமா" என்று அவனை அணைத்துக்கொள்ள அவனும் அவளை அணைத்து சற்று நேரம் இருந்தவன் "ஆனால் இன்னும் இரண்டு வருடம் போகட்டும் ஐசு.. தங்கச்சிகளுக்கு கல்யாணம் முடிச்சிட்டு.. அப்புறம் எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு.. அதுக்குத்தான் இந்த இரண்டு வருடம்.. அதுக்கப்புறம் இந்த ஐசுக்கட்டியைத் தூக்கிட்டுப் போய்டுவேன்.." என்று அவள் உச்சியில் தன் தாடையை வைத்து பேசிக்கொண்டிருந்தான்.
"உங்களுக்கு என்ன வேலை மாமா..?" என்று கேட்க "என் ஐசு எம்.பி.ஏ படிச்சிட்டுருக்கா.. அடுத்த வருஷம் எப்படியும் அம்மணி பிஸ்னஸை டேக் ஓவர் பண்ணிருவீங்க.. அப்போ நிறைய பேருக்கு நீ இவர் தான் என் புருஷன் என்று என்னை கைக்காட்டும் போது.. நான் என்ன பண்றேன்னு கேட்டா விவசாயம் என்று சொன்னால் அவர்கள் உன்னை பார்க்கும் பார்வை வேறு மாதிரியாக இருக்க வாய்ப்பு இருக்கு.. என் பொண்டாட்டி யாரு முன்பும் சங்கடப்படுவதை நான் விரும்பலை" என்று அவன் கூற
"இதுல சங்கடப்படுவதற்கு என்ன மாமா இருக்கு..? நான் தைரியமா சொல்வேன் மாமா.. என் புருஷன் விவசாயி என்று.." அவள் கெத்தாக கூற "உனக்கு பெருமையா இருக்கலாம்.. ஆனால் எல்லாரும் அப்படியே இருக்க மாட்டாங்க இல்லையா.. அதுமில்லாம எனக்கும் சலிப்பா இருக்கு மேற்பார்வை மட்டும் தான் பார்ப்பேன்.. ஒரு வேலையும் இல்லை.. தென்னந்தோப்பும் மாங்காதோப்பும் மற்ற நிலத்துல தேக்கும் சவுக்கும் போட்டுருக்குறதால நமக்கு அதில் வேலையே இல்லை.. எனக்கும் போர் அடிக்குது.. எனக்கு இரண்டு வருடம் டைம் கொடு சரியா.." என்று கூறவும் "என்ன மாமா பண்ணப் போறீங்க..?" என்று கண்கள் மின்ன ஆர்வமாகக் கேட்க "சர்ப்ரைஸ்" என்று கண்ணடித்தவாறு கூறினான்.
"போங்க மாமா.. அங்க வந்து நான் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேன்.. நீங்க என்னடான்னா வேற ஏதோ சொல்றீங்க.. அங்க கிணறு இருக்கும்.. வயல்.. நிறைய மரமெல்லாம் இருக்கும்.. இயற்கையை ரசித்து வாழலாமென்று பார்த்தா.." என்று அவள் பாட்டிற்கு கூறிக்கொண்டே போக "நீ சொன்னதெல்லாமே நடக்கும் டா"
"நீயும் நானும் மட்டும்.. நீ சொன்னது போல் இயற்கையை ரசிச்சு செமையா வாழ்வோம்.. இயற்கையை நீ ரசிக்க.. உன்னை நான் ரசிக்க.." என்று சிரித்துக்கொண்டே அவள் நெற்றியில் முட்டியவன் "சரி வா கீழே போகலாமா..?" என்று கேட்கவும் "ஹிம்ம்" என்றதும் இருவரும் ஹாலுக்கு இறங்கி வந்தனர்.
அங்கு ஆபீஸிலிருந்து விஜயன் வந்திருக்க இவர்களை இருவரையும் பார்த்து "எப்போ சாணு வந்த..? ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வந்துட்டீங்களா.? என்ன முடிவு எடுத்திருக்கீங்க..?" என்று அவர்களை பார்த்து கேட்டார்.
"நான் மதியம் தான் மாமா வந்தேன்.. அப்புறம் மாமா.." என்று சற்று தயங்கியவன் "மாமா எங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்.. ஆனால் கல்யாணம் இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் மாமா.." என்றதும் "சரிப்பா உங்க இஷ்டம்" என்கவும் மகேனும் வீரும் வந்து சாணுவை அணைத்துக்கொண்டு "கங்கிராட்ஸ் மச்சி" என்று கூவினர்.
வீர் சாணுவிடம் "இந்த உலகழகி தான் உங்களுக்கு வேணுமா..?" (பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமாம்.. விடேன் டா )
அவன் ஆமென சிரித்துக் கொண்டே தலையாட்டவும் "சரி அப்புறம் உன் பாடு.. அப்புறம் பின்னாடி அவ என்னை கிள்ளிட்டா.. குத்திட்டான்னு.. கம்பிளைண்ட் பண்ண கூடாது மாப்பி.. ஃபிரி அட்வைஸ் ஒழுங்கா கேட்டுக்கோ.." என்றவன் ஐஷூ முறைக்கவும் "இதுக்கும் பழகிக்கோ மச்சி.. அப்பப்போ இப்படி தான் சந்திரமுகி ஆயிடுவா.. பார் பார் உன் மனைவி முழுசா சந்திரமுகியா மாறியிருக்குறத பார்.." என்று கலாய்க்க "ஏய்" என்று ஐஷூ அவனை அடிக்க துரத்த.. "விடு ஜூட்" என்று அவள் கையில் சிக்காமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.
பின்பு அங்கிருந்து கிளம்பி தன் ஊருக்கு சென்றவன் தன் அம்மாவிடம் கெஞ்சி கொஞ்சி சம்மதம் வாங்கி ஐ.பி.எஸ் தேர்வெழுதி இப்பொழுது அவள் முன் ஏ.சி.பியாக அவளை ஆலிங்கனம் செய்துக்கொண்டிருந்தான்.
"ஐசு.. ஐசு.." என்று இவன் உருக அவள் அவன் கைகளில் கரைந்துக்கொண்டிருந்தாள்..
(ரெண்டு பேரையும் ஃப்ரிட்ஜ்ல வைக்கணும் இப்படி உருகுறாங்க..)
"ஹே ஐசு.. கோன் ஐஸ் சாப்பிடவா..!" என்று கேட்டு அவள் மூக்கை கடித்தான் "குல்பி சாப்பிடவா ஐசு..?" என்று வெண்சங்கு கழுத்தை தன் மீசை முடி குத்த எச்சில் தெறிக்க கடித்து முத்தமிட்டான்.
"மாமா" என்று கிறங்கி அவனுள் ஒடுங்கியவள் அவனை ஆரத்தழுவிக் கொண்டு "எப்போ மாமா அசைவமா மாறுனீங்க.." என்று கேட்க புரியாமல் நோக்கியவனை பார்த்து "இல்ல முன்னாடி இங்கே தானே முத்தம் கொடுத்தீங்க.." என்று தன் நெற்றியைச் சுட்டிக் காட்டியவள் "இப்போ அசைவ முத்தம்" என்று தன் எச்சிலால் மினுமினுக்கும் அவன் உதட்டினைப் பார்த்தவாறு கூறினாள்.
அதைக் கேட்டு சிரித்தவன் "அதெல்லாம் அப்படித்தான்.. இனிமே இந்த குச்சி ஐஸ கொஞ்சம் கொஞ்சமா கடிச்சி ருசிச்சு சாப்டுவேன்.." என்று அவள் கன்னத்தில் கடித்து முத்தமிட்டு "ஐசு கல்யாணம் பண்ணிக்கலாமா" என்று அவள் காதில் உதடு உரச கேட்க "ஹ்ம்ம்" என்று கிறக்கமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்
.
நினைப்பதெல்லாம் நடந்து விடுமா…?
மழை பொழியும்...
0 Comments